Jump to content

சந்தன, தேக்கு மரங்கள் வளர்ப்போம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

உலகிலேயே மிக விலை கூடிய தேவை மிக்க மரங்கள் தான் சந்தனம், தேக்கு போன்ற மரங்கள்.

சந்தன மர கடத்தல், ஆந்திராவில் சந்தன மரங்கள் வெட்டிய தமிழர்கள் கொலை என்பதால் இது ஏதோ வளர்க்க கூடாத மரங்கள் என்று தவறாக நினைக்கிறார்கள்.

விசயம் அதுவல்ல. அரசுக்கு சொந்தமான வனப்பகுதிகளில் களவாக வெட்டப்படும் மரங்களுக்கே இந்தக் கெடுபிடி.

சிலைத் திருட்டு போல, சந்தன மர திருட்டும் சட்ட விரோதமானது.

இந்த வகை மரங்கள் வளர்ப்பு, சந்தை குறித்த விழிப்புணர்வு தமிழகத்தில் இப்போது உண்டாகி, பலர் இந்த மரங்கள் வளர்ப்பு குறித்து அக்கறை செலுத்துகிறார்கள்.

25 வருடங்கள் வளர்க்கப் படும் ஒரு பூரணமாக வளர்ந்த மரணத்துக்கான சந்தை மதிப்பு 2 கோடி (இலங்கைப் பணத்தில்) வரை கிடைப்பதால், இந்த மரத்தினை தமது நிலங்களில் வளர்க்கலாம் என ஒரு ஆர்வம் விவசாயிகள் மத்தியில் உண்டாகி உள்ளது.

வேம்பு போன்ற மரங்கள் போல இதனை வளர்க்க முடியும். எந்த வித பராமரிப்பும் இல்லாது வளரும். ஆயினும் பாதுகாப்பு முக்கியமானது (மர திருட்டு) .

ஒரு 10 தொடக்கம் 25 வரை வளர்த்தால்..... உங்களுக்கும் ஓய்வுக்கு பணமும் கிடைக்கிறது... பிள்ளைகள் கல்விக்கும் உதவும்..

விசாரித்து பாருங்கள். இப்போது இராணுவம் விடுவிக்கும் காணிகளில் இதனை நட்டு வையுங்களேன்.

நன்கு விசாரித்து... சரியான தடம் (source ) விசாரித்து செய்ய வேண்டும். உதாரணமாக அரச அமைப்புகள் மூலமாக விசாரணைகளை ஆரம்பித்தால், சரியான வழிமுறைகளை பெற்றுக் கொள்ள முடியும்.

தமிழகத்திலிருந்து தருவிப்பதாயின், அதற்குரிய இறக்குமதி தாவர (நோய் இல்லை என்ற) லைசென்ஸ் தேவை. ஆரம்பத்திலேயே சம்பந்தப் பட்ட அரச விவசாய அதிகாரிகளுடன் கடித மூல தொடர்புகளை வைத்திருந்தால், மரத்தினை நீண்ட காலத்துக்கு பின்னர் வெட்டும் பொது, உங்களது தான் என நிரூபித்து, ஏற்றுமதி லைசென்ஸ் பெறுவது இலகு.

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் பயனுள்ள வீடியோ ....நன்றி நாதம்ஸ் ......!  tw_blush:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.