Jump to content

பிர­பா­க­ர­னுடன் கிளி­நொச்சி சென்று பேச்சு நடத்த மஹிந்த தயா­ராக இருந்தார்...நாமல் ராஜ­பக் ஷ


Recommended Posts

பிர­பா­க­ர­னுடன் கிளி­நொச்சி சென்று பேச்சு நடத்த மஹிந்த தயா­ராக இருந்தார்

03-618e287c60785f960cc973040bfefde7bf7c2376.jpg

 

ஆனால் பிர­பா­கரன் சுய­ந­ல­மா­கவே செயற்­பட்டார் - நாமல் ராஜ­பக் ஷ தெரி­விப்பு  

புலி­களின் தலைவர் பிர­பா­க­ர­னுடன் கிளி­நொச்­சிக்கு சென்று பேச்சு நடத் தவும் மஹிந்த ராஜபக் ஷ தயா­ராக இருந்தார். ஆனால் இந்த விட­யத்  தில் பிர­பா­கரன் சுய­ந­ல­மா­கவே இருந்தார். அவர் பிடி­வா­த­மா­கவே இருந்தார். அவ­ருக்கு யுத்தம் தேவைப்­பட்­டது.  

எனவே எனது தந்­தைக்கு  வேறு தெரிவு இருக்­க­வில்லை. போர் நிறுத்தம்  அமுலில் இருந்­த­போதே புலிகள் இரா­ணுவத் தள­பதி மீது தாக்­குதல் நடத்­தினர் என்று மஹிந்த ராஜபக் ஷவின் புதல்­வரும் எம்.பி.யுமான நாமல் ராஜபக் ஷ தெரி­வித்­தி­ருக்­கின்றார்.  

அண்­மையில் இந்­தி­யா­வுக்கு விஜயம் செய்­தி­ருந்த நாமல் ராஜபக் ஷ அங்கு இந்­திய ஊட­க­மொன்­றுக்கு வழங்­கி­யுள்ள விசேட செவ்­வி­யி­லேயே அவர் இதனைத் தெரி­வித்­தி­ருக்­கிறார்.

அந்த செவ்­வியின் முக்­கிய விட­யங்கள் வரு­மாறு:

கேள்வி: உங்கள் தந்­தையின் அர­சியல் மீள் பிர­வேசம் தொடர்பில்?

பதில்: தற்­போ­தைய இலங்கை அர­சாங்கம் பல வாக்­கு­று­தி­களை வழங்­கியே பத­விக்கு வந்­தது. ஆால் அந்த வாக்­கு­று­திகள் நிறை­வேற்­றப்­ப­ட­வில்லை. தற்­போது இலங்­கையின் ஜனா­தி­ப­தியும் பிர­த­மரும் இணக்­கப்­பா­டின்றி பய­ணிக்­கின்­றனர்.

கேள்வி: ஆனால் அவர்கள் இரு­வரும் உங்கள் தந்­தைக்கு எதி­ராக இணக்­கப்­பாட்­டு­ட­னேயே உள்­ளனர்.

பதில்: அதுவும் தற்­போது கேள்­விக்­கு­றி­யா­கத்தான் இருக்­கி­றது. ஆனால் எமக்­கெ­தி­ராக நீதித்­து­றையை பயன்­ப­டுத்தி வரு­கின்­றனர். அண்­மையில் நாங்கள் ஒரு போராட்­டத்தை நடத்­தினோம். அதில் விஷம் கலந்த பால் பக்கற் வழங்­கப்­பட்­டி­ருந்­தது.

கேள்வி: அர­சாங்­கமா அவற்றை வழங்­கி­யது?

பதில்: அர­சாங்க வாக­னங்கள் இதில் சம்­பந்­தப்­பட்­டுள்­ள­மைக்கு எம்­மிடம் ஆதா­ரங்கள் உள்­ளன. 8 பேர் வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்­டனர். எதிர்க்­கட்­சியை கட்­டுப்­ப­டுத்த அந்­த­ள­வுக்கு இறங்கி வந்­துள்­ளனர்.

கேள்வி: உங்கள் கட்சி கடந்த உள்­ளூ­ராட்சித் தேர்­தலில் வெற்றி பெற்­றது. இதன் மூலம் உங்கள் மீள் வருகை தெளி­வா­கி­றது. மகிந்த ராஜபக் ஷவின் மகன் என்ற வகையில் எப்­படி உணர்­கி­றீர்கள்?

பதில்: இது­போன்ற அர­சியல் உலகில் பொது­வா­னது. ஆனால் ஆசி­யா­வையே இதில் இலக்கு வைக்­கின்­றனர். மேற்கு நாடு­க­ளிலும் இது இருக்­கி­றது. ஆனால் உங்­க­ளது கடின உழைப்­பி­லேயே அர­சியல் வெற்றி தங்­கி­யி­ருக்­கி­றது.

கேள்வி: பிர­பா­க­ரனின் மரணம் தொடர்பில் உங்­க­ளது நினைவு எவ்­வாறு இருக்­கி­றது?

பதில்: அது 2009ஆம் ஆண்டு நடந்­தது. அப்­போது நான் சட்­டக்­கல்­லூ­ரியில் படித்­துக்­கொண்­டி­ருந்தேன். அப்­போது கடி­ன­மான அர­சியல் அழுத்­தங்கள் இருந்­தன. யுத்தம் என்­பது ஒரு இல­கு­வான தீர்­மா­ன­மல்ல. அதில் நாம் வாழ்க்­கை­யுடன் போராட வேண்டி வரும். பயங்­க­ர­வா­தி­க­ளாக இருந்­தாலும் அனை­வரும் மக்­களே. எனினும் பயங்­க­ர­வா­தத்­துக்கு எதி­ராக நாம் போராட வேண்­டி­யி­ருந்­தது. அவர்­க­ளுடன் பேச்சு நடத்த எனது தந்தை தயா­ரா­கவே இருந்தார். புலி­க­ளுக்கு பல சந்­தர்ப்­பங்­களைக் கொடுத்தார். இல்­லா­விடின் மஹிந்த ராஜபக் ஷ கிளி­நொச்­சிக்கு சென்று பேச்சு நடத்­தவும் தயா­ராக இருந்தார். ஆனால் இந்த விட­யத்தில் பிர­பா­கரன் சுய­ந­ல­மா­கவே இருந்தார். பிடி­வா­த­மா­கவே இருந்தார். அவ­ருக்கு யுத்தம் தேவைப்­பட்­டது. எனவே எனது தந்­தைக்கு வேறு தெரிவு இருக்­க­வில்லை. போர் நிறுத்தம் அமுலில் இருந்­த­போது புலிகள் இரா­ணுவத் தள­பதி மீது தாக்­குதல் நடத்­தினர். யுத்தம் என்­பது இறுதித் தேர்­வா­கவே இருந்­தது. மஹிந்த ராஜபக் ஷ மட்­டு­மல்ல புலி­க­ளுடன் பேச்சு நடத்த சந்­தி­ரிகா குமா­ர­துங்­கவும் முய­ற­சித்­தி­ருந்தார். பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவும் இந்த முயற்­சியில் ஈடு­பட்­டி­ருந்தார். இது தமிழ் மக்­க­ளு­ட­னான பிரச்­சினை அல்ல. 83ஆம் ஆண்டு கல­வரம் அப்­போது பத­வி­யி­லி­ருந்த அர­சாங்­கத்தின் ஒரு தவ­றான விட­ய­மாகும். அதை­விட அது­பற்றிக் கூறு­வ­தற்கு என்னால் முடி­யாது. அப்­போது நான் பிறந்­தி­ருக்­க­வில்லை. அது அர­சாங்­கத்­தினால் செய்­யப்­பட்ட ஒரு தவ­றான செயற்­பாடு. என்­னு­டைய மைத்­து­னர்கள் தமி­ழர்­க­ளையே திரு­மணம் முடித்­துள்­ளனர்.

கேள்வி: எனினும் தமிழ் மக்கள் உங்கள் தந்தை உள்­ளிட்­ட­வர்கள் அவர்­க­ளுக்கு எதி­ரா­ன­வர்கள் என ஏன் கரு­து­கின்­றனர்?

பதில்: அது புலி­க­ளினால் உரு­வாக்­கப்­பட்ட பிர­சாரம். புலி புலம்­பெயர் மக்கள் இவ்­வாறு பிர­சாரம் செய்­கின்­றனர். ஆனால் உண்­மையில் அப்­படி நடக்­க­வில்லை. தமிழ் மக்கள் பற்றி பேசும் புலம்­பெயர் மக்கள் இலங்­கைக்கு வந்து ஒரு வீட்­டைக்­கூட கட்­டி­ய­தில்லை. ஆயு­தத்­துக்கு நிதி செல­வ­ழித்த அவர்கள் புத்­த­கங்­க­ளுக்கு செல­வ­ழிக்­க­வில்லை. தற்­கொலை அங்­கி­க­ளுக்கு பணம் செல­வ­ழித்­த­வர்கள் சுகா­தா­ரத்­துக்கு செல­வ­ழிக்­க­வில்லை.

கேள்வி: உங்கள் தந்­தைக்கு எதி­ராக மேற்கு நாடு­க­ளி­லி­ருந்து அழுத்­தங்கள் வந்­தன?

பதில்: இந்த யுத்தம் முடி­வுக்கு வரும் என்று புலம்­பெயர் மக்கள் எண்­ண­வில்லை. எனினும் ஒரு கட்­டத்தில் அது முடி­வுக்கு வரும் என்று அனை­வரும் உணர்ந்­தனர். அப்­போது அதனை நிறுத்த முயற்­சித்­தனர். அதற்­காக அழுத்­தங்­கயை பிர­யோ­கிக்க வைத்­தனர். அவ்­வாறு செய்­த­வர்கள் இன்று இலங்­கையில் வந்து எந்த நல்­ல­தையும் செய்­யாமல் இருக்­கின்­றனர்.

கேள்வி: ராஜீவ் காந்தி கொலைக்­குற்­ற­வா­ளி­களை விடு­விக்க இந்­தி­யாவில் நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டு­வ­தாக தெரி­கி­றது. உங்கள் கருத்து என்ன?

பதில்: அது தொடர்பில் நட­வ­டிக்கை எடுக்க இந்­திய நீதித்­து­றைக்கு முழு­மை­யான உரிமை உள்­ளது. நாம் எமது பகு­தியை செய்து விட்டோம். ராஜீவ் காந்­தியை கொலை செய்த மனி­தனை நாங்கள் அழித்­து­விட்டோம். தற்­போது எமது நாட்டில் அமைதி இருக்­கி­றது. 12500 முன்னாள் போரா­ளி­க­ளுக்கு புனர்­வாழ்வு அளித்­தி­ருக்­கிறோம். இந்த விட­யத்தில் இந்­திய தலை­வர்­களே முடி­வெ­டுக்க வேண்டும்.

கேள்வி: அது கடி­ன­மான முடி­வாக இருக்­குமா?

பதில்: தலை­வர்கள் கடி­ன­மான முடி­வு­களை எடுக்க வேண்டும்.

கேள்வி: இலங்­கையில் இந்­திய சீனா விவ­காரம் தொடர்பில்?

பதில்: அதுவும் ஒரு உரு­வாக்­கப்­பட்ட கதைதான். நாம் யுத்தம் முடிந்­ததும் அபி­வி­ருத்­தி­களை முன்­னெ­டுத்தோம். துறை­மு­கங்­களை நிர்­மா­ணித்தோம். இந்த அனைத்து திட்­டங்­களும் முதலில் இந்­தி­யா­வுக்கே வழங்­கப்­பட்­டன. ஆனால் அப்­போ­தைய ஜனா­தி­ப­தி­யினால் நீண்­ட­காலம் தொடர்ந்து காத்­துக்­கொண்­டி­ருக்க முடி­யா­தி­ருந்­தது. அவர் அபி­வி­ருத்­தியை செய்ய வேண்­டி­யி­ருந்­தது.

கேள்வி: கொழும்புத் துறை­முகம் இருக்­கின்­ற­போது அம்­பாந்­தோட்­டையில் துறை­முகம் தோவையா?

பதில்: அது ஒரு மாற்­றீட்டுத் துறை­மு­க­மா­கவே இருக்­கி­றது. கொழும்புத் துறை­முக கோணத்தில் இருந்து பார்க்­கும்­போது அது மாறு­பட்ட எண்­ணக்­க­ருவில் உரு­வா­னது. அங்கு நாங்கள் உற்­பத்தி மற்றும் ஏற்­று­மதி குறித்து அவ­தா­னிக்­கிறோம். எமக்கு மத்­த­ளயில் விமா­ன­நி­லையம் ஒன்று இருக்­கி­றது. அனைத்­தையும் உள்­ள­டக்­கியே செயற்­ப­டு­கின்றோம்.

கேள்வி: மத்­தள விமான நிலை­யத்தில் இந்­தியா முத­லீடு செய்­ய­வுள்­ள­தாக தெரி­கி­றது. ஆனால் அதனை நீங்கள் எதிர்க்­கி­றீர்­களே?

பதில்: அங்கு இந்­தியா முத­லீடு செய்­வதை நாங்கள் எதிர்க்­க­வில்லை. ஆனால் தனியார் மயப்­ப­டுத்­தலை நாங்கள் விரும்­ப­வில்லை. ஆனால் பங்­கு­டை­மைக்கு நாங்கள் செல்ல வேண்டும். எனினும் தனியால் மயப்­ப­டுத்தல் எதற்கும் தீர்­வா­காது.

கேள்வி: எனினும் கொழும்புத் துறை­முகம் சீனாவின் தனியார் நிறு­வனம் போலல்­லவா தெரி­கி­றது?

பதில்: எமது காலத்தில் துறை­மு­க­நகர் சீனா­வினால் உரிமை கொண்­டா­டப்­ப­டு­வ­தாக இருக்­க­வில்லை.

கேள்வி: ஆனால் சீனா அதனை முழு­மை­யாக கட்­டுப்­ப­டுத்­து­கி­றதே?

பதில்: எமது ஆட்­சியில் அவ்­வாறு இருக்­க­வில்லை. துறை­முக அதி­கார சபையே யார் முத­லீடு செய்­வார்கள் என்­பதே தீர்­மா­னிக்கும் வகையில் சட்டம் இருந்­தது.

கேள்வி: உங்கள் அர­சாங்கம் மீண்டும் வந்தால் அது­தொ­டர்பில் மீண்டும் பேச்­சு­வார்த்தை நடத்­தப்­ப­டுமா?

பதில்: நிச்­ச­ய­மாக மீள் பேச்­சு­வார்­ததை நடத்­தப்­படும். இந்த விட­யத்தில் தற்­போது சில சட்­டங்கள் மீறப்­பட்­டுள்­ளன. தேசிய பாது­காப்பை கருத்தில் கொண்டு சில விட­யங்­களை செய்ய வேண்­டி­யி­ருக்­கின்­றது.

கேள்வி: சீனாவின் பிர­சன்னம் தொடர்பில் இந்­தியா கவலை கொண்­டி­ருந்­ததே?

பதில்: இலங்கை மண்ணை இந்தியாவுக்கு எதிராக எந்தவொரு நாடும் பயன்படுத்த எனது தந்தை இடமளிக்கவில்லை. அதில் உறுதியாக இருந்தோம். நாங்கள் அணிசேரா வெளிவிவகாரக் கொள்கையை கடைப்பிடிக்கிறோம்.

கேள்வி: இந்தியப் பிரதமருடனான சந்திப்பு எப்படியிருந்தது?

பதில்: அது ஒரு சம்பியதாயபூர்வமான சந்திப்பு. எனது தந்தை அவரின் பழைய நண்பரை சந்தித்திருந்தார்.

கேள்வி: ராகுல் காந்தியை சந்தித்திருக்கிறீர்களா?

பதில்: ராகுல் காந்தியை பல தடவைகள் சந்தித்திருக்கிறேன். தொலைபேசியிலும் உரையாடியிருக்கிறேன்.

கேள்வி: ரக்பி வீரரான நீங்கள் ஏன் அரசியலுக்கு வந்தீர்கள்?

பதில்: எனது தந்தை 2005இல் ஜனாதிபதியாகினார். அப்போது அவரின் தொகுதியில் வெற்றிடம் ஏற்பட்டது. அதனை நான் தொடரவேண்டியேற்பட்டது. அதனால் அரசியலுக்கு வந்தேன். ஆனால் அரசியல் சவால்கள் கடினங்கள் நிறைந்த பயணமாகும்.

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2018-09-24#page-1

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கேள்வி: இந்திய நடிகைகளுடனான  தங்கள் தொடர்பு பற்றி ..?

பதில்: இதுவும் எமது அரசியல் எதிரிகளால் அள்ளி தெளிக்கப்படும் குற்றச்சாட்டு . உலக பொருளாதாரத்தை பற்றி கலந்து உரையாடவே அவ்வாறன நிகழ்வு இந்தியவினால்  ஒழுங்கு செய்யப்பட்டு இருந்தது.. இது ஒரு மரியாதையை நிமித்தமான சந்திப்பு அவ்வளவே ..?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.