Jump to content

ரவீந்­தி­ர­வைக் கைது செய்ய முயன்ற – விசாரணையை அதிகாரியை பதவி நீக்க அழுத்தம்!!


Recommended Posts

ரவீந்­தி­ர­வைக் கைது செய்ய முயன்ற – விசாரணையை அதிகாரியை பதவி நீக்க அழுத்தம்!!

 

 

கொழும்­பில் மாண­வர்­கள் உள்­ளிட்ட 11பேரைக் கடத்தி காணா­மல் ஆக்­கப்­பட்ட வழக்­கின் முக்­கிய சந்­தேக நபரைத் தப்­பிக்க உத­விய குற்­றச்­சாட்­டில் கூட்­டுப் படை­க­ளின் பிர­தானி ரவீந்­தி­ர­வைக் கைது செய்­வ­தற்கு முயன்ற, குற்­றப் புல­னாய்­வுப் பிரி­வின் விசா­ரணை அதி­காரி நிசாந்த சில்­வாவை, பத­வி­யி­லி­ருந்து நீக்­கு­வ­தற்கு அர­சி­யல் உயர் மட்­டங்­க­ளால் அழுத்­தம் பிர­யோ­கிக்­கப்­பட்­டுள்­ளது.

லசந்த விக்­கி­ர­ம­துங்க கொலை வழக்கு, கீத் நொயார் கடத்­தப்­பட்ட வழக்கு ஆகி­ய­வற்­றின் விசா­ரணை அதி­கா­ரி­யா­க­வும் நிசாந்த சில்­வாவே செயற்­ப­டு­வ­தால், மேற்­படி வழக்கு விசா­ர­ணை­க­ளும் பாதிக்­கப்­ப­டும் அபா­யம் ஏற்­பட்­டுள்­ளது.

புங்­கு­டு­தீவு மாணவி வித்­தியா கொலை விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்­த­வர் நிசாந்த சில்வா. இவர், கொழும்­பில் தமிழ்­பே­சும் 11பேர் கடத்­தப்­பட்ட வழக்கு விசா­ர­ணை­க­ளை­யும் முன்­னெ­டுக்­கும் பொறுப்­ப­தி­கா­ரி­யா­கச் செயற்­பட்டு வரு­கின்­றார்.

இந்த வழக்­கில் முதன்­மைச் சந்­தேக நப­ரா­கத் தேடப்­பட்டு வந்த நேவி சம்­பத்தை அண்­மை­யில் இவர் கைது செய்­தி­ருந்­தார். அவ­ரைத் தப்­பிக்க வைத்த குற்­றச்­சாட்­டில் முன்­னாள் கடற்­ப­டைத் தள­ப­தி­யும் தற்­போது கூட்­டுப் படை­க­ளின் பிர­தா­னி­யு­மான ரவீந்­தி­ர­வைக் கைது செய்­வ­தற்கு நீதி­மன்­றில் அனு­மதி பெற்­றி­ருந்­தார்.

இந்த விட­யம் கொழும்பு அர­சி­ய­லில் பெரும் புய­லைக் கிளப்­பி­யது. ரவீந்­தி­ரவை விசா­ர­ணைக்கு வரு­மாறு அழைப்பு விடுக்­கப்­பட்­டி­ருந்த நிலை­யில், அரச தலை­வர் மைத்­தி­ரி­பா­ல­வின் அனு­ம­தி­யு­டன் அவர் வெளி­நாட்­டுக் சென்­றி­ருந்­தார்.

அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன, ரவீந்­தி­ர­வைக் கைது செய்­ய­வ­தற்கு கடும் எதிர்ப்பு வெளி­யிட்­டி­ருந்­தார். இந்த விவ­கா­ரத்­தில் ரவீந்­தி­ர­வைக் கைது செய்­ய­வேண்­டி­ய­தில்லை என்று சட்­டம் ஒழுங்கு அமைச்­ச­ரும் பகி­ரங்­க­மா­கத் தெரி­வித்­தி­ருந்­தார்.

இந்த நிலை­யில், விசா­ர­ணை­களை முன்­னெ­டுக்­கும் அதி­கா­ரி­யான நிசாந்த சில்­வாவை விசா­ரணை அதி­காரி பத­வி­யி­லி­ருந்து அகற்ற கடும் அழுத்­தம் பிர­யோ­கிக்­கப்­பட்­டுள்­ளது. அந்­தப் பத­வி­யி­லி­ருந்து அவரை நீக்­கு­வ­தற்கு, குற்­றப் புல­னாய்­வுப் பிரி­வின் பொறுப்­ப­தி­காரி சானி அபே­சே­கர கடும் எதிர்ப்பு வெளி­யிட்­டுள்­ளார்.

11பேர் கடத்த விவ­கார விசா­ர­ணைப் பொறுப்­பி­லி­ருந்து நிசாந்த சில்­வாவை நீக்­கி­விட்டு, தற்­போது கைது செய்­யப்­பட்­டுள்ள 10 சந்­தேக நபர்­க­ளுக்­கும் எதி­ராக குற்­றப் பத்­தி­ரிகை தாக்­கல் செய்து வழக்கை முன்­னெ­டுக்க அழுத்­தம் பிர­யோ­கிக்­கப்­பட்­டுள்­ளது.

கைது செய்­யப்­பட்­டுள்ள முதன்­மைச் சந்­தேக நப­ரான ஹெட்டி ஆரச்­சி­யி­டம் விசா­ரணை முழு­மை­யாக நடத்­தப்­பட முன்­ன­ரேயே குற்­றப் பத்­தி­ரிகை தாக்­கல் செய்­வது குறித்து அர­சி­யல் மட்­டத்­தில் எடுக்­கப்­ப­டும் முடி­வு­க­ளுக்கு பிர­தான விசா­ரணை அதி­காரி நிசாந்த சில்வா உடன்­ப­டா­மை­யால் அவரை அதில் இருந்து நீக்­கு­வ­தற்கு அழுத்­தம் பிர­யோ­கிக்­கப்­பட்­டுள்­ளது.

11 பேர் கடத்­தல் விவ­கா­ரத்­தில், மேலும் பல சந்­தே­க­ந­பர்­கள் கைது செய்­யப்­ப­ட­வேண்­டி­யுள்­ள­தாக சி.ஐ.டி. அறி­வித்­துள்­ளது. பொறுப்­புக் கூற­லின் அடிப்­ப­டை­யில் முன்­னாள் கடற்­ப­டைத் தள­பதி வசந்த கரன்­னா­கொட, சந்­தேக நப­ரைக் காப்­பாற்­றி­யமை தொடர்­பில் தற்­போ­தைய கூட்­டுப்­ப­டை­க­ளின் பிர­தானி ரவீந்ர விஜே­கு­ண­ரத்ன ஆகி­யோ­ருக்கு எதி­ராக சான்­று­கள் குற்­றப் புல­னாய்­வுப் பிரி­வி­ன­ரால் வெளிப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.

இதே­வேளை, பொலிஸ் பரி­சோ­த­கர் நிசாந்த சில்வா, வித்­தியா படு­கொலை வழக்கை விசா­ரித்த போது வெளிப்­ப­டுத்­தப்­பட்ட தக­வல்­க­ளுக்கு அமைய, அவ­ரைக் கொல்­வ­தற்­கான சதி, அவர் முன்­னெ­டுக்­கும் 11பேர் கடத்­தல், லசந்த விக்­ர­ம­துங்க படு­கொலை மற்­றும் கீத் நொயார் படு­கொ­லை­யு­டன் தொடர்­பு­டைய சந்­தேக நபர்­கள் சில­ரால் சிறை­யில் வைத்து நிசாந்­த­வைக் கொல்­வ­தற்­காக சதித் திட்­டம் தீட்­டப்­பட்­ட­தா­கத் தெரி­விக்­கப்­பட்டது.

இந்த விட­யம் தொடர்­பில் கொழும்பு நீதி­வான் முன்­னி­லை­யில் பீ அறிக்­கை­யும் சமர்­பிக்­கப்­பட்­டுள்­ளது. எனி­னும் அந்த விசா­ர­ணை­க­ளில் சந்­தேக நபர்­கள் இன்­னும் கைது செய்­யப்­ப­ட­வில்லை என்­ப­தும் குறிப்­பி­டத்­தக்­கது.

https://newuthayan.com/story/09/ரவீந்­தி­ர­வைக்-கைது-செய்ய-முயன்ற-விசாரணையை-அதிகாரியை-பதவி-நீக்க-அழுத்தம்.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
        • Like
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.