Jump to content

ரணிலை போன்று ரவீந்திர வாக்குமூலம் வழங்குவார்


Recommended Posts

ரணிலை போன்று ரவீந்திர வாக்குமூலம் வழங்குவார்

1-1bec742e56bfdcc9faca56053bb2ef78d10d940b.jpg

 

கைது செய்ய அவசியம் இல்லை என்கிறார் சட்டம் ஒழுங்கு அமைச்சர்

(எம்.எப்.எம்.பஸீர்)

 ஐந்து மாணவர்கள் உள்ளிட்ட 11 பேர் கடத்தி காணாமல் ஆக்கப் பட்ட விவகாரத்தில் சந்தேகநபர் தப்பிக்க உதவிய குற்றச்சாட்டுக்கு உள்ளாகியிருக்கும் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத் னவை கைது செய்ய வேண்டிய அவசியம் இல்லை என சட்டம் ஒழுங்கு அமைச்சர் ரஞ்ஜித் மத்தும பண்டார தெரிவித்தார். 

எனினும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பிணை முறி மோசடி குறித்த ஜனாதிபதி விசாரணை ஆணைக் குழுவில் சாட்சியம் வழங்கியதைப் போன்று, அட்மிரல் ரவீந்திர சி.ஐ.டி.க்கு வாக்குமூலம் வழங்குவார் என வும் அவர் மேலும் கூறினார். 

ஐ.தே.க.வின் தலைமையகமான சிறிகொத்தாவில் நேற்று நடத்திய விஷேட ஊடகவியலாளர் சந்திப்பின் போது ஊடகவியலாளர் களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார். 

அட்மிரல் ரவீந்திரவைக் கைது செய்ய நடவடிக்கை எடுக்கவில்லை. அவரிடம் வாக்குமூலம் மட்டுமே பதிவு செய்யப்படவுள்ளது. பிரதமர் ரணில் எவ்வாறு பிணை முறி மோசடி குறித்த ஜனாதிபதி விசாரணைக் குழுவில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தாரோ அதனை ஒத்த நடைமுறையில் வாக்குமூலம் மட்டுமே அவரிடம் பெறப்படவுள்ளது. நாம் கைது செய்ய முயற்சிக்கவில்லை என்றார்.

 இதன்போது, அப்படியானால் ரவீந்திரவை கைது செய்யப் போவதாக சி.ஐ.டி. கோட்டை நீதிவானுக்கு அறிவித்துள்ளதே? அவருக்கு எதிராக தண்டனை சட்டக் கோவையின் 109ஆவது அத்தியாயத்தின் கீழ் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளதே என மீளவும் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர்.

எனினும் அந்தக் கேள்விக்கும் பதிலளித்த அமைச்சர் ரஞ்ஜித் மத்தும பண்டார, அட்மிரல் ரவீந்திரவை சி.ஐ.டி. கைது செய்யப் போவதாக யாருக்கும் எந்த சந்தர்ப்பத்திலும் அறிவிக்கப்படவில்லை. அவர் கைது செய்யப்பட மாட்டார். வாக்கு மூலமே பெறப்படவுள்ளது என்றார்.

கடந்த ஆகஸ்ட் 29ஆம் திகதி 5 மாணவர் உள்ளிட்ட 11 பேர் கடத்தி காணாமல் ஆக்கப்பட்ட வழக்கு கோட்டை நீதிவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் விசார ணைக்கு வந்திருந்தது.

பிரதான சந்தேக நபர் இந்த வழக்கில் இருந்து தலைமறைவாக இருக்க, முன்னாள் கடற்படைத் தளபதியும் தற்போதைய முப்படைகளின் அலுவலகப் பிரதானியுமான அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன பங்களிப்பை செய்துள்ளார். அதற்கான சான்றுகளைப் பெற்றுள்ளோம். ரவீந்திர விஜேகுணரத்ன, பிரதான சந்தேக நபரை சி.ஐ.டி.யின் சட்ட ரீதியிலான நடவடிக்கைகளுக்கு ஆளாவதில் இருந்து சட்ட விரோதமாக தடுத்திருக்கின்றார்' என சி.ஐ.டி. அறிவித்தது.

இதன்போது நீதிவான் லங்கா ஜயரத்ன, அவ்வாறெனில் அவருக்கு எதிராக என்ன நடவடிக்கை எடுக்கவுள்ளீர்கள் என சி.ஐ.டி.யிடம் வினவியிருந்தார்.

அதற்குப் பதிலளித்த சி.ஐ.டி.யின் பொலிஸ் பரிசோதகர் நிசாந்த சில்வா, நாம் அவரைக் கைது செய்யப் போகின்றோம் என்றார் என்பது இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2018-09-22#page-1

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தோற்றாலும் வென்றாலும் அரசியல் தனித்தன்மையோடு தனித்து நிற்கும்.. அண்ணன் சீமானின் முடிவு வரவேற்கத்தக்கது. மேலும்.. மைக் சின்னத்தில்.. சம பால்.. சமூக பகிர்வுகளோடு.. அண்ணன் தேர்தலை சந்திக்க வாழ்த்துக்கள்.  வீரப்பனின் மகளுக்கு அளித்த வாய்ப்பு நல்ல அரசியல் முன்னுதாரணம். வீரப்பன் ஒரு இயற்கை வள திருடல் குற்றவாளி ஆகினும்.. அதில் அவரின் அப்பாவி மகளுக்கு எந்தப் பங்களிப்பும் இல்லாத நிலையில்.. அவர் அரசியல்.. சமூகப் புறக்கணிப்புக்கு உள்ளாவது ஏற்கக் கூடியதல்ல. நாம் தமிழர் அதனை தகர்த்திருப்பது நல்ல முன் மாதிரி. 
    • அப்படி நடந்தால் சீமான் தம்பிகளில் பாதி கீல்பாக்கத்துக்கும் அடுத்த பாதி ஏர்வாடியிலும் தங்களுக்கு தாங்களே கரண்டு பிடித்துகொண்டு நிக்கும்கள் இது தேவையா 😀
    • RESULT 9th Match (N), Jaipur, March 28, 2024, Indian Premier League Rajasthan Royals      185/5 Delhi Capitals.         (20 ov, T:186) 173/5 RR won by 12 runs
    • //நான் ஒப்பிட்டு பார்த்தவரையில் 2016 பிரெக்சிற் பின்னான, 2024 வரையான யூகேயின் வாழ்க்கைத்தர வீழ்ச்சியை விட, குறைவான வாழ்க்கைத்தர வீழ்ச்சியையே 2019இன் பின் இலங்கை கண்டுள்ளது.//   அருமையான மிகச்சரியான ஒப்பீடு.. எனக்கென்ன ஆச்சரியம் எண்டால் விசுகர் போல ஜரோப்பிய அமெரிக்க நாடுகளில் உக்ரேனிய சண்டையின் பின் சுப்பர் மாக்கெற்றுகளில் அரிசி மா எண்ணெய்கூட சிலபல வாரங்களுக்கு இல்லாமல் போனபோதும் வாழ்ந்தவர்கள் பெற்றோல் தொடங்கி அத்தியாவசிய சாமான் வரை அதிகரிக்க சம்பளம் அதுக்கேற்ற மாதிரி அதிகரிக்காதபோதும் வரிக்குமேல் வரிகட்டி குடிக்கும் தண்ணீரில் இருந்து குளிக்கும் தண்ணீர் வெளியால போறது வரைக்கும் குப்பை எறியக்கூட காசுகட்டி வாழ்பவர்கள் ஊரில் சொந்தவீட்டில் கிணத்து தண்ணி அள்ளி குடிச்சு காணிக்க வாற மாங்கா தேங்காவித்து வீட்டுத்தேவைக்கு மரக்கறி தோட்டம்கூட வச்சு வாழும் மக்களை பார்த்து கேட்கிறார்கள் ஒரு ரூபாய் வரவுக்கு அஞ்சு ரூபாய் செலவு செய்து எப்படி வாழ்கிறார்கள் என்று. பொருளாதார தடைக்குள்ள ரயர் எரித்து விளக்கு கொழுத்தி வாழ்ந்த மக்களுக்கு இதெல்லாம் யானைக்கு நுளம்பு குத்தினமாதிரி.. இந்த வருடத்துடன் ஒப்பிடும்போது உண்மையை சொன்னால் ஜரோப்பா நடுத்தர வருமானம் பெறும் மக்கள்தான் இலங்கை மக்களை விட அதிகமாக பொருளாதர பாதிப்பை எதிர்நோக்குகிறார்கள்..
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.