Jump to content

உன் உதட்டோரம்……… நான் இதழ் குவிப்பேன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

weed5452452-e1448074042264.jpg

 

விழி விரித்தாய்

பார்த்ததுமே பரவசத்தில்

உடல் சிலிர்த்தாய்

மோகமானாய் - பெரும் தாகத்தடன்

கட்டுடைத்து என்னங்கம் மேய்ந்தாய்

ஆசையோடு அழுத்தினாய்

தழுவலிலே தளர்வறிந்தாய்

தீண்டியும், நிமிண்டியும் – எனைத்

திரள வைத்தாய்.

உன் விரல்களிடை

என் இதழ் குவித்தாய்

விதவிதமாய் இரசித்து

 உன்னுதடழுத்திக் கவ்வினாய்

உரசலிலே தீ மூட்டி – எனை

உன்மத்தம் கொள்ள வைத்தாய்

என் தகிப்பில் தணல் வைத்தாய்

உறிஞ்சினாய் , உள்ளிழுத்தாய்

மினிக்கி ஆடும் எனை இழுத்து - உன்

சுவாசத்துள் சிறைப்பிடித்தாய்

தெரிந்தும்….. எனைச் சரணடைந்தாய்

கணம் பிரிய மறுத்தபடி

யாசகம் கேட்கிறாய்

அன்பே,

உன் உயிரள்ளிப் போகும்வரை

உன் உதட்டோரம்………

 நான் இதழ் குவிப்பேன்.

?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்போதைய இளைஞர்களும் இளைஞிகளும் உயிரள்ளிப்போகும்வரை இதழ் குவிப்பதில் அவ்வளவு ஆர்வம் காட்டுவதில்லையாம்.

சிக்கெனப் பிடிப்பது என்ன என்பதை கவிதைக்கு இணைத்த படம் மூலம் அறிந்தேன்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆயுள் கைதிகளின் அவலத்தை அனுபவித்தவர்களுக்கு இக் கவிதை சமர்ப்பணம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, கிருபன் said:

இப்போதைய இளைஞர்களும் இளைஞிகளும் உயிரள்ளிப்போகும்வரை இதழ் குவிப்பதில் அவ்வளவு ஆர்வம் காட்டுவதில்லையாம்.

சிக்கெனப் பிடிப்பது என்ன என்பதை கவிதைக்கு இணைத்த படம் மூலம் அறிந்தேன்?

சுத்தம் ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, வல்வை சகாறா said:

weed5452452-e1448074042264.jpg

 

விழி விரித்தாய்

 

பார்த்ததுமே பரவசத்தில்

 

உடல் சிலிர்த்தாய்

 

மோகமானாய் - பெரும் தாகத்தடன்

 

மோகமானாய் -  யாழ். களத்தை.... நேசித்து, வல்வை  சகாறா  எழுதிய கவிதை அழகு.
கவிதையை  வாசிப்பவர்களின், மனதை... திசை திருப்ப... போட்ட படம்,   அழகிலும் அழகு.... ?

வல்வை  எப்பவும்... பொடி  வைத்து,  குசும்பாக... எழுதுபவர் என்பதால்....
தலைப்புக்கும், இதற்கும் சம்பந்தம் இருக்காது என்பதாலும்... 
இன்று... வெள்ளிக்கிழமை  என்பதாலும், மிக நிதானித்து வாசிக்கும் போது,
அவர் எம்மை... ஏமாற்ற வந்த விடயதை, கண்டு பிடித்து விட்டான், இந்த  இலையான்  கில்லர். 

அழகிய  கவிதைக்கு...  நன்றி  வல்வை  சகாறா.
உங்கள்   கவிதையின் வரிகளிலேயே...... நானும், யாழ் களத்தை  நேசிக்கின்றேன். ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

மோகமானாய் -  யாழ். களத்தை.... நேசித்து, வல்வை  சகாறா  எழுதிய கவிதை அழகு.
கவிதையை  வாசிப்பவர்களின், மனதை... திசை திருப்ப... போட்ட படம்,   அழகிலும் அழகு.... ?

வல்வை  எப்பவும்... பொடி  வைத்து,  குசும்பாக... எழுதுபவர் என்பதால்....
தலைப்புக்கும், இதற்கும் சம்பந்தம் இருக்காது என்பதாலும்... 
இன்று... வெள்ளிக்கிழமை  என்பதாலும், மிக நிதானித்து வாசிக்கும் போது,
அவர் எம்மை... ஏமாற்ற வந்த விடயதை, கண்டு பிடித்து விட்டான், இந்த  இலையான்  கில்லர். 

அழகிய  கவிதைக்கு...  நன்றி  வல்வை  சகாறா.
உங்கள்   கவிதையின் வரிகளிலேயே...... நானும், யாழ் களத்தை  நேசிக்கின்றேன். ?

இன்று வெள்ளிக்கிழமை  இலையான் கில்லருக்கு யாழ் மீதான மோகம் எல்லை கடந்திருக்கும் என்று அறியாதவளா? அதனால் இன்று நீங்கள் விடுப்பு எடுத்து விட்டு நாளை வந்து  பாருங்கள். விடுபட்ட விடுப்பு என்ன என்று கண்டு பிடித்துவிடுவீர்கள். நீங்களே சொல்லி விட்டீர்கள் குசும்பு இருக்குமென்று நாளைக்கு வரைக்கும் குசும்பு குலையாமல் இருந்தால் நீங்கள் வந்து உடைத்து விடுங்கள்.?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, வல்வை சகாறா said:

weed5452452-e1448074042264.jpg

 

விழி விரித்தாய்

 

பார்த்ததுமே பரவசத்தில்

 

உடல் சிலிர்த்தாய்

 

மோகமானாய் - பெரும் தாகத்தடன்

 

கட்டுடைத்து என்னங்கம் மேய்ந்தாய்

 

ஆசையோடு அழுத்தினாய்

 

தழுவலிலே தளர்வறிந்தாய்

 

தீண்டியும், நிமிண்டியும் – எனைத்

 

திரள வைத்தாய்.

 

உன் விரல்களிடை

 

என் இதழ் குவித்தாய்

 

விதவிதமாய் இரசித்து

 

 உன்னுதடழுத்திக் கவ்வினாய்

 

உரசலிலே தீ மூட்டி – எனை

 

உன்மத்தம் கொள்ள வைத்தாய்

 

என் தகிப்பில் தணல் வைத்தாய்

 

உறிஞ்சினாய் , உள்ளிழுத்தாய்

 

மினிக்கி ஆடும் எனை இழுத்து - உன்

 

சுவாசத்துள் சிறைப்பிடித்தாய்

 

தெரிந்தும்….. எனைச் சரணடைந்தாய்

 

கணம் பிரிய மறுத்தபடி

 

யாசகம் கேட்கிறாய்

 

அன்பே,

 

உன் உயிரள்ளிப் போகும்வரை

 

உன் உதட்டோரம்………

 

 நான் இதழ் குவிப்பேன்.

?

 

 

கட்டுடைத்து என்னங்கம் மேய்ந்தாய்
ஆசையோடு அழுத்தினாய்
உறிஞ்சினாய் இ உள்ளிழுத்தாய்
உன்னுதடழுத்திக் கவ்வினாய்

வேர்த்து விறுவிறுக்க வாசித்தேன்... சற்றே ஏமாற்றம் 
ஆனாலும் சகாரா அக்கா அனுபவித்து எழுதி இருப்பீர்களோ..
அருமை...அருமை...
இரட்டை அர்த்த மொழி ஜாலங்களோடு பொருள் நயம் பிறழாமல்  
கவிதை படைத்து இருக்கிறீர்கள்.
பாராட்டுக்கள்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உரசலில் தீ மூட்டி உன்மத்தம் கொள்ள வைத்தாய்

 தகிப்பில்  தணல் வைத்தாய்

மினுக்கி ஆடும் என்னை இழுத்து

உன் சுவாசத்துள் சிறைவைத்தாய்

உயிர் அள்ளிப்  போகும் வரை   போகும் வரை உன் உதடடோரம் .........

 

 காலனுக்கு இடட கவி  மடல் அருமை ....

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புகைமூட்டம் ஓவியத்தில் மட்டுமல்ல கவிதையிலும் கூட ........ சூப்பர்........!  tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 9/14/2018 at 4:42 PM, Kavallur Kanmani said:

ஆயுள் கைதிகளின் அவலத்தை அனுபவித்தவர்களுக்கு இக் கவிதை சமர்ப்பணம்

நன்றி தோழி

வெள்ளைப்புடவைக்காரி என் வேதனைக்குச் சொந்தக்காரி என்று நீங்கள் எழுதிய கவிதைவரிகள் இன்னும் பசுவையாக என் நெஞ்சை விட்டு அகல மறுத்தபடி இருக்க, இன்னும் இறுமாப்புடன் தன்னை நோக்கி என்னையும் எழுத வைத்து அந்த வெள்ளைப்புடவைக்காரி வேடிக்கை பார்க்கிறாள். உன்னைக்காட்டிலும் அவன் மோகிப்பது என்னையே என்று இப்போதெல்லாம் என் துணைவனின் உயிர்ப்பூவோடு சீண்டி விளையாடி எனக்குள் துயரம் விதைக்கும் சக்களத்திபோல் ஆக்கிரமிப்பு செய்யும் கிராதகியை என்னால் என்ன செய்யமுடியும்? தூற்றி எழுதாமல் அவளாக மாறி எழுதுகிறேன் பல கவிதை அதில் இதுவும் ஒன்று.

On 9/14/2018 at 9:34 PM, Sasi_varnam said:

கட்டுடைத்து என்னங்கம் மேய்ந்தாய்
ஆசையோடு அழுத்தினாய்
உறிஞ்சினாய் இ உள்ளிழுத்தாய்
உன்னுதடழுத்திக் கவ்வினாய்

வேர்த்து விறுவிறுக்க வாசித்தேன்... சற்றே ஏமாற்றம் 
ஆனாலும் சகாரா அக்கா அனுபவித்து எழுதி இருப்பீர்களோ..
அருமை...அருமை...
இரட்டை அர்த்த மொழி ஜாலங்களோடு பொருள் நயம் பிறழாமல்  
கவிதை படைத்து இருக்கிறீர்கள்.
பாராட்டுக்கள்..

 இரு பாலாருக்குமான போதை

படத்தைப்பார்த்து கவிதை தடுமாறும்...

கவிதை வாசித்து படம் தடம்புரளும்.

நன்றி சசி

வேர்த்து விறுவிறுத்து வாசித்து அடச்சா என்று ஏமாற்றம் அடைந்ததை எழுத்தில் பதிந்தமைக்கு...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 9/14/2018 at 10:13 PM, நிலாமதி said:

உரசலில் தீ மூட்டி உன்மத்தம் கொள்ள வைத்தாய்

 தகிப்பில்  தணல் வைத்தாய்

மினுக்கி ஆடும் என்னை இழுத்து

உன் சுவாசத்துள் சிறைவைத்தாய்

உயிர் அள்ளிப்  போகும் வரை   போகும் வரை உன் உதடடோரம் .........

 

 காலனுக்கு இடட கவி  மடல் அருமை ....

 

நிலாமதியக்கா காலனுக்கு கவிமடல்இடவில்லை

 மோகம் சொட்டச் சொட்ட எழுதி மூடினேன் பொருள் மறைத்தேன் கவி காலனுக்கு அல்ல கவியே காலன்..?

On 9/19/2018 at 5:02 PM, suvy said:

புகைமூட்டம் ஓவியத்தில் மட்டுமல்ல கவிதையிலும் கூட ........ சூப்பர்........!  tw_blush:

ஓ... சுவியண்ணை நீங்களும் உள்ளிழுத்து உற்சாகம் அடைந்தவரா?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தமிழ்நாட்டில் நடக்கும் அநிஞாயங்கள் பாலியல் வல்லுறவுகள் கூட்டு பாலியல் கொலை கொள்ளை என்று திராவிட கும்பல்களால் தினமும் செய்திகள் வருகின்றன. எவருமே அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆனால் சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ?
    • தினமுரசு ஒரு ஜனரஞ்சக பத்திரிகை என்பதில் சந்தேகமேயில்லை. அதில் அற்புதன் எழுதிவந்த துரையப்பா முதல் அற்புதன் வரை எனும் தொடர் பல நிகழ்வுகளை சொல்லி வந்தது. இதற்காகவே அந்த பத்திரிகையை வாங்கி தொடர் தொடராக வாசித்து வந்தேன். அவற்றையெல்லாம் கட்டி பத்திரமாக இன்றும் வைத்திருக்கின்றேன். கதையை வாசித்தவர்களுக்கு கொலையாளி யாரெனெ தெரிந்திருக்கும்.
    • தினமுரசு பத்திரிகையில் ஈழமக்கள் முன்னணியில் இருந்து தொடர்கதையாக எழுதி வந்த பத்திரிகையாளர் அற்புதன் எமது போராட்டம் எப்படி யார்யார் தொடங்கினார்கள்.                   எமது போராட்டம் பற்றிய உடனடி கள தகவல்களுடன் தினமுரசு பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது.துரோக கும்பலில் உள்ளவர்களால் எழுதப்பட்டாலும் ஒவ்வொரு கிழமை வெளிவந்த பத்திரிகையையும் வாங்கி வாசித்து பலருக்கும் வாசிக்க கொடுத்து சேர்த்து வைத்திருந்தேன்.                  பலரும் ஒவ்வொரு கிழமையும் எப்படா தினமுரசு வரும் என்று காவல் இருந்து வாங்கி வாசித்துக் கொண்டிருந்த காலத்தில் திடீரென பத்திரிகையாளர் அற்புதன் சுட்டுக் கொல்லப்பட்டார்.                அவரது கொலை அவர்களது இயக்கமான ஈபிடிபி யே காரணம் என எல்லோராலும் பேசப்பட்டது.டக்ளஸ் ஏற்கனவே அற்புதனை எச்சரிகை செய்தும் தொடர்ந்தும் பல உண்மைகளை எழுதியதால்த் டக்ளசால் கொல்லப்பட்டாக சொல்கிறார்கள்.                             அற்புதனின் தினமுரசு பத்திரிகையை வாசிக்காதவர்கள் எமது போராட்ட ஆரம்ப வரலாறு தெரியாதவர்கள் இந்த தொடரை பாருங்கள்.                 வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள்.   பாகம்1    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.