Jump to content

சிரிக்க வைக்கும் குறும்புகள் (பிராங்க்).


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சிரிக்க வைக்கும் குறும்புகள் (பிராங்க்).

குறும்புகள் பலவகை... திட்டமிட்டு ஆனால் அப்பாவிதித்தனமானதாக செய்யப்படும் குறும்புகள் பலவிதம். அடக்க முடியாத, வயிறு வலிக்கும் சிரிப்பினை உண்டாக்குபவை.

பலவகை....

பிரித்தானியாவில் டெலிவிசின் நிகழ்வில் புகழ் மிக்க இந்த குறும்பு நிகழ்வினை நிகழ்த்தியவர் மறைந்த ஜெரேமி பீட்ல்லி என்பவர். 

மனைவியின் ஏற்பாட்டில் கணவர் பிள்ளை போல பார்க்கும் காரை... இரவோடிரவாக பக்குவமாக அப்புறப் படுத்தி, அதேபோல இலக்கத்தகடு, நிறம் கொண்ட வேறு ஒரு காரை நிறுத்தி.... ஒரு குடிகாரர் வந்து வெறியில் அதனை கீறுவது அல்லது உடைப்பது... அல்லது... வரி, மாதாந்த வாடகை செலுத்தாததால் தூக்கிப் போவதாக அட்டகாசம் செய்து அந்த கணவரை டென்ஷன் ஆக்குவது தான் அவரது குறும்பு வகை. (அவர் டென்ஷன் ஆகி, இது தான் வரி கட்டின செர்டிபிகேட், இது தான் நான் முழு பணமும் செலுத்தி வாங்கிய விபரம் என்று ஓடி, ஓடி டென்ஷன் ஆவதை பார்வையாளர்கள் சிரித்து ரசிப்பதே நிகழ்ச்சியின் நோக்கம்.

சிலவேளைகளில் வேலைக்கு ஆளை எடுத்து, அவருக்கு செய்ய முடியாத வேலைகளை கொடுத்து ( ஒழுகும் வாளியினை கொடுத்து, தண்ணி அள்ளி தொட்டியினை நிரப்ப சொல்வது, இறந்தவர் போல நடிக்கும், பெட்டியினுள் இருக்கும் உடலுக்கு உடுப்பு போட சொல்வது...அவர் எழுப்பி செய்யும் சேட்டைகள்)  அவர் படும் பாட்டினை ரகசிய கமராவில் பிடித்து, காட்டுவது வேறு ஒரு ரகம்.. 

இயக்குனர் சங்கரின் பிரசாந்த், ஐஸ்வர்யா ஆகியோரை வைத்து எடுத்த படம் ஜீன்ஸ். ஆனந்த விகடன் பத்திரிகை குறும்பு டீம் என்று ஒரு சிறு டீமை வைத்திருந்தது. அந்த டீம் ஜீன்ஸ் பிரிவியூ என்று ஒரு அரங்கை புக் பண்ணி சினிமா உலகினை சேர்ந்த பலரை வரவழைத்தது. சத்யராஜ் உள்பட பலரும் அரக்கப் பரக்க வந்து அமர்ந்து இருந்தார்கள்.

ஷோ தொடங்கியபின்னர் தான் தெரிந்தது அது சினிமா ஜீன்ஸ் அல்ல... ஜீன்ஸ் உடை என்று. பெரிய ஒரு குறும்பு அது.

அவிந்து போனோம் என்று முதலில் புரிந்து கொண்டவர் சத்யராஜ்... 'அடப் பாவிகளா' என்று சத்தமாக சொல்லி சிரித்தார் அவர்.

Just for laugh போன்ற பல வகையறாக்கள் உண்டு.

இது இந்தியாவின் ரேடியோ ஒன்றின் கிளாஸ் குறும்பு... Honeymoon Prank...

அசைவ உணவு... சைவ உணவாளருக்கு கொடுக்க பட்ட குறும்பு.. 

இது இணையத்தினைக் கலக்கும் பிரேசில் நாட்டு குறும்பு... ஜோடியாக வரும், பூங்காவில் இருக்கும் இருவரில், ஆணிடம், ஒரு அழகிய பெண் ... ஆபாசம் இல்லாத, அப்பாவித்தனம் போன்ற உதவி கேட்பதாக நடித்து... பெண்ணினை டென்ஷன் ஆக்குவது தான் இந்த வகை குறும்பு... போர்த்துக்கேய மொழி தெரியாவிட்டாலும்.... சிரிப்பு வரவழைக்கும் ரகம்.

பல மில்லியன் கணக்கான பார்வையாளர்களை சிரிக்க வைக்கும் குறும்புகள் நீங்களும் பாருங்களேன்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உதில வரேக்க விழுந்து போனம்... காயம்.... தெரியுதோ எண்டு பார்த்து சொல்லுவியளே...

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

32 மில்லியன் பார்வையாளர்களை சிரிக்க வைத்த வீடியோ

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த வீடியோக்கள் எல்லாம் ஆண்களுக்கு ஒரு முக்கியமான செய்தியையும்,  இளைஞர்களுக்கு  தனியாக ஒரு செய்தியையும் சொல்லிச் செல்கின்றன..... மனைவியானால் என்ன,காதலியானால் என்ன அவர்களின் அடிப்படைக் குணம் மாறவே மாறாது. ஆண்களின் அற்ப சந்தோஷத்தையும் அடித்து விரட்டுவதிலேயே குறியா இருக்கிறாங்கள்.....!  ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆகா... அய்யய்யோ....அவிஞ்சு போனமா?

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னா அடி.... முடியல்லயா..... இப்படியா.. பப்ளிக்கிள...அடிக்கிறது.....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

488 பேர் பாத்திருக்கினம் உந்த திரியை...

சுவியரும், ஆதவனும் தான் துணிஞ்சு பதிவு போட்டிருக்கினம்..

ஏனைய விண்ணாதி விண்ணர்கள் எல்லாம் கமுக்கமா பார்த்தமா, அமுசடக்கமா போனோமா என்று ஓடுகிறார்கள்.

வீட்டுல சாத்து விழும்..எண்டு...பயம் போல கிடக்குது.... 

தமிழ்சிறியர் கூட சைலன்ட் ஆகிட்டாரே... நம்ப முடியல.. :grin:

கடைசி விடீயோவில தொடக்கத்திலே கறுவளின்ர பார்வை சொல்லும் கதையும்... அடி வாங்கும் போது.... படுற பாடும்....எல்லோரையும் கலங்க ? வைத்திருக்கும்..:grin::grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அட நீங்க வேற, அடிக்கு அப்புறம்தான் அந்தப் பதிவே போட்டது.....!  ? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அண்மையில் போர்த்துக்கல் போயிருந்தேன். Water Theme park ஒன்றுக்கு போயிருந்த போது, அங்கே வந்திருந்த இளம் பெண்கள் முதல், கிழவிகள் வரை இந்த வகை பிகினி உடுப்புகள் தான் போட்டிருந்தார்கள். முக்கியமாக பின்புறம் (பிட்டம்) முழுவதுமாக தெரியக் கூடியதாக கீழாடை இருந்தது. (மேல பெண்கள் போட்டிருப்பது போல)

மாறாக ஆண்கள், நானும் நண்பர்களும் உட்பட, களுசான் (swimming shorts) அணிந்திருந்தோம். 

ஆங்கில பத்திரிகை ஒன்றில் ஒருவர் எழுதி இருந்தார், அலுவலக உடுப்பு போடும் ஆண்கள், கழுத்துக்கு மேல மட்டும் தெரியும் வண்ணம் உடை அணிகிறார்கள். பெண்களோ, உடலின் கூடிய பகுதிகள் தெரியுமாறு மிக குறைவாக உடை அணிந்து செல்கிறார்கள்.

உண்மையில் இது மாறி அல்லவா இருந்திருக்க வேண்டும் என்று கூறி இருந்தார்.

போர்ட்ஸமௌத் கடற்க்கரை போயிருந்த பொது, அங்கே வந்திருந்த தமிழ் குடும்பத்து பெண்கள் அணிந்து வந்த அதே உடுப்புடன் கடலில் குளித்தார்கள். அதேவேளை அவர்களுடன் வந்திருந்த இங்கே பிறந்திருக்கக் கூடிய இளம் பிராயத்துப் பெண்கள் பிகினி உடையில் குளித்தார்கள். (முறையா பிகினி உடை).

இதனை பார்க்கையில் சிலருக்கு ஓகேயாக இருப்பது வேறு சிலருக்கு ஆபாசமாக இருக்கும் போல தெரிகிறது.

இன்னுமொரு திரியில், நான் விபத்தாக பார்த்து, இதனையும் போடுகிறார்களே என்று வியந்த ஒன்றை பத்தி பதிந்தேன்.

பின்னர் இந்த திரியினையும் ஆரம்பித்தேன். இது பிரேசில் நாட்டு பொது TV நிகழ்ச்சி. கவனமாக தான் ஆபாசம் எல்லை கடக்காதவாறு எடுத்து இருக்கிறார்கள்.

யாழில் ஒரு சமூக பரீட்ச்சையாக  (social experiments) தான், மிக கவனமாக தேர்ந்தே பதிந்தேன்.

பலர் தூரத்தில் இருந்து இரு திரிகளையும் பார்த்து விட்டு நகர்ந்து விட்டார்கள். சுவியர் மட்டுமே இந்த திரியில் கருத்துக்கள் பதிந்தார். 

இங்கே மேலை நாடுகளில் 10ம் வயதில், 5 வது வகுப்பில் பாலியல் கல்வி சொல்லிக் கொடுக்கின்றனர். அதுக்கு பாடசாலை கொடுக்கும் தகவல் படங்கள், எமது பார்வையில் மிக, மிக ஆபாசமானது. இங்கே கூட பல வருடங்களுக்கு முன்னர் ஜெர்மனி உறவு அந்தவகை படங்களை போட்டு இருந்தார். தனது பிள்ளைக்கு பாடசாலை வழங்கியதாக...வருத்தத்துடன் கூறி இருந்தார்..

அதை பார்த்த உறவுகள், நானும் கூட, அட... இவை குழந்தைகளுக்கு தரப்படடவை என வியந்து கொண்டே... 'அய்யய்யோ ஆபாசமான படங்கள்' என்று சொல்ல  முடியாமல், 'மெல்லவும் முடியாமல். விழுங்கவும் முடியாமல்' கடந்து சென்றோம். 

சில தமிழ் தாய், தந்தையர் இந்த பாலியல் கல்வி தமது குழந்தைக்கு வேண்டாம் என பாடசாலைக்கு போய் சொல்லப் போக, அவர்களுக்கு கவுன்சிலிங் கொடுத்து, அதனை படிப்பதால் நன்மை என்ன என்று சொல்லி புரிய வைத்திருக்கிறார்கள். 

இங்கே பல தமிழ் பெற்றார்கள்,ஆங்கிலேயர்கள் போல வாழ தலைப்படும் அடுத்த தலைமுறை பிள்ளைகள், நிதர்சனத்தினை புரிந்து கொள்கிறார்கள்.  டேட்டிங், அது, இது... கழட்டி விடுவது.... மீண்டும் டேட்டிங்....டேட்டிங், அது, இது... கழட்டி விடுவது.... அவர்களுக்கு சர்வ சாதாரணம்... எமது பார்வையில் அவ்வாறு இருக்காது... இருக்கப் போவதும் இல்லை. காரணம் நாம் இங்கே உடலளவில், மனதளவில் இன்னும் ஊரில் தான்....

எமக்கு ஊர் எப்படியோ.. அதே போல், பிள்ளைகளுக்கும் தாம் பிறந்து வளர்ந்த ஊரும் அதன் பழக்க வழக்கங்களும்...

முக்கியமாக வெள்ளைகள் 16 வயதுக்கு மேல், பிள்ளைகளை அவர்கள் பாட்டுக்கு விட்டு விடுவார்கள். பலர் வீட்டினை விட்டு வெளியேறுவார்கள். 

இது நிதர்சனம்.... இது புரியாவிடில்... நாம் நம்மையும் வேதனைக்கு உட்படுத்தி, நமது பிள்ளைகளையும் வேதனைக்கு உட்படுத்தும் நிலையில் இருப்போம்.

அதே வேளை பெற்றார்களாக ஆலோசனை தேவைப்படும் நேரத்தில் வழங்குவோம்.

லண்டன் ஈஸ்ட் ஹாம் பகுதியில் மகளை, ஆண் நண்பர் உடன் கண்டு விட்ட தகப்பன் தூக்கில் தொங்கிய சம்பவமும் சில ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்தது.  

ஆகவே நாம் ரோமில் வாழ்ந்தால் ரோமரைப் போல வாழ வேண்டும் அல்லது வாழ முற்படுபவரை பார்த்துக் கொண்டே, ஆச்சோ, போச்சோ... குய்யோ, முறையோ என்று அலம்பறை பண்ணாது அமைதியாக கடந்து செல்ல வேண்டும்.

இல்லாவிடில் டென்ஷன் தான் வாழ்க்கை ஆகிவிடும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 9/29/2018 at 12:12 AM, Nathamuni said:

488 பேர் பாத்திருக்கினம் உந்த திரியை...

சுவியரும், ஆதவனும் தான் துணிஞ்சு பதிவு போட்டிருக்கினம்..

ஏனைய விண்ணாதி விண்ணர்கள் எல்லாம் கமுக்கமா பார்த்தமா, அமுசடக்கமா போனோமா என்று ஓடுகிறார்கள்.

வீட்டுல சாத்து விழும்..எண்டு...பயம் போல கிடக்குது.... 

தமிழ்சிறியர் கூட சைலன்ட் ஆகிட்டாரே... நம்ப முடியல.. :grin:

கடைசி விடீயோவில தொடக்கத்திலே கறுவளின்ர பார்வை சொல்லும் கதையும்... அடி வாங்கும் போது.... படுற பாடும்....எல்லோரையும் கலங்க ? வைத்திருக்கும்..:grin::grin:

கம்மாக்கோ...   சிக்காக்கோ.... எண்ட  மாதிரி, நாதமுனியரின் கதை  இருக்கு.
நாங்கள்,  இப்படியான...   தலைப்புகளை,  தவற விடாமல், வரி வாரியாக படித்திட்டு தான்... படுக்கைக்கு போற ஆக்கள் அப்பு.

என்ன... நீங்கள் தலைப்பை  ஆரம்பித்த நேரம், எனக்கு.. தலைக்கு மேலை வேலை... இருந்ததால்...   
பதில் எழுத முடியவில்லை , நாதமுனியர். 

அத்துடன்.... இப்படியான தலைப்புக்களில்...  மினக்கெட்டு, 
முக்கி, முக்கி... எழுதினாலும்....படு பாவிகள், வெட்டிப் போடுவாங்கள். 

அதனால்...  அவங்களையும்,  சுழிச்சுக்    கொண்டு போக வேணும், அய்யா..
திஸ்... இஸ்.. வெறி  இன்ரலிஜெண்ட்   அன்ட்   ரெக்னிக்  வேர்க். அண்டர் சாண்ட்,  முனி.  :grin:  ?  ? 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Nathamuni said:

அண்மையில் போர்த்துக்கல் போயிருந்தேன். Water Theme park ஒன்றுக்கு போயிருந்த போது, அங்கே வந்திருந்த இளம் பெண்கள் முதல், கிழவிகள் வரை இந்த வகை பிகினி உடுப்புகள் தான் போட்டிருந்தார்கள். முக்கியமாக பின்புறம் (பிட்டம்) முழுவதுமாக தெரியக் கூடியதாக கீழாடை இருந்தது. (மேல பெண்கள் போட்டிருப்பது போல)

மாறாக ஆண்கள், நானும் நண்பர்களும் உட்பட, களுசான் (swimming shorts) அணிந்திருந்தோம். 

ஆங்கில பத்திரிகை ஒன்றில் ஒருவர் எழுதி இருந்தார், அலுவலக உடுப்பு போடும் ஆண்கள், கழுத்துக்கு மேல மட்டும் தெரியும் வண்ணம் உடை அணிகிறார்கள். பெண்களோ, உடலின் கூடிய பகுதிகள் தெரியுமாறு மிக குறைவாக உடை அணிந்து செல்கிறார்கள்.

உண்மையில் இது மாறி அல்லவா இருந்திருக்க வேண்டும் என்று கூறி இருந்தார்.

போர்ட்ஸமௌத் கடற்க்கரை போயிருந்த பொது, அங்கே வந்திருந்த தமிழ் குடும்பத்து பெண்கள் அணிந்து வந்த அதே உடுப்புடன் கடலில் குளித்தார்கள். அதேவேளை அவர்களுடன் வந்திருந்த இங்கே பிறந்திருக்கக் கூடிய இளம் பிராயத்துப் பெண்கள் பிகினி உடையில் குளித்தார்கள். (முறையா பிகினி உடை).

இதனை பார்க்கையில் சிலருக்கு ஓகேயாக இருப்பது வேறு சிலருக்கு ஆபாசமாக இருக்கும் போல தெரிகிறது.

இன்னுமொரு திரியில், நான் விபத்தாக பார்த்து, இதனையும் போடுகிறார்களே என்று வியந்த ஒன்றை பத்தி பதிந்தேன்.

பின்னர் இந்த திரியினையும் ஆரம்பித்தேன். இது பிரேசில் நாட்டு பொது TV நிகழ்ச்சி. கவனமாக தான் ஆபாசம் எல்லை கடக்காதவாறு எடுத்து இருக்கிறார்கள்.

யாழில் ஒரு சமூக பரீட்ச்சையாக  (social experiments) தான், மிக கவனமாக தேர்ந்தே பதிந்தேன்.

பலர் தூரத்தில் இருந்து இரு திரிகளையும் பார்த்து விட்டு நகர்ந்து விட்டார்கள். சுவியர் மட்டுமே இந்த திரியில் கருத்துக்கள் பதிந்தார். 

இங்கே மேலை நாடுகளில் 10ம் வயதில், 5 வது வகுப்பில் பாலியல் கல்வி சொல்லிக் கொடுக்கின்றனர். அதுக்கு பாடசாலை கொடுக்கும் தகவல் படங்கள், எமது பார்வையில் மிக, மிக ஆபாசமானது. இங்கே கூட பல வருடங்களுக்கு முன்னர் ஜெர்மனி உறவு அந்தவகை படங்களை போட்டு இருந்தார். தனது பிள்ளைக்கு பாடசாலை வழங்கியதாக...வருத்தத்துடன் கூறி இருந்தார்..

அதை பார்த்த உறவுகள், நானும் கூட, அட... இவை குழந்தைகளுக்கு தரப்படடவை என வியந்து கொண்டே... 'அய்யய்யோ ஆபாசமான படங்கள்' என்று சொல்ல  முடியாமல், 'மெல்லவும் முடியாமல். விழுங்கவும் முடியாமல்' கடந்து சென்றோம். 

சில தமிழ் தாய், தந்தையர் இந்த பாலியல் கல்வி தமது குழந்தைக்கு வேண்டாம் என பாடசாலைக்கு போய் சொல்லப் போக, அவர்களுக்கு கவுன்சிலிங் கொடுத்து, அதனை படிப்பதால் நன்மை என்ன என்று சொல்லி புரிய வைத்திருக்கிறார்கள். 

இங்கே பல தமிழ் பெற்றார்கள்,ஆங்கிலேயர்கள் போல வாழ தலைப்படும் அடுத்த தலைமுறை பிள்ளைகள், நிதர்சனத்தினை புரிந்து கொள்கிறார்கள்.  டேட்டிங், அது, இது... கழட்டி விடுவது.... மீண்டும் டேட்டிங்....டேட்டிங், அது, இது... கழட்டி விடுவது.... அவர்களுக்கு சர்வ சாதாரணம்... எமது பார்வையில் அவ்வாறு இருக்காது... இருக்கப் போவதும் இல்லை. காரணம் நாம் இங்கே உடலளவில், மனதளவில் இன்னும் ஊரில் தான்....

எமக்கு ஊர் எப்படியோ.. அதே போல், பிள்ளைகளுக்கும் தாம் பிறந்து வளர்ந்த ஊரும் அதன் பழக்க வழக்கங்களும்...

முக்கியமாக வெள்ளைகள் 16 வயதுக்கு மேல், பிள்ளைகளை அவர்கள் பாட்டுக்கு விட்டு விடுவார்கள். பலர் வீட்டினை விட்டு வெளியேறுவார்கள். 

இது நிதர்சனம்.... இது புரியாவிடில்... நாம் நம்மையும் வேதனைக்கு உட்படுத்தி, நமது பிள்ளைகளையும் வேதனைக்கு உட்படுத்தும் நிலையில் இருப்போம்.

அதே வேளை பெற்றார்களாக ஆலோசனை தேவைப்படும் நேரத்தில் வழங்குவோம்.

லண்டன் ஈஸ்ட் ஹாம் பகுதியில் மகளை, ஆண் நண்பர் உடன் கண்டு விட்ட தகப்பன் தூக்கில் தொங்கிய சம்பவமும் சில ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்தது.  

ஆகவே நாம் ரோமில் வாழ்ந்தால் ரோமரைப் போல வாழ வேண்டும் அல்லது வாழ முற்படுபவரை பார்த்துக் கொண்டே, ஆச்சோ, போச்சோ... குய்யோ, முறையோ என்று அலம்பறை பண்ணாது அமைதியாக கடந்து செல்ல வேண்டும்.

இல்லாவிடில் டென்ஷன் தான் வாழ்க்கை ஆகிவிடும். 

நாதமுனி... இந்தக் கருத்துக்கு  மட்டும்   தனியாக...      "சமூகச் சாளரம்"  என்ற பகுதியில்...  தலைப்பை, ஆரம்பித்தால்  நல்லது என நினைக்கின்றேன் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, Nathamuni said:

போர்ட்ஸமௌத் கடற்க்கரை போயிருந்த பொது, அங்கே வந்திருந்த தமிழ் குடும்பத்து பெண்கள் அணிந்து வந்த அதே உடுப்புடன் கடலில் குளித்தார்கள். அதேவேளை அவர்களுடன் வந்திருந்த இங்கே பிறந்திருக்கக் கூடிய இளம் பிராயத்துப் பெண்கள் பிகினி உடையில் குளித்தார்கள். (முறையா பிகினி உடை).

32 மில்லியன் பேர் பெண்களின் தொடைகளையும் அதற்கு நடுவில் உள்ளதையும் பார்க்க ஜொள்ளுவிட்டதால் நீங்கள் இணைத்த அந்த வீடியோவை நானும் பார்த்தேன். எல்லாவற்றையும் பார்க்கவில்லை. 

Internet traffic இல் 50 வீதம் porn என்று புள்ளிவிபரம் சொல்கின்றது. அதற்காக porn mainstream என்று அர்த்தமில்லை. அது போலத்தான் பலர் இந்த வீடியோக்களை பெண்களின் தசைப் பிரதேசங்களைப் பார்க்கவென்று வந்திருப்பார்கள். அதில் ஒரு சிலர் பல்லுப்போன வயசாளிகள் ( naughty old men ?)

இதில் social experiment செய்ய என்ன இருக்கின்றது? பெண்களை (தங்கள் வீட்டாரைத் தவிர) உடுப்பில்லாமல் பார்க்கத்தானே எல்லா ஆண்களும் விரும்புகின்றார்கள்!

நீங்கள் இணைத்த வீடியோக்கள் பிரேசிலில் ரீவியில் காட்டுகின்றார்கள் என்பது சரிதான். பிரித்தானிய mainstream channels களில் காட்டுவதாகத் தெரியவில்லை. அதற்கு என்ன காரணம்?

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, கிருபன் said:

32 மில்லியன் பேர் பெண்களின் தொடைகளையும் அதற்கு நடுவில் உள்ளதையும் பார்க்க ஜொள்ளுவிட்டதால் நீங்கள் இணைத்த அந்த வீடியோவை நானும் பார்த்தேன். எல்லாவற்றையும் பார்க்கவில்லை. 

Internet troubles affic இல் 50 வீதம் porn என்று புள்ளிவிபரம் சொல்கின்றது. அதற்காக porn mainstream என்று அர்த்தமில்லை. அது போலத்தான் பலர் இந்த வீடியோக்களை பெண்களின் தசைப் பிரதேசங்களைப் பார்க்கவென்று வந்திருப்பார்கள். அதில் ஒரு சிலர் பல்லுப்போன வயசாளிகள் ( naughty old men ?)

இதில் social experiment செய்ய என்ன இருக்கின்றது? பெண்களை (தங்கள் வீட்டாரைத் தவிர) உடுப்பில்லாமல் பார்க்கத்தானே எல்லா ஆண்களும் விரும்புகின்றார்கள்!

நீங்கள் இணைத்த வீடியோக்கள் பிரேசிலில் ரீவியில் காட்டுகின்றார்கள் என்பது சரிதான். பிரித்தானிய mainstream channels களில் காட்டுவதாகத் தெரியவில்லை. அதற்கு என்ன காரணம்?

 

பிரித்தானியாவில் என்ன காட்டுகிறார்கள் என்றும் சொல்லி இருக்கிறேனே தலைவா.... பிரேசிலில் காட்டுவது இங்க ஜுஜுபி.

நீங்கள் விசயத்தை விட்டு , தசை, அது இது என்று  எங்கவோ போய்விட்டர்கள் போல தெரிகிறே...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 9/28/2018 at 6:12 PM, Nathamuni said:

488 பேர் பாத்திருக்கினம் உந்த திரியை...

 சுவியரும், ஆதவனும் தான் துணிஞ்சு பதிவு போட்டிருக்கினம்..

நான் இன்னமும் பார்க்கல்ல.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, Nathamuni said:

பிரித்தானியாவில் என்ன காட்டுகிறார்கள் என்றும் சொல்லி இருக்கிறேனே தலைவா.... பிரேசிலில் காட்டுவது இங்க ஜுஜுபி.

நீங்கள் விசயத்தை விட்டு , தசை, அது இது என்று  எங்கவோ போய்விட்டர்கள் போல தெரிகிறே...

சனல் 4 இல் watershed க்கு முன்னர் காட்டுவதில்லையே. எத்தனையோ முறைப்பாடுகள் Ofcom க்குப் போயிருந்தும் கலவியைக் காட்டுவதில்லை என்ற rule ஆல் அவற்றைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டார்கள். ஆனால் பிரேசில் ரீவி பெண்களின் உடலைத்தான் காட்டுகின்றது.  இதில் தசை இல்லாமல் வேறு என்ன இருக்கின்றது?

 Just for a laugh ஒன்று.

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அட உங்களிடம்கூட நல்ல வீடியோக்கள் இருக்கின்றனவே, நீங்களும் இங்கே தொடர்ந்து இணைக்கலாமே......!  tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, suvy said:

அட உங்களிடம்கூட நல்ல வீடியோக்கள் இருக்கின்றனவே, நீங்களும் இங்கே தொடர்ந்து இணைக்கலாமே......!  tw_blush:

வைச்சுக் கொண்டு தானே பார்த்து ரசிச்சுக் கொண்டு, அமுசடக்கமாய் (உபயம்: ரதி அக்கா) இருந்திருக்கிறார்.... :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, suvy said:

அட உங்களிடம்கூட நல்ல வீடியோக்கள் இருக்கின்றனவே, நீங்களும் இங்கே தொடர்ந்து இணைக்கலாமே......!  tw_blush:

இப்படியான வீடியோக்களைப் பார்க்க நேரமும் இல்லை. வயதும் இல்லை.  வடதுருவ நாடுகளுக்கான  விமானப்பயணங்களில் just for a laugh பார்த்த  ஞாபகத்தில் தேடியபோது வந்தது. அதுதான் இணைத்தேன்?

56 minutes ago, Nathamuni said:

வைச்சுக் கொண்டு தானே பார்த்து ரசிச்சுக் கொண்டு, அமுசடக்கமாய் (உபயம்: ரதி அக்கா) இருந்திருக்கிறார்.... :grin:

நான் ஒருபோதும் நல்லவராக நடிப்பதில்லை. மனசில நினைக்கிறது வாயில் வார்த்தையாக வரும்; யாழில் எழுத்தாக வரும். சிலபேர் அதை rude என்று சொல்வார்கள்!

இப்ப இரண்டு வீடியோக்களை கிளிக் பண்ணிப் பார்த்ததால் என்னுடைய யூரியூப் கணக்கில குட்டைப்பாவடையோடு குனிஞ்சு நிற்கின்ற ப்ளொண்டிஸ் வீடியோக்களைப் பார் என்று கூகிள் சொல்லுது?

முன்னர் இருந்தவை  Game of Thrones, iOS hidden features, cycling and walking போன்றவை. அவை எல்லாம் பின்னுக்குப் போயிட்டுது. எனக்கு naughty old men கிளப்பில் சேர விருப்பமில்லை என்று கூகிளுக்கு சொல்லவேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Nathamuni said:

 

ஏதோ  ஒரு அரபு நாட்டில் எடுக்கப் பட்ட  காணொளி போல் உள்ளது.
ஆட்களுக்கு விழுகின்ற   அடி  எல்லாம்... பயங்கர அடியாய்  இருக்கு.
ஆள்...  கையிலை அம்பிட்டால்,  செமத்தாக  வாங்கிக் காட்டியிருப்பார்.

அதிலும்... 2:45 வது,  நிமிடம் அளவில்  இறைச்சிக் கடையில் செய்த  இம்சையில்... 
கடைக்காரன் கத்தியுடன் வந்து விட்டான்  அம்பிட்டு இருந்தால்... இவரையும்  கூறு  போட்டு,  கட்டித்  தொங்க விட்டிருப்பார்கள். :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெண்களை ஒரு ஆபாச பிண்டமாக நினைக்கும் ஒரு கூட்டம் யாழிலும் இருக்கினம் 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ரதி said:

பெண்களை ஒரு ஆபாச பிண்டமாக நினைக்கும் ஒரு கூட்டம் யாழிலும் இருக்கினம் 
 

உங்கள் கருத்துக்கு நன்றி. 

எய்தவர்கள் இருக்க அம்பை நோவது போல இருக்கிறது இந்த கருத்து. 

யாழில் அல்ல, ஜரோப்பாவில் C4 TV, தென் அமெரிக்காவில் Brazil TV போன்றவற்றில் உள்ளனர் என்பதே சரி.

இருப்பினும் உங்கள் பதிவு இந்த திரியின் நோக்கம் குறித்த எனது பதிலை தர, நான் காத்திருந்த, சந்தர்ப்பத்தினை அளித்துள்ளது. 

இந்த திரியின் நோக்கம், நாம் வாழும் நாடுகளில், நம்மை சுற்றி நடப்பதை தெரிந்து வாழ்கிறோமா, அல்லது கண்ணை மூடிக் கொண்டு, உலகு இருட்டு என நினைக்கும் பூணை போல வாழ்கிறோமா என அறிவது தான்.

முக்கியமாக பிள்ளைகள், அதுவும் பெண் பிள்ளைகள் வளர்ப்பவர்கள் இந்த பூணை போல வாழ நிணைத்தால் பல அதிர்சிக்களை தவிர்க்க முடியாது போகும்.

பூட்டிய அறையில், பிள்ளை படிக்குது என்று பெற்றோர் இருக்க, கைத்தொலைபேசி ஊடாக, வெளியுலக தொடர்பில் பிள்ளை இருக்கும். பெத்தவர்களுக்கு தெரியாத, புரியாத, Instagram, Snap-chat என அவர்களது தொடர்பு உள்ளது.

இந்த வகை வலைத் தொடர்பு, ஒரு கொலையில் முடிந்ததை நாம் பார்த்தோம். அந்த தாய் தந்தையர் இன்னும் அதிர்வில் இருந்து மீளவில்லை.

இந்த இணைய வழி தொடர்பு பெரும் நிணைக்கவே முடியாத பெரும் சிக்கல்களை தருவதுடன், ஆண் நண்பரின் தொடர் வற்புறுத்துதலில், சில extremely intimate, படங்கள் அந்த நண்பர் பார்வைக்கு மட்டும் என இன்டர்நெட் ஊடக போய்... பின்னர் இருவரும் பிரிந்ததும், இணைய வெளியில் பகிரப் படுகின்றன.

இந்த வகையில் மான்செஸ்டர் நகரில் ஒரு பெண் பிள்ளையை போலீசார் கைது செய்து எச்சரித்து அனுப்பி உள்ளனர். அதாவது ஒரு extremely intimate படத்தினை முதலில் அனுப்பி சட்ட மீறலில் அவர் ஈடுபடடார் என போலீசார் வீட்டுக்கு வந்தனர். 

படமும் இணையத்தில், போலீசாரும் பின்னால்... அந்த தாய், தந்தைக்கு எப்படி இருந்திருக்கும்?

இவ்வளவுக்கும், பையனின் தாய் தந்தையரே போலீசுக்கு போய் இருந்தனர். தமது மகன் extremely intimate image கைத்தொலைபேசியில் வைத்துருந்தார் என எப்போதாவது கைதாக கூடாது என, முன் எச்சரிக்கையாக வந்து இருந்தனர். போலீசார் விசாரித்ததில், பெண் நண்பி தான் அனுப்பி இருக்கிறார். ஆண் நண்பர் வற்புறுத்துதலில் தான் என சட்டத்தினை நம்ப வைக்க முடியாது என்ற வகையில் அந்த 15 வயது சிறுமி எச்சரிக்கை செய்யப்பட்டார்.

அது மட்டுமல்ல, பெண்பிள்ளைகள் இப்படியான படங்களை சமூக வலை ஊடகங்கள் மூலம் அனுப்புவது தண்டனைக்குரிய குற்றம் என போலீசார் பத்திரிகையாளரை கூட்டி சொல்லி உள்ளனர் (Sending indecent images of a child via internet is a criminal offence). ஆண்... நான் கேட்க்கவில்லை... அவோ தான்... தன் பாட்டுக்கு அனுப்பினவோ என்று சொல்லி தப்பி விடுவார். பெண் பிள்ளைகளின் படங்களைக் கேட்பது ஆண் பிள்ளைகளின் passion ஆக உள்ளது. ஆனால் சட்டம், யார் அனுப்பினார்களோ அவர்களைத்தான் தண்டிக்கும். பெண் 17 வயதுக்கு மேலானால் வழக்கும், தண்டனையும் நிச்சயம். 

இந்த செய்தி எத்தனை தமிழ் தாய் தகப்பனுக்கு தெரியும்? விஜய் டிவி யும், சூப்பர் சிங்கரும்.... வாழும் நாட்டு செய்தி சொல்லாது.

இது வெள்ளையர் குடும்பங்கள் தான் என்று யாரும் சொல்லலாம். 

ஆனால்... தமிழ் குடும்பங்களில் தாராளமாக நடக்கின்றன. மேலே லண்டனில் ஒரு தந்தை தூக்கில் தொங்கின்னார் என மேலோட்டமாக சொல்லி இருந்தேன். அவர் உண்மையில் மகளின் காதலுக்கு மறுப்பு தெரிவித்து இருந்தார். 

மகளின், ஆண் நண்பரோ, தனது மொபைலில் உள்ள படங்களைக் காட்டி.... உங்கள் மகள் அனுப்பியது.... நாம் அந்தளவு தூரம் காதலில் உள்ளோம் என சொல்ல..... மானம் போய்விட்டதாக கருதி...தந்தை அந்த முடிவினை எடுத்திருந்தார்.

இதெல்லாம் ஆபாசம், இங்கே பதிக்கிறீர்களே என்றால்... நாம் படிப்பறிவில்லாத இவர்கள் போன்ற தந்தைக்கோ, தாய்க்கோ இங்குள்ள நிலைமைகளை புரிய வைப்பது எப்படி? 

என்னைப் பொறுத்த வரை சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் தெரிந்த குடும்பங்களுக்கு இந்த விபரங்களை சொல்லி, பெண் பிள்ளைகளை கவனமாக இருக்குமாறு சொல்லுங்கள் என உதவுகிறேன்.

இந்த பெண் சாலோட் சர்ச், வேல்ஸ் நாட்டு அழகிய பாடகி...17 வயது இளம் பெண்ணாக இருக்கும் போது... தனது அப்போதைய ரகர் வீரரான, காதலனுக்கு... முன்னழகு படத்தினை அனுப்பி இருந்தார்... அது காதலன் தொலைபேசியில் இருந்து... (திருடப்பட்டதாக சொல்லப் பட்டது) உலகம் முழுக்க பரவ.... அம்மணி... அப்செட் ஆக இருந்தார். பாடுவதை விட்டார். அந்த காதலனையும் உதறினார்.

நல்ல வேளையாக அந்த நேரத்தில் இந்த சட்டம் இல்லாததால் 17 வயது இளம் பெண் தப்பித்தார்.

Image result for charlotte church

ஆகவே... இந்த பத்தாம் பசலி தனமான கருதியலை விடுத்து... நிதர்சனத்துக்கு வரவேண்டும் நமது சமூகம் என்பதே நோக்கம்...

ஐயையோ... இதுகள் ஆபாசம்... என் காதுகளில் விழக்கூடாது... கண்ணில் படக் கூடாது என்று இருந்தால்... பிள்ளைகள் வளர்க்கும் போது... ஒரு நாள் போலீசார் கதவினை தட்டக் கூடும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கோல்ட் டிக்கெர் பிராங்க் என்பது... ஒருவர் வசதி இல்லாதவர் என்று நிராகரிப்பதும்.... வசதியானவர் என்று தெரிந்ததும்... ஒட்டிக் கொள்ள முனைவது...

இங்கே செவிடராக, குருடராக, நடக்க முடியாதவராக ஒருவர் நடிக்கிறார். வெவ்வேறு பெண்களும் நிராகரிக்கின்றனர்... ஒவ்வொரு  முறையும் அவர் பணக்காரர் என தெரிய வர ஒட்டிக் கொள்ள முனைகின்றனர். அவிந்து போகின்றனர்.

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, Nathamuni said:

உங்கள் கருத்துக்கு நன்றி. 

எய்தவர்கள் இருக்க அம்பை நோவது போல இருக்கிறது இந்த கருத்து. 

யாழில் அல்ல, ஜரோப்பாவில் C4 TV, தென் அமெரிக்காவில் Brazil TV போன்றவற்றில் உள்ளனர் என்பதே சரி.

இருப்பினும் உங்கள் பதிவு இந்த திரியின் நோக்கம் குறித்த எனது பதிலை தர, நான் காத்திருந்த, சந்தர்ப்பத்தினை அளித்துள்ளது. 

இந்த திரியின் நோக்கம், நாம் வாழும் நாடுகளில், நம்மை சுற்றி நடப்பதை தெரிந்து வாழ்கிறோமா, அல்லது கண்ணை மூடிக் கொண்டு, உலகு இருட்டு என நினைக்கும் பூணை போல வாழ்கிறோமா என அறிவது தான்.

முக்கியமாக பிள்ளைகள், அதுவும் பெண் பிள்ளைகள் வளர்ப்பவர்கள் இந்த பூணை போல வாழ நிணைத்தால் பல அதிர்சிக்களை தவிர்க்க முடியாது போகும்.

பூட்டிய அறையில், பிள்ளை படிக்குது என்று பெற்றோர் இருக்க, கைத்தொலைபேசி ஊடாக, வெளியுலக தொடர்பில் பிள்ளை இருக்கும். பெத்தவர்களுக்கு தெரியாத, புரியாத, Instagram, Snap-chat என அவர்களது தொடர்பு உள்ளது.

இந்த வகை வலைத் தொடர்பு, ஒரு கொலையில் முடிந்ததை நாம் பார்த்தோம். அந்த தாய் தந்தையர் இன்னும் அதிர்வில் இருந்து மீளவில்லை.

இந்த இணைய வழி தொடர்பு பெரும் நிணைக்கவே முடியாத பெரும் சிக்கல்களை தருவதுடன், ஆண் நண்பரின் தொடர் வற்புறுத்துதலில், சில extremely intimate, படங்கள் அந்த நண்பர் பார்வைக்கு மட்டும் என இன்டர்நெட் ஊடக போய்... பின்னர் இருவரும் பிரிந்ததும், இணைய வெளியில் பகிரப் படுகின்றன.

இந்த வகையில் மான்செஸ்டர் நகரில் ஒரு பெண் பிள்ளையை போலீசார் கைது செய்து எச்சரித்து அனுப்பி உள்ளனர். அதாவது ஒரு extremely intimate படத்தினை முதலில் அனுப்பி சட்ட மீறலில் அவர் ஈடுபடடார் என போலீசார் வீட்டுக்கு வந்தனர். 

படமும் இணையத்தில், போலீசாரும் பின்னால்... அந்த தாய், தந்தைக்கு எப்படி இருந்திருக்கும்?

இவ்வளவுக்கும், பையனின் தாய் தந்தையரே போலீசுக்கு போய் இருந்தனர். தமது மகன் extremely intimate image கைத்தொலைபேசியில் வைத்துருந்தார் என எப்போதாவது கைதாக கூடாது என, முன் எச்சரிக்கையாக வந்து இருந்தனர். போலீசார் விசாரித்ததில், பெண் நண்பி தான் அனுப்பி இருக்கிறார். ஆண் நண்பர் வற்புறுத்துதலில் தான் என சட்டத்தினை நம்ப வைக்க முடியாது என்ற வகையில் அந்த 15 வயது சிறுமி எச்சரிக்கை செய்யப்பட்டார்.

அது மட்டுமல்ல, பெண்பிள்ளைகள் இப்படியான படங்களை சமூக வலை ஊடகங்கள் மூலம் அனுப்புவது தண்டனைக்குரிய குற்றம் என போலீசார் பத்திரிகையாளரை கூட்டி சொல்லி உள்ளனர் (Sending indecent images of a child via internet is a criminal offence). ஆண்... நான் கேட்க்கவில்லை... அவோ தான்... தன் பாட்டுக்கு அனுப்பினவோ என்று சொல்லி தப்பி விடுவார். பெண் பிள்ளைகளின் படங்களைக் கேட்பது ஆண் பிள்ளைகளின் passion ஆக உள்ளது. ஆனால் சட்டம், யார் அனுப்பினார்களோ அவர்களைத்தான் தண்டிக்கும். பெண் 17 வயதுக்கு மேலானால் வழக்கும், தண்டனையும் நிச்சயம். 

இந்த செய்தி எத்தனை தமிழ் தாய் தகப்பனுக்கு தெரியும்? விஜய் டிவி யும், சூப்பர் சிங்கரும்.... வாழும் நாட்டு செய்தி சொல்லாது.

இது வெள்ளையர் குடும்பங்கள் தான் என்று யாரும் சொல்லலாம். 

ஆனால்... தமிழ் குடும்பங்களில் தாராளமாக நடக்கின்றன. மேலே லண்டனில் ஒரு தந்தை தூக்கில் தொங்கின்னார் என மேலோட்டமாக சொல்லி இருந்தேன். அவர் உண்மையில் மகளின் காதலுக்கு மறுப்பு தெரிவித்து இருந்தார். 

மகளின், ஆண் நண்பரோ, தனது மொபைலில் உள்ள படங்களைக் காட்டி.... உங்கள் மகள் அனுப்பியது.... நாம் அந்தளவு தூரம் காதலில் உள்ளோம் என சொல்ல..... மானம் போய்விட்டதாக கருதி...தந்தை அந்த முடிவினை எடுத்திருந்தார்.

இதெல்லாம் ஆபாசம், இங்கே பதிக்கிறீர்களே என்றால்... நாம் படிப்பறிவில்லாத இவர்கள் போன்ற தந்தைக்கோ, தாய்க்கோ இங்குள்ள நிலைமைகளை புரிய வைப்பது எப்படி? 

என்னைப் பொறுத்த வரை சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் தெரிந்த குடும்பங்களுக்கு இந்த விபரங்களை சொல்லி, பெண் பிள்ளைகளை கவனமாக இருக்குமாறு சொல்லுங்கள் என உதவுகிறேன்.

இந்த பெண் சாலோட் சர்ச், வேல்ஸ் நாட்டு அழகிய பாடகி...17 வயது இளம் பெண்ணாக இருக்கும் போது... தனது அப்போதைய ரகர் வீரரான, காதலனுக்கு... முன்னழகு படத்தினை அனுப்பி இருந்தார்... அது காதலன் தொலைபேசியில் இருந்து... (திருடப்பட்டதாக சொல்லப் பட்டது) உலகம் முழுக்க பரவ.... அம்மணி... அப்செட் ஆக இருந்தார். பாடுவதை விட்டார். அந்த காதலனையும் உதறினார்.

நல்ல வேளையாக அந்த நேரத்தில் இந்த சட்டம் இல்லாததால் 17 வயது இளம் பெண் தப்பித்தார்.

Image result for charlotte church

ஆகவே... இந்த பத்தாம் பசலி தனமான கருதியலை விடுத்து... நிதர்சனத்துக்கு வரவேண்டும் நமது சமூகம் என்பதே நோக்கம்...

ஐயையோ... இதுகள் ஆபாசம்... என் காதுகளில் விழக்கூடாது... கண்ணில் படக் கூடாது என்று இருந்தால்... பிள்ளைகள் வளர்க்கும் போது... ஒரு நாள் போலீசார் கதவினை தட்டக் கூடும். 

 

நீங்கள் சொன்ன கருத்து நல்ல கருத்து நாதமுனி ஆனால் இந்தத் திரிக்கு எவ்வாறு பொருந்தும் எனது தெரியவில்லை

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வ‌ண‌க்க‌ம் மோக‌ன் அண்ணா என‌து பெய‌ரை (வீர‌ப்ப‌ன் பைய‌ன்26 ) மாற்றி விடுங்கோ    ந‌ன்றி🙏🥰.......................................
    • த‌மிழ் சிறி அண்ணா அந்த‌ 800ரூபாய் வீடியோ ப‌ழைய‌ வீடியோ அண்ணா அந்த‌ வீடியோ போன‌ வ‌ருட‌மே ரிக்ரோக்கில் பார்த்து விட்டேன்....................இதை ப‌ற்றி அல‌ட்ட‌ என்ன‌ இருக்கு 800ரூபாய் வீடியோ அடிச்சு சொல்லுறேன் அது போன‌ வ‌ருட‌த்தான் வீடியோ ம‌ற்ற‌ வீடியோ ப‌ற்றி நான் வாயே திற‌க்க‌ல‌...................எப்ப‌ பார்த்தாலும் எல்லாத்துக்கையும் என்னை கோத்து விடுவ‌தில் கோஷானுக்கு ஏதோ இன்ப‌ம் இருக்கிற‌ மாதிரி தெரியுது அவ‌ரின் இன்ப‌த்துக்கு அவ‌ர் என்னை எப்ப‌டியும் க‌ழுவி ஊத்த‌ட்டும் ஹா ஹா😂😁🤣.......................... 
    • படக்குறிப்பு,இந்திய தேர்தலில் வாக்களித்த முதல் இலங்கைத் தமிழர் நளினி கிருபாகரன். கட்டுரை தகவல் எழுதியவர், தங்கதுரை குமாரபாண்டியன் பதவி, பிபிசி தமிழ் 18 ஏப்ரல் 2024 புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் திருச்சி இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் வசித்து வரும் பெண் ஒருவர், இந்திய அரசின் சட்டத்தை உயர் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டி பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை ஆகிய ஆவணங்களைப் பெற்றிருந்தார். இந்நிலையில், வெள்ளிக்கிழமை (ஏப். 19) நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் அப்பெண் முதல் இலங்கைத் தமிழராக வாக்கு செலுத்தியுள்ளார். இலங்கைத் தமிழர் பெண் இந்திய குடியுரிமை பெற்றது எப்படி? இலங்கைத் தமிழர்கள் இந்திய குடியுரிமை பெற முடியுமா? திருச்சி மாவட்டம் கொட்டப்பட்டு இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் வசித்து வருபவர் நளினி, இவருக்கு 38 வயது ஆகிறது. இவரது பெற்றோர்களான கண்ணன், சாந்தி இலங்கையைச் சேர்ந்த தமிழர்கள். அங்கு ஏற்பட்ட போர் பதற்றத்தால் கடல் வழியாக ராமேஸ்வரத்திற்கு 1983ஆம் ஆண்டு வந்தடைந்தனர். ராமேஸ்வரம் அருகே இருக்கும் மண்டபம் இலங்கை மறுவாழ்வு முகாமில் தங்க வைக்கப்பட்டனர். அங்கு 1986ஆம் ஆண்டு நளினி பிறந்தார். அதைத் தொடர்ந்து அங்கிருந்து திருச்சியில் உள்ள இலங்கை மறுவாழ்வு முகாமிற்கு மாற்றப்பட்டு அங்கு கிருபாகரன் என்பவரை நளினி திருமணம் முடித்து இரண்டு மகன்களுடன் வசித்து வருகிறார். இவர் பாஸ்போர்ட் பெற விண்ணப்பித்திருந்தார். அவர் இலங்கை அகதிகள் முகாமில் வசிப்பதால் அவருக்கு பாஸ்போர்ட் வழங்க அதிகாரிகளால் மறுப்பு தெரிவிக்கப்பட்டது. நீதிமன்றத்தில் பாஸ்போர்ட் கேட்டு வழக்கு தனக்கு பாஸ்போர்ட் வழங்கக்கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் கடந்த 2021ஆம் ஆண்டு ஜூலை மாதம் 2 ஆம் தேதி வழக்கு தொடுத்தார். அதில், இந்திய குடியுரிமைச் சட்டம் 1955 பிரிவு 3iன் படி, 26.1.1956 முதல் 1.7.1986 வரை இந்தியாவில் பிறந்த குழந்தைகள் அனைவரும் இந்தியர்கள்தான் என்ற அடிப்படையில் தனக்கு பாஸ்போர்ட் வழங்க வேண்டும் எனக் கேட்டிருந்தார். இந்த வழக்கு விசாரணை நடைபெற்று 2022ஆம் ஆண்டு ஆகஸ்ட்12இல் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தீர்ப்பு வழங்கினார். அதில், "மனுதாரர் நளினி இலங்கையைச் சேர்ந்த பெற்றோருக்குப் பிறந்திருந்தாலும் அவர் இந்திய குடிமகள்தான்” எனத் தீர்ப்பளித்து, அவருக்கு இந்திய பாஸ்போர்ட் வழங்க வேண்டும் என உத்தரவிட்டார். இதையடுத்து, நளினிக்கு பாஸ்போர்ட் வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, இந்திய குடியுரிமை பெற்று வாக்களிக்க எண்ணிய நளினி வாக்காளர் அடையாள அட்டைக்கு கடந்த ஆண்டு விண்ணப்பித்து அதையும் பெற்றார். நாளை நடைபெறும் மக்களவைத் தேர்தலில் வாக்களிக்கும் முதல் இலங்கை தமிழர் என்ற பெயரை பெற்றிருக்கிறார்.   40 ஆண்டு போராடத்திற்குக் கிடைத்த வெற்றி பட மூலாதாரம்,HIGHCOURT MADURAI BENCH படக்குறிப்பு,நளினிக்கு இந்திய பாஸ்போர்ட் வழங்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய நளினி கூறுகையில், “கடந்த 40 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் உள்ள அகதிகள் முகாமில் எனது தாய், தந்தை வசித்து வருகின்றனர். இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும் எனப் போராடி வருகின்றனர். எங்களுக்கு அரசிடமிருந்து சலுகைகள் கிடைத்தாலும் நாங்கள் நாடற்ற அகதிகளாகவே இன்னும் பார்க்கப்பட்டு வருகிறோம். எனவே, எங்களுக்கான அடையாளம் குடியுரிமை மட்டுமே. அதைப் பெற வேண்டும் என்பதற்காகப் போராடி வருகின்றோம். கடந்த 1986ஆம் ஆண்டு பிறந்தவர் என்ற அடிப்படையில் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்து அது மறுக்கப்பட்டது. இந்திய குடியுரிமை சட்டத்தை மேற்கோள் காட்டி நீதிமன்றத்தை அணுகியபோது பாஸ்போர்ட் கிடைத்தது. அதைத் தொடர்ந்து, தற்போது முதல் இலங்கைத் தமிழராக வாக்களிப்பதற்கான உரிமையும் பெற்றுள்ளேன்,” என்றார். ‘இலங்கைத் தமிழர்களின் குரலாக முதல் வாக்கு’ நாளை நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிக்க இருப்பது மிகவும் மகிழ்ச்சியான நிகழ்வாக இருக்கப் போகிறது எனக் கூறும் அவர், "நாடற்ற பெண்ணாக இருந்தேன். ஆனால் தற்போது இந்திய குடியுரிமை பெற்று இனி ஜனநாயகக் கடமையைச் செய்யப் போகிறேன்," எனத் தெரிவித்தார். தமிழ்நாட்டில் இலங்கை மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் ஒட்டுமொத்த மக்களின் குரலாகத் தனது ஒற்றை வாக்கை நாடாளுமன்றத் தேர்தலில் செலுத்த உள்ளதாகவும் நளினி தெரிவித்தார். அதோடு, இந்திய அரசு தமிழ்நாட்டில் உள்ள பிற இலங்கைத் தமிழர்களுக்கும் வாக்களிக்கும் உரிமையை வழங்க வேண்டும் என்பதையும் அவர் வலியுறுத்தினார்.   ‘150 இலங்கைத் தமிழர்கள் வாக்களிக்க வாய்ப்பு’ படக்குறிப்பு,தேர்தல்களில் வாக்களிக்கும் இலங்கைத் தமிழர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என வழக்கறிஞர் ரோமியோ ராய் தெரிவித்தார். இந்திய குடியுரிமைச் சட்டத்தை மேற்கோள் காட்டி நளினிக்கு பாஸ்போர்ட் கொடுக்கப்பட்டு இந்திய குடியுரிமை பெற்ற நபராக மாறினார். அதைத் தொடர்ந்து வாக்காளர் அடையாள அட்டைக்கு விண்ணப்பித்து அதையும் பெற்றுள்ளார். இதை அடிப்படையாகக் கொண்டு இலங்கைத் தமிழர் முகாமில் வசிக்கும் மூன்று பேர் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்து உள்ளதாகவும் நளினி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ரோமியோ ராய் குறிப்பிட்டார். அதேவேளையில், "தமிழ்நாடு அரசு சார்பில் 1986ஆம் ஆண்டு மற்றும் அதற்கு முன்பாகப் பிறந்தவர்களின் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் 150 பேர் இருப்பது தெரிய வந்தது. இவர்களும் இந்திய அரசின் குடியுரிமையைப் பெறுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறேன். இவர்கள் குடியுரிமை பெறும் பட்சத்தில் எதிர்வரும் தேர்தல்களில் இவர்களும் வாக்கு செலுத்த வாய்ப்பு கிடைக்கும்," என்றார் வழக்கறிஞர் ரோமியோ ராய். தமிழ்நாட்டில் 110 இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்கள் உள்ளன. அதில் தோராயமாக 1.10 லட்சம் மக்கள் வசிப்பதாகவும் காவல் நிலையத்தில் அனுமதி பெற்று 80,000க்கும் மேற்பட்டோர் வெளியில் வசித்து வருவதாகவும் கூறுகிறார் வழக்கறிஞர் புகழேந்தி. தமிழர்கள் உரிமைகள் நலனுக்காக இயங்கி வரும் வழக்கறிஞர் புகழேந்தியிடம் பிபிசி தமிழ் பேசியபோது, "அவர்கள் குடியுரிமை வேண்டுமென நீண்டகாலமாகப் போராடி வருவதாகவும்" குறிப்பிட்டார்.   படக்குறிப்பு,"தமிழ்நாட்டில் இலங்கைத் தமிழர்கள் திறந்தவெளி சிறையில் வசிப்பதைப் போன்று வசித்து வருகின்றனர்," என்கிறார் வழக்கறிஞர் புகழேந்தி. தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய இலங்கைத் தமிழர்களுக்கு ஆதார், குடும்ப அட்டை போன்ற அடையாள ஆவணங்கள் வழங்கப்படுவதாகவும் குடும்பத் தலைவருக்கு ஆயிரம் ரூபாய், மற்ற உறுப்பினர்களுக்கு 750 ரூபாய் என உதவித் தொகையும் கொடுக்கப்படுவதாகவும் கூறுகிறார் புகழேந்தி. அவர்களது நிலை குறித்துப் பேசிய அவர், "இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் குழந்தைகளால் படித்து முன்னேறி அரசு வேலைக்குச் செல்ல முடியவில்லை. வெளிநாட்டுக்கு வேலைக்குச் செல்ல முடியாது. இதனால் படித்த இளைஞர்கள் கூலித் தொழிலாளர்களாக கட்டட வேலைகளுக்கு மட்டுமே செல்லும் சூழலுக்குத் தள்ளப்படுகின்றனர் அதிலும் பல சிக்கல்களை அவர்கள் சந்தித்து வருகின்றனர்," என்கிறார். மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டத்தில் 2014ஆம் ஆண்டுக்கு முன் ஆப்கனில் இருந்து வந்தவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தச் சட்டத்தின்கீழ், "இலங்கைத் தமிழர்களையும் சேர்த்துவிட்டால் இவர்களுக்கும் குடியுரிமை கிடைக்கும். அதைச் செய்ய மத்திய அரசு தயங்குவது ஏனென்று புரியவில்லை," என்றும் கூறுகிறார் புகழேந்தி. இலங்கை நாட்டைச் சேர்ந்தவர்கள் லண்டன், ஆஸ்திரேலியா, பிரான்ஸ் போன்ற நாடுகளுக்குச் சென்று மூன்று ஆண்டுகள் தொடர்ச்சியாக வசித்தால் அவர்களுக்கு கிரீன் கார்டு வழங்கப்படுகிறது. ஐந்து ஆண்டுகளுக்கு மேல் வசித்தால் அவர்களுக்கு குடியுரிமை வழங்கப்படுகிறது. ஆனால், "இங்கே 30 ஆண்டுகள் தாண்டி வசிக்கும் இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமை என்பது மறுக்கப்படுக்கிறது. தமிழ்நாட்டில் இலங்கைத் தமிழர்கள் திறந்தவெளி சிறையில் வசிப்பதைப் போன்று வசித்து வருகின்றனர். இதில் மாற்றம் நிகழ வேண்டும் அதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்," எனவும் வலியுறுத்தினார் வழக்கறிஞர் புகழேந்தி. https://www.bbc.com/tamil/articles/cd1w2q1qx2yo
    • "சிந்து வெளி பல் மருத்துவமும் வீட்டு மருத்துவமும்"     50 வருடங்களுக்கு முன்பு வரை, பண்டைய இந்தியா நாகரிகம் சிந்து சம வெளியாக இருந்தது. எமது பண்டையதைப் பற்றிய அறிவு ஹரப்பா, மொஹெஞ்சதாரோ போன்ற பகுதிக்குள் அடங்கி விட்டது. அவையை தனித்துப் பார்க்கும் போது அவையின் முன்னேற்றம் விந்தையாக எமக்கு காட்சி அளித்தது. ஆனால் அன்றில் இருந்து எமது அறிவாற்றலிலும் தொலை நோக்கிலும் பெரும் முன்னேற்றமடைந்தது. 1974 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப் பட்ட புதிய கற்காலக் குடியேற்ற பகுதியான, இன்றைய பாகிஸ்தானில் உள்ள சிந்து சமவெளி நகரமான, மெஹெர்கர் [Mehrgarh] இதற்கு வழி வகுத்தது. இது அதி நவீன நாகரிக சிந்து வெளிக்கு முன்பும் அது வரையும் உள்ள முக்கிய தொடர்புகளை கொடுத்தது.   தொல்லியல் ஆய்வு ரீதியாய் பல முக்கியங்களை கொண்டிருந்த இந்த பகுதி, 2001 ஆம் ஆண்டு பல் துளைத்தலுக்கும் பல் அறுவை சிகிச்சைக்குமான முதலாவது சான்றை கொடுத்தது. ஆண்ட்ரியா கசினா [Professor Andrea Cucina ,University of Missouri-Columbia] தலைமையில் தொல்லியல் ஆய்வாளர்கள் அங்கு அகழ்வாராய்ச்சி செய்த போது, இரண்டு சிந்து சமவெளி நாகரிக மனிதனின் சிதை வெச்சங்கள் கிடைத்தன. இந்த மனித மண்டை ஓடுகளை ஆய்வுகளுக்கு உட் படுத்தி, ஒரு மண்டை ஓட்டின் பல்லை துப்பரவு செய்யும் போது ஒரு அதிர்ச்சி யூட்டத்தக்க அல்லது திகைக்கச் செய்கிற ஒரு உண்மை தெரிய வந்தது. அது கி மு 7000 ஆண்டில் இருந்தே இவர்களுக்கு பல் மருத்துவம் தெரிந்து இருந்தது என்பது ஆகும். அதாவது கி மு 7000 ஆண்டில் வசித்த மக்கள் பல் வலிக்கு தீர்வாக சொத்தை விழுந்த [cavity] பற்களை கூர்மையான ஒரு வித கற்களைக் கொண்டு, வில்லினால் சுற்றி [bow drills] துளை யிட்டு அறுவைச் சிகிச்சை செய்து அகற்றியது தெரிய வந்தது.   முதலில் பல்லில் சிறிய துவாரத்தை கண்டு பிடித்த ஆய்வாளர் ஆண்ட்ரியா கசினா, அந்த துவாரங்கள் ஈமச் சடங்கு போல தெரியவில்லை என்றும் மேலும் இந்த பல் இன்னும் அந்த மனிதனின் தாடையில் இருப்பதால் அவை கழுத்து மாலை செய்ய துளைக்கப் படவில்லை என்றும் தெரியப் படுத்தினார். அவரும் அவரின் மற்ற சக தொல்லியல் ஆய்வாளர்களும் அது பல் சிதைவுக்கான சிகிச்சையாக இருக்கக் கூடும் என்றும் மேலும் அங்கு தாவரம் அல்லது வேறு ஒரு பொருள் பாக்டீரியா வள ர்ச்சியைத் தடுக்கும் பொருட்டு அந்த துவாரத்திற்குள் திணிக்கப் பட்டது எனவும் சந்தேகிக்கிறார்கள். இந்த மெஹெர்கர் அகழ் வாராய்ச்சியின் போது ஒன்பது தனிப்பட்டவர்களில் மொத்தம் பதினொன்று துளை யிடப்பட்ட பற்களை அடையாளம் கண்டா ர்கள். இதில் ஒரு தனிப்பட்டவர் மூன்று துளை யிடப்பட்ட பற்களையும் மற்றும் ஒருவர் இரு தரம் துளை யிடப்பட்ட பல்லையும் கொண்டு இருந்தார். இந்த எல்லா தனிப் பட்டவர்களும் முதிர்ந்த வர்களாக, நாலு பெண், இரண்டு ஆண், மற்றும் மூன்று பால் அடையாளம் சரியாக அடையாளம் காணப்படாத தனிப்பட்ட வர்களாக இருந்தனர். இவர்களின் வயது பெரும்பாலும் இருபதில் இருந்து நாற்பதிற்கு மேலாக உள்ளது. மிக நுணுக்கமாக அவையை உற்று நோக்கும் போது, குறைந்தது ஒரு சிகிச்சையில் பல்லு துளைக்கப்பட்டதும் இன்றி அங்கு உண்டாகிய பொந்து அல்லது உட்குழி நேர்த்தியாய் திரும்ப வடிவமைக்கப் பட்டுள்ளது காணக் கூடியதாக உள்ளது.   சிறிய மேற்பரப்பை கொண்ட இந்த பல்லில் துளையிடுவதற்கு மெஹெர்கர் பல் வைத்தியர் அதிகமாக நெருப்பை உண்டாக்க ஆதி காலத்தில் பாவிக்கப்பட்ட பொறி போன்ற ஒன்றை பாவித்து இருக்கலாம். கயிறு இணைக்கப்பட்ட வில் போன்ற கருவி ஒன்றில் தனது முனையில் கூர்மையான ஒரு வித கற்களை கொண்ட மெல்லிய மரத் துண்டு, அந்த கயிற்றுனால் சுற்றப்பட்டு அழுத்தி சுற்றப்ப டுகிறது. அப்பொழுது அந்த கூர்மையான கல் பல்லில் துளையிடுகிறது. மணி ஆபரணங்கள் செய்வதற்கு பண்டைய கைவினைஞர்கள் மணிகளில் துளையிடும் தொழில் நுட்பத்தில் இருந்து இந்த மெஹெர்கர் பல் வைத்தியர்கள் இந்த அறிவை பெற்றிருக்கலாம் என அறிஞர்கள் நம்புகிறார்கள். பற்கள் அடைப்பதற்கான சான்றுகள் ஒன்றும் இதுவரை கிடைக்கப் படவில்லை. என்றாலும், சில பற்கள் ஆழமாக துளைக்கப் பட்டு இருப்பதால், ஏதாவது ஒன்று அதை அடைக்க அதற்குள் செருகி இருக்கலாம் என ஆய்வாளர்கள் நம்புகிறார்கள். ஆனால் எதனால் அடைத்தார்கள் என தெரியவில்லை. இந்த துளைகள் அரை மில்லி மீட்டரில் இருந்து 3.5 மில்லிமீட்டர் வரை இருக்கிறது. இது பல்லின் மிளரியை [எனமல்/ enamel] ஊடுருவி பல்திசுக்களுக்குள் [dentin] செல்ல போதுமானது. எனினும் பல் அடைப்புக்கான சான்றுகளை ஆய்வாளர்கள் இன்னும் காண வில்லை. எப்படியாயினும் தார் போன்ற பொருள் அல்லது இலகுவான தாவர பொருள் ஒன்று பல் குழிக்குள் அடைத்து இருக்கலாம் என நம்புகி றார்கள்.  துளைக்கப் பட்ட பற்களை கொண்ட இந்த தனிப்பட்டவர்கள் எவரும் சிறப்பு கல்லறையில் இருந்து எடுக்கப்படவில்லை. இது அங்கு வாழ்ந்த எல்லோருக்கும் இந்த வாய் சம்பந்தமான சுகாதார சிகிச்சை அல்லது பராமரிப்பு இருந்ததை சுட்டிக்கா ட்டுகிறது.   இந்த பல் சுகாதார பராமரிப்பு மெஹெர்கரில் கிட்டதட்ட 1,500 ஆண்டுகள் தொடர்ந்து இருந்தாலும், இந்த நீண்ட பாரம்பரியம் அதன் பின் அடுத்த நாகரிகத்திற்கு பரவ வில்லை. இவர்களைத் தொடர்ந்து அங்கு இருந்த செம்புக்கால மக்கள் பல் வைத்தியரிடம் எப்பவாவது சென்ற தற்கான அறி குறிகள் அங்கு இல்லை. ஏன் இந்த பராமரிப்பு தொடராமல் நின்றுவிட்டது என தெரிய வில்லை. ஒருவேளை, இது ஏற் படுத்திய வலி இந்த நீண்ட பாரம்பரியத்தின் செல்வாக்கை இல்லாமல் செய்து இருக்கலாம்?   இங்கே  தரப்பட்ட துளையிட்ட  பல்லின் படம் Nature என்ற ஆய்வு இதழில் வெளியிடப் பட்டு உள்ளது. பாக்கிஸ்தானில் உள்ள புதிய கற்கால இடு காட்டில் இருந்து எடுக்கப்பட்ட  துளைக்கப் பட்ட கடைவாய்ப்பல். இங்கு  2.6 மில்லிமீட்டர் அகலமுள்ள துவாரம் ஒன்று துளைக்கப் பட்டு உள்ளது. இந்த துவாரம் வழவழப்பாக உள்ளது. இது அந்த தனிப்பட்ட மனிதன் இறக்கும் முன் துளைக்கப் பட்டதை காட்டுகிறது. பல்லை நன்றாக பரிசோதனை செய்ததில் இந்த துளையிடும் கருவி பழுதடைந்த பல் திசுவை அகற்றுவதில் மிகவும் திறமை வாய்ந்தது என இதை ஆய்வு செய்த குழு கூறுகிறது. ஆகவே நாம் முன்பு நினைத்ததை விட பல் வைத்தியம் மேலும் 4000 ஆண்டு பழமை வாய்ந்தது. அதுமட்டும் அல்ல மயக்க மருந்து கண்டு பிடிப்பதற்கு எத்தனையோ ஆண்டுகளுக்கு முன் இது பழமையானது. . இந்த பூமி கிரகத்தில் மனிதன் தோன்றிய காலம் தொட்டு நோய் அவனுக்கு ஒரு கொடிய விஷமாக இருக்கிறது. மனிதன் பல வித வியாதிகளுடன் வரலாற்றிற்கு முந்திய காலத்தில் இருந்து போராட வேண்டி இருந்தது. இறுதியாக, அவன் உள்நாட்டு மருத்துவம் ஒன்றை உருவாக்கினான். என்றாலும் மேலே கூறிய பல் அறுவைச் சிகிச்சையை விட, இந்த சிந்து வெளி மக்கள் எந்த வித மருந்துகளை அல்லது வீட்டு மருத்துவத்தை கையாண்டார்கள் என அறிய முடியவில்லை. ஆனால், சிந்து வெளி நூலோ அல்லது ஆவணமோ வாசிக்கக் கூடியதாக இதுவரை கண்டுபிடிக்கப் படாததால், இவர்களுடன் வர்த்தக உறவு வைத்திருந்த மற்ற கி மு 3000 ஆண்டு நாகரிக மக்கள் போல ஒரு நாட்டு வைத்தியம் அங்கு நிலவி இருக்கலாம் என எம்மால் ஓரளவு ஊகிக்க முடியும். ஆகவே இது சமயம், சூனியம், அனுபவ ரீதியான சடங்குகள், முறைகள் போன்ற வையாக இருக்கலாம். அவர்கள் தாயத்து போன்றவைகளை தீங்கில் இருந்து தம்மை காப்பாற்ற, ஆகவே நோயில் இருந்து காப்பாற்ற, அணிந்து இருந்தார்கள். மற்ற மக்களை மாதிரி, அவர்களுக்கு மருந்துகளும் வீட்டு வைத்தியமும் நோய்ப் பட்டவர்களை சிகிச்சையளிக்கவும் தெரிந்து இருக்க வேண்டும். இதற்கான சான்றுகளை அனேகமாக ஹரப்பா, மொஹெஞ்சதாரோ போன்ற பகுதிகளில் உள்ள தொல் பொருள் எச்சங்களில் தேடவேண்டும்.   ஹரப்பான் மக்கள் தாவரங்கள், விலங்குகளில் இருந்து எடுத்த பொருள்கள், கனிப்பொருள்கள் போன்றவைகளை பாவித்து இருக்கலாம். மலைகளில் இயற்கையாக உண்டாகும் கருப்பு நிலக்கீலம் [Silajit, Black Asphaltum] என்ற கருத்த கனிப் பொருள் அகழ்வின் போது அங்கு கண்டு பிடிக்கப் பட்டது. Shilajit ஆசியாவில் ஒரு சில தேர்ந்தெடுக்கப் பட்ட மலைத்தொடர்களில் இருந்து பெறப்படுகிறது, குறிப்பாக திபெத்திய இமய மலை, ரஷியன் காகசஸ், மங்கோலியன் அல்தை, மற்றும் பாகிஸ்தான் கில்ஜித் மலைகள் [Tibet mountains, Caucasus mountains Altai Mountains, mountains of Gilgit Baltistan] ஆகும். ஆகவே இது சிந்து சம வெளியில் பாவிக்கப்பட்டு இருக்கவேண்டும் என்பதை எமக்கு எடுத்து காட்டு கிறது. இந்த கருப்பு நிலக்கீலம் பல நன்மைகளை கொண்டது. இந்திய துணைக் கண்டத்தில் உள்ள மிகவும் பிரபலமான மருத்துவ கலவை இதுவாகும். மேலும் ஆசியா முழுவதும் பரவலாக ஆயுர் வேத மற்றும் பாரம்பரிய மருத்துவத்தில் அதிகரித்த ஆற்றல், அதிகரித்த நோய் எதிர்ப்பு சக்தி அதனால் நல்ல தரமான வாழ்க்கை, ஒவ்வாமை தணிப்பு , நீரிழிவு குணப்படுத்தல் [increased energy, improved quality of life allergy relief, diabetes relief,] போன்றவற்றிற்கு இது பயன் படுத்தப்படுகிறது.   அதே போல அங்கு இரைப்பை யழற்சிக்கு [gastritis / இரைப்பையின் உட்புறச் சுவர் பல்வேறு காரணங்களினால் அழற்சி அடைதல். வயிறு எரிச்சலடைதல், வயிற்று வலி ஆகியவை பொது வாகக் காணப்படும் அறி குறிகளாகும்] மருந்தாக பாவிக்கப்படும் கடனுரை [cuttlebone / ஒருவகைக் கடல் மீனின் ஓடு], மற்றும் சில [staghorn,] கண்டு எடுக்கப்பட்டது. இவைகள் இன்றும் இந்தியாவின் ஆயுர்வேத மற்றும் பாரம்பரிய மருத்துவத்தில் பாவிக்கப்படுகின்றன, ஆகவே பெரும்பாலும் இவை அந்த பழங்காலத்திலும் பாவிக்கப்பட்டு இருக்கலாம். மேலே கூறியவாறு நாம் சில அடிப்படைகளில் அல்லது ஒப்பீடுகளில் ஊகிப்பதை தவிர எம்மால் ஒன்றும் செய்ய முடியாத நிலை இருந்தாலும், சிந்து வெளியின் மற்றும் ஒரு அம்சமான, மக்களின் சுகாதாரத்தை முதன்மையாக கொண்ட, அவர்களின் கட்டிடமும் வடிகால் அமைப்பும் எமது இந்த ஊகத்தை மிகவும் ஆணித்தரமாக ஆதரிக்கிறது.   [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]           
    • Published By: VISHNU   19 APR, 2024 | 08:36 PM   அண்மையில் வவுனியாவில் உயிரிழந்த சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி வெள்ளிக்கிழமை (19) தரணிக்குளம் கிராம மக்களினால் ஈச்சங்குளம் பொலிஸ் நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 17ம் திகதி தரணிக்குளம் கிராமத்தில் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் 17 வயதுடைய சிறுமியின் சடலம் மீட்கப்பட்டிருந்தத நிலையில், வெள்ளிக்கிழமை (19) இறுதி கிரியைகள் இடம்பெற இருந்த வேளை சிறுமியின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்து சிறுமியின் வீட்டிற்கு முன்பாக கிராம மக்கள் மற்றும் உறவினர்களால் ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்தனர். அத்தோடு குறித்த சிறுமியின் மரணத்திற்கு சிறிய தந்தையாரே காரணம் எனவும் தெரிவித்து மாபெரும் போராட்டத்தினை முன்னெடுத்ததுடன் மரணித்த சிறுமியின் வீட்டில் இருந்து பேரணியாக ஈச்சங்குளம் பொலிஸ் நிலையத்திற்கு சென்று பொலிஸ் நிலையத்தையும் முற்றுகையிட்டதுடன் வீதியை மறித்தும் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். இதன் போது சிறுமியின் கொலைக்கு நீதி வேண்டும், பெண் பிள்ளைகளுக்கு பாதுகாப்பு வேண்டும், சதுமிதாவின் மரணத்திற்கு நீதி வேண்டும், போன்ற பதாதைகளை தாங்கியவாறும் கசிப்பு மற்றும் போதைவஸ்தை இல்லாமல் செய், நீதி வேண்டும் நீதி வேண்டும் மரணித்த சிறுமியின் மரணத்திற்கு நீதி வேண்டும் என்ற கோசங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஒரு மணித்தியாலம் வரை இடம்பெற்ற இவ் ஆர்ப்பாட்டம் காரணமாக தாண்டிக்குளம், இரணைஇலுப்பைக்குள வீதி போக்குவரத்தானது தடைப்பட்ட மையால் அவ்வீதியின் ஊடக பயணம் செய்யும் மக்கள் பாதிப்புக்குள்ளாகினர். இதன்போது கருத்து தெரிவித்த ஆர்ப்பாட்டக்காரர்கள், போதைப்பொருள் பாவனையாலே  இவ்வாறான நிலை ஏற்பட்டுள்ளது. நாங்களும் வேலைக்கு சென்று 6 மணி போல் வரும் போது எங்களிற்கு பாதுகாப்பு இல்லை. தற்போது சதுமிதாவிற்கு நடந்த பிரச்சனைதான் இன்னொரு சிறுமிக்கும் நடைபெறும்.  குறித்த சிறுமியின் மரணத்திற்கு நீதி வேண்டும். 18 வயதிற்குட்பட்ட குறித்த சிறுமியினை துஸ்பிரயோகம் செய்தமையாலே மன ரீதியாக பாதிக்கப்பட்டிருக்கலாம். அத்துடன் குறித்த சிறுமியினை சிறிய தந்தையாரே துஸ்பிரயோகம் செய்துள்ளார் என தெரிவித்த ஆர்ப்பாட்டகாரர்கள்  குறித்த சிறுமியின் மரணத்திற்கு நீதி வேண்டும் என தெரிவித்தார். ஏற்கனவே சந்தேக பேரில் சிறுமியின் சிறியதந்தையினை ஈச்சங்குளம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், கைது செய்யப்பட்ட நபரினை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதாகவும், இச்சம்பவத்துடன் தொடர்புடைய ஏனையவர்கள் ஐயும் கைது செய்வதாகவும் பொலிஸார் தெரிவித்ததையடுத்து ஆர்ப்பாட்டகாரர்கள் கலைந்த சென்றனர். https://www.virakesari.lk/article/181483
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.