Jump to content

2018 ஆம் ஆண்டின் சிறந்த கால்பந்து வீரருக்கான விருதை தட்டிச்சென்றார் லூகா மோட்ரிச்


Recommended Posts

2018 ஆம் ஆண்டின் சிறந்த கால்பந்து வீரருக்கான விருதை தட்டிச்சென்றார் லூகா மோட்ரிச்

 
 
 

பிபாவின் சிறந்த வீரருக்கான விருதை தட்டிச்செல்ல ரொனால்டோ, முகமது சலா, லூகா மோட்ரிச் இடையே கடும் போட்டி நிலவிய நிலையில் 2018 ஆம் ஆண்டின் சிறந்த வீரராக லூகா மோட்ரிச் தேர்வு செய்யப்பட்டுள்ளார். #FIFA #LukaModric

 
 
 
 
2018 ஆம் ஆண்டின் சிறந்த கால்பந்து வீரருக்கான விருதை தட்டிச்சென்றார் லூகா மோட்ரிச்
 
லண்டன் :

2018 ஆம் ஆண்டின் சிறந்த வீரருக்கான பிபா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், பிபா சிறந்த வீரர் விருதுக்கு, குரோசியா அணியின் கேப்டன் லூகா மோட்ரிச் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

சர்வதேச கால்பந்து சம்மேளனம் (FIFA) ஆண்டுதோறும் உலகின் சிறந்த கால்பந்து வீரரை தேர்வு செய்து சிறந்த வீரருக்கான விருதை வழங்கி வருகிறது.

அதன்படி, 2018-ம் ஆண்டிற்கான விருதை வழங்குவதற்காக 5 முறை பிபாவின் சிறந்த வீரர் விருது பெற்ற கிறிஸ்டியானோ ரொனால்டோ, லிவபர்பூல் அணிக்காக 43 கோல்கள் அடித்துள்ள முகமது சலா மற்றும் லூகா மோட்ரிச் ஆகிய மூவரும் இறுதி பட்டியலில் இடம் பெற்றிருந்தனர்.

இந்நிலையில், ரொனால்டோ மற்றும் முகமது சலா ஆகியோரை பின்னுக்கு தள்ளி 33 வயதான லூகா மோட்ரிச் 2018-ம் ஆண்டிற்கான உலகின் சிறந்த கால்பந்து வீரராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ரஷியாவில் நடைபெற்ற உலக் கோப்பை கால்பந்து போட்டியில் முதல்முறையாக குரோசியா இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இதற்கு கேப்டன் மோட்ரிச்சின் ஆட்டம் முக்கிய காரணமாக அமைந்தது. உலகக்கோப்பையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் தங்க கால்பந்து விருதும் அவருக்கு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

பிரேசிலை சேர்ந்த மார்டா என்பவருக்கு சிறந்த பெண் வீராங்கனைக்கான பிபா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. #FIFA #LukaModric

https://www.maalaimalar.com/News/TopNews/2018/09/25060810/1193558/Modric-wins-FIFA-mens-player-of-the-year.vpf

Link to comment
Share on other sites

11 ஆண்டுகளாக மெஸ்ஸி, ரொனால்டோ கைகளில் மட்டுமே இருந்த விருது இன்று குரோசிய கேப்டன் கைகளில்..! #FIFA

 
 

ஃபிஃபா வழங்கும் `Men's player of the year' விருதை குரோஷியா கேப்டன் லூகா மோட்ரிச் வென்றுள்ளார். இந்த விருதின் மூலம், கடந்த 11 ஆண்டுகளில் உலகின் சிறந்த வீரர் விருதை மெஸ்ஸி, ரொனால்டோ தவிர்த்து வெல்லும் முதல் வீரர் என்ற மகத்தான சாதனையைப் படைத்துள்ளார். 

மோட்ரிச்

இந்த ஆண்டு நடைபெற்ற கால்பந்து உலகக் கோப்பை தொடரில் குரோஷிய அணியை இறுதிப் போட்டி வரை வழிநடத்திச் சென்று அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார் மோட்ரிச். நடுகளத்தில் சுழன்று அட்டாக், டிஃபன்ஸ் அனைத்துக்கும் பங்களித்து யாரும் எதிர்பாராத அணியை கோப்பைக்கு அருகிலேயே அழைத்துச் சென்றார். உலகக் கோப்பைத் தொடரின் சிறந்த வீரருக்கான `கோல்டன் பால்' விருதை வென்றதிலிருந்து தொடங்கியது மோட்ரிச்சின் விருதுப் பயணம். 

 

 

சர்வதேச அரங்கில் ஜொலித்ததற்காக மட்டும் அவருக்கு இந்த விருது வழங்கப்படவில்லை. சாம்பியன்ஸ் லீக் கோப்பையை மூன்றாவது முறையாக வென்ற ரியல் மாட்ரிட் அணிக்கு இவர் அளித்த பங்களிப்பு அசாத்தியமானது. கிளப் அளவிலும், சர்வதேச அளவிலும் தன் அணியை ஜொலிக்கவைக்க, இந்த விருதுக்கான போட்டியில் இருந்த கிறிஸ்டியானோ ரொனால்டோ, முகம்மது சலா இருவரையும் பின்னுக்குத்தள்ளி வெற்றி பெற்றுள்ளார் மோட்ரிச். 

மோட்ரிச்

கால்பந்து உலகில் எந்த விருது வழங்கப்பட்டாலும் அங்கு மெஸ்ஸி அல்லது ரொனால்டோவின் பெயர் இடம்பெற்றுவிடும். பல வீரர்கள் சிறப்பாகச் செயல்பட்டாலும், விருதுகள் அவர்கள் கைகளில்தாம் தவழும். அந்த இருவரின் ஆதிக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் மோட்ரிச். சில வாரங்கள் முன்பு வழங்கப்பட்ட ஐரோப்பாவின் சிறந்த வீரர் விருதை வென்று அசத்தியவர், இப்போது உலகின் சிறந்த வீரர் விருதையும் வென்றுள்ளார். 

https://www.vikatan.com/news/sports/137960-luka-modric-won-fifa-mens-player-of-the-year-award.html

 

 

 

பிபா 2018-ம் ஆண்டின் சிறந்த கால்பந்து வீரராக ‘குரோஷியாவின் லூகா மாட்ரிச்’ தேர்வு

 

 
VBK-MODRIC

பிபாவின் இந்த ஆண்டு சிறந்த கால்பந்து வீரராக தேர்வு செய்து விருது பெற்ற குரோஷிய வீரர் லூகா மாட்ரிச்   -  படம்: ராய்டர்ஸ்

2018-ம் ஆண்டுக்கான பிபாவிந் சிறந்த கால்பந்து வீரராக குரோஷியாவின் லூகா மாட்ரித் சேர்வு செய்யப்பட்டு விருது வழங்கப்பட்டது. பிரேசில் வீராங்கனை மார்டா 6-வது முறையாகச் சிறந்த வீரராகத் தேர்வு செய்யப்பட்டு விருது வழங்கப்பட்டது.

ஒவ்வொரு ஆண்டும் உலகக் கால்பந்து சம்மேளனம் சர்வதேச அளவில் சிறந்த கால்பந்து வீரர்களைத் தேர்வு செய்து விருதுகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு சிறந்த வீரர்களுக்கான தேர்வில் குரோஷிய வீரர் லூகா மாட்ரிச், போர்ச்சுக்கல் வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, லயனோனல் மெஸ்ஸி, முகமது சலா ஆகியோருக்கு இடையே கடும் போட்டி நிலவியது.

 

இந்த போட்டியின் முடிவில், ரியல் மேட்ரிட் அணிக்காக விளையாடி வருபவரும், குரோஷிய அணியின் கேப்டனுமான லூகா மாட்ரிச் சிறந்த வீரராகத் தேர்வு செய்யப்பட்டார். லண்டனில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் பிபா சார்பில் அந்த விருது அவருக்கு வழங்கப்பட்டது.

ரியல்மாட்ரிட் அணி இந்த முறை சாம்பியன் லீக்கில் 4-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது அந்த அணியிலும் இடம் பெற்றிருந்த லூகா மாட்ரிச், உலகக்கோப்பைப் போட்டியிலும் குரோஷிய அணியை இறுதிப்போட்டி வரை முதல்முறையாக அழைத்துச் சென்றார். இந்தச் சாதனைக்காக லூகாவுக்கு இந்த விருது வழங்கப்பட்டது.

கடந்த 2008-ம் ஆண்டில் இருந்து பிபாவின் விருதுகளை லயோனல் மெஸ்ஸி, கிறிஸ்டியானோ ரொனால்டோ ஆகிய இருவர் மட்டுமே மாற்றி தலா 5 முறை விருதுகளை வென்று வந்தநிலையில், முதல் முறையாக லூகா மாட்ரிச் பெற்றுள்ளார்.

கால்பந்து விளையாட்டில் மிகச்சிறந்த வீரரான லயோனல் மெஸ்ஸி இந்த முறை சிறந்த வீரர்களுக்கான தேர்வுப்பட்டியலில் முதல் 3 இடங்களில் கூட இடம் பெறவில்லை. 2-வது இடத்தில் கிறிஸ்டியானோ ரொனால்டோவும், 3-வது இடத்தில்முகம்மது சலாவும் இடம் பெற்றனர்.

இந்த விருது குறித்து மோட்ரிச் கூறுகையில், ‘‘இந்தச் சிறப்பான மேடையில் இருந்து இந்த விருதினைப் பெறுவது பெருமையாக இருக்கிறது. இந்த விருது எனக்கானது அல்ல ரியல்மாட்ரிட், குரோஷிய அணி, எனது பயிற்சியாளர்கள் அனைவருக்குமானது’’ எனத் தெரிவித்தார்.

மகளிர்பிரிவில் பிரேசில் வீராங்கனை மார்டா சிறந்த வீராங்கனைக்கான விருதைப் பெற்றார்.இந்த சீசனில் 32 கோல்கள்வரை அடித்த முகமது சலா அதிகமான கோல்கள் அடித்த வீரருக்கான புகாஸ் விருதைப் பெற்றார்.

சிறந்த கோல்கீப்பருக்கான கோல்டன் குளோவ் விருதை பெல்ஜியம் நாட்டு கோல்கீப்பர் திபாட் கோர்டியஸ் பெற்றார். பேர்ப்ளே வீரருக்கான விருதை ஜெர்மனி அணியின் பார்வேர்டு வீரர் லென்னார்ட் பெற்றார்.

https://tamil.thehindu.com/sports/article25036200.ece

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
    • பெரிய‌வ‌ரே தேர்த‌ல் ஆனைய‌ம் யாரின் க‌ட்டு பாட்டில் இருக்குது அன்மைக் கால‌மாய் இந்தியா அள‌வில் ந‌ட‌க்கும் ச‌ம்ப‌வ‌ங்க‌ளை காது கொடுத்து கேட்ப‌து இல்லையா பெரிய‌வ‌ரே..............இந்தியாவில் எத்த‌னையோ க‌ட்சியை உடைத்து அவ‌ர்க‌ளின் சின்ன‌த்தை புடுங்கி..............த‌மிழ் நாட்டை விட‌ வ‌ட‌ நாட்டில் வீஜேப்பின் அட்டூழிய‌ம் அதிக‌ம்..............நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ப‌ற்றி நான் எழுதின‌தில் சிறு பிழையும் இல்லை..............க‌ட்சி தொட‌ங்கின‌ கால‌த்தில் இருந்து க‌ட்சி பெடிய‌ங்க‌ளுட‌ன் அண்ண‌ன் சீமானுட‌ன் ப‌யணிக்கிறேன்...............................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.