Jump to content

எஸ்.பியின், உரை குறித்த நிலைப்பாடு, விரைவில் அறிவிக்கப்படும்…


Recommended Posts

எஸ்.பியின், உரை குறித்த நிலைப்பாடு, விரைவில் அறிவிக்கப்படும்…

saliya-pieris1.jpg?resize=700%2C350
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் கருத்து வெளியிடுகின்ற எவரிடமும் விசாரணைகளை நடத்துவதற்கான அதிகாரம் காணாமல் போனோர் தொடர்பான அலுவலகத்துக்கு உண்டெனத் தெரிவித்த, அந்த அலுவலகத்தின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ், முன்னாள் அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்கவின் உரை குறித்த நிலைப்பாட்டை, விரைவில் அறிவிக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

கொழும்பில், கடந்த 13ஆம் திகதி நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்துரைத்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க, இறுதி யுத்தக் காலத்தில் சரணடைந்தவர்கள், படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர் என்ற பொருள்பட கருத்து வெளியிட்டிருந்தார். அதேநேரம், இறுதி யுத்தத்தில் சரணடைந்தவர்கள் பலர், காணாமல் போனமை தொடர்பிலான முறைப்பாடுகள், காணாமல் போனோர் தொடர்பான அலுவலகத்துக்கும் கிடைக்கப்பெற்றுள்ளன எனத் தெரிவித்த சாலிய பீரிஸ், எவ்வாறாயினும், அரசியல் மேடைகளில் இடம்பெறும் கருத்துகளுக்குப் பதில் கருத்து வெளியிடுவதைத் தவிர்க்கத் தீர்மானித்துள்ளதாகக் குறி்பிட்டுள்ளார். இருப்பினும், முன்னாள் அமைச்சரின் உரை குறித்த அலுவலகத்தின் நிலைப்பாடு, விரைவில் அறிவிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

 

காணாமல் போனோர் அலுவலகத்தின் அடுத்த மக்கள் சந்திப்பு கொழும்பில்…

வலிந்து காணாமல் போனோர் தொடர்பான அலுவலகத்தின் அடுத்த மக்கள் சந்திப்பு, கொழும்பில் அடுத்த மாதம் இடம்பெறவுள்ளது. இந்த வகையில் மேல்மாகாணத்தில் காணாமல் போனோரின் உறவினர்களுடனான சந்திப்பை, கொழும்பில் நடத்தத் தீர்மானித்துள்ளதாக, காணாமல் போனோர் தொடர்பான அலுவலகத்தின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் தெரிவித்தார்.

கொழும்பில் அமைந்துள்ள லக்ஷ்மன் கதிர்காமர் சர்வதேசக் கற்கைகளுக்கான நிலையத்தில், குறித்த சந்திப்பு நடத்தப்பவுடவுள்ளதெனவும், காணாமல் போனோர் தொடர்பான அலுவலகத்தின் 7ஆவது மக்கள் சந்திப்பு இதுவெனவும் தெரிவிக்கப்படுகிறது இதன்போது, மேல் மாகாணத்தில் காணாமல் போனோர், காணாமல் போன சந்தர்ப்பம், திகதி என்பன குறித்த தரவுகள் திரட்டப்படவுள்ளனவெனவும் அவர் குறிப்பிட்டார்.

நாட்டில் இடம்பெற்ற யுத்தம், ஏனைய கலவர நிலைமைகளின் போது காணாமல் போனோர், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் பற்றிய தரவுகளைத் திரட்டும் செயற்பாடுகளை முன்னெடுத்தும் வரும் நிலையிலேயே,குறித்த அலுவலகத்தின் அடுத்த பொதுமக்கள் சந்திப்பு, கொழும்பில் நடத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://globaltamilnews.net/2018/96844/

Link to comment
Share on other sites

Quote

கொழும்பில், கடந்த 13ஆம் திகதி நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்துரைத்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க, இறுதி யுத்தக் காலத்தில் சரணடைந்தவர்கள், படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர் என்ற பொருள்பட கருத்து வெளியிட்டிருந்தார்.

பொருள் பட இல்லை அச்சொட்டாக "சரணடைந்தவர்கள் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர்" என தெரிவித்து இருந்தார். இது பொய் எனில் திருமதி மகேஸ்வரனை பதவி விலக்கியது போல் (தானாக விலக சந்தர்ப்பம் இல்லை. அழுத்தம் பிரயோகிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டார் பதவியில் இருந்து) எஸ்.பி பதவி விலக்கப்பட மாட்டார் அவர் சிங்களவர் என்பதால் என்பதை உறுதியாக நம்பலாம்.

Link to comment
Share on other sites

உயிருடன் சரணடைந்த கேர்ணல் ரமேஸை இராணுவம் கொலை செய்ததா? பதிலளிக்கும் சரத் பொன்சேகா

 

நாடாளுமன்ற உறுப்பினர்களான டிலான் பெரேரா மற்றும் எஸ் பி திசாநாயக்க ஆகியோர் புத்தி சுவாதீனம் இன்றி கருத்துக்களை வெளியிட்டு வருவதாக அமைசர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவில் இன்றைய தினம் கலந்துரையாடல் ஒன்றில் கலந்து கொண்டு ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

யுத்தத்தின்போது, கேர்னல் ரமேஷ் என்பவர் இராணுவத்தினரிடம் சரணடைந்தபோதும், அதன் பின்னர் இராணுவத்தால் அவர் கொலைசெய்யப்பட்டதாக அண்மையில் எஸ்.பி திசாநாயக்க குறிப்பிட்டிருந்தார்.

இந்த விடயம் தொடர்பில் அப்போதைய இராணுவத்தளபதியாக இருந்த அமைச்சர் சரத் பொன்சேகாவிடம் விசாரணை நடத்தப்படவேண்டும் என எஸ். பி திஸாநாயக்க கூறியது தொடர்பில், ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பியபோது, அமைச்சர் சரத் பொன்சேகா இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இராணுவத்தினரும், பொலிஸாரும் அறியாத விடயங்களையும் வெளியிட்டுவரும் குறித்த இருவருக்கும் ஓய்வு வழங்கப்பட வேண்டும் என அமைச்சர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

https://www.tamilwin.com/politics/01/194172?ref=imp-news

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உறவே,  இப்படியே  போனால் எம்மை இறுதியில் பச்சடி போட்டுவிடுவார்கள் என்பதை முன்னமே துல்லியமாக கணிப்பிட்டு  உயிரைக் காப்பாற்ற ஓடி வந்த நீங்கள் உட்பட்ட நாம் அனைவரும் அறிவு ஜீவிகள் தான். 😂   
    • @goshan_che மீண்டும் உங்களை கண்டது மகிழ்ச்சி… ஆனால் 2 (?) வார விடுமுறையில் மக்களின் வாக்களிக்கும் தன்மையை தீர்மானிக்க முடியுமா? நீங்கள் குறிப்பிட்டவாறு தமிழ்தேசிய கூட்டமைப்பு  தமிழ் தேசிய மக்கள் முன்னணி தமிழ் மக்கள் கூட்டணி ஆகியவற்றிற்கு மக்கள் வாக்களிக்க போவதில்லை என்ற முடிவிற்கு எவ்வாறு வந்தீர்கள்? 
    • நல்லது  உற‌வே அப்படிபட்ட  நீங்கள் தமிழ்நாட்டில்  சீமான் தனது மகனுக்கு ஆங்கில மோகத்தால் ஆங்கில வழி கல்வி கற்ப்பிப்பதை எதிர்க்கவில்லையே. 😭  இலங்கையில்  தமிழர்களும் சிங்கலவர்களும் தங்கள் மொழிகளில் கல்வி கற்பது போன்று மற்றய நாட்டு மக்களும் தங்கள் மொழியில் கல்வி கற்பது போன்று சீமான் தனது மகனுக்கு தமிழ் வழி கல்வி கற்பித்திருந்தால் அது ஒன்றும் சாதனையில்லை  அது ஒரு அடிப்படை விடயம்.அதுவும் தமிழ் தமிழ் என்று சொல்லி அரசியல் செய்யும் சீமான் முதல் செய்ய வேண்டியது.     சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ? சீமானை பற்றி வந்த நல்ல செய்தி ஆங்கில மோகத்தால்  தனது மகனுக்கு தமிழ்நாட்டில் ஆங்கில வழி கல்வி கற்ப்பிப்பது 🤣  
    • யாழ்.போதனா வைத்தியசாலையில் எரியூட்டி திறப்பு! யாழ்ப்பாணம் கோம்பயன்மணல் இந்து மயாணத்தில் அமைக்கப்பட்டுள்ள, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியினை, கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்றைய தினம் உத்தியோகபூர்வமாக திறந்துவைத்தார். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் மருத்துவ கழிவுகளை எரியூட்டுவதற்காக ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் 40 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் குறித்த எரியூட்டி கொள்முதல் செய்யப்பட்டுள்ளமை  குறிப்பிடத்தக்கது. முன்பதாக வைத்தியசாலை மருத்துவ கழிவுகளை எரியூட்டுவதில் பல்வேறு சர்ச்சைகள் எழுந்த நிலையில் எரியூட்டியை அமைப்பதற்கான இடத்தை தேர்வு செய்வதில் கடும் இழுபறி ஏற்பட்டிருந்தது. இந்நிலையில் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தீர்மானத்திற்கமைய யாழ் மாநகர சபை, கோம்பயன்மணல் மயான சபை என்பவற்றின் அனுமதியுடன் குறித்த எரியூட்டி கோம்பயன்மணல் இந்து மயானத்தில் நிர்மாணிக்கப்பட்ட நிலையில் இன்றையதினம் திறந்து வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1375554
    • எந்தக் காலத்திலும் அதிகாரவெறி கொண்டவர்களாலும் ஆக்கிரமிப்பாளர்களாலும்தான் இந்த உலகம் அமைதியை இழந்து கொண்டிருக்கின்றது.........!   தொடருங்கள் ஜஸ்டின் .......!   👍
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.