Jump to content

தமிழ் அரசியல் தலைவர்கள் வீதியில் இறங்கி போராட முன்வரவேண்டும் – வியாழேந்திரன்


Recommended Posts

தமிழ் அரசியல் தலைவர்கள் வீதியில் இறங்கி போராட முன்வரவேண்டும் – வியாழேந்திரன்

 

 

DSC_4230-720x450.jpg

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உரிமைக்காக தமிழ் அரசியல் தலைவர்கள் வீதியில் இறங்கி போராட முன்வர வேண்டும், அவ்வாறு இல்லாவிட்டால் அவர்கள் தமிழ் மக்கள் மத்தியில் செல்வதற்கு அருகதையற்றவர்கள் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட நரிப்புல்தோட்டத்தில் மீனவர்களுக்கான மீன்பிடி வலைகள் வழங்கும் நிகழ்வு இன்று(ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்றது.

மீள்குடியேற்ற அமைச்சிடம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் முன்வைத்த வேண்டுகோளின் அடிப்படையில் மீனவர்களுக்கான வலைகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

இந்தநிலையில் குறித்த நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட எஸ்.வியாழேந்திரன், ‘எமது நிலம், கலை, கலாசாரம், பண்பாடுகள் பாதுகாக்கப்பட வேண்டும். இதுவே எமது உரிமை சார்ந்த செயற்பாடு.

எமக்கு இந்த உரிமை சார்ந்த செயற்பாடுகள் வேண்டாம், நூறு வீதம் அபிவிருத்திதான் வேண்டும் என சொன்னால் அனைத்தையும் இழந்து இன்னுமொரு சமூகத்திற்கு அடிமையாகும் சமூகமாக நாம் மாற்றமடைவோம்.

நாங்கள் அடுத்த தலைமுறை தொடர்பில் சிந்திக்கும்போது அதனை சிலர் கேலியாக எடுத்துக்கொள்கின்றனர். புல்லுமலையிலுள்ள பெருவட்டை குளம் இன்று காத்தான்குடியை சேர்ந்த தனிநபர் ஒருவரினால் அபரிக்கப்பட்டுள்ளது.

சங்குளகுளத்திற்கு தனிநபர் ஒருவர் சொந்தம் கொண்டாடி குளத்திற்குள் ஒருவர் வேலி அமைக்கின்றார். வாகரை ஆளம் குளத்தில் மேவான்டகுளத்தினை ஒரு அமைச்சர் கையில் வைத்துள்ளார்.

குளத்தின் மீன்பிடியை நம்பி 29 ஆயிரம் குடும்பங்கள் உள்ளன. அந்த குளங்களை இன்று தனிநபர்கள் அரசியல் பின்புலத்துடன் உரிமை கொண்டாடுகின்றனர்.

குளங்கள் பறிபோகின்றது, வாவிகள் பறிபோகின்றது, நிலம் பறிபோகின்றது, கோயில்கள் உடைக்கப்படுகின்றன. இவை தொடர்பில் யாரும் பேசக்கூடாது. எங்களுக்கு கிறவல் வீதிகள்தான் வேண்டும் என்று சிலர் நினைக்கின்றனர்.

இதற்காகவா 40 வருடத்திற்கு மேலாக எமது தமிழ் இளைஞர்கள் ஆயுதம் ஏந்தி போராடினார்கள். இதற்காகவா ஆயிரக்கணக்கான உயிர்கள் இந்த மண்ணில் புதைக்கப்பட்டன. இந்த மண்ணுக்காகவே இவ்வளவு இழப்புகளையும் இந்த சமூகம் சந்தித்தது.

இந்த மண்ணை பாதுகாக்கவேண்டும். இந்த நிலத்தில் இருந்து நாங்கள் அப்புறப்படுத்தப்படுவோமானால் இங்கு மேற்கொள்ளப்படும் எந்த அபிவிருத்தியையும் நாங்கள் அனுபவிக்கமுடியாது.

மட்டக்களப்பில் உள்ள சிலர் தமக்கு எந்தப்பிரச்சினையும் இல்லையென கருதுகின்றனர். ஆனால் எல்லைப்பகுதியில் மேற்கொள்ளப்படும் இந்த பிரச்சினைகள் நாளை இங்கும் வரலாம். இன்று தாந்தாமலைக்கே இந்த பிரச்சினை வந்துவிட்டது.

எங்களுக்கு அபிவிருத்திகள் தேவை. அதனை நாங்கள் ஒருபோதும் மறுக்கவில்லை. இந்த மூன்று வருடத்தில் தமிழ் பகுதிகளில் இலங்கை அரசாங்கத்தில் உள்ள அமைச்சர் செய்யாத அபிவிருத்தியை நாங்கள் செய்திருக்கின்றோம்.

எதிர்க்கட்சியில் இருந்துகொண்டு இந்த அபிவிருத்தியை நாங்கள் செய்திருக்கின்றோம். நாங்கள் அபிவிருத்தியுடன் சேர்ந்த உரிமை என்ற விடயத்துடன் சமாந்தரமாக பயணிக்கவேண்டும்.

அதனை சிந்திக்கும் சமூகம் என்ற நிலையில் இருந்து நாங்கள் இறங்கிச் சென்றுகொண்டிருக்கின்றோம். சமூக பாரம்பரிய, கலைகலாசார பண்பாடுகளை மறந்து செல்லும் சமூகமாக தமிழ் சமூகம் மாற்றமடைந்து வருகின்றது.

பொங்கு தமிழ் என்பது தமிழர்களின் வாழ்வியல் பண்பாட்டு விடயங்களை பிரதிபலிக்கும் விடயமாகும். அதுபோராட்ட காலத்தில் ஆரம்பிக்கப்பட்டாலும் அதனை இனரீதியான செயற்பாடாகவும் பயங்கரவாத செயற்பாடாகவும் பார்க்கும் நிகழ்வு அல்ல. அது தமிழர்களின் கலைகலாசார பண்பாட்டு விடயங்களை பேணுகின்ற, பாதுகாக்கின்ற ஒரு விடயமாகும்.

அந்த பொங்குதமிழ் நிகழ்வுகளின் அடையாளமாகவே பொங்கு தமிழ் தூபிகள் அமைக்கப்பட்டன. கிழக்கு மாகாணத்தில் கிழக்கு பல்கலைக்கழகத்தில் முதன்முறையாக பொங்குதமிழ் உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது.

அதில் வடகிழக்கு மலையகம் என அனைத்து உறவுகளும் பங்குகொண்டனர். இந்த அமைதியான சூழலில் அந்த பொங்கதமிழ் தூபிகள் புனரமைக்கப்பட்டு அண்மையில் யாழில் அனுஸ்டிக்கப்பட்டது.

ஆனால் கிழக்கு பல்கலைகழகத்தில் அந்த தூபி புனரமைக்கப்பட்டு நிகழ்வு நடாத்தாமை கவலைக்குரிய விடயமாக இருக்கின்றது. கிழக்கு மாகாணத்தில்தான் அகிம்சை போராட்டங்களும் முதன்முறையாக ஆரம்பிக்கப்பட்டன. ஆயுதப்போராட்டமும் முதலில் ஆரம்பிக்கப்பட்டன.

இந்த விடயத்தில் கிழக்கு பல்கலைக்கழக நிர்வாகம் அதற்கான அனுமதிகளையும் உதவிகளையும் வழங்க வேண்டும். அரசாங்கம் இந்த விடயத்தினை வேறுபடுத்தப்பட்ட கண்ணோட்டத்துடன் பார்க்காமல் தமிழர்களின் வாழ்விலுடன் தொடர்புபட்ட விடயம் என்பதை உணரவேண்டும்.

அன்று தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்ட போது அதற்கு எதிராக தமிழ் தலைவர்கள் போராடினார்கள். அந்த போராட்டத்தினை அன்று இருந்த சில தமிழ் அரசியல் தலைவர்களும் விமர்சித்தனர். ஆனால் அன்று முன்னெடுக்கப்பட்ட போராட்டமே இன்று தமிழ் மொழிக்கு ஒரு அந்தஸ்த்தினை பெற்றுக்கொடுத்துள்ளது.

ஆயுதப்போராட்டத்தினையும் சிலர் பூச்சியத்தில் தொடங்கி பூச்சியத்தில் முடிந்துள்ளதாக சிலர் கூறுகின்றனர். ஆனால் இன்று தமிழர்களின் போராட்டம் சர்வதேச ரீதியாக பேசப்படுவதற்கு இந்த ஆயுதப்போராட்டம் தான் காரணமாகும். தமிழர்களின் எந்த போராட்;டமும் தோல்வியடையவில்லை என்பதே உண்மையானதாகும்.

தமிழ் அரசியல் கைதிகள் விடயத்தில் தமிழ் மக்கள் மூன்று வருடங்களாக போராடிவருகின்றனர். தமிழ் அரசியல் கைதிகள் பொதுமன்னிப்பின் அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும், பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படவேண்டும். ஒருகாலத்தில் ஜேவிபி.யினரும் அரசுக்கு எதிராக ஆயுதம் ஏந்தி போராடினார்கள். அவர்கள் பொது மன்னிப்பு அடிப்படையில் விடுவிக்கப்பட்டனர்.

தமிழர்களின் போராட்டம் விடுதலைப் போராட்டமாகவே நடைபெற்றது. இந்த போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கள்வர்களோ காவலிகளோ அல்ல. ஓர் உண்ணத விடுதலைக்காக போராடியவர்கள்.

இலங்கையில் தமிழ் மக்களின் தலைவர்கள் என்று கூறிக்கொள்கின்றவர்கள் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்காக வீதியில் இறங்கவேண்டும். வீதியில் இறங்கி இந்த அரசாங்கத்திற்கு பாரிய அழுத்தங்களை வழங்கவேண்டும்.

தமிழ் மக்களின் தலைவர்கள் என தங்களை அடையாளப்படுத்துகின்றவர்கள் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்காகவும் தமிழ் அரசியல் கைதிகளுக்காகவும் தங்களது குரலை பலமாக ஒலிக்க செய்ய வேண்டும்.

அதேபோன்று கிழக்கு தமிழர்களின் நிலங்களையும் பாதுகாக்கும் வகையில் அனைவரும் களத்திற்கு வரவேண்டும். அவ்வாறு இல்லாதவர்கள் மக்கள் மத்தியில் வருவதற்கு தகுதியற்றவர்கள்’ என தெரிவித்துள்ளார்.

http://athavannews.com/தமிழ்-அரசியல்-தலைவர்கள்-2/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நான் பலமுறை இவ்வாறு கணித்து ஏமாந்து இருக்கிறேன். 
    • கீரை கூட்டு இப்படி செய்து பாருங்கள்.......!  👍
    • வைக்கோ ராம‌தாஸ் ஆதிமுக்கா கூட்ட‌னில‌ இருந்த‌து தெரியும் அண்ணா...........போரை நிறுத்த‌ச் சொல்லி ஜெயலலிதா உண்ணாவிரதம் இருக்க வைகோ அதை ப‌ழ‌ச்சாரு கொடுத்து முடித்து வைத்தது இன்னொரு க‌தை................இன‌மும் அழிஞ்சு போச்சு எங்க‌ட‌ போராட்ட‌மும் முற்றிலுமாய் இருந்த‌ இட‌மே தெரியாம‌ எல்லாத்தை அழித்து விட்டார்க‌ள் இனி இதுக‌ளை ப‌ற்றி விவாதிச்சா கோவ‌த்துட‌ன் கூடிய‌ வெறுப்பு தான் வ‌ரும்................க‌ணிமொழியின் ஊழ‌லுக்காக‌ தான் க‌ருணாநிதியால் அப்ப‌ ஒன்றும் செய்ய‌ முடியாம‌ போன‌து இன்னொரு கதை................
    • இதில் ஒரு மாற்று கருத்து இல்லை. ஆனால் இன்றைய இலங்கையின் யதார்த்தம்: சாதாரண சிங்கள மக்கள்: நாம் உங்களுக்கு எதையும் தரப்போவதில்லை.  சாதாரண தமிழ் மக்கள் (பெரும்பான்மை): நாம் உங்களிடம் எதையும் கேட்கப்போவதும் இல்லை. யாழில் ஏ எல் டுயூசன் விளம்பரம், வெளிநாட்டு வேலை படிப்பு விளம்பரம், நுகர்வு பொருள் விளம்பரம் இவைதான் எங்கும் கண்ணில் படுகிறன.  பயிஷ்கரிப்பு, கடையடைப்பு, ஹர்த்தால், இப்படியானவற்றை நான் காதில் கூட கேட்கவில்லை. கம்பஸ்சில் ஓரளவு உணர்வு தங்கி இருக்க கூடும். மாவீரர் வாரம், மே மாதம் உணர்சிகள் அங்கும், வெளியிலும் வெளிப்படையாக வரக்கூடும், ஆனால் பொதுவாக அவரவர், தத்தம் சுய வேலைகளில் மட்டுமே கவனமாக உள்ளார்கள். கொழும்பில் 90 களில் சிலர் கூடி தமிழ் சங்கத்தில் இலக்கியம் பற்றி பேசுவார்கள் அப்படியாக சுருங்கி விட்டது யாழில் அரசியல். மக்கள் அரசியல், குறிப்பாக தமிழ் தேசிய அரசியலில் இருந்து மிகவும் அந்நியபடுவதாக உணர்ந்தேன். செஞ்ச்சோன்ஸ் போலர் மாதுளன் சிஎஸ்கே யில் எடுபடுவாரா, இலங்கை அணியில் எடுக்க இனவாதம் விடுமா? இப்படி பட்ட மட்டத்தில்தான் அரசியல் இருக்கிறதே தவிர. முன்னர் போல், உரிமைகள் அபிலாசைகள் பற்றி பேசுவோர் குறைவாகவே உள்ளனர். நமக்குத்தான் கோட்டையை, கறுத்த பாலத்தை, ஆனையிறவை, மாங்குளம் சந்தியை தாண்டும் போது பழைய நினைவுகள் வந்து மனம் சுண்டுகிறது. அந்த மக்கள் அன்றாட வாழ்வின் ஓட்டத்தில் பழசை எல்லாம் நினைவில் வைத்திருப்பதாக தெரியவில்லை. இவை எதுவுமே தெரியாத ஒரு சந்ததி முன்னுக்கு வந்து விட்டது என்பதும் உண்மை. உணர்ச்சி இல்லாமல் இல்லை. அழிவுகளை மறந்தார்கள் என்பதும் இல்லை. ஒரு ஐந்து நிமிட கதையில் உள்ள கிடக்கையை அறிய முடிகிறது. ஆனால் இது எனக்கான வேலை இல்லை, இது அதற்கான நேரமும் இல்லை, தேவையும் இல்லை என்ற நழுவல் போக்கே பலரிடம். அதை தப்பு சொல்ல எமக்கு ஒரு அருகதையும் இல்லை. ஆனால் நான் அவதானித்தது இதைத்தான். ஜனவரி மாதம் வரை பெரும்ஸ் நாதத்தை தன் நண்பன் என கொண்டாடி, என்னை அவருடன் சேர்ந்து கும்மிப் போட்டு, நேற்று திடீரென நானும் நாதமும் கூட்டு எண்டு ஒரு ரீலை ஓட்டினார் பெரும்ஸ்🤣. நான் அப்படியே ஷாக் ஆயிட்டேன்🤣.
    • நீண்ட‌ இடைவெளிக்குப் பிற‌க்கு உங்க‌ளை க‌ண்ட‌து ம‌கிழ்ச்சி க‌ந்த‌ப்பு அண்ணா........... பாசிச‌ பாஜ‌க்கா மூன்றாவ‌து இட‌ம் வ‌ருவ‌து ப‌ல‌ருக்கு சிறுதுளி அள‌வு கூட‌ பிடிக்காது...............ச‌கோத‌ரி காளியம்மாள் வெற்றி பெறுவா  என்ற‌ ந‌ம்பிக்கை இருக்கு பாப்போம்.............வீஜேப்பி திட்ட‌ம் போட்டு தான் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி சின்ன‌த்தை ப‌றித்து ஊர் பேர் தெரியாத‌ க‌ட்சிக்கு குடுத்து அவ‌ர்க‌ளின் தில்லு முல்லு இப்போது வெளிச்ச‌ஹ்ஹ்துக்கு வ‌ந்து விட்ட‌து............. நாம் த‌மிழ‌ர் சின்ன‌ம் ப‌றி போகாட்டி அண்ண‌ன் சீமான் தேர்த‌ல் ப‌ர‌ப்புர‌ய‌ எப்ப‌வோ செய்ய‌ தொட‌ங்கி இருப்பார்............க‌ட்சி பிள்ளைக‌ளுக்கு நெருக்கடி வந்திருக்காது.................. தேர்த‌ல் முடிவு இன்னும் 9கிழ‌மையில் தெரிந்து விடும்............அதுக்கு பிற‌க்கு விவாதிப்போம் அண்ணா...............
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.