Jump to content

தமிழர்கள் ஒன்றுபடாத வரை -விமோசனம் கிடைக்காது!!


Recommended Posts

தமிழர்கள் ஒன்றுபடாத வரை -விமோசனம் கிடைக்காது!!

 

 

 

தமி­ழர்­க­ளுக்கு அநீதி இழைக்­கப்­ப­டா­தி­ருந்­தால் தனி ஈழம் என்ற சிந்­தனை அவர்­கள் மத்­தி­யில் எழுந்­தி­ருக்­க­மாட்­டா­தென நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் சிறீ­த­ரன் கூறி­யுள்­ளமை ஆட்­சி­யா­ளர்­க­ளின் கவ­னத்­துக்­கு­ரி­யது.
தற்­போ­தும் தமி­ழர்­க­ளுக்­குப் பல வகை­யி­லும் அர­சி­யல் நகர்­வு­க­ளால் அநீ­தி­கள் இழைக்­கப்­பட்ட வண்­ணம்­தான் இருக்­கின்­றன.

தமி­ழர்­கள் எதி­லும் முன்­னிலை வகிக்­கக்­கூ­டாது என்­பதை வேத­வாக்­கா­கக் கொண்டு பெரும்­பான்மை இன­வா­தி­கள் செயற்­பட்டு வரு­கின்­ற­னர். அரச நிர்­வாக சேவை­யில் ஆட்­களை இணைப்­ப­தற்­கான போட்­டிப் பரீட்­சை­யில் தமி­ழர்­கள் அதி­கம் சித்­தி­ய­டைந்­ததால் அந்­தப் பரீட்­சையை நீக்­கம் செய்­வ­தற்­கான முயற்­சி­கள் இடம்­பெ­று­வ­தாக ஜே.வி.பி. நாடா­மன்­றத்­தில் தெரி­வித்­த­தாக ஒரு தக­வல் வெளி­வந்­துள்­ளது.

தமி­ழர்­க­ளுக்கு அநீதி இழைக்­கப்­ப­டு­வது இது­தான் முதற் தட­வை­யல்ல. தரப்­ப­டுத்­தல் என்ற போர்­வை­யின்­கீழ் தமிழ் மாண­வர்­க­ளின் கல்­வி­சார் முன்­னேற்­றங்­களை மந்­தப்­ப­டுத்­தி­யி­ருப்­ப­தும் இந்த நாட்­டில்­ நிகழ்ந்­துள்­ளது. பாதிக்­கப்­பட்ட தமிழ் மாண­வர்­க­ளில் பலர் ஆயு­தப் போராட்­டத்­தில் இணைந்து கொள்­வ­தற்­கும் இதுவே கார­ண­மாக அமைந்­தி­ருந்­தது.

மக்­க­ளி­டையே பாகு­பாடு, முரண்­பாட்­டைத்­தோற்­று­வித்­தல்
மக்­க­ளி­டையே இன ரீதி­யான பாகு­பா­டு­க­ளைக் காட்­டு­வ­தும், அநீ­தி­களை இழைப்­ப­தும் பாதிக்­கப்­பட்ட தரப்­பி­ன­ரைச் சீற்­ற­மு­றச் செய்­து­வி­டும். இத­னால் ஏற்­ப­டக்­கூ­டிய எதிர்­வி­ளை­வு­கள் மோச­மா­ன­வை­க­ளாக அமைந்­து­வி­டும். நீண்ட கொடிய போர் இடம்­பெ­று­வ­தற்­கும் இதுவே கார­ண­மாக அமைந்­தி­ருந்­தது. இத­னால் ஏற்­பட்ட அழி­வு­க­ளில் இருந்து ஆட்­சி­யா­ளர்­கள் பாடங்­க­ளைக் கற்­றி­ருக்க வேண்­டும். ஆனால், அதி­லி­ருந்து அவர்­கள் தவ­றி­விட்­டார்­கள். இனப் பிரச்­சினை நீண்­ட­கா­ல­ மா­கவே இந்த நாட்­டி­ல் காணப்­ப­டு­கின்­றது.

நாட்­டின் சகல பிரச்­சி­னைக­ளுக்­கும் இதுவே அடிப்­ப­டைக் கார­ண­மாக அமைந்­துள்­ளது. இத­னைப் போக்­கு­வ­தற்­கான சிந்­தனை ஆட்­சி­யா­ளர்­க­ளி­டம் எழா­மல் இருக்­கும் வரை­யில் இனப்­பி­ரச்­சினை நீடிக்­கத்­தான் செய்­யும்.

நேர் எதி­ரா­கச்
செயற்­ப­டும் தலை­வர்­கள்
சிங்­கள மக்­கள் போன்­று­தான் ஏனைய சிறு­பான்­மை­யி­ன­ரும் இந்த நாட்­டின் மீது சம உரிமை கொண்­ட­வர்­கள். தமிழர்கள் இந்த நாட்­டின் பூர்­வீ­கக் குடி­கள். இந்­தச் சிந்­த­னை­யைப் பெரும்­பான்­மை­யின மக்­க­ளி­டம் கொண்­டு­செல்ல வேண்­டும். இதில் அர­சி­யல்­வா­தி­கள், மதத் தலை­வர்­கள் ஆகி­யோ­ரின் பங்கு அளப் பெரி­ய­தாக இருத்­தல் வேண்­டும்.

ஆனால் இதற்கு எதிர்­மா­றான சிந்­த­னை­யையே அவர்­கள் கொண்­டி­ருக்­கின்­ற­னர். இந்த நிலை­யில் இனப்­பி­ரச்­சி­னைக்கு எவ்­வாறு தீர்வு கிடைக்­கும்? பெரும்­பா­லான சிங்­கள மக்­கள் சிறு­பான்மை இனத்­த­வ­ரு­டன் நல்­லு­ற­வு­டன் பழ­க­வும், வாழ­வும் விரும்­பு­கின்­ற­னர். ஆனால் இன­வா­தச் சிந்­தனை கொண்­ட­வர்­க­ளால் இவர்­கள் திசை திருப்­பப் படு­கின்­ற­னர். இதுவே இன மோதல்­க­ளுக்­கும் கார­ண­மாகி விடு­கின்­றது.

வடக்­கி­லி­ருக்­கின்ற பௌத்த சின்­னங்­கள் அழிக்­கப்­ப­டு­வ­தா­கத் தெற்­கில் தீவி­ர­மான பரப்­பு­ரை­கள் இடம்­பெற்று வரு­கின்­றன. இது­வு­மொரு இன­வா­தம் கலந்த செயல் என்­ப­தைச் சொல்­லத் தேவை­யில்லை. தமிழ்­மக்­க­ளுக்கு எதி­ரா­கச் சிங்­கள, பௌத்த மக்­க­ளைத் தூண்டி விடு­வதே இதன் வஞ்­சக நோக்­க­மா­கும். இது தொடர்­பாகத் தினேஸ் குண­வர்த்­தன போன்ற இன­வா­தி­கள் நடந்­ததை அறி­யா­மல் கொக்­க­ரிக்க ஆரம்­பித்து விட்­ட­னர். மக்­க­ளைத் தூண்­டி­யும் வரு­கின்­ற­னர். இத­னால் ஏற்­ப­டக்­கூ­டிய விளை­வு­கள் தொடர்­பாக இவர்­கள் சிறி­தும் சிந்­தித்­துப் பார்ப்­ப­தில்லை.

அர­சி­யல் கைதி­க­ளா­கத்
தமி­ழர்­கள் சிறை­யில்
அர­சி­யல் கைதி­கள் என்ற பெய­ரில் தமி­ழர்­கள் பலர் நீண்ட கால­மா­கச் சிறை­க­ளில் அடைத்­து­வைக்­கப்­பட்­டி­ருக்­கின்ற கொடுமை இந்த நாட்­டில் தொடர்­கி­றது. அநு­ரா­த­பு­ரம் சிறைச்­சா­ லை­யில் அடைத்து வைக்­கப்­பட்­டி­ருக்­கும் தமிழ் அர­சி­யல் கைதி­கள் உணவு ஒறுப்­புப் போராட்­டத்­தில் ஈடு­பட்டு வரு­கின்­ற­னர். இவர்­க­ளில் சில­ரின் உடல்­நிலை மோச­மான கட்­டத்தை எட்­டி­யுள்­ளது. தமி­ழர் பகு­தி­க­ளில் இவர்­க­ளுக்கு ஆத­ர­வா­கப் போராட்­டங்­க­ளும் இடம்­பெற்று வரு­கின்­றன.

ஆனால் இவர்­களை விடு­தலை செய்­வ­தற்­கான திட்­ட­மெ­து­வும் அர­சி­டம் இருப்­ப­தா­கத் தெரி­ய­வில்லை. விசா­ர­ணை­கள் எது­வு­மின்றி நீண்­ட­கா­ல­மா­கச் சிறை­க­ளில் அடைத்து வைப்­ப­தென்­பது அநீ­தி­யா­ன­தொரு செய­லா­கும். அர­சி­யல் கைதி­களை நீதி­மன்­றத்­தில் விசா­ரித்து தண்­டனை வழங்­கப்­ப­டு­தல் வேண்­டும். அல்­லது விடு­தலை செய்­தல்­வேண்­டும். இவை எது­வுமே இல்­லா­மல் சிறை­க­ளில் அடைத்து வைத்­தி­ருப்­பதை எந்த வகை­யி­லும் ஏற்­றுக்­கொள்ள முடி­யாது.

தமிழ்த் தலை­வர்­க­ளுக்­குள்
புடுங்­குப்­பாடு
இதே­வேளை தமி­ழர்­கள் பிள­வு­பட்டு நிற்­ப­தால் பேரி­ன­வா­தி­கள் தாம் நினைத்­த­வாறு நடந்­து­கொள்­வ­தற்கு வச­தி­யா­கப் போய்­விட்­டது. தமிழ் மக்­க­ளுக்­குத் தீர்­வைப் பெற்­றுத்­தர வேண்­டிய தமிழ்த் தலை­வர்­கள் தமக்­குள் சண்டை பிடிப்­ப­ தில் காலத்­தைக் கடத்­திக் கொண்­டி­ருக்­கின்­ற­னர். உணர்வு பூர்­வ­மா­கக் கடைப்­பி­டிக்­க­வேண்­டிய தியாக தீபம் திலீ­ப­னின் நினை­வேந்­தல் நிகழ்­வின்­போ­தும் அர­சி­யல் கட்­சி­கள் முரண்­பட்டு நின்­ற­தைக் காண முடிந்­தது. இதை எவ­ரா­லும் ஏற்­றுக்­கொள்ள முடி­யாது. தமது சுய இலா­பத்­துக்­கா­கத் தம்மை நம்பி நிற்­கின்ற மக்­களை ஏமாற்­று­கின்ற தலை­வர்­களை மக்­கள் முற்­றா­கவே புறக்­க­ணித்­து­விட வேண்­டும். தமி­ழர்­கள் ஒரே குர­லில் தமது பிரச்­சி­னை­கள் தொடர்­பாக ஓங்கி ஒலிக்­கும்­போது பலன் கிடைக்­கத்­தான் செய்­யும்.

https://newuthayan.com/story/09/தமிழர்கள்-ஒன்றுபடாத-வரை-விமோசனம்-கிடைக்காது.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தமிழ்நாடு ஒரு மாநிலம்  தமிழ்நாடு தனிநாடு இல்லை  தமிழ்நாடு வெளிநாட்டு கொள்கையில் 1% கூட. இதுவரை பங்களிப்புகள் செய்யவில்லை   செய்ய முடியாது  தமிழ்நாடு இந்தியா மத்திய அரசாங்கத்தினால் ஆளப்படுகிறது  தமிழ்நாட்டில்,.சீமான் கமல்   விஐய்.  ஸ்டாலின் உதயநிதி   நெடுமாறன். வைகோ      கருணாநிதி  எம் ஜி” ஆர்    அண்ணா,.......இப்படி எவர் முதல்வர் பதவியில் இருந்தாலும்   வெளிநாட்டுத்தமிழராகிய. இலங்கை தமிழருக்கு 1% கூட பிரயோஜனம் இல்லை    தமிழ்நாட்டில் 7 கோடி தமிழனும் தமிழ் ஈழம்  மலர வேண்டும் என்று ஆதரித்தாலும்.  தமிழ் ஈழம்  கிடைக்காது  எனவே… ஏன் குதிக்க வேண்டும்???  இந்த சீமான் ஏன் குதிக்கிறார??  என்பது தான் கேள்வி??  ஆனால்  சீமான்  தமிழ்நாட்டில் அரசியல் செய்யலாம்  முதல்வராக வரலாம்”   தமிழ்நாட்டு மக்களுக்கு சேவை செய்யலாம்    எங்கள் ஆதரவு 100% உண்டு”   கண்டிப்பாக ஆதரிப்பேன் ஆனால்  இலங்கை தமிழருக்கு  அது செய்வேன் இது செய்வேன்   என்று  ஏமாற்றக்கூடாது 😀
    • பகிர்வுக்கு நன்றி ஏராளன் ........!   🙏
    • என‌க்கு தெரிஞ்சு கேலி சித்திர‌ம் வ‌ரைவ‌து உண்மையில் த‌மிழ் நாட்டில் வ‌சிக்கும் கார்ட்டூன் பாலா தான்...............த‌மிழ் நாட்டில் நிக்கும் போது ச‌கோத‌ர் காட்டூன் பாலா கூட‌ ப‌ழ‌கும் வாய்ப்பு கிடைச்ச‌து ப‌ழ‌க‌ மிக‌வும் ந‌ல்ல‌வ‌ர்............அவ‌ர் வ‌ரையும் சித்திர‌ம் அர‌சிய‌ல் வாதிக‌ளை வ‌யித்தில் புளியை க‌ரைக்கும்.....................
    • கலியாணம் என்பது சடங்குதானே. பிராமண ஐயரின் நிறத்தில், கனிவான முகத்துடனும், சில சமஸ்கிருதச் சுலோகங்களைச் சொல்லும் திறனும் இருந்தால் சடங்கைத் திறமாக நடாத்தலாம்! தேங்காயை பூமிப்பந்தை மத்தியரேகையில் பிளப்பதைப் போல சரிபாதியாக உடைக்காமல், விக்கிரமாதித்தனின் தலையை சுக்குநூறாக உடைப்பேன் என வேதாளம் வெருட்டியதை நீங்கள் தேங்காய் மீது செயலில் காட்டியிருக்கின்றீர்கள்😂
    • உங்க‌ளை மாதிரி ஆறிவிஜீவி எல்லாம் த‌மிழீழ‌ அர‌சிய‌லில் இருந்து இருக்க‌ வேண்டிய‌வை ஏதோ உயிர் த‌ப்பினால் போதும் என்று புல‌ம்பெய‌ர் நாட்டுக்கு ஓடி வ‌ந்து விட்டு அடுத்த‌வைக்கு பாட‌ம் எடுப்ப‌து வேடிக்கையா இருக்கு உற‌வே ஒன்னு செய்யுங்க‌ளேன் சீமானுக்கு ப‌தில் நீங்க‌ள் க‌ள‌த்தில் குதியுங்கோ உங்க‌ளுக்கு முழு ஆத‌ர‌வு என் போன்ற‌ முட்டாள்க‌ளின் ஆத‌ர‌வு க‌ண்டிப்பாய் த‌ருவோம்..........................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.