Jump to content

மெத்தியூஸை விலகுமாறு வேண்டுகோள் : சந்திமாலை தலைவராக்க தீர்மானம்


Recommended Posts

மெத்தியூஸை விலகுமாறு வேண்டுகோள் : சந்திமாலை தலைவராக்க தீர்மானம்

இலங்கை அணியின் தலைவராக தினேஸ் சந்திமாலை நியமிக்க தீர்மானித்துள்ளதாக இலங்கை கிரிகெட் நிறுவனம் தெரிவித்துள்ளது. 

angel.jpg

இங்கிலாந்து அணியுடன் இடம்பெறவுள்ள ஒரு நாள் போட்டித் தொடரில் இலங்கையை தலைமை தாங்குவதற்காகவே சந்திமல் நியமிக்கப்படவுள்ளார்.

இந்நிலையில் அணித்தலைவராக செயற்பட்டுவரும் அஞ்சலோ மெத்தியூஸை ஒருநாள் மற்றும் இருபதுக்கு - 20 போட்டிகளின் தலைவர் பதவியிலிருந்து விலகுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளதாகவும் இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/article/41042

Link to comment
Share on other sites

“ஆசியக்கிண்ணத் தோல்விகளுக்கு நான் பலிக்கடா”- அஞ்சலோ மத்தியூஸ் ஆதங்கம்

 

Dn1A-fOXUAALg5j.jpg

இங்கிலாந்து அணியுடனான ஒருநாள் மற்றும் 20 க்கு 20 கிரிக்கெட் போட்டிகளுக்கான இலங்கை குழாத்தை, தினேஷ் சந்திமால் வழிநடத்தவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

தேசிய கிரிக்கெட் குழு இந்தத் தீர்மானத்தை எடுத்ததாக நிறுவனம் வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனடிப்படையில், ஒருநாள் மற்றும் 20 க்கு 20 அணிகளின் தலைவராக செயற்பட்ட அஞ்சலோ மெத்தியூஸை பதவி விலகுமாறு தெரிவுக்குழு அறிவித்துள்ளதாக குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், மெத்தியூஸை அணித்தலைவர் பதவியிலிருந்து நீக்குவதற்கான காரணம் கிரிக்கெட் நிறுவனத்தின் அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை.

 

எனினும் அறிக்கை ஒன்றினை விடுத்துள்ள அஞ்சலோ மத்தியூஸ் ஆசியக்கிண்ணப் போட்டிகளில் பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டிகளில் அடைந்ததோல்விகளுக்காக தாம் பலிக்கடா ஆக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

ஐந்து வருடங்கள் அணிக்கு தொடர்ச்சியாக அனைத்துவிதமான போட்டிகளிலும் தலைமைதாங்கியதை அடுத்து 2017ல் தாமாகவே முன்வந்து அணித்தலைமையை துறந்திருந்தாக சுட்டிக்காட்டியுள்ள மத்தியூஸ் புதிய தலைமைப்பயிற்றுவிப்பாளராக பொறுப்பேற்ற சந்திக்க ஹத்துருசிங்க கேட்டுக்கொண்டதற்கமைவாகவே தான் மீண்டும் தலைமைப்பொறுப்பை ஏற்றதாக கூறியுள்ளார்.

கடைசியாக இலங்கையில் இடம்பெற்ற தென் ஆபிரிக்காவிற்கு எதிரான தொடரில் இலங்கை அணியின் சார்பில் அதிக ஓட்டங்ளை தாம் பெற்றதாகவும் மத்தியூஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆசியக்கிண்ணப்போட்டிகளின் மோசமான பெறுபேறுகளுக்கு தேர்வாளர்களும் தலைமைப்பயிற்றுவிப்பாளரும் தன்னைப் பலிக்கடா ஆக்கிவிட்டதாக ஆதங்கப்பட்டுள்ள மத்தியூஸ்  தாம் போதிய உடற்தகுதியைக் கொண்டிருக்கவில்லை என தேர்வாளர்கள் கருதும் இடத்து ஒருநாள் மற்றும் டி20 அணிகளில் இருந்து ஓய்வுபெறவும் தயாராகவுள்ளதாக மேலும் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 18 மாதங்களில் இலங்கை அணியின் தலைவர்களாக பலர் நியமிக்கப்பட்டுள்ளதுடன், உபுல் தரங்க, லசித் மாலிங், சாமர கபுகெதர மற்றும் திசர பெரேரா ஆகியோரும் உள்ளடங்குகின்றனர்.

2017 ஆம் ஆண்டு முதல் இதுவரை இலங்கை அணி பங்கேற்ற 40 ஒருநாள் போட்டிகளில் 30 போட்டிகளில் தோல்வியையே தழுவியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Dn0d8bwXUAATqFV.jpg

Dn0d8b4XsAA4ILT.jpg

 

 

http://athavannews.com/ஆசியக்கிண்ணத்-தோல்விகள/

Link to comment
Share on other sites

பதவியிலிருந்து விலகுமாறு பணித்தனர் - விலகுகிறேன் ! தகுதியற்றவன் என்றால் ஓய்வை அறிவிக்கவும் தயார் - மெத்தியூஸின் உருக்கமான கடிதம்

 

இலங்கை கிரிக்கெட் தெரிவுக்குழு மற்றும் தலைமைப் பயிற்றுவிப்பாளர் என்னை அணித் தலைமைப் பதவியிலிருந்து விலகுமாறு தெரிவித்தனர். அதனால் தலைமைப் பதவியில் இருந்து விலகுகிறேன். அவர்கள் என்னை அணியிலிருக்க தகுதியற்றவன் என்றால் ஓய்வை அறிவிக்கவும் தயாராகவுள்ளேன் என இலங்கை அணித்தலைவர் அஞ்சலோ மெத்தியூஸ் தெரிவித்துள்ளார்.

angalo.jpg

 

இலங்கை அணித்தலைவர் அஞ்சலோ மெத்தியூஸ் இலங்கை ஒருநாள் மற்றும் இருபதுக்கு இருபது அணிகளின் தலைமை பொறுப்பில் இருந்து நேற்று விலகியுள்ள நிலையில், இது தொடர்பில் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு உருக்கமான கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.

அந்தக் கடித்திலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டிருந்தது.

அவர் அனுப்பி வைத்துள்ள கடிதம் வருமாறு,

 

கடந்த வௌ்ளிக்கிழமை 21 ஆம் திகதி இடம்பெற்ற விசேட பேச்சுவார்த்தையின் போது இலங்கை அணியின் தேர்வு குழுவின் தலைவர் மற்றும் தலைமை பயிற்சியாளர் ஹத்துரு சிங்க ஆகியோர் என்னை ஒருநாள் மற்றும் இருபதுக்கு-20 அணிகளின் தலைவர் பதவியில் இருந்து விலகுமாறு அறிவித்ததனர். என்னை பதவியிலிருந்து விலகுமாறு தெரிவித்ததும் நான் அதிர்ச்சியடைந்து விட்டேன். 

மேலும் , ஆசிய கிண்ணத் தொடரில் இலங்கை அணி சந்திந்த படுதோல்வியின் முழுப்பொறுப்பும் என் மீது சுமத்தப்பட்டுள்ளதாகவும் தோல்விக்கு தானே பலிக்கடாவாகியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும் , அணியின் தோல்விக்கு அணியின் தலைவரே முழுப்பொறுப்பும் என்று தெரிவிப்பதை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். இந்த தோல்வியின் ஒரு பங்காளியே நான் என்றும் , அதன் முழுப்பொறுப்பையும் தன்னால் ஏற்க முடியாது எனவும் அஞ்சலோ குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் தெரிவுக்குழு மற்றும் பயிறிசியாளரின் முடிவை நான் முழு மனதுடன் ஏற்றுக்கொள்கின்றேன்.

நான் தலைமைப்பொறுப்பில் இருக்கும் போது இலங்கை அணி பல சவால்களை எதிர்கொண்டு சாதனைகளைப் படைத்தது. அதில் அவுஸ்திரேலிய அணியை 3-0 என வெள்ளையடிப்புச்செய்தது. இதைவிட இங்கிலாந்து அணியை வெற்றிபெற்று சாதனை படைத்தது.

எவ்வாறாயினும் இலங்கை அணிக்கு புதிய தலைமைத்துவம் வேண்டுமென உணரப்பட்டவேளையில் நான் அனைத்து வகை கிரிக்கெட்டிலுமிருந்து கடந்த 2017 ஜூலை மாதம் சுயவிருப்பின் அடிப்படையில் அணித் தலைமையில் இருந்து விலகியிருந்தேன்.

இவ்வாறு நான் விலகிய காலப்பகுதியில் உபுல் தரங்க, திஸர பெரேரா, சாமர கப்புகெதர, லசித் மாலிங்க மற்றும் டினேஸ் சந்திமல் ஆகியோர் 2017 ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல் 2017 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வரை ஒருநாள் மற்றும் இருபதுக்கு-20 போட்டிகளில் மாறிமாறி அணிக்கு தலைமை தாங்கினர்.

இந்நிலையில் அணி தொடர் தோல்விகளை சந்தித்தபேது இலங்கை அணிக்கு புதிய பயிற்சியாளராக நியமிக்கப்பட்ட சந்திக்க ஹத்துருசிங்க என்னை தனிப்பட்ட முறையில் சந்தித்து எதிர்வரும் 2019 ஆம் ஆண்டு உலக்கிண்ணம் வரை அணித் தலைமைப்பொறுப்பை ஏற்குமாறு கேட்டுக்கொண்டார்.

தலைமைப்பெறுப்பை மீண்டும் எடுப்பதற்கு எனது குடும்பத்தினரும் நண்பர்களும் எதிர்ப்பைத் தெரிவித்த நிலையிலும் ஹந்துருசிங்க மீதும் அவரது திட்டத்தின் மீதும் வைத்த நம்பிக்கையினால் நான் அந்தப்பொறுப்பை மீண்டும் எடுத்து அணியை பலப்படுத்தி உயர்ந்த நிலைக்கு  இட்டுச்செல்ல இணங்கினேன்.

இந்தப் பிரச்சினையில் இருந்து விலகிவிடுவது எனது நோக்கமல்ல. விளையாட்டு வீரன் என்ற ரீதியில் நான் முழு மனதுடன் எவ்வேளையிலும் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி செயற்படுவேன்.

இதேவேளை, நான் எந்தவேளையிலும் அணிக்கு பாரமாக இருக்க விரும்பவில்லை. தேர்வுக்குழுவோ தலைமைப் பயிற்சியாளரோ நான் அணிக்கு தகுதியற்றவன் என்று தெரிவிக்கும் பட்சத்தில் நான் ஓய்வுபெறவும் தயாராகவுள்ளேன் என அவரது கடிதத்தில் மெத்தியூஸ் குறிப்பிட்டுள்ளார்.

 

 

http://www.virakesari.lk/article/41063

Link to comment
Share on other sites

இங்கிலாந்துக்கெதிரான தொடரில் மத்தியூஸ் இல்லை?
 

image_627a155b96.jpg

இங்கிலாந்துக்கெதிரான ஒருநாள் சர்வதேசப் போட்டி, இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டி தொடர்களுக்கான இலங்கைக் குழாமில் முன்னாள் தலைவரான அஞ்சலோ மத்தியூஸை சேர்த்துக் கொள்ளாமல் விடுவதற்கு தேர்வாளர்கள் தீர்மானித்துள்ளதாக அறியப்படுகிறது.

அந்தவகையில், உடற்றகுதிச் சோதனைக்கு முன்னரே உடற்றகுதி தொடர்பான கரிசனைகள் காரணமாக இங்கிலாந்துக்கெதிரான தொடர்களுக்கான இலங்கைக் குழாமில் சேர்த்துக் கொள்ளப்படமாட்டீர்கள் என அஞ்சலோ மத்தியூஸிடம் கூறப்பட்டதைத் தொடர்ந்து, தேர்வாளர்களிடமிருந்து உடற்றகுதிச் சோதனையொன்றை மத்தியூஸ் கோரியதாகக் கூறப்படுகிறது.

2015ஆம் ஆண்டிலிருந்து மத்தியூஸ் அதிக எடையைக் கொண்டிருப்பதாகக் கூறப்படுவதுடன், கடந்த இரண்டு ஆண்டுகளாக பல்வேறு விதமான காயங்களால் தொடர்களை தவறவிட்டபோதும், 2017ஆம் ஆண்டு ஆரம்பத்திலிருந்து 22 இனிங்ஸ்களில், 100 பந்துகளுக்கு 76 ஓட்டங்கள் என்ற வகையிலென்றாலும் 59.2 என்ற சராசரியில் 888 ஓட்டங்களை ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் பெற்றிருந்தார்.

இதேவேளை, ஆசியக் கிண்ணத்தின் இரண்டு போட்டிகளிலும் குறிப்பிடத்தக்கதாக ஓட்டங்களெதனையும் பெறாததோடு, இரண்டு ரன் அவுட்களில் பங்கெடுத்ததால் விமர்சனத்துக்கு மத்தியூஸ் உள்ளாகியிருந்தார்.

எவ்வாறெனினும், இதற்கு முன்னர் இலங்கை இறுதியாகப் பங்கெடுத்த இருதரப்பு ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரான தென்னாபிரிக்காவுக்கெதிரான தொடரின் ஐந்து போட்டிகளில், 100 பந்துகளுக்கு 83 ஓட்டங்கள் என்றவாறு, 78.33 என்ற சராசரியில் 235 ஓட்டங்களை மத்தியூஸ் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.tamilmirror.lk/பிரதான-விளையாட்டு/இங்கிலாந்துக்கெதிரான-தொடரில்-மத்தியூஸ்-இல்லை/44-222614

Link to comment
Share on other sites

தேவையெனில் நிரூபித்துக் காட்டவும் தயார் 

 

 

எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 10 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் விளையாடவுள்ள இலங்கை கிரிக்கெட் குழாமிலிருந்து அஞ்சலோ மெத்தியூஸ் நீக்கப்பட்டுள்ளார்.

mahiws1.jpg

கடந்த மூன்று நாட்களுக்கு முன் இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமைப் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ள அஞ்சேலா மெத்தியூஸை தற்போது இங்கிலாந்துடனான தொடரில் நீக்கியுள்ளமை சர்ச்சையை கிளப்பியுள்ளது.

கடந்த 2017 ஆம் ஆண்டு சிம்பாவே இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடியது. இதில் இலங்கை அணி படுதோல்வியை சந்திக்க அஞ்சலோ மெத்தியூஸ் முதன்முறையாக பதவியிலிருந்து நீங்கினார்.

அதன்பிறகு மீண்டும் தலைமைப் பொறுப்பை ஏற்ற மெத்தியூஸ், நடைபெற்று வரும் ஆசியக் கிண்ணத் தொடரில் அடைந்த படுதோல்வியின் பின்னர் தேர்வுக்குழு அவரை தலைமைப் பதவியிலிருந்து நீக்கியது.

எனினும் தலைமைப் பதவி பறிபோனால் பரவாயில்லை அணியில் இடம் கிடைக்கும் என்ற எதிர்ப்பார்ப்பிலிருந்த அவருக்கு தேர்வுக்குழு மீண்டும் ஒரு குண்டை தூக்கிப் போட்டுள்ளது.

அதாவது தேர்வுக்குழுத் தலைவரான கிரஹம் லெப்ரோய், மெத்தியூஸின் உடற் தகுதியில்லாத காரணத்தினால் இங்கிலாந்துடனான தொடரிலிருந்து அவரை நீக்கியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

எனினும் இது குறித்து தெரிவித்த மெத்தியூஸ், உடற்தகுதி சோதனை நடத்தாமலே நான் உடற்தகுதியை இழந்து விட்டேன் என்று எவ்வாறு கூற முடியும். அவ்வாறு நான் உடற்தகுதியை இழந்து விட்டேன் என்று நீங்கள் கருதினால் நான் அதனை நிரூபித்துக் காட்டவும் தயார் என கிரஹம் லெப்ரோய்க்கு பதிலளித்துள்ளார். 

இதுவரை 106 போட்டிகளுக்கு தலைமைப் பதவி ஏற்று வழிநடத்தியுள்ள மெத்தியூஸ், 49 போட்டிகளில் வெற்றியையும் 51 போட்டிகளில் தோல்வியையும் தழுவிக் கொண்டுள்ளார். அத்துடன் இதில் ஒரு போட்டி வெற்றி, தேல்வியின்றி முடிவடைந்ததுடன், 5 போட்டிகள் மழையால் இரத்து செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது. 

http://www.virakesari.lk/article/41182

Link to comment
Share on other sites

கலைக்கப்படுகின்றது தெரிவுக்குழு?

 

 

இலங்கை கிரிக்கெட்டின் தெரிவுக்குழு கலைக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலங்கை கிரிக்கெட் தெரிவுக்குழுவினை உடனடியாக கலைத்துவிடுமாறு விளையாட்டுத்துறை அமைச்சர் பைசர் முஸ்தபா இலங்கை கிரிக்கெட்டின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஆஸ்லி டி சில்வாவிற்கு உத்தரவிட்டுள்ளார் என  தகவல்கள் வெளியாகியுள்ளன.

இங்கிலாந்துடன் விளையாடவுள்ள அணியில் மத்தியுசை  இணைத்துக்கொள்ளுமாறு விளையாட்டமைச்சர் உத்தரவிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலங்கை அணியின் பயிற்றுவிப்பாளர் சண்டிக ஹதுருசிங்கவின் பங்களிப்பு குறித்தும் ஆராய்ந்துள்ள அமைச்சர் ஆசிய கிண்ணப்போட்டிகளில் ஏற்பட்ட தோல்விகளிற்கு பயிற்றுவிப்பாளரே காரணம் எனவும் தெரிவித்துள்ளார்.

lbrooy.jpg

 

http://www.virakesari.lk/article/41177

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.