Jump to content

சிங்களவர் செய்தால் சதி- தமிழர்கள் செய்தால் பயங்கரவாதமா?


Recommended Posts

சிங்களவர் செய்தால் சதி- தமிழர்கள் செய்தால் பயங்கரவாதமா?

 

அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன மற்­றும் முன்­னாள் பாது­காப்­புச் செய­லர் கோத்­த­பாய ராஜ­பக்ச அகி­யோ­ரைக் கொலை செய்­ய­வ­தற்­கான முயற்சி ஒன்­றினை விசா­ரணை அதி­கா­ரி­கள் கண்­ட­றிந்­தி­ருக்­கி­றார்­கள் என்று சொல்­லப்­ப­டு­கி­றது.

அதில் பொலிஸ் மா அதி­ப­ருக்­குத் தொடர்­பி­ருக்­கக்­கூ­டும் என்­கிற கோணத்­தி­லும் விசா­ர­ணை­கள் நடக்­கின்­றன. பொலிஸ் திணைக்­க­ளத்­திற்­குச் சொந்­த­மான துப்­பாக்­கி­கள் இரண்டு பயங்­க­ர­வா­தத் தடுப்­புப் பிரி­வுப் பொலி­ஸா­ருக்கு வழங்­கப்­பட்­டி­ருந்த நிலை­யில் அவை அர­சி­யல் தலை­வர்­க­ளின் கொலைக்­குப் பயன்­ப­டுத்­தப்­பட இருந்­த­னவா என்­கிற கோணத்­தி­லும் விசா­ரணை முன்­னெ­டுக்­கப்­ப­டு ­கின்­றது.

பயங்­க­ர­வா­தத் தடுப்­புப் பிரி­வுப் பொலி­ஸா­ரின் பணிக்கு ஆயு­தங்­கள் தேவை­யில்லை என்­கி­ற­போ­தும் அந்த இரு துப்­பாக்­கி­க­ளும் அந்­தப் பிரி­வி­ன­ருக்­குப் பொலிஸ் மா அதி­ப­ரி­னால் ஏன் வழங்­கப்­பட்­டன என்­கிற சந்­தே­கத்­தின் அடிப்­ப­டை­யி­லேயே இந்­த­வி­சா­ரணை நடத்­தப்­ப­டு­கின்­றது.

குற்­றப் புல­னாய்­வுப் பிரி­வி­ன­ரால் கைய­கப்­ப­டுத்­தப்­பட்ட இந்த இரு துப்­பாக்­கி­க­ளும் பம்­ப­லப்­பிட்­டி­யில் உள்ள பொலிஸ் மைய ஆயு­தக் களஞ்­சி­யத்­தில் இருந்து பொலிஸ் மா அதி­ப­ரின் உத்­த­ர­வுக்­க­மையை பயங்­க­ர­வா­தத் தடுப்­புப் பிரி­வுப் பொலி­ஸா­ருக்­குக் கைய­ளிக்­கப்­பட்­டுள்­ளன.

வழக்­க­மாக அர­சுக்கு எதி­ரான கிளர்ச்சி மற்­றும் எதிர்ப்பு நட­வ­டிக்­கை­கள் குறித்து விசா­ரித்­தும் புல­னாய்ந்­தும் உள­வ­றிந்­தும் நட­வ­டிக்கை எடுப்­ப­வர்­கள் பயங்­க­ர­வா­தப் பிரி­வுப் பொலி­ஸாரே. இப்­போது அந்­தப் பிரி­வின் மீதே சந்­தே­கக் கண் விழுந்­தி­ருக்­கி­றது.

இதுவே தமி­ழர்­கள் சம்­பந்­தப்­பட்­ட­தாக இருந்­தி­ருந்­தால் பயங்­க­ர­வா­தத் தடுப்­புப் பிரி­வுப் பொலி­ஸாரே அதனை விசா­ரித்­தி­ருப்­பார்­கள். இது­வொரு பயங்­க­ர­வா­தச் செயல் என்று அனைத்து ஊட­கங்­க­ளும் கத­றி­யி­ருக்­கும். ஆனால், ஓர் அரச தலை­வ­ரை­யும் அரச தலை­வர் வேட்­பா­ள­ராக வரக்­கூ­டி­ய­வ­ரை­யும் கொல்­வ­தற்­குப் போடப்­பட்­ட­தா­கக் கூறப்­ப­டும் திட்­டத்தை வெறு­மனே ‘‘சதி’’ என்­கிற சொற் பதத்­துக்­குள் அடக்­கு­கின்­றார்­கள்.

இந்­தத் திட்­டத்­து­டன் தொடர்­பு­பட்­ட­வர்­கள் உயர் மட்­டப் பாது­காப்பு அதி­கா­ரி­க­ளா­க­வும் காவல் துறை சார்ந்­த­வர்­க­ளா­க­வும் இருந்­த­போ­தும் அர­சுக்கு எதி­ரான பயங்­க­ர­வா­தச் செய­லாக இது தோன்­றா­த­தற்­குக் கார­ணம் என்ன? ‘‘சதி’’ சிங்­க­ள­வர்­க­ளா­லும் ‘‘பயங்­க­ர­வா­தச் செயல்­கள்’’ தமி­ழர்­க­ளா­லும் செய்­யப்­ப­டு­கின்­றன என்று ஆணித்­த­ர­மா­கப் பதி­யப்­பட்­டி­ருப்­ப­து­தானா?

அர­சின் கீர்த்­திக்­குப் பங்­கம் விளை­விக்­கும் வகை­யில் நடத்­தப்­பட்­ட­தாக இருக்­கும் என்­கிற சந்­தே­கத்­தில் யாழ்ப்­பா­ணத்­தில் நிகழ்ந்த பாலி­யல் கூட்டு வன்­கொ­டு­மை­யைக்­கூட பயங்­க­ர­வா­தச் செய­லாக வரி­சைப்­ப­டுத்திப் பயங்­க­ர­வா­தத் தடுப்­புச் சட்­டத்­தின் கீழ் விசா­ர­ணை­கள் முன்­னெ­டுக்­கப்­பட்­ட­ போ­தும் ஓர் அரச தலை­வ­ரின் கொலை முயற்சி விவ­கா­ரம் மட்­டும் ‘‘சதி’’ என்­கிற வரை­ய­றைக்­குள் உள்­ள­டக்­கப்­ப­டு­வது இலங்­கை­யில் சட்­டம் இனப் பாகு­பாட்­டு­ட­னேயே ஆளும் அதி­கார வர்க்­கத்­தி­ன­ரால் கையா­ளப்­ப­டு­கின்­றது என்­ப­தற்­கான உதா­ர­ணம் தானே!

கட்­டுக்­க­டங்­காக் காவ­லிக் குழுக்­க­ளின் உறுப்­பி­னர்­கள் பயங்­க­ர­வா­தி­கள், நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரைக் கொலை செய்ய முயன்­ற­வர்­கள் பயங்­க­ர­வா­தி­கள், குண்­டோடு பய­ணித்­த­வர்­கள் பயங்­க­ர­வா­தி­கள், இவர்­க­ளுக்­கெல்­லாம் உத­வி­ய­வர்­க­ளும் பயங்­க­ர­வா­தி­கள் என்று முத்­திரை குத்­தும் ஒரு நாட்­டின் தலை­வர்­க­ளைக் கொலை செய்ய முயன்­ற­வர்­கள் மட்­டும் சதி­யா­ளர்­கள் என்­பது இனப் பாகு­பாட்­டின் உச்­சத்தை மட்­டும்­தானே காட்டி நிற்­கின்­றது.

எப்­போது இத்­த­கைய போக்கு மாற்­ற­ம­டை­யுமோ அப்­போ­து­தான் இந்த நாட்­டில் நிரந்­தர அமை­தி­யும் நீடித்த நல்­லி­ணக்­க­மும் சாத்­தி­ய­மா­கும். அத்­த­கை­ய­தொரு இலக்­கோ­டு­தான் ஆட்­சிக்கு வரு­வ­தாக மைத்­திரி – ரணில் அரசு வாக்­கு­று­தி­ய­ளித்­தி­ருந்­தது. ஆனால், இப்­போது அந்த ஆட்­சி­யி­லேயே பயங்­க­ர­வா­த­மும் சதி­யும் இனப் பிரிப்­பின் துலாம்­ப­ரத்­தைக் காட்டி நிற்­கின்­றன.

https://newuthayan.com/story/09/சிங்களவர்-செய்தால்-சதி-தமிழர்கள்-செய்தால்-பயங்கரவாதமா.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அப்ப வருசக் கணக்கா தமிழர்களை.. தமிழர் வழிபாட்டிடங்களை திட்டித் தீர்த்து ஆக்கிரமிக்கத் தூண்டியதற்கு ஏன் தண்டனை இல்லை..??! அதுக்கும் தண்டனை வழங்கினால்.. ஆள் ஆயுள் காலம் பூரா உள்ள தான்.  அதே நிலையில்.. விமல்.. வீரசேகர..கம்பன்பில.. போன்ற வில்லங்கங்களுக்கு எதிராக ஏன் இன்னும் சட்ட நடவடிக்கை இல்லை. தமிழர்களை.. இந்துக்களை (சைவர்களை) திட்டினால்.. சமாளிச்சுக் கொண்டு போவது எழுதாத சட்டமோ. 
    • இது தான் சொறீலங்கா கடற்படை ஆக்கிரமிப்பில் இருக்கும்.. காங்கேசந்துறை நோக்கிய கடற்கரை. அண்ணர் ஆலாபனையோடு சொன்னது.  இது தான் கடலட்டை வாடிகளோடு அமைந்த.. அழுகி நாறும் பண்ணைக் கடற்கரை நோக்கிய தோற்றம். குத்தியரின் சீன ஏற்றுமதி வருவாய். அண்ணர் இதனை பற்றி மூச்சும் விடேல்ல.. ஆனால் பண்ணைக் கடற்கரை காதல் காட்சிகளை மட்டும் வர்ணிச்சிட்டு போயிட்டார். இது தான் கொழும்பின் தாமரைத் தடாகம் இரவுக் காட்சி. அண்ணர் சொன்ன மாதிரி தடாகம் ஒளிந்தாலும் சுற்றயல் ஒளிரவில்லை. இன்னும் பல பகுதி காலு வீதியில் இரவில் வீதி விளக்குகள் எரிவதில்லை.  அதே நேரம் யாழ்ப்பாண நெடுந்தூர பயணிகள் பேரூந்து தரிப்பிடத்திற்கு அருகில் உள்ள புல்லுக் குளத்தின் இரவுக் காட்சி. சுற்றயல் எங்கும் ஒளிரோ ஒளிரெண்டு ஒளிருது. யாழ் மணிக்கூட்டுக் கோபுரமும் தான். அண்ணர் அதை பற்றி மூச்.  ஆக அவை அவை பார்க்கிற பார்வையில தான் இங்கு களத்தில் இருந்தான காட்சிகளுக்கு ஆலாபனைகள் வருகின்றன. 
    • நீங்கள், அரச இரகசியங்களை கசிய விடுவதால்.... நாலாம் மாடியில் வைத்து,  கசையடி விழ வாய்ப்புகள் உண்டு. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.