Jump to content

சிரிக்க வைக்கும் குறும்புகள் (பிராங்க்).


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சிரிக்க வைக்கும் குறும்புகள் (பிராங்க்).

குறும்புகள் பலவகை... திட்டமிட்டு ஆனால் அப்பாவிதித்தனமானதாக செய்யப்படும் குறும்புகள் பலவிதம். அடக்க முடியாத, வயிறு வலிக்கும் சிரிப்பினை உண்டாக்குபவை.

பலவகை....

பிரித்தானியாவில் டெலிவிசின் நிகழ்வில் புகழ் மிக்க இந்த குறும்பு நிகழ்வினை நிகழ்த்தியவர் மறைந்த ஜெரேமி பீட்ல்லி என்பவர். 

மனைவியின் ஏற்பாட்டில் கணவர் பிள்ளை போல பார்க்கும் காரை... இரவோடிரவாக பக்குவமாக அப்புறப் படுத்தி, அதேபோல இலக்கத்தகடு, நிறம் கொண்ட வேறு ஒரு காரை நிறுத்தி.... ஒரு குடிகாரர் வந்து வெறியில் அதனை கீறுவது அல்லது உடைப்பது... அல்லது... வரி, மாதாந்த வாடகை செலுத்தாததால் தூக்கிப் போவதாக அட்டகாசம் செய்து அந்த கணவரை டென்ஷன் ஆக்குவது தான் அவரது குறும்பு வகை. (அவர் டென்ஷன் ஆகி, இது தான் வரி கட்டின செர்டிபிகேட், இது தான் நான் முழு பணமும் செலுத்தி வாங்கிய விபரம் என்று ஓடி, ஓடி டென்ஷன் ஆவதை பார்வையாளர்கள் சிரித்து ரசிப்பதே நிகழ்ச்சியின் நோக்கம்.

சிலவேளைகளில் வேலைக்கு ஆளை எடுத்து, அவருக்கு செய்ய முடியாத வேலைகளை கொடுத்து ( ஒழுகும் வாளியினை கொடுத்து, தண்ணி அள்ளி தொட்டியினை நிரப்ப சொல்வது, இறந்தவர் போல நடிக்கும், பெட்டியினுள் இருக்கும் உடலுக்கு உடுப்பு போட சொல்வது...அவர் எழுப்பி செய்யும் சேட்டைகள்)  அவர் படும் பாட்டினை ரகசிய கமராவில் பிடித்து, காட்டுவது வேறு ஒரு ரகம்.. 

இயக்குனர் சங்கரின் பிரசாந்த், ஐஸ்வர்யா ஆகியோரை வைத்து எடுத்த படம் ஜீன்ஸ். ஆனந்த விகடன் பத்திரிகை குறும்பு டீம் என்று ஒரு சிறு டீமை வைத்திருந்தது. அந்த டீம் ஜீன்ஸ் பிரிவியூ என்று ஒரு அரங்கை புக் பண்ணி சினிமா உலகினை சேர்ந்த பலரை வரவழைத்தது. சத்யராஜ் உள்பட பலரும் அரக்கப் பரக்க வந்து அமர்ந்து இருந்தார்கள்.

ஷோ தொடங்கியபின்னர் தான் தெரிந்தது அது சினிமா ஜீன்ஸ் அல்ல... ஜீன்ஸ் உடை என்று. பெரிய ஒரு குறும்பு அது.

அவிந்து போனோம் என்று முதலில் புரிந்து கொண்டவர் சத்யராஜ்... 'அடப் பாவிகளா' என்று சத்தமாக சொல்லி சிரித்தார் அவர்.

Just for laugh போன்ற பல வகையறாக்கள் உண்டு.

இது இந்தியாவின் ரேடியோ ஒன்றின் கிளாஸ் குறும்பு... Honeymoon Prank...

அசைவ உணவு... சைவ உணவாளருக்கு கொடுக்க பட்ட குறும்பு.. 

இது இணையத்தினைக் கலக்கும் பிரேசில் நாட்டு குறும்பு... ஜோடியாக வரும், பூங்காவில் இருக்கும் இருவரில், ஆணிடம், ஒரு அழகிய பெண் ... ஆபாசம் இல்லாத, அப்பாவித்தனம் போன்ற உதவி கேட்பதாக நடித்து... பெண்ணினை டென்ஷன் ஆக்குவது தான் இந்த வகை குறும்பு... போர்த்துக்கேய மொழி தெரியாவிட்டாலும்.... சிரிப்பு வரவழைக்கும் ரகம்.

பல மில்லியன் கணக்கான பார்வையாளர்களை சிரிக்க வைக்கும் குறும்புகள் நீங்களும் பாருங்களேன்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உதில வரேக்க விழுந்து போனம்... காயம்.... தெரியுதோ எண்டு பார்த்து சொல்லுவியளே...

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

32 மில்லியன் பார்வையாளர்களை சிரிக்க வைத்த வீடியோ

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த வீடியோக்கள் எல்லாம் ஆண்களுக்கு ஒரு முக்கியமான செய்தியையும்,  இளைஞர்களுக்கு  தனியாக ஒரு செய்தியையும் சொல்லிச் செல்கின்றன..... மனைவியானால் என்ன,காதலியானால் என்ன அவர்களின் அடிப்படைக் குணம் மாறவே மாறாது. ஆண்களின் அற்ப சந்தோஷத்தையும் அடித்து விரட்டுவதிலேயே குறியா இருக்கிறாங்கள்.....!  ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆகா... அய்யய்யோ....அவிஞ்சு போனமா?

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னா அடி.... முடியல்லயா..... இப்படியா.. பப்ளிக்கிள...அடிக்கிறது.....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

488 பேர் பாத்திருக்கினம் உந்த திரியை...

சுவியரும், ஆதவனும் தான் துணிஞ்சு பதிவு போட்டிருக்கினம்..

ஏனைய விண்ணாதி விண்ணர்கள் எல்லாம் கமுக்கமா பார்த்தமா, அமுசடக்கமா போனோமா என்று ஓடுகிறார்கள்.

வீட்டுல சாத்து விழும்..எண்டு...பயம் போல கிடக்குது.... 

தமிழ்சிறியர் கூட சைலன்ட் ஆகிட்டாரே... நம்ப முடியல.. :grin:

கடைசி விடீயோவில தொடக்கத்திலே கறுவளின்ர பார்வை சொல்லும் கதையும்... அடி வாங்கும் போது.... படுற பாடும்....எல்லோரையும் கலங்க ? வைத்திருக்கும்..:grin::grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அட நீங்க வேற, அடிக்கு அப்புறம்தான் அந்தப் பதிவே போட்டது.....!  ? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அண்மையில் போர்த்துக்கல் போயிருந்தேன். Water Theme park ஒன்றுக்கு போயிருந்த போது, அங்கே வந்திருந்த இளம் பெண்கள் முதல், கிழவிகள் வரை இந்த வகை பிகினி உடுப்புகள் தான் போட்டிருந்தார்கள். முக்கியமாக பின்புறம் (பிட்டம்) முழுவதுமாக தெரியக் கூடியதாக கீழாடை இருந்தது. (மேல பெண்கள் போட்டிருப்பது போல)

மாறாக ஆண்கள், நானும் நண்பர்களும் உட்பட, களுசான் (swimming shorts) அணிந்திருந்தோம். 

ஆங்கில பத்திரிகை ஒன்றில் ஒருவர் எழுதி இருந்தார், அலுவலக உடுப்பு போடும் ஆண்கள், கழுத்துக்கு மேல மட்டும் தெரியும் வண்ணம் உடை அணிகிறார்கள். பெண்களோ, உடலின் கூடிய பகுதிகள் தெரியுமாறு மிக குறைவாக உடை அணிந்து செல்கிறார்கள்.

உண்மையில் இது மாறி அல்லவா இருந்திருக்க வேண்டும் என்று கூறி இருந்தார்.

போர்ட்ஸமௌத் கடற்க்கரை போயிருந்த பொது, அங்கே வந்திருந்த தமிழ் குடும்பத்து பெண்கள் அணிந்து வந்த அதே உடுப்புடன் கடலில் குளித்தார்கள். அதேவேளை அவர்களுடன் வந்திருந்த இங்கே பிறந்திருக்கக் கூடிய இளம் பிராயத்துப் பெண்கள் பிகினி உடையில் குளித்தார்கள். (முறையா பிகினி உடை).

இதனை பார்க்கையில் சிலருக்கு ஓகேயாக இருப்பது வேறு சிலருக்கு ஆபாசமாக இருக்கும் போல தெரிகிறது.

இன்னுமொரு திரியில், நான் விபத்தாக பார்த்து, இதனையும் போடுகிறார்களே என்று வியந்த ஒன்றை பத்தி பதிந்தேன்.

பின்னர் இந்த திரியினையும் ஆரம்பித்தேன். இது பிரேசில் நாட்டு பொது TV நிகழ்ச்சி. கவனமாக தான் ஆபாசம் எல்லை கடக்காதவாறு எடுத்து இருக்கிறார்கள்.

யாழில் ஒரு சமூக பரீட்ச்சையாக  (social experiments) தான், மிக கவனமாக தேர்ந்தே பதிந்தேன்.

பலர் தூரத்தில் இருந்து இரு திரிகளையும் பார்த்து விட்டு நகர்ந்து விட்டார்கள். சுவியர் மட்டுமே இந்த திரியில் கருத்துக்கள் பதிந்தார். 

இங்கே மேலை நாடுகளில் 10ம் வயதில், 5 வது வகுப்பில் பாலியல் கல்வி சொல்லிக் கொடுக்கின்றனர். அதுக்கு பாடசாலை கொடுக்கும் தகவல் படங்கள், எமது பார்வையில் மிக, மிக ஆபாசமானது. இங்கே கூட பல வருடங்களுக்கு முன்னர் ஜெர்மனி உறவு அந்தவகை படங்களை போட்டு இருந்தார். தனது பிள்ளைக்கு பாடசாலை வழங்கியதாக...வருத்தத்துடன் கூறி இருந்தார்..

அதை பார்த்த உறவுகள், நானும் கூட, அட... இவை குழந்தைகளுக்கு தரப்படடவை என வியந்து கொண்டே... 'அய்யய்யோ ஆபாசமான படங்கள்' என்று சொல்ல  முடியாமல், 'மெல்லவும் முடியாமல். விழுங்கவும் முடியாமல்' கடந்து சென்றோம். 

சில தமிழ் தாய், தந்தையர் இந்த பாலியல் கல்வி தமது குழந்தைக்கு வேண்டாம் என பாடசாலைக்கு போய் சொல்லப் போக, அவர்களுக்கு கவுன்சிலிங் கொடுத்து, அதனை படிப்பதால் நன்மை என்ன என்று சொல்லி புரிய வைத்திருக்கிறார்கள். 

இங்கே பல தமிழ் பெற்றார்கள்,ஆங்கிலேயர்கள் போல வாழ தலைப்படும் அடுத்த தலைமுறை பிள்ளைகள், நிதர்சனத்தினை புரிந்து கொள்கிறார்கள்.  டேட்டிங், அது, இது... கழட்டி விடுவது.... மீண்டும் டேட்டிங்....டேட்டிங், அது, இது... கழட்டி விடுவது.... அவர்களுக்கு சர்வ சாதாரணம்... எமது பார்வையில் அவ்வாறு இருக்காது... இருக்கப் போவதும் இல்லை. காரணம் நாம் இங்கே உடலளவில், மனதளவில் இன்னும் ஊரில் தான்....

எமக்கு ஊர் எப்படியோ.. அதே போல், பிள்ளைகளுக்கும் தாம் பிறந்து வளர்ந்த ஊரும் அதன் பழக்க வழக்கங்களும்...

முக்கியமாக வெள்ளைகள் 16 வயதுக்கு மேல், பிள்ளைகளை அவர்கள் பாட்டுக்கு விட்டு விடுவார்கள். பலர் வீட்டினை விட்டு வெளியேறுவார்கள். 

இது நிதர்சனம்.... இது புரியாவிடில்... நாம் நம்மையும் வேதனைக்கு உட்படுத்தி, நமது பிள்ளைகளையும் வேதனைக்கு உட்படுத்தும் நிலையில் இருப்போம்.

அதே வேளை பெற்றார்களாக ஆலோசனை தேவைப்படும் நேரத்தில் வழங்குவோம்.

லண்டன் ஈஸ்ட் ஹாம் பகுதியில் மகளை, ஆண் நண்பர் உடன் கண்டு விட்ட தகப்பன் தூக்கில் தொங்கிய சம்பவமும் சில ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்தது.  

ஆகவே நாம் ரோமில் வாழ்ந்தால் ரோமரைப் போல வாழ வேண்டும் அல்லது வாழ முற்படுபவரை பார்த்துக் கொண்டே, ஆச்சோ, போச்சோ... குய்யோ, முறையோ என்று அலம்பறை பண்ணாது அமைதியாக கடந்து செல்ல வேண்டும்.

இல்லாவிடில் டென்ஷன் தான் வாழ்க்கை ஆகிவிடும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 9/29/2018 at 12:12 AM, Nathamuni said:

488 பேர் பாத்திருக்கினம் உந்த திரியை...

சுவியரும், ஆதவனும் தான் துணிஞ்சு பதிவு போட்டிருக்கினம்..

ஏனைய விண்ணாதி விண்ணர்கள் எல்லாம் கமுக்கமா பார்த்தமா, அமுசடக்கமா போனோமா என்று ஓடுகிறார்கள்.

வீட்டுல சாத்து விழும்..எண்டு...பயம் போல கிடக்குது.... 

தமிழ்சிறியர் கூட சைலன்ட் ஆகிட்டாரே... நம்ப முடியல.. :grin:

கடைசி விடீயோவில தொடக்கத்திலே கறுவளின்ர பார்வை சொல்லும் கதையும்... அடி வாங்கும் போது.... படுற பாடும்....எல்லோரையும் கலங்க ? வைத்திருக்கும்..:grin::grin:

கம்மாக்கோ...   சிக்காக்கோ.... எண்ட  மாதிரி, நாதமுனியரின் கதை  இருக்கு.
நாங்கள்,  இப்படியான...   தலைப்புகளை,  தவற விடாமல், வரி வாரியாக படித்திட்டு தான்... படுக்கைக்கு போற ஆக்கள் அப்பு.

என்ன... நீங்கள் தலைப்பை  ஆரம்பித்த நேரம், எனக்கு.. தலைக்கு மேலை வேலை... இருந்ததால்...   
பதில் எழுத முடியவில்லை , நாதமுனியர். 

அத்துடன்.... இப்படியான தலைப்புக்களில்...  மினக்கெட்டு, 
முக்கி, முக்கி... எழுதினாலும்....படு பாவிகள், வெட்டிப் போடுவாங்கள். 

அதனால்...  அவங்களையும்,  சுழிச்சுக்    கொண்டு போக வேணும், அய்யா..
திஸ்... இஸ்.. வெறி  இன்ரலிஜெண்ட்   அன்ட்   ரெக்னிக்  வேர்க். அண்டர் சாண்ட்,  முனி.  :grin:  ?  ? 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Nathamuni said:

அண்மையில் போர்த்துக்கல் போயிருந்தேன். Water Theme park ஒன்றுக்கு போயிருந்த போது, அங்கே வந்திருந்த இளம் பெண்கள் முதல், கிழவிகள் வரை இந்த வகை பிகினி உடுப்புகள் தான் போட்டிருந்தார்கள். முக்கியமாக பின்புறம் (பிட்டம்) முழுவதுமாக தெரியக் கூடியதாக கீழாடை இருந்தது. (மேல பெண்கள் போட்டிருப்பது போல)

மாறாக ஆண்கள், நானும் நண்பர்களும் உட்பட, களுசான் (swimming shorts) அணிந்திருந்தோம். 

ஆங்கில பத்திரிகை ஒன்றில் ஒருவர் எழுதி இருந்தார், அலுவலக உடுப்பு போடும் ஆண்கள், கழுத்துக்கு மேல மட்டும் தெரியும் வண்ணம் உடை அணிகிறார்கள். பெண்களோ, உடலின் கூடிய பகுதிகள் தெரியுமாறு மிக குறைவாக உடை அணிந்து செல்கிறார்கள்.

உண்மையில் இது மாறி அல்லவா இருந்திருக்க வேண்டும் என்று கூறி இருந்தார்.

போர்ட்ஸமௌத் கடற்க்கரை போயிருந்த பொது, அங்கே வந்திருந்த தமிழ் குடும்பத்து பெண்கள் அணிந்து வந்த அதே உடுப்புடன் கடலில் குளித்தார்கள். அதேவேளை அவர்களுடன் வந்திருந்த இங்கே பிறந்திருக்கக் கூடிய இளம் பிராயத்துப் பெண்கள் பிகினி உடையில் குளித்தார்கள். (முறையா பிகினி உடை).

இதனை பார்க்கையில் சிலருக்கு ஓகேயாக இருப்பது வேறு சிலருக்கு ஆபாசமாக இருக்கும் போல தெரிகிறது.

இன்னுமொரு திரியில், நான் விபத்தாக பார்த்து, இதனையும் போடுகிறார்களே என்று வியந்த ஒன்றை பத்தி பதிந்தேன்.

பின்னர் இந்த திரியினையும் ஆரம்பித்தேன். இது பிரேசில் நாட்டு பொது TV நிகழ்ச்சி. கவனமாக தான் ஆபாசம் எல்லை கடக்காதவாறு எடுத்து இருக்கிறார்கள்.

யாழில் ஒரு சமூக பரீட்ச்சையாக  (social experiments) தான், மிக கவனமாக தேர்ந்தே பதிந்தேன்.

பலர் தூரத்தில் இருந்து இரு திரிகளையும் பார்த்து விட்டு நகர்ந்து விட்டார்கள். சுவியர் மட்டுமே இந்த திரியில் கருத்துக்கள் பதிந்தார். 

இங்கே மேலை நாடுகளில் 10ம் வயதில், 5 வது வகுப்பில் பாலியல் கல்வி சொல்லிக் கொடுக்கின்றனர். அதுக்கு பாடசாலை கொடுக்கும் தகவல் படங்கள், எமது பார்வையில் மிக, மிக ஆபாசமானது. இங்கே கூட பல வருடங்களுக்கு முன்னர் ஜெர்மனி உறவு அந்தவகை படங்களை போட்டு இருந்தார். தனது பிள்ளைக்கு பாடசாலை வழங்கியதாக...வருத்தத்துடன் கூறி இருந்தார்..

அதை பார்த்த உறவுகள், நானும் கூட, அட... இவை குழந்தைகளுக்கு தரப்படடவை என வியந்து கொண்டே... 'அய்யய்யோ ஆபாசமான படங்கள்' என்று சொல்ல  முடியாமல், 'மெல்லவும் முடியாமல். விழுங்கவும் முடியாமல்' கடந்து சென்றோம். 

சில தமிழ் தாய், தந்தையர் இந்த பாலியல் கல்வி தமது குழந்தைக்கு வேண்டாம் என பாடசாலைக்கு போய் சொல்லப் போக, அவர்களுக்கு கவுன்சிலிங் கொடுத்து, அதனை படிப்பதால் நன்மை என்ன என்று சொல்லி புரிய வைத்திருக்கிறார்கள். 

இங்கே பல தமிழ் பெற்றார்கள்,ஆங்கிலேயர்கள் போல வாழ தலைப்படும் அடுத்த தலைமுறை பிள்ளைகள், நிதர்சனத்தினை புரிந்து கொள்கிறார்கள்.  டேட்டிங், அது, இது... கழட்டி விடுவது.... மீண்டும் டேட்டிங்....டேட்டிங், அது, இது... கழட்டி விடுவது.... அவர்களுக்கு சர்வ சாதாரணம்... எமது பார்வையில் அவ்வாறு இருக்காது... இருக்கப் போவதும் இல்லை. காரணம் நாம் இங்கே உடலளவில், மனதளவில் இன்னும் ஊரில் தான்....

எமக்கு ஊர் எப்படியோ.. அதே போல், பிள்ளைகளுக்கும் தாம் பிறந்து வளர்ந்த ஊரும் அதன் பழக்க வழக்கங்களும்...

முக்கியமாக வெள்ளைகள் 16 வயதுக்கு மேல், பிள்ளைகளை அவர்கள் பாட்டுக்கு விட்டு விடுவார்கள். பலர் வீட்டினை விட்டு வெளியேறுவார்கள். 

இது நிதர்சனம்.... இது புரியாவிடில்... நாம் நம்மையும் வேதனைக்கு உட்படுத்தி, நமது பிள்ளைகளையும் வேதனைக்கு உட்படுத்தும் நிலையில் இருப்போம்.

அதே வேளை பெற்றார்களாக ஆலோசனை தேவைப்படும் நேரத்தில் வழங்குவோம்.

லண்டன் ஈஸ்ட் ஹாம் பகுதியில் மகளை, ஆண் நண்பர் உடன் கண்டு விட்ட தகப்பன் தூக்கில் தொங்கிய சம்பவமும் சில ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்தது.  

ஆகவே நாம் ரோமில் வாழ்ந்தால் ரோமரைப் போல வாழ வேண்டும் அல்லது வாழ முற்படுபவரை பார்த்துக் கொண்டே, ஆச்சோ, போச்சோ... குய்யோ, முறையோ என்று அலம்பறை பண்ணாது அமைதியாக கடந்து செல்ல வேண்டும்.

இல்லாவிடில் டென்ஷன் தான் வாழ்க்கை ஆகிவிடும். 

நாதமுனி... இந்தக் கருத்துக்கு  மட்டும்   தனியாக...      "சமூகச் சாளரம்"  என்ற பகுதியில்...  தலைப்பை, ஆரம்பித்தால்  நல்லது என நினைக்கின்றேன் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, Nathamuni said:

போர்ட்ஸமௌத் கடற்க்கரை போயிருந்த பொது, அங்கே வந்திருந்த தமிழ் குடும்பத்து பெண்கள் அணிந்து வந்த அதே உடுப்புடன் கடலில் குளித்தார்கள். அதேவேளை அவர்களுடன் வந்திருந்த இங்கே பிறந்திருக்கக் கூடிய இளம் பிராயத்துப் பெண்கள் பிகினி உடையில் குளித்தார்கள். (முறையா பிகினி உடை).

32 மில்லியன் பேர் பெண்களின் தொடைகளையும் அதற்கு நடுவில் உள்ளதையும் பார்க்க ஜொள்ளுவிட்டதால் நீங்கள் இணைத்த அந்த வீடியோவை நானும் பார்த்தேன். எல்லாவற்றையும் பார்க்கவில்லை. 

Internet traffic இல் 50 வீதம் porn என்று புள்ளிவிபரம் சொல்கின்றது. அதற்காக porn mainstream என்று அர்த்தமில்லை. அது போலத்தான் பலர் இந்த வீடியோக்களை பெண்களின் தசைப் பிரதேசங்களைப் பார்க்கவென்று வந்திருப்பார்கள். அதில் ஒரு சிலர் பல்லுப்போன வயசாளிகள் ( naughty old men ?)

இதில் social experiment செய்ய என்ன இருக்கின்றது? பெண்களை (தங்கள் வீட்டாரைத் தவிர) உடுப்பில்லாமல் பார்க்கத்தானே எல்லா ஆண்களும் விரும்புகின்றார்கள்!

நீங்கள் இணைத்த வீடியோக்கள் பிரேசிலில் ரீவியில் காட்டுகின்றார்கள் என்பது சரிதான். பிரித்தானிய mainstream channels களில் காட்டுவதாகத் தெரியவில்லை. அதற்கு என்ன காரணம்?

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, கிருபன் said:

32 மில்லியன் பேர் பெண்களின் தொடைகளையும் அதற்கு நடுவில் உள்ளதையும் பார்க்க ஜொள்ளுவிட்டதால் நீங்கள் இணைத்த அந்த வீடியோவை நானும் பார்த்தேன். எல்லாவற்றையும் பார்க்கவில்லை. 

Internet troubles affic இல் 50 வீதம் porn என்று புள்ளிவிபரம் சொல்கின்றது. அதற்காக porn mainstream என்று அர்த்தமில்லை. அது போலத்தான் பலர் இந்த வீடியோக்களை பெண்களின் தசைப் பிரதேசங்களைப் பார்க்கவென்று வந்திருப்பார்கள். அதில் ஒரு சிலர் பல்லுப்போன வயசாளிகள் ( naughty old men ?)

இதில் social experiment செய்ய என்ன இருக்கின்றது? பெண்களை (தங்கள் வீட்டாரைத் தவிர) உடுப்பில்லாமல் பார்க்கத்தானே எல்லா ஆண்களும் விரும்புகின்றார்கள்!

நீங்கள் இணைத்த வீடியோக்கள் பிரேசிலில் ரீவியில் காட்டுகின்றார்கள் என்பது சரிதான். பிரித்தானிய mainstream channels களில் காட்டுவதாகத் தெரியவில்லை. அதற்கு என்ன காரணம்?

 

பிரித்தானியாவில் என்ன காட்டுகிறார்கள் என்றும் சொல்லி இருக்கிறேனே தலைவா.... பிரேசிலில் காட்டுவது இங்க ஜுஜுபி.

நீங்கள் விசயத்தை விட்டு , தசை, அது இது என்று  எங்கவோ போய்விட்டர்கள் போல தெரிகிறே...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 9/28/2018 at 6:12 PM, Nathamuni said:

488 பேர் பாத்திருக்கினம் உந்த திரியை...

 சுவியரும், ஆதவனும் தான் துணிஞ்சு பதிவு போட்டிருக்கினம்..

நான் இன்னமும் பார்க்கல்ல.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, Nathamuni said:

பிரித்தானியாவில் என்ன காட்டுகிறார்கள் என்றும் சொல்லி இருக்கிறேனே தலைவா.... பிரேசிலில் காட்டுவது இங்க ஜுஜுபி.

நீங்கள் விசயத்தை விட்டு , தசை, அது இது என்று  எங்கவோ போய்விட்டர்கள் போல தெரிகிறே...

சனல் 4 இல் watershed க்கு முன்னர் காட்டுவதில்லையே. எத்தனையோ முறைப்பாடுகள் Ofcom க்குப் போயிருந்தும் கலவியைக் காட்டுவதில்லை என்ற rule ஆல் அவற்றைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டார்கள். ஆனால் பிரேசில் ரீவி பெண்களின் உடலைத்தான் காட்டுகின்றது.  இதில் தசை இல்லாமல் வேறு என்ன இருக்கின்றது?

 Just for a laugh ஒன்று.

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அட உங்களிடம்கூட நல்ல வீடியோக்கள் இருக்கின்றனவே, நீங்களும் இங்கே தொடர்ந்து இணைக்கலாமே......!  tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, suvy said:

அட உங்களிடம்கூட நல்ல வீடியோக்கள் இருக்கின்றனவே, நீங்களும் இங்கே தொடர்ந்து இணைக்கலாமே......!  tw_blush:

வைச்சுக் கொண்டு தானே பார்த்து ரசிச்சுக் கொண்டு, அமுசடக்கமாய் (உபயம்: ரதி அக்கா) இருந்திருக்கிறார்.... :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, suvy said:

அட உங்களிடம்கூட நல்ல வீடியோக்கள் இருக்கின்றனவே, நீங்களும் இங்கே தொடர்ந்து இணைக்கலாமே......!  tw_blush:

இப்படியான வீடியோக்களைப் பார்க்க நேரமும் இல்லை. வயதும் இல்லை.  வடதுருவ நாடுகளுக்கான  விமானப்பயணங்களில் just for a laugh பார்த்த  ஞாபகத்தில் தேடியபோது வந்தது. அதுதான் இணைத்தேன்?

56 minutes ago, Nathamuni said:

வைச்சுக் கொண்டு தானே பார்த்து ரசிச்சுக் கொண்டு, அமுசடக்கமாய் (உபயம்: ரதி அக்கா) இருந்திருக்கிறார்.... :grin:

நான் ஒருபோதும் நல்லவராக நடிப்பதில்லை. மனசில நினைக்கிறது வாயில் வார்த்தையாக வரும்; யாழில் எழுத்தாக வரும். சிலபேர் அதை rude என்று சொல்வார்கள்!

இப்ப இரண்டு வீடியோக்களை கிளிக் பண்ணிப் பார்த்ததால் என்னுடைய யூரியூப் கணக்கில குட்டைப்பாவடையோடு குனிஞ்சு நிற்கின்ற ப்ளொண்டிஸ் வீடியோக்களைப் பார் என்று கூகிள் சொல்லுது?

முன்னர் இருந்தவை  Game of Thrones, iOS hidden features, cycling and walking போன்றவை. அவை எல்லாம் பின்னுக்குப் போயிட்டுது. எனக்கு naughty old men கிளப்பில் சேர விருப்பமில்லை என்று கூகிளுக்கு சொல்லவேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Nathamuni said:

 

ஏதோ  ஒரு அரபு நாட்டில் எடுக்கப் பட்ட  காணொளி போல் உள்ளது.
ஆட்களுக்கு விழுகின்ற   அடி  எல்லாம்... பயங்கர அடியாய்  இருக்கு.
ஆள்...  கையிலை அம்பிட்டால்,  செமத்தாக  வாங்கிக் காட்டியிருப்பார்.

அதிலும்... 2:45 வது,  நிமிடம் அளவில்  இறைச்சிக் கடையில் செய்த  இம்சையில்... 
கடைக்காரன் கத்தியுடன் வந்து விட்டான்  அம்பிட்டு இருந்தால்... இவரையும்  கூறு  போட்டு,  கட்டித்  தொங்க விட்டிருப்பார்கள். :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெண்களை ஒரு ஆபாச பிண்டமாக நினைக்கும் ஒரு கூட்டம் யாழிலும் இருக்கினம் 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ரதி said:

பெண்களை ஒரு ஆபாச பிண்டமாக நினைக்கும் ஒரு கூட்டம் யாழிலும் இருக்கினம் 
 

உங்கள் கருத்துக்கு நன்றி. 

எய்தவர்கள் இருக்க அம்பை நோவது போல இருக்கிறது இந்த கருத்து. 

யாழில் அல்ல, ஜரோப்பாவில் C4 TV, தென் அமெரிக்காவில் Brazil TV போன்றவற்றில் உள்ளனர் என்பதே சரி.

இருப்பினும் உங்கள் பதிவு இந்த திரியின் நோக்கம் குறித்த எனது பதிலை தர, நான் காத்திருந்த, சந்தர்ப்பத்தினை அளித்துள்ளது. 

இந்த திரியின் நோக்கம், நாம் வாழும் நாடுகளில், நம்மை சுற்றி நடப்பதை தெரிந்து வாழ்கிறோமா, அல்லது கண்ணை மூடிக் கொண்டு, உலகு இருட்டு என நினைக்கும் பூணை போல வாழ்கிறோமா என அறிவது தான்.

முக்கியமாக பிள்ளைகள், அதுவும் பெண் பிள்ளைகள் வளர்ப்பவர்கள் இந்த பூணை போல வாழ நிணைத்தால் பல அதிர்சிக்களை தவிர்க்க முடியாது போகும்.

பூட்டிய அறையில், பிள்ளை படிக்குது என்று பெற்றோர் இருக்க, கைத்தொலைபேசி ஊடாக, வெளியுலக தொடர்பில் பிள்ளை இருக்கும். பெத்தவர்களுக்கு தெரியாத, புரியாத, Instagram, Snap-chat என அவர்களது தொடர்பு உள்ளது.

இந்த வகை வலைத் தொடர்பு, ஒரு கொலையில் முடிந்ததை நாம் பார்த்தோம். அந்த தாய் தந்தையர் இன்னும் அதிர்வில் இருந்து மீளவில்லை.

இந்த இணைய வழி தொடர்பு பெரும் நிணைக்கவே முடியாத பெரும் சிக்கல்களை தருவதுடன், ஆண் நண்பரின் தொடர் வற்புறுத்துதலில், சில extremely intimate, படங்கள் அந்த நண்பர் பார்வைக்கு மட்டும் என இன்டர்நெட் ஊடக போய்... பின்னர் இருவரும் பிரிந்ததும், இணைய வெளியில் பகிரப் படுகின்றன.

இந்த வகையில் மான்செஸ்டர் நகரில் ஒரு பெண் பிள்ளையை போலீசார் கைது செய்து எச்சரித்து அனுப்பி உள்ளனர். அதாவது ஒரு extremely intimate படத்தினை முதலில் அனுப்பி சட்ட மீறலில் அவர் ஈடுபடடார் என போலீசார் வீட்டுக்கு வந்தனர். 

படமும் இணையத்தில், போலீசாரும் பின்னால்... அந்த தாய், தந்தைக்கு எப்படி இருந்திருக்கும்?

இவ்வளவுக்கும், பையனின் தாய் தந்தையரே போலீசுக்கு போய் இருந்தனர். தமது மகன் extremely intimate image கைத்தொலைபேசியில் வைத்துருந்தார் என எப்போதாவது கைதாக கூடாது என, முன் எச்சரிக்கையாக வந்து இருந்தனர். போலீசார் விசாரித்ததில், பெண் நண்பி தான் அனுப்பி இருக்கிறார். ஆண் நண்பர் வற்புறுத்துதலில் தான் என சட்டத்தினை நம்ப வைக்க முடியாது என்ற வகையில் அந்த 15 வயது சிறுமி எச்சரிக்கை செய்யப்பட்டார்.

அது மட்டுமல்ல, பெண்பிள்ளைகள் இப்படியான படங்களை சமூக வலை ஊடகங்கள் மூலம் அனுப்புவது தண்டனைக்குரிய குற்றம் என போலீசார் பத்திரிகையாளரை கூட்டி சொல்லி உள்ளனர் (Sending indecent images of a child via internet is a criminal offence). ஆண்... நான் கேட்க்கவில்லை... அவோ தான்... தன் பாட்டுக்கு அனுப்பினவோ என்று சொல்லி தப்பி விடுவார். பெண் பிள்ளைகளின் படங்களைக் கேட்பது ஆண் பிள்ளைகளின் passion ஆக உள்ளது. ஆனால் சட்டம், யார் அனுப்பினார்களோ அவர்களைத்தான் தண்டிக்கும். பெண் 17 வயதுக்கு மேலானால் வழக்கும், தண்டனையும் நிச்சயம். 

இந்த செய்தி எத்தனை தமிழ் தாய் தகப்பனுக்கு தெரியும்? விஜய் டிவி யும், சூப்பர் சிங்கரும்.... வாழும் நாட்டு செய்தி சொல்லாது.

இது வெள்ளையர் குடும்பங்கள் தான் என்று யாரும் சொல்லலாம். 

ஆனால்... தமிழ் குடும்பங்களில் தாராளமாக நடக்கின்றன. மேலே லண்டனில் ஒரு தந்தை தூக்கில் தொங்கின்னார் என மேலோட்டமாக சொல்லி இருந்தேன். அவர் உண்மையில் மகளின் காதலுக்கு மறுப்பு தெரிவித்து இருந்தார். 

மகளின், ஆண் நண்பரோ, தனது மொபைலில் உள்ள படங்களைக் காட்டி.... உங்கள் மகள் அனுப்பியது.... நாம் அந்தளவு தூரம் காதலில் உள்ளோம் என சொல்ல..... மானம் போய்விட்டதாக கருதி...தந்தை அந்த முடிவினை எடுத்திருந்தார்.

இதெல்லாம் ஆபாசம், இங்கே பதிக்கிறீர்களே என்றால்... நாம் படிப்பறிவில்லாத இவர்கள் போன்ற தந்தைக்கோ, தாய்க்கோ இங்குள்ள நிலைமைகளை புரிய வைப்பது எப்படி? 

என்னைப் பொறுத்த வரை சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் தெரிந்த குடும்பங்களுக்கு இந்த விபரங்களை சொல்லி, பெண் பிள்ளைகளை கவனமாக இருக்குமாறு சொல்லுங்கள் என உதவுகிறேன்.

இந்த பெண் சாலோட் சர்ச், வேல்ஸ் நாட்டு அழகிய பாடகி...17 வயது இளம் பெண்ணாக இருக்கும் போது... தனது அப்போதைய ரகர் வீரரான, காதலனுக்கு... முன்னழகு படத்தினை அனுப்பி இருந்தார்... அது காதலன் தொலைபேசியில் இருந்து... (திருடப்பட்டதாக சொல்லப் பட்டது) உலகம் முழுக்க பரவ.... அம்மணி... அப்செட் ஆக இருந்தார். பாடுவதை விட்டார். அந்த காதலனையும் உதறினார்.

நல்ல வேளையாக அந்த நேரத்தில் இந்த சட்டம் இல்லாததால் 17 வயது இளம் பெண் தப்பித்தார்.

Image result for charlotte church

ஆகவே... இந்த பத்தாம் பசலி தனமான கருதியலை விடுத்து... நிதர்சனத்துக்கு வரவேண்டும் நமது சமூகம் என்பதே நோக்கம்...

ஐயையோ... இதுகள் ஆபாசம்... என் காதுகளில் விழக்கூடாது... கண்ணில் படக் கூடாது என்று இருந்தால்... பிள்ளைகள் வளர்க்கும் போது... ஒரு நாள் போலீசார் கதவினை தட்டக் கூடும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கோல்ட் டிக்கெர் பிராங்க் என்பது... ஒருவர் வசதி இல்லாதவர் என்று நிராகரிப்பதும்.... வசதியானவர் என்று தெரிந்ததும்... ஒட்டிக் கொள்ள முனைவது...

இங்கே செவிடராக, குருடராக, நடக்க முடியாதவராக ஒருவர் நடிக்கிறார். வெவ்வேறு பெண்களும் நிராகரிக்கின்றனர்... ஒவ்வொரு  முறையும் அவர் பணக்காரர் என தெரிய வர ஒட்டிக் கொள்ள முனைகின்றனர். அவிந்து போகின்றனர்.

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, Nathamuni said:

உங்கள் கருத்துக்கு நன்றி. 

எய்தவர்கள் இருக்க அம்பை நோவது போல இருக்கிறது இந்த கருத்து. 

யாழில் அல்ல, ஜரோப்பாவில் C4 TV, தென் அமெரிக்காவில் Brazil TV போன்றவற்றில் உள்ளனர் என்பதே சரி.

இருப்பினும் உங்கள் பதிவு இந்த திரியின் நோக்கம் குறித்த எனது பதிலை தர, நான் காத்திருந்த, சந்தர்ப்பத்தினை அளித்துள்ளது. 

இந்த திரியின் நோக்கம், நாம் வாழும் நாடுகளில், நம்மை சுற்றி நடப்பதை தெரிந்து வாழ்கிறோமா, அல்லது கண்ணை மூடிக் கொண்டு, உலகு இருட்டு என நினைக்கும் பூணை போல வாழ்கிறோமா என அறிவது தான்.

முக்கியமாக பிள்ளைகள், அதுவும் பெண் பிள்ளைகள் வளர்ப்பவர்கள் இந்த பூணை போல வாழ நிணைத்தால் பல அதிர்சிக்களை தவிர்க்க முடியாது போகும்.

பூட்டிய அறையில், பிள்ளை படிக்குது என்று பெற்றோர் இருக்க, கைத்தொலைபேசி ஊடாக, வெளியுலக தொடர்பில் பிள்ளை இருக்கும். பெத்தவர்களுக்கு தெரியாத, புரியாத, Instagram, Snap-chat என அவர்களது தொடர்பு உள்ளது.

இந்த வகை வலைத் தொடர்பு, ஒரு கொலையில் முடிந்ததை நாம் பார்த்தோம். அந்த தாய் தந்தையர் இன்னும் அதிர்வில் இருந்து மீளவில்லை.

இந்த இணைய வழி தொடர்பு பெரும் நிணைக்கவே முடியாத பெரும் சிக்கல்களை தருவதுடன், ஆண் நண்பரின் தொடர் வற்புறுத்துதலில், சில extremely intimate, படங்கள் அந்த நண்பர் பார்வைக்கு மட்டும் என இன்டர்நெட் ஊடக போய்... பின்னர் இருவரும் பிரிந்ததும், இணைய வெளியில் பகிரப் படுகின்றன.

இந்த வகையில் மான்செஸ்டர் நகரில் ஒரு பெண் பிள்ளையை போலீசார் கைது செய்து எச்சரித்து அனுப்பி உள்ளனர். அதாவது ஒரு extremely intimate படத்தினை முதலில் அனுப்பி சட்ட மீறலில் அவர் ஈடுபடடார் என போலீசார் வீட்டுக்கு வந்தனர். 

படமும் இணையத்தில், போலீசாரும் பின்னால்... அந்த தாய், தந்தைக்கு எப்படி இருந்திருக்கும்?

இவ்வளவுக்கும், பையனின் தாய் தந்தையரே போலீசுக்கு போய் இருந்தனர். தமது மகன் extremely intimate image கைத்தொலைபேசியில் வைத்துருந்தார் என எப்போதாவது கைதாக கூடாது என, முன் எச்சரிக்கையாக வந்து இருந்தனர். போலீசார் விசாரித்ததில், பெண் நண்பி தான் அனுப்பி இருக்கிறார். ஆண் நண்பர் வற்புறுத்துதலில் தான் என சட்டத்தினை நம்ப வைக்க முடியாது என்ற வகையில் அந்த 15 வயது சிறுமி எச்சரிக்கை செய்யப்பட்டார்.

அது மட்டுமல்ல, பெண்பிள்ளைகள் இப்படியான படங்களை சமூக வலை ஊடகங்கள் மூலம் அனுப்புவது தண்டனைக்குரிய குற்றம் என போலீசார் பத்திரிகையாளரை கூட்டி சொல்லி உள்ளனர் (Sending indecent images of a child via internet is a criminal offence). ஆண்... நான் கேட்க்கவில்லை... அவோ தான்... தன் பாட்டுக்கு அனுப்பினவோ என்று சொல்லி தப்பி விடுவார். பெண் பிள்ளைகளின் படங்களைக் கேட்பது ஆண் பிள்ளைகளின் passion ஆக உள்ளது. ஆனால் சட்டம், யார் அனுப்பினார்களோ அவர்களைத்தான் தண்டிக்கும். பெண் 17 வயதுக்கு மேலானால் வழக்கும், தண்டனையும் நிச்சயம். 

இந்த செய்தி எத்தனை தமிழ் தாய் தகப்பனுக்கு தெரியும்? விஜய் டிவி யும், சூப்பர் சிங்கரும்.... வாழும் நாட்டு செய்தி சொல்லாது.

இது வெள்ளையர் குடும்பங்கள் தான் என்று யாரும் சொல்லலாம். 

ஆனால்... தமிழ் குடும்பங்களில் தாராளமாக நடக்கின்றன. மேலே லண்டனில் ஒரு தந்தை தூக்கில் தொங்கின்னார் என மேலோட்டமாக சொல்லி இருந்தேன். அவர் உண்மையில் மகளின் காதலுக்கு மறுப்பு தெரிவித்து இருந்தார். 

மகளின், ஆண் நண்பரோ, தனது மொபைலில் உள்ள படங்களைக் காட்டி.... உங்கள் மகள் அனுப்பியது.... நாம் அந்தளவு தூரம் காதலில் உள்ளோம் என சொல்ல..... மானம் போய்விட்டதாக கருதி...தந்தை அந்த முடிவினை எடுத்திருந்தார்.

இதெல்லாம் ஆபாசம், இங்கே பதிக்கிறீர்களே என்றால்... நாம் படிப்பறிவில்லாத இவர்கள் போன்ற தந்தைக்கோ, தாய்க்கோ இங்குள்ள நிலைமைகளை புரிய வைப்பது எப்படி? 

என்னைப் பொறுத்த வரை சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் தெரிந்த குடும்பங்களுக்கு இந்த விபரங்களை சொல்லி, பெண் பிள்ளைகளை கவனமாக இருக்குமாறு சொல்லுங்கள் என உதவுகிறேன்.

இந்த பெண் சாலோட் சர்ச், வேல்ஸ் நாட்டு அழகிய பாடகி...17 வயது இளம் பெண்ணாக இருக்கும் போது... தனது அப்போதைய ரகர் வீரரான, காதலனுக்கு... முன்னழகு படத்தினை அனுப்பி இருந்தார்... அது காதலன் தொலைபேசியில் இருந்து... (திருடப்பட்டதாக சொல்லப் பட்டது) உலகம் முழுக்க பரவ.... அம்மணி... அப்செட் ஆக இருந்தார். பாடுவதை விட்டார். அந்த காதலனையும் உதறினார்.

நல்ல வேளையாக அந்த நேரத்தில் இந்த சட்டம் இல்லாததால் 17 வயது இளம் பெண் தப்பித்தார்.

Image result for charlotte church

ஆகவே... இந்த பத்தாம் பசலி தனமான கருதியலை விடுத்து... நிதர்சனத்துக்கு வரவேண்டும் நமது சமூகம் என்பதே நோக்கம்...

ஐயையோ... இதுகள் ஆபாசம்... என் காதுகளில் விழக்கூடாது... கண்ணில் படக் கூடாது என்று இருந்தால்... பிள்ளைகள் வளர்க்கும் போது... ஒரு நாள் போலீசார் கதவினை தட்டக் கூடும். 

 

நீங்கள் சொன்ன கருத்து நல்ல கருத்து நாதமுனி ஆனால் இந்தத் திரிக்கு எவ்வாறு பொருந்தும் எனது தெரியவில்லை

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இலங்கை இராணுவம் பலவீனமாக்கப்பட்டு, இலங்கையரசு செயலிழந்துபோவதை இந்தியா ஒருபோதும் அனுமதிக்காது - போராளித் தலைவர்களிடம் விளக்கிய ரோ அதிகாரி    இந்தியாவின் இலங்கைக்கு ஆதரவான நிலைப்பாடு போராளித் தலைவர்களைச் சினங்கொள்ள வைத்திருந்தது. இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே ஏற்பட்டிருந்த இந்த இணக்கப்பாடு இலங்கையைப் பொறுத்தவரையில் ஒரு வெற்றியென்று போராளிகள் கருதினர்.  ஊடகங்களுடன் பேசிய பாலசிங்கம், "நாம் யுத்த நிறுத்தத்திற்கு இணங்கவேண்டுமென்றால், இலங்கை அரசாங்கம் நாம் முன்வைக்கும் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ளவேண்டும். வடக்கு கிழக்கு மாகாணங்களில் செயற்பட்டுவரும் தமது இராணுவத்தினரை அவர்களது முகாம்களுக்குள் முடக்க வேண்டும். எமது பிரதேசங்களில் சில பகுதிகளில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் சுதந்திரமான மக்கள் நடமாட்டத்திற்கான தடையினை அவர்கள் நீக்க வேண்டும். தடைசெய்யப்பட்ட பிரதேசங்கள் என்று அவர்களால் அறிவிக்கப்பட்ட பகுதிகளை விடுவிப்பதோடு, சகட்டுமேனிக் கைதுகளையும் அவர்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும்" என்று கோரிக்கை விடுத்தார்.  தொடர்ந்து பேசிய பாலசிங்கம், தென்பகுதி எதிர்க்கட்சிகளினதும், பெளத்த பிக்குகளினதும் அனுமதியுடன் உருவாக்கப்பட்ட அரசியல்த் தீர்வினையே அரசாங்கம் பேச்சுவார்த்தை மேசையில் முன்வைக்க வேண்டும் என்றும் கூறினார். பிரபாகரனுடன் அன்டன் மற்றும் அடேல் பாலசிங்கம் இலங்கையரசாங்கம் தனது இராணுவத்தினருக்கான கால அவகாசத்தை வழங்கவே பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதாகக் கூறுகின்றது என்பதை ஈழத் தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்கள் உணர்ந்துகொண்டுள்ளார்கள் என்றும் பாலசிங்கம் கூறினார். "சிங்கள மக்களைப் பாதுகாக்கத் தவறியிருக்கும் ஜெயவர்த்தன அரசின் கையாலாகாத் தனத்தை பார்க்கத் தவறியிருக்கும் சிங்கள மக்கள் ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள். இச்சந்தர்ப்பத்தைப் பாவித்து தனது பதவியைப் பலப்படுத்திக்கொள்ளவும், தனது இராணுவத்தைப் பலப்படுத்திக்கொள்ளவும் ஜெயார் முயல்கிறார். இது ஒரு பொறி" என்றும் அவர் கூறினார். தமிழீழ விடுதலைப் போராளிகள் கொண்டிருந்த நிலைப்பாடு சரியென்பதை எதிர்க்கட்சித் தலைவியாகவிருந்த சிறிமாவின் கூற்றும் உறுதிப்படுத்தியிருந்தது. சிங்கள பெளத்தர்களின் புனித நகரான அநுராதபுரத்தையும், திருகோணமலையில் வசிக்கும் சிங்களவர்களையும் பாதுகாக்கத் தவறியமைக்காக அரசாங்கத்தை சிறிமா கடுமையாக விமர்சித்திருந்தார். அரசியல் தீர்விற்கான ஆதரவினை தனது கட்சி வழங்கும், ஆனால் அவர்கள் கேட்பவை எல்லாவற்றையும் வழங்க நாம் அனுமதிக்கமாட்டோம் என்றும் அவர் கூறினார். சிங்கள மக்களிடையே ஒருமித்த கருத்துருவாக்கத்தை ஏற்படுத்துவதற்குப் பதிலாக, சிங்களவரிடையே மேலும் பிளவினை உருவாக்க நினைத்த அவர், சிறிமாவின் சிவில் உரிமைகளை இரத்துச் செய்ததுடன், பாராளுமன்ற நடவடிக்கைகளிலிருந்தும் அவரை தடைசெய்தார். ஜெயாரின் இந்த நடவடிக்கைகளால் சிறிமா சிங்கள‌ தீவிரவாத பெளத்த பிக்குகளை நோக்கித் தள்ளப்பட்டார். சிறிமாவை தீவிரவாத சிங்கள பெளத்தர்களை நோக்கித் தள்ளி, அரசிற்கெதிரான நிலைப்பாட்டினை எடுக்கவைத்து, உள்நாட்டில் சமாதானப் பேச்சுக்களுக்கு எதிரான சிங்களவர்களினதும், பெளாத்த மகாசங்கத்தினதும் எதிர்ப்பு தீவிரமடைந்து வருவதாகக் கூறி,  ரஜீவ் காந்தி கேட்டுக்கொண்ட மாகாண சபை அலகை தன்னால் தரமுடியாது என்றும், மாவட்ட சபையே தன்னால் வழங்க இயலுமான அதிகப‌ட்ச  அதிகார அலகு என்றும் இந்தியாவிற்கும், சர்வதேசத்திற்கும் ஜெயார் அறிவித்தார்.  சிங்களக் கட்சிகளில் எது ஆட்சியில் இருந்தாலும்,  தமிழர்களுக்கான தீர்வென்று வரும்போது, ஆளும்கட்சி கொண்டுவருவதை எதிர்க்கட்சி எதிர்ப்பதென்பது, தமிழர்களுக்கான தீர்வினை வழங்குவதைத் தவிர்க்கும் தந்திரம் என்பதைத் தமிழ் மக்கள் 50 களிலிருந்தே கண்டுவருகின்றனர்.அதனாலேயே, சிங்கள மக்களின் ஆதரவு அரசியல்த் தீர்வு விடயத்தில் நிச்சயம் இருக்கவேண்டும் என்பதனை ஈழத்தேசிய விடுதலை முன்னணியினர் ஒரு நிபந்தனையாக முன்வைத்தனர். சிங்களத் தலைவர்களின் தந்திரத்தை நன்கு அறிந்து வைத்திருந்த பிரபாகரன், சிங்கள மக்களின் ஆதரவின்றி கொண்டுவரப்படும் எந்தத் தீர்வும் இறுதியில் தூக்கியெறியப்பட்டுவிடும் என்பதால், சிங்களத் தலைவர்களின் தந்திரத்தினை முடக்க, சிங்கள மக்களின் ஆதரவு நிச்சயம் தேவை என்பதை இந்திய அதிகாரிகளிடம் வலியுறுத்தினார்.    ஈழத் தேசிய விடுதலை முன்னணியினரின் கூட்டத்தின் பின்னரே பாலசிங்கம் பத்திரிக்கையாளர்களிடம் பேசியிருந்தார். தில்லியில் ரஜீவிற்கும், ஜெயாரிற்கும் இடையே செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தம் குறித்துப் பேசுவதற்காக ஆனி 4 ஆம் திகதி ஈழத்தேசிய விடுதலை முன்னணியினர் சந்திப்பொன்றினை நடத்தியிருந்தனர். அங்கு பேசிய பிரபாகரன், ஜெயவர்த்தன விரித்த வலையில் ரஜீவ் காந்தியும், பண்டாரியும் முற்றாக வீழ்ந்துவிட்டனர் என்று கூறினார். "தமிழர்களின் சுதந்திர விடுதலைப் போராட்டத்தை அழித்துவிட கிழவன் (ஜெயவர்த்தன)  உறுதிபூண்டிருக்கிறான். இந்தியாவிற்கும் எமக்கும் இடையே ஆப்பொன்றினைச் சொருகுவதன் மூலம் இதனைச் செய்யலாம் என்று அவன் எண்ணுகிறான். நாம் இதனை அனுமதிக்கக் கூடாது" என்று கூறினார். ஜெயாரின் தந்திரத்தை உடைக்க போராளிகளும் தமது பாணியில் ஒரு திட்டத்தினை வகுத்தனர். அதன்படி இந்திய அரசியல்வாதிகளிடமிருந்து, இந்திய உளவுத்துறை அதிகாரிகளிடமிருந்தும் மேலதிக தகவல்களும், அறிவித்தல்களும் வரும்வரை காத்திருப்பது என்று முடிவெடுத்தனர். யுத்த நிறுத்தம் தொடர்பாக தமக்கிடையே ஒருமித்த இணக்கப்பாடு ஒன்றினை ஏற்படுத்தி அதன்படி அனைத்து அமைப்புக்களும் நடப்பதென்று அவர்கள் தீர்மானித்தனர். ஆனி 18 ஆம் திகதி, தனது அமெரிக்க, ரஸ்ஸிய விஜயத்தினை வெற்றிகரமாக  முடித்துக்கொண்டு நாடு திரும்பவிருக்கும் ரஜீவ் காந்தியின் தலையில் இலங்கையில் நடக்கவிருக்கும் யுத்தநிறுத்தம் தொடர்பான விடயங்களைச் சுமத்துவது குறித்து பண்டாரியும், ஏனைய அதிகாரிகளும் தயக்கம் காட்டினர். மேலும், அதற்கு முன்னர் யுத்தநிறுத்தம் தொடர்பான தனது நிலைப்பாட்டினை மேலும் பலப்படுத்த பண்டாரியும் விரும்பியிருந்தார்.  தமிழ்ப் போராளிகளுடன் இக்காலத்தில் தொடர்புகொண்டிருந்த ரோ அதிகாரியான சந்திரசேகரன், இந்தியாவின் திட்டத்திற்கு அமைய போராளிகளை பணியவைப்பதில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார். ஆனி 5 ஆம் திகதி, சந்திரசேகரன் போராளிகளின் தலைவர்களை சென்னையில் சந்தித்தார். பிரபாகரன், சிறீசபாரட்ணம், பாலகுமார், பத்மநாபா ஆகியோருடன் இன்னும் சில போராளிகளும் இதில் பங்குபற்றினர். சந்திரசேகரனைச் சந்தித்த போராளித் தலைவர்களின் அமைப்பின் தலைமைப்பொறுப்பை பிரபாகரனே எடுத்திருந்தார். யுத்த நிறுத்தம் மூலம் தமிழ்ப் போராளிகளுக்குப் பாதகமான நிலைமையே ஏற்படும் என்று அவர் கூறினார். ஏனெனில், இராணுவத்தினரை அவர்களது முகாம்களுக்குள் முடக்கும் நடவடிக்கைகளில் போராளிகள் தீவிரமாக அப்போது ஈடுபட்டிருந்தார்கள். இந்த முயற்சியில் வெற்றிபெறும் நிலையினை அவர்கள் எட்டவிருந்தார்கள். ஜெயவர்த்தனவும், இராணுவ தளபதிகளும் இதனை நன்கு அறிந்தே வைத்திருந்தனர். சுமார் ஒரு வாரகாலத்திற்கு முன்னதாக, வடமாகாண இராணுவத் தளபதி ஹமில்ட்டன் வணசிங்க வெளிநாட்டுச் செய்தியாளர் ஒருவருக்கு வழங்கிய செவ்வியயினை மேற்கோள் காட்டிப் பேசினார் பிரபாகரன்.  ஜெயார் காலத்து போர்க்குற்றவாளி  - ஜெனரல் ஹமில்ட்டன் வணசிங்க வணசிங்க தனது செவ்வியில், "பயங்கரவாதிகள் முன்னரை விடவும் துணிவாகப் போராடுகிறார்கள். எமக்கெதிரான தாக்குதல்களின்போது பல அமைப்புக்கள் ஒன்றாக இணைந்து வந்து மோதுகிறார்கள். வீதிகளில் கண்ணிகளைப் புதைத்து வைக்கிறார்கள். வீதிகள் ஒவ்வொன்றையும் சல்லடை போட்டுத் தேடியபின்னரே இராணுவத்தினரால் நடமாட முடிகிறது. அவர்களைச் சமாளிப்பதே கடுமையாக இப்போது இருக்கிறது" என்று கூறியிருந்தார்.  வணசிங்கவின் கருத்தினை அடிப்படையாக வைத்தே பிரபாகரன் பேசியிருந்தார். "எம்மால் எமது இலக்குகளை விரைவில் அடைந்துகொள்ள முடியும். நாம் அதனைச் செய்யுமிடத்து, இலங்கையரசின் நிலை பலவீனமாகிவிடும். அதனைத் தடுக்கவே யுத்தநிறுத்ததினை ஜெயவர்த்தன கோருகிறார்" என்று அவர் வாதிட்டார். "யுத்த நிறுத்தத்தினைப் பயன்படுத்தி இராணுவம் தம்மை மீள் ஒருங்கிணைக்கவும், ஆயுதங்களைப் பெருக்கிக் கொள்ளவும், தமது போரிடும் திறணைப் புதுப்பித்துக் கொள்ளவும் முயலப்போகிறது. மேலும், யுத்த நிறுத்தம் போராளிகளிடையே போரிடும் திறணைக் குலைத்துவிடும். இலங்கை இராணுவத்திற்கெதிரான செயற்பாடுகளில் போராளிகளின் கை ஓங்கியிருக்கிறது. இந்த நிலையில் அவர்களை போரிடுவதை நிறுத்துங்கள் என்று கேட்பதன் மூலம் அவர்களை விரக்தியடைய வைக்கப்போகிறோம்" என்றும் அவர் கூறினார். ஆனால், வழமையாக தமிழ்ப் போராளிகளின் கருத்துக்களைச் செவிமடுத்துவரும் சந்திரசேகரன், அன்றோ, பிரபாகரனின் வாதங்களை கேட்கும் மனோநிலையில் இருக்கவில்லை என்று போரும் சமாதானமும் எனும் தனது புத்தகத்தில் பாலசிங்கம் எழுதுகிறார். யுத்த நிறுத்தத்தினை எப்படியாவது நடைமுறைப்படுத்தவேண்டும் என்று விடாப்பிடியாகப் பேசிய சந்திரசேகரன், போராளிகளை யுத்தநிறுத்தத்தம் ஒன்றிற்குள் கொண்டுவரும் இந்தியாவின் முயற்சியின் பின்னால் இருக்கும் காரணத்தையும் விளக்கினார். இதுகுறித்து பாலசிங்கம் இவ்வாறு கூறுகிறார்,  "இலங்கை இராணுவத்தினர் மீது மிகக்கடுமையான இழப்புக்களை நீங்கள் ஏற்படுத்தி விட்டிருக்கிறீர்கள். இதற்குமேலும் நீங்கள் இராணுவத்தின் மீது தாக்குதல் நடத்தினால், அது இலங்கையரசைப் பலவீனப்படுத்திவிடும். இலங்கையரசு பலவீனப்பட்டு, செயலிழப்பதை இந்தியா ஒருபோது அனுமதிக்காது" என்று சந்திரசேகரன் போராளிகளின் தலைவர்களிடம் கூறியிருக்கிறார். (2000 இல் ஆனையிறவு கைப்பற்றப்பட்டு, புலிகள் யாழ்நகர் நோக்கி முன்னேறும்போது இந்தியா தலையிட்டு அம்முன்னேற்றத்தைத் தடுத்து நிறுத்தியதாகக் கூறப்பட்டது. மேலும், பலாலியில் இருக்கும் இராணுவத்தினரைப் பாதுகாக்கவும், தேவைப்படின் அவர்களைப் பத்திரமாக கொழும்பிற்கு அழைத்துவரவும் அது முன்வந்திருந்தது. அதுமட்டுமல்லாமல், இலங்கைக் கடற்படைக் கப்பல்கள் தமது கடற்பாதையினை இந்தியக் கடற்பகுதியூடாகவே நடத்தியும் வந்தனர் என்பதும் குறிப்பிடத் தக்கது). அன்றிருந்த இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையென்பது, ஜெயவர்த்தனவைப் பலவீனப்படுத்தி தனது விருப்பத்திற்கேற்ப ஒழுகப் பண்ணுவதேயன்றி, அரசை செயலிழக்கப்பண்ணுவதல்ல. இலங்கையரசு செயலிழந்துபோனால், இந்தியாவின் நலன்களுக்கெதிரான சக்திகள் இலங்கைக்குள் நுழைந்துவிடும், அது இந்தியாவின் நலன்களையும், பாதுகாப்பையும் வெகுவாகப் பாதிக்கும் என்று இந்திய அதிகாரிகள் தொடர்ச்சியாகக் கூறி வந்தார்கள். தமிழரின் விடுதலைப் போராட்டத்தின்மீது இந்தியா கட்டுப்பாடுகளை விதிப்பதை விளக்கிய சந்திரசேகரன், போராளித் தலைவர்கள் இதன்போது அதிருப்தியடைவதையும் கண்டுகொண்டார். ஆகவே , சூழ்நிலையினைத் தணிக்கும் விதமாக ஒரு விடயத்தைக் கூறினார். அதுதான், ரஜீவும், பண்டாரியும் ஜெயவர்த்தன மீது  கடுமையாக அழுத்தம் கொடுத்து, அவர் போராளித் தலைவர்களுடன் நேரடியாகப் பேசுவதற்கு இணக்கவைத்திருக்கிறார்கள் என்று கூறினார்.  அதாவது, தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்கிற தகைமையினை பேச்சுவார்த்தையில் இந்தியா போராளிகளுக்குப் பெற்றுக்கொடுத்திருக்கிறது என்று சந்திரசேகரன் கூறினார். "உங்களுக்கான அங்கீகாரத்தை நாம் பெற்றுத்தந்திருக்கிறோம் " என்று அவர்களைப் பார்த்து சந்திரசேகரன் கூறினார்.  யுத்தநிறுத்தத்திற்கு எப்படியாவது சம்மதியுங்கள் என்று போராளிகளைத் தலைவர்களுடன் கெஞ்சிய சந்திரசேகரன், பேச்சுவார்த்தைகளில் ஏற்றுக்கொள்ளப்படும் விடயங்களை ஜெயவர்த்தன நிறைவேற்ற மறுக்கும் தறுவாயில், இந்தியா நிச்சயமாகப் போராளிகளுக்கு மீண்டும் உதவும் என்றும் உறுதியளித்தார்.
    • கந்தையர் எப்பவும் முதல்வர் பதவியிலைதான் கண்ணும் கருத்துமாய் திரியுறார்....ஏதாவது புதிசாய் யோசியுங்கப்பா 🤣
    • இந்தக் காலத்திலை கலியாணம் பேசிச்செய்யிறதை விட பேஸ்புக்கிலை ஆரையாவது பாத்து புடிக்கிறது சுகம் 😂
    • இப்போது உள்ள‌ சூழ‌லில் ஈழ‌ உண‌ர்வு ம‌ன‌சில் இருக்க‌னும் அதை ஊரில் வெளிக் காட்டினால் அடுத்த‌ க‌ன‌மே ஆப்பு வைப்பாங்க‌ள்   ஊரில் ந‌ட‌க்கும் மாவீர‌ நாளுக்கு இன்னும் அதிக‌ ம‌க்க‌ள் க‌ல‌ந்து கொள்ளுபின‌ம் ஆனால் பின்விலைவுக‌ளை நினைச்சு வீட்டிலையே மாவீர‌ர் ப‌ட‌த்துக்கு பூ வைச்சு வில‌க்கு ஏற்றி விட்டு ம‌ன‌சில் இருக்கும் க‌வ‌லைக‌ளை க‌ண்ணீரால் போக்கி விட்டு அந்த‌ நாள் அதோடையே போய் விடும்   பெத்த‌ தாய் மாருக்கு தான் பிள்ளைக‌ளின் பாச‌ம் நேச‌ம் அன்பு ம‌ழ‌லையில் இருந்து வ‌ள‌ந்த‌ நினைவுக‌ள் தாய் மாரின் ம‌ன‌சை போட்டு வாட்டி எடுக்கும் என்ன‌ செய்வ‌து 2009க‌ளில் இழ‌க்க‌ கூடாத‌ எல்லாத்தையும் இழ‌ந்து விட்டோம்😞..............................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.