Jump to content

இலங்கையர்கள் இதயத்தில் சீனா! – அமைச்சர் மஹிந்த சமரசிங்க


Recommended Posts

இலங்கையர்கள் இதயத்தில் சீனா! – அமைச்சர் மஹிந்த சமரசிங்க

 

F084BA6F-FF65-4DD6-9686-6D8574068578-720x450.jpeg

இலங்கையோடு அனைத்து சூழ்நிலையிலும் தோளுக்கு தோளாக நிற்கின்ற நண்பனாக சீனாவை கருதுவதாக இலங்கை அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார். அந்தவகையில் இலங்கையர்கள் சீனாவை இதயத்தில் வைத்திருப்பதாக அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

இலங்கை ஒரு சுதந்திர நாடு என்பதை சர்வதேசம் மதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை இலங்கை ஜனாதிபதி ஐ.நா.வில் முன்வைத்ததாக குறிப்பிட்ட அவர், போர் நிறைவுபெற்று பத்து வருடங்கள் ஆகின்ற நிலையில் முழுமையான நல்லிணக்கத்தை ஏற்படுத்த கடுமையாக உழைக்கும் இலங்கை, எஞ்சியுள்ள தூரத்தை கடக்கும் விடயத்தில் ஏனைய சர்வதேச மாதிரிகளைத் திணிக்க முற்படக்கூடாது எனவும் தெரிவித்துள்ளார்.

FBF19716-BBD9-49A3-B949-5729EFF783DB-384

மக்கள் சீனக் குடியரசு ஸ்தாபிக்கப்பட்ட 69வது தினவிழா கொழும்பில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்றுது. இதில்  பிரதம அதிதியாக பங்கேற்று உரையாற்றியபோதே அவர் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார். கொழும்பிலுள்ள ஷங்ரி – லா ஹோட்டலில் நடைபெற்ற இந்த விழாவில், ஜனாதிபதி ஐ.நா.வில் பேசிய விடயங்கள் தொடர்பாகவும் மஹிந்த சமரசிங்க விளக்கமளித்தார்.

“உலகம் எங்களை வித்தியாசமான கண்ணோட்டத்தில் பார்க்கவேண்டும். பயங்கரவாதம் நிறைவிற்கு வந்து பத்து வருடங்கள் ஆகிவிட்டன. கடந்த 30 வருடங்களில் நாம் எதிர்நோக்கியது போன்றதொரு சூழ்நிலையை எதிர்நோக்காதிருப்பதனை உறுதிப்படுத்துவதற்காக எமது நாட்டில் விரிவான நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு நாம் கடுமையாக உழைத்துக்கொண்டிருக்கின்றோம். இதனால் எமது நாட்டின் பொருளாதார அபிவிருத்தி, சுபீட்சம் ஆகியவை பாதிக்கப்பட்டன.

நாம் சர்வதேச சமூகத்திடம் எதனைக் கோரினோம் என்றால் இலங்கை ஒரு சுதந்திர நாடு என்பதை மதியுங்கள் என்றே கோரினோம். முழுமையான நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் பயணத்தில் நாங்கள் கடைசி தூரத்தை கடக்க வேண்டியுள்ளது. அதனை இலங்கையர்களே பயணித்தாகவேண்டும். எமது மக்களுக்கு என்னதேவை என்பதை நாம் புரிந்துகொண்டுள்ளோம். ஏனைய நாடுகளிலுள்ள மாதிரிகளை நாம் இலங்கையில் திணிக்க முடியாது. இந்த நாட்டின் கலாசாரம், மதம் ஆகியவற்றை கருத்திற்கொள்ள வேண்டியுள்ளது. இந்த நாட்டின் சமூகக் கட்டமைப்பு மிகவும் பன்முகத்தன்மைகொண்டது. இதனைப் புரிந்துகொண்டு செயற்படுங்கள் என்பதையே நாம் சர்வதேச சமூகத்திடம் கோரினோம்.

சீனாவிற்கு இதனை நாம் நினைவுபடுத்த வேண்டியதில்லை. சீனாவை நான் எப்போதும் சகல சூழ்நிலையிலும் துணையாக நிற்கின்ற நண்பன் என்றே குறிப்பிடுவேன். நல்லநேரமாக இருப்பினும் கெட்ட நேரமாக இருப்பினும் சீனா எம்மோடு இருக்கின்றது. இதனை நாம் மிகவும் பாராட்டுகின்றேன். இலங்கையர்கள் அனைவரும் சீனாவையும் சீன மக்களையும் எமது இதயங்களில் வைத்திருக்கின்றனர் என்று கூறிக்கொள்வதில் மகிழ்ச்சியடைகின்றேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

http://athavannews.com/இலங்கையர்-இதயத்தில்-சீன/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.