Jump to content

இந்­தி­யாவின் கனவைக் கலைக்கும் நேபாளம்


Recommended Posts

இந்­தி­யாவின் கனவைக் கலைக்கும் நேபாளம்

Untitled-7-824e0b4432f75ea08b1c6c422bad8b23811ca223.jpg

 

வங்­காள விரி­குடா விளிம்பு நாடு­களின் கூட்­ட­மைப்­பான பிம்ஸ்ரெக் இப்­போது, சர்­வ­தேச அரங்கில் பலம்­பெற்று வரும், பிராந்­திய நாடு­களின் மற்­றொரு கூட்­ட­மைப்­பாக மாறத் தொடங்­கி­யி­ருக்­கி­றது.

இது ஒன்றும் புதிய அமைப்பு அல்ல. 1997ஆம் ஆண்­டி­லேயே உரு­வாக்­கப்­பட்­டது. ஆனால், கிட்­டத்­தட்ட இரண்டு தசாப்த கால­மாக அது பெரி­ய­ளவில் இயங்­க­வில்லை.

2016ஆம் ஆண்டு மீண்டும் உயிர்த்துக் கொண்­டது. இதற்குக் காரணம், பாகிஸ்­தா­னுக்கும் இந்­தி­யா­வுக்கும் இடையில் தோன்­றிய பிரச்­சினை.

அது­வரை தெற்­கா­சியப் பிராந்­தி­யத்தின் வலு­வான பிராந்­திய நாடு­களின் கூட்­ட­மைப்­பாக சார்க் அமைப்புத் தான் இருந்­தது.

2016ஆம் ஆண்டு சார்க் மாநாடு பாகிஸ்­தானில் நடை­பெ­ற­வி­ருந்த நிலையில் இந்­தியா அதனைப் புறக்­க­ணிப்­ப­தாக அறி­வித்­தது. அது­போ­லவே, இலங்கை, பூட்டான் ஆகிய நாடு­களும் முடி­வெ­டுத்­தன.

இதனால் பாகிஸ்­தானில் நடக்க வேண்­டிய சார்க் மாநாடு நடக்­க­வில்லை. பாகிஸ்தான் பல்­வேறு முயற்­சி­களை எடுத்தும் அது கைகூ­ட­வில்லை.

சார்க் அமைப்பில் பாகிஸ்தான் உறுப்பு நாடாக இருக்­கி­றது. சீனா­வுக்கும் கண்­கா­ணிப்பு நாடு என்ற அந்­தஸ்து வழங்­கப்­பட்­டது. இது இந்­தி­யா­வுக்கு அசௌ­க­ரி­யத்தைக் கொடுத்­தது.

பாகிஸ்­தா­னுடன் ஏற்­பட்ட முரண்­பா­டு­களை அடுத்து. சார்க் அமைப்பை பல­வீ­னப்­ப­டுத்தும் முடி­வுக்கு இந்­தியா வந்­தது. 2016ஆம் ஆண்டு அந்த திட்டம் நிறை­வே­றி­யது.

உட­ன­டி­யா­கவே, இந்­தியா, பிம்ஸ்ரெக் கூட்­ட­மைப்­புக்கு மீளுயிர் கொடுத்­தது. கோவாவில் நடந்த பிறிக்ஸ் நாடு­களின் தலை­வர்­களின் உச்சி மாநாட்­டுடன் இணைந்­த­தாக, பிம்ஸ்ரெக் தலை­வர்­களின் உச்சி மாநாட்­டையும் இந்­தியா நடத்­தி­யது.

அதற்குப் பின்னர் கடந்த ஓகஸ்ட் மாதம், 30, 31ஆம் திக­தி­களில் பிம்ஸ்ரெக் அமைப்பின் உச்சி மாநாடு நேபா­ளத்தில் நடந்­தது.

இந்த பிம்ஸ்ரெக் அமைப்பில், பாகிஸ்தான், மாலை­தீவு, ஆப்­கா­னிஸ்தான் ஆகிய சார்க் நாடுகள் இல்லை. இலங்கை, பங்­க­ளாதேஷ், நேபாளம், பூட்டான், இந்­தியா ஆகிய ஐந்து சார்க் நாடு­க­ளுடன், மேல­தி­க­மாக மியன்­மாரும், தாய்­லாந்தும் இடம்­பெற்­றுள்­ளன.

பிராந்­திய நாடு­களின் அமைப்­பு­களை வழி­ந­டத்தும்- தலைமை தாங்கும் ஆர்வம் இந்­தி­யா­வுக்கு உள்­ளது. சார்க் அமைப்பு சற்று விரி­வ­டைந்து, .இந்­தி­யாவின் தலை­மைத்­து­வத்­துக்கு சவால்­களைத் தோற்­று­விக்கும் சூழல் ஏற்­பட்ட போது, அதனை ஓரம்­கட்டும் முடி­வுக்கு வந்­தது இந்­தியா.

இப்­போது, பாகிஸ்­தானை தவிர வேறெ­வரும் பெரி­தாக சார்க் பற்றி பேசு­வ­தில்லை.

அண்­மையில், நேபா­ளத்தில் பிம்ஸ்ரெக் மாநாட்­டுக்குச் சென்­றி­ருந்த ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன, காத்­மண்­டுவில் உள்ள சார்க் செய­ல­கத்­துக்கும் சென்­றி­ருந்தார். இது நாங்கள் நடு­நி­லை­யாக இருக்­கிறோம் என்று பாகிஸ்­தா­னுக்கு சமிக்­ஞையை வெளிப்­ப­டுத்தும் யுக்தி.

பிராந்­திய அர­சியல், இரா­ஜ­தந்­திர, பொரு­ளா­தார ரீதி­யாக பிம்ஸ்ரெக் அமைப்பை பலப்­ப­டுத்­து­வதில் அக்­கறை காட்­டிய இந்­தியா, இந்த ஆண்டு அதனை இன்­னொரு கட்­டத்­துக்குக் கொண்டு சென்­றி­ருக்­கி­றது.

பிம்ஸ்ரெக் மாநாடு தொடங்­கப்­ப­டு­வ­தற்கு முன்­னரே, இந்­தியா அதி­கா­ரிகள் மட்­டத்தில் பேச்­சுக்­களை நடத்தி, பிம்ஸ்ரெக் நாடு­களின் இரா­ணுவக் கூட்டுப் பயிற்சி ஒன்­றுக்கு ஒழுங்கு செய்­தது.

புனேயில் ஒரு வார காலம் இந்தக் கூட்டுப் பயிற்சி இடம்­பெற்­றது. ஒவ்­வொரு நாட்டில் இருந்தும், தலா 30 படை­யினர் பங்­கேற்­றனர். ஆரம்­பத்தில், பிம்ஸ்ரெக் அமைப்பின் 7 நாடு­களும் இதற்கு இணங்­கின.

எனினும், பின்னர், இலங்கை, பங்­க­ளாதேஷ், மியன்மார், பூட்டான் ஆகிய நான்கு நாடுகள் தான் இந்­தி­யா­வுக்கு தமது படை­யி­னரை அனுப்பி வைத்­தன.

தாய்­லாந்து, கூட்டுப் பயிற்­சிக்கு தமது படை­யி­னரை அனுப்­ப­வில்லை. கண்­கா­ணிப்பு அதி­கா­ரி­களை மாத்­திரம் அனுப்­பி­யது. நேபாளம் தான் கடைசி நேரத்தில் இந்­தி­யா­வுக்கு அதிர்ச்­சியைக் கொடுத்­தது.

புனேக்கு நேபாள இரா­ணுவ அணி புறப்­ப­டு­வ­தற்கு முதல் நாள் தான், இந்தக் கூட்டுப் பயிற்­சியில் பங்­கேற்­ப­தில்லை என்று முடிவு செய்­தது நேபாளம். இது இந்­தி­யா­வுக்கு அதிர்ச்­சி­யையும் ஏமாற்­றத்­தையும் கொடுத்­தது.

ஏனென்றால், இந்த பிம்ஸ்ரெக் வியூ­கத்தில் நேபாளம் முக்­கி­ய­மா­ன­தொரு நாடு.

பிம்ஸ்ரெக் அமைப்பை இந்­தியா வலுப்­ப­டுத்­தி­ய­மைக்கு இரண்டு கார­ணிகள். ஒன்று பாகிஸ்தான். இரண்­டா­வது சீனா.

சார்க் அமைப்­புக்குள் இருந்து பாகிஸ்­தானை விலக்கி வைப்­பது இந்­தி­யாவின் ஒரு நோக்கம் என்றால், சீனாவின் பிராந்­திய ரீதி­யான தலை­யீட்டை ஓரம்­கட்­டு­வது இன்­னொரு நோக்கம்.

சார்க் அமைப்பின் கண்­கா­ணிப்பு நாடு என்ற அந்­தஸ்தை பெறும் அள­வுக்கு சீனா முன்­னே­றி­யி­ருந்­தது.

இந்­தியப் பெருங்­க­டலில் சீனாவின் ஆதிக்கம் வலு­வ­டைந்து வந்த நிலையில், அதற்கு முடி­வு­கட்­டு­வ­தற்­கான மாற்று உபா­ய­மா­கவும், சார்க்கை முடக்கி பிம்ஸ்­ரெக்கை உரு­வாக்­கி­யது இந்­தியா.

நேபாளம், நீண்­ட­கா­ல­மா­கவே இந்­தி­யாவின் ஒரு மாநிலம் போலத் தான் இருந்து வந்­தி­ருக்­கி­றது. இன்னும் கூட நேபா­ளத்தைச் சேர்ந்­த­வர்கள் தான், இந்­தி­யாவில் காவல் பணி­களில் கூர்க்­காக்­க­ளாக இருக்­கி­றார்கள். இந்­திய இரா­ணு­வத்­தி­னரால் கூர்க்கா ரெஜிமென்ட் என்ற படைப்­பி­ரிவும் இருக்­கி­றது.

நேபா­ளத்­துக்கு கடலோ, துறை­முக வச­தி­களோ கிடை­யாது. இம­ய­ம­லையில் உள்ள நாடாக நேபா­ளத்­துக்­கான அத்­தி­யா­வ­சியப் பொருட்கள், நிதி என்று இந்­தி­யாவே கொடுத்து வந்­தி­ருக்­கி­றது.

ஆனால் அண்­மைக்­கா­ல­மாக நேபாளம் இந்­தி­யாவின் கட்­டுப்­பாட்­டுக்குள் இல்லை. அங்கு சீனாவின் தலை­யீ­டுகள் அதி­க­ரித்து விட்­டன. இந்­தி­யாவை விட அதி­க­மா­கவே நேபா­ளத்­துக்கு கொட்டிக் கொடுக்க சீனா தயா­ராக இருக்­கி­றது.

சீனாவின் பேச்சைக் கேட்டு இந்­தி­யா­வுடன் அடிக்­கடி முரண்டு பிடிக்கும் நிலைக்கும் நேபாளம் வந்­தி­ருக்­கி­றது.

இரண்டு நாடு­க­ளுக்கும் நடுவே இருப்­பதால், நேபா­ளத்தை கைக்குள் போட்டுக் கொள்­வது இப்­போது இரண்டு நாடு­க­ளுக்கும் இடை­யி­லான, ஒரு பனிப்­போ­ரா­கவே நடந்து கொண்­டி­ருக்­கி­றது.

பிம்ஸ்ரெக் அமைப்பில் நேபாளம் அங்கம் வகித்­தி­ருந்­தாலும், அர­சியல், இரா­ஜ­தந்­திர ரீதி­யாக இந்­தி­யா­வுடன் இணைந்­தி­ருப்­ப­தாக காட்டிக் கொண்­டாலும், இரா­ணுவ மற்றும் பாது­காப்பு விவ­கா­ரங்கள் என்று வந்து விட்டால், நேபாளம் இந்­தி­யாவின் சொல்­லுக்குத் தலை­யாட்டும் நிலையில் இல்லை.

புனேயில் நடந்த பிம்ஸ்ரெக் நாடு­களின் இரா­ணுவ கூட்டுப் பயிற்­சியில் இருந்து விலக நேபாளம் எடுத்­தி­ருந்த முடிவே இதனை உறு­திப்­ப­டுத்­து­கி­றது. நேபா­ளத்தின் இந்த முடிவை இந்­தியா எதிர்­பார்க்­க­வில்லை.

ஏற்­க­னவே, இந்­தி­யாவின் அண்டை நாடு­களில் ஒன்­றான, மாலை­தீவை இந்­தியா கிட்­டத்­தட்ட சீனா­விடம் இழந்து விட்­டது. மாலே விமான நிலைய அபி­வி­ருத்தித் திட்­டத்தில் இருந்து இந்­தி­யாவை வெளி­யேற்ற எடுக்­கப்­பட்ட நட­வ­டிக்­கையில் இருந்து தொடங்­கி­யது அந்தப் பிரச்­சினை.

மாலை­தீவில் அவ­சர உதவித் தேவை­க­ளுக்­காக இந்­திய விமா­னப்­ப­டையின் எம்.ஐ.17 ஹெலி­கொப்­டர்கள் மூன்றும், 48 விமா­னப்­ப­டை­யி­னரும், அங்கு நிறுத்தி வைக்­கப்­பட்­டுள்­ளனர்.

இந்­திய ஹெலி­கொப்­டர்­களை அகற்­று­மாறும், இந்­திய விமா­னப்­ப­டை­யி­னரின் வீசா முடி­வுக்கு வந்து விட்­ட­தா­கவும், அண்­மையில் மாலை­தீவு அறி­வித்த போது இந்­தியா குழப்­ப­ம­டைந்­தது,

கடை­சி­யாக இரண்டு நாடு­க­ளுக்­கு­மி­டையில் நடத்­தப்­பட்ட பேச்­சுக்­களை அடுத்து, இந்­திய ஹெலி­களும், விமா­னப்­ப­டை­யி­னரும் தங்­கி­யி­ருக்க தற்­கா­லிக அனு­ம­தியை வழங்­கி­யி­ருக்­கி­றது மாலை­தீவு.

அதே­போன்­ற­தொரு நிலையை நோக்­கியே நேபா­ளமும் செல்லத் தொடங்­கி­யுள்­ளதா என்ற அச்சம் இந்­தி­யா­வுக்கு இருக்­கவே செய்­கி­றது.

பிம்ஸ்ரெக் நாடு­களின் இரா­ணுவக் கூட்டுப் பயிற்­சியின் ஒரு கட்­ட­மாக, உறுப்பு நாடு­களின் இரா­ணுவத் தள­ப­திகள் பங்­கேற்ற மாநாடு ஒன்றும், புனேயில் நடை­பெற்­றது. அதில் இரா­ணுவத் தள­பதி லெப்.ஜெனரல் மகேஸ் சேன­நா­யக்­கவும் பங்­கேற்­றி­ருந்தார்.

அதில் உரை­யாற்­றிய இந்­திய இரா­ணுவத் தள­பதி ஜெனரல் பிபின் ராவத், சீனா­விடம் இருந்து உதவி பெறும் நாடுகள், அந்த உத­விகள் எது­வுமே இல­வசம் அல்ல என்­பதை தெரிந்து கொள்­வார்கள் என்று எச்­ச­ரித்­தி­ருந்தார்.

அத்­துடன், நேபாளம், பூட்டான் ஆகிய நாடுகள் இந்­தி­யாவின் பக்கம் சாய வேண்டும் என்றும், ஏனென்றால் அது தான் புவி­யியல் என்றும் அவர் கூறி­யி­ருந்தார்.

பாகிஸ்­தா­னுக்கும் அமெ­ரிக்­கா­வுக்கும் இடையில் முன்­பி­ருந்த நெருக்கம் இல்­லாமல் போனது போலவே, நேபா­ளத்­துக்கும் சீனா­வுக்கும் இடை­யி­லான நெருக்கம் தற்­கா­லி­க­மா­னது தான் என்ற தொனியில் அவர் கருத்து வெளி­யிட்­டி­ருந்தார்.

இந்­திய இரா­ணுவத் தள­பதி ஒருவர் பிராந்­திய அர­சியல் பற்றி அதிகம் வெளி­யிட்ட கருத்­தாக இதனைக் கொள்­ளலாம். இது, பிராந்­திய அர­சி­யலை விட, பிராந்­திய பாது­காப்­புக்கு இந்­தியா முக்­கி­யத்­துவம் கொடுக்­கி­றது என்­பதை காட்­டி­யி­ருக்­கி­றது.

ஆனாலும், சார்க் அமைப்பில் தனக்கு அடங்­காத நாடு­க­ளான, பாகிஸ்தான், மாலை­தீவை விலக்கி வைத்துக் கொண்டு, தனக்குக் கீழ் செயற்­படக் கூடிய நாடு­களை உள்­ள­டக்கி பிம்ஸ்ரெக் அமைப்பை பலப்­ப­டுத்­திய இந்­தி­யா­வுக்கு நேபாளம் சவா­லா­கவே இருக்­கி­றது.

புனே இரா­ணுவப் பயிற்சி நிறைவு நிகழ்வில் உரை­யாற்­றிய இந்­திய இரா­ணுவத் தள­பதி, இந்­தி­யாவின் பிரதான பொருளாதாரப் போட்டியாளராக சீனாவே உள்ளது, இரண்டு நாடுகளும், தெற்காசியாவின் ஆதிக்கத்துக்காக போட்டியிடுகின்றன என்ற உண்மையை உடைத்திருந்தார்.

அதுபோலவே, இந்த நிகழ்வில் உரையாற்றிய இந்தியாவின் பாதுகாப்பு இணை அமைச்சர் சுபாஸ் பாம்ரே, பிம்ஸ்ரெக் பிராந்தியத்தில், தீவிரவாதம் மற்றும் நாடு கடந்த குற்றங்களுக்கு எதிரான முயற்சிகளுக்கு தலைமை வகிக்கும் பொறுப்பை இந்தியா கொண்டிருப்பதாகக் கூறியிருந்தார்.

பிராந்தியத் தலைமைத்துவத்தை வகிக்க இந்தியா விரும்புகிறது என்பது வெளிப்படையாகவே தெரிகிறது.

அவ்வாறு பிராந்திய தலைமைத்துவத்தை உறுதிப்படுத்துவது உறுப்பு நாடுகள் தான். தலைமைக்கு அடங்கிப்போகும் உறுப்பு நாடுகள் இருக்கும் வரை தான் அது சாத்தியம்.

நேபாளம் குறுக்கே இழுத்துக் கொண்டு செல்வது. இந்தியாவின் அந்த தலைமைத்துவ கனவுக்கு சவாலாகவே இருக்கும்.

http://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2018-09-23#page-3

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அடுத்த‌ பாராள‌ம‌ன்ற‌ தேர்த‌லில் ஸ்டாலின் தான் பிர‌த‌மரா போட்டி போடுவார் என்று அமெரிக்கா க‌னடா தொட்டு ப‌ல‌ நாட்டில்  க‌தை அடி ப‌டுது.....................துண்டறிக்கை பார்த்தே த‌மிழ‌ ஒழுங்காய் வாசிக்க‌ தெரியாது............ பிரத‌மர் ஆகினால் ஒட்டு மொத்த‌ உல‌க‌மே அதிரும் ஸ்டாலின் ஜயாவின் பேச்சை கேட்டு  😁😜................ வீட்டில் சீமான் பிள்ளைக‌ளுக்கு க‌ண்டிப்பாய் தூய‌ த‌மிழ் சொல்லிக் கொடுப்பார் அதில் எந்த ச‌ந்தேக‌மும் இல்லை யுவ‌ர் ஆன‌ர்.............ஆட்சிக்கு வ‌ராத‌ ஒருத‌ர‌ 68கேள்வி கேட்ப‌து எந்த‌ வித‌த்தில் ஞாய‌ம்...........ஒரு முறை ஆட்சி சீமான் கைக்கு போன‌ பிற‌க்கு அவ‌ர் த‌மிழை தமிழை வளர்க்கிறாரா அல்ல‌து திராவிட‌த்தை போல் தமிழை அழிக்கிறாரா என்று பின்னைய‌ காலங்களில் விவாதிக்க‌லாம்............இப்ப‌ அவ‌ர் எடுக்கும் அர‌சிய‌லை ப‌ற்றி விவ‌திப்ப‌து வ‌ர‌வேற்க்க‌ த‌க்க‌து...................
    • நோர்வே அனுமதித்தால் அங்கும் குரானை எரிக்கலாம்.
    • கனிமொழி எப்படி ஆங்கிலம் பேசுகிறார் என கேள்விக்கு விடை இருக்கா? மேற்கூறிய காரணங்கள் அவருக்கு பொருந்தாதா? இது வரை அப்படி ஒரு முறைப்பாடு இருந்ததாக தெரியவில்லை?  
    • இந்த நியாயத்தை சொன்னவர் தான் எதை சொன்னாலும் அதை அப்படியே சாப்பிட ஆட்கள் உள்ளனர் என தெரிந்தே சொல்கிறார்🤣. பயிற்று மொழிதொகு அதிக அளவிலான தனியார் பள்ளிகள் ஆங்கிலத்தைப்பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. அதே வேளையில் அரசுப் பள்ளிகள் தமிழை முதன்மைப் பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. மேலும், நடுவண் அரசால் நடத்தப்படும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் ஆங்கிலத்தையும் இந்தியையும் பயிற்றும் மொழியாகக் கொண்டுள்ளன. https://ta.m.wikipedia.org/wiki/தமிழ்நாட்டில்_கல்வி சீமான் பள்ளி படிப்பு தமிழில்தானே? நல்லாத்தானே தமிழ் பேசுறார்? அதிலே சேர்த்திருக்கலாம். ஒட்டு மொத்த தமிழ்நாட்டில் தமிழில் படிக்க சரியான பள்ளி இல்லை என்பதை எதையும் தாங்கும் புலன்பெயர்ந்தோர் ஏற்கலாம். தமிழ்நாட்டு மக்கள்?  
    • யாழ்களத்தில் சீமான் தொடர்பாக ஆதரவு எதிர்ப்புனு இரு பிரிவுகள் உண்டு. இரண்டுக்கும் தொடர்பில் இல்லாமல் பொதுவான சில விசயங்கள். சீமான் மீதான ஆதரவு ஈழதமிழருக்காக அவர் குரல் எழுப்புவதால் அவர் எமக்கு ஏதும் செய்யக்கூடிய வலிமை உள்ளவர் என்று நம்புகிறோம். சீமான் கட்சி தமிழகத்தில் ஆட்சியமைக்கும் அவர் தமிழக முதல்வரானால் நாம்  ஈழத்தில் வலிமைபெற அது பெரிதும் உதவும் என்றும் நம்மில் சிலர் நம்புகிறோம். தமிழகம் என்பது இந்திய மத்திய அரசின் நேரடி மறைமுக ஆளுகைக்குட்பட்டயூனியன் பிரதேசங்களுட்பட்ட  36 மாநிலங்களில் ஒன்று, மாநிலங்களுக்குள்ளேயுள்ள அரசியல் காவல்துறை நீதி பொது போக்குவரத்தில் மத்திய அரசு ஒருபோதும் தலையிடாது. ஆனால் மாநிலத்தை கடந்து இன்னொரு விஷயத்தில் அங்கு ஆட்சியிலிருப்பவர்கள் இருக்கபோகிறவர்கள் எது செய்வதென்றாலும் மத்திய அரசின் அனுமதியின்றி எதுவுமே செய்ய முடியாது, செய்வதென்றால் மத்திய அரசின் அனுமதி பெற்றே ஆகவேண்டும், அதையும்மீறி எதுவும் செய்தால் சட்ட ஒழுங்கை மீறியவர்கள் இந்திய ஒருமைப்பாட்டை துஷ்பிரயோகம் செய்தவர்கள் என்று காரணம் சொல்லி ஆட்சியை கலைக்கும் அதிகாரம் மத்திய அரசிடம் உண்டு. அது எவர் முதல்வராக இருந்தாலும் அதுதான் நிலமை. எம் விஷயத்தில் யாரும் உதவுவதென்றாலும் இந்திய வெளியுறவுதுறையின் அனுமதி இன்றி இம்மியளவும் எம் பக்கம் திரும்ப முடியாது, எம் விடயத்தில் தலையிடுமாறு கடிதங்கள் மட்டும் வேண்டுமென்றால் மத்திய அரசுக்கு எழுதிவிட்டு காத்துக்கொண்டிருக்கலாம். காலம் காலமாக நடப்பதும் அதுதான்  நடக்க போவதும் அதுதான். மத்திய அரசை அழுத்தம் கொடுத்து வேண்டுமென்றால் எதாவது செய்ய பார்க்கலாம், அப்படி எம் விஷயத்தில் அழுத்தம் கொடுக்க மாநிலத்தில் ஆட்சி கலைக்கப்பட்டாலும் மீண்டும் படுத்தபடியே ஆட்சியை பிடிக்கும் வல்லமை அந்த கட்சிக்கு இருக்கவேண்டும் , அந்த வலிமை இருந்த ஒரேயொரு முதல்வர் எம்ஜிஆர் மட்டுமே  அவரால்கூட எம் விஷயத்தில் மத்திய அரசை அழுத்ததிற்குள் கொண்டுவந்து எமக்கு எதுவும் செய்யவைக்க முடியவில்லை, இதுவரை ஓரு சில தொகுதிகள்கூட ஜெயித்திராத சீமான் இனிமேல் அதிமுக, திமுக, இப்போ விஜய் என்று பாரம்பரிய மற்றும் திடீர் செல்வாக்கு பெற்ற கட்சிகள் என்று அனைத்தையும் துளைத்து முன்னேறி தமிழக ஆட்சியை பிடித்து அரியணையேறுவது சாத்தியமா? சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழீழ தமிழரின் ஆசையா இருந்து எந்த காலமும் எதுவும் ஆகபோவதில்லை, சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழக மக்களில் பெரும்பான்மையினரின் ஆசையா இருக்கவேண்டும், அந்த ஆசை அங்கே நிலவுகிறதா? யதார்த்தங்களை புரியாது வெறும் உணர்ச்சி அடிப்படையில் ஆதரவு எதிர்ப்பு என்று நிற்பது எம்மிடையே பிளவுகளை வேண்டுமென்றால் அதிகரிக்கலாம், சீமானின் வாக்கு வங்கியை ஒருபோதும் அதிகரிக்காது. உணர்ச்சி பேச்சுக்களால் எதுவும் ஆகபோவதில்லை என்று உறுதியாக நம்பியதால்தான் எமது தலைமைகள் ஆயுதம் ஏந்தின, அவர்கள் போன பின்னர் மீண்டும் உணர்ச்சி பேச்சுக்களை நம்பி எமக்குள் நாமே முட்டிக்கிறோமே,  நாம் எமது தலைமையை அவர்கள் சொல்லிபோன  வழியை/வலியை அவமதிக்கிறோமா?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.