Jump to content

இளையோர் ஆசியக் கிண்ணத்திற்கான இலங்கை அணியில் இரண்டு யாழ் வீரர்கள்


Recommended Posts

இளையோர் ஆசியக் கிண்ணத்திற்கான இலங்கை அணியில் இரண்டு யாழ் வீரர்கள்

 

 

Mathusan-Edit-696x464.jpg
 

பங்களாதேஷில் செப்டம்பர் மாதம் 29 ஆம் திகதி தொடக்கம் ஒக்டோபர் மாதம் 07 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ள 19 வயதுக்கு கீழ்ப்பட்ட கிரிக்கெட் அணிகளுக்கான இளையோர் ஆசியக் கிண்ணத் தொடரில், பங்குபெறவிருக்கும் 15 வீரர்கள் அடங்கிய 19 வயதின் கீழான இலங்கை கிரிக்கெட் குழாம் இன்று (18) அறிவிக்கப்பட்டுள்ளது.

அறிவிக்கப்பட்டிருக்கும் இலங்கை வீரர்கள் குழாமில் யாழ்ப்பாண மத்திய கல்லூரியைச் சேர்ந்த செல்வராசா மதுஷன் இடம்பிடித்துள்ளார். இதேவேளை, ஆசியக் கிண்ணத் தொடருக்கான மேலதிக இலங்கை வீரர்கள் பட்டியலில் யாழ்ப்பாண மத்திய கல்லூரியைச் சேர்ந்த மற்றுமொரு வீரரான விஜயகாந்த் வியாஸ்காந்த்திற்கும் வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கின்றது.

 

இலங்கையின் 19 வயதுக்கு கீழ்ப்பட்ட தேசிய கிரிக்கெட் அணிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள மதுஷன் வலதுகை வேகப்பந்து வீச்சாளர் என்பதோடு, துடுப்பாட்டத்திலும் சிறப்பிக்க கூடிய ஒருவராக உள்ளார். இதேநேரம், வியாஸ்காந்த் வலதுகை சுழல் பந்துவீச்சாளராக திறமையை வெளிப்படுத்த கூடியவராக இருக்கின்றார். இந்த இரண்டு வீரர்களும் இந்த ஆண்டுக்கான வடக்கின் சமர் தொடரில் சிறப்பாக செயற்பட்டு தமது பாடசாலையான யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணி சம்பியன் பட்டம் வெல்வதற்கு உதவியிருந்தனர்.

அதன் பின்னர் 19 வயதுக்கு கீழ்ப்பட்ட மாகாண அணிகளுக்கு இடையில் இலங்கை கிரிக்கெட் சபை ஒழுங்கு செய்திருந்த கிரிக்கெட் தொடரிலும் வட மாகாணம் சார்பில் பிரகாசித்திருந்தனர். இதனால், இருவரும் 19 வயதுக்கு கீழ்ப்பட்ட இந்திய கிரிக்கெட் அணியின் இலங்கை சுற்றுப் பயணத்திற்கான இலங்கை அணியில் உள்வாங்கப்பட்டிருந்தனர். இதில்  வியாஸ்காந்த் இந்திய அணிக்கு எதிரான இளையோர் டெஸ்ட் தொடரின் போட்டியொன்றில் இலங்கை அணியை பிரதிநிதித்துவம் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இப்படியானதொரு நிலையிலையே யாழ்ப்பாணத்தை சேர்ந்த இந்த இரண்டு வீரர்களுக்கும் திறமையை நிரூபிக்க மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கின்றது.

19 வயதுக்கு  கீழ்ப்பட்ட அணிகளுக்கான இந்த ஆசியக் கிண்ணத் தொடரில் இலங்கை அணியை வென்னப்புவ புனித ஜோசப் வாஸ் கல்லூரியைச் சேர்ந்த  நிப்புன் தனஞ்சய தலைமை தாங்குகின்றார்.

இந்த ஆசியக் கிண்ணத் தொடரில் இலங்கையுடன் சேர்த்து இந்தியா, ஆப்கானிஸ்தான், ஐக்கிய அரபு இராச்சியம், நேபாளம், பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் ஹொங்கொங் ஆகியவற்றின் 19 வயதுக்கு கீழ்ப்பட்ட கிரிக்கெட் அணிகள் போட்டியிடுகின்றன.

 

 

இந்த ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரில் இலங்கை அணி தமது முதல் போட்டியில்  பங்களாதேஷ் அணியை செப்டம்பர் மாதம் 29 ஆம் திகதி எதிர்கொள்கின்றமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை அணி

  • நிப்புன் தனஞ்சய (அணித்தலைவர்) – புனித ஜோசப் வாஸ் கல்லூரி, வெண்ணப்புவ
  • பசிந்து சூரியபண்டார – றோயல் கல்லூரி, கொழும்பு
  • நவோத் பரணவிதான – மஹிந்த கல்லூரி, காலி
  • கமில் மிஷார – றோயல் கல்லூரி, கொழும்பு
  • நிஷான் மதுஷ்க – மொரட்டுவ வித்தியாலயம்
  • நுவனிது பெர்னாந்து – புனித செபஸ்டியன் கல்லூரி, மொரட்டுவ
  • துனித் வெல்லாலகே – புனித ஜோசப் கல்லூரி, கொழும்பு
  • சஷிக்க துல்ஷான் – புனித செர்வதியஸ் கல்லூரி, மாத்தறை
  • கல்ஹார சேனாரத்ன – புனித அந்தோனியர் கல்லூரி, கண்டி
  • றொஹான் சஞ்சய – திஸ்ஸ மகா வித்தியாலயம், களுத்துறை
  • சந்துன் மெண்டிஸ் – றிச்மண்ட் கல்லூரி, காலி
  • கலன பெரேரா – புனித தோமியர் கல்லூரி, கொழும்பு
  • நிப்புன் மாலிங்க – மஹிந்த கல்லூரி, காலி
  • நவீன் பெர்னாந்து – மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி, நீர்கொழும்பு
  • செல்வராசா மதுஷன் – யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி

மேலதிக வீரர்கள்

  • லக்ஷித மதரசிங்க – நாலந்த கல்லூரி, கொழும்பு
  • முதித்த லக்ஷன் – டி.எஸ். சேனநாயக்க கல்லூரி, கொழும்பு
  • விஜயகாந்த் வியாஸ்காந்த் – யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி
  • சிலான் கலிந்து – புனித செர்வதியஸ் கல்லூரி, மாத்தறை
  • சாமிக்க குணசேகர – ஆனந்த கல்லூரி, கொழும்பு

http://www.thepapare.com/

Link to comment
Share on other sites

இலங்கை அணிக்காக சகல துறையிலும் பிரகாசிப்பேன் – மதுசன்

 

பங்களாதேஷில் இடம்பெறவுள்ள 19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடருக்கான இலங்கை தேசிய அணியில் இடம்பிடித்துள்ள யாழ்ப்பாண மத்திய கல்லூரியின் சகலதுறை வீரர் செல்வராசா மதுசன், பங்களாதேஷ் பயணமாவதற்கு முன்னர்  வழங்கிய விசேட செவ்வி.

 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வெற்றி பெற வாழ்த்துக்ள் அண்ணா........................
    • போட்டி முடிவு திகதி 34வது ஆரம்பப் போட்டி நிறைவு பெறும் வெள்ளி 19 ஏப்ரல் 2024 பிரித்தானிய நேரம் இரவு 10 மணி.   இன்னும் 25 மணித்தியாலங்களே உள்ளன. இதுவரை ஆறு பேர்தான் போட்டியில் கலந்துகொண்டுள்ளனர். இன்னும் குறைந்தது நான்கு பேராவது விரைவில் கலந்துகொண்டால்தான் யாழ்களப் போட்டி நடக்கும்! 😉
    • Yarl IT hub தொடர்பாக நானும் ஒரு பதிவை சில மாதங்களுக்கு முன் பகிர்ந்து இருந்தேன் என மிகுந்த அவையடக்கத்துடன் தெரிவித்து கொள்கின்றேன் 😀    
    • "சில கிருஸ்துக்கு முன்னைய காலத்து நகைச்சுவைகள்"  உலகின் மிகப் பழமையான பதிவு செய்யப்பட்ட நகைச்சுவையானது கிமு 1900 க்கு முந்தையதும் மற்றும் கழிப்பறை சம்பந்தமான நகைச்சுவையானதும் ஆகும் .   அப்போது தெற்கு ஈராக்கில் வாழ்ந்த சுமேரியர்களின் கூற்று இது:  "பழங்காலத்திலிருந்தே நிகழாத ஒன்று; ஒரு இளம் பெண் தன் கணவனின் மடியில் வாய்வு [பேச்சு வழக்கில் குசு] விடுவதில்லை" "Something which has never occurred since time immemorial; a young woman did not fart in her husband's lap." வால்வர்ஹாம்ப்டன் பல்கலைக்கழகத்தால் [University of Wolverhampton] வெளியிடப்பட்ட உலகின் மிகப் பழமையான முதல் 10 கேலி [ஜோக்] பட்டியலில் இது தலைமை வகிக்கிறது. [Thursday July 31, 2008]  இந்த நகைச்சுவை உங்களுக்கு வேடிக்கையாக இருந்ததா? எனக்கு அப்படி இருக்கவில்லை.  ஒவ்வொரு சமூகத்திற்கும் நகைச்சுவைக்கான அணுகுமுறை உள்ளது. இந்த அணுகுமுறை அந்த சமூகத்தின் கலாச்சார மற்றும் பாரம்பரிய விழுமியங்களில் உள்வாங்கப் பட்டுள்ளது. ஒரு குழு மக்கள் வேடிக்கையாகக் கருதும் விடயம், உலகின் வேறு சில பகுதிகளைச் சேர்ந்தவர்களுக்கும், வேறுபட்ட பின்னணியைக் கொண்டவர்களுக்கும் புண்படுத்தக் கூடியதாக இருக்கலாம்.  என்றாலும் இதையே பதியப்பட்ட முதல் பண்டைய நகைச்சுவையாக கருதப்பட்டுள்ளது.  ......................................................... ஒரு பகிடி அதேநேரம் ஒரு புதிர், பண்டைய கிரீஸ், கிமு 429. கிரேக்க நாடக ஆசிரியரான சோஃபோக்கிள்ஸின் "ஓடிபஸ் டைரனஸ்" இல், ["Oedipus Tyrannus," by Greek playwright Sophocles,] ஒரு பாத்திரம் பின்வரும் வரியைக் கொடுக்கிறது, இது ஓரளவு நகைச்சுவையாகவும்  ஆனால் மூளைக்கு வேலையாகவும் உள்ளது. கேள்வி:  எந்த மிருகம் காலையில் நான்கு கால்களிலும், மதியம் இரண்டு கால்களிலும், மாலையில் மூன்று கால்களிலும் நடக்கும்? What animal walks on four feet in the morning, two at noon and three at evening? பதில்: மனிதன்.  குழந்தையாக நான்கு கால்களிலும், மனிதனாக  இரண்டு கால்களிலும் முதுமையில் ஊன்றுகோள்களுடன் மூன்று கால்களிலும்." ............................................................ பண்டைய கிரீஸ், கிமு 800 ,  பெயரில் ஒரு சிலேடை. ஹோமரின் "தி ஒடிஸி" - 2,800 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்டது. அதில்,   "ஒடிஸியஸ் சைக்ளோப்ஸிடம் தனது உண்மையான பெயர் 'யாருமில்லை' ['Nobody']  என்று கூறுகிறார்." "Odysseus tells the Cyclops that his real name is 'Nobody.'" பின் ஒரு நேரம்,  "ஒடிஸியஸ் சைக்ளோப்ஸைத் தாக்கும்படி தனது ஆட்களுக்கு அறிவுறுத்தும் போது, சைக்ளோப்ஸ் [பயத்தில் தன்னைக் காப்பாற்றிக்கொள்ள, உதவி தேடி] கத்துகிறார்: 'உதவி, உதவி நோபோடி என்னைத் தாக்குகிறார் !' [ ஆனால் அது ஒருவரும் என்னைத் தாக்கவில்லை என கருத்துப் படுவதால்]   'Help, Nobody is attacking me!' உதவிக்கு யாரும் போகவில்லை. ....................................................... கிமு 1100 இல் பெயர் தெரியாத ஒருவரின், ஒரு வயதான திருமணமான ஜோடியைப் பற்றிய நகைச்சுவை ஒரு கண் பார்வையற்ற ஒரு பெண்ணுக்கு திருமணமாகி 20 வருடங்கள் ஆகிறது. அவன் வேறொரு பெண்ணைக் கண்டதும் / காதலித்ததும் அவளிடம்,  "நீ ஒரு கண்ணில் பார்வையற்றவள் என்று கூறப்படுவதால் நான் உன்னை விவாகரத்து செய்கிறேன்"  'I shall divorce you because you are said to be blind in one eye.' என்று கூறினான்.  அவள் அவனுக்குப் பதிலளித்தாள்:  "திருமணமாகி 20 வருடங்கள் கழித்து நீங்கள் அதைக் இன்றுதானா கண்டுபிடித்தீர்கள்?" 'Have you just discovered that after 20 years of marriage?'" தொகுத்தது [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]       
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.