Jump to content

உலக நடப்பு......’16 வயதில் பாலியல் வல்லுறவுக்கு உள்ளானேன்’: தொலைக்காட்சி தொகுப்பாளர்


Recommended Posts

’16 வயதில் பாலியல் வல்லுறவுக்கு உள்ளானேன்’: தொலைக்காட்சி தொகுப்பாளர்

கடந்த சில மணி நேரங்களில் நிகழ்ந்த உலக நடப்புகளில் சிலவற்றை தொகுத்து வழங்குகிறோம்.

16 வயதில் பாலியல் வல்லுறவு

பத்மாபடத்தின் காப்புரிமைAXELLE/BAUER-GRIFFIN/GETTY

நான் 16 வயதில் பாலியல் வல்லுறவுக்கு உள்ளானேன் என அமெரிக்க தொகுப்பாளர் பத்மா லட்சுமி தெரிவித்துள்ளார். நாற்பத்து எட்டு வயதான பத்மா நியூயார்க் டைம்ஸ் நாளிதழுக்கு எழுதிய கட்டுரையில் ஒரு புத்தாண்டு தினத்தன்று தன் நண்பரால் பாலியல் வல்லுறவுக்கு உள்ளானதாக தெரிவித்துள்ளார். அண்மையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நீதிபதிகள் மீது பாலியல் குற்றச்சாட்டு சுமத்திய இரண்டு பெண்கள் குறித்து சந்தேகத்தை எழுப்பி இருந்தார். இது குறித்து பத்மா எழுதிய கட்டுரையில் தனக்கு நிகழ்ந்த நிகழ்வை சுட்டிக்காட்டி உள்ளார்.

Presentational grey line

தந்தைக்கு சிறை

தந்தைக்கு சிறைபடத்தின் காப்புரிமைFACEBOOK

பாரீஸ் நகர் ஒன்றில் பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தையின் தந்தைக்கு மூன்று மாதங்கள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. பால்கனியில் தொங்கிக் கொண்டிருந்த அந்த குழந்தை குடியேறி ஒருவரால் மீட்கப்பட்டது. ஸ்பைடர்மேன் போல கட்டடத்தில் ஏறி அவர் அந்த குழந்தையை மீட்டார். அதற்காக அவர் பலராலும் பாரட்டப்பட்டார். பிரான்ஸ் நாட்டு குடியுரிமையும் அவருக்கு வழங்கப்பட்டது. குழந்தையின் தந்தை முறையாக குழந்தையை பராமரிக்கவில்லை என்று கூறிய நீதிமன்றம், அவர் 'பெற்றோர் கடமை'-க்கான பயிற்சி எடுக்க வேண்டும் என்றும் கூறி உள்ளது.

Presentational grey line Presentational grey line

புனித நகரங்களை இணைக்கும் ரயில்

புனித நகரங்களை இணைக்கும் ரயில்படத்தின் காப்புரிமைREUTERS

செளதி அரசர் சல்மான் புனித நகரங்களை இணக்கும் அதிக வேக ரயிலை தொடங்கி வைத்தார். இந்த ரயிலானது மெக்கா மதினா ஆகிய நகரங்களை இணைக்கிறது. இந்த ரயில் திட்டத்தின் மதிப்பு 6.7 பில்லியன் டாலர்கள். மணிக்கு 300 கி.மீ வேகத்தில் இந்த ரயில் செல்லும் .

Presentational grey line

சுட்டுக் கொலை

சுட்டுக் கொலைபடத்தின் காப்புரிமைAL-WEED AL-ALAIAMI FOR HUMAN RIGHTS

இராக் மனித உரிமை பெண் செயற்பாட்டாளர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார் . அரசாங்கத்திற்கு எதிராக கடுமையான போராட்டங்கள் நடந்துவரும் பாஸ்ரா நகரத்தில் இந்த சம்பவமானது நிகழ்ந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள காணொளியில், செளதா அல் அலி ஒரு சூப்பர்மார்க்கெட் அருகே தனது வாகனத்தில் ஏறும் போது அடையாளம் தெரியாத நபர்களால் சுடப்படுகிறார்,

Presentational grey line

கைதான சீன உளவாளி

அமெரிக்காபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

சீனாவை சேர்ந்த ஒருவர் அமெரிக்க பொறியாளர்கள் மற்றும் விஞ்ஞானிகளை சீனாவின் சார்பில் உளவுப் பார்த்ததாக கைது செய்யப்பட்டுள்ளார் என அமெரிக்க விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சட்ட விரோத உளவாளியாக செயல்பட்டதாக 27 வயதாகும் ஜு ஷாக்குவான் சிகாகோவில் கைது செய்யப்பட்டார் என அமெரிக்க அட்டார்னி அலுவலகம் தெரிவித்துள்ளது.

மின் பொறியியல் படிப்பதற்காக 2013ஆம் ஆண்டு அமெரிக்கா வந்துள்ளார் ஷாக்குவான். 2016ஆம் ஆண்டு அமெரிக்க ராணுவத்தில் அவரின் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது.

சிகாகோ நீதிமன்றத்தில் பதிவான குற்றவியல் புகாரின்படி ஷக்குவான் ஜி உயர்மட்ட உளவுத்துறை அதிகாரி ஒருவருக்கு பணி புரிந்ததாக குற்றம் சுமத்தப்படுகிறது.

https://www.bbc.com/tamil/global-45648479

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • அப்படியாயின் மாற்று ஆட்சி ஒன்று வரட்டும். அது பாஜகாவை விட நாம் தமிழர் கட்சியாக இப்போதைக்கு இருக்கட்டும். அதை தமிழ்நாட்டு மக்கள்பரீட்சித்து பார்க்கட்டும். சரி இல்லையேல் அடுத்த நான்கு வருடத்தில் ஆட்சியை மாற்றட்டும். சந்ததி சந்ததியாக மற்ற கட்சிகளின் குறைபாடுகளை எதிர்வு கூறியே மீண்டும் மீண்டும் விட்ட தொட்ட பிழைகளை தொடராமல்....
    • எழுதுங்கள்…எதோ நான் பானுமதி, விஜி, பாத்திமாவோடு டீலில் இருந்தமாரி போகுது கதை🤣. நான் எப்போதும் சீமானை என்ன சொல்வேன்? சின்ன கருணாநிதி….. சின்ன கருணாநிதியே இவ்வளவு கேலவலமானவர் என எழுதும் எனக்கு பெரிய கருணாநிதி, எம்ஜிஆர், ஸ்டாலின், ஜெ., சசி, உதய் எல்லாரும் அதை ஒத்த கள்ளர்கள் என்பது தெரியாமலா இருக்கும். உங்களையும் சகாக்களையும் போல சீமான் மட்டும் தங்கம், ஏனையோர் பித்தளை என பசப்புபவன் நான் இல்லை. இவர்கள் எல்லாரும் ஒரே குட்டையில் நாறிய மட்டைகள் என்பது நான் 1ம் நாளில் இருந்து எழுதி வருவதே. பிகு நல்ல சுவாரசியமாக படத்தோடு எழுதுங்கள். சும்மா “சரோஜா தேவி” பலான கதைகள் போல தெறிக்க விடுங்கள்🤣.  ஆவலோடு காத்திருக்கிறேன்🤣 ஆருக்கு தெரியும். ஆம் என்கிறனர் விஜி. இல்லை என்கிறார் அண்ணன். 
    • சீமான் விஜலட்சுமியின் சட்டப்படியான கணவரா?
    • என்ன அண்ணை இது…..ஏதோ என்ர தனிப்பட்ட விசயம் போல என்னை கேட்டு கொண்டு நிக்கிறியள் 🤣… நான் ஒரு நேர்மையான திராவிட கொள்கையை நடைமுறை செய்த ஆட்சி எப்படி இருக்கும் என்ற உங்கள் கேள்விக்கு அண்ணா ஆட்சி போல இருக்கும் என கூறினேன். அவருக்கும் நடிகைக்கும் தொடர்பு என்றீர்கள். அதுக்கும் ஆட்சி செய்யும் விதத்துக்கும் என்ன தொடர்பு? எதுவுமில்லை. இருப்பினும் அவர் பானுமதியை பாலியல் இம்சை செய்ததாயோ, அல்லது நம்ப வைத்து கைவிட்டதாயோ நான் அறியவில்லை. பானுமதி கடைசிவரை அண்ணா மீது அப்படி ஏதும் சொல்லவில்லை. நான் அறிந்த வரை தீராகாதலிலேயே இருந்தார். ஆனால் சீமான் பற்றி விஜி அண்ணி சொல்வது நாம் அறிந்ததே. முடிவாக உண்மையான திராவிட கொள்கை உள்ள ஆட்சி இப்போதைய ஆட்சியா? என்ற உங்கள் கேள்விக்கு பதில் இல்லை. இது கொள்ளையர் ஆட்சி. உண்மையான திராவிட கொள்கை ஆட்சி அப்பாவி ஆட்சி போல இருக்கும் என்பதே என் பதில். இதில் நீங்கள் கனிமொழியை பற்றி என்ன, யாரை பற்றியும், படம், நீலப்படம் எதுவும் போடலாம் - என்னிடம் அனுமதி பெற வேண்டிய அவசியமே இல்லை🤣. 
    • அங்கு தேசிய கட்சிகளுக்கு எப்போதும்ஓரளவு ஆதரவு இருக்கிறது. காங்கிரஸ் விஜய் வசந்துக்கும் பொன் ராதாகிருஷ்ணாவுக்கும்தான் சரியான போட்டி
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
        • Like
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
        • Like
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.