Jump to content

`சட்டப்படி வழக்கை நீதிமன்றத்தில் எதிர்கொள்வேன்' - சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் கைது!


Recommended Posts

`சட்டப்படி வழக்கை நீதிமன்றத்தில் எதிர்கொள்வேன்' - சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் கைது!

 

சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் சென்னையில் உள்ள அவரது வீட்டில் கைது செய்யப்பட்டார்.

கருணாஸ் கைது


சட்டமன்ற உறுப்பினரும், நடிகருமான கருணாஸ் கடந்த 16-ம் தேதி வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் ஒன்றில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், தமிழக முதல்வர் தன்னைக் கண்டு அஞ்சுவதாகத் தெரிவித்தார். அதுமட்டுமின்றி, `சட்டையை கழற்றிவிட்டு வந்து நேருக்கு நேர் என்னுடன் மோதத் தயாரா?' எனப் போலீஸ் அதிகாரி ஒருவருக்கு, கருணாஸ் சவால் விடுத்தார். மேலும் சாதி ரீதியாகவும் கூவத்தூரை அடையாளம் காட்டியது நான்தான் எனவும் அவர் பல்வேறு சர்ச்சை கருத்துக்களைத் தெரிவித்தார்.

 

 

அவர் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைலாகியது. முதல்வர் மற்றும் காவல்துறையை அவதூறாகப் பேசியதால், அவர் மீது நுங்கம்பாக்கம் காவல்நிலையத்தில் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. யூடியூபில் வெளியான இந்த வீடியோவை அடிப்படை ஆதரமாகக் கொண்டு அவர் மீது 6 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டில், காவல்துறையினரால் கருணாஸ் கைது செய்யப்பட்டார். அப்போது பேசிய அவர், `அரசு திட்டமிட்டே பழிவாங்குகிறது. சிறைச்சாலைகள் எங்களுக்காகத் தான் கட்டப்பட்டுள்ளன. வழக்கை நீதிமன்றத்தில் சட்டப்படி எதிர்கொள்வேன்' என்று தெரிவித்தார்.

https://www.vikatan.com/news/tamilnadu/137760-karunas-areested-by-police.html

Link to comment
Share on other sites

கருணாசுக்கு ஒக்டோபர் 5-ம் திகதி வரை விளக்கமறியல்

Karunas.jpg?resize=600%2C350

தமிழக முதலமைச்சர் மற்றும் காவல்துறையினரை அவதூறாக பேசிய வழக்கில் இன்று காலை கைது செய்யப்பட்ட கருணாஸை ஒக்டோபர் 5-ம் திகதி வரை நீதிமன்ற காவலில் வைக்குமாறு எழும்பூர் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

http://globaltamilnews.net/2018/96718/

கருணாஸ் மீது என்னென்ன பிரிவுகளின் கீழ் வழக்கு?- கொலை முயற்சி பிரிவு நீக்கம்; அக்.5 வரை சிறை

 

 
Capture

கருணாஸ் கைது செய்யப்பட்டபோது. | வீடியோ பிடிப்பு.

வன்முறையைத்தூண்டும் பேச்சால் கைது செய்யப்பட்ட கருணாஸ் மீது போடப்பட்ட 307 வது பிரிவை நீக்க உத்தரவிட்ட நீதித்துறை நடுவர் வரும் அக்.5 வரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

நடிகர் கருணாஸ் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் கட்டப்பஞ்சாயத்து செய்வதாக எழுந்த புகாரின்பேரில் தி.நகர் டிசி அரவிந்தன் உத்தரவின்பேரில் வடபழனி போலீஸார் நடவடிக்கை எடுத்தனர். இதில் கோபமடைந்த கருணாஸ் ஆர்ப்பாட்டம் ஒன்றை வள்ளுவர் கோட்டத்தில் கடந்த 16-ம் தேதி நடத்தினார்.

 

அந்த ஆர்ப்பாட்டத்தில் தனது சமுதாயப் பெருமையை பெரிதாகப் பேசிய கருணாஸ் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் பதவியைப் பற்றியும் அவர் தான் அடித்து விடுவேன் என்று தன்னைப் பார்த்து பயப்படுவதாகவும் பேசினார்.

பின்னர் தனது ஆட்களின் வீரப்பிரதாபங்களைப் பேசிய கருணாஸ், ''நீங்கள் எல்லாம் ஒரு ஆளை கொலை பண்ண வேண்டும் என்றால் பத்து ஆட்களை சேர்த்துக்கொண்டு குடித்துவிட்டு இரவு முழுவதும் திட்டமிட்டு பின்னர் கொலை செய்வீர்கள். நாங்கள் தூங்கி எழுந்து பல் தேய்க்கும் நேரத்தில் செய்துவிடுவோம்'' என்று பேசினார்.

பின்னர் ஒரு நாளைக்கு குடிப்பதற்கே ரூ.1 லட்சம் செலவு செய்வதாகத் தெரிவித்த அவர் கொலை செய்வதாக இருந்தால் என்னிடம் சொல்லிவிட்டுச் செய் என்று தொண்டர்களைப் பார்த்துப் பேசினார். பின்னர் தனது ஆட்களின் காலை ஒடி கையை ஒடி என்று உத்தரவிட்டால் அந்த உத்தரவிட்டவன் காலை ஒடி என்று பேசினார்.

பின்னர் ஐபிஎஸ் அதிகாரி அரவிந்தனை நேரடியாக வம்பிழுத்த அவர் உனக்கு என்ன அப்படி ஈகோ, பதவி இருக்கும் அதிகாரம்தானே உன் காக்கிச்சட்டையை கழற்றிவிட்டு வா பார்த்துக்குவோம் என்று திரும்பத் திரும்பப் பேசினார். நான் நினைத்திருந்தால் யூனிபார்மை கழற்றியிருப்பேன் என்றெல்லாம் பேசினார்.

இதையடுத்து அவரை கைது செய்ய கண்டனக்குரல் எழுந்தது. கருணாஸ் மீது நுங்கம்பாக்கம் காவல் உதவி ஆய்வாளர் ராஜசேகரன் என்பவர் அளித்த புகாரின் பேரில் கொலைமுயற்சி (307), கொலை மிரட்டல் (506(2)), வன்முறையைத் தூண்டும் வகையில் பேசுவது (153), இரு சமூகத்தினரிடையே வன்முறையைத் தூண்டும் வகையில் பேசுவது (153(A)(1)(a)) பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் தூண்டும் வகையில் பேசுவது (504), தனது கருத்தின் மூலம் பொது மக்களுக்குத் தீங்கு ஏற்படும் வகையில் நடப்பது 505(i) பொதுமக்களுக்கு எதிராகவோ மக்களுக்கு எதிராக அச்சத்தை ஏற்படுத்துவது (b) உள் நோக்கத்துடன் மாற்று சமூகத்திற்கு அச்சத்தை உருவாக்கும் வகையில் எதிராகப் பேசுவது(c) தூண்டுவது, உருவாக்குவது (ii), கொலை முயற்சி 307, கொலைமிரட்டல் 506(i) சென்னை மாநகர போலீஸ் சட்டம் அனுமதியை மீறி கட்டுப்பாடுகளை மீறிப் பேசுவது (41(6)(a)(b)(c) MCP Act 1888) குற்றச்சதி (r/w 120(B))IPC ஆகிய பிரிவுகளின் கீழ் நுங்கம்பாக்கம் போலீஸாரால் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதையடுத்து அவரை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டு கைது செய்யப்படுவார் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் அவரை கைது செய்யாமல் போலீஸார் காலம் தாழ்த்தினர். இந்நிலையில் நேற்று மதுரையில் பேட்டியளித்த முதல்வர் எடப்பாடி சட்டம் தன் கடமையைச் செய்யுமென்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இன்று அதிகாலை திடீரென கருணாஸ் மற்றும் செல்வநாயகம் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவரை கைது செய்த போலீஸார் நுங்கம்பாக்கம் காவல் நிலையம் அழைத்து வந்தனர். பின்னர் அவரிடம் விசாரணை நடத்திய பின்னர் அவரை எழும்பூர் 13 வது குற்றவியல் நடுவர் கோபிநாத் வீட்டில் போலீஸார் ஆஜர்ப்படுத்தினர். அங்கு அவர்மீது போடப்பட்ட கொலை முயற்சி வழக்குக்கு கருணாஸின் வழக்கறிஞர் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. நீதிமன்ற நடுவரும் கொலை முயற்சி வழக்கை ரத்துச் செய்ய உத்தரவிட்டதை அடுத்து போலீஸார் அதை திரும்ப பெற்றனர்.

இதையடுத்து கருணாஸ், செல்வநாயம் இருவரையும் வரும் அக்.5 வரை சிறையில் அடைக்க நீதிமன்ற நடுவர் உத்தரவிட்டதை அடுத்து இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர். கருணாஸ் மீது கடந்த ஏப்ரல் மாதம் ஐபிஎல் போராட்டத்தில் ஈடுபட்ட வழக்கும் தூசு தட்டி எடுக்கப்பட்டுள்ளது. ஐபிஎல் போராட்டத்தில் இரண்டு சம்பவங்களின் போது 13 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் கீழ்கண்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மீதும் விரைவில் அவர் கைது செய்யப்படலாம் என தெரிகிறது.

https://tamil.thehindu.com/tamilnadu/article25019902.ece?utm_source=HP&utm_medium=hp-tslead

Link to comment
Share on other sites

கருணாஸ் புழல் சிறையிலிருந்து வேலூர் சிறைக்கு மாற்றப்படுகிறார்

 

 
KARUNASKB1jpg

சர்ச்சை, மிரட்டல், அவதூறு பேச்சு பேசியதாகக் கைது செய்யப்பட்ட நடிகரும், சட்டமன்ற உறுப்பினருமான கருணாஸ் வேலூர் மத்திய சிறைக்கு மாற்றப்படுகிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

திருவாடனை தொகுதி எம்.எல்.ஏ.வான கருணாஸ் முதல்வர், காவல்துறையை அவதூறாகவும் மிரட்டும் விதமாகவும் பேசியதாக இன்று காலை கைது செய்யப்பட்டார்.

 

பிறகு அவர் நுங்கம்பாக்கம் காவல்நிலையத்துக்குக் கொண்டு வரப்பட்டு 3 மணி நேரத்துக்கு மேலாக விசாரிக்கப்பட்டார். பிறகு எழும்பூர் 13ஆவது நீதிமன்ற நீதிபதி கோபிநாத் வீட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அவருடன் கைதாகிய செல்வநாயகம், கார்த்திக், நெடுமாறன் ஆகிய கட்சி நிர்வாகிகளும் நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டனர்.

இதையடுத்து கருணாஸ் மீதான வழக்கை விசாரித்த நீதிபதி கொலை முயற்சி பிரிவை (307) ரத்து செய்தார். மேலும் கருணாஸ் மற்றும் முக்குலத்தோர் புலிப்படையை சேர்ந்த நிர்வாகி செல்வநாயகம் ஆகியோரை அக்டோபர் 5-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இதனிடையே எம்.எல்.ஏ. கருணாஸ் தரப்பில் நாளை காலை 10 மணிக்கு ஜாமீன் மனு தாக்கல் செய்யப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து எம்.எல்.ஏ. கருணாஸ் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த நிலையில், கைது செய்யப்பட்ட எம்.எல்.ஏ. கருணாஸ் புழல் சிறையில் இருந்து வேலூர் மத்திய சிறைக்கு மாற்றப்படுகிறார்.  அவர் மீது கூடுதலாக 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன.

https://tamil.thehindu.com/tamilnadu/article25020331.ece?utm_source=HP&utm_medium=hp-tsothers

Link to comment
Share on other sites

மேலும் இரண்டு வழக்குகளில் கருணாஸ் கைது?- காவலில் எடுத்து விசாரிக்க மனு

 

 
actor-turned-mla-karunas-who-has-been-ar

போலீஸ் காவலில் கருணாஸ்

முதல்வர் மற்றும் காவல் அதிகாரியை விமர்சித்து கைது செய்யப்பட்ட கருணாஸை மேலும் இரண்டு வழக்குகளில் கைது செய்ய போலீஸார் முடிவு செய்துள்ளனர். அவரைக் காவலில் எடுத்து விசாரிக்கவும் முடிவு செய்துள்ளனர்.

நடிகர் கருணாஸ் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் கட்டப்பஞ்சாயத்து செய்வதாக எழுந்த புகாரின் பேரில் தி.நகர் காவல் துணை ஆணையர் அரவிந்தன் உத்தரவின் பேரில் வடபழனி போலீஸார் நடவடிக்கை எடுத்தனர். இதில் கோபமடைந்த கருணாஸ் ஆர்ப்பாட்டம் ஒன்றை வள்ளுவர் கோட்டத்தில் கடந்த 16-ம் தேதி நடத்தினார்.

 

அந்த ஆர்ப்பாட்டத்தில் தனது சமுதாயப் பெருமையை பெரிதாகப் பேசிய கருணாஸ் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் பதவியைப் பற்றியும் அவர் தான் அடித்து விடுவேன் என்று தன்னைப் பார்த்து பயப்படுவதாகவும் பேசினார்.

பின்னர் தனது ஆட்களின் பிரதாபங்களைப் பேசிய கருணாஸ், ''நீங்கள் எல்லாம் ஒரு ஆளை கொலை பண்ண வேண்டும் என்றால் பத்து ஆட்களை சேர்த்துக்கொண்டு குடித்துவிட்டு இரவு முழுவதும் திட்டமிட்டு பின்னர் கொலை செய்வீர்கள். நாங்கள் தூங்கி எழுந்து பல் தேய்க்கும் நேரத்தில் செய்துவிடுவோம்'' என்று சர்ச்சையாகப் பேசினார்.

பின்னர் ஒரு நாளைக்கு குடிப்பதற்கே ரூ.1 லட்சம் செலவு செய்வதாகத் தெரிவித்த அவர் கொலை செய்வதாக இருந்தால் என்னிடம் சொல்லிவிட்டுச் செய் என்று தொண்டர்களைப் பார்த்துப் பேசினார். பின்னர் தனது ஆட்களின் காலை ஒடி, கையை ஒடி என்று உத்தரவிட்டால் அந்த உத்தரவிட்டவன் காலை ஒடி என்று பேசினார்.

பின்னர் ஐபிஎஸ் அதிகாரி அரவிந்தனை நேரடியாக வம்பிழுத்த அவர், ''உனக்கு என்ன அப்படி ஈகோ, பதவி இருக்கும் அதிகாரம்தானே உன் காக்கிச்சட்டையைக் கழற்றிவிட்டு வா பார்த்துக்குவோம்'' என்று திரும்பத் திரும்பப் பேசினார். நான் நினைத்திருந்தால் யூனிபார்மை கழற்றியிருப்பேன் என்றெல்லாம் பேசினார்.

இதையடுத்து அவரைக் கைது செய்ய கண்டனக் குரல் எழுந்தது. கருணாஸ் மீது நுங்கம்பாக்கம் காவல் உதவி ஆய்வாளர் ராஜசேகரன் என்பவர் அளித்த புகாரின் பேரில் கொலைமுயற்சி (307), உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீஸார் அவரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். 307 வது பிரிவு மட்டும் நீக்கப்பட்டது. பின்னர் அவர் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில் வேலூர் சிறையில் உள்ள கருணாஸை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க போலீஸார் முடிவு செய்துள்ளனர். கோடம்பாக்கம் ஏரியாவில் நடக்கும் பைனான்ஸ் பிரச்சினைகள், கூவத்தூர் விவகாரம், அரவிந்தன் டிசியை இவ்வாறு பேசக்காரணம், மாநிலம் முழுவதும் கருணாஸுக்கு உள்ள தொடர்புகள் போன்றவை குறித்து விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர்.

இதையடுத்து கருணாஸை 7 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நுங்கம்பாக்கம் போலீஸார் சென்னை எழும்பூர் 7-வது குற்றவியல் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர். இதற்காக அனுமதி கிடைக்கும் பட்சத்தில் கருணாஸை நாளை சென்னை அழைத்து வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

கருணாஸுக்கு போலீஸ் காவல் கேட்கப்பட்டுள்ளதால் அவரது ஜாமீன் மனு மீதான விசாரணை எடுக்கப்படாது. இதனால் போலீஸ் காவல் முடிந்த பின்னரே கருணாஸ் ஜாமீன் கோர முடியும். தற்போது அதிலும் ஒரு சிக்கல் ஏற்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் ஐபிஎல் போட்டிகளுக்கு எதிராக நடந்த போராட்டத்தில் நாம் தமிழர் கட்சி, கருணாஸின் இயக்கம், வேல்முருகனின் கட்சி தொண்டர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்தப்போராட்டத்தில் ரசிகர்கள் தாக்கப்பட்டனர், போலீஸார் மீது கொலைவெறி தாக்குதல் நடந்தது. இந்தப் போராட்டத்தில் இரு வெவ்வேறு சந்தர்ப்பங்களில் கருணாஸும் வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளார்.

அவர்மீது கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

வழக்கு 1 : சட்டவிரோதமாக கலகம் விளைவிக்கும் நோக்கத்துடன் கூடுவது(146) உயிரைப் பறிக்கும் ஆயுதங்களுடன் கூடுவது(148), ரசிகர்களைச் சட்டவிரோதமாக தடுத்தல் (341), அதிகாரிகளின் உத்தரவை மீறிச் செயல்படுவது (188) மற்றும் தடை செய்யப்பட்ட இடத்தில் கூடுவது 41(6) mcp act

வழக்கு 2: சட்டவிரோதமாக ஒன்றுகூடி செயல்படுவது (147), 148, ரசிகர்களை சட்டவிரோதமாகத் தடுத்தல் (341), ஆபாசமாகப் பேசுதல் 294(b), காயம் ஏற்படுத்துவது (323), ஆயுதத்தை வைத்து காயம் ஏற்படுத்துவது (324), கொலை முயற்சி (307), ஆயுதங்களை வைத்து கொலை மிரட்டல் 506(ii)

ஆகிய பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இந்த வழக்கில் கருணாஸ்  9-வது குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டுள்ளார். தற்போது இந்த வழக்கிலும் அவரைக்  கைது செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

307-வது பிரிவை நீக்கச் சொல்லி நுங்கம்பாக்கம் போலீஸார் தொடர்ந்த வழக்கில் கருணாஸ் தரப்பு வெற்றி பெற்றாலும், ஐபிஎல் வழக்கில் 307- வது பிரிவு அவர் மீது பாய்கிறது. இதன் மூலம் கருணாஸுக்கு எளிதில் ஜாமீன் கிடைக்க வாய்ப்பில்லாத நிலையை உருவாக உள்ளதாக போலீஸ் தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

https://tamil.thehindu.com/tamilnadu/article25039742.ece?utm_source=HP&utm_medium=hp-tsothers

Link to comment
Share on other sites

கருணாஸின் எம்.எல்.ஏ பதவிப் பறிப்பா?- அமைச்சர் ஜெயக்குமார் சூசகம்

 

 
download%206

ஜெயக்குமார், கருணாஸ்- கோப்புப் படம்

அரசியல் அமைப்புச் சட்டத்தை மீறி கருணாஸ் செயல்பட்டுள்ளதாக குற்றம் சாட்டியுள்ள அமைச்சர் ஜெயக்குமார் கருணாஸ் எம்எல்ஏ பதவிக்கு ஆபத்தாகத்தான் முடியும் என்கிற பொருளில் பதிலளித்துள்ளார்.

நடிகரும், சட்டப்பேரவை உறுப்பினருமான கருணாஸ் கடந்த 16-ம் தேதி ஐபிஎஸ் அதிகாரி ஒருவரைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் என்ற பெயரில் வரம்பு மீறி பேசியதால் கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சமூகங்களிடையே பிரிவினையைத் தூண்டும் விதத்தில் பேசுவது, முதல்வரை அவதூறாகப் பேசியது, கொலை மிரட்டல் என பல பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

 

ஐபிஎஸ் அதிகாரி ஒருவரை ஒத்தைக்கு ஒத்தை யூனிபார்மை கழற்றி வைத்துவிட்டு வா என்று அழைத்ததும், காலை உடை என தொண்டர்களிடம் பேசியதும், கொலையே செய்தாலும் என்னிடம் சொல்லிவிட்டு செய் என்று பேசியதும், ஊடகங்கள் இரண்டு குறிப்பிட்ட சமூகத்தினரிடையேதான் உள்ளது என்று பேசியதும் சர்ச்சையானது.

முதல்வரைப்பற்றிய சர்ச்சைப்பேச்சும், அவரது சமூகம் குறித்துப் பேசியதும் சிக்கலை ஏற்படுத்தியது. போலீஸார் வழக்குப் பதிவு செய்தபின்னர் கைது செய்யச் சென்றபோது தான் ஒரு எம்.எல்.ஏ, சபாநாயகருக்குத் தெரிவிக்காமல் கைது செய்வதாக கருணாஸ் பேசினார். ஆனால் கிரிமினல் குற்றங்களில் கைதுக்குப் பின் சபாநாயகருக்கு அதற்கான காரணங்களுடன் கூற வேண்டும். அதை போலீஸார் செய்துவிட்டனர்.

அரசுக்கு எதிராகப் பேசிய கருணாஸ் இருப்பது டிடிவி தினகரன் அணியில். ஆனால் அவரது சர்ச்சைப் பேச்சை டிடிவியே ரசிக்கவில்லை. ஒரு சட்டப்பேரவை உறுப்பினர் எப்படி பேசக்கூடாது என்பதற்கு இது உதாரணம் என்று தெரிவித்திருந்தார். மேலும் அரசுக்கு எதிராக கருணாஸின் செயலை அரசு வேடிக்கை பார்க்காது என்பதற்கு சமீபத்திய நிகழ்வுகள் தெரிவிக்கின்றன.

தற்போது கருணாஸின் எம்எல்ஏ பதவியையும் பறிக்கும் சூழல் உருவாகியுள்ளதை அமைச்சர் ஜெயக்குமார் இன்று அளித்த பேட்டியில் சூசகமாகக் குறிப்பிட்டுள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

பால் தாக்கரே இதுபோன்ற சர்ச்சையில் சிக்கி அவரது ஓட்டுரிமை பறிக்கப்பட்டது.  ஆகவே கருணாஸ் பதவிக்கும் ஆபத்தான சூழல் உள்ளது என பொருள்படும்படி அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி அளித்தார்.

சென்னை சாந்தோமில் அமைச்சர் ஜெயக்குமார் அளித்த பேட்டி:

“ சட்டப்பேரவை உறுப்பினர் பதவி என்பது ஒரு மிகப்பெரிய பொறுப்பு. அத்தகைய பொறுப்பில் தனது கடமை உணர்வை மறந்து நடப்பது தவறு.

அரசியல் அமைப்புச்சட்டப்படி பதவி ஏற்றுக்கொள்பவர்கள் அரசியல் அமைப்புச் சட்டத்தை மதிக்கவேண்டும், அரசியலமைப்புச் சட்டம் என்ன சொல்கிறது. பொதுவாக பதவி ஏற்கும்போது அமைச்சராக இருந்தாலும் சரி, நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினராக இருந்தாலும்சரி அவர் பதவி ஏற்கும்போது சாதி, மதத்திற்கு அப்பாற்பட்டு இருப்பேன் என்ற உறுதியோடுதான் பதவி ஏற்கிறோம்.

அதைக் கட்டாயம் கருணாஸ் கடைபிடிக்கவேண்டும். எனவே இந்தப் போக்கு போகும்போது அவரது சட்டப்பேரவை உறுப்பினர் பதவியே கேள்விக்குறிதான் என்பது தற்போது வெளிப்படுகிறது. சட்ட வல்லுநர்கள் அனைவரும் என்ன சொல்கிறார்கள் என்றால் ஏன் கருணாஸ் சட்டப்பேரவை உறுப்பினராகத் தொடர வேண்டும் என்று கேட்கிறார்கள்.

பால் தாக்கரே ஒரு வழக்கில் இதுபோன்ற பேச்சால் உச்ச நீதிமன்றம் தெளிவாக வழங்கிய தீர்ப்பில் அவரது ஓட்டுரிமை பறிக்கப்பட்டது. அவர் ஓட்டே போட முடியவில்லை. நிச்சயமாக இதுபோன்ற பேச்சு பேசுபவர்கள் எல்லாம் இதுபோன்ற நிலை இருந்தால்தான் வாயை மூடிக்கொண்டு அவர்களது சட்டப்பேரவை உறுப்பினர் கடமையை ஆற்றுவார்கள்.

பால்தாக்கரே வழக்கை ஒப்பிடும்போது நிச்சயமாக கருணாஸின் பதவி ஆபத்தில்தான் முடியும் என்கிற கருத்தும் வேகமாக பரவிக்கொண்டு இருக்கிறது.”

இவ்வாறு அமைச்சர் ஜெயக்குமார்  தெரிவித்தார்.

https://tamil.thehindu.com/tamilnadu/article25040574.ece?utm_source=HP&utm_medium=hp-tsothers

Link to comment
Share on other sites

கருணாசை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரிய போலீசாரின் மனு தள்ளுபடி

 

 

அ-அ+

முதல்வரை அவதூறாக பேசிய வழக்கில் கைதான எம்.எல்.ஏ கருணாசை 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளிக்கக்கோரி போலீசார் தாக்கல் செய்த மனுவை எழும்பூர் கோர்ட் இன்று தள்ளுபடி செய்தது. #Karunas

 
 
 
 
கருணாசை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரிய போலீசாரின் மனு தள்ளுபடி
 
சென்னை:
 
முதல்வர் மற்றும் காவல்துறையினரை அவதூறாக பேசிய வழக்கில் எம்.எல்.ஏ கருணாஸ் மீது 8 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்த போலீசார், கடந்த 23-ம் தேதி காலை அவரை கைது செய்தனர். 
 
3 மணி நேர விசாரணைக்கு பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை அடுத்த மாதம் 5-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க எழும்பூர் நீதிபதி உத்தரவிட்டார்.
இதனை அடுத்து, புழல் சிறையில் அடைக்கப்பட்ட அவர் பின்னர் வேலூர் சிறைக்கு மாற்றப்பட்டார். இதற்கிடையே, கருணாசை 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளிக்கக்கோரி போலீசார் எழும்பூர் கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தனர்.
 
இந்நிலையில், காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரிய போலீசாரின் மனுவை நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். 
 
கருணாஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனு நாளை விசாரிக்கப்படும் எனவும் நீதிபதி அறிவித்தார்.

https://www.maalaimalar.com/News/TopNews/2018/09/26154006/1193933/court-dismissed-petition-for-seeks-police-custody.vpf

Link to comment
Share on other sites

கருணாஸ் மேலும் இரண்டு வழக்குகளில் கைது: என்னென்ன பிரிவுகள் ஒரு பார்வை

 

 
download%2012

ஐபிஎல் போராட்டத்தில் கருணாஸ், போலீஸ் காவலில் கருணாஸ்

முதல்வர் மற்றும் காவல் அதிகாரியை விமர்சித்து கைது செய்யப்பட்ட கருணாஸை மேலும் இரண்டு வழக்குகளில் 13 பிரிவுகளின் கீழ் போலீஸார் கைது செய்தனர். இதனால் முதல் வழக்கில் அவர் ஜாமினில் வெளிவருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

நடிகர் கருணாஸ் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் கட்டப்பஞ்சாயத்து செய்வதாக எழுந்த புகாரின் பேரில் தி.நகர் காவல் துணை ஆணையர் அரவிந்தன் உத்தரவின் பேரில் வடபழனி போலீஸார் நடவடிக்கை எடுத்தனர். இதில் கோபமடைந்த கருணாஸ் கடந்த செப். 16 அன்று வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பட்டம் நடத்தினார்.

 

முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் பதவியைப் பற்றியும் அவர் தான் அடித்து விடுவேன் என்று தன்னைப் பார்த்து பயப்படுவதாகவும் கருணாஸ் பேசினார். ஒரு நாளைக்கு குடிப்பதற்கே ரூ.1 லட்சம் செலவு செய்வதாகத் தெரிவித்த அவர் கொலை செய்வதாக இருந்தால் என்னிடம் சொல்லிவிட்டுச் செய் என்று தொண்டர்களைப் பார்த்துப் பேசினார்.

தனது ஆட்களின் காலை ஒடி, கையை ஒடி என்று அதிகாரி உத்தரவிட்டால் அந்த உத்தரவிட்ட அதிகாரியின் காலை ஒடி என்று பேசினார். ஐபிஎஸ் அதிகாரி அரவிந்தனை நேரடியாக வம்பிழுத்த அவர், ''உனக்கு என்ன அப்படி ஈகோ, பதவி இருக்கும் அதிகாரம்தானே உன் காக்கிச்சட்டையைக் கழற்றிவிட்டு வா பார்த்துக்குவோம்'' என்று திரும்பத் பேசினார்.

இதையடுத்து கருணாஸ் மீது நுங்கம்பாக்கம் காவல் உதவி ஆய்வாளர் ராஜசேகரன் என்பவர் அளித்த புகாரின் பேரில் கொலைமுயற்சி (307), உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீஸார் அவரைக் கைது செய்து வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில் வேலூர் சிறையில் உள்ள கருணாஸை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க போலீஸார் தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

கடந்த ஏப்ரல் மாதம் ஐபிஎல் போட்டிகளுக்கு எதிராக நடந்த போராட்டத்தில் ரசிகர்கள் தாக்கப்பட்டனர், போலீஸார் மீது கொலைவெறி தாக்குதல் நடந்தது. இந்தப் போராட்டத்தில் இரு வெவ்வேறு சந்தர்ப்பங்களில் கருணாஸும் வழக்கில் சேர்க்கப்பட்டிருந்தார். இந்நிலையில் இன்று ஐபிஎல் போராட்டத்தில் பங்கேற்ற கருணாஸ் மீது பதிவு செய்யப்பட்ட இரண்டு வழக்குகளில் போலீஸார் அவரை கைது செய்தனர்.

அவர்மீது கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

வழக்கு 1 : சட்டவிரோதமாக கலகம் விளைவிக்கும் நோக்கத்துடன் கூடுவது(146) உயிரைப் பறிக்கும் ஆயுதங்களுடன் கூடுவது(148), ரசிகர்களைச் சட்டவிரோதமாக தடுத்தல் (341), அதிகாரிகளின் உத்தரவை மீறிச் செயல்படுவது (188) மற்றும் தடை செய்யப்பட்ட இடத்தில் கூடுவது 41(6) mcp act

வழக்கு 2: சட்டவிரோதமாக ஒன்றுகூடி செயல்படுவது (147), 148, ரசிகர்களை சட்டவிரோதமாகத் தடுத்தல் (341), ஆபாசமாகப் பேசுதல் 294(b), காயம் ஏற்படுத்துவது (323), ஆயுதத்தை வைத்து காயம் ஏற்படுத்துவது (324), கொலை முயற்சி (307), ஆயுதங்களை வைத்து கொலை மிரட்டல் 506(ii)

ஆகிய பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இந்த வழக்கில் கருணாஸ் 9-வது குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டுள்ளார். தற்போது இந்த வழக்கிலும் அவரைக் கைது செய்துள்ளதால், முதல்வழக்கில் அவருக்கு ஜாமீன் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

https://tamil.thehindu.com/tamilnadu/article25049900.ece?utm_source=HP&utm_medium=hp-tsothers

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.