Jump to content

டிஜிட்டல் மேடை : அரேபிய பேயும் தேசபக்தி அரசியலும்


Recommended Posts

டிஜிட்டல் மேடை 01: அரேபிய பேயும் தேசபக்தி அரசியலும்

 

 
digitaljpg

டிஜிட்டல் தொழில்நுட்பம், கட்டற்ற இணைய வேகம் இரண்டும் இணைந்து ஒரு பெரும் புரட்சியைத் தொடங்கி வைத்திருக்கின்றன. கைக்குள் அடங்கிய ஸ்மார்ட் கைபேசித் திரைகள், இந்தப் புதிய புரட்சியால் பொழுதுபோக்கு மற்றும் நவீனப் படைப்புகளின் புதிய முகத்தைத் திரையரங்குகளுக்கு வெளியேயும் விரியச் செய்திருக்கின்றன.

திரைப்படங்கள், குறும்படங்கள், பலவகையான தொடர்கள், ஆவணப் படங்கள் என இந்தக் கடலில் அவரவர் ரசனைக்கு ஆசை தீர முத்துக்குளிக்கலாம். மேலும், இந்தத் தளங்கள் வாயிலாகத் தனது படைப்பை முழுச் சுதந்திரத்துடன் வெளிப்படுத்தும் உரிமையும் படைப்பாளிக்கு வாய்த்திருக்கிறது. படைப்பின் இன்னொரு முனையில் இருந்தபடி அதைப் புசிக்கக் காத்திருக்கும் ரசிகனுக்கு இதுவே வரப்பிரசாதமாகி இருக்கிறது.

 

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவில் நெட்ஃபிளிக்ஸ் தனது பிரத்யேக சேவையை தொடங்கியபோது, இத்தனை அதிர்வுகள் இல்லை. இன்று ‘நெட்ஃபிளிக்ஸ் ஒரிஜினல்ஸ்’ என்ற பெயரில் ஆங்கிலத்துக்கு அப்பால் இந்தி, தமிழ்த் திரைப்படங்கள் வெளியாகின்றன. தொலைக்காட்சித் தொடர்களில் மூழ்கிக் கிடந்தவர்களைக் கிண்டலடித்த இளம் தலைமுறை, இன்று புதிய வெப்சீரிஸ் குறித்து சமூக வலைத்தளங்களில் சிலாகிக்கிறது. மாறும் இந்த போக்குகள், புதிய வரவுகள் உள்ளிட்டவற்றை விவாதித்தபடி டிஜிட்டல் மேடையில்  நாமும் நடைபோடலாம்.

திரைப்படங்களில் வரும் பேய்கள் வழக்கமாகப் பயமுறுத்தவோ திகிலூட்டவோ செய்யும். சிரிப்பூட்டும் பேய்கூட வந்திருக்கிறது. ஆனால், ஆகஸ்ட் இறுதியில் ‘நெட்ஃபிளிக்ஸ்’ வெளியிட்ட‘கௌல்’(Ghoul) தொடர் வெறுமனே பயமுறுத்துவதற்கு அப்பால் நடைமுறை அரசியல் அபத்தங்கள் பலவற்றையும் முகத்தில் அறையச் செய்கிறது.

தேசத்தில் பாசிச ஆட்சி தலையெடுக்கும் காலக் கட்டத்தில் கதை நகர்கிறது. கல்லூரிகளும் பள்ளிகளும் மூடப்பட்டு தேசபக்தியே பிரதானமாகப் புகட்டப்படுகின்றன. எதிர்ப்பவர்களும் சிறுபான்மையினரும் ராணுவ அடக்குமுறைகளுக்கு ஆளாகின்றனர். இவர்களை ‘நல்வழிப்படுத்துவதற்கும்’ விசாரிப்பதற்கும் என ஆங்காங்கே அபாயகரமான விசாரணைக் கூடங்கள் செயல்படுகின்றன.

அப்படியொரு இடத்துக்குத் தனது பயிற்சி முடியும் முன்னரே இளம் விசாரணை அதிகாரியாக நீதா ரஹீம் (ராதிகா ஆப்தே) அமர்த்தப்படுகிறார். தேசநலன் விரும்பியான இவர், மாணவர்களின் எதிர்காலத்துக்காகப் போராடும் பேராசிரியரான தன் தந்தையையே அரசிடம் காட்டிக்கொடுக்கும் அளவுக்கு அரச விசுவாசியாக இருக்கிறார். நீதா பணியேற்கும் இந்த விசாரணைக் கூடத்துக்கு முக்கியத் தீவிரவாதி ஒருவன் கொண்டுவரப்படுவதிலிருந்து கதை சூடுபிடிக்கிறது.

பார்த்துச் சலித்த வழக்கமான பேய்களுக்கு மாற்றாகப் புதிய பயமுறுத்தலை இந்தத் தொடருக்காக இறக்குமதி செய்திருக்கிறார்கள். இஸ்லாம் மார்க்க காலத்துக்கு முன்பாக அரேபிய பாலைவனத்தில் அலையும் தீய ஆவியாக உருவகிக்கப்படும் கௌலும் மனித மனங்களில் மருகும் குற்றஉணர்வைப் பிடித்துக்கொண்டு அவை நடத்தும் கோரத்தாண்டவமுமே தொடரின் திகில் பக்கங்கள்.

‘ஸோம்பி’ வகையறாவிலிருந்து கௌலை வித்தியாசப்படுத்துவதும், அதன் பின்னணிக்கு நம்பகத்தன்மை கூட்டுவதுமே கதையோட்டத்தை விறுவிறுப்பாக்குகிறது. சராசரியாக, தலா 45 நிமிடங்களுடன் மூன்று அத்தியாயங்கள் அடங்கியதாகத் தொடரின் முதல் சீஸன் அமைந்திருக்கிறது.

மும்பை வாழ் இங்கிலாந்துக் குறும்பட இயக்குநரான பாட்ரிக் கிரஹாம் தொடரை எழுதி இயக்கி உள்ளார். அமெரிக்க சி.ஐ.ஏ. வதை முகாம் ஆவணங்களின் அடிப்படையிலான கதையில், அரேபியப் பேயைக் கோத்து இந்தத் தொடரை உருவாக்கியதாக இவர் தெரிவித்துள்ளார். மாற்று முயற்சிகளை அரவணைக்கும் இயக்குநர் அனுராக் கஷ்யப் இத்தொடரின் இணை தயாரிப்பாளர்களில் ஒருவர்.

ராதிகா ஆப்தே பின்னணி தவிர்த்து பெரும்பாலான பாத்திரங்கள் அலட்சியமாகக் கையாளப்படுவதும் அவ்வப்போது இடறும் நாடகபாணி காட்சிகளும் இந்தத் தொடரின் சில நெருடல்கள். அதேநேரம், அடிப்படை உரிமைகளை நசுக்கிவிட்டு அதீத தேசபக்தியின் பெயரிலான அரச பயங்கரவாதத்தின் அபத்தங்களை தோலுரிக்கிறார்கள்.

இந்தித் தொடரான கௌல், ஆங்கிலத்துக்கு அப்பால் தமிழ், தெலுங்கு போன்ற பிராந்திய மொழிகளிலும் பார்க்கக் கிடைக்கிறது. தமிழ்ப் பதிப்பு பல இடங்களில் படுத்துவதால், சப்-டைட்டில் உதவியுடன் ஆங்கிலம் அல்லது இந்தியிலே பார்க்கலாம்.

முதன் சீஸன் முடிவில் ராதிகா ஆப்தேவின் புதிய அவதாரத்தைக் கோடிட்டு காட்டியிருப்பது அடுத்த சீஸன் மற்றும் அத்தியாயங்களுக்கான எதிர்ப்பார்ப்புகளை விதைத்திருக்கிறது.

அடுத்த வாரம்

digital%202jpg

இந்திய சந்தையில் நெட்ஃபிளிக்ஸின் பிரதான போட்டியாளரான ‘அமேசான் பிரைம் வீடியோ’ தளத்தில் தொடங்கப்பட்டிருக்கும் ‘ஹார்மனி வித் ஏ.ஆர்.ரஹ்மான்’ தொடரை அடுத்த வாரம் பார்க்க

https://tamil.thehindu.com/cinema/cinema-others/article24996671.ece

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.