Jump to content

'சிங்கள இராணுவத்தினர் பேய்கள்" என நினைத்தோம் : தமிழினி எழுதிய புத்தகத்தை ஆதாரமாக எடுங்கள் என்கிறார் பிரசன்ன


Recommended Posts

'சிங்கள இராணுவத்தினர் பேய்கள்" என நினைத்தோம் : தமிழினி எழுதிய புத்தகத்தை ஆதாரமாக எடுங்கள் என்கிறார் பிரசன்ன

 

 
 

புற்றுநோயால் பீடிக்கப்பட்டு மரணித்த விடுதலை புலிகள் அமைப்பின் பெண்கள் அமைப்பின் தலைவி தமிழினி தான் உயிருடன் இருக்கும்போது நூல் ஒன்றை எழுதியுள்ளார். அதில் குறிப்பிட்டுள்ள விடங்களை நோக்கும் போது இராணுவத்தினர் யுத்தக் குற்றம் புரியவில்லை என்பது புலனாகிறது என சட்டத்தரணி  மேஜர் அஜித் பிரசன்ன தெரிவித்தார்.  

ajith.jpg

 “தாய் நாட்டுக்காக இராணுவத்தினர்” அமைப்பு ஏற்பாடுசெய்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்று கொழும்பு ஸ்ரீவஜிராஷர்ம பௌத்த நிலையத்தில் நடைபெற்றது. 

அதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில்,

புலிகள் அமைப்பின் பெண்கள் அமைப்பின் தலைவி தமிழினி தான் உயிருடன் இருக்கும்போது நூல் ஒன்றை எழுதியுள்ளார். 

அதில்“சிங்கள இராணுவத்தினர் பேய்கள் என்றே நாம் கருதியிருந்தோம். எனினும் எமக்கு புனர்வாழ்வளிக்கும் போதுதான் அறிந்துகொண்டோம் அவர்களும் மனிதர்கள் என்று. இறுதிகட்ட யுத்தத்தின்போது தப்பிச்செல்ல முற்பட்ட தமிழ் மக்களை சுடுமாறு பணிப்புரை கிடைத்தது. 

அதன் பிரகாரம் சுட்டதாகவும்” அந்நூலில் அவர் குறிப்பிட்டுள்ளார். எனவே அந்த நூலே சிறந்த ஆதாரமாக உள்ளது என்றார்.

http://www.virakesari.lk/article/41159

Link to comment
Share on other sites

அரசாங்கத்திற்கு எதிராக இராணுவத்தினர் கிளர்ந்தெழுவர் ; மேஜர் அஜித் பிரசன்ன 

 

 

(எம்.சி.நஜிமுதீன்)

வெளிவிவகார அமைச்சர் திலக் மாறப்பனவை பதவியிலிருந்து விலக்கிவிட்டு அப்பதவியை பிரித்தானிய பிரபுக்கள் சபை உறுப்பினருக்கு வழங்கினால் அவர் இலங்கை இராணுவத்தினர் குற்றமற்றவர்கள் என்பதை நிரூபிப்பார். 

ajith.jpg

மேலும் அரசாங்கம் இராணுவத்தினர் மீது கெடுபிடிகளை மேற்கொண்டு வருகிறது.  நாட்டில் இருபது இலட்சம் பேர் வரையிலான இராணுவத்தினர் உள்ளனர். எனவே அவர்கள் அனைவரும் எப்போதாவது அரசாங்கத்திற்கு எதிராக கிளர்ந்தெழுவார்கள் என்று எச்சரிக்கை விடுக்கிறேன். அந்த எழுச்சி எவ்வாறு அமையும் என்பதைத் சொல்ல முடியாதென சட்டத்தரணி  மேஜர் அஜித் பிரசன்ன தெரிவித்தார்.  

“தாய் நாட்டுக்காக இராணுவத்தினர்” அமைப்பு ஏற்பாடுசெய்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்று கொழும்பு ஸ்ரீவஜிராஷர்ம பௌத்த நிலையத்தில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். 

http://www.virakesari.lk/article/41157

Link to comment
Share on other sites

12 hours ago, நவீனன் said:

'சிங்கள இராணுவத்தினர் பேய்கள்" என நினைத்தோம் : தமிழினி எழுதிய புத்தகத்தை ஆதாரமாக எடுங்கள் என்கிறார் பிரசன்ன

 

ajith.jpg

 

முகம் மனத்தைக் காட்டுகிறது. வாய் அதற்கும் மேலே.?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழினி எழுதியதாகக் கூறப்படும் புத்தகம் அவர் எழுதவில்லை என்பது நான் அறிந்தது. அவரது காதலரான தமிழர் ஒருவருக்கும் இலங்கை அரசுக்குமிடையிலான புரிந்துணர்வின் அடிப்படையிலேயே இப்புத்தகம் எழுதப்பட்டது. இதில் தமிழியின் பங்களிப்பென்பது கேள்விக்குறியானது.

அடுத்ததாக, இந்தப் புத்தகத்தின் வெளியீட்டுச் சூத்திரதாரி சிறிதுகாலம் இங்கே அவுஸ்திரேலியாவிலும் வந்து தங்கியிருந்தவர். சரி, அவரது சொந்த வாழ்க்கை பற்றிப் பேச வேண்டாமே.

சரி, தாங்களே நடத்திய நாடகத்தினை தங்களுக்குச் சாதகமாக மேற்கோள் காட்டுவதென்பது சிங்களத்திற்கு புதியதல்லவே? இப்படி எத்தனையோ பேரைப் பார்த்தாயிற்று. தமது குற்றங்களை தம்மாலேயே மறைக்க முடியாத தறுவாய்களில், தமிழரின் பக்கமிருந்து நற்சான்றிதழ் பெறப்பார்கிறது சிங்களம். நீங்கள் எதுவுமே செய்யவில்லையென்றால், ஒரு முன்னால்ப் போராளியின் வாக்குமூலத்தை ஏன் சாட்சியாகக் கையிலெடுக்க வேண்டும் ?

என்னதான் நடந்தாலும், எமக்கான நீதியோ தீர்வோ சிங்களத்திடமிருந்து வரப்போவதில்லை. சீனாவின் பக்கமிருந்து இலங்கையைக் கழற்றிவிட்டால், தமிழர் மீதான சர்வதேசத்தின் "அக்கறையும்" இல்லாமல்ப் போய்விடும். அதன் பிறகு நாம் உள்நாட்டுக்குள்ளேயே தமிழர்களுக்கு தீர்வொன்றை வழங்குவோம்?? அதுசரி, தமிழரின் பிரச்சினைதான் என்ன ?? யாருக்குத் தெரியும் ??


 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.