Jump to content

மட்டன் பிரியாணி, ஹைதராபாதி சிக்கன் மசாலா... ஹோட்டல் ஸ்பெஷல்!


Recommended Posts

மட்டன் பிரியாணி, ஹைதராபாதி சிக்கன் மசாலா... ஹோட்டல் ஸ்பெஷல்!

3284_thumb.jpg
 

சைவம் இல்லாத ஞாயிற்றுக்கிழமையா?  சென்னையைச் சேர்ந்த ஆசிஃப் பிரியாணி நிறுவனம், மட்டன் பிரியாணியும், அதற்கு சைட் டிஷ்-ஆக ஹைதராபாதி சிக்கன் மசாலாவும் எப்படி செய்வது என்று சொல்லித் தந்திருக்கிறார்கள். சமைத்து ருசியுங்கள். புரட்டாசி அன்பர்கள் மட்டும் மன்னிச்சு...

மட்டன் பிரியாணி

மட்டன் பிரியாணி

 

 

தேவையானவை:

மட்டன் (ஆட்டுக்கறி) - 1 கிலோ
பிரியாணி அரிசி - அரை கிலோ
சீரகம் - 2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
நெய் - 4 டேபிள்ஸ்பூன்

கரம் மசாலா தயாரிக்க:

பட்டை - 4 சிறிய துண்டு
ஏலக்காய் - 8
கிராம்பு - 4
மிளகு - 20
ஜாதிக்காய், ஜாதிபத்ரி - சிறிதளவு
வறுத்து அரைத்துத் தூளாக்கிக் கொள்ளவும்.

ஊற வைக்க:

தயிர் - 100 கிராம்
பச்சை மிளகாய் - 6 (பொடியாக நறுக்கவும்)
இஞ்சி-பூண்டு பேஸ்ட் - 1 டேபிள்ஸ்பூன்
மிளகாய்த்தூள் - 2 டேபிள்ஸ்பூன்
மல்லித்தூள் (தனியாத்தூள்) - 1 டேபிள்ஸ்பூன்
சீரகத்தூள் - 1 டேபிள்ஸ்பூன்
மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன்
கரம் மசாலாத்தூள் - 2 டீஸ்பூன்
பெரிய வெங்காயம் - 4 (பொன்னிறமாகப் பொரித்து வைக்கவும்)
கொத்தமல்லித்தழை- ஒரு கப் (பொடியாக நறுக்கி வைக்கவும்)
புதினா இலைகள் - 1 கப் (பொடியாக நறுக்கி வைக்கவும்)
எலுமிச்சை - 1 (ஜூஸ் எடுத்து வைக்கவும்)
உப்பு - 2 டீஸ்பூன்
பப்பாளிக்காய் ஜூஸ் - 5 டேபிள்ஸ்பூன்
கிராம்பு - 4
ஏலக்காய் - 4
கறுப்பு ஏலக்காய் - 2
பட்டை - 2
பிரிஞ்சி இலை - 2
மிளகு - 8
ஜாதிபத்ரி, ஜாதிக்காய் - சிறிதளவு
எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்
தண்ணீர் - தேவையான அளவு

 

 

அலங்கரிக்க:

பொரித்த பெரிய வெங்காயம் - ஒரு கைப்பிடி
பாலில் ஊற வைத்த குங்குமப்பூ - சிறிதளவு
நெய்/வெண்ணெய் - சிறிதளவு

செய்முறை:

மட்டனை (ஆட்டுக்கறி) கழுவி, விருப்பமான வடிவத்தில் நறுக்கி வைக்கவும். ஊற வைக்கக் கொடுத்தவற்றை எல்லாம் ஒன்றாகக் கலந்து மட்டனைச் சேர்த்துக் கலந்து மூன்று மணி நேரம் ஃப்ரிட்ஜில் வைத்து ஊற வைக்கவும். அரிசியைக் கழுவி தண்ணீர் ஊற்றி அரை மணி நேரம் ஊற வைக்கவும். அடுப்பில் பிரியாணிக்கான பாத்திரத்தை வைத்து அரிசி வேகும் அளவுக்குத் தேவையான தண்ணீரை ஊற்றி, கொதிக்க விடவும், இதில் அரிசிக்குக் கொடுத்த பொருட்களை எல்லாம் ஒரு துணியில் கட்டி கொதித்துக் கொண்டிருக்கும் தண்ணீரில் போடவும். இத்துடன் சீரகம், தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொதிக்க விடவும். தண்ணீர் நன்கு கொதித்ததும் ஊறிய அரிசியை மட்டும் தண்ணீரில் சேர்த்து, பிறகு, பாதி பங்கு அரிசியை அப்படியே கரண்டியால் எடுத்து தனியாக ஒரு பாத்திரத்தில் வைக்கவும். இனி, மறுபடியும் தண்ணீர் நன்கு கொதிக்க ஆரம்பிக்கும் போது தண்ணீரை வடித்து தனியாகவும், வெந்த அரிசியைத் தனியாகவும் ஆற விட்டு மூடி வைக்கவும்.

ஊறிய மட்டன் கலவையை கனமான அடிப்பகுதியுள்ள பிரியாணி பாத்திரத்தில் சேர்த்து, அதில் அரிசி வடித்த தண்ணீரைச் சேர்த்து அடுப்பில் வைத்து மட்டன் வேகும் வரை மிதமான தீயில் வேக விடவும். மட்டன் நன்றாக வெந்ததும் முதலில் எடுத்து வைத்த பாதி அரிசியைச் சேர்த்து இரண்டு நிமிடம் வேக விடவும். இதன் மேல் அலங்கரிக்கக் கொடுத்தவற்றைச் சேர்த்துப் பரப்பவும். இதன் மேல் நெய், அரைத்து வைத்துள்ள கரம் மசாலாத்தூளை ஒரு லேயர் போலப் பரப்பி தூவவும். இதன் மேல் மீதம் இருக்கும் அரிசியைப் பரப்பவும். இப்படிப் பரப்பிய லேயர்கள் எல்லாம் பாத்திரத்தின் கால் பாகத்துக்கு மட்டும்தான் இருக்க வேண்டும். அப்படியிருந்தால் மட்டும்தான் பிரியாணி நன்றாக வேகும். இனி மூடிப் போட்டு, அதன் மேல் கனமான பொருளைத் தூக்கி வைத்து ஐந்து நிமிடம் அதிக தீயில் வேக விடவும். பின்னர் தீயை லேசாக‌க் குறைத்து பதினைந்து நிமிடம் வேக விடவும். பதினைந்து நிமிடம் கழித்து தீயை முற்றிலும் குறைத்து அரை மணி நேரம் வேக விடவும். அடுப்பை அணைத்து ரைத்தாவோடு பிரியாணியைப் பரிமாறவும்.

ஹைதராபாதி சிக்கன் மசாலா

ஹைதராபாத் சிக்கன் மசாலா

தேவையானவை:

சிக்கன் - 1 கிலோ (சின்னச்சின்ன பீஸ்களாக நறுக்கி வைக்கவும்)
துருவிய தேங்காய் - அரை கப்
ஏலக்காய் - 4
கிராம்பு - 6
காய்ந்த மிளகாய் - 15
சீரகம் - 1 டீஸ்பூன்
வெந்தயம் - அரை டீஸ்பூன்
தனியா (மல்லி) - 2 டீஸ்பூன்
பட்டை - 2 
முந்திரி - 3 டேபிள்ஸ்பூன் (பொடியாக நறுக்கவும்)
நெய்/எண்ணெய் - 4 டேபிள்ஸ்பூன்
பெரிய வெங்காயம் - அரை கப் (பொடியாக நறுக்கவும்)
இஞ்சி-பூண்டு பேஸ்ட் - 1 டேபிள்ஸ்பூன்
சர்க்கரை - 2 டீஸ்பூன்
ஜாதிக்காய் - கால் டீஸ்பூன்
எலுமிச்சைச்சாறு - 2 டேபிள்ஸ்பூன்
டொமேட்டோ பியூரி - 200 மில்லி
உப்பு - தேவையான அலவு
தேங்காய்ப்பால் - 200 மில்லி

செய்முறை:

மிக்ஸியில் தேங்காய், கிராம்பு, ஏலக்காய், பட்டை, காய்ந்த மிளகாய், சீரகம், வெந்தயம், மல்லி (தனியா), ஜாதிக்காய், முந்திரி சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு விழுதாக அரைக்கவும். அடுப்பில் கடாயை வைத்து, நெய் விட்டு வெங்காயத்தைச் சேர்த்து பிரவுன் நிறம் ஆகும் வரை வதக்கவும். இதில்

இஞ்சி-பூண்டு பேஸ்ட்டை சேர்த்து பச்சை வாசனைப் போக வதக்கி, அரைத்த விழுதைச் சேர்த்து எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்கவும். இத்துடன் தேங்காய்ப்பால், டொமேட்டோ பியூரி, ஒரு கப் தண்ணீர் விட்டு வேக விடவும். இதில் சிக்கன், உப்பு, சர்க்கரை சேர்த்து அடுப்பை சிம்மில் வைத்து மூடி போட்டு சிக்கனை வேக விடவும். சிக்கன் வெந்து கலவை க்ரீம் பதத்துக்கு வந்ததும், எலுமிச்சைச் சாறு ஊற்றி இறக்கவும். புலாவ், பராத்தா, மட்டன் பிரியாணி ஆகியவற்றுக்கு ஏற்ற சைட் டிஷ் இந்த சிக்கன் மசாலா.

https://www.vikatan.com/news/miscellaneous/137769-mutton-briyani-hyderabad-chicken-masala-hotel-special.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புரட்டாசியில் சனிக்கிழமை விரதம் பிடிப்பவர்களையும் சேர்த்து ஞாயிறு அநேகமாய் எல்லோரும்  சாப்பிடுவார்கள்.....!  tw_blush:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முதலிலேயே சொல்லிவிட்டார்தானே
    • நெடுக்காலபோவான், இவை நீங்களே எடுத்த படங்கள் என்று மட்டும் சொல்லிவிடாதீர்கள்.  கேடுகெட்ட சொறிலங்காவுக்குள் உங்களைப் போன்ற மானமுள்ள வீரப் புலம்பெயர்ந்த தமிழர் யாராவது கால் வைப்பார்களா ? நினைக்கவே கால் கூசுகிறது. 😂
    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.