Jump to content

``சிறை விதிகளின்படி பேரறிவாளன் விடுதலை பெற வேண்டியவர்!"


Recommended Posts

``சிறை விதிகளின்படி பேரறிவாளன் விடுதலை பெற வேண்டியவர்!"

 
``சிறை விதிகளின்படி பேரறிவாளன் விடுதலை பெற வேண்டியவர்!
 

``ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்றுவரும் பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி உள்ளிட்ட ஏழு பேரின் விடுதலையை மாநில அரசே முடிவு செய்துகொள்ளலாம்" என உச்ச நீதிமன்றம் சமீபத்தில் கூறியிருந்தது. அதையடுத்து, கடந்த 9-ம் தேதி கூடிய தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில், ஏழு பேரின் விடுதலைக்கான தீர்மானத்தை நிறைவேற்றி, அதைத் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்குப் பரிந்துரை செய்து அனுப்பிவைத்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி. அந்தப் பரிந்துரைக் கடிதம் அனுப்பப்பட்டு இரண்டு வாரங்களுக்கு மேல் ஆன நிலையில், அதன்மீது எந்த முடிவும் எடுக்காமல் அமைதிகாத்து வருகிறார் தமிழக ஆளுநர். 

பேரறிவாளன்

இந்த ஏழு பேரின் விடுதலை விவகாரம் அரசியல் களத்தில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள், ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தைச் சந்தித்துப் பேசியுள்ளார். அந்தச் சந்திப்பின்போது, அவருடைய மகனை விடுதலை செய்வதற்கான சட்டரீதியிலான காரணங்களைக் கோரிக்கையாக ஆளுநரிடம் மனுவாக முன்வைத்துப் பேசியுள்ளார். இந்தச் சந்திப்பு குறித்து அற்புதம்மாளிடம் பேசியபோது, "ஏழு பேரை விடுதலை செய்வதற்கான தீர்மானத்தைத் தமிழக அரசு நிறைவேற்றியபோதே நம்பிக்கை ஏற்பட்டது. இந்த நிலையில், நேற்று ஆளுநரைச் சந்தித்துப் பேசினேன். அந்தச் சந்திப்பு எனக்கு மிகுந்த நம்பிக்கையையும் வலிமையையும் கொடுத்துள்ளது.

 

 

அற்புதம்மாள்  பேரறிவாளன் தயார்

என் பிள்ளையை விடுதலை செய்ய, சட்டரீதியான முகாந்திரங்கள் இருந்தும், விடுவிக்காமல் காலம் தாழ்த்தியதே மிகவும் வருந்தத்தக்கச் செயல். இனிமேலும் தாமதிக்காமல் அவனை விடுதலை செய்யுங்கள். குற்றமற்ற குடும்பத்தில் இருந்தவந்த அவனுக்கு இதில் எந்தத் தொடர்பும் இல்லை' என்று கூறினேன். அனைத்தையும் மிகுந்த கவனத்துடன் கேட்டுக்கொண்ட ஆளுநர், 'சட்டவிதிகளின்படியே நடவடிக்கை எடுப்பேன்' என்று கூறினார். அவருடைய அந்தப் பேச்சு மிகுந்த நம்பிக்கையைக் கொடுத்துள்ளது. என் மகன் என்னிடம் வரும் நாள்களை எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கிறேன்" என்றார் நம்பிக்கையுடன். 

 

 

இதுகுறித்து பேசிய பேரறிவாளனின் வழக்கறிஞர் சிவக்குமார், ``பேரறிவாளன் சிறையில் இருப்பதற்கு முக்கியக் காரணம், அவர் கொடுத்த வாக்குமூலம்தான். அந்த வாக்குமூலத்தைப் பதிவுசெய்த சி.பி.ஐ அதிகாரி தியாகராஜன் தவறாகப் பதிவுசெய்ததன் விளைவாகவே அவர் சிறையில் இருக்கிறார். இதை, நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரமாகவே தியாகராஜன் பதிவுசெய்துள்ளார். அந்தப் பிரமாணப் பத்திரத்தில், 'ராஜீவ் காந்தி கொல்லப்படுவது பேரறிவாளனுக்குத் தெரியாது' என்பதை நீதிமன்றத்திலேயே கூறியுள்ளார். அதேபோன்று, பேரறிவாளன் உட்பட ஏழு பேருக்குத் தீர்ப்பு வழங்கிய நீதிபதி கே.டி.தாமஸ், அவர் நீதித்துறையில் இருந்து ஓய்வுபெற்றபின் அந்தத் தீர்பை விமர்சித்துப் பேசியுள்ளார். 'இந்தத் தீர்ப்பு வழங்கும்போது எங்களுக்குக் கடுமையான அழுத்தம் இருந்தது' என்று கூறியுள்ளார். மேலும் அவர், 'இது ஒரு பிழையான தீர்ப்பு' என்றும், 'அந்தப் பிழையை சரிசெய்ய  வேண்டியது இந்தச் சமூகத்தின் பொறுப்பு' என்றும் கூறியிருந்தார். இதுபோன்ற சட்டரீதியிலான தகவல்களைச்  சுட்டிக்காட்டி அவரை விடுதலை செய்வதில் சிக்கல் இல்லை என எடுத்துரைத்தோம். அனைத்தையும் முழுமையாகக் கேட்டுக்கொண்ட ஆளுநர், நடவடிக்கை எடுப்பதாகக் கூறியுள்ளார். ஆளுநர் எங்களுக்கு எந்தத் தடையும் இல்லாமல் போதுமான நேரம் வழங்கி அனைத்தையும் மிகவும் கவனமாகக் கேட்ட அந்தச் சூழலை எண்ணும்போது பேரறிவாளன் நிச்சயம் விடுதலை செய்யப்படுவார் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது" என்றார் மிகத் தெளிவாக.

பேரறிவாளன் விடுதலை பற்றிப் பலரும் பேசும் இந்த வேளையில், 'சிறையில் அவருடைய நடவடிக்கை எப்படி இருக்கிறது' என்பது குறித்து, ஓய்வுபெற்ற டி.ஐ.ஜி ராமச்சந்திராவிடம் பேசினோம். இவர், பேரறிவாளன் இருந்த சிறையில் 16 ஆண்டுக்காலம் சிறைத்துறை அதிகாரியாகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர். "பேரறிவாளனைச் சட்டரீதியாக விடுவிப்பதற்கான முகாந்திரங்கள் உள்ளன. ஏழு பேரையும் இத்தனை ஆண்டுகள் சிறையில் வைத்திருந்ததே தவறு. பொதுவாக, ஒரு கைதி ஒருமுறை சிறைக்கு வந்துவிட்டால், அந்தக் கைதிக்குச் சிறைவிதிகள் மட்டுமே பொருந்தும். ஆனால், இந்த வழக்கு சர்வதேச அளவில் தொடர்புடையது என்பதால், அவர்களை இத்தனை ஆண்டுகள் சிறையில் வைத்திருக்கிறார்கள். அப்படி வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை. 

 

 

டி.ஐ.ஜி ராமச்சந்திரா

மேலும் மற்றொரு கோணத்தில் பார்த்தால், இந்த வழக்கில் நேரடியாகப் பேரறிவாளனுக்குத் தொடர்பில்லை என்பது நாடறிந்த உண்மை. வெளியில் வருவதற்கு சட்டரீதியிலான முகாந்திரங்கள் இருக்கின்றன. மேலும் பேரறிவாளன், தனது தண்டனைக் காலத்தை மிகுந்த நன்னடத்தையோடு கழித்து வந்துள்ளார். தண்டனைக் காலத்தில் அவர்மீது குறைசொல்வதற்கு எதுவுமே இல்லை. அறிவு என்ற பெயருக்கு ஏற்றவாறு செயல்படுபவர் பேரறிவாளன். எப்போதுமே நியாயமான முறையில் விவாதங்கள் இருக்கும். குற்றவாளிக்கான எந்த ஒரு சிறு நடவடிக்கையையும் நான் பேரறிவாளனிடம் பார்த்ததில்லை. ஒரு நல்ல குடும்பத்தில் இருந்துவந்த பையனுடைய பழக்க வழக்கங்கள்போலவே அவருடைய நடவடிக்கைகள் இருக்கும். எனவே, பேரறிவாளனை விடுவிப்பதில் எந்தத் தவறும் இல்லை. அப்படியே விடுதலைக்குப் பிறகு நடவடிக்கையில் தவறுகள் ஏதேனும் தெரியவந்தால் இதே வழக்கில் மீண்டும் அவரைச் சிறைக்குக் கொண்டுவரலாம். அதனால், சிறை விதிகள்படி பேரறிவாளன் முழுமையான விடுதலைப் பெற வேண்டியவர்" என்றார்.

இனிமேலாவது பேரறிவாளனுக்கு விடிவுகாலத்தைத் தருவாரா தமிழக ஆளுநர்?

https://www.vikatan.com/news/coverstory/138027-former-police-officer-talks-about-perarivalans-prison-behaviour.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அற்புதனின் தொடரில் பல ஊகங்களும் இருந்தன,  உண்மைகளும் இருந்தன.  ஈழப்போராட்ட உண்மைகளை அறிய வேண்டுமானால் பக்க சார்பற்ற முறையில் வெளிவந்த  பல நூல்களையும் அந்த கால பத்திரிகை  செய்திகளையும்வாசிப்பதன் மூலமே அதனை அறிந்து கொள்ளலாம்.  உதாரணமாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் களப்பலியான முதல் பெண்போராளி ஈபிஆர்எல் ஐ சேர்ந்த சோபா என்பதை அண் மையில் தான் அறிந்தேன். அதுவரை மாலதி என்றே தவறான தகவலை நம்பியிருந்தேன்.  
    • ஹிந்திக் கார‌ன் த‌மிழ் நாட்டுக்கை வ‌ந்து ஹிந்தி க‌தைக்க‌ த‌மிழ் நாட்டுக் கார‌ன் ஹிந்தி தெரியாது என்று சொல்ல‌ நீ இந்திய‌னே இல்லை என்று சொல்லுறான் என்றால் வ‌ட‌ நாட்டு கோமாளிக‌ளுக்கு எவ‌ள‌வு தினா வெட்டு   ஏதோ ஹிந்தி உல‌க‌ம்  முழுதும் பேசும் மொழி மாதிரி ஹா ஹா..................மான‌த் த‌மிழ் பிள்ளைக‌ள் வீறு கொண்டு எழுந்தால் ஒரு சில‌ வார‌த்தில் த‌மிழை த‌விற‌ வேறு மொழிக்கு இட‌ம் இல்லை என்ற‌ நிலையை உருவாக்க‌லாம்................ஹிந்தி என்றால் அதை மிதி என்ற‌ கோவ‌ம் த‌மிழ‌ர்க‌ளின் ர‌த்த‌த்தோடு க‌ல‌ந்து இருக்க‌னும்................எழுத்து பிழை விட்டு என் தாய் மொழிய‌ நான் எழுதினாலும் என‌க்கு எல்லாமே த‌மிழ் தான்...............................
    • 👍... நீங்கள் சொல்வது உண்மையே. இவர்கள் எப்படித்தான் எங்களை இப்படித் துல்லியமாக அறிந்து வைத்திருக்கின்றார்களோ என்று ஒரு 'பயம்' கூட சில நேரங்களில் வருவதுண்டு.....😀
    • Macroeconomics இல் மனம் மலத்தை மனிதன் கையால் அள்ளுவதை வளர்ச்சி என்று வரையறுக்கிறார்களா?போலியான தரவுகளைக் கொடுத்தால் போலியான முடிவுகள்தான் கிடைக்கும்.இந்தியாவில் மனித மலத்தை மனிதர்கள் அள்ளுவது பொய்யென்று சொல்கிறீர்களா?எத்தனையோ மனிதர்கள் நச்சு வாயுவைச் சுவாசித்து மரணித்து இருக்கிறார்கள்.அதெல்லாம் உங்கள் கணக்கீட்டில் வருகிறதா?
    • விற்றுப் போடுவார்கள் என்பதால்த் தான் பூட்டுக்கு மேல் பூட்டைப் போட்டு பூட்டிவிட்டு இருக்கிறார்களோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.