Jump to content

நினை­வு­கூர்­தல் என்­பது வெறும் நிகழ்வு மட்­டுமா?


Recommended Posts

நினை­வு­கூர்­தல் என்­பது வெறும் நிகழ்வு மட்­டுமா?

 

தியாக தீபம் திலீ­ப­னின் 31ஆவது ஆண்டு நினை­வேந்­தல் இன்று கடைப்­பி­டிக்­கப்­ப­டு­கின்­றது. ஏகப்­பட்ட இடர்­பா­டு­க­ளை­யும் தாண்டி தாய­கத்­தி­லும், புலத்­தி­லும் நினை­வு­கூர்­தல்­கள் இடம்­பெ­று­கின்­றன.

தாயக தேசத்­தில் போருக்கு முடி­வுரை எழு­தப்­பட்ட பின்­னர் நினை­வு­கூர்­தலை நடத்­து­வது இன்­னொரு போரை நடத்­து­வ­தற்­குச் சம­மா­ன­தாக இருந்­தது. மகிந்­த­வின் ஆட்­சிக் காலத்­தில் மிக மிக இர­க­சி­ய­மாக அங்­கொன்­றும் இங்­கொன்­று­மாக நினை­வு­கூ­ரல்­கள் இடம்­பெற்­றன. ஆட்சி மாற்­றத்­தின் பின்­னர் நினை­வு­கூர்­தல்­கள் வெளிப்­ப­டை­யா­கக் கடைப்­பி­டிக்­கப்­பட்டு வரு­கின்­றன.

அத்­த­கைய நினை­வு­கூ­ர்தல்களை நடத்­து­வது யார்? தலைமை ஏற்­பது யார்? அங்கு பேசு­வது யார்? என்ற பிடுங்­குப் பா­டு­க­ளும் கூடவே வளர்ந்து விரிந்­து­விட்­டன. முள்­ளி­வாய்க்­கால் நினை­வேந்­த­லின்­போ­தும் இதே­போட்டி வியா­பித்து நின்­றது. தியாக தீபம் திலீ­ப­னின் நினை­வேந்­த­லி­லும் அதே நில­மையே தொடர்­கி­றது.

தற்­போது கோயில்­க­ளில் திரு­வி­ழாக்­கள் நடத்­து­வது ஒரு சடங்­காக -– விழா­வாக – – கொண்­டாட்­ட­மாக மாறி வரு­கின்­றது. மதங்­க­ளின் போத­னை­களை மதிப்­பார் யாரும் இல்லை. மற்­ற­வர்­க­ளில் அன்பு காட்­டுங்­கள், உண்­மை­யாக இருங்­கள் என்று மதம் போதிக்­கும் நல்ல விட­யங்­கள் எவற்­றை­யும் கருத்­தில் எடுக்­காது முறை­யற்ற வழி­க­ளில் பணத்­தைச் சம்­பா­தித்து அதை ஆல­யங்­க­ளின் திரு­வி­ழாக்­க­ளுக்கு அள்­ளிச் செலவு செய்­தால் எல்­லாம் சரி­யா­கி­வி­டுமா?

அதே­போ­லவே, நினை­வேந்­தல்­களை போட்டி போட்­டுக் கொண்டு, நீ முந்தி நான் முந்தி என்று நடத்­து­வது சரி­யா­னதா?எந்த இலட்­சி­யத்­துக்­காக தமது உயிர்­க­ளைத் துச்­ச­மென்று மதித்­துப் போரா­டி­னார்­களோ -– துறந்­தார்­களோ, அந்த இலட்­சி­யத்­துக்கு விசு­வா­ச­மாக இருக்­க­வேண்­டாமா? அவர்­கள் காட்­டிய இலட்­சி­யத்­தின் வழி­யில் பய­ணிக்­க­வேண்­டாமா? ஆகக் குறைந்­தது அந்த இலட்­சி­ய­வேட்­கைக்கு குந்­த­கம் விளை­விக்­கா­ம­லா­வது இருக்­க­வேண்­டாமா? நினை­வேந்­தலை நடத்தி அர­சி­யல் செய்ய முனை­யும் அனைத்­துத் தரப்­புக்­க­ளும் – – தனி நபர்­க­ளும் ஒரு கணம் தங்­கள் மனச்­சாட்­சி­யி­டம் இதைக் கேட்­டுப் பாருங்­கள்.

ஏனெ­னில், 31 ஆண்­டு­க­ளுக்கு முன்­னர் தியாக தீபம் திலீ­பன் முன்­வைத்த, மீளக்­கு­டி­ய­மர்­தல் என்ற பெய­ரில் வடக்­கி­லும் கிழக்­கி­லும் புதி­தா­கத் திட்­ட­மி­டும் குடி­யேற்­ற ங்­க­ளைத் தடுத்து நிறுத்­த­வேண்­டும். சிறைக் கூடங்­க­ளி­லும், இரா­ணுவ, பொலிஸ் தடுப்பு முகாம்­க­ளி­லும் தடுத்து வைக்­கப்­பட்­டுள்ள தமிழ் அர­சி­யல் கைதி­கள் யாவ­ரும் விடு­தலை செய்­யப்­ப­ட­வேண்­டும். அவ­ச­ர­கா­லச் சட்­டம் முழு­மை­யாக நீக்­கப்­ப­ட­வேண்­டும். ஊர்­கா­வல் படை­யி­ன­ருக்கு வழங்­கப்­பட்ட ஆயு­தங்­கள் முற்­றா­கக் களை­யப்­ப­ட­வேண்­டும். தமி­ழர் பிர­தே­சங்­க­ளில் புதி­தா­கப் பொலிஸ் நிலை­யங்­க­ளைத் திறப்­ப­தற்கு மேற்­கொள்­ளப்­ப­டும் நட­வ­டிக்­கை­கள் முற்­றாக நிறுத்­தப்­ப­ட­வேண்­டும் என்ற 5 அம்­சக் கோரிக்­கை­க­ளில் முத­லி­ரண்டு கோரிக்­கை­க­ளும் இன்­றும் நிறை­வே­றா­மல் தொடர்­கின்­றன. இதற்கு இவர்­க­ளும் பொறுப்­பா­ளி­களே.

மகா­வலி ‘எல்’ வல­யம் என்ற பெய­ரில் தமிழ் மக்­க­ளின் காணி­கள் அப­க­ரிக்­கப்­பட்டு சிங்­கள மக்­கள் குடி­யேற்­றப்­ப­ டு­கின்­றார்­கள். இனப் பரம்­பலை மாற்­றி­ய­மைக்­கும் விதத்­தில் தொட­ரும் இந்­தக் குடி­யேற்­றங்­களை நிறுத்­தக் கோரி மக்­கள் இன்­றும் அற­வழி -– அகிம்­சா­வ­ழிப் போராட்­டங்­களை நடத்­திக் கொண்டே இருக்­கி­றார்­கள். அர­சி­யல் கைதி­கள் தங்­களை விடு­விக்­கக் கோரி உணவு ஒறுப்­புப் போராட்­டத்தை ஆரம்­பித்­தி­ருக்­கின்­றார்­கள்.

அது­வும் இரண்டு வாரங்­களை நெருங்­கிக் கொண்­டி­ருக்­கின்­றது. அவர்­கள் ஐந்­தா­வது தட­வை­யாக இந்த அகிம்சை ஆயு­தத்தை ஏந்­தி­யி­ருக்­கி­றார்­கள்.
அகிம்சை வழிப் போராட்­டங்­க­ளின் பிறப்­பி­ட­மாக தங்­களை மார் தட்­டிக் கொள்­ளும் இந்­திய தேசத்­துக்கே, அகிம்சை என்­றால் என்­ன­வென்று உணர்த்­தி­ய­வர்­கள் நாங்­கள். அதை மன­தி­லி­ருத்தி நினை­வு­கூர்­தலை நடத்­து­வதே சாலப் பொருத்­தம்.

https://newuthayan.com/story/09/நினை­வு­கூர்­தல்-என்­பது-வெறும்-நிகழ்வு-மட்­டுமா.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தோற்றாலும் வென்றாலும் அரசியல் தனித்தன்மையோடு தனித்து நிற்கும்.. அண்ணன் சீமானின் முடிவு வரவேற்கத்தக்கது. மேலும்.. மைக் சின்னத்தில்.. சம பால்.. சமூக பகிர்வுகளோடு.. அண்ணன் தேர்தலை சந்திக்க வாழ்த்துக்கள்.  வீரப்பனின் மகளுக்கு அளித்த வாய்ப்பு நல்ல அரசியல் முன்னுதாரணம். வீரப்பன் ஒரு இயற்கை வள திருடல் குற்றவாளி ஆகினும்.. அதில் அவரின் அப்பாவி மகளுக்கு எந்தப் பங்களிப்பும் இல்லாத நிலையில்.. அவர் அரசியல்.. சமூகப் புறக்கணிப்புக்கு உள்ளாவது ஏற்கக் கூடியதல்ல. நாம் தமிழர் அதனை தகர்த்திருப்பது நல்ல முன் மாதிரி. 
    • அப்படி நடந்தால் சீமான் தம்பிகளில் பாதி கீல்பாக்கத்துக்கும் அடுத்த பாதி ஏர்வாடியிலும் தங்களுக்கு தாங்களே கரண்டு பிடித்துகொண்டு நிக்கும்கள் இது தேவையா 😀
    • RESULT 9th Match (N), Jaipur, March 28, 2024, Indian Premier League Rajasthan Royals      185/5 Delhi Capitals.         (20 ov, T:186) 173/5 RR won by 12 runs
    • //நான் ஒப்பிட்டு பார்த்தவரையில் 2016 பிரெக்சிற் பின்னான, 2024 வரையான யூகேயின் வாழ்க்கைத்தர வீழ்ச்சியை விட, குறைவான வாழ்க்கைத்தர வீழ்ச்சியையே 2019இன் பின் இலங்கை கண்டுள்ளது.//   அருமையான மிகச்சரியான ஒப்பீடு.. எனக்கென்ன ஆச்சரியம் எண்டால் விசுகர் போல ஜரோப்பிய அமெரிக்க நாடுகளில் உக்ரேனிய சண்டையின் பின் சுப்பர் மாக்கெற்றுகளில் அரிசி மா எண்ணெய்கூட சிலபல வாரங்களுக்கு இல்லாமல் போனபோதும் வாழ்ந்தவர்கள் பெற்றோல் தொடங்கி அத்தியாவசிய சாமான் வரை அதிகரிக்க சம்பளம் அதுக்கேற்ற மாதிரி அதிகரிக்காதபோதும் வரிக்குமேல் வரிகட்டி குடிக்கும் தண்ணீரில் இருந்து குளிக்கும் தண்ணீர் வெளியால போறது வரைக்கும் குப்பை எறியக்கூட காசுகட்டி வாழ்பவர்கள் ஊரில் சொந்தவீட்டில் கிணத்து தண்ணி அள்ளி குடிச்சு காணிக்க வாற மாங்கா தேங்காவித்து வீட்டுத்தேவைக்கு மரக்கறி தோட்டம்கூட வச்சு வாழும் மக்களை பார்த்து கேட்கிறார்கள் ஒரு ரூபாய் வரவுக்கு அஞ்சு ரூபாய் செலவு செய்து எப்படி வாழ்கிறார்கள் என்று. பொருளாதார தடைக்குள்ள ரயர் எரித்து விளக்கு கொழுத்தி வாழ்ந்த மக்களுக்கு இதெல்லாம் யானைக்கு நுளம்பு குத்தினமாதிரி.. இந்த வருடத்துடன் ஒப்பிடும்போது உண்மையை சொன்னால் ஜரோப்பா நடுத்தர வருமானம் பெறும் மக்கள்தான் இலங்கை மக்களை விட அதிகமாக பொருளாதர பாதிப்பை எதிர்நோக்குகிறார்கள்..
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.