Jump to content

இரான் அணு குண்டு தயாரிப்பதை தடுக்க ஒத்துழையுங்கள்: ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் டிரம்ப் பேச்சு


Recommended Posts

இரான் அணு குண்டு தயாரிப்பதை தடுக்க ஒத்துழையுங்கள்: ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் டிரம்ப் பேச்சு

 
ஐ.நா. பாதுகாப்புக் குழுவில் உரையாற்றும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்.படத்தின் காப்புரிமைSPENCER PLATT/GETTY IMAGES Image captionஐ.நா. பாதுகாப்புக் குழுவில் உரையாற்றிய அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்.

இரான் அணு குண்டு தயாரிப்பதை தடுப்பதற்கு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் உள்ள பிற நாடுகள் அமெரிக்காவுடன் ஒத்துழைக்கவேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்தார்.

நியூயார்க்கில் நடந்த ஐ.நா. பாதுகாப்புக் குழு கூட்டத்தில் தலைமை வகித்துப் பேசிய டிரம்ப், இரான் மீது அமெரிக்கா விதித்துள்ள தடைகளுடன் ஒத்துப்போக மறுப்பவர்கள் கடும் பின்விளைவுகளை சந்திக்கவேண்டியிருக்கும் என்று தெரிவித்தார்.

2015 இரான் அணு ஆயுத உடன்படிக்கையில் இருந்து அமெரிக்கா வெளியேறிய பிறகு இரான் மீது முன்பு அமெரிக்கா விதித்திருந்த தடைகளை மறுபடியும் விதித்தது அமெரிக்கா.

ஆனால், இரான் உடன்படிக்கையை தொடர்ந்து ஆதரிக்கும் பிரான்ஸ் அதிபர் இம்மானுவல் மக்ரோங் இரான் அணு ஆயுத விவகாரத்தை சமாளிக்க நீண்டகால உபாயம் தேவை என்று தெரிவித்தார்.

பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் பேசிய மக்ரோங், அணு உடன்படிக்கை விவகாரத்தில் அமெரிக்காவுடன் மாறுபாடு இருந்தாலும் அமெரிக்க அதிபரின் நோக்கங்களுடன் உடன்படுவதாக குறிப்பிட்டார். "நாம் ஒன்றாக சேர்ந்து நீண்டகால உபாயத்தை வகுக்கவேண்டும். தடைகளிலும், தடுப்பு நடவடிக்கைகளிலும் இறங்குவதாக அது இருக்கக்கூடாது" என்றார் அவர்.

 

 

2015ம் ஆண்டு உலக வல்லரசுகள் சேர்ந்து இரானுடன் செய்துகொண்ட ஒப்பந்தப்படி, இரான் அணு ஆயுதங்களை தயாரிக்க முயலக்கூடாது. அதற்குப் பதிலாக வல்லரசுகள் விதித்திருந்த தடைகளை அவை விலக்கிக் கொள்ளும்.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டங்களுக்கு சுழற்சி முறையில் நாடுகள் தலைமை வகிக்கும். அதன் அடிப்படையில் தற்போதைய கூட்டத்துக்கு தலைமை வகிப்பது அமெரிக்காவின் முறை என்பதால் அமெரிக்க அதிபர் இந்த பாதுகாப்புக் கவுன்சில் கூட்டத்துக்குத் தலைமை வகிக்கிறார்.

"இரான் அரசு தமது போக்கை மாற்றிக்கொள்வதை உறுதி செய்யும் வகையிலும், அது அணு ஆயுதம் தயாரிக்காமல் இருப்பதற்காகவும் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் உறுப்பு நாடுகள் அமெரிக்காவுடன் சேர்ந்து வேலை செய்யவேண்டும்" என்று பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப், சிரியா நாட்டு அரசு படுகொலைகளில் ஈடுபடுவதற்கு இரானும், ரஷ்யாவும் உதவி செய்வதாக குற்றம் சாட்டினார். அதேநேரம், சிரியாவின் இட்லிப் மாகாணத்தில் கிளர்ச்சியாளர்கள் மீதான ஒரு தாக்குதலில் இருந்து விலகியதற்காக அந்த மூன்று நாடுகளுக்கும் டிரம்ப் நன்றி சொன்னார்.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இரான் உறுப்பு நாடாக இல்லை. அதே நேரம், செவ்வாய்க்கிழமை நடந்த ஐ.நா. பொதுக் குழுக்கூட்டத்தில் பேசிய இரான் அதிபர் ஹசன் ரூஹானி அமெரிக்காவை அடாவடி நாடு என வருணித்தார். அச்சுறுத்தல்களை, நியாயமற்ற தடைகளை நிறுத்துவதன் மூலமே பேச்சுவார்த்தை தொடங்கவேண்டும் என்றும் அவர் கூறினார்.

https://www.bbc.com/tamil/global-45658143

Link to comment
Share on other sites

"அமெரிக்காவின் இடைக்கால தேர்தலில் தலையிட சீனா முயற்சி" - டிரம்ப் குற்றச்சாட்டு

டொனால்டு டிரம்ப்படத்தின் காப்புரிமைJOHN MOORE Image captionடொனால்டு டிரம்ப்

அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள இடைக்கால தேர்தலில் 'தலையிடுவதற்கு' சீனா முயற்சித்து வருவதாக ஐக்கிய நாடுகள் சபையில் நடந்த கூட்டத்தில் பேசிய அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் குற்றச்சாட்டியுள்ளார்.

"அமெரிக்கா - சீனா இடையிலான வர்த்தகத்தில் சீனாவை எதிர்க்கும் முதல் அதிபர் நான் என்பதால் என்னையோ அல்லது எங்களையோ தேர்தலில் தோல்வியடைய செய்ய அவர்கள் விரும்புகிறார்கள்" என்று புதன்கிழமையன்று நடந்த ஐநா கூட்டத்தில் டிரம்ப் குற்றஞ்சாட்டினார்.

அமெரிக்க அதிபருக்கான போட்டியில் இறங்கிய நாளிலிருந்து இதுவரை டொனால்டு டிரம்ப் சீனாவை கடுமையாக எதிர்த்து வருகிறார். ஆனால், இந்த சமீபத்திய குற்றச்சாட்டுக்கு அவர் எந்த ஆதாரத்தையும் அளிக்கவில்லை.

சீனாவின் மீதான டிரம்பின் குற்றச்சாட்டு குறித்து கருத்துத் தெரிவித்த அந்நாட்டின் வெளியுறத்துறை அமைச்சர், இது "தேவையற்ற குற்றச்சாட்டு" என்று கூறியதுடன் கண்டமும் தெரிவித்தார்.

அமெரிக்க அதிபரின் நான்காண்டுகால பதவியில் பாதிக்காலத்தை அதாவது இரண்டாண்டுகாலத்தை கடக்கும்போது அங்குள்ள பெரும்பாலான மாகாணங்களின் புதிய ஆளுநர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பல்வேறு அதிகாரிகளை தேர்ந்தெடுக்கும் தேர்தல் நடத்தப்படுவது வழக்கம். அமெரிக்காவின் இடைக்கால தேர்தல்கள் வரும் நவம்பர் மாதம் 6ஆம் தேதியிலிருந்து தொடங்குகிறது.

டிரம்ப் என்ன சொன்னார்?

உலகத்துக்கு அச்சுறுத்தலாக விளங்கி யாரும் அணுசக்தி, இரசாயன மற்றும் உயிரியல் ஆயுதங்கள் போன்றவற்றை எதிர்கொள்வது குறித்து விவாதிப்பதற்காக நேற்று (புதன்கிழமை) நியூயார்க்கில் தொடங்கிய ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு மன்ற கூட்டத்தில் பேசியபோது, அமெரிக்காவில் விரைவில் நடைபெறவுள்ள இடைக்கால தேர்தல்களில் சீனா தலையிட முயற்சித்து வருவதாக எவ்வித ஆதாரமுமின்றி அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றஞ்சாட்டினார்.

வாங் யிபடத்தின் காப்புரிமைCHINA NEWS SERVICE Image captionவாங் யி

"துரதிருஷ்டவசமாக, அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள இடைக்கால தேர்தல்களில் எனது தலைமையிலான நிர்வாகத்திற்கெதிராக செயல்படுவதற்கு சீனா முயற்சித்து வருவதை நாங்கள் கண்டறிந்துள்ளோம்" என்று அவர் கூறினார்.

"அமெரிக்கா - சீனா இடையிலான வர்த்தகத்தில் சீனாவை எதிர்க்கும் முதல் அதிபர் நான் என்பதால் என்னையோ அல்லது எங்களையோ தேர்தலில் தோல்வியடைய செய்ய அவர்கள் விரும்புகிறார்கள். இருப்பினும் நாங்கள் வர்த்தகம் உள்பட அனைத்து நிலைகளிலும் தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறோம்" என்று அவர் மேலும் கூறினார்.

"எதிர்வரும் இடைக்கால தேர்தலில் சீனா எந்த விதத்திலும் தலையிடுவதை நாங்கள் விரும்பவில்லை."

அதே கூட்டத்தில் பேசிய சீனாவின் வெளியுறத்துறை அமைச்சர் வாங் யி, "மற்ற நாடுகளின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவதில்லை என்ற கொள்கையை சீனா தொடர்ந்து கடைபிடித்துள்ளது" என்று கூறினார்.

"இதுதான் சீனாவின் வெளிநாட்டு கொள்கையின் பாரம்பரியம்" என்றும் அவர் அப்போது கூறினார்.

"எந்த நாட்டின் உள்விவகாரங்களிலும் தலையிடுவதை நாங்கள் விரும்பவில்லை. அதுமட்டுமில்லாமல், சீனா மீதான இதுபோன்ற தேவையற்ற குற்றச்சாட்டுகளை கண்டிக்கிறோம்" என்று அவர் மேலும் கூறினார்

 

 

இந்த கூட்டத்தில் உரையாற்றிய பிறகு, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தான் சீனாவின் "திட்டம்" என்று கூறும் குற்றச்சாட்டுகள் சார்ந்த பத்திரிகைகளின் செய்தி துண்டுகளை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்தார்.

ஐநா கூட்டத்தை தொடர்ந்து நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில், சீனாவுக்கெதிரான குற்றச்சாட்டுகளுக்கு உங்களிடம் சான்றுகள் ஏதாவது உள்ளதா என்று டிரம்பிடம் கேட்டபோது, தான் அதை பகிரங்கமாக வெளியிட முடியாது என்றும், ஆனால் அது கண்டிப்பாக வெளிவரும் என்றும் தெரிவித்தார்.

https://www.bbc.com/tamil/global-45661945

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அமேரிக்கா அணுக்குண்டு தயாரிக்க முடியுமெனின்....ஏன் ஈரான் அணுக்குண்டு தயாரிக்க முடியாது?

தொழில் நுட்ப வளர்ச்சியென்பது....எல்லா நாடுகளுக்கும் பொதுவாக இருக்க வேண்டும்! சிலரது...தனியுரிமையாக அது இருக்கக் கூடாது!

இந்தியா, இஸ்ரேல், பாகிஸ்தான்  போன்ற நாடுகள் தயாரிக்கின்றன!

அதைக் கண்டும் காணாமல் இருக்கும் உங்களால்.....நோர்த் கொரியாவும்....ஈரானும் தயாரிக்கும் போது மட்டும்....உறுத்துகிறது போலும்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, புங்கையூரன் said:

அமேரிக்கா அணுக்குண்டு தயாரிக்க முடியுமெனின்....ஏன் ஈரான் அணுக்குண்டு தயாரிக்க முடியாது?

தொழில் நுட்ப வளர்ச்சியென்பது....எல்லா நாடுகளுக்கும் பொதுவாக இருக்க வேண்டும்! சிலரது...தனியுரிமையாக அது இருக்கக் கூடாது!

இந்தியா, இஸ்ரேல், பாகிஸ்தான்  போன்ற நாடுகள் தயாரிக்கின்றன!

அதைக் கண்டும் காணாமல் இருக்கும் உங்களால்.....நோர்த் கொரியாவும்....ஈரானும் தயாரிக்கும் போது மட்டும்....உறுத்துகிறது போலும்!

தோழர் ,

யுகம் தோறும் பிறந்து பூமியின் பாரத்தை குறைப்பது கடவுளின் செய்கை என்கிறார்கள். சிலர் கல்கி அவதாரம் பூமியில் பிறந்து விட்டதாகவும் ஆனால் இன்னும்

அது மனித தன்மையோடு இருப்பதாகவும் தான் அவதரித்த நோக்கத்தை இன்னும் அடையவில்லை என்றும் சில கற்றறிந்த சான்றோர் கூறுகிறார்கள் .  கல்கியோ (அ) டிரம்ப் எதுவாக இருந்தாலும் பூமி பாரம் குறைந்தால் மகிழ்ச்சிதானே!!  ஒரே க்ரவுடு ..?

Kovil-Meme-Movie-Templates-MemeKadai-02.

யாராக இருந்தாலும் சட்டு புட்டுன்னு அடிச்சு காட்டுங்க..?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.