Jump to content

வலைப்பந்தாட்ட உலகையே வென்ற யாழ். மங்கை தர்ஜினி சிவலிங்கம்


Recommended Posts

வலைப்பந்தாட்ட உலகையே வென்ற யாழ். மங்கை தர்ஜினி சிவலிங்கம்

cover-photo-13-696x463.jpg
 

சிங்கப்பூரில் கடந்தவாரம் நிறைவுக்கு வந்த 11ஆவது ஆசிய வலைப்பந்தாட்ட சம்பியன்ஷிப் தொடரில் இலங்கை அணி ஐந்தாவது தடவையாகவும் சம்பியன் பட்டத்தை வென்று அசத்தியது.

இலங்கை வலைப்பந்தாட்ட அணியின் நட்சத்திர வீராங்கனை தர்ஜினி சிவலிங்கம். இவரின் உயரம் ஆறு அடி பத்து அங்கும். இவரின் மீள்வருகை இலங்கைக்கு வலைப்பந்தாட்டத்தில் மீண்டும் ஒருமுறை ஆசிய கிண்ணத்தை பெற்றுக் கொடுத்துள்ளது.

 

 

யாழ்ப்பாணம், புன்னாலைக்கட்டுவானைப் பிறப்பிடமாகக் கொண்ட தர்ஜினி சிவலிங்கம், ஆறு பிள்ளைகள் கொண்ட குடும்பத்தில் ஐந்தாவதாக பிறந்தவர்.

இவரது குடும்பத்தில் அநேகர் உயரமானவர்கள்தான். அதீத உயரம் காரணமாக இவரது சிறுவயது வாழ்க்கை மிகவும் கசப்பான அனுபவங்களை அவருக்கு கொடுத்து இருக்கின்றது. பெரும்பாலும் இவர் வேடிக்கைக்கு உரிய பொருளாகவே ஏனையோரால் பார்க்கப்பட்டார். கல்விப் பொதுத்தராதர உயர்தர வகுப்பில் இருந்தபோது இவரின் உயரம் ஆறு அடி இரண்டு அங்குலம் ஆகும். பாடசாலையிலேயே இவர்தான் உயரமானவர்.

அதிபரின் உயரம் ஆறு அடியும் ஒரு அங்குலமும். உயரம் காரணமாக ஏனைய மாணவர்களால் நையாண்டி செய்யப்பட்டார். இவர் பாடசாலை விடுதியில் தங்கி இருந்து படித்தார். ஏனென்றால் பஸ்ஸில் பயணம் செய்கின்றமைகூட இவருக்கு மிகவும் சிரமமாக இருந்தது. பஸ் கூரை இவரின் தலையை பதம் பார்த்து விடும்.

கிழக்கு பல்கலைக்கழகத்தில் கலைத்துறையில் தர்ஜினி சிவலிங்கம் பயின்றார். தமிழ் துறையில் விரிவுரையாளராக வர வேண்டும் என்பது இவரின் இலட்சியமாக இருந்தது. ஆயினும் இங்குதான் இவரின் வலைப்பந்தாட்ட திறமை இனங்காணப்பட்டது. அவரது திறமைகளைக் கண்டு வியந்துபோன அதிகாரிகள் அவரை கொழும்புக்கு அழைத்து விசேட பயிற்சிகளை வழங்கவும் நடவடிக்கை எடுத்தனர். இவரின் கசப்பான அனுபவங்களுக்கு சிறுவயது முதலே காரணமாகி இருந்து வந்த அதீத உயரம் தர்ஜினியை இன்று உயரத்துக்கு கொண்டு சென்றுள்ளது மாத்திரமல்லாது இலங்கை வலைப்பந்தாட்ட அணியையும் உலகறிய செய்தது என்றால் மிகையாகாது.

தர்ஜினி சிவலிங்கம் இலங்கை வலைப்பந்தாட்ட அணியின் நம்பிக்கை நட்சத்திரம் ஆனார். ஏனைய அணியினருக்கு இவர் சிம்ம சொப்பனம் ஆனார். இவரின் கைகளுக்கு பந்து கிடைத்தால் போதும், 90 சதமானம் தவறாமல் கோல் போட்டு விடுவார்.

2009ஆம் ஆண்டு இலங்கைக்கு ஆசிய வலைப்பந்து சம்பியன் கிண்ணத்தை பெற்றுக்கொடுக்க பெரும் தூணாக இருந்த தர்ஜினி, 2009 மற்றும் 2011ஆம் ஆண்டுகளில் ஆசியாவின் சிறந்த கோல்போடும் வீராங்கனையாகவும் (ஷூட்டர்) தெரிவானார். அதனைத் தொடர்ந்து தேசிய வலைப்பந்து அணியின் இணை தலைவியாக செயற்பட்ட தர்ஜினி, முன்னதாக 4 தடவைகள் ஆசிய வலைப்பந்தாட்ட சம்பியன்ஷிப் போட்டிகளில் இலங்கை அணியைப் பிரதிநிதித்துவப்படுத்தியும் இருந்தார்.

 

 

கடந்த 2014ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய வலைப்பந்தாட்ட சம்பியன்ஷிப் போட்டித் தொடரில் அபாரமாக விளையாடி இலங்கை அணியை இறுதிப் போட்டி  வரை அழைத்துச் செல்வதற்கு முக்கிய காரணமாக இருந்த தர்ஜினி சிவலிங்கம் இலங்கையின் வலைப்பந்தாட்ட நிர்வாகத்தில் ஏற்பட்ட திடீர் மாற்றங்கள் மற்றும் முரண்பாடுகள் காரணமாக கடந்த 3 வருடங்களாக எந்தவொரு சர்வதேசப் போட்டிகளிலும் இலங்கை அணிக்காக விளையாடவில்லை.

எனினும், தேசிய வலைப்பந்தாட்ட அரங்கில் சுமார் 13 வருடங்களாக இலங்கை அணிக்காக ஆசிய மற்றும் உலக அரங்கில் திறமைகளை வெளிப்படுத்தி வெற்றிகளைப் பெற்றுக்கொடுத்த தர்ஜினி சிவலிங்கம், முதற்தடவையாக அவுஸ்திரேலியாவின் வெஸ்ட் பெல்கன்ஸ் மற்றும் மெல்பேர்ன் சென்ட். எல்பன்ஸ் அணிகளுக்காக கடந்த வருடம் ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

இதன்படி, வெளிநாடொன்றில் தொழில்சார் வலைப்பந்தாட்ட விளையாட்டில் ஈடுபடுவதற்கு இலங்கையிலிருந்து ஒப்பந்தம் செய்யப்பட்ட முதலாவது வீராங்கனை என்ற பெருமையையும் தர்ஜினி சிவலிங்கம் பெற்றுக்கொண்டார்.

தர்ஜினிக்கு கிடைத்த இந்த வாய்ப்பு இலங்கை வலைப்பந்தாட்ட அணியின் முன்னாள் வீராங்கனையும், புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பயிற்றுவிப்பாளருமான திலகா ஜினதாஸ மற்றும் தர்ஜினியின் முகாமையாளர் எஸ். கோபினாத்தின் முயற்சியினால் கிடைத்தமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

  • 1-170.jpg
  • 2-130.jpg
  • 3-100.jpg
  • 4-67.jpg

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

இந்த நிலையில், 11ஆவது தடவையாகவும் சிங்கப்பூரில் கடந்தவாரம் நிறைவுக்கு வந்த ஆசிய வலைப்பந்தாட்ட சம்பியன்ஷிப் தொடரில் இலங்கை அணி வெற்றிவாகை சூடியது, இந்த வெற்றிக்கு இலங்கை அணியின் முன்னாள் பயிற்றுவிப்பாளர் திலகா ஜினதாசவின் மீள்வருகையும், தர்ஜினி சிவலிங்கத்தின் அபார ஆட்டமும் தான் முக்கிய பங்கு வகித்தன. எனவே பல சவால்களுக்கு மத்தியில் இந்த வெற்றியைப் பெற்றுகொடுத்த சாதனை நாயகி தர்ஜினி சிவலிங்கத்துடன் மேற்கொண்ட விசேட நேர்காணலை இங்கு பார்க்கலாம்.

  • ஆசிய கிண்ணத்தை ஐந்தாவது தடவையாக இலங்கை அணி வெற்றிகொண்டது. உங்களது மனநிலை எவ்வாறு உள்ளது?

உலகக் கிண்ணத்திற்கு தெரிவாக வேண்டும் என்ற நோக்கத்துடனேயே சிங்கப்பூர், மலேஷியா மற்றும் ஹொங்கொங் ஆகிய அணிகள் களமிறங்கியிருந்தன. எனவே, இம்முறை போட்டிகள் அனைத்தும் மிகவும் சவால்மிக்கதாக அமைந்தது. யாரும் இங்கு வந்து தோல்வியைத் தழுவுவதற்கு விரும்பவில்லை. ஆனாலும், பயிற்சியாளரின் ஒருசில வியூகங்களாலும் எமது வீராங்கனைகள் ஒன்றாக விளையாடி அந்த மூன்று அணிகளுக்கும் பலத்த போட்டியைக் கொடுத்து ஆசிய கிண்ணத்தை வென்றோம்.

 
 
  • நீங்கள் கடந்த மூன்று வருடங்களாக இலங்கை அணிக்காக விளையாடி வருகின்றீர்கள். எனினும், உங்களது மீள்வருகையும், இலங்கை அணியின் அனைத்து வெற்றிகளுக்கும் நீங்கள் தான் முக்கிய காரணமாக இருந்தீர்கள். அதுபற்றி என்ன நினைக்கிறீர்கள்?

உண்மையில் இது தனியொருவரால் மாத்திரம் பெற்றுக்கொண்ட வெற்றி அல்ல. போட்டியின் போது மைதானத்திற்கு உள்ளே இருக்கின்ற ஏழு வீராங்கனைகளும், வெளியில் உள்ள நான்கு வீராங்கனைகளும் உட்பட் 12 பேரும் ஒன்றாக சேர்ந்து விளையாடியதன் காரணமாகத்தான் இந்த வெற்றியைப் பெற்றுக் கொண்டோம். எனக்கு வழங்கப்பட்ட பொறுப்பை நான் சரிவர செய்தேன். அதேபோல, என்மீதும், எனது அனுபவத்தின் மீதும் அணியின் பயிற்றுவிப்பாளர், முகாமைத்துவம் மற்றும் வலைப்பந்தாட்ட சம்மேளனம் ஆகியன மிகப் பெரிய நம்பிக்கை வைத்திருந்தனர். அந்த நம்பிக்கையை நான் நிறைவேற்றிக் கொடுத்தேன்.

  • நீங்கள் அவுஸ்திரேலியாவுக்குச் சென்று தொழில்சார் வலைப்பந்தாட்டப் போட்டிளில் அங்குள்ள கழகங்களுக்காக விளையாடி இருந்தீர்கள். அங்கு பெற்ற அனுபவத்தைப் பற்றிச் சொல்லுங்கள்?

உண்மையில் நான் கடந்த மூன்று வருடங்களாக இலங்கையில் விளையாடவில்லை. அப்போது நான் இனிமேல் வலைப்பந்தாட்டம் விளையாடப் போவதில்லை என முடிவெடுத்திருந்தேன். ஆனால் இலங்கை அணியின் பயிற்சியாளராக திலகா ஜினதாச மீண்டும் பொறுப்பேற்ற பிறகு அவருடைய வேண்டுகோளுக்கு இணங்க நான் மீண்டும் இலங்கை அணிக்காக விளையாடினேன். அதுமாத்திரமின்றி, அவருடைய உதவியுடன் நான் அவுஸ்திரேலியாவுக்குச் சென்று அங்குள்ள உள்ளூர் கழகங்களுக்காக விளையாடினேன். எனவே என்னை இந்த இடத்துக்கு கொண்டு வருவதில் முக்கிய பங்குதாரராக இருந்த எனது பயிற்சியாளர் திலகா ஜினதாசவுக்கு இந்த நேரத்தில் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

அதேபோன்று, அவுஸ்திரேலியாவில் என்னை கவனித்துக் கொண்ட நிகொலஹா ரிச்சாஜனை இந்த நேரத்தில் ஞாபகப்படுத்த விரும்புகிறேன். அவுஸ்திரேலிய வலைப்பந்தாட்ட அணியின் நட்சத்திர வீராங்கனைகளில் ஒருவரான ரிச்சாஜன், ஒலிம்பிக் மற்றும் பொதுநலவாய போட்டிகளில் பதக்கம் வென்றவரும் ஆவார்.

அத்துடன், தற்போது அவுஸ்திரேலிய கழக வலைப்பந்தாட்ட போட்டிகளில் பயிற்சியாளாராகவும் செயற்பட்டு வருகின்ற மார்க்கையும் இந்த இடத்தில் குறிப்பிட விரும்புகின்றேன். வலைப்பந்தாட்டமே வேண்டாம் என்று இருந்த என்னை மீண்டும் வலைப்பந்தாட்டத்தில் ஈடுபட வைத்தமைக்கும், இலங்கைக்குச் சென்று மீண்டும் விளையாட அனுமதி அளித்தமைக்கும் அவர்கள் இருவருக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன். எனவே அவுஸ்திரேலியாவில் பெற்ற அனுபவங்கள் இந்த முறை ஆசிய கிண்ணத்தில் சிறப்பாக விளையாடுவதற்கு நிறைய உதவியாக இருந்தது.

  • 2019 இங்கிலாந்தில் நடைபெறவுள்ள உலகக் கிண்ண வலைப்பந்தாட்டப் போட்டிகளுக்கான உங்களது ஆயத்தம் குறித்து சொல்லுங்கள்?

ஆசிய கிண்ணத்தை வென்ற எங்களுக்கு உலகக் கிண்ணத்தை வெல்வதற்கான அனைத்து தகுதியும் இருக்கின்றது. அந்த நம்பிக்கை எம்மிடம் நிறைய உள்ளது. ஆனால் அதற்கான வசதிகள் இல்லாமை கவலையளிக்கிறது. எமக்கென்று தனியான உள்ளக அரங்கொன்று இல்லை. நீண்ட தூரப் பயணங்களை மேற்கொண்டுதான் இங்கு வருகின்றோம். எனவே எமக்கான வசதிகளை அதிகாரிகள் பெற்றுத் தந்தால் நிச்சயம் உலகக் கிண்ணத்தில் எங்களால் சாதிக்க முடியும். அதேபோல, நான் உலக்கிண்ணத்தில் விளையாடுவது குறித்து இன்னும் தீர்மானிக்கவில்லை.

 

  • நீங்கள் தொடர்ந்து எவ்வளவு காலம் நாட்டுக்காக விளையாடுவதற்கு எதிர்பார்த்துள்ளீர்கள்?

அது தொடர்பில் நான் எந்தவொரு தீர்மானத்தையும் இதுவரை எடுக்கவில்லை. எனினும், நான் தொடர்ந்து விளையாடுவேனா? இல்லையா? என்பது தொடர்பில் பயிற்சியாளரும், வலைப்பந்தாட்ட நிர்வாகமும் தான் முடிவெடுக்க வேண்டும். ஆனால் சிறந்த பயிற்சியாளரும், நிர்வாகமும் தொடர்ந்து இருந்தால் நான் நிச்சயம் இலங்கைக்காக விளையாடுவேன்.

  • இறுதியாக என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

என்னை வலைப்பந்தாட்ட உலகில் நட்சத்திர வீராங்கனையாக மாற்றுவதற்கு காரணமாக இருந்த எனது பெற்றோர், குடும்பத்தினர், வலைப்பந்தாட்ட சம்மேளனம், பயிற்சியாளர், முன்னாள் மற்றும் இன்னாள் வீராங்கனைகள், நான் தொழில் செய்கின்ற செலான் வங்கி மற்றும் அங்கு பணிபுரிகின்ற அதிகாரிகளுக்கும் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

அதுமாத்திரமின்றி, என்னை வாழவைத்த எனது மண்ணுக்கும், என்னை எப்போதும் நேசிக்கின்ற, எனக்காக பிரார்த்தனை செய்கின்ற அனைத்து தமிழ் மக்களுக்கும் வாழ்நாள் முழுவதும் நன்றி உடையவளாக இருக்க விரும்புகிறேன்.

http://www.thepapare.com

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நவீனன் said:

அதிபரின் உயரம் ஆறு அடியும் ஒரு அங்குலமும். உயரம் காரணமாக ஏனைய மாணவர்களால் நையாண்டி செய்யப்பட்டார்.

வாழ்த்துக்கள் சகோதரி!


செய்தியாளர் சொல்ல வந்த செய்தியை  சொல்லவேண்டும். அதைவிடுத்து இளவயது நையாண்டிகளையெல்லாம் சொல்வது செய்தியாளரின் அநாகரீகத்தை புடம் போட்டுக்காட்டுகின்றது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நவீனன் said:

அதுமாத்திரமின்றி, என்னை வாழவைத்த எனது மண்ணுக்கும், என்னை எப்போதும் நேசிக்கின்ற, எனக்காக பிரார்த்தனை செய்கின்ற அனைத்து தமிழ் மக்களுக்கும் வாழ்நாள் முழுவதும் நன்றி உடையவளாக இருக்க விரும்புகிறேன்.

?வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெருமையாக உள்ளது. வாழ்த்துக்கள் சகோதரி.

Link to comment
Share on other sites

எனது பங்கை முழுமையாக செய்து கொடுத்தேன் – தர்ஜினி

ஆசிய வலைப்பந்து சம்பியன்ஷிப் போட்டித் தொடரில் சம்பியன் கிண்ணம் வென்ற இலங்கை அணியின் முன்னணி வீராங்கனை தர்ஜினி சிவலிங்கம் நாடு திரும்பியதும், இத்தொடரில் தான் பெற்ற அனுபவம் மற்றும் தான் அவுஸ்திரேலியாவில் பெற்ற அனுபவம் என்பவை குறித்து தெரிவித்த கருத்து.

 

 

 

 

Welcoming Tharjini Sivalingam at Seylan Bank Head Office... winners of the Asian Netball Championship 2018

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முதலிலேயே சொல்லிவிட்டார்தானே
    • நெடுக்காலபோவான், இவை நீங்களே எடுத்த படங்கள் என்று மட்டும் சொல்லிவிடாதீர்கள்.  கேடுகெட்ட சொறிலங்காவுக்குள் உங்களைப் போன்ற மானமுள்ள வீரப் புலம்பெயர்ந்த தமிழர் யாராவது கால் வைப்பார்களா ? நினைக்கவே கால் கூசுகிறது. 😂
    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.