Jump to content

ரத்னா!


Recommended Posts

 
 
 
 
 
 
 
 
ரத்னா!
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
E_1537505516.jpeg
 
 
 

''அம்மா... உங்களைப் பார்க்க ஒருத்தர் வந்திருக்கார்... பேரு உலகநாதனாம், உங்களை அவருக்குத் தெரியுமாம்... அவரை உங்களுக்கும் தெரியுமாம்,'' செங்கம்மா சொன்னபோது, ஆச்சரியத்துடன் பார்த்தாள், ரத்னா.
''எப்ப வந்தார்... இப்ப தானே கதவை திறக்கிறோம்.''
''வாசலை பெருக்கி, கோலம் போடலாம்ன்னு கதவைத் திறந்தேன்... இந்த அய்யா வந்தார்.''
''உலகநாதனா... அவர் ஏன்... எப்படி... எதற்கு, அவர் தானா அல்லது வேறு யாராவதா... இது என்ன புது கதை! சரி... வரச்சொல்!''
உலகநாதன் தடுமாறியபடி உள்ளே வந்தார். கையில் தடி, தாடி, நைந்து போன வேட்டி, சட்டை. தன்னையறியாமல் எழுந்து நின்றாள், ரத்னா.
''வாங்க... உட்காருங்க!''
''ரத்னா... லேசாகக் குழறியபடியே, எப்படி இருக்க ரத்னா?''
''உம்...'' அதற்கு மேல் அவளால் பதில் சொல்ல முடியவில்லை.
''உன்னை கண்டுபிடிக்கறதுக்குள்ள, ரொம்ப கஷ்டமாப் போச்சு.''
அவள் பேசாமல் இருந்தாள். செங்கம்மா இருவருக்கும் காபி கொண்டு வந்தாள். உடனே வாங்கி குடித்தார்.
''அப்பப்பா... இப்ப தான் தெம்பு வந்தது!''
''நீ இங்க இருக்கறது எனக்கு எப்படி தெரிஞ்சுது தெரியுமா... உன் தம்பி பாரி தான் சொன்னான்... எதுவுமே சொல்லாம கிளம்பிட்ட... சரி, கொஞ்ச நாள்ல திரும்பி வந்துடுவேன்னு நினைச்சேன்!''


அவள் பேசாமல் இருக்கவே, அவரே மேற்கொண்டு பேசினார்...
ரத்னாவிற்கும், உலகநாதனுக்கும் கல்யாணமான போது, அவரின் குடும்பம் பெரிதாக இருந்தது. அவரின் பெற்றோர், விதவை அத்தை, அண்ணன், அவர் மனைவி, குழந்தைகள், தம்பி, தங்கைகள், பாட்டி என்று 15 பேர். உலகநாதனின் மனைவியாக இருப்பதை விட, அத்தனை பேருக்கும் வேலைக்காரியாக மாறிப் போனாள், ரத்னா. சின்ன வயசு, அத்தனை பேரையும் அனுசரித்துப் போக தெரியவில்லை.
பாலை காய்ச்சி வைத்தால், மாமியார் தான் காபி கலக்க வேண்டும். ஏனென்றால், அவள் பாட்டுக்கு, திக்காக காபி கலந்து குடித்து விடுவாளோ என்று பயம். ரத்னாவிற்கு மட்டும் அரை கப் கழுநீர் காபி. மிக்சி, கிரைண்டர் இருந்தும், அம்மி, கல்லுரலில் தான் அரைக்க வேண்டும்; பொடி இடிக்க வேண்டும். இத்தனைக்கும், ரத்னா கல்யாணமாகி வரும்போது, புதிதாக எல்லா சாமான்களும் கொண்டு வந்திருந்தாள்.
அடுத்தது, அண்ணன் குடும்பத்தினர் ரத்னாவை ஆட்டி வைப்பது. அதுதான் அவளை மிகவும் வருத்தமுற செய்தது. அவள் வாய் மூடி வேலை செய்தாலும், வாயைத் திறக்க வைத்து, வம்படி செய்து, மாமியாரிடம் திட்டு வாங்க வைப்பது... மாமனார் அதற்கு மேல்.
மாமியார், 'தோப்புக்கரணம் போடு...' என்றால், 'எண்ணிக்கோ...' என்று சொல்லும் ரகம். இரண்டு அண்ணன்கள். அவர்களின் மனைவி, குழந்தைகள். அண்ணன் மனைவியைக் கண்டால் எல்லாருக்குமே பயம். அவள் வாய்க்கு பயம். அதைக் கேட்டு, அண்ணன் ஆடும் ஆட்டத்திற்கு பயம். இத்தனைக்கும் ரத்னா, அண்ணன் மனைவியை விட படித்தவள். பல போட்டிகளில் பரிசு வாங்கியவள்.
ஊருக்கு இளைத்தவன் கதையாக, எல்லாரும் ரத்னாவை ஆட்டுவிப்பதைப் பார்த்து, உலகநாதனின் தம்பியும், தங்கையும், அவள் கணவரும், ஏன், அண்ணனின் மாமியாரும் கூட ரத்னாவை வாய்க்கு வந்தபடி திட்டுவர். ஒரு பொழுதுகூட அவளுக்கு நிம்மதியாக இருந்ததில்லை.
லேட்டாக எழுந்தால், 'ஏன்டி... படுக்கையை விட்டு எழுந்திருக்க மனசு வரலையா... இப்படிக்கூட ஒரு பொம்பளை இருப்பாளா... வெக்கங்கெட்டவ...' என, மாமியார் அர்ச்சனை.


தாமதமா படுக்க போனால், 'மாமியார் கொடுமைன்னு எல்லாருக்கும் தெரியணுமாக்கும்... கல்யாணமாகி ஒரு வருஷமாகிறது... இன்னும் மொட்டை மரமா நின்னா எப்படி... தனி மரம் தோப்பாகுமா... எல்லாத்துக்கும் கொடுப்பினை வேணும்...' என்று அடுத்த அம்பு.
உலகநாதன் எதையுமே காதில் போட்டுக்கொள்ள மாட்டார். 'அவனை மதிக்கலை, இவளை மதிக்கலை...' என்று அவளை மேலும் வறுத்தெடுப்பார்.
இருபத்தைந்து ஆண்டு போராட்டத்துக்குப் பின், பெண்ணுக்கும், பிள்ளைக்கும் நல்லபடியாகக் கல்யாணம் செய்து முடித்தாள். அதற்குள், எத்தனை மாற்றங்கள்... பெரியவர்கள் இறந்து, மற்றவர்கள் தனிக் குடித்தனம் துவங்கி, ரத்னா வேலையிலிருந்து விலகி... ஆனால், உலகநாதன் மட்டும் மாறவேயில்லை. அதே சிடுசிடுப்பு, எரிச்சல், கோபம்.
தன் குழந்தைகளின் பிறந்த நாள், அவருக்கு முக்கியமல்ல... அண்ணன் குழந்தைகள், அவர்களின் மனைவிமார் உறவுகளுக்கெல்லாம் வாழ்த்து சொல்வதும், பரிசு வழங்குவதும், அவர்களிடம் ரத்னாவைப் பற்றி இல்லாததை சொல்வதும் அவருக்கு கைவந்த கலை.
அதை கேட்டு, அவர்கள், இவளை இடித்துரைப்பதும், விசேஷங்களில் ஒதுக்கி வைப்பதும் வாடிக்கை.
அதைவிடக் கொடுமை, தன் குழந்தைகளின் திருமண விசேஷங்களில் கூட, அவளை ஒதுக்கி வைத்து, அண்ணன் குடும்பத்தினருக்கு முக்கியத்துவம் கொடுத்து அவர்களை மேடையில் ஏற்றியது தான் ரத்னாவிற்கு தாங்க முடியாத மன வருத்தத்தை தந்தது.
அழைப்பிதழ் அச்சடிப்பது, உறவுகளுக்குப் புது துணிகள் வாங்குவது, சத்திரம் பார்ப்பது, சாப்பாடு ஏற்பாடு, எல்லாமே அண்ணன் குடும்பத்தினருடன் தான்... துக்கம் பொங்க, மனதிற்குள் அழுதபடி, தன் குழந்தைகளின் கல்யாணத்தில் கலந்து கொண்டாள், ரத்னா.
பல்லைக் கடித்து, பொறுத்து, பெண்ணுக்கும், பிள்ளைக்கும் திருமணம் செய்து முடித்தவள், சரியான நேரத்திற்காக காத்திருந்தாள்.
வழக்கம்போல, ஆர்ப்பாட்டமாக வந்த உலகநாதன், 'ஏய்... ரெண்டு பேருக்கு இத்தனை பெரிய வீடு வேண்டாம்... வீட்டை விற்க ஏற்பாடு பண்ணிட்டேன்... சின்னதா ஒரு வீடு பார்த்து, பால் காய்ச்சி விட்டேன். இரண்டு நாளில் இந்த வீட்டை காலி பண்ணனும்... ரெடியா இரு...' என்றார்.
'எப்ப நடந்தது இதெல்லாம்?'
'எல்லாத்தையும் உன்கிட்ட சொல்லணும்ன்னு அவசியம் இல்ல...'
'எனக்குத் தெரிய வேண்டியது தெரிஞ்சு தான் ஆகணும்...'
'என்னடி, வாய் நீளுது?'


'ஆமாம்... ஒரு வார்த்தை சொல்லாமல், எல்லாத்தையுமே முடிச்சுட்டு வந்து சொன்னா என்ன அர்த்தம்?'
'இங்க பார், அப்படித்தான் செய்வேன்... இஷ்டமிருந்தா இரு... இல்லேன்னா தாராளமா வெளில போகலாம்...'
'ஓ... சரி, நான் போறேன்...'
'கிளம்புடி... பயமுறுத்துறியா?'
வெகு நாட்களாகவே மனதில் திட்டம் போட்டு வைத்திருந்தாள். உடனே, தன் தோழியை தொடர்பு கொண்டாள்.
ஒரு இல்லத்தின் பொறுப்பாளியாக வேலை செய்து வந்தாள் தோழி, விமலா. அது அவளின் சொந்த இல்லம் என்று கூட சொல்லலாம். ஏற்கனவே ரத்னாவின் கதையை அறிந்தவளாதலால், உடனே வரச் சொல்லி விட்டாள்.
ஒரு வேகத்தில், புடவை, துணிகள், முக்கியமான சில பேப்பர்களுடன் கிளம்பினாள், ரத்னா. ஏதோ பயமுறுத்துகிறாள் என்று நினைத்த உலகநாதன், அரண்டு போனார். ஆனாலும், வீம்பு விடவில்லை. போகட்டும் என்ற நினைப்பு.
'நான் கிளம்பறேன்... நாம நல்லபடியா பிரியணும்ன்னு நினைக்கிறேன்... நான் ஏதும் தப்பு பண்ணலை... அப்படி ஏதும் பண்ணியிருந்தா, உங்ககிட்ட மன்னிப்பு கேட்டுக்கிறேன்...'
'சரிதான் போடி... நீ இல்லேன்னா நான் செத்து போயிட மாட்டேன்...'
அன்று வீட்டை விட்டு இறங்கி, விமலா இல்லத்தில் தஞ்சம் புகுந்தவள். இன்று, அந்த இல்லத்தின் மற்றொரு நிர்வாகியாகி விட்டாள்.
பிள்ளையும், பெண்ணும் வந்து அழைத்தபோது, உறுதியாக மறுத்தாள்.
இதோ, இன்று, உலகநாதன் அவளை தேடி வந்திருக்கிறார்.
''ரத்னா... எனக்கு வயசாயிடுச்சு.''
''ஓ... அப்படியா!''


''என்னால தனியா இருக்க முடியல.''
''அது சரி... அண்ணன் குடும்பம் என்னாச்சு?''
''போனது போகட்டும், நீ வீட்டுக்கு வந்துடேன்.''
''எதற்கு?''
''உன் கையால சாப்பிட்டு எத்தனை நாளாச்சு...''
''என் சமையல் சகிக்க முடியாதே...''
''வேலைக்காரி கூட சரியா வர்றதில்ல... எல்லாமே நானே செய்ய வேண்டியிருக்கு.''
''ஓ... அதுதானா விஷயம்?''
''காய் வாங்க, மின் கட்டணம் கட்ட, கடைக்குப் போகன்னு எல்லாம் ஒண்டியா செய்ய வேண்டியிருக்கு.''
''ஓ...''
''அடிக்கடி உடம்பு சரியில்லாம போயிடுது; வயசாகலியா? நீ வந்துட்டா, எனக்கு ரொம்ப வசதியா இருக்கும்.''
''அப்படி வாங்க விஷயத்துக்கு... இப்பவும் உங்க வசதி தான் முக்கியம்... இல்லையா?''
''என்ன யோசிக்கற... இப்பவே கிளம்பலாம்... வீடு, குப்பையும், கூளமுமாக கிடக்கு... நீ வந்ததும் நிறைய வேலை இருக்கு.
''உனக்கு இன்னும் கோவம் தீரலை போலிருக்கு... நியாயம் தான். நீ மன்னிச்சுடுன்னு என்கிட்டே கெஞ்சினபோது, நான் உன்னை மன்னிச்சிருக்கலாம்... எனக்கும் வீம்பு தான். என்ன செய்யறது?''
ஒரு நிமிடம் அவரை உற்று பார்த்தாள், ரத்னா.


''ஆக... உங்களைக் கெஞ்சினது, நான் தான் தப்பு செய்தேன் என்பதால் தான், இல்லையா?''
''பின்ன, சொல்லாம, கொள்ளாம ஒரு குடும்பப் பொம்பள வெளில கிளம்பிப் போனா, என்ன அர்த்தம்?
''திடீர்னு இப்படி போட்டது போட்டபடி கிளம்பறோமே... அடுத்த வேளை சாப்பாட்டுக்கு நான் என்ன செய்வேன்னு கொஞ்சமாவது நினைச்சுப் பார்த்தியா நீ?''
''அதாவது, நான் போனது கூட பெரிசில்லை... உங்களை கவனிக்காம போனது தான் பெரிசு... இப்பவும் உங்க வசதியும், நிம்மதியும் தான் உங்களுக்கு முக்கியம்... இல்லையா? உங்க மனசுக்கு நான் இன்னும் நெருக்கமாக வரவில்லை...
''பரவாயில்லை... நான் மறுபடியும் உங்களுடன் வந்து வாழ்வதை மறந்து விடுங்கள். வேண்டுமானால், இந்த இல்லத்தில் உங்களுக்கு ஒரு இடம் தரேன்... அது கூட, பணம் கட்டி தான் சேர வேண்டும்... மாதா மாதம் பராமரிப்புத் தொகை செலுத்த வேண்டும்... உங்களுக்காக எந்த விதமான சிறப்பு சலுகையும் கிடையாது. இதற்கு சம்மதமானால், மேற்கொண்டு பேசலாம்.
''முக்கியமான விஷயம்... இனி, நான் இந்த இல்லத்தின் நிர்வாகியாகத் தான் உங்களிடம் பேசுவேன்... ரத்னாவாக அல்ல!
''யோசித்து, செங்கம்மாவிடம் சொல்லிடுங்க... அவள் ஏற்பாடு செய்வாள்... எனக்கு வேறு வேலை இருக்கு.''
கம்பீரமாக எழுந்து நடந்தாள், ரத்னா.
வினை விதைத்து, வினையை அறுவடை செய்ய வந்திருப்பதாக கருதி, மனம் வலிக்க, செய்வதறியாது, சிலையாக நின்றார், உலகநாதன்.

http://www.dinamalar.com/supplementary_detail.asp?id=44504&ncat=2

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாவம் உலகநாதன்.அண்ணன் குடும்பத்துக்காக எல்லாம் செய்தவர் தனக்காக ஒரு சின்ன வீடாவது வைத்து கொள்ள வேணும் என்று தோணவில்லை..... ம்.... விதி வலியது.....!  tw_blush:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நானும் போட்டியில் குதித்துள்ளேன்!   # Question Team1 Team 2 No Result Tie Prediction 1) ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் முன்னணியில் வரும் நான்கு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும். தவறான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் குறைக்கப்படும்.     No Result Tie     CSK     Select CSK CSK   DC     Select DC Select   GT     Select GT Select   KKR     Select KKR KKR   LSG     Select LSG Select   MI     Select MI Select   PBKS     Select PBKS Select   RR     Select RR RR   RCB     Select RCB Select   SRH     Select SRH SRH 2) முதல் நான்கு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக.             #1 - ? (சரியான பதில்: +4 புள்ளிகள், தவறான பதில்: -4 புள்ளிகள் )         RR   #2 - ? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள் )         KKR   #3 - ? (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2 புள்ளிகள்)         CSK   #4 - ? (சரியான பதில்: +1 புள்ளி, தவறான பதில்: -1 புள்ளி )         SRH 3) ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2 புள்ளிகள்)         PBKS 4) மே 21, வெள்ளி 19:30 அஹமதாபாத் Qualifier 1 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள்) Qualifier 1: 1st placed team v 2nd placed team         RR 5) மே 22, புதன் 19:30 அஹமதாபாத் Eliminator போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள்) Eliminator: 3rd placed team v 4th placed team         CSK 6) மே 24 வெள்ளி 19:30 சென்னை Qualifier 2 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள்) Qualifier 2: Loser of Qualifier 1 v Winner of Eliminator         KKR 7) Final போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +5 புள்ளிகள், தவறான பதில்: -5 புள்ளிகள்) Final: Winner of Qualifier 1 v Winner of Qualifier 2         KKR 😎 இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி)         SRH 9) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி)         GT 10) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் (Orange cap) பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)         Sanju Samson 11) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் (Orange cap) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 10 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         RCB 12) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)         Yuzvendra Chahal 13) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 12 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         MI 14) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள் )         Virat Kohli 15) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 14 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         RCB 16) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)         Jasprit Bumrah 17) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 16 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         MI 18) இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the Series) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)         Sanju Samson 19) இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the season) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 18 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         RR 20) இந்த தொடரில் Fair Play Award யை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி)         SRH
    • பையன்,  இந்த 800 ரூபா  வீடியோ post செய்யப்பட்டது 10.04.2024 என்று tim tense இன் யூருப் தளத்தில் உள்ளது. நீங்கள் எப்படி இந்த வீடியோவை சென்ற  வருடம் மே மாதத்தில்  பார்திருப்பீர்கள்?  காலப்பயணம்(time travel) சென்றீர்களா? 
    • 1)    ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் முன்னணியில் வரும் நான்கு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும். தவறான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் குறைக்கப்படும்.    CSK, KKR, RR,SRH 2)    முதல் நான்கு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக.       #1 - ? (சரியான பதில்: +4 புள்ளிகள், தவறான பதில்: -4  புள்ளிகள் ) RR     #2 - ?  (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள் ) KKR     #3 - ?  (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2  புள்ளிகள்) CSK     #4 - ?  (சரியான பதில்: +1 புள்ளி, தவறான பதில்: -1 புள்ளி ) SRH 3)    ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2  புள்ளிகள்) RCB 4)   மே 21, வெள்ளி 19:30 அஹமதாபாத்  Qualifier 1 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3  புள்ளிகள்) Qualifier 1: 1st placed team v 2nd placed team RR 5)    மே 22, புதன் 19:30 அஹமதாபாத் Eliminator போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3  புள்ளிகள்) Eliminator: 3rd placed team v 4th placed team SRH 6)   மே 24 வெள்ளி 19:30  சென்னை Qualifier 2 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3  புள்ளிகள்) Qualifier 2: Loser of Qualifier 1 v Winner of Eliminator CSK 7)    மே 26, ஞாயிறு இறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +5 புள்ளிகள், தவறான பதில்: -5  புள்ளிகள்) Final: Winner of Qualifier 1 v Winner of Qualifier 2 RR 8 ) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி) SRH 9)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி) RCB 10)    இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் (Orange cap) பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள் Virat Kohli 11)    இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் (Orange cap) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி, கேள்வி 10 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) RCB 12)    இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Yusvendra Chahal 13)    இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 12 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) RR 14)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள் ) Virat Kholi 15)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 14 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) SRH 16)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Jasprit Bumrah 17)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 16 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) MI 18)    இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the Series) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Virat Kohli 19)    இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the season) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 18 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) CSK 20)    இந்த தொடரில் Fair Play Award யை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி) SRH
    • பையன்.... பத்திரிகைகள் எல்லாம் அண்மையில் நடந்த செய்தியாகத்தான் குறிப்பிடுகின்றன. அத்துடன்  இரண்டு வருடத்துக்கு முன்பு வந்த செய்தி  என்றால்,  "வடை மாத்தையா"வை 😂  அப்போ கைது செய்யாமல் இப்போ ஏன் கைது செய்துள்ளார்கள். அந்த நேரம்  இவை ஏன், சமூக வலைத்தளங்களில் அலசப் படவில்லை போன்ற கேள்விகள் எழுகின்றன.
    • நேரங்கெட்ட நேரத்தில சனியன் தலைக்கேறுவதுபோல ஈரானிய சனாதிபதி இலங்கைக்கு போகப்போகிறார். அங்கே நம்ம நானாக்கள் "இஸ்ரேலுக்கே ஏவுகணை ஏவிய எங்கள் ஈரானிய சனாதிபதிக்கு ஜெயவேவா "" சொல்லுவதற்கு ஆயத்தமாக இருப்பதாகக் கேள்வி.  😁
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.