Jump to content

ஷிராந்தியின் வாகனத்திலே தாஜுதீன் கடத்தப்பட்டார் ; சி.ஐ.டி.யினர். பரபரப்பு தகவல்


Recommended Posts

ஷிராந்தியின் வாகனத்திலே தாஜுதீன் கடத்தப்பட்டார் ; சி.ஐ.டி.யினர். பரபரப்பு தகவல்

 

 
 

(எம்.எப்.எம்.பஸீர்)

பிர­பல றக்பி வீரர் வஸீம் தாஜுதீன்,  மஹிந்த ராஜ­ப­க்ஷவின் பாரியார் ஷிராந்தி ராஜ­ப­க்ஷவின் டிபெண்டர் வண்­டியில் கடத்­தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார் என சி.ஐ.டி.க்கு கிடைத்­துள்ள தகவலை அடிப்படையாக கொண்டு விசா­ர­ணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு மேலதிக நீதிவானுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

wasem.jpg

பிரதி சொலி­சிட்டர் ஜெனரால் டிலான் ரத்­னா­யக்க,  வசீம் தாஜுதீன் விவ­கா­ரத்தை விசா­ரணை செய்யும் சி.ஐ.டி.யின்  மனிதப் படு­கொலை குறித்த விசா­ரணைப் பிரிவின் உதவி பொலிஸ் அத்­தி­யட்சர் இந்­திக லொக்­கு­ஹெட்டி, பிர­தான பொலிஸ் பரி­சோ­தகர் ரஞ்ஜித் முன­சிங்க, சார்ஜன் ரத்னப் பிரிய ஆகி­யோ­ருடன் மேல­திக விசா­ரணை அறிக்­கையை மன்றில் தாக்கல் செய்து இந்த விட­யத்தை நீதி­வா­னுக்கு அறி­வித்தார்.

அத்­துடன் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ உள்­ளிட்ட அவ­ரது குடும்ப உறுப்­பி­னர்­க­ளுக்கு பாது­காப்­ப­ளித்த  கடற்­படை வீரர்கள் தொடர்­பி­லான விப­ரங்­களை வழங்க கடற்­படை தள­பதி  மறுப்­பா­ராயின், அவ­ருக்கு எதி­ராக தண்­டனை சட்டக் கோவையின்  173 மற்றும் 174 ஆவது அத்­தி­யா­யங்­களின் கீழ் செயற்­பட்டு நட­வ­டிக்கை எடுக்­கு­மாறும் இதன்­போது நீதிவான் இசுரு நெத்தி குமார சட்ட மா அதிபர் திணைக்­க­ளத்­துக்கும், சி.ஐ.டி.க்கும் ஆலோ­சனை வழங்­கினார். 

மேலும் இந்த கடற்­படை வீரர்கள் தொடர்பில் தக­வல்கள் மறைக்­கப்­ப­டு­வது தொடர்பில் அத்­த­க­வல்­க­ளுக்கு பொறுப்­பான உயர் கடற்­படை அதி­காரி ஒரு­வரை விசா­ர­ணைக்கு அழைத்­துள்­ள­தா­கவும் அவ­ரிடம் எதிர்­வரும் 25 ஆம் திகதி விசா­ர­ணை­களை முன்­னெ­டுக்­க­வுள்­ள­தா­கவும்  பிரதி சொலி­சிட்டர் ஜெனரால் டிலான் ரத்­னா­யக்க நீதி­வா­னுக்கு அறி­வித்தார்.

இன்றைய தினம் வஸீம் தாஜுதீன்  கொலை வழக்கு விசா­ர­ணைக்கு  வந்தபோது, இந்த விவ­கா­ரத்தில் கைதாகி பிணையில் உள்ள  நார­ஹேன்­பிட்டி பொலிஸ் நிலைய முன்னாள் குற்­ற­வியல் பொறுப்­ப­தி­காரி பொலிஸ் பரி­சோ­தகர் சுமித் சம்­பிக்க பெரேரா ,  முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அனுர சேன­நா­யக்க , முன்னாள் கொழும்பு பிர­தான சட்ட வைத்­திய அதி­காரி ஆனந்த சம­ர­சே­கர ஆகியோர் மன்றில் ஆஜ­ரா­கி­யி­ருந்­தனர்.

இதன்போது வஸீம் தாஜுதீன் படுகொலை விவ­கார விசா­ர­ணைகள் மிக நீண்­ட­கா­ல­மாக பல்­வேறு கார­ணங்­க­ளுக்­காக இழுத்­த­டிக்­கப்­ப­டு­வ­தாக சுட்­டிக்­காட்­டிய நீதிவான், 

குறித்த விசா­ர­ணை­களை உட­ன­டி­யாக நிறைவு செய்­யு­மாறும், விசா­ர­ணைகள் தாம­த­ம­டை­வ­தற்­கான காரணம் மற்றும் தற்­போது கைது செய்­யப்­பட்டு பிணையில் உள்ள மூன்று சந்­தேக நபர்­க­ளுக்கும் எதி­ரான சாட்­சிகள் மற்றும் குற்­றச்­சாட்­டுக்கள் என்­ப­வற்றை உள்­ள­டக்கி விரி­வான அறிக்­கையை மன்றில் சமர்ப்­பிக்­கவும் உத்­த­ர­விட்­ட­துடன் வழக்கை எதிர்­வரும் நவம்பர் 29 ஆம் திக­திக்கு ஒத்தி வைத்தமை குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/article/40893

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அட போங்கப்பா..

மைத்திரி ஒருத்தரையும் தொட விடார்... வேஸ்ட்..

அதே நேரம்.... வேறு ஒரு வதந்தியும் பரவுகிறது...

இலங்கையின் அரசியல் சூழ் நிலை, பௌத்த மதவாதிகள் காரணங்களினால் உள்ளக விசாரணைகள் சாத்தியம் இல்லாததால்... சர்வதேச விசாரணையை வேறு வழியில் மறை முகமாக தூண்டுகிறாராம்..

Link to comment
Share on other sites

19 hours ago, நவீனன் said:

இதன்போது வஸீம் தாஜுதீன் படுகொலை விவ­கார விசா­ர­ணைகள் மிக நீண்­ட­கா­ல­மாக பல்­வேறு கார­ணங்­க­ளுக்­காக இழுத்­த­டிக்­கப்­ப­டு­வ­தாக சுட்­டிக்­காட்­டிய நீதிவான், 

சிங்கள-பௌத்த பயங்கரவாதிகளை காப்பற்றுவது தானே சிங்கள-பௌத்த அரச நீதித்துறையின் பிரதான குறிக்கோள்! இது கடந்த 7 தசாப்தங்களில் பலமுறை நிரூபிக்கப்பட்ட ஒருவிடயம். 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இல்லை ச‌கோ வீர‌ப்ப‌னே உள்ள‌தை ஒத்து கொண்டார் தன‌க்கு கிடைச்ச‌ காசை த‌ன் ஊர் ம‌க்க‌ளுக்கே கொடுத்து விட்டேன் ஏதோ 9ல‌ச்ச‌ம் அப்ப‌டியா தான் நான் பார்த்த‌ காணொளியில் என் காதுக்கு கேட்ட‌து..............அந்த‌ ம‌னுஷ‌ன் கோடி கோடியா கொள்ளை அடிக்க‌வும் இல்லை சிறு தொகை கிடைச்சா கூட‌ அவ‌ரின் சொந்த‌ ஊர் ம‌க்க‌ளுக்கு அது போய் சேருமாம்.................. என்று......................அண்ண‌ன் சீமான் சொன்ன‌து போல் வீர‌ப்ப‌ன் கொள்ளைக் கார‌ன் என்றால் ஜெய‌ல‌லிதாவும் க‌ருணாநிதியும் திருடாத‌ நேர்மையாள‌ர்க‌ளா என்று ஜெய‌ல‌லிதாவின் ஆட்சி கால‌த்திலே வெளிப்ப‌டையாய் பேசின‌வ‌ர் 2012 அல்ல‌து 2013 இந்த‌ கால‌ப் ப‌குதியில்.................. என‌க்கு பெரும் ம‌கிழ்ச்சி வீர‌ப்ப‌ன் ம‌க‌ள அண்ண‌ன் சீமான் வேட்பாள‌ரா.........................
    • விவசாயியின் குளிர்சாதனப் பெட்டி .......!   😁
    • முஸ்லிம்களை இனவாத பேச்சு பேசியதால் அவர்களின் அரசியல் தலைவர்களின் செல்வாக்கு வேலை செய்துள்ளது  நம்ம அரசியல் தலிவர்கள் ஆளையாள் காலை பிடித்து இழுத்து விட்டுக்கொண்டு இருகின்றனர் சுமத்திரன் எனும் பெருச்சாளி இருக்கும் மட்டும் எமக்குள் இருந்து கொண்டு சிங்கள இனவாதி ரணிலின் மகுடிக்கு சுமத்திரன் எனும் கருநாகம் ஆட்டம் போடுது . இப்படி இருக்கையில் சிங்களத்தில் இருந்த குரங்கு கூட தமிழர்களை பார்த்து இனவாதம் கக்கும் .
    • அப்ப வருசக் கணக்கா தமிழர்களை.. தமிழர் வழிபாட்டிடங்களை திட்டித் தீர்த்து ஆக்கிரமிக்கத் தூண்டியதற்கு ஏன் தண்டனை இல்லை..??! அதுக்கும் தண்டனை வழங்கினால்.. ஆள் ஆயுள் காலம் பூரா உள்ள தான்.  அதே நிலையில்.. விமல்.. வீரசேகர..கம்பன்பில.. போன்ற வில்லங்கங்களுக்கு எதிராக ஏன் இன்னும் சட்ட நடவடிக்கை இல்லை. தமிழர்களை.. இந்துக்களை (சைவர்களை) திட்டினால்.. சமாளிச்சுக் கொண்டு போவது எழுதாத சட்டமோ. 
    • இது தான் சொறீலங்கா கடற்படை ஆக்கிரமிப்பில் இருக்கும்.. காங்கேசந்துறை நோக்கிய கடற்கரை. அண்ணர் ஆலாபனையோடு சொன்னது.  இது தான் கடலட்டை வாடிகளோடு அமைந்த.. அழுகி நாறும் பண்ணைக் கடற்கரை நோக்கிய தோற்றம். குத்தியரின் சீன ஏற்றுமதி வருவாய். அண்ணர் இதனை பற்றி மூச்சும் விடேல்ல.. ஆனால் பண்ணைக் கடற்கரை காதல் காட்சிகளை மட்டும் வர்ணிச்சிட்டு போயிட்டார். இது தான் கொழும்பின் தாமரைத் தடாகம் இரவுக் காட்சி. அண்ணர் சொன்ன மாதிரி தடாகம் ஒளிந்தாலும் சுற்றயல் ஒளிரவில்லை. இன்னும் பல பகுதி காலு வீதியில் இரவில் வீதி விளக்குகள் எரிவதில்லை.  அதே நேரம் யாழ்ப்பாண நெடுந்தூர பயணிகள் பேரூந்து தரிப்பிடத்திற்கு அருகில் உள்ள புல்லுக் குளத்தின் இரவுக் காட்சி. சுற்றயல் எங்கும் ஒளிரோ ஒளிரெண்டு ஒளிருது. யாழ் மணிக்கூட்டுக் கோபுரமும் தான். அண்ணர் அதை பற்றி மூச்.  ஆக அவை அவை பார்க்கிற பார்வையில தான் இங்கு களத்தில் இருந்தான காட்சிகளுக்கு ஆலாபனைகள் வருகின்றன. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.