Jump to content

திருமுருகன் காந்தி மீதான ஊபா சட்டம் இரத்து - நீதிமன்றம் அதிரடி.!


Recommended Posts

திருமுருகன் காந்தி மீதான ஊபா சட்டம் இரத்து - நீதிமன்றம் அதிரடி.!

 

 
Image

கடந்த 2017 ஆம் ஆண்டு சென்னையில் பாலஸ்தீன விடுதலை குறித்து பேசியதற்காக மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி மீது ஊபா சட்டம் பாய்ச்சப்பட்டிருந்தது. தீவிரவாதிகள் மீது பயன்படுத்தப்படும் ஊபா சட்டத்தினை திருமுருகன் காந்தி மீதி பயன்படுத்தியதை தமிழக அரசியல் கட்சிகளும், ஜனநாயக சக்திகளும் கடுமையாக கண்டித்திருந்தன.

இந்த நிலையில், இன்று திருமுருகன் காந்தி மீதான ஊபா சட்டத்தினை நீக்கியுள்ளது எழும்பூர் நீதிமன்றம். கடந்த 2017இல் சென்னையில் பிரிவினை வாதத்தை தூண்டும் வகையில் பேசியதாக திருமுருகன் காந்தி மீது 2 பிரிவுகளில் வழக்குப்பதியப்பட்ட நிலையில் UAPA பிரிவை மட்டும் ரத்து செய்துள்ளது நீதிமன்றம்.

முன்னதாக, மத்திய -மாநில அரசுகளின் தவறுகளை, மக்கள் விரோத செயற்பாடுகளை சுட்டிக்காட்டுவதன் காரணத்தினாலேயே திருமுருகன் காந்தி அதிகப்படியான ஒடுக்குமுறைகளுக்கு உள்ளாக்கப்படுவதாக ஜனநாயக சக்திகள் அரசுகளுக்கு கடும் கண்டனம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

https://www.ibctamil.com/india/80/106239

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.