Jump to content

கிழக்கு லண்டனில் கணவனைக் கொலை செய்த குற்றச்சாட்டு – பாக்கியம் ராமதன் விளக்கமறியலில்..


Recommended Posts

கிழக்கு லண்டனில் கணவனைக் கொலை செய்த குற்றச்சாட்டு – பாக்கியம் ராமதன் விளக்கமறியலில்..

uk-murder.jpg?resize=660%2C371

கணவனைக் கொலை செய்தார் என்ற குற்றச்சாட்டில் கிழக்கு லண்டன் நியூஹாமைச் சேர்ந்த 73 வயதான பாக்கியம் ராமதன் என்பவர் மீது லண்டன் தேம்ஸ் நீதவான் நீதிமன்றத்தில் நேற்று திங்கட்கிழமை வழக்கு தொடரப்பட்டுள்ளது.  கிழக்கு லண்டன் நியூஹாம் பேர்கர் வீதியில் (Burges Road ) உள்ள வீடொன்றில் 75 வயதான கனகசபை ராமதன் என்பவர் தலையில் கடும் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டிருந்தார். .

 

கடந்த வெள்ளிக்கிழமை (21.09.18) பிற்பகல் 14: 20 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றதனை அடுத்து கைது செய்யப்பட்ட, பாக்கியம் ராமதன் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.  இதேவேளை கொல்லப்பட்ட கனகசபை ராமதனின் பிரேத பரிசோதனை உள்ளிட்ட சட்ட ரீதியான நடைமுறைகள் தொடர்வதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

http://globaltamilnews.net/2018/97107/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த வயதில் கொலைவெறி பிடிக்குமளவுக்கு என்ன செய்திருப்பார் ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பெருமாள் said:

இந்த வயதில் கொலைவெறி பிடிக்குமளவுக்கு என்ன செய்திருப்பார் ?

டிமென்ஷியா போன்ற வருத்தங்கள்... வருத்தக் காரர்களை பராமரிப்பவர்களை பெரும் விரக்திக்குள்ளாக்கும்.

கணவர் அப்படி ஒரு நோயாளராகவும்... மனைவி, பிள்ளைகள் வீட்டிலிருந்து வெளியேறிய நிலையில், கணவரை பராமரிப்பவராகவும் இருந்தால் இது நடக்க சாத்தியம் இருந்திருக்கலாம்.?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, பெருமாள் said:

இந்த வயதில் கொலைவெறி பிடிக்குமளவுக்கு என்ன செய்திருப்பார் ?

உண்மை பொய் தெரியாமல் ஒண்டும் கதைக்கேலாது.....
பாக்கியத்துக்குதான் வெளிச்சம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்


இந்த வயசில் அம்மா ஜெயிலில் இருந்து என்ன செய்யப் போறாவோ?...பிள்ளைகள் செய்த குற்றத்தை தான் பொறுப்பெடுத்தவோ தெரியவில்லை 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 9/25/2018 at 10:15 PM, Nathamuni said:

டிமென்ஷியா போன்ற வருத்தங்கள்... வருத்தக் காரர்களை பராமரிப்பவர்களை பெரும் விரக்திக்குள்ளாக்கும்.

கணவர் அப்படி ஒரு நோயாளராகவும்... மனைவி, பிள்ளைகள் வீட்டிலிருந்து வெளியேறிய நிலையில், கணவரை பராமரிப்பவராகவும் இருந்தால் இது நடக்க சாத்தியம் இருந்திருக்கலாம்.?

விசாரித்ததில் நாதமுனியின் கருத்தே ஒத்து போகுது .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாரும் சொல்லுறது நல்லாத்தான் இருக்குது.  சரி பிழை கண்டுபிடிக்கிறதுதான் கஸ்டமான விடயம்.

.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 9/25/2018 at 11:15 PM, Nathamuni said:

டிமென்ஷியா போன்ற வருத்தங்கள்... வருத்தக் காரர்களை பராமரிப்பவர்களை பெரும் விரக்திக்குள்ளாக்கும்.

கணவர் அப்படி ஒரு நோயாளராகவும்... மனைவி, பிள்ளைகள் வீட்டிலிருந்து வெளியேறிய நிலையில், கணவரை பராமரிப்பவராகவும் இருந்தால் இது நடக்க சாத்தியம் இருந்திருக்கலாம்.?

இப்ப ஐரோப்பிய நாடுகளிலையெல்லாம் உப்பிடி சொல்லித்தான் கன கொலை குத்து வெட்டு கேஸ்சுகளையெல்லாம் இழுத்து மூடுறாங்கள்.

இனியென்ன அங்கையும்  உதுதான்......... வாள் வெட்டுக்காரனை மனநோயாளியெண்டு சேட்டிக்கரை குடுத்து பிரச்சனையை முடிப்பாங்கள் காணும்.:cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, குமாரசாமி said:

இப்ப ஐரோப்பிய நாடுகளிலையெல்லாம் உப்பிடி சொல்லித்தான் கன கொலை குத்து வெட்டு கேஸ்சுகளையெல்லாம் இழுத்து மூடுறாங்கள்.

இனியென்ன அங்கையும்  உதுதான்......... வாள் வெட்டுக்காரனை மனநோயாளியெண்டு சேட்டிக்கரை குடுத்து பிரச்சனையை முடிப்பாங்கள் காணும்.:cool:

ஆ... அந்த பம்மாத்துக்கள் எல்லாம் ஊர்ல...

இங்க டாக்குத்தருள இருந்து மரண விசாரணை அதிகாரி, போலிசு அதிகாரி எல்லாரும் சைன் வைக்கோணும்... எல்லாம் ஒழுங்கா இருந்தால்... ஐந்து நிமிச வேலை கண்டியளோ..

எங்கையும் எசகு, பிசகு எண்டால்... உடம்பை பனிக் கட்டிக்குள வைச்சு போட்டு... ஆர அமர விசாரித்து தான் கையெழுத்து போடுவினம்.... அதுக்குள்ள பிழை விட்ட ஆக்கள் இருந்தால் உள்ள போக வேண்டியது தான்.

உங்க ஒரு நல்ல இடத்து அக்கவுண்டண்ட் பொடிச்சி.... கலர் காட்டின பொடியன் இடம் மாட்டி...அவன் செய்த கிரிமினல் வேலையில அப்பாவியாய் மாட்டி, 4 வருசம் உள்ள இருந்து போட்டு வந்திருக்கிறா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, Nathamuni said:

உங்க ஒரு நல்ல இடத்து அக்கவுண்டண்ட் பொடிச்சி.... கலர் காட்டின பொடியன் இடம் மாட்டி...அவன் செய்த கிரிமினல் வேலையில அப்பாவியாய் மாட்டி, 4 வருசம் உள்ள இருந்து போட்டு வந்திருக்கிறா.

இங்கு நாலு வருஷம் என்றால் இரண்டு வருஷம் தானே  ருசிகண்ட பூனை விடாது உள்ளே போனாலே கிரிமினல் 11+எக்ஸாம் பாஸ் பண்ணியது போல் வெளியில் வந்து எப்படி பிடிபடாமல் கிரைம் செய்வது இலகு டீலர்கள் அனைத்தும் தேர்ந்த ஆளாய் இருப்பா ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, பெருமாள் said:

இங்கு நாலு வருஷம் என்றால் இரண்டு வருஷம் தானே  ருசிகண்ட பூனை விடாது உள்ளே போனாலே கிரிமினல் 11+எக்ஸாம் பாஸ் பண்ணியது போல் வெளியில் வந்து எப்படி பிடிபடாமல் கிரைம் செய்வது இலகு டீலர்கள் அனைத்தும் தேர்ந்த ஆளாய் இருப்பா ?

கொலை முயற்சி.... போதைப் பொருள் பணம் லாப்ட்டில்... இருந்தது தனக்கு தெரியாது... என்று சொன்னாலும் அவர் அதே வீட்டில் இருந்தார் என்ற வகையில்...8 வருஷம் ...4 வருசம் உள்ள...

 

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
On 9/27/2018 at 12:58 AM, பெருமாள் said:

விசாரித்ததில் நாதமுனியின் கருத்தே ஒத்து போகுது .

பாக்கியத்தை விசாரிச்சனீங்களோ ???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

பாக்கியத்தை விசாரிச்சனீங்களோ ???

இல்லை அவர்களின் அயல் பக்கம் நம்ம ஆள் ஒருத்தர் மூலம் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 9/25/2018 at 11:15 PM, Nathamuni said:

டிமென்ஷியா போன்ற வருத்தங்கள்... வருத்தக் காரர்களை பராமரிப்பவர்களை பெரும் விரக்திக்குள்ளாக்கும்.

கணவர் அப்படி ஒரு நோயாளராகவும்... மனைவி, பிள்ளைகள் வீட்டிலிருந்து வெளியேறிய நிலையில், கணவரை பராமரிப்பவராகவும் இருந்தால் இது நடக்க சாத்தியம் இருந்திருக்கலாம்.?

கடவுளேயெண்டு நோய்நொடி வந்து முடக்கப்படுறதுக்கு முதலே போய்ச்சேர்ந்துடோணும்  character0009b_zps696f2aed.gif

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

பாக்கியத்தை விசாரிச்சனீங்களோ ???

 

கேள்விப்பட்டதை எங்களுக்கும் சொல்லலாமே ?

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, ரதி said:

 

கேள்விப்பட்டதை எங்களுக்கும் சொல்லலாமே ?

 

நான் கேள்விப்பட்டால் சொல்ல மாட்டனோ ரதி

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள். இப்ப ஜேர்மனியிலை எதுக்கெடுத்தாலும் தொட்டால் பட்டால் புட்டின் தான் குற்றவாளி.அந்த மாதிரி மக்களை மூளைச்சலவை செய்துகொண்டு போகின்றார்கள். இணக்க அரசியலுக்கு பெயர் போன ஜேர்மனி இப்படி ஆகிவிட்டது.
    • அத்துடன் மாவீரர் நாளில் மிகுந்த சனத்தை  பார்க்க கூடியதாக இருந்தது. (வன்னியில் என நினைக்கிறேன்) அத்துடன் மாவீரர் நாளில் மிகுந்த சனத்தை  பார்க்க கூடியதாக இருந்தது. (வன்னியில் என நினைக்கிறேன்)
    • முள்ளிவாய்க்கால் அழிவிற்கு நன்றி சொல்லி பொன்னாடை போர்த்திய நிகழ்வுகளுக்கு ஊமையாக இருந்தோர் சீமான் விடயத்தில் கதறுவது ஏன்?  தமிழை விட திராவிடம் வலிமையானது என்றா?
    • உற‌வே ஏன் சீமான் மீது இம்புட்டு வ‌ன்ம‌ம்..........2009 முள்ளிவாய்க்கால் இன‌ அழிப்புக்கு துணை போனாரா அல்ல‌து த‌லைவ‌ருக்கு எங்க‌ட‌ போராட்ட‌த்துக்கு வைக்கோ ராம‌தாஸ் திருமாள‌வ‌ன் போன்ற‌வ‌ர்க‌ள் போல் துரோக‌ம் செய்தாரா...............எல்லாம் அழிந்த‌ நிலையில் த‌மிழீழ‌ம் என்ற‌ பெய‌ரை உயிர்ப்போடு வைத்து இருப்ப‌து 30ல‌ச்ச‌த்துக்கு மேல் ப‌ட்ட‌  எம் தொப்பில் கொடி உற‌வுக‌ள்...........பிர‌பாக‌ர‌ன் என்றாலே தீவிர‌வாதி என்று இருந்த‌ த‌மிழ் நாட்டில் பிர‌பாக‌ர‌ன் எம் இன‌த்தின் த‌லைவ‌ர் என்று கோடான‌ கோடி ம‌க்க‌ள் கேட்டுக்கும் ப‌டி சொன்ன‌துக்கா சீமான் மீது இம்ம‌ட்டு வெறுப்பா சீ சீ 2009க்கு முத‌ல் ஈழ‌ம் ஈழ‌ம் என்று க‌த்தின‌ கூட்ட‌ம் இப்ப‌ சிங்க‌ள‌வ‌னுக்கு விள‌ம்ப‌ர‌ம் செய்துக‌ள் இதை விட‌ கேவ‌ல‌ம் என்ன‌ இருக்கு...............அந்த‌ க‌ரும‌த்தை நான் தொட்டு என்ர‌ ந‌ட்ப்பு வ‌ட்டார‌ம் தொட்டு ஒருத‌ரும் கேடு கெட்ட‌ செய‌ல் செய்த‌து இல்லை................சீமான் மீது விம‌ர்ச‌ன‌ம் வைக்க‌லாம் ஆனால் அவ‌ர் கொண்ட‌ கொள்கையோடு உறுதியாய் நிக்கிறார் த‌னித்து நிக்கிறார்...........சீமான் காசு மீது பேர் ஆசை பிடித்த‌வ‌ர் என்றால் இந்த‌ தேர்த‌லில் ஆதிமுக்கா கூட‌ கூட்ட‌னி வைச்சு 500 கோடியும் 8 தொகுதியும் ஜா ப‌ழ‌னிசாமி கொடுத்து இருப்பார்................ த‌மிழ‌க‌ அர‌சிய‌ல் வாதிக‌ளை பார்த்தால் கூடுத‌லான‌ ஆட்க‌ள்  பெண்க‌ளுட‌ல் க‌ள்ள‌ உற‌வு வைத்து இருந்த‌வை அந்த‌ வ‌கையில் அண்ண‌ன் சீமான் வாழ்த்துக்க‌ள் ப‌ட‌ம் எடுத்த‌ போது விஜ‌ய‌ல‌ட்சுமி கூட‌ காத‌லோ அல்ல‌து ஏதோ ஒரு உற‌வு இருந்து இருக்கு.............நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே...........ஆனால் அண்ண‌ன் சீமான் அவ‌ரின் திரும‌ண‌த்தை வெளிப்ப‌டையாய் தான் செய்தார் அப்போது ஒரு பிர‌ச்ச‌னையும் வ‌ர‌ வில்லை அர‌சிய‌லில் வ‌ள‌ந்து வ‌ரும் போது அந்த‌ பெண்ண‌ திராவிட‌ கும்ப‌ல் ஊட‌க‌ம் முன்னாள் பேச‌ விடுவ‌து ம‌னித‌ குல‌த்துக்கு அழ‌கில்லை................. சீமான் த‌வ‌று செய்தால் அதை நான் ப‌ல‌ இட‌த்தில் சுட்டி காட்டி இருக்கிறேன்.............எங்க‌ட‌ த‌மிழீழ‌ தேசிய‌ த‌லைவ‌ர் எப்ப‌டி ப‌ட்ட‌வ‌ர் என்று எம‌க்கு ந‌ன்றாக‌வே தெரியுன் அண்ண‌ன் சீமான் ஒரு ப‌டி மேல‌ போய் அள‌வுக்கு அதிக‌மாய் த‌லைவ‌ரை புக‌ழ் பாட‌ தொட‌ங்கி விட்டார்.............ஆர‌ம்ப‌ கால‌த்தில் அதிக‌ம் பேசினார் அப்போது எம‌க்கே தெரிந்த‌து அது உண்மை இல்லை என்று............இப்போது சீமானின் பேச்சில் ப‌ல‌ மாற்ற‌ம் தெரியுது.................நிஜ‌த்தில் ந‌ல்ல‌வ‌ர் அன்பான‌வ‌ர் ஆனால் அவ‌ரை சுற்றி ப‌ல‌ துரோகிய‌ல் இருக்கின‌ம் அவ‌ருட‌ன் க‌தைப்ப‌தை ரெக்கோட் ப‌ண்ணி  விஜேப்பியின் ஆட்க‌ளுக்கு போட்டு காட்டின‌து அப்ப‌டி க‌ட்சிக்குள் இருந்த‌வையே  ப‌ல‌ துரோக‌ங்க‌ள் செய்த‌வை உற‌வே 2009க்கு முத‌ல் த‌மிழீழ‌த்தில் ஒரு மாத்தையா ஒரு க‌ருணா.............த‌மிழ் நாட்டில் ப‌ல‌ நூறு க‌ருணா ப‌ல‌ நூறு மாத்தையா இதை எல்லாம் தாண்டி க‌ன‌த்த‌ வ‌லியோடு தான் க‌ட்சியை கொண்டு ந‌ட‌த்துகிறார் த‌ன‌து ம‌னைவிக்கு இந்த‌ தேர்த‌லில் சீட் த‌ர‌வில்லை என்று க‌ட்சியை விட்டு போன‌ ந‌ப‌ரும் இருக்கின‌ம்............... உங்க‌ட‌ பாதுகாப்புக்கு சொல்லுறேன் உற‌வே த‌மிழ் நாட்டுக்கு போகும் நிலை வ‌ந்தால் நாம் த‌மிழ‌ர் க‌ட்சியில் ப‌ய‌ணிக்கும் இள‌ம் பெடிய‌ங்க‌ள் கூட‌ அண்ண‌ன் சீமானை ப‌ற்றி யாழில் எழுதுவ‌து போல் நேரில் த‌ப்பா க‌தைச்சு போடாதைங்கோ.............நீயார‌ட‌ எங்க‌ள் அண்ண‌ன‌ விம‌ர்சிக்க‌ என்று ச‌ண்டைக்கும் வ‌ந்து விடுவின‌ம்.............இப்ப‌டி ப‌ல‌ ச‌ம்ப‌வ‌ங்க‌ள் இருக்கு சொல்ல‌.............இது யாழ்க‌ள் ஆனால் இதே முக‌ நூல் என்றால் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ஜ‌ரிம் சீமான சீண்டி பாப்ப‌வ‌ர்க‌ளுக்கு அவேன்ட‌ பானியில் ப‌தில் அளிப்பார்க‌ள்...............6வ‌ருட‌த்துக்கு முத‌ல் என‌க்கும் திமுக்கா சொம்புக்கும் வாத‌ம் ஏற்ப‌ட்டு க‌ட‌சியில் எப்ப‌டி போய் முடிந்த‌து என்று என‌க்கு ம‌ட்டும் தான் தெரியும்............யாழில் இருக்கும் மூத்த‌வையின் சொல்லை கேட்டு யாழில் நான் இப்ப‌ யார் கூட‌வும் முர‌ன் ப‌டுவ‌தில்லை..........இது தான் கால‌ நீர் ஓட்ட‌த்தில் பெரிய‌வ‌ர்க‌ள் சொல்ல‌  என்னை நானே மாற்றி கொண்டேன்.............. வெற்றியோ தோல்வியே த‌னித்து போட்டி யார் கூட‌வும் கூட்ட‌னி இல்லை அதுக்காக‌ தான் பெரும்பாலான‌ த‌மிழ‌க‌ இளைஞ்ர்க‌ள் வ‌ய‌தான‌வ‌ர்க‌ள் அண்ண‌ன் சீமானை தொட‌ர்ந்து ஆத‌ரிக்கின‌ம்🙏🥰.................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.