Jump to content

மீண்டும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் களமிறங்கத் தயாராகும் டில்ஷான்


Recommended Posts

மீண்டும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் களமிறங்கத் தயாராகும் டில்ஷான்

1846-1-696x464.jpg
 

இலங்கை அணி தற்போது சந்தித்துள்ள பின்னடைவை பார்க்கும் போது மீண்டும் சர்வதேசப் போட்டிகளில் விளையாடுவதற்கு ஆவலுடன் இருப்பதாக இலங்கை அணியின் முன்னாள் தலைவரும், நட்சத்திர ஆரம்பத் துடுப்பாட்ட வீரருமான திலகரத்ன டில்ஷான் தெரிவித்துள்ளார்.

அத்துடன், தன்னை நாட்டுக்கும், அணிக்கும் தேவை என்று நினைத்து இலங்கை கிரிக்கெட் நிறுவனம் மீண்டும் அழைப்பு விடுத்தால் இலங்கை அணியுடன் மீண்டும் இணைந்து கொள்ளத் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

 

ஐந்து தடவைகள் ஆசிய கிண்ணத்தை சுவீகரித்த இலங்கை அணிக்கு, இவ்வருட ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரில் முதல் சுற்றுடன் வெளியேறவேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டது.  

இறுதியாக, கடந்த 2016ஆம் ஆண்டு பங்களாதேஷில் நடைபெற்ற ஆசியக் கிண்ண போட்டித் தொடரிலும் ஐக்கிய அரபு இராச்சியத்துடனான போட்டியில் மாத்திரம் வெற்றி கொண்ட இலங்கை அணிக்கு முதல் சுற்றுடன் வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டது.

இது இவ்வாறிருக்க, மஹேல ஜயவர்தன, குமார் சங்கக்கார, ரஸல் ஆர்னல்ட், ரொஷான் மஹானாம உள்ளிட்ட பல முன்னாள் வீரர்கள் இலங்கை அணியின் தோல்வி குறித்து பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்ற நிலையில், திலகரத்ன டில்ஷான் இவ்வாறானதொரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

தனியார் ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் மேலும் தெரிவித்ததாவது, ”இலங்கை அணிக்கு என்னால் ஏதேனும் செய்ய வேண்டியது இருந்தால் அதை நான் நிச்சயம் செய்வேன். காரணம் உலகக் கிண்ணத் தொடருக்கு இன்னும் 10 மாதங்களே உள்ளன. அதற்குள் எமது குறைபாடுகளையெல்லாம் நிவர்த்தி செய்து கொள்ள வேண்டும்.

கிரிக்கெட் உலகில் சிறந்த களத்தடுப்பு, பந்துவீச்சு, துடுப்பாட்டம் என முன்னிலை அணியாக வலம்வந்த இலங்கை தற்போது மிகப் பெரிய பின்னடைவை சந்தித்துள்ளது. பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தான் போன்ற அணிகளுடன் தோவ்வியைத் தழுவி முதல் சுற்றுடன் ஆசிய கிண்ணத்திலிருந்து இலங்கை அணி வெளியேறியது உண்மையில் கவலையளிக்கிறது. ஆனால், தற்போதுள்ள வீரர்களை உரிய முறையில் வழிநடத்த வேண்டும். ஏனெனில் இவர்கள்தான் உலகக் கிண்ணப் போட்டிகளில் விளையாட இருப்பவர்கள்.

 

அதுமாத்திரமின்றி, எனக்கு மீண்டும் தேசிய அணியில் இணைந்து விளையாடுவதற்கு எந்த எண்ணமுமில்லை. தற்போது நான் தொழில்முறை கிரிக்கெட்டில் விளையாடி வருகின்றேன்.

ஆனாலும், நாட்டுக்கும் இலங்கை அணிக்கும் என்னுடைய சேவை மீண்டும் தேவைப்பட்டால் இலங்கை அணிக்காக மீண்டும் விளையாடுவதற்கு தயாராக உள்ளேன். உண்மையைச் சொல்லப் போனால் எனக்கு ஓய்வுபெறும் எண்ணம் இருக்கவில்லை. 2019 உலகக் கிண்ணப் போட்டிகள் வரை விளையாடுவதற்கு ஆவலுடன் இருந்தேன். ஏனெனில் அந்தக் காலப்பகுதியில் நான் விளையாடிய விதம், தொடர்ந்து போர்மில் இருந்து ஓட்டங்களைப் பெற்றுக்கொண்ட விதங்களுடன் தொடர்ந்து விளையாடவே இருந்தேன்.

ஆனாலும் அப்போது என்னை இலக்கு வைத்து ஒரு சில சம்பவங்கள் இடம்பெற்றன. அதுமாத்திரமின்றி, அப்போதைய தேர்வுக்குழுவினர் 2006ஆம் ஆண்டு நடைபெற்ற அவுஸ்திரேலிய அணிக்கெதிரான ஒரு நாள் தொடரில் விளையாட வேண்டாம் என கேட்டுக்கொண்டனர். புதுமுக வீரர்களுக்கு அணியில் வாய்ப்பு வழங்க வேண்டும் என தெரிவித்து என்னை அணியிலிருந்து நீக்குவதாகவும் அவர்கள் தெரிவித்து இருந்தனர். எனவே, இளம் வீரர்களுக்கு அணியில் வாய்ப்பு வழங்குவதற்காக நான் ஓய்வுபெற்றேன்” என அவர் தெரிவித்தார்.

”எனக்கு இப்போது அணிக்குள் வந்து பெரியளவில் எதையும் செய்ய முடியாது. ஆனால், ஏதாவது செய்ய முடியும் என்ற நம்பிக்கையும் என்னிடம் உள்ளது. குறைந்த பட்சம் எனது அனுபவத்தையாவது பகிர்ந்துகொள்ள முடியும் என நம்புகிறேன்” என்றார்.

 

கடந்த 2016ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் அரங்கிலிருந்து டில்ஷான் ஓய்வுபெறுவதற்கு முன் 330 ஒரு நாள் போட்டிகளில் 22 சதங்கள் உள்ளடங்கலாக 10,290 ஓட்டங்களைக் குவித்திருந்தார். ஒரு நாள் போட்டிகளில் 39.27 என்ற துடுப்பாட்ட சராசரியையும், 86.23 என்ற ஓட்ட வேகத்தையும் அவர் கொண்டிருந்தார்.  

அதுமாத்திரமின்றி, இரண்டு வருடங்களுக்கு முன் அவுஸ்திரேலிய அணிக்கெதிராக நடைபெற்ற ஒரு நாள் போட்டியுடன் சர்வதேச அரங்கிலிருந்து விடைபெற்றுச் சென்ற டில்ஷான், அதன்பிறகு பல்வேறு நாடுகளினால் ஏற்பாடு செய்யப்பட்ட டி-20 லீக் போட்டிகளிலும் விளையாடி வந்தார்.

அத்துடன், தற்போது நடைபெற்றுவருகின்ற வர்த்தக அணிகளுக்கிடையிலான ஒரு நாள் போட்டித் தொடரில் மாஸ் யுனிச்செல்லா அணியின் தலைவராகவும் அவர் செயற்பட்டு வருகின்றார்.

இதுதொடர்பில் டில்ஷான் மேலும் கருத்து வெளியிடுகையில், ”நான் மாஸ் யுனிச்செல்லா அணிக்காக விளையாடுவதால் தொடர்ந்து பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறேன். 2019 உலகக் கிண்ணம் தொடர்பிலான கனவை மறந்துவிட்டுதான் கிரிக்கெட் அரங்கிற்கு விடைகொடுத்தேன். ஆனால், அதற்கான ஏதாவது செய்தால் நன்றாக இருக்கும் என தற்போது உணர்கிறேன். சந்தர்ப்பமொன்று கிடைத்தால் நிச்சயம் அதை நான் செய்வேன்” என்றார்.

 

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்றாலும், உள்ளூர் போட்டிகளில் தொடர்ந்து விளையாடி வருகின்ற 41 வயதான டில்ஷானை மீண்டும் தேசிய அணிக்குள் இணைத்துக் கொள்வது என்பது எந்தளவு தூரத்துக்கு சாத்தியமானது என்பதை தேர்வுக் குழுவினர், பயிற்சியாளர்கள் தான் தீர்மானிக்க வேண்டும்.

ஆனாலும், 2015 உலகக் கிண்ணப் போட்டிகள் நிறைவுக்கு வந்து 3 வருடங்கள் கழிந்து அடுத்த உலகக் கிண்ணப் போட்டிகளுக்கு தயாராகிக் கொண்டிருக்கின்ற இந்த தருணத்தில் தொடர் தோல்விகள், பின்னடைவுகளை சந்தித்து வருகின்ற இலங்கை அணிக்கு டில்ஷான் போன்ற வீரர்களின் இவ்வாறான அறிவிப்புகள் நிச்சயம் பாராட்டப்பட வேண்டிய விடயமாகும். அத்துடன், அவர்களது கருத்துக்களை செவிமடுத்து அதற்குத் தேவையான நடவடிக்கைகளை விளையாட்டுத்துறை அமைச்சர் மற்றும் கிரிக்கெட் நிர்வாகிகள் மேற்கொள்வதில் எந்தவித தவறும் இல்லை என்பதுதான் கிரிக்கெட் விமர்சகர்களின் பொதுவான கருத்தாகும்.

இதேவேளை, சர்வதேச கிரிக்கெட் அரங்கில் இருந்து ஓய்வுபெற்ற பிறகு மீண்டும் தமது நாட்டிற்காக விளையாடிய பல முன்னாள் வீரர்களை கூறமுடியும். பாகிஸ்தானின் முன்னாள் வீரர் ஜாவித் மியன்டாட், தற்போதைய பிரதமர் இம்ரான் கான், சஹீட் அப்ரிடி, அவுஸ்திரேலியாவின் பொப் சிம்சன், மேற்கிந்திய தீவுகளில் கால் ஹுபர், ஜிம்பாப்வேயின் கிராண்ட் பிளவர், கென்யாவின் ஸ்டீவ் டிகோலோ மற்றும் இங்கிலாந்தின் கெவின் பீட்டர்சன் ஆகிய வீரர்களும் இவ்வாறு மீண்டும் சர்வதேசப் போட்டிகளில் விளையாடி இருந்தமை குறிப்பிடத்தக்கது.  

http://www.thepapare.com

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • ஆழ்ந்த இரங்கல்கள். மேலே  ஏராளன் இணைத்த தினக்குரல் பத்திரிகையில் 1933 ஓகஸ்ட்இல் பிறந்த எதிர்வீரசிங்கம் வயது 89 என்று எழுதியிருக்கிறார்கள். 90 என்றுதானே வரவேண்டும்?. அவர் மத்திய கல்லூரியில் படிக்கும் போது இலங்கை சாதனையை முறியடிக்கும் போது ,  கொழும்பில் வெளிவந்த ஆங்கில பத்திரிகை ஒன்றில் இவரது பெயரை எதிர்வீரசிங்க என்று எழுதியிருந்தது. அப்பொழுது மத்திய கல்லூரியின் அதிபர் சிமித் அவர்கள் ‘எதிர்வீரசிங்க அல்ல நாகலிங்கம் எதிர்வீரசிங்கம்’  என்று எழுதிய கடிதம் அதே பத்திரிகையில் பிறகு வந்தது.  ஆசிய விளையாட்டுப்போட்டியில் தங்கப்பதக்கம் வென்றபின்பு யாழ் புகையிரத நிலையத்தில் இருந்து மத்திய கல்லூரிக்கு அழைத்து வரப்பட்டு ,எதிர்வீரசிங்க அவர்களுக்கு சிறந்த வரவேற்பு பாடசாலையில்வழங்கப்பட்டது.  -  மத்திய கல்லூரியின் பழைய மாணவரான எனது தகப்பனார் சொன்ன தகவல்
    • அட்லீஸ்ட் விஜயலக்சுமிக்கு செய்தது போல் அநியாயம் செய்யாமல் தன்னை நம்பி வந்த பெண்ணை கண்ணியத்தோடு நடத்தினார் என நினைக்கிறேன்🤣. பதில் விளக்கம் போதும் என நினைக்கிறேன்🤣 ஐயகோ….இரு மாநில ஆளுனர்….ஆட்டுகுட்டி கதையை கேட்டு…
    • இல்லை அண்ணாவின் ஆட்சிகாலம் போல இருக்கும்.   
    • அவ‌ங்க‌ள் இட‌த்தில் நேர்மை ஊழ‌ல் இல்லாம‌ இருந்தால் ஏன் த‌மிழ‌ர்க‌ள் திராவிட‌த்தை வெறுக்க‌ போகின‌ம் 2ஜீ ஊழ‌லால் ஒரு இன‌ம் அழிவ‌தை வேடிக்கை பார்த்த‌வ‌ர்க‌ள் பெரியார் ஜாதியை ஒழித்தார் அது தான் குறிப்பிட்ட‌  ஜாதி ம‌க்க‌ள் வ‌சிக்கும் இட‌த்தில் ம‌னித‌க் க‌ழிவை த‌ண்ணீருக்கை க‌ல‌ந்த‌வை....................... சோடா க‌டையில் வேலை பார்த்து விட்டு ம‌ஞ்ச‌ல் வாக்கில் 4புத்த‌க‌த்தோட‌ வ‌ந்த‌வ‌ரின் குடும்ப‌த்துக்கு இத்த‌னை ல‌ச்ச‌ம் கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து ச‌த்திய‌மாய் கோடி காசுக்கு எத்த‌னை 0 என்று என‌க்கு தெரியாது ஆனால் நீட் தேர்வை ர‌த்து செய்ய‌ எங்க‌ளிட‌ம் ர‌க‌சிய‌ம் இருக்கு என்று சொல்லி ப‌ல‌ பிள்ளைக‌ள் நீட்டால் இற‌ந்து போனார்க‌ள் அத‌ற்க்கு பிற‌க்கு உத‌ய‌நிதியின் பெயர் கொல்லிநிதி கொல்லுநிதியின் ம‌க‌ன் இன்ப‌நிதிக்கு தெரியும் கோடி காசுக்கு எத்த‌னை 0 என்று....................திமுக்காவுக்கு ஓட்டு போட்ட‌ ம‌க்க‌ள் ம‌ழை வெள்ள‌த்தால் பாதிக்க‌ப் ப‌ட்ட‌ போது வீட்டுக்குள் இருந்து க‌டும் வேத‌னை ப‌ட்ட‌வை 4000ஆயிர‌ம் கோடி ஒதுக்கி ப‌ணி செய்தார்க‌ளா அல்ல‌து அதையும் ஊழ‌ல் செய்து மூடி ம‌றைத்தார்க‌ளா...........................ஆண்ட‌வா இனி வ‌ள‌ந்து வ‌ரும் பிள்ளைக‌ளுக்கு ந‌ல்ல‌ அறிவைக் கொடு அப்ப‌ தான் கால‌ம் க‌ட‌ந்து த‌மிழ் நாட்டில் ந‌ல் ஆட்சி ம‌ல‌ரும் நாடும் செல்ல‌ செழிப்பாய் இருக்கும் ம‌க்க‌ளும் குறைக‌ள் இல்லாம‌ எல்லா வ‌ச‌தியோடும் வாழுவின‌ம்...............................................  
    • இப்படியா தலைவரே?  😍 பட விளக்கம் போதுமா? இல்லை எழுத்து விளக்கங்களும்  தேவையா? 🤣
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.