Jump to content

கிழக்கு அரசியல், பல்கலைக்கழக காதல்?


Recommended Posts

கிழக்கு அரசியல், பல்கலைக்கழக காதல்?
 

-அதிரன்

பல்கலைக்கழகத்தில் கற்கும் காலத்தில், ஒரு பெண்ணுடன், பல பெண்களுடன் பழகுவோம். அந்தப்பெண்களைத்தான் வாழ்நாள் துணையாக தொடருவோம் என்றில்லை.  இதேபோலத்தான், இன்றைய கால அரசியல் கட்சிகளின் இணைவும் தேர்தல் கூட்டுகளும் ஆட்சிக் கூட்டுகளுமா என்ற கேள்விக்குப் பதில் தேடத்தான் வேண்டும்.

வாக்குறுதிகளை நம்பி, போராட்டங்களை நடத்துவதும் கைவிடுவதும் நடந்து கொண்டு தான் இருக்கின்றன. நல்லாட்சி அரசாங்கம் வருவதற்கு முன்னர், கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றிக் கொண்டதா என்ற கேள்வி எல்லோருடைய மனங்களிலும் வரத் தொடங்கியிருக்கிறது. 

இந்நிலையில் தான் மாகாண சபைத் தேர்தல், ஜனாதிபதித் தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல், ஆட்சிக்கலைப்பு, புதிய ஆட்சி என்ற கோர்வையான விடயங்கள் இருந்து கொண்டிருக்கின்றன.

யாரைக் கேட்டாலும் அரசியல், அதிகாரம், இருப்பு என்பவற்றைப் பற்றியதாகவே அரசியல் வட்டாரங்களில் பேச்சுகள் நடந்து கொண்டிக்கையில், தமிழ்க் கட்சிகள் அனைத்தும் எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில், ஒரு பொதுச் சின்னத்தில், தேர்தலில் களமிறங்கி, தமிழ் மக்களின் அதியுச்ச வாக்குகளைப் பெற்று, மாகாண சபையில் அதிகூடிய தமிழர் பிரதிநிதித்துவத்தைப் பெறுவதற்காகப் அனைத்து தமிழ் கட்சிகளும் ஒன்று சேர்ந்து, கிழக்கு மாகாணத்தில் போட்டியிடவேண்டும் என்று, கிழக்குத் தமிழர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில், முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.

கிழக்கின், மட்டக்களப்பில் ஆரம்பிக்கப்பட்டு, திருகோணமலை, அம்பாறை என்று பரந்து செயற்பட ஆரம்பித்திருக்கும் கிழக்குத் தமிழர் ஒன்றியத்தின் அனைத்துக் கட்சிகளுடனான சந்திப்பொன்று கடந்த மாதத்தில் நடைபெற்றிருந்தது.

இக்கலந்துரையாடலில் அறிவிக்கப்பட்ட கட்சிகளில் அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் தவிர்ந்த இலங்கைத் தமிழசுக் கட்சி, டெலோ, புளொட், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள், தமிழர் விடுதலைக் கூட்டணி, ஈ.பி.ஆர்.எல்.எப், ஈரோஸ், ஈ.பி.டி.பி, தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி, தமிழர் சமூக ஜனநாயகக் கட்சி போன்ற கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டிருந்தனர்.

கிழக்குத் தமிழர் ஒன்றியத்தின் செயற்பாடு, அதன் குறிக்கோள், தீர்மானங்கள் என்பன கட்சிப் பிரதிநிதிகளுக்குத் தெளிவுபடுத்தப்பட்டன. ஒவ்வொரு கட்சிப் பிரதிநிதிகளினதும் கருத்துப் பரிமாறல்கள் நடைபெற்று, இறுதியில் ஒரு புரிந்துணர்வு உடன்படிக்கை தயாரித்து, அதன் பிரகாரம் கட்சிகளின் நிலைப்பாடுகளை இனங்கண்டு, இறுதி முடிவுக்கு வருவது என்று தீர்மானிக்கப்பட்டது.

முரண்பாடுகளுக்குள்ளும் உடன்பாடு காணும் முயற்சியாகக் கொள்கைகள், கோட்பாடுகள், சித்தாந்தங்கள், கருத்தியல்கள், கட்சிகள், சின்னங்கள் எல்லாமே மக்களுக்காகத்தான் என்ற அடிப்படையில், கட்சித்தலைவர்களுக்கு அத்தகைய மனப்பக்குவம் ஏற்பட வேண்டும் என்பதாகவே அனைத்துமே நடந்து கொண்டிருக்கின்றன.

கிழக்குமாகாணத்தில் இன்று நிலவும் அரசியல் களநிலைவரத்தின் அடிப்படையில், தமிழ், சிங்கள, முஸ்லிம் ஆகிய மூன்று இனங்களுமே விகிதாசாரத்தில் ஒரே அளவுகளில் இருக்கின்ற நிலைமை காணப்படுகிறது. 

இந்தநிலையில், தமிழர்கள் மாத்திரம் தமக்கு அதிகாரம் தேவை என்று சொல்வதும், முஸ்லிம்கள் தங்களுக்குத்தான் என்று கூறுவதும், எந்தவகையில் நியாயம் என்பது ஒரு சில புத்திஜீவிகளது கருத்தாக இருக்கிறது. இதற்கு வேறு கணக்குகளும் இருக்கின்றன. அவை பற்றிப் பின்னர் பார்க்கலாம்.

கிழக்குத் தமிழர்கள் தங்கள் அடையாளத்தையும் இருப்பையும் தக்கவைத்துப் பேணிப்பாதுகாத்து வளர்த்தெடுக்க வேண்டுமாயின் தனிநபர்,கருத்தியல்  முரண்பாடுகளுக்கு அப்பால், அரசியல் ரீதியாக, ஒரே குடையின் கீழ், ஒரே அணியாகத் திரள வேண்டிய தேவைப்பாடு உள்ளது என்பது கிழக்குத் தமிழர் ஒன்றியத்தின் நிலைப்பாடாகும். 

இருந்தாலும், ஆரம்ப காலந்தொட்டே பல்வேறு முரண்பாடுகளுக்குள்ளே பயணங்களை மேற்கொண்டு வந்திருக்கின்ற தமிழ்க் கட்சிகள், ஏற்படப்போகும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை எந்த வகையில் எதிர் கொள்ளும் என்பதே இப்போதைய கேள்வி.

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர், நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படும் மாகாணசபைத் தேர்தலில், தமிழர்கள் சார்பில் கிழக்கில் அதிஉச்சபட்ச ஆசனங்களைப் பெற்றுக்கொள்வதன் மூலம், மாகாணத்தின் அதிகாரத்தை, முதலமைச்சினைத் தமிழர்கள் பெற்றுக் கொள்ளவேண்டும் என்பதுதான் அந்த இலக்கு.

அந்த வகையில், அனைத்துத் தமிழ் அரசியல் கட்சிகளும் ஒரு பொதுச்சின்னத்தின் கீழ் ஒரே அணியாகச் செயற்படவேண்டும் என்ற கிழக்குத்தமிழர் ஒன்றியத்தின் கோரிக்கைக்கு, கடந்த வாரத்தில், அனுப்பி வைக்கப்பட்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்கான பதிலே முடிவைச் சொல்லவிருக்கிறது.

தமிழ் அரசியல் கட்சிகளுடனும் தனித்தனியே சந்தித்து, அக்கட்சிகளின் நிலைப்பாடுகளை அறிந்து, அதன் பின்னர் பொதுக் கூட்டங்களை நடத்தி, அனைத்துக் கட்சிகளையும் ஒன்று சேர அழைத்துச் சந்தித்து, இப்போது புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று வரை வந்திருக்கின்ற கிழக்குத் தமிழர் ஒன்றியம், அண்மையில் வடக்கு, கிழக்கின் பிரதான தமிழ் அரசியல் கட்சியாக இருக்கின்ற தமிழரசுக் கட்சி ( தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு) 2008ஆம் ஆண்டு, முதல் கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடாமைபோன்று, நடைபெறப்போகும் மாகாணசபைத் தேர்தலிலும், கிழக்கில் போட்டியிடாது ஒதுங்கிக் கொள்ள வேண்டும் என்று, ஒரு வேண்டுகோளையும் முன்வைத்திருந்தது.

கிழக்குத் தமிழர் ஒன்றியத்தின் இந்த வேண்டுகோள், அரசியல் வட்டாரங்களில் ஒரு பெரும் சலசலப்பையும் குழப்பத்தையும் உருவாக்கி இருக்கிறதாக உணரப்படுகிறது. 

கிழக்கில் இந்தக் கட்சிகளின் ஒருமைப்பாட்டை சாத்தியமாக்கும் நடவடிக்கையில் அனைத்துக் கட்சிகளும் சேர்ந்து செயற்பட வேண்டும் என்றாலும் இந்தக் குழப்பம் எவ்வாறு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் தாக்கம் செலுத்தும் என்று பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

புரிந்துணர்வு ஒப்பந்தத்தைப் பொறுத்தவரையில், புதிய கட்சியாகப் பதிவு செய்வதில் உள்ள குழப்பம், வேட்பு மனுப்பட்டியல் தயாரிப்பில் பெயர்ப் பட்டியலிடல், கையொப்பமிடல், அதன் அதிகாரம், புதிய தேர்தல் முறையின் அடிப்படையில் தெரிவு முறை அடிப்படைக்கான பட்டியல் தெரிவு, அனுமதியளித்தல், பிரதிநிதிகளை நியமித்தல் எனப் பல்வேறு விடயங்களுக்குப் பதில் கிடைத்தாக வேண்டும்.

புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் படி நிலைகளில், வடக்கு, கிழக்கு இணைந்த தாயகக் கோட்பாடு, கிழக்கு மாகாணத்தில் இருக்கின்ற மீள்குடியேற்ற புனர்நிர்மாணப் பிரச்சினைகளைத் தீர்த்தல், அபிவிருத்திக் கட்டுமானங்கள், கல்வித் தாராதரத்தை அதிகரித்தல், பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களின் வாழ்வாதாரத்தைக் கட்டியெழுப்புதல், இந்தியாவிலுள்ள இலங்கை அகதிகளை அழைத்துவருதல் எனப் பல்வேறு விடயங்கள் உள்ளடக்கப்பட்டிருப்பதாக அறியமுடிகிறது.

அத்தோடு, கிழக்கு மாகாணத்திலிருந்து வெளிநாடுகளுக்குச் சென்று வாழ்ந்துவரும் மூன்று இலட்சம் தமிழர்களையும் உள்ளடக்கிய வாக்களிப்பு முறையின் தேவை, இதில் பிரஸ்தாபிக்கப்பட்டிருக்கிறது.

இவ்வாறான பல்வேறு விடயங்களுடன் உடன்பட்டு முடிவுக்கு வரும் அனைத்துத் தமிழ் அரசியல் கட்சிகளையும் ஒன்றிணைத்ததாக கட்சி ஏற்படுத்தப்படுவதுடன்,  அந்தக் கட்சி  புதியதொரு சின்னத்தின் அடிப்படையில் செயற்படுவதும் தேர்தலில் போட்டியிடுவதும்தான் இப்போதைய முடிவாக இருக்கிறது.

தமிழ் அரசியல் கட்சிகளின் வரலாற்றில் அமரர் ஜி.ஜி.பொன்னம்பலம், 1944 இல் ஆரம்பித்த அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ்; அதன் சின்னம் சைக்கிள். அக்கட்சியிலிருந்து பிரிந்துவந்த அமரர் எஸ். ஜே. வி. செல்வநாயகம் 1949 இல் இலங்கைத் தமிழரசுக் கட்சியை ஆரம்பித்தார். அதன் சின்னம் தான் வீடு. இச் சின்னத்தில்தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நான்கு கட்சிகளை இணைத்துத் தேர்தல்களில் போட்டியிட்டது. 

தமிழ் மக்களின் ஐக்கியம் கருதியும் அரசியல் தேவை கருதியும் இரண்டு கட்சிகளும் இணைந்து தமிழர் விடுதலைக்கூட்டணி, 1976 இல்  உருவாக்கப்பட்டது.  இந்த அரசியல் கூட்டமைப்பின் பொதுச்சின்னமாக உதயசூரியன் கொண்டுவரப்பட்டது.

எஸ். ஜே. வி. செல்வநாயகம், ஜி. ஜி. பொன்னம்பலம் ஆகியோர் தமது கட்சிகளில் கடைப்பிடித்த கொள்கைகளைக் கைவிட்டு புதிய கட்சிக்கும் சின்னத்துக்கும் உடன்பட்டனர். அதுபோன்று கிழக்கில் ஒரு கட்சியும் சின்னமும் உருவாவதில் என்ன தவறு என்பதே கிழக்குத் தமிழர் ஒன்றியத்தின் கேள்வியாக இருக்கிறது.

கிழக்கு மாகாணத்தின் அரசியல் களநிலையைக் கருத்தில் கொண்டு, சமகால அரசியல் தேவைகருதி தத்தம் அரசியல் கட்சிகளையும் கருத்தியல் முரண்பாடுகளையும் கட்சிகளுக்கு இடையேயுள்ள தனிநபர் முரண்பாடுகளையும் ஒருபுறம் ஒதுக்கிவைத்துவிட்டு, அனைத்துத் தமிழ் அரசியல் கட்சிகளும் முன்வரவேண்டும்.

என்றாலும், ஒரு புதிய கட்சியைப் பதிவதும் அதற்கான சின்னத்தை உருவாக்குவதும் ஒழுங்குவிதிகள் கட்டுப்பாடுகளை கொண்டிழுப்பதும் சிறியதொரு விடயமல்ல என்பதுதான் இப்போதைய தொங்கு நிலை.

இலக்கினை அடைவதற்கு கிழக்கு மாகாண தமிழர்கள் அனைவரும் கட்சி வேறுபாடுகளுக்கு அப்பால் ஒன்றிணைவார்களா, இணைந்து செயற்படுவார்களா, பின்னர் பல்கலைக்கழகக் கல்விக்கால வாழ்க்கை போன்றுதான் நடைபெறப் போகிறதா என்பதுதான் காத்திருப்புக்கானது.

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/கிழக்கு-அரசியல்-பல்கலைக்கழக-காதல்/91-222669

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: DIGITAL DESK 3   19 APR, 2024 | 03:55 PM   ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கமைய பாடசாலை மாணவர்களுக்கு போசாக்குள்ள உணவு வழங்கும் நிகழ்ச்சித் திட்டத்திற்காக உலக உணவுத் திட்டத்தின் மூலம் பாடசாலைகளுக்கு வழங்கப்படும் செறிவூட்டப்பட்ட அரிசி (Fortified Rice) விநியோகம் இன்று வெள்ளிக்கிழமை (19) வெயங்கொட உணவு களஞ்சிய வளாகத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. பாடசாலை மாணவர்களிடையே இரும்புச் சத்து குறைபாட்டைக் குறைக்கும் நோக்கில், பாடசாலை உணவுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி (Fortified Rice)  வழங்கப்படுவதுடன், ஜனாதிபதி செயலகத்தின் கீழுள்ள உலக உணவுத் திட்டத்திற்கான கூட்டுச் செயலகத்தின் பணிப்பாளர் நாயகம் எம்.எச்.ஏ.எம்.ரிப்லானின் மேற்பார்வையில் இந்த விநியோக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன்படி, முதற்கட்டமாக மாகாண மட்டத்தில் உள்ள பாடசாலைகளுக்கு 735 மெற்றிக் தொன் அரிசி வழங்கும் நடவடிக்கை இன்று ஆரம்பமானதுடன் நாளையும் (20) இந்தப் பணிகள் தொடரும். சம்பந்தப்பட்ட மாகாண கல்வித் திணைக்கள அதிகாரிகள் மற்றும் பொது சுகாதார பரிசோதகர்களின்  கண்காணிப்பின் கீழ்  பாடசாலைகளுக்கு அரிசி விநியோகிக்கப்படுகிறது. இதேவேளை, மே 19ஆம் திகதி பாடசாலை புதிய  தவணை ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர், 378.835 மெற்றிக் தொன் பருப்பு, 412.08 மெற்றிக் தொன் சூரியகாந்தி சமையல் எண்ணெய், 300 மெற்றிக் தொன் பேரீச்சம்பழங்கள் பாடசாலைகளுக்கு விநியோகிக்கப்படும் என உலகக் உணவுத் திட்டத்திற்கான கூட்டுச் செயலகத்தின் பணிப்பாளர் நாயகம்  எம்.எச்.ஏ.எம்.ரிப்லான் தெரிவித்தார். நாட்டிலுள்ள தரம் 1-5 வரை உள்ள அனைத்து பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலையில் ஒருவேளை உணவு வழங்குவதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. போசாக்கு நிபுணர்களின் பரிந்துரைகளை கருத்தில் கொண்டு, மாணவர்கள் கல்வி நடவடிக்கைகளில் ஈடுபடும் முன்னர், தினமும் காலை 7.30 மணி முதல் 8.30 மணி வரை  காலை உணவு வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தின் ஊடாக"ஆரோக்கியமான சுறுசுறுப்பான  மாணவர் தலைமுறை" என்ற கருப்பொருளின் கீழ், 2024 ஆம் ஆண்டிற்கான பாடசாலை உணவுத் திட்டம், பாடசாலை மாணவர்களிடையே போசாக்குப் பிரச்சினைகளைக் குறைத்தல், மாணவர்களின் தினசரி பாடசாலை வருகையை அதிகரித்தல், நல்ல உணவுப் பழக்கம் மற்றும் சுகாதாரப் பழக்கங்களை மேம்படுத்துதல், கல்வி மேம்பாட்டு மட்டத்தை உ யர்த்த பங்களித்தல்,  மற்றும் உள்நாட்டு உணவு கலாசாரத்தை கட்டியெழுப்புதல் ஆகிய அடிப்படை நோக்கங்களை  நிறைவேற்ற எதிர்பார்க்கப்படுகிறது. 9134 அரச பாடசாலைகளிலும், 100 இற்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட அனைத்துப் பாடசாலைகளிலும் உள்ள அனைத்து ஆரம்ப வகுப்பு மாணவர்களையும் உள்ளடக்கிய இந்த ஆண்டு பாடசாலை உணவுத் திட்டத்தின் மூலம் 1.6 மில்லியன் மாணவர்கள் பயனடைந்துள்ளனர். இதற்காக ஒன்பது மாகாண சபைகளுக்கு அரசாங்கம் நேரடியாக 16,600 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கியுள்ளதுடன், உலக உணவுத் திட்டம் மற்றும் அமெரிக்க விவசாயத் திணைக்களம் (USDA) உட்பட பல அமைப்புகளும் அனுசரணை வழங்குகின்றன. https://www.virakesari.lk/article/181467
    • செம்மணியில் முன்னர் உப்பளம் இருந்த பகுதியில் சர்வதேசத் துடுப்பாட்ட மைதானம் ஒன்றை அமைப்பதற்கான பகீரத முயற்சியில் நகர அபிவிருத்தி அதிகாரசபை ஈடுபட்டுள்ளது. ஏற்கனவே செம்மணியில் கட்டுமானங்களை மேற்கொள்வதற்குப் பல்வேறு தரப்பினராலும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டபோது வடக்கு மாகாணசபை அவற்றை நிராகரித்திருந்தது. தற்போது  வடக்கு மாகாணசபையில் மக்கள் பிரதிநிதித்துவம் இல்லாத நிலையில் செம்மணியில் சர்வதேசத்தரத்தில் துடுப்பாட்ட மைதானம் ஒன்றை அமைப்பதற்கான முயற்சிகள் சாதக பாதகங்களை ஆராயாது முடுக்கிவிடப்பட்டுள்ளன. செம்மணியில் இத் துடுப்பாட்ட மைதானம் அமைந்தால் அயற்பிரதேசங்கள் மாரியில் வெள்ளத்தில் மூழ்கும் அபாயமும், கோடையில் கடும் நீர்ப்பஞ்சத்துக்கு ஆளாகும் அபாயமும் நேரிடும் என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் எச்சரித்துள்ளார். செம்மணி உப்பளப்பகுதி குடா நாட்டின் பிரதான கடல் நீரேரிகளில் ஒன்றான உப்பாற்றுக் கடல் நீரேரியை அண்டிய தாழ்வான ஈரநிலம் ஆகும். வெளிப்பார்வைக்கு முக்கியத்துவமற்ற வெட்டவெளியாகத் தென்படும் இப் பகுதி  சூழலியல்ரீதியாக இன்றிமையாத பங்களிப்புகளை வழங்கி வருகிறது. மாரியில் சுற்றயல் கிராமங்களில் இருந்து வரும் வெள்ள நீரைத்தேக்கி வைத்து  நிலத்தடி நீர் மட்டத்தைப் பேணுவதோடு, நிலம் உவராவதையும் தடுக்கிறது. கூடவே, மேலதிகநீரைக் குடாநாட்டின் இன்னுமொரு கடல்நீரேரியான யாழ்ப்பாணக் கடல் நீரேரிவழியாகக் கடலுக்குள் அனுப்புவதன் மூலம் குடியிருப்புகளையும் வயல் நிலங்களையும் வெள்ளத்தில் மூழ்காமல் பாதுகாக்கவும் செய்கிறது. https://yarl.com/forum3/topic/291011-செம்மணியில்-துடுப்பாட்ட-மைதானம்-அமையின்-அயற்கிராமங்கள்-வெள்ளத்தில்-மூழ்கும்-கோடையில்-கடும்-நீர்ப்பஞ்சமும்-ஏற்படும்/#comment-1709825
    • இவர்கள் student visaவில் இருக்கிறார்கள் என்று நினைக்கிறேன், நீதிமன்றத்துக்கு போனால் இவர்களின் விசாவிற்கு பிரச்சனை வரலாம், record இல் வந்தால் பிற்காலத்தில் green card எடுக்கும்போது பிரச்சனை வரும், தேவையற்ற சில்லறைக்கு ஆசைப்பட்டு பெரிய பிரச்சனையை சந்திக்கிறார்கள் 
    • அண்ணை சத்திர சிகிச்சை அறைக்கு வெளியில் இருந்திருப்பார்கள் என நினைக்கிறேன். அடுத்த சிகிச்சையாளரைக் கூட தயார்படுத்தல் அறையில் தான் இருக்க விடுவார்கள் என நினைக்கிறேன்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.