Jump to content

மகிந்த அணியின் திட்டம்!!


Recommended Posts

மகிந்த அணியின் திட்டம்!!

 

எத்­தனை காலம்­தான்
ஏமாற்­று­வார்­கள்
கூட்டு எதி­ர­ணி­யி­னர்?

எந்த வகை­யி­லே­னும் அர­சைக் கவிழ்த்து ஆட்­சி­யைக் கைப்­பற்ற வேண்­டிய அவ­சி­யம் கூட்டு எதி­ர­ணிக்கு எழுந்­துள்­ளது. மகிந்த தலை­மை­யில் ஆட்சி அமை­யு­மே­யா­னால், பிரச்­சி­னை­கள் பல­வற்­றி­லி­ருந்து தாம் தப்­பித்து­விட முடி­யு­மென இதில் அங்­கம் வகிப்­ப­வர்­கள் நினைப்­பதே இதற்­கான முதன்மைக் கார­ண­மா­கும்.

கொழும்­பில் மக்­க­ளைத் திரட்டி அர­சுக்கு எதி­ரான பெரும் பேர­ணி­யொன்­றைக் கூட்டு எதி­ரணி நடத்­தி­யது. இதன் மூல­மாக அரசை முற்­றா­கவே முடக்­கப் போவ­தாக மகிந்த தரப்­புக் கூறிய போதி­லும், அவ்­வாறு எது­வுமே இடம்­பெ­ற­வில்லை. பேரணி தமக்­குப் பெரு­வெற்­றி­யென கூட்டு எதி­ர­ணி­யும், அது படு­தோல்­வி­யில் முடிந்ததாக அரசு தரப்­புக் கூறு­வ­தை­யும் அவ­தா­னிக்க முடி­கின்­றது. இவை­யி­ரண்­டை­யும் பக்­கம் சாராது நன்கு சீர்­தூக்­கிப் பார்க்­கும் போது­தான், உண்மையான நிலை தெரி­ய­வ­ரும்.

ஆட்சி மாறு­வ­தென்­பது முக்­கி­ய­மா­ன­தல்ல. மக்­க­ளுக்கு நன்மை தரக்­கூ­டிய ஆட்சி அமை­வ­து­தான் முக்­கி­ய­மா­ன­தா­கும். மகிந்த தரப்­பி­னர் மக்­க­ளுக்கு நல்ல சேவையை ஆற்­ற­வேண்­டும் என்­ப­தற்­காக ஆட்­சிக்கு வரு­வ­தற்­குத் துடிக்­க­வில்லை. தமது சுய­ இ­லா­பம் கரு­தியே தற்­போ­தைய ஆட்­சி­யைக் கலைத்­து­விட்­டுத் தாம் பத­வி­யில் அமர்­வ­தற்­குத் துடிக்­கின்­ற­ னர். மக்­க­ளில் பெரும்­பா­லா­ன­வர்­க­ளுக்கு இது தெரி­வ­தில்லை. அர­சி­யல்­வா­தி­க­ளின் பசப்பு வார்த்­தை­களை நம்பி அவர்­க­ளுக்கு ஆத­ரவு காட்­டவே அவர்­க­ளால் முடி­கின்­றது.

பிசு­பி­சுத்­துப் போன அர­சுக்கு
எதி­ரான கூட்டு எதி­ர­ணி­யின் ஆர்ப்­பாட்­டம்

மகிந்த தரப்­பி­ன­ரின் பெரிய அள­வி­லான பரப்­பு­ரை­யு­டன் நடத்­தப்­பட்ட அர­சுக்கு எதி­ரான பேரணி, ஏற்­பாட்­டா­ளர்­கள் எதிர்­பார்த்த இலக்கை எட்ட முடி­யா­மல் தோல்­வி­யில் முடி­வ­டைந்­துள்­ள­தாக நம்­ப­க­மான தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன. பேர­ணிக்­கென நாட்­டின் பிற இடங்­க­ளி­லி­ருந்து அழைத்து வரப்­பட்ட பொது­ மக்­கள், பேர­ணியை ஏற்­பாடு செய்­த­வர்­க­ளின் கோரிக்­கையை நிரா­க­ரித்­து­விட்டு இடை நடு­வில் தத்தமது வீடு­க­ளுக்­குத் திரும்­பிச் சென்­று­விட்­ட­தாக அறி­ய­மு­டி­கின்­றது.

இத­னால் விடிய விடி­யப் போராட்­டத்தை நடத்­து­வ­தற்­குத் திட்­ட­மிட்­ட­வர்­க­ளின் எதிர்­பார்ப்பு பிசு­பி­சுத்­துப் போனது. மக்­கள் தாமா­கவே விரும்பி பேர­ணி­யில் கலந்து கொண்­டி­ருந்­தால் இவ்­வாறு நடந்­தி­ருக்க மாட்­டாது.

மகிந்த ஆட்­சி­யில் இடம்­பெற்ற
ஊழல் மோச­டி­க­ளுக்குக் கூட்டு
அரசு உரிய நட­வ­டிக்கை
மேற்­கொள்­ளத் தவ­றி­யது

கடந்த ஆட்­சிக் காலத்­தில் இடம்­பெற்­ற­தா­கக் கூறப்­ப­டும் ஊழல் மற்­றும் மோச­டிக் குற்­றச்­சாட்­டுக்­கள் தொடர்­பாக தற்­போ­தைய அரசு உரி­ய­வ­கை­யில் நட­வ­டிக்கை எடுத்­தி­ருந்­தால் மகிந்த தரப்­பி­னர் இந்த அள­வுக்கு அர­சுக்குச் சவால் விடுக்­கும் அள­வுக்கு கிளர்ந்­தெ­ழுந்­தி­ருக்க மாட்­டார்­கள். அர­சுக்குச் சவால் விடுத்­தி­ருக்­க­வும் மாட்­டார்­கள். அர­சின் பல­வீ­னமே சக­ல­துக்­கும் கார­ண­மா­கி­விட்­டது.

இந்த நாட்­டைப் பொறுத்­த­வ­ரை­யில் தமிழ்மக்கள் மிக­வும் மோச­மான பாதிப்­புக்­களை எதிர்­கொண்டு வரு­கி­றார்­கள் என்­ப­தைக் கூறத்­தே­வை­யில்லை. தமது மொழி­யைக் காப்­பாற்­று­வ­தற்­கா­க­வும், உரி­மை­க­ளைப் பெறு­வ­தற்­கா­க­வும் அவர்­கள் தொடர்ந்து போரா­டிக் கொண்­டி­ருக்­கி­றார்­கள். ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யும், சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்­சி­யும் 2015ஆம் ஆண்டு வரை மாறி­மாறி ஆட்­சிக்கு வரு­வதே வழக்­க­மாக இருந்­துள்­ளது.

தமிழ் மக்­க­ளது பிரச்­சி­னை­க­ளுக்கு
சிங்­கள அர­சு­கள் உரிய தீர்வு
வழங்­கப்­போ­வ­தில்லை

ஆனால் ஆட்சி மாறி­னா­லும் தமி­ழர்­க­ளுக்­குத் தீர்வு கிடைப்­ப­தென்­பது குதி­ரைக்­கொம்­புக்கு ஒப்­பா­ன­தா­கவே காணப்­ப­டு­கின்­றது. ஆட்­சி­யில் இருப்­ப­வர்­கள் எதை­யா­வது செய்­வ­தற்கு முற்­பட்­டால், அதைக் கண்­மூ­டித்­த­ன­மாக எதிர்ப்­ப­து­தான் எதிர்க்­கட்சி வரி­சை­யில் அமர்ந்­தி­ருப்­ப­வர்­க­ளின் வழ­மை­யாக இங்கு மாறி­விட்­டது. இத­னால் தமி­ழர்­க­ளது பிரச்­சி­னை­க­ ளுக்­கான தீர்வு என்­பது எட்­டாக் கனி­யாக மாறி­விட்­டது.

இன்­றைய நிலை­யில் மக்­கள் சகல வகை­யி­லும் பொரு­ளா­தார ரீதி­யான நெருக்­க­டி­களை எதிர்­கொண்டு வரு­கின்­ற­னர். தமது உண­வுப் பொருள்­க­ளி­லி­ருந்து தமது வேறு அத்­தி­யா­வ­சி­யத் தேவை­கள் அனைத்­துக்­கும் அதி­க­ள­வில் செலவு செய்ய வேண்­டிய நிலைக்கு அரசு அவர்­க­ளைத் தள்­ளி­விட்­டுள்­ளது.

இத­னால் அர­சின்­மீது இயல்­பா­கவே அவர்­க­ளுக்கு வெறுப்பு ஏற்­பட்­டுள்­ளது. கூட்டு எதி­ரணி, அர­சின் மீதான இத்­த­கைய மக்­க­ளின் வெறுப்பைத் தனக்­குச் சாத­க­மா­கப் பயன்­ப­டுத்­திக் கொள்­வ­தற்­குத் தீர்­மா­னித்­தி­ருப்­பதை கொழும்­பில் இடம்­பெற்ற பேரணி உறுதி செய்­கின்­றது. ஆனால் இவர்­கள் ஆட்­சிக்கு வந்­தா­லும் நாட்­டில் இதே நிலை­தான் நீடிக்­கப்­போ­கின்­றது.

வௌிநா­டு­க­ளி­டம் இருந்து பெற்ற கடன்­கள் மக்­க­ளின் தலையை நெரித்­துக் கொண்­டி­ருக்­கும் வரை, பொரு­ளா­தார மீட்சி இந்த நாட்­டுக்கு கிடைக்­கப்­போ­வ­தில்லை. மகிந்த தரப்­பின் ஆட்­சிக் காலத்­தில் இடம்­பெற்ற ஊழல், மோச­டி­க­ளும், வௌி நாடு­க­ளி­டம் இருந்து பெற்ற கடன்­க­ளும் நாட்­டின் பொரு­ளா­தார அத்­தி­பா­ரத்­தையே ஆட்­டம் காண­வைத்­து­விட்­டன. இவற்­றுக்­கெல்­லாம் தீர்வு என்ன என்­பதை மக்­கள் ஒரு­க­ணம் சிந்­தித்­துப் பார்க்க வேண்­டும்.

கடும் இன­வா­தப்­போக்­கு­டைய தலை­வர்­களை அதி­க­ள­வில் கொண்ட கூட்டு எதி­ர­ணி­யி­னர் நாட்­டின் இனப்­பி­ரச்­சி­னைக்கு ஒரு­போ­துமே தீர்­வைக் காண­மாட்­டார்­கள். இனப் பிரச்­சி­னைக்­குத் தீர்வு கண்­டு­விட்­டால் அவர்­க­ளால் அர­சி­யலை மேற்­கொண்டு நடத்­தவே முடி­யாது. இன­வா­தம் பேசிப்­பே­சியே பெரும்­பான்­மை­யின மக்­க­ளின் ஆத­ர­வைப் பெறு­வது இவர்­க­ளின் இராஜ தந்­தி­ர­மா­க­வுள்­ளது. ஆனால் அந்த மக்­கள் உண்­மை­யைப் புரிந்து கொள்­ளும்­போது இவர்­கள் காணா­மல் போய்­வி­டு­வார்­கள்.

மக்­க­ளைத் தொடர்ந்­தும் ஏமாற்­ற­மு­டி­யாது என்­பதை கூட்டு எதி­ரணி முத­லில் புரிந்து கொள்ள வேண்­டும். கொழும்­பில் அவர்­க­ளின் திட்­டம் பிசு­பி­சுத்­துப் போன­தற்கு கூட்டு எதி­ர­ணி­யி­னர் மீதான மக்களின் வெறுப்பே கார­ண­மா­கும்.

https://newuthayan.com/story/10/மகிந்த-அணியின்-திட்டம்.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.