Jump to content

'இரான் முதலில் தன்னை கண்ணாடியில் பார்த்துக் கொள்ள வேண்டும்': அமெரிக்கா


Recommended Posts

'இரான் முதலில் தன்னை கண்ணாடியில் பார்த்துக் கொள்ள வேண்டும்': அமெரிக்கா

இரான்படத்தின் காப்புரிமைMEHDI PEDRAMKHOU

இரானில் ராணுவ அணிவகுப்பில் நிகழ்ந்த துப்பாக்கிச்சூட்டில் 25 பேர் கொல்லப்பட்டதற்கு காரணம் என்ன என்பதை தெரிந்து கொள்ள, இரான் 'தன்னை தானே முகக்கண்ணாடியில் பார்த்துக் கொள்ள வேண்டும்' என ஐ.நாவுக்கான அமெரிக்கத்தூதர் வலியுறுத்தியுள்ளார்.

இரான் அதிபர் ஹசன் ருஹானி, 'தன் நாட்டு மக்களை நீண்ட காலம் ஒடுக்கி வைத்துள்ளதாக' தூதர் நிக்கி ஹேலி தெரிவித்தார்.

அஹ்வாசில் ராணுவ அணிவகுப்பின் போது நடைபெற்ற தாக்குதலுக்கு அமெரிக்கா ஆதரவு பெற்ற நாடுகள்தான் காரணம் என அதிபர் ஹசன் வெளிப்படையாக குற்றஞ்சாட்டியிருந்தார். அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் நிக்கி ஹேலி இவ்வாறு கூறியுள்ளார்.

நடத்தப்பட்ட தாக்குதலுக்கு இரண்டு பிரிவினைவாத அமைப்புகள் பொறுப்பேற்றுக் கொண்ட நிலையில், அதற்கான ஆதாரத்தை அவர்கள் வழங்கவில்லை.

இரான்படத்தின் காப்புரிமைAFP

இரானில் தென் மேற்கு நகரமான அஹ்வஸில் ராணுவ அணிவகுப்பின் போது நான்கு துப்பாக்கிதாரிகள் சுட்டதில், பொதுமக்கள், ராணுவ வீரர்கள் உள்ளிட்ட 25 பேர் கொல்லப்பட்டனர். இதில் நான்கு வயது சிறுமி ஒருவரும் உயிரிழந்தார்.

யார் யாரை குற்றஞ்சாட்டுகின்றனர்?

அஹ்வஸ் தேசிய எதிர்ப்பு மற்றும் ஐ.எஸ் அமைப்பு ஆகிய இரு அமைப்புகளும் இத்தாக்குதலுக்கு பொறுப்பேற்றுக் கொண்டனர்.

இந்நிலையில் ஐ.எஸ் குழுவின் செய்தி முகமை, வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், இஸ்லாமிய புரட்சி காவலர் படை சீருடையில் மூன்று நபர்கள் காரில் வந்து, அணிவகுப்பை நோக்கி சென்றனர்.

அந்த நபர்கள் ஐ.எஸ் அமைப்பை சேர்ந்தவர்கள் என்று தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளவில்லை என்றாலும், ஜிகாத் குறித்த முக்கியத்துவத்தை பற்றி அந்த வீடியோவில் பேசியுள்ளனர்.

அமெரிக்க ஆதரவு பெற்ற வளைகுடா நாடுகள்தான் தாக்குதலுக்கு காரணம் என அதிபர் ருஹானி தெரிவித்திருந்தார்.

சௌதி அரசர் மொஹமத் பின் சல்மான் மற்றும் இரான் அதிபர் ஹசன் ருஹானிபடத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionசௌதி அரசர் மொஹமத் பின் சல்மான் மற்றும் இரான் அதிபர் ஹசன் ருஹானி

ஆனால், இதனை மறுத்துள்ள அமெரிக்கா, எந்த தீவிரவாத தாக்குதல்களையும் அமெரிக்கா வன்மையாக கண்டிக்கும் என்று கூறியுள்ளது.

இந்நிலையில் ருஹானியின் குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றவை என ஐக்கிய அரபு அமீரகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

"ருஹானி இப்படி எங்களை குற்றஞ்சாட்ட முடியாது. அவர் முதலில் சென்று தன் கண்ணாடியை பார்க்க வேண்டும்" என சி என் என் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த தூதர் நிக்கி கூறினார்.

இந்த வாரம் நடைபெறவுள்ள ஐ.நா பொது கூட்டத்தில் அமெரிக்க அதிபர் டிரம்பை, இரான் அதிபர் ருஹானி சந்திக்க உள்ளார்.

ஐ.நா கூட்டத்திற்கு செல்வதற்கு முன் பேசிய அதிபர் ருஹானி, இரான் இந்த குற்றத்தை பொறுத்துக் கொள்ளாது என்று கூறினார். இத்தாக்குதலுக்கு தொடர்புடையவர்கள் யாரென்று நன்றாக தெரியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

 

அமெரிக்காவின் கைப்பாவையாக எந்த நாடு செயல்படுகிறது என்று குறிப்பிடாத அதிபர் ருஹானி, இரானின் எதிரியான சௌதி அரேபியா, ஐக்கிய அரபு மற்றும் பெஹ்ரைனை கூறுவதாகவே பலராலும் பார்க்கப்படுகிறது.

இரானில் அரபு சிறுபான்மையினருக்கிடையே பிரிவினைவாத செயல்பாடுகளுக்கு சௌதி ஆதரவு அளிப்பதாக ஏற்கனவே இரான் குற்றஞ்சாட்டியிருந்தது.

ஐக்கிய அரபு அமீகரமும், பெஹ்ரைனும், சௌதி அரேபியாவின் நெருங்கிய கூட்டாளிகள்.

அமெரிக்கா - இரான் உறவில் பதற்றம் ஏன்?

அமெரிக்கா மற்றும் இரான் ஆகிய இரு தரப்புக்கும் இடையிலான உறவு பல தசாப்தங்களாக சிக்கலில் உள்ளது.

அணுஆயுத திட்டத்தை இரான் மேற்கொள்வதாக அமெரிக்கா குற்றஞ்சாட்டியிருந்தது. ஆனால், இரான் அதனை மறுத்துள்ளது.

2015ஆம் ஆண்டு, அமெரிக்க அதிபராக ஒபாமா இருந்தபோது, இரானும் அமெரிக்காவும் அணுஆயுத ஒப்பந்தம் ஒன்றை எட்டியது. இதில் சீனா, ரஷ்யா, பிரிட்டன் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகள் கையெழுத்திட்டன. அதில் விதிக்கப்பட்ட தடைகளில் நிவாரணம் பெறுவதற்காக, அணுஆயுத செயல்பாடுகளை குறைத்துக் கொள்வதாக இரான் ஒப்புக்கொண்டது.

எனினும், டிரம்ப் அதிபராக பதவியேற்ற பின்பு இந்த உறவுகள் முறிந்து ஒப்பந்தம் கைவிடப்பட்டது. அப்போதிலிருந்து அமெரிக்கா, இரான் மீது விதிக்கப்பட்ட தடைகள் தொடர்ந்து வந்தன.

https://www.bbc.com/tamil/global-45622925

Link to comment
Share on other sites

Quote

ஆனால், இதனை மறுத்துள்ள அமெரிக்கா, எந்த தீவிரவாத தாக்குதல்களையும் அமெரிக்கா வன்மையாக கண்டிக்கும் என்று கூறியுள்ளது.

பிடல் காஸ்ரோவை கொல்ல சி.ஐ.ஏ எடுத்துக்கொண்ட முறைகளும்,முயற்சிகளும், தரங்களும் கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற வேண்டியவை. சேகுவாரவை கொன்றவர்களும் சி.ஐ ஏ தான் என நிரூபிக்கப்பட்டவை. இவற்றை யார் கண்டிப்பார்கள்?? 

அமெரிக்கா தனது பரம எதியான ஈரானை பழிவாங்க தற்போதைய  காதலி சவூதியை நிச்சயம் பயன்படுத்தும்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • என் தாயக பூமி என்பது சொறீலங்காவை அல்ல.. தமிழீழத்தை. என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். உங்கள் மகிழ்ச்சி நிலைக்க வேண்டும். 
    • Copy Cat அனிருத் க்கு ஒரு keyboard ம் ஒரு  laptop ம் வாய்த்ததுபோல தங்களைத் தாங்களே சிரித்திரன் சுந்தருக்கு ஈடாக கற்பனை செய்துகொள்ளும்  சிலருக்கு laptop  கிடைத்திருக்கிறது.  உயர உயரப் பறந்தாலும்  ஊர்க் குருவி பருந்தாகாது.   
    • போருக்குப் பின் இப்படியொரு வார்த்தையை முதன் முதலாக நீங்கள் குறிப்பிட்டதில் மகிழ்சி அடைகிறோம். 🙂
    • திருடர்கள். திருடர்களிடம் கப்பம் வாங்கியவர்களும் திருடர்கள் தான். அதற்காக தமிழ் மண்ணின் விசேட இயற்கை சொத்துக்களான... சந்தன மரங்களை அழித்ததை தவறில்லை என்று சாதிக்கப்படாது. அதேவேளை சந்தன மரங்கள் கண்டவர்களாலும் களவாடப்படும் நிலை அன்றில்லை... இன்றிருக்குது. அந்த வகையில்.. வீரப்பனின் காட்டிருப்பு.. காட்டு வளம் அதீத திருட்டில் இருந்து தப்பி இருந்தது என்பதும் யதார்த்தம் தான். 
    • ஐந்தாவது நாளாகவும் தொடரும் கல்முனை போராட்டம் : நிர்வாகம் எடுக்கப்போகும் முடிவு என்ன கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தின் மீதான தொடர்ச்சியாக நிர்வாக அடக்குமுறைகளுக்கு எதிராக அங்குள்ள பொதுமக்கள் தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். அதன்படி, போராட்டத்தின் ஐந்தாவது நாளான இன்றும் (29) கவனயீர்ப்புப் போராட்டம் கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தின் முன்பு இடம்பெற்று வருகிறது. குறித்த பிரதேச செயலகத்தின் முன்பு கடந்த திங்கட்கிழமை (25) பொதுமக்கள் பல்வேறு சுலோகங்களை உள்ளடக்கிய பதாகைகள் தாங்கிய வண்ணம் அமைதி வழியில் ஒன்றுகூடி போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர். 30 வருட காலமாக அதன் தொடர்ச்சியாக 5வது நாளான இன்றும் பல்வேறு சுலோகங்களை முன்வைத்து போராட்டத்தை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இன்றைய 5ம் நாள் போராட்டத்தில் சேனைக்குடியிருப்பு விதாதா தையல் பயிற்சி நிலைய மாணவிகள் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், கடந்த காலங்களில் உதவி அரசாங்க அதிபர் பிரிவாகச்செயற்பட்டு வந்த இந்த பிரதேச செயலகம் 1988 களில் தனியான பிரதேச செயலகமாக தரமுயர்த்தப்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து 1993ம் ஆண்டு அமைச்சரவை அங்கீகாரம் பெற்று தனியான பிரதேச செயலகமாக கடந்த 30 வருட காலமாக இயங்கி வருவதாகவும் ஊடகங்களிடம் மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர். நிர்வாக அடக்குமுறை இருந்த போதிலும், ஒரு சில அரசியல்வாதிகள் தொடக்கம் உயரதிகாரிகள் வரை குறித்த பிரதேச செயலகத்தின் மீது நிர்வாக அடக்குமுறைகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருவதன் காரணமாக பொதுமக்களாகிய தாங்கள் இப்போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக அவர்கள் மேலும் குறிப்பிடுகின்றனர். கடந்த 30 வருடங்களுக்கு மேலாக கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்துக்கு எதிராக இடம்பெற்று வரும் சூழ்ச்சிகளையும் நிர்வாக அடக்குமுறைகளைக் கண்டித்தும் திட்டமிடப்பட்டு பிரதேச செயலக உரிமைகளை ஒடுக்கும் நிருவாக அடக்குமுறைகளை இனியும் பொறுத்துக் கொண்டிருக்க முடியாதெனவும் அரசாங்கம் இன்னும் வாக்குறுதிகளை வழங்கி காலத்தை இழுத்தடிக்காது உடன் தீர்வை தரும் வரை தமது அமைதிப் போராட்டம் தொடரும் எனவும் மேலும் மக்கள் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.   https://akkinikkunchu.com/?p=272438
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.