Jump to content

ரஃபேல்: ரிலையன்ஸ் குறித்து பிரான்ஸ் முன்னாள் அதிபர் கூறியது என்ன?


Recommended Posts

ரஃபேல்: ரிலையன்ஸ் குறித்து பிரான்ஸ் முன்னாள் அதிபர் கூறியது என்ன?

French President Francois Hollande (L) speaks with Indian Prime Minister Narendra Modiபடத்தின் காப்புரிமைBERTRAND GUAY / GETTY IMAGES Image caption2016இல் ஒலாந்த் இந்தியா வந்திருந்தபோது ரஃபேல் ஒப்பந்தம் குறித்து மோதி அறிவித்தார்.

ரஃபேல் ஒப்பந்தத்தில் அம்பானியின் ரிலையன்ஸ் குழுமத்தை சேர்த்துக் கொள்ள இந்தியாதான் பரிந்துரை செய்தது என்று ஃபிரான்ஸின் முன்னாள் அதிபர் ஃபிரான்சுவா ஒலாந்த் தெரிவித்துள்ளது இந்தியாவில் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

மீடியாபார்ட் ஊடகத்திடம் பேசிய ஃபிரான்சுவா ஒலாந்த், தன்னுடன் வாழும் நடிகை ஜூலி காயே நடிக்கும் படத்தை தயாரிப்பதற்கு அனில் அம்பானியின் நிறுவனத்துடனான ஒப்பந்தம் குறித்து தமக்கு தகவல் எதுவும் தெரிவிக்கப்படவில்லை என்றும் ரிலையன்ஸ் குழுமம் பற்றி எனக்கு எதுவுமே தெரியாது என்றும் கூறியுள்ளார்.

"எங்களுக்கு இந்த விஷயத்தில் கூற எதுவும் இருக்கவில்லை. அம்பானியுடன் ரஃபேல் ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்திய டஸ்ஸோ நிறுவனத்துக்கு இந்திய அரசுதான் ரிலையன்ஸ் குழுமத்தை பரிந்துரை செய்தது. டஸ்ஸோ நிறுவனம் எங்களுக்கு அளித்த பேச்சுவார்தையாளரை நாங்கள் ஏற்றுக்கொண்டோம்."

" அதனால் ரிலையன்ஸ் நிறுவனம் மூலம் எனக்கு ஆதாயம் எதுவும் இருப்பதாகக் கூறுவதற்கு எந்தக் காரணமும் இல்லை. ஜூலி காயே நடிக்கும் படத்துக்கு இந்த விவகாரத்துடன் தொடர்பு இருக்கும் என்று நான் கற்பனைகூட செய்து பார்க்கவில்லை," என்று ஃபிரான்சுவா ஒலாந்த் கூறியுள்ளார்.

நடிகை ஜூலி காயே மீடியா பார்ட் நிறுவனத்துக்கு தனது தரப்பு விளக்கத்தை அளித்துள்ளார். அவரது விளக்கம் பின்வருமாறு.

'மை ஃபேமிலி' தயாரிப்பு நிறுவனம், எனக்கு பங்கு இருக்கும் விஸ்வைர் நிறுவனம் மூலம் இந்த படத் தயாரிப்புக்கு ரிலையன்ஸ் நிதியளிக்க வேண்டும் என்று அணுகியது. அதைத் தொடர்ந்து, படத்தின் தயாரிப்பில் முதலீடு செய்யும் பிற நிறுவனங்களைப் போலவே ரிலையன்ஸ் 10% அளவுக்கு தயாரிப்புச் செலவை அளிக்க ஒப்புக்கொண்டது. (உண்மையில் அது 16%)

ஜூலி காயேவுடன் ஒலாந்த்படத்தின் காப்புரிமைARNOLD JEROCKI / GETTY IMAGES Image captionஜூலி காயேவுடன் ஒலாந்த்

அந்தப் படம் பிரான்சில் படப்பிடிப்பில் இருக்கும்போதுதான், அதன் தயாரிப்பாளர் அனில் அம்பானியை எங்களுக்கு அறிமுகம் செய்தார்.

'டு தி டாப்' எனும் ஆங்கில மொழிபெயர்ப்புடைய தலைப்பைக் கொண்டுள்ள அந்த பிரெஞ்சு படத்தில் ரிலையன்ஸ் எண்டர்டெய்ன்மெண்ட் 1.6 மில்லியன் யூரோ முதலீடு செய்தது.

ஜூலி காயே மற்றும் ரிலையன்ஸ் இடையேயான தொழில்கூட்டு குறித்து, ஃபிரான்சுவா ஒலாந்த் மூன்று நாள் பயணமாக இந்தியா வருகை தந்திருந்த ஜனவரி 24, 2016 அன்று அறிவிக்கப்பட்டது.

ரஃபேல் விமானங்களை வாங்க இரு நாட்டு அரசுகளுக்கும் இடையே கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தம் குறித்து ஒலாந்த் முன்னிலையில் ஜனவரி 25, 2016 அன்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி அறிவித்தார்.

இந்நிலையில் ஃபிரான்சுவா ஒலாந்த்தின் கூற்றை அடுத்து ஃபிரான்ஸ் தூதரகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

ரஃபேல்படத்தின் காப்புரிமைDASSAULT RAFALE

ஃபிரான்ஸ் மற்றும் இந்தியாவுக்கு இடையே 2016ஆம் ஆண்டு செப்டம்பர் 23ஆம் தேதி கையெழுத்தான ரஃபேல் ஒப்பந்தத்தில் 36 ரஃபேல் விமானங்களை வழங்குவது மற்றும் அதன் தரம் ஆகியவை குறித்து மட்டுமே ஃபிரான்ஸ் அரசாங்கம் கவனத்தில் கொள்ளும், கூட்டு நிறுவனங்களை தேர்ந்தெடுப்பதில் ஃபிரான்ஸ் அரசாங்கத்துக்கு எந்த ஈடுபாடும் இல்லை என ஃபிரான்ஸ் தூதரகத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

"இந்தியாவின் விதிப்படி, பொருத்தமான இந்திய நிறுவனத்தை தேர்ந்தெடுப்பதற்கான முழு உரிமையும் ஃபிரான்ஸ் நிறுவனத்துக்கு உள்ளது; மேலும் இந்த நிறுவனங்களுடன் சேர்ந்து அவை இந்தியாவில் செயல்படுத்துவதற்கான திட்டத்தின் அனுமதியை ஃபிரான்ஸ் நிறுவனம் பெறும்."

"அதன்படி இந்திய சட்ட விதிகளுக்கு உட்பட்டு பல தனியார் மற்றும் இந்திய அரசு நிறுவனங்கள் மற்றும் ஃபிரான்ஸ் நிறுவனம் இடையே ஏற்கனவே ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன" என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஃபிரான்ஸின் பாதுகாப்பு அமைச்சர் மற்றும் இந்தியாவின் அப்போதைய பாதுகாப்பு அமைச்சர்படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionஃபிரான்ஸின் பாதுகாப்பு அமைச்சர் மற்றும் இந்தியாவின் அப்போதைய பாதுகாப்பு அமைச்சர்

"ரஃபேல் ஒப்பந்தத்தில் குறிப்பிட்ட நிறுவனத்தை சேர்த்துக் கொள்ளுமாறு இந்தியா பரிந்துரை செய்தது என்ற முன்னாள் ஃபிரான்ஸ் அதிபர் ஒலாந்தின் கூற்றை இந்தியா பரிசீலனை செய்து வருகிறது" என இந்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

"வணிக ரீதியான முடிவுகளில் இந்திய அரசோ அல்லது ஃபிரான்ஸ் அரசோ தலையிடவில்லை" என அவரது டிவிட்டர் பக்கத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்து செல்க டுவிட்டர் பதிவு இவரது @SpokespersonMoD
 

The report referring to fmr French president Mr. Hollande's statement that GOI insisted upon a particular firm as offset partner for the Dassault Aviation in Rafale is being verified.
It is reiterated that neither GoI nor French Govt had any say in the commercial decision.

 
 

முடிவு டுவிட்டர் பதிவின் இவரது @SpokespersonMoD

பல பில்லியன் டாலர்கள் மதிப்பிலான ஒப்பந்தத்தை வங்கி கணக்கு திவாலான ஒரு நிறுவனத்துக்கு பிரதமர் மோதி வழங்கியுள்ளது ஒலாந்தின் கூற்று மூலம் தெரியவந்துள்ளது. அவருக்கு நன்றி என காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

கடந்து செல்க டுவிட்டர் பதிவு இவரது @RahulGandhi
 

The PM personally negotiated & changed the #Rafale deal behind closed doors. Thanks to François Hollande, we now know he personally delivered a deal worth billions of dollars to a bankrupt Anil Ambani.

The PM has betrayed India. He has dishonoured the blood of our soldiers.

 
 

முடிவு டுவிட்டர் பதிவின் இவரது @RahulGandhi

 

https://www.bbc.com/tamil/india-45611093

Link to comment
Share on other sites

ரஃபேல் ஒப்பந்தத்தில் அம்பானியின் ரிலையன்ஸ் உள்ளே வந்த கதை

 
Rafale Dealபடத்தின் காப்புரிமைHINDUSTAN TIMES / GETTY IMAGES

பிரெஞ்சு ஊடகம் ஒன்றிடம் அளித்த பேட்டியில் ஃபிரான்ஸின் முன்னாள் அதிபர் ஃபிரான்சுவா ஒலாந்த், இந்திய அரசு பரிந்துரை செய்ததன் பேரில்தான், ரஃபேல் விமானங்களைத் தயாரிக்க அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்துடன் பிரெஞ்சு நிறுவனமான டஸ்ஸோ ஒப்பந்தம் மேற்கொண்டது என்று கூறியுள்ளார்.

ஃபிரான்சுவா ஒலாந்த் பதவிக்காலத்தின்போது 36 ரஃபேல் ரக ஜெட் போர் விமானங்களை வாங்க இந்தியா மற்றும் பிரான்ஸ் அரசுகள் ஒப்பந்தம் மேற்கொண்டதில், அவற்றைத் தயாரிக்கும் பிரெஞ்சு நிறுவனத்துக்கு இந்தியக் கூட்டாளியாக ரிலையன்ஸ் தேர்வு செய்யப்பட்டதில் ஊழல் நடந்திருப்பதாக இந்திய எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன.

ஒலாந்த் உடன் சேர்ந்து வாழும் பிரெஞ்சு திரைப்பட நடிகை ஜூலி காயே நடிக்கும் திரைப்படம் ஒன்றைத் தயாரிக்கவும் ரிலையன்ஸ் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் முதலீடு செய்துள்ளது.

பத்து மில்லியன் யூரோ செலவில் தயாரிக்கப்பட்ட , ''ரைட் ஆன் தி டாப்' எனும் அந்தப் படத்துக்கு ரிலையன்ஸ் 1.6 மில்லியன் யூரோ நிதி அளித்துள்ளது.

அதே சமயத்தில்தான் இந்தியா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் ரஃபேல் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. இந்த இரண்டும் தற்செயலாக ஒரே சமயத்தில் நிகழ்ந்தன என்று ஒலாந்த் மற்றும் ஜூலி ஆகியோர் கூறுவதை ஊடகங்கள் கேள்விக்கு உள்ளாக்குகின்றன.

விசாரணை செய்ய எதிர்க்கட்சிகள் மனு

இந்தப் போர் விமானங்களின் விலை நிர்ணயிக்கப்பட்டது மற்றும் இந்த ஒப்பந்தத்தில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் பங்கு ஆகியவை குறித்தும் விசாரணை செய்யப்பட வேண்டும் என்று இந்திய எதிர்க்கட்சிகள் இந்தியாவின் தலைமை தணிக்கையாளர் அலுவலகத்திடம் (சி.ஏ.ஜி) மனு அளித்துள்ளன.

விமானங்கள் விற்கப்படும் தொகையில் 50% பணத்தை இந்தியாவிலேயே முதலீடு செய்ய வேண்டும் என்று டஸ்ஸோ நிறுவனத்திடம் செய்துள்ள ஒப்பந்தத்தில் ரிலையன்ஸ் குறிப்பிட்டிருப்பது குறித்து எதிர்க்கட்சிகள் அளித்துள்ள மனுவின் மையமாக உள்ளது.

DASSAULT RAFALEபடத்தின் காப்புரிமைDASSAULT RAFALE

இந்தியப் பிரதமர் நரேந்திர மோதியை வெளிப்படையாக ஆதரிக்கும் அனில் அம்பானியின் நிறுவனத்துக்கு லாபம் செல்ல வேண்டும் எனும் நோக்கில் செயல்படுவதாக எதிர்க்கட்சிகள் மோதி மீதும் குற்றம் கூறுகின்றன.

போர் விமானங்களை தயாரிப்பதில் முன் அனுபவம் எதுவும் இல்லாத ரிலையன்ஸ் டிஃபன்ஸ் நிறுவனமும், 36 ரஃபேல் விமானங்கள் பிரான்ஸ் நாட்டிடம் இருந்து வாங்கப்படும் என்று தனது பிரான்ஸ் பயணத்தின்போது மோதி அறிவித்ததற்கு 12 நாட்களுக்கு முன்புதான், அதாவது 2015-ஆம் ஆண்டு மார்ச் 28 அன்று, நிறுவப்பட்டுள்ளது.

அதே ஆண்டு ஆகஸ்டு 31 அன்று ஜூலி காயே நடிக்கும் படத்தில் ரிலையன்ஸ் முதலீடு செய்வது குறித்த செய்தியை தி இண்டியன் எக்ஸ்பிரஸ் நாளேடு வெளியிட்டுள்ளது.

அதே நாளில்...

ஜனவரி 24, 2016 அன்று அனில் அம்பானி, அப்போது நம்பர் ஒன்' எனப் பெயரிடப்பட்டிருந்த அப்படத்தில் முதலீடு செய்வதாக ஊடகங்களுக்கு செய்தி அறிக்கை வெளியிடும் வரை எல்லாம் சுமூகமாகவே இருந்தது. ஏனென்றால் அதே நாளில்தான் மூன்று நாள் பயணமாக ஒலாந்த் இந்தியா வந்தார்.

மீடியாபார்ட் நிறுவனத்திடம் பேசிய ஃபிரான்சுவா ஒலாந்த் ஜூலி காயே நடிக்கும் படத்தை தயாரிப்பதற்கு அனில் அம்பானியின் நிறுவனத்துடனான ஒப்பந்தம் குறித்து தமக்கு தகவல் எதுவும் தெரிவிக்கப்படவில்லை என்றும் ரிலையன்ஸ் குழுமம் பற்றி எனக்கு எதுவுமே தெரியாது என்றும் கூறியுள்ளார்.

எகிப்து மற்றும் கத்தாருக்கு அடுத்தபடியாக இந்தியாவுக்கு ரஃபேல் விமானங்களை விற்பதை அந்தப் பயணம் உறுதி செய்தது.

2016இல் ஒலாந்த் இந்தியா வந்திருந்தபோது ரஃபேல் ஒப்பந்தம் குறித்து மோதி அறிவித்தார்.படத்தின் காப்புரிமைBERTRAND GUAY / GETTY IMAGES Image caption2016இல் ஒலாந்த் இந்தியா வந்திருந்தபோது ரஃபேல் ஒப்பந்தம் குறித்து மோதி அறிவித்தார்.

ஜனவரி 25, 2016 அன்று, ரஃபேல் விமானங்களை வாங்க இரு நாட்டு அரசுகளுக்கும் இடையே கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தம் குறித்து ஒலாந்த் முன்னிலையில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி அறிவித்தார்.

மீடியாபார்ட் உடனான பேட்டியில், "முதலில் 126 விமானங்கள் வாங்கப்பட இருந்த நிலையில் பின்னர் அதை 36 ஆக இந்தியா குறைத்தது. அதனால்தான் அமைச்சர்கள் பேச்சுவார்த்தைக்கு பின் நான் அதில் தலையிட்டேன். பின்னர் அவை பிரான்சிலேயே தயாரிக்கப்படும் என்று முடிவு செய்யப்பட்டது," என்று ஒலாந்த் கூறியுள்ளார்.

ஆனால், மாற்றப்பட்ட இந்த புதிய ஒப்பந்தத்தில் டஸ்ஸோ நிறுவனம் தன் கூட்டாளியான ரிலையன்ஸ் நிறுவனத்துடன் லாபத்தை பகிர்ந்துகொள்ளும் சரத்து சேர்க்கப்பட்டதுதான் இன்று பெரிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது.

'இந்திய அரசுதான் பரிந்துரை செய்தது'

"அம்பானியுடன் ரஃபேல் ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்திய டஸ்ஸோ நிறுவனத்துக்கு இந்திய அரசுதான் ரிலையன்ஸ் குழுமத்தை பரிந்துரை செய்தது. அதனால் ரிலையன்ஸ் நிறுவனம் மூலம் எனக்கு ஆதாயம் எதுவும் இருப்பதாகக் கூறுவதற்கு எந்தக் காரணமும் இல்லை. ஜூலி காயே நடிக்கும் படத்துக்கு இந்த விவகாரத்துடன் தொடர்பு இருக்கும் என்று நான் கற்பனைகூட செய்து பார்க்கவில்லை," என்று ஃபிரான்சுவா ஒலாந்த் கூறியுள்ளார்.

இவர் கூறியுள்ளது, டஸ்ஸோ தாமாகவே ரிலையன்ஸ் நிறுவனத்தை தொழில் கூட்டு வைக்க தேர்வு செய்தது என்று இந்திய அரசு தெரிவித்துள்ள தகவலுக்கு முரணாக உள்ளது.

ஆகஸ்ட் மாதம் ரிலையன்ஸ் வெளியிட்ட செய்திக் குறிப்பில் இந்தியப் பாதுகாப்பு அமைச்சகத்துக்கு இந்த தொழில் கூட்டு உண்டானதில் எந்தப் பங்கும் இல்லை என்று கூறப்பட்டுள்ளது.

Rafaelபடத்தின் காப்புரிமைARNOLD JEROCKI / GETTY IMAGES Image captionஜூலி காயேவுடன் ஒலாந்த்

நடிகை ஜூலி காயே மீடியாபார்ட் நிறுவனத்துக்கு தனது தரப்பு விளக்கத்தை அளித்துள்ளார். " மை ஃபேமிலி தயாரிப்பு நிறுவனம், எனக்கு பங்கு இருக்கும் விஸ்வைர் நிறுவனம் மூலம் இந்த படத் தயாரிப்புக்கு ரிலையன்ஸ் நிதியளிக்க வேண்டும் என்று அணுகியது. அதைத் தொடர்ந்து, படத்தின் தயாரிப்பில் முதலீடு செய்யும் பிற நிறுவனங்களைப் போலவே ரிலையன்ஸ் 10% அளவுக்கு தயாரிப்புச் செலவை அளிக்க ஒப்புக்கொண்டது," என்று அந்த விளக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

படத்தின் தயாரிப்பாளர் எலிசா சௌசாவை மீடியாபார்ட் தொடர்புகொண்டபோது பதில் எதுவும் அளிக்கவில்லை. எனினும் மை ஃபேமிலி நிறுவனம் வெளியிட்டுள்ள விளக்கத்தில், அனில் அம்பானியின் நிறுவனம் திரைப்படத்தின் தயாரிப்பில் முதலீடு செய்தது அனைத்தும் ஜூலி காயேவின் தனிப்பட்ட முயற்சிகளால்தான் என்று கூறியுள்ளது.

திரைப்படம் தயாரிக்க ரிலையன்ஸ் முதலீடு

ரிலையன்ஸ் நிறுவனம் நேரடியாக முதலீடு செய்யாமல் விஸ்வைர் கேபிட்டல் நிறுவனம் மூலம் நிதி வழங்கியுள்ளது. அனில் அம்பானியுடன் தனிப்பட்ட வகையில் நட்பு கொண்டுள்ள விஸ்வைர் நிறுவனத்தின் நிறுவனர் ரவி விஸ்வநாதன், ரிலையன்ஸ் கேபிட்டல் இந்தியாவில் இருக்கும் தங்கள் வைன் தொழில் உள்பட பலவற்றிலும் முதலீடு செய்துள்ளது. அவற்றில் ஒன்றுதான் திரைப்படங்கள் தயாரிக்க நிதி அளிப்பது என்கிறார்.

பிரான்ஸ் வங்கி ஒன்றில் முன்னர் பணியாற்றிய, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரவி விஸ்வநாதன், 25 ஆண்டுகளுக்கும் முன்பு மேத்தியூ பிகாசெ எனும் வங்கி நிர்வாகி ஒருவர் மூலம் அனில் அம்பானிக்கு அறிமுகமானார்.

பெரும்பாலும் பிரெஞ்சு திரைப்படங்களை வெளியிடுவதில் ஈடுபட்டுள்ள விஸ்வைர் நிறுவனம் எப்போதாவதுதான் திரைப்படங்களைத் தயாரிப்பதிலும் முதலீடு செய்கிறது.

இந்தத் திரைப்படத்தின் படப்பிடிப்பில் இமய மலைக்கு தொடர்பு இருப்பதால் ரிலையன்ஸ் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தை அணுகியதாக ரவி விஸ்வநாதன் கூறுகிறார். ஆனால், இந்தியாவில் திரை அரங்குகளில் வெளியிடப்படாத இந்தப் படத்தில் ரிலையன்ஸ் ஏன் முதலீடு செய்ய வேண்டும் என்ற கேள்வியும் எழுப்பப்படுகிறது. இதற்கு ரிலையன்ஸ் இதுவரை பதில் அளிக்கவில்லை.

Rafaelபடத்தின் காப்புரிமைAFP

இந்தியாவின் ஒட்டுமொத்த தேசிய உற்பத்தியில் பெரும் பங்கு வகிக்கும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் அனில் அம்பானியை டஸ்ஸோ நிறுவனத்திடமும் ஜூலி காயேவிடமும் தாம் அறிமுகம் செய்து வைக்கத் தேவையில்லை என்கிறார் ரவி.

நவம்பர் 2016இல் பாதுகாப்பு துறை வட்டாரங்களை வைத்து இண்டெலிஜன்ஸ் ஆன்லைன் செய்தி இணையதளம் வெளியிட்டுள்ள செய்தியில், ரிலையன்ஸ் நிறுவனம் காயே நடிக்கும் படத்தில் முதலீடு செய்ததில் அம்பானி உடன் ரவி கொண்ட தொடர்பு முக்கிய பங்கு வகிக்கிறது என்று கூறப்பட்டுள்ளது.

கைவிடப்பட்ட ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட்

இந்திய எதிர்க்கட்சிகள் எழுப்பியுள்ள கேள்விகளில் இன்னொரு முக்கியமானது, முன்னர் 126 ரஃபேல் விமானங்களை வாங்க பிரான்ஸ் உடன் இந்தியா மேற்கொண்டிருந்த ஒப்பந்தத்தை 2014இல் ஆட்சிக்கு வந்த நரேந்திர மோதி அரசு ரத்து செய்ததுதான்.

முந்தைய ஒப்பந்தத்தின்படி 126 ரஃபேல் ஜெட் போர் விமானங்களில், புதிதாக தயாரிக்கப்படவேண்டிய 108 விமானங்களை தயாரிப்பதற்காக, டஸ்ஸோ நிறுவனத்தின் இந்தியக் கூட்டாளியாக இந்திய அரசுக்குச் சொந்தமான பொதுத் துறை நிறுவனமான ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனம் இருக்கும் என்றும் அவற்றில் 70% விமானங்கள் இந்தியாவிலேயே தயாரிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

2015 ஏப்ரல் 10 அன்று, 36 ரஃபேல் விமானங்கள் 7.5 பில்லியன் யூரோவுக்கு வாங்கப்படும் என்று மோதி அறிவித்தார். புதிய ஒப்பந்தத்தை அறிவிக்கும்போது டஸ்ஸோ நிறுவனத்தின் போட்டியாளராக ஏலம் கோரிய நிறுவனங்கள் பற்றி எதுவும் கூறப்படாதது குறித்து கேள்வி எழுப்பிய இந்திய எதிர்க்கட்சிகள், ஒரு விமானத்தின் விலை 300% அதிகரித்துள்ளது குறித்தும் விமர்சித்தன. பழைய ஒப்பந்தம் ரத்தானது ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனத்துக்கும் பேரிடியாக இருந்தது.

ஜீன் லே ட்யரைன் (இடது) மற்றும் மனோகர் பாரிக்கர்படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionஜீன் லே ட்யரைன் (இடது) மற்றும் மனோகர் பாரிக்கர்

ரிலையன்ஸ் டிஃபன்ஸ் நிறுவனம் மோதியின் அறிவிப்புக்கு 12 நாட்கள் முன்னதாக நிறுவப்பட்டது என்றால், இன்னொரு கிளை நிறுவனமான ரிலையன்ஸ் ஏரொஸட் ரக்சர் , இதற்கு 14 நாட்கள் கழித்து நிறுவப்பட்டது.

மோதியின் ஆதரவாளரான அனில் அம்பானி 2016இல் மோதியின் பிறந்த நாளன்று அவரை தலைவர்களுக்கெல்லாம் தலைவர் என்றார்.

செப்டம்பர் 2016இல் அப்போதைய பிரான்ஸ் பாதுகாப்பு அமைச்சர் ஜீன் லே ட்யரைன், அப்போதைய இந்திய பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பாரிக்கரை சந்தித்து ரஃபேல் விமானங்களை வாங்குவதற்கான ஒப்பந்தத்தின் சரத்துகளை உறுதி செய்தார்.

சில மாதங்களிலேயே 2017 பிப்ரவரியில், பாதுகாப்பு அமைச்சக கூட்டம் ஒன்றுக்குப் பிறகு ஒலாந்த் அனில் அம்பானியை பிரான்ஸ் தலைநகர் பாரிசில் சந்தித்தார்.

ஆட்சி மாற்றம்

பின்னர் பிரான்சில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு எம்மானுவேல் மக்ரோங் அதிபரானார். அவரது அரசின் பாதுகாப்பு அமைச்சராக புதிதாக பொறுப்பேற்ற புளோரன்ஸ் பார்லி, டஸ்ஸோ - ரிலையன்ஸ் ஏரோஸ்பேஸ் லிமிடெட் கூட்டு நிறுவனத்தின் அம்பானி ஏரோஸ்பேஸ் பூங்காவை நாக்பூரில் திறக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

Rafaelபடத்தின் காப்புரிமைDASSAULT RAFALE

ரஃபேல் தயாரிக்க தேவையான பாகங்களை உற்பத்தி செய்ய 100 மில்லியன் யூரோ முதலீடு செய்யப்படும் என்று அந்த நிகழ்ச்சியில் அறிவிக்கப்பட்டது.

இந்த ஒப்பந்தத்தின் ஒட்டுமொத்த மதிப்பில் இது மிகவும் சிறிய தொகைதான். எனினும் இந்த ஒப்பந்தத்தை டஸ்ஸோ செயல்படுத்துவதில் பெரும் அபாயத்தை கடந்தாக வேண்டும். காரணம், ராணுவ விமானங்கள் எதையும் தயாரிப்பதில் முன் அனுபவம் இல்லாத ஒரு கூட்டாளி நிறுவனத்துடன் இணைந்து ரஃபேல் ஜெட் போர் விமானங்களை உற்பத்தி செய்ய வேண்டும் என்கின்றனர் பிரெஞ்சு பாதுகாப்பு நிபுணர்கள்.

ஆனால், டஸ்ஸோ ரிலையன்ஸுக்கு அளிக்கும் பங்குத் தொகையோ மாபெரும் தொகை.

https://www.bbc.com/tamil/india-45612847

Link to comment
Share on other sites

‘‘அப்போது நான் பதவியில் இல்லை’’ - ரபேல் ஒப்பந்த சர்ச்சை குறித்து பிரான்ஸ் அதிபர் மழுப்பல் பதில்

 

 
frpng

பிரான்ஸ் அதிபர் மக்ரோன் -கோப்புப் படம்

ரபேல் விமான சர்ச்சை குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த பிரான்ஸ் அதிபர் மக்ரோன், அப்போது தான் பதவியில் இல்லை என மழுப்பலான பதில் அளித்தார்.

பிரான்ஸ் நாட்டிடம் இருந்து 36 ரபேல் போர் விமானங்களை வாங்க மத்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. கடந்த காங்கிரஸ் ஆட்சியின்போதே இதுதொடர்பாக பிரான்ஸ் அரசிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அப்போது ஒரு போர் விமானத்தின் விலை ரூ.526 கோடி ஆக நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் தற்போதைய மத்திய அரசு ஒரு போர் விமானத்தை ரூ.1,670 கோடி விலையில் வாங்குவதாக காங்கிரஸ் குற்றம்சாட்டி வருகிறது.

 

ரபேல் ஒப்பந்தம் தொடர்பான விவரங்களை வெளியிடுமாறு மத்திய அரசை காங்கிரஸ் வலியுறுத்தி வருகிறது. ஆனால் இது ரகசிய ஒப்பந்தம் என்பதால் விவரங்களை வெளியிட முடியாது என்று மத்திய அரசு கூறி வருகிறது.

இதனிடையே, பிரான்ஸ் முன்னாள் அதிபர் ஹாலண்டே கூறுகையில் ‘‘பிரான்ஸ் நாட்டின் ரபேல் ரக போர் விமானம் தயாரிப்பதற்காக டசால்ட் ஏவியேஷன் நிறுவனத்துடன் இந்தியா ஒப்பந்தம் செய்து கொண்டது. யாரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற வாய்ப்பு பிரான்ஸூக்கு வழங்கப்படவில்லை. அம்பானி நிறுவனத்துடன் மட்டுமே இணைந்து பணியாற்ற ஒப்பந்தம் செய்யப்பட்டது’’ என தெரிவித்தார்.

அம்பானி நிறுவனத்துக்கு ஆதரவாக பிரதமர் மோடி செயல்பட்டார் என காங்கிரஸ் குற்றம்சாட்டி வரும் நிலையில் ஹாலண்டேயின் பேட்டி மத்திய அரசுக்கு கூடுதல் நெருக்கடியை ஏற்படுத்தியது.

இந்தநிலையில், ரபேல் போர் விமான ஒப்பந்தம் இந்திய அரசியலில், புயலை கிளப்பி வரும் நிலையில், பிரான்ஸ் நாட்டின் தற்போதைய அதிபர் இம்மானுவேல் மக்ரோனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். ஐநா கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த அவரிடம் நிகழ்ச்சிக்கு இடையே இந்த கேள்வி கேட்கப்பட்டது. அப்போது இந்த விவகாரம் குறித்து பதிலளிக்கமல் அவர் நழுவினார்.

இந்த ஒப்பந்தம் கையெழுத்தான போது தான் பிரதமர் பதவியில் இல்லை என மழுப்பலாக தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில் ‘‘ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக பிரான்ஸிடம் தெளிவான விதிமுறைகள் உள்ளன. இரு அரசுகளுக்கு இடையேயான ஒப்பந்தம். இருநாடுகளுக்கும் ராணுவம் பாதுகாப்பு உள்ளிட்ட விவகாரங்களி்ல் விரிவான ஒத்துழைப்பு உள்ளது’’ என தெரிவித்தார்.

ரபேல் ஒப்பந்தம் கையெழுத்தானபோது பிரான்ஸ் அதிபராக ஹாலண்டே பதவி வகித்தார். அதன் பிறகு நடந்த தேர்தலில் மக்ரோன் வெற்றி பெற்று அதிபரானார்.

https://tamil.thehindu.com/world/article25045357.ece?utm_source=HP&utm_medium=hp-tsothers

Link to comment
Share on other sites

ரஃபேல் பேரம்... எது நிஜம்?

 
 

 

p4c_1537860993.jpg

‘‘இந்தியாவின் பிரதமர் ஊழல் செய்திருக்கிறார் என நாங்கள் நம்புகிறோம். இந்த தேசத்தின் பாதுகாவலர் ஒரு திருடரா என்ற கேள்வி மக்கள் மனதில் எழுந்திருக்கிறது. இந்திய இளைஞர்கள் மிகவும் நம்பிய நரேந்திர மோடி, நம் பாக்கெட்டுகளிலிருந்து 30 ஆயிரம் கோடி ரூபாயை எடுத்து அனில் அம்பானியின் பாக்கெட்டில் வைத்துவிட்டார். தன் வாழ்நாளில் ஒரே ஒரு விமானத்தைக் கூட செய்திருக்காத அனில் அம்பானிக்கு போர் விமான ஒப்பந்தம் தரப்பட்டிருக்கிறது. இதுபற்றிக் கேட்டால் மோடி வாய்திறக்க மறுக்கிறார்’’ என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடுமையாகக் குற்றம் சாட்டுகிறார்.

போபர்ஸ் ஊழலின்போது, அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தியை நேரடியாகக் குற்றம் சாட்டின எதிர்க்கட்சிகள். அதன்பின் பிரதமர்கள்மீது நேரடி ஊழல் குற்றச்சாட்டு எழுந்ததில்லை. ‘தொழிலதிபர்களுக்கு நெருக்கமாக இருக்கிறார்’ என்று புகார் கூறப்பட்டாலும், நரேந்திர மோடி தன் பொது வாழ்வில் ஊழல் குற்றச்சாட்டுகள் எதையும் சந்தித்ததில்லை. சொல்லப்போனால், அவரின் நான்கரை ஆண்டு கால அரசுகூட இப்படி ஒரு நெருக்கடியை எதிர்கொண்டதில்லை. ஆனால், ரஃபேல் போர் விமான பேரம் தொடர்பாக எழுப்பப்படும் கேள்விகளும், அவற்றில் ஒன்றுக்குக்கூட பிரதமர் பதில் சொல்லாமல் இருப்பதும் இந்த அரசின்மீதான நம்பகத்தன்மையை கேள்விக்கு உள்ளாக்கி யிருக்கிறது. 

p4d_1537860895.jpg

கடந்த சில மாதங்களாகவே ரஃபேல் விவகாரம் நாடாளுமன்றத்திலும் நாடாளுமன்றத்துக்கு வெளியிலும் பேசப்பட்டு வந்தாலும், இப்போது சூடுபிடித்திருக்கக் காரணம்... இந்த ஒப்பந்தம் கையெழுத்தானபோது பிரான்ஸ் அதிபராக இருந்த பிரான்ஸ்வா ஹோலாந்த், சில நாள்களுக்கு முன்பு போட்ட குண்டு. ‘‘இந்த ஒப்பந்தத்தின்படி டஸோ நிறுவனத்தின் இந்தியப் பங்குதாரராக ரிலையன்ஸ் டிஃபென்ஸ் நிறுவனத்தை இறுதி செய்தது இந்திய அரசுதான்’’ என்று அவர் கூறியதுதான் எதிர்க்கட்சிகள் இப்போது அனல் கக்கக் காரணம்.

ரஃபேல் ஜெட் போர் விமானத்தின் தரம் குறித்தும் திறன் குறித்தும் யாருக்கும் சந்தேகம் இல்லை. ஆனால், ரஃபேல் பேர விவகாரத்தில் ஆரம்பம் முதலே ரவுசு கட்டும் மர்மங்கள் ஏராளம். இவற்றில் எந்த மர்மத்துக்கும் மத்திய அரசு பதில் தர மறுப்பதுதான் சந்தேகத்தை இன்னும் அதிகமாக்குகிறது.

p4b_1537861068.jpg2007-ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில், இந்திய விமானப்படைக்கு 126 நவீனரக போர் விமானங்கள் வாங்க மத்திய அரசு முடிவெடுத்தது. இதில் ஐந்து நிறுவனங்கள் போட்டியிட்டன. 2012-ம் ஆண்டு டெண்டரை இறுதிசெய்தபோது, குறைந்தபட்ச விலையைக் குறிப்பிட்டிருந்தது பிரான்ஸ் நாட்டின் டஸோ ஏவியேஷன் நிறுவனம். 126 விமானங்களில் 18 விமானங்களை பிரான்ஸிலேயே தயாரித்து உடனடியாகத் தர வேண்டும் எனவும், மற்ற 108 விமானங்களை இந்தியாவைச் சேர்ந்த பொதுத்துறை நிறுவனமான ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் லிமிடெட் (ஹெச்.ஏ.எல்) நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கித் தரவேண்டும் எனவும் நிபந்தனை. வாங்கும் விமானங்களில் இந்தியாவுக்குத் தேவையான மாற்றங்களைச் செய்ய வேண்டும் எனவும், ஹெச்.ஏ.எல் நிறுவனத்துக்கு தொழில்நுட்பப் பரிமாற்றத்தைச் செய்யவேண்டும் எனவும் மத்திய பாதுகாப்பு அமைச்சகம் சொன்னது. ஒவ்வொரு விமானத்துக்கும் 526 கோடி ரூபாய் என முடிவாகி, மொத்த ஒப்பந்தத் தொகை 7.75 பில்லியன் யூரோ என்று இறுதி செய்யப்பட்டது.

இதைத் தொடர்ந்து டஸோ ஏவியேஷன் நிறுவனமும், ஹெச்.ஏ.எல் நிறுவனமும் தொழில்நுட்ப ரீதியான பேச்சு வார்த்தைகளில் ஈடுபட்டன. இதில் ஒரு முடிவை எட்டுவதற்கு முன்பாக, தேர்தல் வந்துவிட்டது. காங்கிரஸ் தோற்று, பி.ஜே.பி வென்றது. நரேந்திர மோடி பிரதமரானார்.

2015-ம் ஆண்டு ஏப்ரல் 10-ம் தேதி நரேந்திர மோடி பிரான்ஸ் போனார். அந்த தினத்திலிருந்து தான் சர்ச்சைகள் தொடங்கின. பிரான்ஸ் அதிபர் பிரான்ஸ்வா ஹோலாந்துடன் பாரிஸில் நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பிறகு, ‘‘இந்தியா, 36 ரஃபேல் போர் விமானங்களை வாங்கும்’’ என மோடி அறிவித்தார். மொத்த ஒப்பந்தத் தொகை 7.1 பில்லியன் யூரோ. இந்த அறிவிப்புக்குப் பிறகே கேள்விகள் துரத்த ஆரம்பித்தன.

dot_1537861091.jpg 2012-ம் ஆண்டில் 126 விமானங்களை வாங்குவதற் காகப் போடப்பட்ட ஒப்பந்தம் என்ன ஆயிற்று? அதை யார் ரத்து செய்தது? இந்திய அரசா? பிரான்ஸ் அரசா? டஸோ ஏவியேஷன் நிறுவனமா? பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருந்தபோதே, அந்த ஒப்பந்தத்தை ரத்து செய்யும் அதிகாரத்தை யாருக்கு யார் கொடுத்தது?

dot_1537861091.jpgபோர் விமானங்களை வாங்குவது தொடர்பாக மத்திய அமைச்சரவைக் குழு கூடி முடிவெடுக்க வேண்டும். கொள்முதல் நடைமுறைகள் பின்பற்றப்பட வேண்டும். ஆனால், இந்த விஷயத்தில் மோடி பாரிஸில் அறிவிப்பு வெளியிட்டுவிட்டு இந்தியா திரும்பிய பிறகே அமைச்சரவைக் குழு கூடி இதற்கு ஒப்புதல் தந்தது. 2016 செப்டம்பரில்தான் ஒப்பந்தம் இறுதியானது. சுமார் 58,000 கோடி ரூபாய் ஒப்பந்தம். இதை, முறையான ஒப்புதல் இல்லாமல் மோடி ஏன் முன்கூட்டியே அறிவித்தார்?

p4_1537861148.jpg

dot_1537861091.jpg 126 விமானங்களை ஒவ்வொரு விமானமும் 526 கோடி ரூபாய் என வாங்குவதற்கு 2012-ம் ஆண்டு முடிவு செய்யப்பட்டது. மோடி இதை மாற்றி 36 விமானங்கள் வாங்குவதாக அறிவித்தார். ஒவ்வொன்றின் விலையும் 1,670 கோடி ரூபாய். மூன்றே ஆண்டுகளில் மூன்று மடங்குக்கும் அதிகமாக விலை ஏன் உயர்ந்தது? ‘ஆயுதங்களைச் சேர்த்ததால் இந்த விலை’ என அரசு காரணம் சொல்கிறது. ஆனால், இதற்கு 36 விமானங்களுக்கும் சேர்த்தே 9,022 கோடி ரூபாய்தான் கூடுதலாக ஆகிறது. அப்படியானால், மற்ற தொகைக்கு என்ன கணக்கு?

dot_1537861091.jpg முந்தைய ஒப்பந்தத்தில் ‘இந்தியாவின் ஹெச்.ஏ.எல் நிறுவனத்துடன் தொழில்நுட்பப் பரிமாற்றம் செய்துகொள்ளப்படும்’ என விதி இருந்தது. மோடி ஆட்சியில் போடப்பட்ட ஒப்பந்தத்தில் இந்த விதி இல்லை. ‘‘இந்தத் தொழில்நுட்பப் பரிமாற்றத்தின் மூலம் இந்தியா போர் விமானங்கள் தயாரிக்கும் வல்லரசுகளில் ஒன்றாக மாறும் வாய்ப்பு இருந்தது. அந்த மகத்தான வாய்ப்பை இழந்துவிட்டோம். ‘மேக் இன் இந்தியா’ என்ற முழக்கத்துக்கு எதிரானது இல்லையா இது?’’ என்கிறார்கள் இந்திய ராணுவ நிபுணர்கள்.

dot_1537861091.jpg இந்திய ராணுவ ஒப்பந்தங்களில், மொத்த ஒப்பந்தத் தொகையில் குறைந்தபட்சம் 30 சதவிகிதத்தை இந்தியாவில் முதலீடு செய்யும் வகையில் பங்குதாரர் நிறுவனத்தைத் தேர்வு செய்ய வேண்டும் என்பது விதி. இந்தியாவில் விமானத் தயாரிப்பில் அனுபவம் உள்ள ஒரே நிறுவனம், மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான ஹெச்.ஏ.எல். அதை விட்டுவிட்டு, அனில் அம்பானியின் ரிலையன்ஸ் டிஃபென்ஸ் நிறுவனத்தை தனது பங்குதாரர் நிறுவனமாகத் தேர்ந்தெடுத்தது டஸோ ஏவியேஷன். இது எப்படி நிகழ்ந்தது?

dot_1537861091.jpg 2015 ஏப்ரல் 10-ம் தேதி பிரான்ஸ் சென்று இந்த விமான பேரத்தை மோடி இறுதி செய்தார். அதற்கு 14 நாள்கள் முன்னதாக ஒரு சம்பவம் நிகழ்கிறது. ரிலையன்ஸ் டிஃபென்ஸ் லிமிடெட் என்ற நிறுவனத்தை மார்ச் 28-ம் தேதிதான் ஆரம்பித்து பதிவு செய்தார் அனில் அம்பானி. ஆரம்பித்து வெறும் இரண்டே வாரங்கள் ஆகியிருந்த, விமானத்தில் பயன்படுத்தும் ஒரே ஒரு ஸ்க்ரூகூட தயாரித்த அனுபவம் இல்லாத நிறுவனத்தை, உலகின் முன்னணி போர் விமானத் தயாரிப்பு நிறுவனம் எப்படி பங்குதாரராக ஏற்றது?

dot_1537861091.jpg இந்த ஒப்பந்தம் அனில் அம்பானியின் நிறுவனத்துக்குத்தான் தரப்படும் என்பதை யார் முடிவு செய்தது? யாரிடம் யார் பரிந்துரைத்தார்கள்? பிரான்ஸ் வரை பெயர் தெரியும் அளவுக்கு அது பெரிய நிறுவனம் இல்லை. அனுபவமும் இல்லை. அதை ஏற்றுக்கொள்ள டஸோ ஏவியேஷன் எப்படி முன்வந்தது?

p4a_1537861164.jpg

dot_1537861091.jpg அனில் அம்பானியின் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம், வெளிநாட்டில் வாங்கிய பெரிய கடனை உரிய காலத்தில் திருப்பிச் செலுத்தமுடியாமல் தள்ளாடிக் கொண்டிருக்கிறது. கப்பல்கள் கட்டும் இன்னொரு நிறுவனமான ரிலையன்ஸ் நேவல் அண்டு இன்ஜினீயரிங், திவாலாகிவிட்டதாக நிறுவனச் சட்டங்கள் தீர்ப்பாயத்தில் ஐ.டி.பி.ஐ வங்கி விண்ணப்பம் செய்திருக்கிறது. இப்படி கடனைத் திருப்பிச் செலுத்த முடியாத, திவாலான ஒரு தொழிலதிபர் எப்படி ரஃபேல் விமான பேரத்தில் நுழைய முடிந்தது?

dot_1537861091.jpg ‘அனில் அம்பானிக்கு இதைத் தரச் சொன்னது இந்திய அரசுதான்’ என மோடியுடன் இணைந்து ஒப்பந்தம் போட்ட பிரான்ஸ்வா ஹோலாந்த் சொல்லிவிட்டார். (அவர் அப்படிச் சொல்ல ஒரு காரணமும் இருக்கிறது. அவரின் தோழியான நடிகை ஜூலி கேயே ஒரு சினிமா தயாரிப்பு நிறுவனம் வைத்துள்ளார். இந்தியாவில் திவாலாகி இருக்கும் அனில் அம்பானி, இந்த சினிமா நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளார். ‘ரஃபேல் பேரத்தை முடித்துக்கொடுத்ததற்கு இது நன்றிக்கடனா?’ என்ற கேள்வி எழுந்தபோதே அவர் அதைச் சொன்னார்.) ஆனால், பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன், ‘‘டஸோ ஏவியேஷன் இந்தியாவில் எந்த நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துகொள்ளும் என்பதை நான் பரிந்துரைக்கவும் முடியாது; ஒப்புதல் கொடுக்கவும் முடியாது; நிராகரிக்கவும் முடியாது. இது அந்த இரண்டு நிறுவனங்கள் சம்பந்தப்பட்ட விஷயம். எங்களுக்கு கடைசிவரை தெரியாது’’ என்றார். பாதுகாப்பு கொள்முதல் விதிகள் என மத்திய அரசு உருவாக்கி வைத்திருக்கும் விதிகளிலேயே, ‘இந்த ஒப்பந்தம் பற்றி அரசுக்குத் தெரிவிக்க வேண்டும்’ என்று இருக்கிறது. இதை நிர்மலா சீதாராமன் படிக்கவில்லையா? 

dot_1537861091.jpg அனுபவமுள்ள ஹெச்.ஏ.எல் நிறுவனம் ஏன் இதில் புறக்கணிக்கப்பட்டது? ‘‘இங்கு போதுமான வசதிகள் இல்லை’’ என்கிறார் நிர்மலா சீதாராமன். பெங்களூரில் இருக்கும் இந்த நிறுவனத்தில் சுமார் 20 ஆயிரம் பேர் பணிபுரிகிறார்கள். மிராஜ், ஹாக், சுகோய் என பல விமானங்களை உருவாக்கிய அனுபவம் பெற்ற நிறுவனம் இது. பாதுகாப்பு அமைச்சகத்தின் பாராட்டுகளை அடிக்கடி பெற்ற நிறுவனம் இது. அடுத்த மூன்று ஆண்டுகளில் சுமார் 61,000 கோடி ரூபாய் பணிகளைச் செய்ய ஒப்பந்தம் பெற்றுள்ளது இந்த நிறுவனம். 1971-ம் ஆண்டு பாகிஸ்தான் போர் வெடித்தபோது, அவசரமாக இந்த நிறுவனம் ரெடி செய்துகொடுத்த விமானங்கள்தான் நாம் போரில் வெல்ல முக்கியமான காரணம். இதைப் புறக்கணிக்கலாமா?

எதற்கும் சரியான பதில் இல்லை. ‘ஒப்பந்தத்தை ரத்து செய்ய முடியாது’, ‘எதிர்க்கட்சிகளுக்கு நாங்கள் ஏன் பதில் சொல்ல வேண்டும்?’, ‘நாடாளுமன்றக் கூட்டுக்குழு விசாரணை நடத்த முடியாது’... இப்படி ஒருவித ஆணவத்துடனே அருண் ஜெட்லியும் நிர்மலா சீதாராமனும் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். கேள்வி கேட்பவர்களை ‘தேசத் துரோகிகள். சீனாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இவர்கள் உதவுகிறார்கள்’ என்கிறார்கள்.

2005-ம் ஆண்டு அமெரிக்காவுடன் இந்தியா அணுசக்தி ஒப்பந்தம் போட்டது. அப்போது இதில் ரகசியம் காக்கப்படுவது பற்றி எதிர்க் கட்சிகள் கொந்தளிக்க, முக்கியமான தலைவர்களை அழைத்து ஒப்பந்தம் பற்றிச் சொன்னார் பிரதமர் மன்மோகன் சிங். ரஃபேல் விமானத்தின் தொழில்நுட்ப ரகசியங்களை யாரும் கேட்கவில்லை. அந்த ஒப்பந்தம் எப்படிப்பட்ட சூழலில் போடப்பட்டது, பங்குதாரர்கள் எப்படி இணைந்தார்கள் என்ற கேள்விக்கு பதில் சொல்ல இந்த அரசு கடமைப்பட்டது. சந்தேகத்துக்கு அப்பாற்பட்டவர்கள் என யாரும் இல்லை; சந்தேகத்தைக் கேட்பது தேசவிரோதமும் இல்லை.

- தி.முருகன்

https://www.vikatan.com/juniorvikatan/2018-sep-30/investigation/144474-rafale-deal-controversy-on-pm-modi.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஆமாம் நானும் விரும்புகிறேன்   நடக்குமா??  நடக்காது ஓருபோதும்.  நடக்கப்போவதில்லை,....காரணம் தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை    சீமானை முதல்வர் ஆக்க தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை   6.23 கோடி வாக்குகளில். குறைந்தது 3.5 கோடி வாக்குகள். பெற்றால் தான்   முதல்வர் ஆக முடியும் அது தனி கட்சி அல்லது பல கட்சிகளின் கூட்டமைப்பு      தனியா போட்டி இடும் சீமான் 0.3 கோடி வாக்குகளைப் பெற்று எப்படி  முதல்வர் ஆகலாம்??   சீமான் தலைமையில் எந்தவொரு கட்சியும். கூட்டணி அமைக்காது   சீமான் தான்  மற்ற கட்சிகளின் தலைமையில் கூட்டணி அமைக்கலாம்   அப்படி அமையும் கூட்டணியில். சீமானுக்கு முதல்வர் பதவி கிடைக்காது  சீமான் வென்றால் தேர்தல் ஆணையம் நல்லது,....வாக்கு எண்ணும் மெசினும். நல்லது    சீமான் தோற்கும்போது இவை இரண்டுமே கூடாது      மேலும் என்னை சீமான் எதிர்ப்பாளர். என்று ஏன் முத்திரை குற்ற வேண்டும்  ...?? ஒருவர் வெல்லும் வாய்ப்புகள் இல்லை என்று கருத்து எழுதும் போது   அவரின் எதிர்ப்பாளர். என்பது சரியான கருத்தா?? இல்லையே?? 
    • கொழும்பான் கூட்டுனா அது கொத்து, கனடால அடிச்ச அது தமிழன் கெத்து  இதுக்கு யாழில குத்தி முறிந்து கொடுக்கிறோம் பாரு சூ... (சப்பாத்து)
    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.