Jump to content

ஷோபா - அதிசய தேவதை!


Recommended Posts

ஷோபா - அதிசய தேவதை!


 

 

shoba-birthday

ஷோபா

 

 

மகாலக்ஷ்மி மாதிரிதான் அவரின் முகம் அமைந்திருந்தது. அதனால்தானோ என்னவோ மகாலக்ஷ்மி என்றே பெயர் வைத்திருந்தார்கள். ஆனால், அந்த மகாலக்ஷ்மி, பின்னாளில் தேவதையென நம் மனதில் இடம்பிடித்தார். அப்போது அவரின் பெயர் வேறானது. அந்தப் பெயரே... வேரென இன்றைக்கும் ஊன்றி நிற்கிறது. அந்தப் பெயர்... ஷோபா!

தட்டுங்கள் திறக்கப்படும் எனும் வாசகம் ஷோபாவுக்கும் பொருந்தும். 1962ம் வருடத்தில் பிறந்தவருக்கு 1966ம் ஆண்டில், அதாவது நான்கு வயதிலேயே கதவு திறந்து கலைத்தாய் இவரை வரித்துக்கொண்டாள். தட்டுங்கள் திறக்கப்படும் என்கிற தமிழ்ப் படத்தில், குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். அப்போது பேபி மகாலக்ஷ்மி. நடிகர் சந்திரபாபுவின் படம் இது.

பிறகு, அடுத்த வருடமே பி.வேணுவின் இயக்கத்தில் உத்தியோகஸ்தா எனும் படத்தில், குழந்தை நட்சத்திரமாக நடித்தார். இப்போது பேபி ஷோபாவானார்.

1978ம் ஆண்டு தமிழில் அறிமுகமானார். இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர் தன் நிழல் நிஜமாகிறது படத்தில், ஷோபாவை அறிமுகப்படுத்தினார். முன்னதாகவே மலையாளத்தில் பரிச்சயமான நாயகியாகிவிட்ட நிலையில், தமிழில் வந்த நிழல் நிஜமாகிறது, பார்த்த மாத்திரத்திலேயே எல்லோருக்கும் இவரைப் பிடித்துப் போனது.

1537680920.jpg

பேபி ஷோபா, குமாரி ஷோபாகியிருந்தார். ஆனாலும் முகத்தில், கண்களில், குரலில்... ‘பேபி’த்தன்மை போகாமலேயே இருந்தது.

அதே வருடத்தில், அச்சாணி, ஒரு வீடு ஒரு உலகம், முள்ளும் மலரும் என படங்கள் பண்ணினார். இவை எல்லாமே அவரின் வயதையொத்த கேரக்டர்கள் இல்லை. மிக மெச்சூர்டான, தெளிவான, உணர்ச்சிக்குவியல்களும் அனுபவ ரேகைகளின் பதிவுகளான கதாபாத்திரங்கள். முள்ளும்மலரும் வள்ளியை எல்லோருக்குமே பிடித்தது. வயது வித்தியாசமின்றி, அவரை தங்கையாகவே எல்லோரும் ஏற்றார்கள். தமிழ் சினிமாவில் பாசமலருக்குப் பிறகு, ஓர் ஜீவனுள்ள தங்கை கேரக்டராக வள்ளி ஜொலித்தாள். வரிசையாகப் படங்கள் வந்தன.

நமக்கெல்லாம் முள்ளும்மலரும் கிடைத்தது. காளி எனும் கேரக்டரில் யதார்த்தமாக நடித்த ரஜினியின் இன்னொரு பரிணாமம் கிடைத்தது. இளையராஜாவின் பண்பட்ட, எவருமே தொட இயலாத பின்னணி இசை கிடைத்தது. மகேந்திரன் எனும் அற்புதப்படைப்பாளி கிடைத்தார். இவை கடந்து ஷோபாவுக்கு இன்னொன்றும் கிடைத்தது. அது... துணை. வாழ்க்கைத்துணை. அந்தத் துணையின் பெயர்... பாலுமகேந்திரா.

முள்ளும்மலரும் படத்தின் ஒளிப்பதிவாளராக இருந்த பாலுமகேந்திராவுக்கும் ஷோபாவுக்குமான நட்பு, காதலாக மலர்ந்தது.

ஒருவிடுகதை ஒரு தொடர்கதை, வீட்டுக்கு வீடு வாசப்படி, ஏணிப்படிகள், அழியாத கோலங்கள், சக்களத்தி, அகல்விளக்கு, பசி, வேலி தாண்டிய வெள்ளாடு, மூடுபனி, சாமந்திப்பூ, அன்புள்ள அத்தான் என்று 78ம் ஆண்டு தொடங்கி, 79ம் ஆண்டிலும் 80 ஆண்டிலும் (சில படங்கள் 81ம் ஆண்டிலும் வெளியாகின) மளமளவென, வரிசையாக படங்களில் நடித்தார்.

ஏணிப்படிகள் படத்தில் நடிகையாக நடித்து, சினிமா உலகில் உயரும் கதாபாத்திரம். ஷோபவின் நடிப்பைக் கண்டு மிரண்டுபோனார்கள் ரசிகர்கள். ‘நடிப்புல இந்தப் பொண்ணு ராட்சஷிப்பா. என்னமா நடிக்குது’ என்று வியந்து, மலைத்து, ஈர்த்து, ரசித்துக்கொண்டாடினார்கள்.

‘ஷோபா, ஒருமுனையில் இருந்து மறுமுனைக்கு பிரகாசமாகச் செல்லும் ஒரு எரிநட்சத்திரம்’ என்று அவரின் திறமையைக் கண்டு வியந்து புகழ்கிறார் பாலுமகேந்திரா.

ரசிகர்கள் மட்டுமா? திரையுலகமே கொண்டாடித்தீர்த்தது. திரையுலகம் மட்டுமா? இந்திய அரசாங்கமே இவரின் நடிப்பை வியந்து போற்றியது. பசி படத்துக்காக, ஷோபாவுக்கு ஊர்வசி பட்டம் வழங்கி, இவரின் திறமையை கவுரவித்தது.

மூடுபனியில் இவரின் நடிப்பு அழகு. அழியாத கோலங்களில் இவரின் கதாபாத்திரம் மறக்கவே முடியாதது.

அந்தக் கதாபாத்திரங்களையே மறக்கமுடியாத போது, ஊர்வசி ஷோபாவை எப்படி மறக்கமுடியும்?

அவசரம் அவசரமாக, வரிசையாக குறுகிய வருடங்களுக்குள் ஏன் அவ்வளவு அதிகப்படங்களில் நடித்தார். கலைத்தாய், இந்த தேவதையின் மரணத்தை முன்பே அறிந்துவைத்திருந்தாளோ என்னவோ? 78 முதல் 80ம் ஆண்டு வரை மூன்று வருடங்களில் நடித்த ஷோபா, 80 ஆண்டு, அப்படியொரு முடிவை எடுப்பார் என்று ரசிகர்களுக்குத் தெரியாது.

அவரின் தற்கொலை... இன்னும் ரசிகர்களுக்கு அதிர்ச்சிதான். மீளமுடியாத சோகங்களில் ஒன்றுதான்!

ஷோபா எனும் தேவதையின் பிறந்தநாள் இன்று (செப்டம் 23ம் தேதி). தேவதைகள் பிறப்பார்களேயொழிய, ஒருபோதும் இறப்பதில்லை. இறப்பதே இல்லை.

அவரின் பிறந்தநாளில், தேவதையை ஆத்மார்த்தமாக நினைப்போம்.

https://www.kamadenu.in/news/cinema/6460-shoba-birthday.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.