Jump to content

மேற்குத் தொடர்ச்சி மலை – பா. கோவர்தன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நேற்று முன்தினம் இந்தப்படத்தைப் பார்த்தேன். எதிர்பார்த்த மாதிரியே காட்சிகள் இருந்தாலும் மலையாளக் கம்முயூனிஸ்ட் சாக்கோ விளிம்பு நிலை மக்களுக்காக போராடியது பிடித்திருந்தது. 

படம் பிடித்திருந்தது. ஆனால் கட்டுரை சொல்லுவதுபோல இன்னும் இரசனையை வளர்க்கவேண்டும்!

 

மேற்குத் தொடர்ச்சி மலை – பா. கோவர்தன்

மேற்குத் தொடர்ச்சி மலை திரைப்படம் வெளியான தினத்தின் மதியத்தில் இருந்தே ‘தமிழில் ஓர் உலக சினிமா’ எனும் அடைமொழி அதனுடன் ஒட்டிக் கொண்டு விட்டது. தமிழின் முதல் சீரிய அரிய முயற்சி என்றெல்லாம் உலகத் திரைப்படங்களைத் தொடர்ந்து பார்த்து வரும் தமிழர்களில் பலரும் சிலிர்த்துக் கொண்டார்கள். இதை நான் முன்னமே எதிர்பார்த்திருந்தேன் என்பதனால் சிறிய அதிர்ச்சி கூட ஏற்படவில்லை. ஏனெனில், குறிப்பிட்ட வார்ப்புடைய தமிழ்ப் படங்களை இவர்கள் இங்ஙனம் அடையாளப்படுத்துவது புதிதோ முதன்முறையோ அல்லவே! ‘வீடு’ காலம் தொட்டே பொருத்தமற்ற முறையில் சராசரிக்கும் கீழான படங்களை மிகையாக விதந்தோதி வருவதன் தொடர்ச்சியாகவே இதனைக் காண நேர்ந்து சலித்து விட்டது. ஜோக்கருக்கும் காக்கா முட்டைக்கும் விசாரணைக்கும் ஜிகர்தண்டாவுக்கும் கூட இவர்கள் இதே அடைமொழியுடனே அவற்றை வழிமொழிந்தார்கள் என்பதை மறக்கலாகுமா? என்னுடன் இணைந்து மேற்குத் தொடர்ச்சி மலை திரைப்படத்தைப் பார்த்த உலக சினிமா இரசிகர் ஒருவர், ‘நான் சாகறதுக்குள்ளயாவது இப்படி ஒரு படத்தை தமிழ்ல எடுத்திட மாட்டாங்களான்னு தவிச்சுக் கெடந்தேன். இனிமே என் கட்டை நிம்மதியா வேகும்’ என உணர்ச்சி மேலிட புளங்காகிதமடைந்து நிம்மதி பெருமூச்செறிந்தார். இத்தகைய ஆட்கள் வெற்று பழக்கத்தின்பாற் சிறைப்பட்டு அசல் உலகத் திரைப்படங்களைப் பார்த்து சராசரி இரசனையை உதறி மேலெழுந்து விட்ட பாவனையில் உலா வருகிறார்களே அன்றி அவற்றின் நுட்பமான வேறுபாடுகளை அறிந்து அதன் சிறப்பியல்புகளை உள்வாங்கிக் கொண்ட மேலான பார்வையாளர்கள் அல்ல என்பது திண்ணம்.

தமிழில் எடுக்கப்படும் மாற்று முயற்சிகளுக்கென்று சில பிரத்யேக அடிப்படை விதிகளை நமது விமர்சகர்கள் கற்பிதம் செய்து கொண்டிருக்கிறார்கள். அவற்றை எல்லாம் பூர்த்தி செய்தால் அது ‘கலைப்படம்’, இல்லையேல் வணிகக் குப்பை. அவை அனைத்தையும் கறுப்பு வெள்ளையாக அணுகுவதில் உள்ள போதிய பயிற்சியின்மையின் முதிரா வெளிப்பாடுகள் மட்டுமே. ஏழை எளிய மக்களின் அன்றாட வாழ்வியலைச் சொல்லும் கதைக்களம், மேலோட்டமான சமூக அக்கறை, நவீன வாழ்வு மற்றும் வசதிகள் மீதான ஒவ்வாமை, கொஞ்சம் சிகப்புச் சாயம், அதிகாரத்தைக் கேள்விக்குள்ளாக்கும் மெல்லிய சாடல் போன்றவற்றை உள்ளடக்கியத் திரைப்படங்களுக்கு உடனடி செவ்வியல் அந்தஸ்து கிடைக்கும். காட்சிகளின் நகர்வில் ஓர் ஆமைத்தனம் கட்டாயமாக இருக்க வேண்டும். தர்க்க மீறலுக்கு வழிவகுக்கும் வகையில் நமது திரைப்படங்களில் திணிக்கப்படும் பாடற்காட்சிகள் இடம்பெறாவிட்டால் ஐயமின்றி அது உலகப்படமே தான். பாடல்கள் இருந்தாலும் அவை காட்சிகளின் பின்னணியில் ஒலித்தால் நமது விமர்சகர்கள் புறுபுறுக்க மாட்டார்கள். மதிப்பெண்கள் வழங்குவதில் கருணையும் காட்டப்படும். அதாவது, தமிழ்ப்படங்களின் வழக்கமான மிகை ஆர்ப்பாட்டங்களை வடிகட்டி விட்டு தரையில் காலூன்றி நிற்கும் ‘யதார்த்தச்’ சித்திரங்களே இவர்களைப் பொறுத்தமட்டில் வருங்கால விருட்சத்திற்கான நம்பிக்கை விதைகள். இத்தகைய பாமரத்தனமான முயற்சிகளே தமிழ்ப்படங்களில் கலை ரீதியிலான வெற்றி பின்னாளில் சாத்தியப்படுவதற்குண்டான அடிக்கல்கள். இது போன்ற பரீட்சார்த்த படைப்புகளின் வணிக வெற்றியே புதிய பாய்ச்சல்களுக்கான ஊக்க சக்தியாக அமையும் என்றார்கள். எனவே, எவரும் இவை குறித்து எதிர்மறையாக சொல்வதோ எழுதுவதோ மாபெரும் குற்றம். இதனை மீறுபவர்கள் அனைவரும் முன்னோடி முயற்சிகளை முளையிலேயே நசுக்க நினைக்கும் நச்சுப் பாம்புகள். முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக இதையே சொல்லி வருகிறார்கள். இன்னமும் முன்னேற்றம் கண்டபாடில்லை.

மிகையின்றி இருப்பதாலேயே ஒரு படைப்பு மகா காவியமாகி விடாது. நிதானமாக நகர்வதென்பது அடிப்படை விதியுமல்ல. கலையின் கூறுகளே வேறு. எளிமையான கதைகள் பலவும் வலுவான உணர்ச்சிகளைக் கையாண்டு நீடித்தத் தாக்கத்தை பார்வையாளரிடையே ஏற்படுத்தி இருக்கின்றன. அன்றாட அலைச்சல்களின் சலிப்பூட்டக்கூடிய சம்பிரதாய நிகழ்வுகளின் ஊடாக காவியக் கண்டடைதல்களைக் கொண்டு வந்த திரைப்படங்கள் ஏராளம். கதை கோரும் திரைமொழியை அவை தேர்ந்தெடுத்துக் கொண்டு தன்னளவில் முழுமையடைந்திருந்ததே அதற்குக் காரணம். மற்றபடி, மேற்கூறிய உள்ளடக்கங்களை போலி செய்து பம்மாத்து காட்டுபவனவற்றுள் பெரும்பாலான படங்கள் சவலையானவை. மூலப்பொருட்களை எவரும் சேகரம் செய்யலாம். சமையற் பக்குவம் கை கூடியதா என்பதே முக்கியம். அசட்டுத்தனமான வணிகப் படங்களுக்கே பேராதரவை நல்கி வரும் தமிழ்ச்சூழலில், அரிதாக வெளியாகும் ‘குறிஞ்சிப்பூ’ முயற்சிகளுக்கு பக்கபலமாக இல்லாவிடினும் அதன் குறைகளை பெரிதுபடுத்தி மூர்க்கமாக எதிர்க்காமல் இருக்கலாமே என சில திரைப்பட ஆர்வலர்கள் விசனப்பட்டிருந்தார்கள். புறச்சூழலின் எதிர்வினைகளைப் பொறுத்தோ பொதுத்திரளின் கலையறிவு சார்ந்த புரிதல் நிலைகளை கணக்கில் கொண்டோ கலையின் அளவுகோல்கள் மாறுபடாது. அதில் சமரசங்களுக்கும் இடமில்லை. அந்த வகையில் மேற்குத் தொடர்ச்சி மலையில் வியக்கத்தக்க சாதனைகளோ மாற்றமைக்கான அடிப்படை கூறுகளோ இல்லை என்பதை உரக்கச் சொல்வது அவசியமாகிறது. பிறர் பயணிக்கத் தயங்கும் காட்டுப் பாதையை இயக்குநர் லெனின் பாரதி தேர்வு செய்திருக்கிறார் என்பதில் இரு வேறு அபிப்ராயங்கள் இருக்க முடியாது. எனினும், பலவீனங்கள் மலிந்த காட்சிப் பிரதியை அதன் தகுதிக்கு மீறி விதந்தோதுவது என்பது மேலும் பல ஆபத்தான போக்குகளுக்கே வழி வகுக்கும். மாற்று முயற்சி என்ற பெயரில் எதை எடுத்து வைத்தாலும் முட்டுக்கொடுக்க ஆட்கள் இருப்பார்கள் எனும் தைரியம் துளிர் விடுவது அபாயகரமானது இல்லையா? நமது பழைய சமரசங்களுக்கான தண்டனையைத் தான் நாம் ஏற்கனவே அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். எனவே, அதனதன் இடத்தில் அதனதனை வரையறுத்து வைப்போமாக! தற்சமயம் பெரும்பாலான திரையரங்குகளில் இருந்து இத்திரைப்படம் வெளியேறிவிட்ட நிலையில், இதனை விமர்சனரீதியில் அணுகி பகுப்பாய்ந்து மறுதலிக்கும் செயல் இது ஈட்டக்கூடிய வணிக இலாபத்திற்கு ஊறு விளைவிக்கப் போவதில்லை. ‘இது நல்ல படமல்ல’ எனும் எதிர்மறைப் பார்வை திரையரங்குகளை நோக்கி மக்களை இழுப்பதை தடுக்கப்போவதுமில்லை.

merku-thodarchi-malai-photo-018-300x177.

படம் முழுக்கவே உணர்வுத் தளத்தில் விலக்கம் கூடிப்போய் இருந்தது. ‘இது ஆவணத்தன்மை கொண்ட புனைவாக்கம். தமிழுக்கே இந்த வகைமை புதிது’ என்று சிலர் அபிப்ராயப்பட்டனர். அதன் அடிப்படையில் பாராட்டியும் இருந்தனர். ஓர் ஆவணப்படத்தில் சிந்தனைக்கும் எதிரெதிர் கருத்தியல்கள் ஊடாக திரண்டெழும் தரிசனத்திற்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருக்கும். அவற்றுடன் நம்மைப் பிணைக்கும் சரடாக வரலாற்று சாட்சியங்களும் அந்த உண்மை மனிதர்களின் அனுபவங்களும் துணை நிற்கும். மனச்சாய்வுகளை இயன்றவரை தவிர்த்து விட்டு கறாரான புறவய நோக்குடன் அணுகி ஆராயும். புனைவிலோ சிந்தனையின் இடத்தை நாடகீயத் தருணங்களும் உணர்ச்சிகரங்களும் ஆக்கிரமித்துக் கொள்கின்றன. இந்த இரண்டு வகைமைக்குள்ளும் அடங்காத மோசமான திரைப்படம் தான் மேற்குத் தொடர்ச்சி மலை. இவ்விரண்டின் விநோதக் கலவை இது எனும் முடிவை எட்டுவதற்குண்டான சாத்தியக்கூறுகளும் அதனுள் கிஞ்சித்தும் இல்லை. ஒரு பரிசோதனை முயற்சியின் இறுதியில் அடையக்கூடிய புதிய விளைவை உத்தேசமாக ஊகித்தோ இன்னதென்று வரையறுத்து விட இயலாத எதிர்பாராத விளைவுகளை அனுமானித்தோ தெளிவின்மையின் குறுகுறுப்புடனோ தான் அத்தகைய முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. எப்பேர்ப்பட்ட முயற்சியாக இருப்பினும் அதன் பெருமதிப்பு என்பது எப்போதும் விளைவைப் பொறுத்தே தீர்மானிக்கப்படும். பார்வையாளர்களை பரிசோதனை எலிகளாக பாவித்து செய்யப்பட்ட முயற்சி இது. பார்த்துக் கொண்டிருக்கும் போதே உயிர் போய் விடுகிறது! இதை ஏதோ உலக சாதனை எனக் கொண்டாடும் முதுகு சொறிதல்கள் மிகுந்த ஆயாசத்தைத் தருகின்றன. ஆலையில்லாத ஊரில் இலுப்பைப்பூ சக்கரை.

இதன் திரைமொழியில் பிரக்ஞைபூர்வமாக திட்டமிடப்பட்ட கட்டுடைப்புகள் நிகழ்ந்ததற்கான முகாந்திரங்கள் ஏதுமில்லை. லெனின் பாரதிக்கு இந்தக் கதைக் களத்தில் இவ்வளவு தான் சாத்தியப்பட்டிருக்கிறது என்று வேண்டுமானால் சொல்லலாம். ஒரு சிறிய கல்லை எடுத்துக் கொண்டு வழிப்போக்கர்களும் தொழிலாளர்களும் மலையேறும் தொன்மக் கதை மட்டும் படத்தில் கவனிக்கத்தக்கதாக இருந்தது. ‘எல்லாரும் மலையேற கல்லை எடுத்துட்டு வருவாங்க. என்னை மலை இறங்க கல்லைத் தூக்க வச்சிட்டீல்ல?’ என வயதான மூட்டைத் தூக்கும் தொழிலாளி அடிபட்ட அகங்காரத்துடன் தெய்வத்திடம் முறையிடும் இடம் ஒரு சிறிய நம்பிக்கையைக் கூட ஏற்படுத்தியது. அதற்குப் பிறகு வருவதெல்லாம் முன்கூட்டியே எளிதாக ஊகித்து விட முடிபவை. அலுப்பூட்டும் அவல நாடகம். மெல்லுணர்ச்சிக் குவியல். ‘இந்த எடத்தில மழை பெய்ஞ்சு விளைஞ்சது எல்லாம் நாசமாகப் போகும் பாரேன்’ என நாம் நினைப்பதெல்லாம் நடக்கிறது. ஒரு கட்டத்திற்கு மேல், நாம் நம்மை நாஸ்டர்டாமஸாக உணரத் தொடங்குகிறோம். எல்லாத் திரைப்படங்களும் திடீர்த் திருப்பங்களையும் ஆச்சரிய சுவாரஸ்யங்களையும் உள்ளடக்கியிருக்க வேண்டும் என்கிற அர்த்தத்திலோ எதிர்ப்பார்ப்பிலோ இதனைக் குறிப்பிடவில்லை. இத்திரைப்படம், வருந்தத்தக்க செய்திகளை வாசிக்கையில் உண்டாகும் குறைந்தபட்ச பாதிப்பைக் கூட உருவாக்கத் தவறிய பலவீனமான கூறல் முறையைக் கொண்டிருந்தது. அதனால், சம்பவங்களின் நகர்வில் எவ்வித தாக்கமுமின்றி தேமே என வேடிக்கைப் பார்க்க வேண்டியுள்ளது. தீவிரமாக மெனக்கெட்டு படத்துடன் ஒன்ற நினைத்தாலும் பார்வையாளர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றுகிறது.

இரண்டு மணி நேரப் படத்தில் ஒரு நாடகீய மோதல் கூட உருவாகி வரவில்லை. சிடுக்குகளற்ற தட்டையான கதாபாத்திரங்களை வைத்துக் கொண்டு வேறென்ன தான் செய்ய முடியும்? புறச்சூழ்நிலையின் பாதிப்பினால் நேரக்கூடிய கதை மாந்தர்களின் தடுமாற்றங்களும் கூர்மையாகப் பதிவு செய்யப்படவில்லை. ஏழை எளிய மக்களுக்கென புழக்கத்தில் இருக்கும் அச்சு வார்ப்புகளை அப்படியே பிரதி எடுத்திருக்கிறார்கள். இவை போதாதென்று ஏராளமான கட்டுப்பெட்டித்தனமான முன்முடிவுகளுடன் வேறு அணுகி இருக்கிறார்கள். அழுத்தமற்ற சம்பவங்களின் பின்னணியில் நெய்யப்பட்ட படத்தில் கதைக்கோர்வையும் பிசிறடிக்கிறது. நாம் அதிகம் அறிந்திராத நிலப்பரப்பின் கதைக்கு நம்பகத்தன்மை அளிக்கும் நுட்பமான தகவல்களும் மேலதிக விவரிப்புகளும் எத்தனை அவசியமானது? ஒன்றுமே தட்டுப்படவில்லை. சகாவு என்னமோ ‘சாயா குடிக்க வாடே’ என்று கூப்பிட்டது போல அவர் அழைத்தவுடனே நான்கு நபர்கள் கொலை செய்யக் கிளம்பி விடுகிறார்கள். இந்த நான்கு நபர்களுள் மனைவி பிள்ளை சகிதம் வாழ்ந்து கொண்டிருக்கும் குடும்பஸ்த கதாநாயகனும் அடக்கம். பின்னே, கதாநாயகன் அப்போது தான் சிறைக்குப் போக முடியும். கைவிடப்பட்ட குடும்பம் கடன் வாங்கும். அதிகாரம் நிலத்தை கையகப்படுத்தும். குய்யோ முய்யோ கூப்பாடு போட வசதியாக இருக்கும். கஷ்டம், கஷ்டம், கஷ்டம்! கதையின் இடையே ‘விக்ரமன் படப் பாடல்’ பகுதி வேறு இடம்பெற்றிருக்கிறது. இதுவே வணிகப் படங்களில் வரும் போது நம் ஆட்கள் நமட்டுச் சிரிப்பு சிரிப்பார்கள். இப்போது வந்திருப்பது ‘மாற்று முயற்சி’யில் அல்லவா? குறியீடு கண்டுபிடித்துக் கொண்டிருக்கிறார்கள். அப்புறம் இளையராஜா! அவரிடமிருந்து அந்தப் புல்லாங்குழலை யாராவது பிடுங்கி இருக்கலாம். மனிதர் சோகத்தைப் பிழிந்தெடுத்து விடுகிறார்.

இந்தத் திரைப்படம் குறித்த கருத்தரங்கில் பேசிய படத்தின் தயாரிப்பாளர் விஜய் சேதுபதி தனக்குப் படம் பிடிக்கவில்லை என்றும் மற்றவர்கள் விதந்தோதுவதைக் கேட்கையில் தன்னுடைய இரசனையை வளர்த்துக் கொள்ள வேண்டும் போல என்றும் கூறியிருந்தார். உங்களது இரசனையில் எந்தக் கோளாறும் இல்லை விஜய் சேதுபதி. இந்தப் படத்தைப் பாராட்டியவர்களே தங்களை மேம்படுத்திக் கொள்ள வேண்டியவர்கள்.

 

http://tamizhini.co.in/2018/09/13/மேற்குத்-தொடர்ச்சி-மலை-ப/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வெளிநாட்டு சுற்றுலாப் பயணிக்கு வடை விற்றவர் கைது! வெளிநாட்டு சுற்றுலாப்  பயணியிடம் ஒரு உளுந்து வடை மற்றும் தேனீருக்கு 800 ரூபாய் அறவிட்ட குற்றச்சாட்டில் உணவகமொன்றின் பணியாளரை  களுத்துறை  பொலிஸார் கைதுசெய்துள்ளனர். மேலும், குறித்த உணவகத்தின் உரிமையாளர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உறுதிப்படுத்தியுள்ளார். இதேவேளை அண்மையில் கொழும்பு அளுத்கடை பகுதியில் உணவக உரிமையாளர் ஒருவர் வெளிநாட்டு சுற்றுலாப்பயணியை அச்சுறுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1378864
    • ஜனாதிபதித் தேர்தல் களம் தெற்கைவிட இம்முறை தமிழர் தாயகப் பிரதேசத்திலும் சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கின்றது. போரின் பின்னரான அனைத்து ஜனாதிபதித் தேர்தல்களிலும் தென்னிலங்கை வேட்பாளர்களை ஆதரித்த தமிழ் மக்கள் இம்முறை அத்தகைய நிலைப்பாட்டை எடுப்பதற்குத் தயங்குவதும், தமிழ்ப் பொது வேட்பாளரை நோக்கி தமிழர்கள் அணிதிரட்டப்படுவதாலும் ஜனாதிபதித் தேர்தல் விவகாரம் பேசுபொருளாகியிருக்கின்றது. ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப்பொது வேட்பாளர் களமிறக்கப்படுவது தென்னிலங்கை கட்சிகளைப்போன்று தமிழ்த்தேசியக் கட்சியைச் சேர்ந்த சிலருக்கும் கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. அதே நேரம் இந்தப் பொதுவேட்பாளர் விவகாரத்தை குழப்பியடிப்பதற்கான சதி முயற்சியும் முன்னெடுக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. தமிழ் மக்கள் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரனின் செயற்பாடுகள் தொடர்பில் பலத்த சந்தேகங்கள் எழுப்பப்படுகின்றன. கொள்கைத் தளம்பலான ஒருவர் இந்த விடயங்களை முன்னின்று செயற்படுத்துவதாகச் சொல்லிக்கொள்ளும் போது சந்தேகங்கள் எழுவது இயல்பானதே. பொதுவேட்பாளர் விவகாரத்தை ஆதரிப்பதாகக் காட்டிக்கொண்டு அதைக் குழப்பியடிப்பது தான் அவரது இலக்கா என்ற கேள்வியும் எழுகின்றது. ஏனெனில் அவரின் நடவடிக்கைகள் அப்படியானவையாகத்தான் அமைந்திருக்கின்றன. ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியே, ஜனாதிபதித் தேர்தலில் பொதுவேட்பாளரைக் களமிறக்கும் யோசனையை முன்வைத்தது. அது தொடர்பில் பல தரப்புகளையும் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தது. இதேகாலப் பகுதியில் விக்னேஸ்வரன், ‘ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டுக்கு நல்லது செய்கிறார். அவரைத்தான் ஆதரிப்பேன்' என்று அறிக்கைவிட்டார். பின்னர் ரணில் ஏமாற்றிவிட்டார் என்று சொன்னார். திடீரென பொதுவேட்பாளர் விவகாரம் தொடர்பில் கூட்டத்தை ஒழுங்குபடுத்தினார். அது தொடர்பில் அறிக்கைகள் விடுத்தார். இந்த விவகாரத்தை முன்னெடுத்த தரப்புகளுடன் எந்தவொரு சந்திப்பையும் நடத்தாமல் தான்தோன்றித்தனமாக விக்னேஸ்வரன் விடயங்களைக் கையாள்கின்றார். இது தமிழ்ப்பொதுவேட்பாளர் விவகாரத்தை எதிர்க்கும் தரப்புகளுக்கு வாய்ப்பாக அமைந்திருக்கின்றது. ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனு கோரப்பட்ட பின்னர் தமிழ்ப்பொதுவேட்பாளர் யார் என்பதைப் பகிரங்கப்படுத்தலாம். விக்னேஸ்வரன் பொறுமை காக்கவேண்டும். இலங்கையிலுள்ள தமிழ்மொழி பேசும் அனைவரும் ஆதரிக்கக்கூடிய ஜனரஞ்சகமான தலைவர் ஒருவராக இருக்கவேண்டும். அப்படிப்பட்டண்டும். ஒருவரையே தமிழ்ப்பொதுவேட்பாளராக களமிறக்க வேண்டும். தமிழ்ப்பொதுவேட்பாளர் என்பது ஒரு அரசியல் தீர்மானம். எப்படி வட்டுக்கோட்டைத் தீர்மானம் காலம் கடந்தும் நிலைத்து நிற்கின்றதோ அதே போன்று தமிழ்ப்பொதுவேட்பாளர் விவகாரமும் அமையவேண்டும். நாடு முழுவதிலிருந்தும் ஆகக் குறைந்தது 15 லட்சம் வாக்குகளையாவது அவர் திரட்டிக்கொள்ளக் கூடியவராக இருக்கவேண்டும். முஸ்லிம் மற்றும் மலையக சமூகங்களின் அரசியல் தலைவர்கள் தென்னிலங்கை தரப்புகளுடன் ஒட்டிக் கொண்டிருந்து அமைச்சுப் பதவியை பெறுபவர்கள். அவர்கள் எந்தளவு தூரம் பொதுவேட்பாளர் விவகாரத்துடன் ஒத்துழைத்துச் செயற்படுவார்கள் என்பது கேள்விக்குறியானது. இவ்வாறான சூழலில் அனைத்துத் தரப்புகளுடனும் அவதானமாகவும் - நிதானமாகவும் கலந்துரையாடல் நடத்தவேண்டும். அதைவிடுத்து விக்னேஸ்வரன் போல, மின்னஞ்சலில் போதிய அவகாச மின்றி அழைப்பு அனுப்பிவிட்டு கலந்துரையாடல் நடத்த கூடாது. விக்னேஸ்வரன் தலைமை தாங்கிய எந்தவொரு விடயமும் நேர்சீராக நடைபெறவில்லை. மாகாண சபையாக இருக்கலாம் அல்லது தமிழ்மக்கள் பேரவை என்ற சிவில் அமைப்பாக இருக்கலாம் அல்லது அவரது கட்சியாக இருக்கலாம். எங்குமே அவர் ஒரே கொள்கையோடு இயங்காமையால் கடைசியில் அவையெல்லாமே குழப்பத்துக்குள் சிக்கி, செயற்றிறனை இழந்ததைக் கண்முன்னே பார்த்தோம். அப்படிப்பட்ட ஒருவர் தனது அவசரத்தனமான நடவடிக்கைகளால் தீர்க்கமான அரசியல் முடிவை குழப்பியடித்துவிடக்கூடாது என்பதே மக்களின் ஆதங்கம். (16. 04.2024-உதயன் பத்திரிகை)   https://newuthayan.com/article/அவசரத்தனங்களும்_குழப்பங்களும்...
    • இலங்கையில் தமிழர்களுக்கு மாத்திரமல்லாமல் முஸ்லிம்களுக்கும் தாய்மொழி தமிழ்தான். இதனாலேயே தமிழர்களையும் முஸ்லிம்களையும் ஒன்றிணைக்கும் முயற்சியில் தந்தை செல்வா ஈடுபட்டார். இதனால் 'தமிழ்பேசும் மக்கள்' என்ற சொல்லை தந்தை செல்வா பாவிக்கத்தொடங்கினார். இலங்கை சுதந்திரமடைந்த காலம் தொட்டு இரு தரப்பு அரசியல்வாதிகளும் தமிழ் முஸ்லிம் ஒற்றுமை பற்றிப் பேசி வருகின்றனர். தமிழ்த் தேசிய அரசியல்வாதிகளும் பல விட்டுக்கொடுப்புகளைச் செய்து தமிழ் முஸ்லிம் ஒற்றுமையை கட்டியெழுப்ப அன்றிலிருந்து இன்று வரை பாடுபட்டு வருகின்றனர். ஆனால் முஸ்லிம்களோ மொழிரீதியான பிணைப்பைக் கணக்கிலேயே எடுப்பதில்லை. அவர்கள் எப்போதுமே தம்மைத் தனியான இனமாக முன்னிறுத்துவதிலும், தமது நலன்களைப் பெற்றுக்கொள்வதிலுமே கண்ணும் கருத்துமாக இருக்கின்றனர். ஒரு சிறுபான்மை இனம் என்ற அடிப்படையில், முஸ்லிம்கள் தமது நலன்களை முன்னுரிமைப்படுத்திச் செயற்படுவதில் எவ்விதத் தவறுமில்லை என்று தமிழர்கள் கடந்துசென்றுவிடலாம். ஆனால், ஒரே மொழியைப்பேசிக்கொண்டு, சகோதர இனம் என்று சொல்லிக்கொண்டு, தமிழர்களை ஒடுக்கும் செயற்பாடுகளை முஸ்லிம்கள் மேற்கொள்வதைத்தான் ஜீரணிக்க முடியாமல் இருக்கின்றது. குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் கல் முனையில் முஸ்லிம்கள் தமிழர்களின் இருப்பை கேள்விக்குறியாக்கும் செயற்பாடுகளை காலாதிகாலமாக மேற்கொண்டு வருகின்றனர். இதனால் கல்முனைத் தமிழர்கள் சாட்சிக்காரனின் காலில் வீழ்வதை விட சண்டைக்காரனின் காலில் வீழ்வதே மேல் என்ற நிலைப்பாட்டுக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இலங்கைத்தீவை நிர்வகிப்பதற்கு 256 பிரதேச செயலர் பிரிவுகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த 256 பிரதேச செயலகங்களின் ஊடாக அந்தந்தப் பிரதேசத்துக்குரிய மக்கள் தமது தேவைகளை பூர்த்தி செய்து வருகின்றனர். இப்படிப்பட்டநிலையில், கல்முனைப் பிரதேச செயலர் பிரிவில் முஸ்லிம் பிரதேச செயலர்களே தொடர்ச்சியாக நியமிக்கப்பட்டு வந்தனர், வருகின்றனர். இவர்கள் முஸ்லிம்களுக்குச் சார்பாக நடந்து கொள்வதாக தமிழர்கள் தொடர்ச்சியாகக் குற்றஞ்சாட்டி வந்தனர். இதனால் கல்முனை பிரதேச செயலர் பிரிவு 1989 ஆம் ஆண்டு முஸ்லிம் பிரிவு, தமிழ்ப் பிரிவு என இரண்டாகப் பிரிக்கப்பட்டது. இவ்வாறு கல்முனைப் பிரதேச செயலர் பிரிவு இரண்டாகப் பிரிக்கப்பட்டபோது முஸ்லிம் பிரதேச செயலர் பிரிவு முழு அதிகாரத்துடன் செயற்படத் தொடங்கியது. தமிழ்ப் பிரிவுக்கு முழுமையான அதிகாரங்களை வழங்க விடாமல் முஸ்லிம் அரசியல்வாதிகள் ஆட்சியாளர்களுக்கு சிங்களவர்கள் அழுத்தம்கொடுத்தனர், இப்போதும் அதே அழுத்தத்தைக் கொடுத்து வருகின்றனர். கல்முனை தமிழ்ப் பிரிவு பிரதேச செயலகம் 'உதவி அரசாங்க அதிபர் பிரிவு' என்றே இன்றுவரை அழைக்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் அதன் அதிகாரங்கள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளமையை உள்ளார்ந்தமாக உணரலாம். தமிழ்ப் பிரிவுக்குரிய காணி, நிதி போன்ற விடயங்கள் முஸ்லிம் பிரிவின் கீழேயே உள்ளன. இலங்கை அரசியலில் பௌத்த பிக்குகள் தான் தீர்மானிக்கும் சக்தியாக விளங்குகின்றனர். அப்படியிருந்தும் ஞானசார தேரராலோ, சுமணரத்ன தேரராலோ கல்முனை தமிழ் பிரதேச செயலர் பிரிவை தரமுயர்த்த முடியவில்லை.சுமணரத்ன தேரர், ஞானசாரதேரர் ஆகியோரை விட முஸ்லிம் அரசியல்வாதிகளின் செல்வாக்கு கொழும்பு அரசியலில் கூடுதலான தாக்கம் செலுத்துகிறது என்பதே யதார்த்தம். கல்முனைப் பிரதேச செயலக தமிழ்ப் பிரிவை பூரண அதிகாரமுள்ள பிரதேச செயலகமாக தரமுயர்த்தக்கோரி கடந்த 35 வருடங்களாக கல்முனைத் தமிழர்கள் பல்வேறு சாத்வீகப் போராட்டங்களை முன்னெடுத்திருந்தனர். எனினும் இன்றுவரை கல்முனை தமிழர்களுக்கு நீதி கிட்டவில்லை. இந்த வருடமும் தமிழ்ப் புத்தாண்டை கல்முனைத் தமிழர்கள் கரிநாளாக அனுஷ்டித்தனர். இந்த நிமிடம் வரை கொட்டும் மழைக்கு மத்தியிலும் கல்முனைத் தமிழர்கள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இறுதியாக நடைபெற்ற மாகாணசபைத் தேர்தலிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கிழக்கு மாகாணத்தில் கூடுதலான ஆசனங்களைப் பெற்றிருந்தும், கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவியை முஸ்லிம் காங்கிரஸுக்கு தாரைவார்த்துக்கொடுத்தது. கிழக்கு மாகாண சபை கலைக்கப்பட்டதும் முதலமைச்சர் அஹமட் நஷீர் ‘வடக்கையும் கிழக்கையும் இணைப்பதற்கு தான் ஒருபோதும் அனுமதிக்கமாட்டேன்' என்று அறிக்கைவிட்டு, தமிழர்களின் அடிப்படைக்கோரிக்கையையே நிராகரித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் பதவிக்கு வந்த முதலமைச்சரான நஷீர் யுத்தம் நடைபெற்ற காலத்திலும் யுத்தம் முடிந்த பின்னரும் தமிழர்களுக்கு கிடைக்கவேண்டிய வேலை வாய்ப்புகள், உயர்கல்வி வசதிகள் போன்றவற்றை தமிழ்மொழியை பேசுகின்ற காரணத்தால் முஸ்லிம்கள் தட்டிப்பறித்து வருகின்றனர் என்றொரு குற்றச்சாட்டு பொதுவாக உண்டு. ஆனால், ஒரு பிரதேச செயலகத்தைக் கூட தரமுயர்த்த அனுமதிக்காமல், இன்னொரு சிறுபான்மையினரின் அடிப்படை உரிமைகளைக் கூடவா தட்டிப்பறிப்பார்கள்? தமிழ் அரசியல்வாதிகள் தீர்க்கமான ஒரு முடிவெடுக்கவேண்டிய தருணம் வந்து விட்டது. தமிழ் - முஸ்லிம் ஒற்றுமை என்றைக்கும் இருக்கத்தான் வேண்டும். ஆனால் அதைச் சொல்லிச் சொல்லியே முஸ்லிம்கள் எல் லாவற்றையும் பறித்தெடுக்க, நாம் மட்டும் இலவு காத்த கிளிகளாக ஏமாந்து கொண்டே இருக்கிறோம். இனியும் அவ்வாறான விட்டுக்கொடுப்புகளுக்கு இடமளிக்காமல், முதலில் தமிழர் நலன் அதன்பின்னரே தமிழ்-முஸ்லிம் ஒற்றுமை என்ற நிலைப்பாட்டுக்கு தமிழ்மக்களும், தமிழ் அரசியல்வாதிகளும் வரவேண்டும். அப்போதுதான் எஞ்சியவற்றையாவது இழக்காமல் காக்க முடியும். (17. 04.2024-உதயன் பத்திரிகை)   https://newuthayan.com/article/இனநலனா!_ஒற்றுமையா!!!
    • முடிவாய் ரணிலையும் விடுறதாக இல்லை , அவர் பணக்கார வீட்டு  பிள்ளை , சந்து பொந்தெல்லாம் போகாமலா  இருந்திருப்பார் . பழம் இருக்கிறவன் அதன் சுவையை ருசிக்கிறான் ....அம்புட்டுதான் 
    • என்ன இது எங்க போனாலும் கொழுவி இழுக்க பார்க்கிறிங்க.  சுமா வை பற்றி தெரியும் என்றால் ஏன் கோத்திரத்தை அப்படி என்று எடுக்கிறீர்கள்.  என்ன பொறுத்தவரை உயர்ந்த குலமா அப்படியா இல்லையா என்பதல்ல ஏன் ஆதங்கம். பொறுக்கித்தனம் செய்பவனை பொறுக்கி என்பதுபோல தான் இது.  தப்பான பழக்கங்களை செய்கின்ற ஆள் தப்பான குலம் அவ்வளவு தான். 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.