Jump to content

கடலில் 49 நாள்கள் திக்குதெரியாமல் தவித்து உயிர்பிழைத்த 19 வயது இளைஞரின் கதை


Recommended Posts

கடலில் 49 நாள்கள் திக்குதெரியாமல் தவித்து உயிர்பிழைத்த 19 வயது இளைஞரின் கதை

இந்தோனீசிய இளைஞர் ஒருவர் நாற்பத்து ஒன்பது நாள்கள் கடலில் திக்கு தெரியாமல் தவித்து மீண்டிருக்கிறார். ஒரு மீன்பிடி குடிசையில் கடல் நீரை குடித்து, தனது குடிசை படகில் இருந்து மரக்கட்டைகளை பயன்படுத்தி கடல் மீன்களை உண்டு இவ்வளவு நாள்கள் தாக்குப்பிடித்திருக்கிறார்.

கடலில் ஒரு மிதவை மீன்பிடி குடிசையில் தனித்து விடப்பட்ட அடிலங்படத்தின் காப்புரிமைINDONESIAN CONSULATE OSAKA/FACEBOOK Image captionகடலில் ஒரு மிதவை மீன்பிடி குடிசையில் தனித்து விடப்பட்ட அடிலங்

இந்தோனீசிய கடல் பகுதியில் இருந்து 77 மைல் (125 கிமி) தொலைவில் ஒரு மீன்பிடி குடிசையில் அல்டி நோவல் அடிலங் இருந்துவந்தார். கடந்த ஜூலை மாதம் கடுமையான சூறாவளி காற்று காரணமாக 19 வயது இளைஞர் அடிலங் திக்குதெரியாதநிலையில் குவாம் கடல் பகுதியில் தனித்துவிடப்பட்டார்.

பனாமா கப்பல் ஒன்று மூலமாக அவர் மீட்கப்பட்டார். இந்தோனீசியாவின் சுலாவெசி தீவைச் சேர்ந்த அந்த பத்தொன்பது வயது இளைஞர் 'ராம்பாங்' எனப்படும் துடுப்புகளற்ற, எந்திரம் இல்லாத ஒரு மிதவை மீன்பிடி குடிசையில் வேலை செய்துவந்தார்.

ராம்பாங் விளக்குகளை போடுவதன் மூலம் மீன்களை வலையில் வீழ்த்தும் வேலைதான் அல்டி நோவல் அடிலங்கின் பணி என்கிறது ஜகார்டா போஸ்ட் செய்தித்தாளின் அறிக்கைகள்.

ஒவ்வொருவாரமும் அம்மீன்பிடி குடிசைக்குச் சொந்தக்காரர் தனது நிறுவனத்தின் ஒரு வேலையாள் மூலம் அடிலங்கிற்கு உணவு, தண்ணீர், மற்றும் எரிபொருள் போன்றவற்றை வழங்கிவிட்டு, மிதவை மீன்படி குடிசையில் சிக்கிய மீன்களை பெற்றுக்கொள்வார்.

'அடிக்கடி அழுத அடிலங்'

கடந்த ஜூலை 14-ம் நாள் அடிலங்கின் ’ராம்பாங்’ கடுமையான சூறாவளி காற்றின் தாக்குதலில் சிக்கியது. அப்போது அவரிடம் உணவுப்பொருள்கள் ஓரளவுதான் இருந்தது. ஆகவே அவர் மீன்பிடித்து தனது மீன்பிடி குடிசையின் மர வேலியில் இருந்து மரக்கட்டைகளை எடுத்து மீன்களை சுட்டுச் சாப்பிட்டார்.

தி ஜகார்ட்டா போஸ்ட் நாளிதழலானது திக்கில்லாமல் குடிசை மிதந்ததால் அடிலங் பயந்துவிட்டதாகவும் அடிக்கடி அழுது கொண்டிருந்ததாகவும் ஒசாகாவில் இந்தோனீசிய தூதுவர் ஃபஜர் ஃபர்தாஸ் தெரிவித்ததாக செய்தி வெளியிட்டுள்ளது.

''ஒவ்வொரு முறை அவர் ஓரு பெரிய கப்பலை பார்க்கும்போதும் அவருக்கு தான் காப்பாற்றப்படுவோம் என நம்பிக்கை பிறந்தது. ஆனால் பத்துக்கும் அதிகமான பெருங்கப்பல் அவரை கடந்து சென்றன. ஆனால் எவரும் அவரை பார்க்கவில்லை அல்லது கப்பலை நிறுத்தவில்லை'' என ஃபஜர் ஃபர்தாஸ் கூறியிருக்கிறார்.

Map of Sulawesi and Guam Image captionகுவாம் கடல் பகுதியில் மீட்கப்பட்ட அடிலங்

கடந்த ஆகஸ்ட் 31-ம் தேதி தனக்கு அருகில் இருந்த எம்வி அர்பெக்கியோ கப்பலை பார்த்ததும் அடிலங் ஒரு அவசரநிலை செய்தியை ரேடியோ சமிக்ஞை மூலமாக அனுப்பினார். குவாம் தீவின் கடல் பகுதியில் இருந்த ஒரு பனாமா கப்பல் அந்த அழைப்பை எடுத்தது.

அக்கப்பலின் கேப்டன் குவாம் கடற்கறை பாதுகாப்பு அதிகாரியை தொடர்புகொண்டார். அவர் ஒரு குழுவை அனுப்பி அவரை மீட்டு ஜப்பானுக்கு கொண்டுவர அறிவுறுத்தினார் என்கிறது ஒசாகாவின் இந்தோனீசிய தூதரக ஜெனெரலின் பேஸ்புக் பக்கம்.

அடிலங் செப்டம்பர் ஆறாம் தேதி ஜப்பானை அடைந்தார். இரண்டு நாட்களுக்கு பின்னர் அவர் இந்தோனீசியாவுக்கு பறந்தார். தற்போது தனது குடும்பத்தினருடன் மீண்டும் இணைந்திருக்கிறார் அந்த 19 வயது இளைஞர்.

https://www.bbc.com/tamil/global-45629875

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • சினிமா காலத்தை வைத்து பார்த்தால் கருணாநிதியே ஆட்சி கதிரையில் அமர்ந்திருக்க முடுடியாது.நீங்கள் விரும்பினால்  படங்களுடன் பூரண விளக்கம் தரப்படும்  ஓகேயா? முதலில் கனிமொழியுடம் தொடங்கவா?
    • ஆழ்ந்த இரங்கல்கள். மேலே  ஏராளன் இணைத்த தினக்குரல் பத்திரிகையில் 1933 ஓகஸ்ட்இல் பிறந்த எதிர்வீரசிங்கம் வயது 89 என்று எழுதியிருக்கிறார்கள். 90 என்றுதானே வரவேண்டும்?. அவர் மத்திய கல்லூரியில் படிக்கும் போது இலங்கை சாதனையை முறியடிக்கும் போது ,  கொழும்பில் வெளிவந்த ஆங்கில பத்திரிகை ஒன்றில் இவரது பெயரை எதிர்வீரசிங்க என்று எழுதியிருந்தது. அப்பொழுது மத்திய கல்லூரியின் அதிபர் சிமித் அவர்கள் ‘எதிர்வீரசிங்க அல்ல நாகலிங்கம் எதிர்வீரசிங்கம்’  என்று எழுதிய கடிதம் அதே பத்திரிகையில் பிறகு வந்தது.  ஆசிய விளையாட்டுப்போட்டியில் தங்கப்பதக்கம் வென்றபின்பு யாழ் புகையிரத நிலையத்தில் இருந்து மத்திய கல்லூரிக்கு அழைத்து வரப்பட்டு ,எதிர்வீரசிங்க அவர்களுக்கு சிறந்த வரவேற்பு பாடசாலையில்வழங்கப்பட்டது.  -  மத்திய கல்லூரியின் பழைய மாணவரான எனது தகப்பனார் சொன்ன தகவல்
    • அட்லீஸ்ட் விஜயலக்சுமிக்கு செய்தது போல் அநியாயம் செய்யாமல் தன்னை நம்பி வந்த பெண்ணை கண்ணியத்தோடு நடத்தினார் என நினைக்கிறேன்🤣. பதில் விளக்கம் போதும் என நினைக்கிறேன்🤣 ஐயகோ….இரு மாநில ஆளுனர்….ஆட்டுகுட்டி கதையை கேட்டு…
    • இல்லை அண்ணாவின் ஆட்சிகாலம் போல இருக்கும்.   
    • அவ‌ங்க‌ள் இட‌த்தில் நேர்மை ஊழ‌ல் இல்லாம‌ இருந்தால் ஏன் த‌மிழ‌ர்க‌ள் திராவிட‌த்தை வெறுக்க‌ போகின‌ம் 2ஜீ ஊழ‌லால் ஒரு இன‌ம் அழிவ‌தை வேடிக்கை பார்த்த‌வ‌ர்க‌ள் பெரியார் ஜாதியை ஒழித்தார் அது தான் குறிப்பிட்ட‌  ஜாதி ம‌க்க‌ள் வ‌சிக்கும் இட‌த்தில் ம‌னித‌க் க‌ழிவை த‌ண்ணீருக்கை க‌ல‌ந்த‌வை....................... சோடா க‌டையில் வேலை பார்த்து விட்டு ம‌ஞ்ச‌ல் வாக்கில் 4புத்த‌க‌த்தோட‌ வ‌ந்த‌வ‌ரின் குடும்ப‌த்துக்கு இத்த‌னை ல‌ச்ச‌ம் கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து ச‌த்திய‌மாய் கோடி காசுக்கு எத்த‌னை 0 என்று என‌க்கு தெரியாது ஆனால் நீட் தேர்வை ர‌த்து செய்ய‌ எங்க‌ளிட‌ம் ர‌க‌சிய‌ம் இருக்கு என்று சொல்லி ப‌ல‌ பிள்ளைக‌ள் நீட்டால் இற‌ந்து போனார்க‌ள் அத‌ற்க்கு பிற‌க்கு உத‌ய‌நிதியின் பெயர் கொல்லிநிதி கொல்லுநிதியின் ம‌க‌ன் இன்ப‌நிதிக்கு தெரியும் கோடி காசுக்கு எத்த‌னை 0 என்று....................திமுக்காவுக்கு ஓட்டு போட்ட‌ ம‌க்க‌ள் ம‌ழை வெள்ள‌த்தால் பாதிக்க‌ப் ப‌ட்ட‌ போது வீட்டுக்குள் இருந்து க‌டும் வேத‌னை ப‌ட்ட‌வை 4000ஆயிர‌ம் கோடி ஒதுக்கி ப‌ணி செய்தார்க‌ளா அல்ல‌து அதையும் ஊழ‌ல் செய்து மூடி ம‌றைத்தார்க‌ளா...........................ஆண்ட‌வா இனி வ‌ள‌ந்து வ‌ரும் பிள்ளைக‌ளுக்கு ந‌ல்ல‌ அறிவைக் கொடு அப்ப‌ தான் கால‌ம் க‌ட‌ந்து த‌மிழ் நாட்டில் ந‌ல் ஆட்சி ம‌ல‌ரும் நாடும் செல்ல‌ செழிப்பாய் இருக்கும் ம‌க்க‌ளும் குறைக‌ள் இல்லாம‌ எல்லா வ‌ச‌தியோடும் வாழுவின‌ம்...............................................  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.