Jump to content

கோலியா தோனியா? யார் சிறந்த டெஸ்ட் கேப்டன்? எண்கள் கூறுவது என்ன?


Recommended Posts

கோலியா தோனியா? யார் சிறந்த டெஸ்ட் கேப்டன்? எண்கள் கூறுவது என்ன?

 
kohli

தோனி, கோலி. | படம்: விவேக் பென்ரே.

டெஸ்ட் போட்டிகள் என்று வரும்போது இந்திய கேப்டன்களிலேயே பெரிய பெயரை அயல்நாட்டினர் மத்தியிலும் எடுத்ததில் மன்சூர் அலிகான் பட்டவ்டிதான் சிறந்த கேப்டன். இரட்டை அயல்நாட்டு தொடர்களை அடுத்தடுத்து வலுவான மே.இ.தீவுகள், இங்கிலாந்து என்று கொடிநாட்டியவர் அஜித் வடேகர்.

இது வெற்றி தோல்விகளினால் அல்லாமல் பட்டவ்டியின் கேப்டன்சி திறமையினால் அவருக்கு கிடைத்த நற்சான்றிதழாகும். அதே போல் சவுரவ் கங்குலி கேப்டனான பிறகு அயல்நாடுகளில் இந்திய வீரர்களின் ஆட்டத்தில் புத்தெழுச்சி ஏற்பட்டது.

 

எண்களை விடுத்துப் பார்த்தால் கேப்டன்சி திறமைகளில் தோனியும் கோலியும் ஒரே மாதிரிதான் செய்கின்றனர், தப்பும்தவறுமான களவியூகம், பொருத்தமற்ற பந்து வீச்சு மாற்றம், கோலியின் அணித்தேர்வு தவறுகள் என்று இருவருமே தேர்ந்த கேப்டன்கள் என்று கூற முடியாது, அஸ்வின் பந்து வீச்சுக்கு டீப் பாயிண்டில் பீல்டரை நிறுத்தி வீசியது, லார்ட்சில் பசுந்தரை பிட்சில் உணவு இடைவேளைக்குப் பிறகு பந்து இன்னும் பளபளப்பை இழக்காத போது ரெய்னாவிடம் பந்தைக் கொடுத்தது, கெவின் பீட்டர்சன், இயன் பெல், அலிஸ்டர் குக் ஆகியோர் போட்டு உரி உரி என்று உரித்த போது ஒன்றும் செய்யத் தெரியாமல் வாளாவிருந்தது. ஆஸ்திரேலியாவில் 4 விக்கெட்டுகளை 50 ரன்களுக்குள் இழந்த ஆஸ்திரேலிய அணியை தன் மோசமான களவியூகம், அதாவது ஸ்லிப் இல்லாமல் உமேஷ் யாதவ்வை வீசச் செய்து போட்டியையும் நாசம் செய்து பவுலரையும் நாசம் செய்தது, பந்து வீச்சு மாற்றத்தினால் அணியை விட்டுத் தூக்கும் நிலையிலிருந்த ரிக்கி பாண்டிங்கை சதமல்ல இரட்டைச் சதம் அடிக்க விட்டது. தென் ஆப்பிரிக்காவில் காலிஸ், டிவில்லியர்ஸ் சாத்து சாத்தென்று சாத்திய போது ஒன்றும் செய்யாமல் விழித்தது. புதிய பந்தை 80 ஓவர்கள் சென்றவுடன் எடுக்காமல் பழைய பந்திலேயே மேலும் 64 ஓவர்களை வீசி வெற்றி வாய்ப்பைத் துறந்தது, மே.இ.தீவுகளுக்கு எதிராக 180 ரன்கள் வெற்றி இலக்கை எதிர்த்து கட்டாய 15 ஓவர்கள் தொடங்கும் முன் இந்திய அணி 94/3 என்று இருந்தது, ஆனால் இலக்கை விரட்டாமல் இலக்கை நோக்கிப் போகாமல் ட்ராவுக்கு ஆடியது மேலும் ட்ராவுக்கு ஆடியதை நியாயப்படுத்திப் பேசியது என்று தோனியின் டெஸ்ட் கேப்டன்சி ஓட்டைகளை இன்னும் கூட அடுக்கலாம்.

இவற்றில் முக்கால்வாசித் தவறுகளையாவது கோலி தென் ஆப்பிரிக்கா, மற்றும் இங்கிலாந்து தொடர்களில் செய்திருப்பார். ஆகவே தோனி, கோலி இருவரும் தவறுகளில் ஒன்றாகவே தெரிகின்றனர், ஆனால் புள்ளிவிவரங்கள் வேறு.

புள்ளி விவரங்கள் ரீதியாக டெஸ்ட் போட்டிகளில் கடந்த 15-20 ஆண்டுகளாக ஒப்பிட்டுப் பார்த்தால் தோனி கேப்டனாக 27 டெஸ்ட் போட்டிகளில் வென்றுள்ளார், 40 டெஸ்ட் போட்டிகளில் விராட் கோலி 22 போட்டிகளில் வென்று 9-ல் தோற்று 9-ஐ ட்ரா செய்துள்ளார். வெற்றி விகிதம் கோலியின் கீழ் 55% தோனியின் கீழ் 45%

கேப்டனாக அதிக டெஸ்ட் போட்டிகளை ஆடியது தோனிதான் அவருக்குப் பிறகு கங்குலி (49), அசாருதீன், சுனில் கவாஸ்கர் (இருவரும் 47 டெஸ்ட்), ஆகியோர் உள்ளனர்.

கோலி 40 டெஸ்ட் போட்டிகளில் கேப்டனாக செயல்பட்டு பட்டவ்டியின் சாதனையைச் சமன் செய்தார். வெளிநாடுகளில் டெஸ்ட் தொடர் வெற்றி என்பதில் தோனி ஒரேயொரு தொடரில்தான் வென்றுள்ளார் கோலி 3, திராவிட் 3, கங்குலி 2. ஆனால் உள்நாட்டில் தோனி 8 தொடர்களை வென்று முதலிடம் வகிக்கிறார். கோலி 4 தொடர்களை வென்றுள்ளார்.

முதன் முதலில் அயல்நாட்டில் தொடரை வென்றது பட்டவ்டி கேப்டன்சியில்தான் அவர் 1968-ல் நியூஸிலாந்துக்கு எதிராக இதனைச் சாதித்தார். அதன் பிறகு இந்திய அணி 229 டெஸ்ட் போட்டிகளி; 47-ல் மட்டுமே வென்றுள்ளது.

அயல்நாட்டு வெற்றியில் கோலி 9 போட்டிகளில் வென்று முதலிடம் வகிக்கிறார். 8-ல் தோற்று 4 போட்டிகளை ட்ரா செய்துள்ளார். ஆனால் இந்த 9 வெற்றிகளில் 7 வெற்றி இந்தியாவிலிருந்து வேறுபடாத துணைக்கண்ட வெற்றிகளாக்கும். தென் ஆப்பிரிக்காவில் ஒரு வெற்றி, இங்கிலாந்தில் ஒரு வெற்றி.

தோனியின் 27 வெற்றிகள் என்பதை கோலி முறியடிக்க இன்னமும் 5 வெற்றிகள் தேவை. அதில் 2 இப்போது மே.இ.தீவுகளுக்கு எதிராகச் சாதிக்கப்படலாம். தோனியின் கேப்டன்சியில் இந்தியாவுக்கு வெளியே இந்திய அணி 6 போட்டிகளில்தான் வென்றுள்ளது, இரண்டு க்ளீன் ஸ்வீப் தோல்விகளில் 8-ல் தோல்வி பிறகு இங்கிலாந்துடன் லார்ட்சில் வென்று அதன் பெருமை பேசி முடிப்பதற்குள் 1-3 என்று உதை வாங்கியது இந்திய அணி. 15 வெளிநாட்டுத் தோல்விகள் தோனிக்குச் சொந்தம். காரணம் தோனி உள்நாட்டுக் கிரிக்கெட்டில் அனுபவம் பெற்று கேப்டனாக முன்னேறி வரவில்லை. உள்நாட்டு ரஞ்சி போட்டிகளில் ஆடியிருந்தால்தான் ஜடேஜா முச்சதம் அடிக்கும் போதும் வாசிம் ஜாஃபர் வைத்துக் வறுத்து எடுக்கும் போதும், ராபின் உத்தப்பா அதிரடி இன்னிங்ஸ் ஆடும் போதும் என்ன செய்வதென்று உத்திகளை வகுக்கும் அனுபவம் கிடைக்கும் அது இல்லாமல் காலிஸ், ஆம்லா, டிவில்லியர்ஸ், பாண்டிங், கிளார்க், ஹெய்டன், லாங்கர், கில்கிறிஸ்ட், கெவின் பீட்டர்சன், இயன் பெல், அலிஸ்டர் குக் ஆகியோர் இந்திய அணி பவுலர்களை மைதானம் முழுதும் சிதறடிக்கும் போது தோனி என்ன செய்து விட முடியும்?

கோலிக்கும் இப்போது அதே பிரச்சினைதான்... அது அனுபவம்.

https://tamil.thehindu.com/sports/article24954689.ece?utm_source=HP&utm_medium=hp-tsothers

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சந்தேகத்துக்கு இடமில்லாம  தோனி மிக சிறந்த கப்டன்...

சந்தேகத்துக்கு இடமில்லாம விராத் ,மிக சிறந்த பிளேயர்...

சந்தேகம் .. சந்தேகத்து இடமில்லாம ஒரேயொரு இடத்தில் மட்டும் தோற்றுபோகிறது...

அது: விராத் தோனிய ஓவர் ரேக் பண்ணி எங்கேயோ போய்விட்ட   மிக சிறந்த பிளேயர்தான் ...ஆனால் இன்னும் பத்து வருஷமானாலும்  தோனிக்கு அருகில்கூட நெருங்கி வரமுடியாத  கப்டன் .

இதுபற்றி ஒரு கிரிக்கெட் ரசிகரான  நவீனனின் கருத்து?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.