Jump to content

ரத்னா!


Recommended Posts

 
 
 
 
 
 
 
 
ரத்னா!
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
E_1537505516.jpeg
 
 
 

''அம்மா... உங்களைப் பார்க்க ஒருத்தர் வந்திருக்கார்... பேரு உலகநாதனாம், உங்களை அவருக்குத் தெரியுமாம்... அவரை உங்களுக்கும் தெரியுமாம்,'' செங்கம்மா சொன்னபோது, ஆச்சரியத்துடன் பார்த்தாள், ரத்னா.
''எப்ப வந்தார்... இப்ப தானே கதவை திறக்கிறோம்.''
''வாசலை பெருக்கி, கோலம் போடலாம்ன்னு கதவைத் திறந்தேன்... இந்த அய்யா வந்தார்.''
''உலகநாதனா... அவர் ஏன்... எப்படி... எதற்கு, அவர் தானா அல்லது வேறு யாராவதா... இது என்ன புது கதை! சரி... வரச்சொல்!''
உலகநாதன் தடுமாறியபடி உள்ளே வந்தார். கையில் தடி, தாடி, நைந்து போன வேட்டி, சட்டை. தன்னையறியாமல் எழுந்து நின்றாள், ரத்னா.
''வாங்க... உட்காருங்க!''
''ரத்னா... லேசாகக் குழறியபடியே, எப்படி இருக்க ரத்னா?''
''உம்...'' அதற்கு மேல் அவளால் பதில் சொல்ல முடியவில்லை.
''உன்னை கண்டுபிடிக்கறதுக்குள்ள, ரொம்ப கஷ்டமாப் போச்சு.''
அவள் பேசாமல் இருந்தாள். செங்கம்மா இருவருக்கும் காபி கொண்டு வந்தாள். உடனே வாங்கி குடித்தார்.
''அப்பப்பா... இப்ப தான் தெம்பு வந்தது!''
''நீ இங்க இருக்கறது எனக்கு எப்படி தெரிஞ்சுது தெரியுமா... உன் தம்பி பாரி தான் சொன்னான்... எதுவுமே சொல்லாம கிளம்பிட்ட... சரி, கொஞ்ச நாள்ல திரும்பி வந்துடுவேன்னு நினைச்சேன்!''


அவள் பேசாமல் இருக்கவே, அவரே மேற்கொண்டு பேசினார்...
ரத்னாவிற்கும், உலகநாதனுக்கும் கல்யாணமான போது, அவரின் குடும்பம் பெரிதாக இருந்தது. அவரின் பெற்றோர், விதவை அத்தை, அண்ணன், அவர் மனைவி, குழந்தைகள், தம்பி, தங்கைகள், பாட்டி என்று 15 பேர். உலகநாதனின் மனைவியாக இருப்பதை விட, அத்தனை பேருக்கும் வேலைக்காரியாக மாறிப் போனாள், ரத்னா. சின்ன வயசு, அத்தனை பேரையும் அனுசரித்துப் போக தெரியவில்லை.
பாலை காய்ச்சி வைத்தால், மாமியார் தான் காபி கலக்க வேண்டும். ஏனென்றால், அவள் பாட்டுக்கு, திக்காக காபி கலந்து குடித்து விடுவாளோ என்று பயம். ரத்னாவிற்கு மட்டும் அரை கப் கழுநீர் காபி. மிக்சி, கிரைண்டர் இருந்தும், அம்மி, கல்லுரலில் தான் அரைக்க வேண்டும்; பொடி இடிக்க வேண்டும். இத்தனைக்கும், ரத்னா கல்யாணமாகி வரும்போது, புதிதாக எல்லா சாமான்களும் கொண்டு வந்திருந்தாள்.
அடுத்தது, அண்ணன் குடும்பத்தினர் ரத்னாவை ஆட்டி வைப்பது. அதுதான் அவளை மிகவும் வருத்தமுற செய்தது. அவள் வாய் மூடி வேலை செய்தாலும், வாயைத் திறக்க வைத்து, வம்படி செய்து, மாமியாரிடம் திட்டு வாங்க வைப்பது... மாமனார் அதற்கு மேல்.
மாமியார், 'தோப்புக்கரணம் போடு...' என்றால், 'எண்ணிக்கோ...' என்று சொல்லும் ரகம். இரண்டு அண்ணன்கள். அவர்களின் மனைவி, குழந்தைகள். அண்ணன் மனைவியைக் கண்டால் எல்லாருக்குமே பயம். அவள் வாய்க்கு பயம். அதைக் கேட்டு, அண்ணன் ஆடும் ஆட்டத்திற்கு பயம். இத்தனைக்கும் ரத்னா, அண்ணன் மனைவியை விட படித்தவள். பல போட்டிகளில் பரிசு வாங்கியவள்.
ஊருக்கு இளைத்தவன் கதையாக, எல்லாரும் ரத்னாவை ஆட்டுவிப்பதைப் பார்த்து, உலகநாதனின் தம்பியும், தங்கையும், அவள் கணவரும், ஏன், அண்ணனின் மாமியாரும் கூட ரத்னாவை வாய்க்கு வந்தபடி திட்டுவர். ஒரு பொழுதுகூட அவளுக்கு நிம்மதியாக இருந்ததில்லை.
லேட்டாக எழுந்தால், 'ஏன்டி... படுக்கையை விட்டு எழுந்திருக்க மனசு வரலையா... இப்படிக்கூட ஒரு பொம்பளை இருப்பாளா... வெக்கங்கெட்டவ...' என, மாமியார் அர்ச்சனை.


தாமதமா படுக்க போனால், 'மாமியார் கொடுமைன்னு எல்லாருக்கும் தெரியணுமாக்கும்... கல்யாணமாகி ஒரு வருஷமாகிறது... இன்னும் மொட்டை மரமா நின்னா எப்படி... தனி மரம் தோப்பாகுமா... எல்லாத்துக்கும் கொடுப்பினை வேணும்...' என்று அடுத்த அம்பு.
உலகநாதன் எதையுமே காதில் போட்டுக்கொள்ள மாட்டார். 'அவனை மதிக்கலை, இவளை மதிக்கலை...' என்று அவளை மேலும் வறுத்தெடுப்பார்.
இருபத்தைந்து ஆண்டு போராட்டத்துக்குப் பின், பெண்ணுக்கும், பிள்ளைக்கும் நல்லபடியாகக் கல்யாணம் செய்து முடித்தாள். அதற்குள், எத்தனை மாற்றங்கள்... பெரியவர்கள் இறந்து, மற்றவர்கள் தனிக் குடித்தனம் துவங்கி, ரத்னா வேலையிலிருந்து விலகி... ஆனால், உலகநாதன் மட்டும் மாறவேயில்லை. அதே சிடுசிடுப்பு, எரிச்சல், கோபம்.
தன் குழந்தைகளின் பிறந்த நாள், அவருக்கு முக்கியமல்ல... அண்ணன் குழந்தைகள், அவர்களின் மனைவிமார் உறவுகளுக்கெல்லாம் வாழ்த்து சொல்வதும், பரிசு வழங்குவதும், அவர்களிடம் ரத்னாவைப் பற்றி இல்லாததை சொல்வதும் அவருக்கு கைவந்த கலை.
அதை கேட்டு, அவர்கள், இவளை இடித்துரைப்பதும், விசேஷங்களில் ஒதுக்கி வைப்பதும் வாடிக்கை.
அதைவிடக் கொடுமை, தன் குழந்தைகளின் திருமண விசேஷங்களில் கூட, அவளை ஒதுக்கி வைத்து, அண்ணன் குடும்பத்தினருக்கு முக்கியத்துவம் கொடுத்து அவர்களை மேடையில் ஏற்றியது தான் ரத்னாவிற்கு தாங்க முடியாத மன வருத்தத்தை தந்தது.
அழைப்பிதழ் அச்சடிப்பது, உறவுகளுக்குப் புது துணிகள் வாங்குவது, சத்திரம் பார்ப்பது, சாப்பாடு ஏற்பாடு, எல்லாமே அண்ணன் குடும்பத்தினருடன் தான்... துக்கம் பொங்க, மனதிற்குள் அழுதபடி, தன் குழந்தைகளின் கல்யாணத்தில் கலந்து கொண்டாள், ரத்னா.
பல்லைக் கடித்து, பொறுத்து, பெண்ணுக்கும், பிள்ளைக்கும் திருமணம் செய்து முடித்தவள், சரியான நேரத்திற்காக காத்திருந்தாள்.
வழக்கம்போல, ஆர்ப்பாட்டமாக வந்த உலகநாதன், 'ஏய்... ரெண்டு பேருக்கு இத்தனை பெரிய வீடு வேண்டாம்... வீட்டை விற்க ஏற்பாடு பண்ணிட்டேன்... சின்னதா ஒரு வீடு பார்த்து, பால் காய்ச்சி விட்டேன். இரண்டு நாளில் இந்த வீட்டை காலி பண்ணனும்... ரெடியா இரு...' என்றார்.
'எப்ப நடந்தது இதெல்லாம்?'
'எல்லாத்தையும் உன்கிட்ட சொல்லணும்ன்னு அவசியம் இல்ல...'
'எனக்குத் தெரிய வேண்டியது தெரிஞ்சு தான் ஆகணும்...'
'என்னடி, வாய் நீளுது?'


'ஆமாம்... ஒரு வார்த்தை சொல்லாமல், எல்லாத்தையுமே முடிச்சுட்டு வந்து சொன்னா என்ன அர்த்தம்?'
'இங்க பார், அப்படித்தான் செய்வேன்... இஷ்டமிருந்தா இரு... இல்லேன்னா தாராளமா வெளில போகலாம்...'
'ஓ... சரி, நான் போறேன்...'
'கிளம்புடி... பயமுறுத்துறியா?'
வெகு நாட்களாகவே மனதில் திட்டம் போட்டு வைத்திருந்தாள். உடனே, தன் தோழியை தொடர்பு கொண்டாள்.
ஒரு இல்லத்தின் பொறுப்பாளியாக வேலை செய்து வந்தாள் தோழி, விமலா. அது அவளின் சொந்த இல்லம் என்று கூட சொல்லலாம். ஏற்கனவே ரத்னாவின் கதையை அறிந்தவளாதலால், உடனே வரச் சொல்லி விட்டாள்.
ஒரு வேகத்தில், புடவை, துணிகள், முக்கியமான சில பேப்பர்களுடன் கிளம்பினாள், ரத்னா. ஏதோ பயமுறுத்துகிறாள் என்று நினைத்த உலகநாதன், அரண்டு போனார். ஆனாலும், வீம்பு விடவில்லை. போகட்டும் என்ற நினைப்பு.
'நான் கிளம்பறேன்... நாம நல்லபடியா பிரியணும்ன்னு நினைக்கிறேன்... நான் ஏதும் தப்பு பண்ணலை... அப்படி ஏதும் பண்ணியிருந்தா, உங்ககிட்ட மன்னிப்பு கேட்டுக்கிறேன்...'
'சரிதான் போடி... நீ இல்லேன்னா நான் செத்து போயிட மாட்டேன்...'
அன்று வீட்டை விட்டு இறங்கி, விமலா இல்லத்தில் தஞ்சம் புகுந்தவள். இன்று, அந்த இல்லத்தின் மற்றொரு நிர்வாகியாகி விட்டாள்.
பிள்ளையும், பெண்ணும் வந்து அழைத்தபோது, உறுதியாக மறுத்தாள்.
இதோ, இன்று, உலகநாதன் அவளை தேடி வந்திருக்கிறார்.
''ரத்னா... எனக்கு வயசாயிடுச்சு.''
''ஓ... அப்படியா!''


''என்னால தனியா இருக்க முடியல.''
''அது சரி... அண்ணன் குடும்பம் என்னாச்சு?''
''போனது போகட்டும், நீ வீட்டுக்கு வந்துடேன்.''
''எதற்கு?''
''உன் கையால சாப்பிட்டு எத்தனை நாளாச்சு...''
''என் சமையல் சகிக்க முடியாதே...''
''வேலைக்காரி கூட சரியா வர்றதில்ல... எல்லாமே நானே செய்ய வேண்டியிருக்கு.''
''ஓ... அதுதானா விஷயம்?''
''காய் வாங்க, மின் கட்டணம் கட்ட, கடைக்குப் போகன்னு எல்லாம் ஒண்டியா செய்ய வேண்டியிருக்கு.''
''ஓ...''
''அடிக்கடி உடம்பு சரியில்லாம போயிடுது; வயசாகலியா? நீ வந்துட்டா, எனக்கு ரொம்ப வசதியா இருக்கும்.''
''அப்படி வாங்க விஷயத்துக்கு... இப்பவும் உங்க வசதி தான் முக்கியம்... இல்லையா?''
''என்ன யோசிக்கற... இப்பவே கிளம்பலாம்... வீடு, குப்பையும், கூளமுமாக கிடக்கு... நீ வந்ததும் நிறைய வேலை இருக்கு.
''உனக்கு இன்னும் கோவம் தீரலை போலிருக்கு... நியாயம் தான். நீ மன்னிச்சுடுன்னு என்கிட்டே கெஞ்சினபோது, நான் உன்னை மன்னிச்சிருக்கலாம்... எனக்கும் வீம்பு தான். என்ன செய்யறது?''
ஒரு நிமிடம் அவரை உற்று பார்த்தாள், ரத்னா.


''ஆக... உங்களைக் கெஞ்சினது, நான் தான் தப்பு செய்தேன் என்பதால் தான், இல்லையா?''
''பின்ன, சொல்லாம, கொள்ளாம ஒரு குடும்பப் பொம்பள வெளில கிளம்பிப் போனா, என்ன அர்த்தம்?
''திடீர்னு இப்படி போட்டது போட்டபடி கிளம்பறோமே... அடுத்த வேளை சாப்பாட்டுக்கு நான் என்ன செய்வேன்னு கொஞ்சமாவது நினைச்சுப் பார்த்தியா நீ?''
''அதாவது, நான் போனது கூட பெரிசில்லை... உங்களை கவனிக்காம போனது தான் பெரிசு... இப்பவும் உங்க வசதியும், நிம்மதியும் தான் உங்களுக்கு முக்கியம்... இல்லையா? உங்க மனசுக்கு நான் இன்னும் நெருக்கமாக வரவில்லை...
''பரவாயில்லை... நான் மறுபடியும் உங்களுடன் வந்து வாழ்வதை மறந்து விடுங்கள். வேண்டுமானால், இந்த இல்லத்தில் உங்களுக்கு ஒரு இடம் தரேன்... அது கூட, பணம் கட்டி தான் சேர வேண்டும்... மாதா மாதம் பராமரிப்புத் தொகை செலுத்த வேண்டும்... உங்களுக்காக எந்த விதமான சிறப்பு சலுகையும் கிடையாது. இதற்கு சம்மதமானால், மேற்கொண்டு பேசலாம்.
''முக்கியமான விஷயம்... இனி, நான் இந்த இல்லத்தின் நிர்வாகியாகத் தான் உங்களிடம் பேசுவேன்... ரத்னாவாக அல்ல!
''யோசித்து, செங்கம்மாவிடம் சொல்லிடுங்க... அவள் ஏற்பாடு செய்வாள்... எனக்கு வேறு வேலை இருக்கு.''
கம்பீரமாக எழுந்து நடந்தாள், ரத்னா.
வினை விதைத்து, வினையை அறுவடை செய்ய வந்திருப்பதாக கருதி, மனம் வலிக்க, செய்வதறியாது, சிலையாக நின்றார், உலகநாதன்.

http://www.dinamalar.com/supplementary_detail.asp?id=44504&ncat=2

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாவம் உலகநாதன்.அண்ணன் குடும்பத்துக்காக எல்லாம் செய்தவர் தனக்காக ஒரு சின்ன வீடாவது வைத்து கொள்ள வேணும் என்று தோணவில்லை..... ம்.... விதி வலியது.....!  tw_blush:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • மக்களவைத் தேர்தல் 7 PM நிலவரம்: தமிழகத்தில் 72.09% வாக்குப்பதிவு - கள்ளக்குறிச்சி தொகுதியில் அதிக வாக்குகள் திருக்காட்டுப்பள்ளி அருகே சரக்கு வாகனத்தில் இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள விட்டலபுரம் வாக்குச்சாவடியில் வாக்களித்துவிட்டு ஊர் திரும்பிய லூர்துபுரம் கிராம மக்கள்.   சென்னை: தமிழகத்தின் 39 மக்களவைத் தொகுதிகளிலும் இரவு 7 மணி நிலவரப்படி 72.09% சதவீதம் வாக்குகள் பதிவாகின. அதிகபட்சமாக கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதியில் 75.64 சதவீத வாக்குகளும், பதிவாகின. மத்திய சென்னையில் குறைந்தபட்சமாக 67.37 சதவீத வாக்குகளும் பதிவாகின. சென்னையில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு கூறியது: “தமிழகத்தில் இரவு 7 மணி நிலவரப்படி 72.09% வாக்குகள் பதிவாகியுள்ளது. இன்னும் சில வாக்குச்சாவடிகளில் வாக்காளர்கள் வாக்களித்து வருகின்றனர். விளவங்கோடு இடைத்தேர்தல் நிலவரம் இன்னும் சிறிது நேரத்தில் வெளியிடப்படும். இந்த எண்ணிக்கை சதவீதத்தில், தபால் வாக்குகள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவில்லை. இந்த சதவீத எண்ணிக்கை வாக்குச்சாவடியில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை மட்டுமே.     கடந்த 2019 தேர்தலில் 7 மணி நிலவரப்படி கிட்டத்தட்ட 69 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகி இருந்தது. அத்துடன் இதை ஒப்பிடுகையில் இந்த வாக்கு சராசரி நன்றாகவே இருக்கிறது. பல இடங்களில் வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்த காரணத்தால், பிற்பகல் 3 மணி முதல் மாலை 6 மணி வரையிலான நேரத்தில் அதிகமானோர் வாக்களிக்க வந்துள்ளனர். 6 மணிக்குள் வந்த பலரும் ஆர்வத்துடன் டோக்கன் பெற்றுக்கொண்டு வாக்களிக்க காத்திருந்தனர். நாளை பகல் 12 மணிக்கு துல்லியமான வாக்குப்பதிவு சதவீதம் வெளியாகும்.   ADVERTISEMENT                                               முக்கியத் தகவல்: தேர்தல் ஆணையத்தில் இருந்து ஓர் அறிவுறுத்தல் வந்துள்ளது. அடுத்த கட்டமாக கேரளா, கர்நாடகம், ஆந்திரப் பிரதேசம் உள்ளிட்ட எல்லைப் பகுதிகளில் மட்டும் பாதுகாப்பு படையினர் சோதனை தொடரும். மற்ற இடங்களில் பாதுகாப்பு படையினரை திரும்ப பெற உள்ளோம்” என்று அவர் கூறினார். தமிழகத்தில் ஒரு சில இடங்களில் பிரச்சினைகள் ஏற்பட்டாலும், பெரிய அளவிலான அசாம்பவித சம்பவங்களின்றி வாக்குப்பதிவு நிறைவடைந்தது. மின்னணு வாக்குப் பதிவு இயந்திர கோளாறு காரணமாக வாக்குப்பதிவு சில இடங்களில் தாமதாக தொடங்கப்பட்டது; சில இடங்களில் வாக்காளர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் விடுபட்டுள்ளதாக குற்றம்சாட்டப்பட்டது போன்ற சின்னச் சின்ன சலசலப்புகள் மட்டுமே ஏற்பட்டது. ஒட்டுமொத்தமாக, தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு அமைதியாக நடந்து முடிந்துள்ளது. வாக்குச்சாவடிகளில் இருந்து வாக்கு எண்ணும் மையங்களுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்களை அனுப்பி வைக்கும் பணிகளில் தேர்தல் அலுவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர். தொகுதி வாரியான வாக்குப்பதிவு - இரவு 7 மணி நிலவரம்: கள்ளக்குறிச்சி - 75.67% தருமபுரி - 75.44% சிதம்பரம் - 74.87% பெரம்பலூர் - 74.46% நாமக்கல் - 74.29% கரூர்- 74.05% அரக்கோணம் - 73.92% ஆரணி - 73.77% சேலம்- 73.55% விழுப்புரம்- 73.49% திருவண்ணாமலை - 73.35% வேலூர் - 73.04% காஞ்சிபுரம் - 72.99% கிருஷ்ணகிரி - 72.96% கடலூர் - 72.40% விருதுநகர் -72.29% பொள்ளாச்சி -72.22% நாகப்பட்டினம் - 72.21% திருப்பூர் - 72.02% திருவள்ளூர் - 71.87% தேனி - 71.74% மயிலாடுதுறை - 71.45% ஈரோடு - 71.42% திண்டுக்கல் - 71.37% திருச்சி -71.20% கோவை - 71.17% நீலகிரி - 71.07% தென்காசி - 71.06% சிவகங்கை -71.05% ராமநாதபுரம் -71.05% தூத்துக்குடி - 70.93% திருநெல்வேலி - 70.46% கன்னியாகுமரி - 70.15% தஞ்சாவூர்- 69.82% ஸ்ரீபெரும்புதூர் - 69.79% வட சென்னை - 69.26% மதுரை - 68.98% தென் சென்னை -67.82% மத்திய சென்னை - 67.35% ஆளுநர் ரவி மகிழ்ச்சி: “ஜனநாயகத்தின் மிகப் பெரிய திருவிழா இது. இதில் நானும் பங்கெடுத்ததில் மகிழ்ச்சி” என்று சென்னையில் வாக்குச் செலுத்திய தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழில் பேசினார். | வாசிக்க > “ஜனநாயகப் பெருவிழா இது!” - சென்னையில் வாக்களித்த ஆளுநர் ஆர்.என்.ரவி மகிழ்ச்சி     சசிகலா நம்பிக்கை: "ஜூன் 4-ம் தேதி தேர்தல் முடிவுகள் வந்த பிறகு, எங்களுள் உள்ளவர்கள் திருந்துவதற்கு ஒரு வாய்ப்பு" என்று வாக்களித்த பிறகு வி.கே.சசிகலா நம்பிக்கை தெரிவித்துள்ளார். | வாசிக்க > “எங்களுள் உள்ளவர்கள் திருந்த ஒரு வாய்ப்பு” - வாக்களித்த பின்பு சசிகலா நம்பிக்கை தேர்தல் புறக்கணிப்புகள்: தமிழகத்தின் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் உள்ள ஏகனாபுரம் கிராமம், புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல், இறையூர் கிராமங்கள், ஓசூரின் கருக்கனஹள்ளி கிராமம், சிவகங்கை மாவட்டம் இளையாங்குடி அருகேயுள்ள சித்தூரணி என பல்வேறு கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். விரிவாக வாசிக்க > ஏகனாபுரம் முதல் வேங்கைவயல் வரை: தேர்தல் புறக்கணிப்பும் பின்புலமும்     சேலத்தில் இருவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு: சேலம் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட பழைய சூரமங்கலம் தனியார் பள்ளிக்கு மனைவியோடு வாக்களிக்க வந்த பழனிசாமி என்பவர் வரிசையில் நிற்கும் போது மயங்கி விழுந்து உயிரிழந்தார். இவர் ஏற்கனவே இருதய அறுவை சிகிச்சை செய்து தொடர் மருத்துவத்தில் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதேபோல சேலம் மாவட்டம் கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதிக்குட்பட்ட கெங்கவள்ளியில் வாக்களிக்க வந்த மூதாட்டி சின்ன பொண்ணு என்பவர் மயங்கி விழுந்து உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வாக்குப்பதிவு தொடங்கியவுடனேயே... - தென் சென்னை தொகுதிக்கு உட்பட்ட திருவான்மியூர் வாக்குச்சாவடியில் நடிகர் அஜித் முதல் நபராக வாக்களித்துச் சென்றார். வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பாகவே வரிசையில் காத்திருந்து வாக்குப்பதிவு செலுத்தினார். அதேபோல், சேலம் சிலுவம்பாளையத்தில் உள்ள வாக்குச்சாவடியில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி வாக்களித்தார். தனது குடும்பத்துடன் வந்து வாக்கை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அனைவரும் தவறாமல் தங்களது ஜனநாயகக் கடமையாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இதேபோல் காரைக்குடியில் கண்டனூரில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தனது வாக்கை செலுத்தினார். ப.சிதம்பரம் வாக்களித்துவிட்டு அளித்தப் பேட்டியில், “தமிழகம், புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் இண்டியா கூட்டணி அபார வெற்றி பெறும்” என்றார். மலையாளத்தில் வேட்பாளர் பட்டியல்: நீலகிரி மாவட்டத்தில் மக்களவைத் தொகுதி வேட்பாளர்களின் பெயர்கள் மலையாளத்திலும் அச்சடிக்கப்பட்டிருந்தது. நீலகிரி மாவட்டத்தில் உதகை, கூடலூர், குன்னூர் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளில் 20 சதவீதம் மலையாள மக்கள் வசிக்கின்றனர். இதனால், நீலகிரி மாவட்டத்தில் உள்ள 689 வாக்குச்சாவடிகளிலும் வேட்பாளர் பெயர் பட்டியில் தமிழ் மற்றும் மலையாளத்தில் அச்சடிக்கப்பட்டு, வாக்குச்சாவடிகளில் ஒட்டப்பட்டிருந்தது. தமிழகத்தில் மலையாளம் மக்கள் அதிகம் வசிக்கும் நீலகிரி மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் வேட்பாளர் பெயர் பட்டியல் மலையாளத்தில் அச்சடிக்கப்படுவது குறிப்பிடதக்கது. அரசியல் பிரபலங்கள் வாக்களிப்பு: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது மனைவி கிருத்திகாவுடன் சென்னை எஸ்ஐடி கல்லூரி வாக்குச்சாவடிக்கு வந்து வரிசையில் நின்று வாக்களித்தார். திருச்சியில் தில்லைநகர் மக்கள் மன்றம் வாக்குச்சாவடி மையத்தில் அமைச்சர் கே.என். நேரு வாக்களித்தார். தென்சென்னை தொகுதியில் சாலிகிராமத்தில் தனது வாக்கை பதிவு செய்தார் முன்னாள் ஆளுநரும், தென்சென்னை தொகுதியின் பாஜக வேட்பாளருமான தமிழிசை சவுந்தரராஜன். கோடம்பாக்கத்தில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார் ஸ்ரீபெரும்புதூர் தொகுதி திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலு. திருச்சியில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கை பதிவு செய்தார் பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஸ். தருமபுரி பாமக வேட்பாளர் சவுமியா அன்புமணி திண்டிவனத்தில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார். சென்னை நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடியில் தென்சென்னை திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் குடும்பத்துடன் வாக்கு செலுத்தினார். திருச்செந்தூர் அருகே உள்ள தண்டுபத்து கிராமத்தில் அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் குடும்பத்தினருடன் வாக்களித்தார். “கோவையில் ஒரு வாக்காளருக்காவது பாஜக சார்பில் வாக்குக்கு பணம் கொடுக்கப்பட்டது என நிரூபிக்கப்பட்டால் நான் அரசியலில் இருந்து விலகத் தயார். பண அரசியலுக்கு மக்கள் முடிவு கட்டும் தேர்தலாக இந்த தேர்தல் இருக்கும்” என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மனைவி துர்கா ஸ்டாலினுடன் சென்னை தேனாம்பேட்டை SIET கல்லூரியில் வாக்குச்சாவடிக்கு வந்து வரிசையில் நின்று வாக்களித்தார். பின்னர் செய்தியாளர்கள் கேள்விக்குப் பதிலளித்த முதல்வர் ஸ்டாலின், “நான் என்னுடைய வாக்குரிமைக்குரிய ஜனநாயக கடமையை ஆற்றியிருக்கிறேன். அதேபோல் வாக்குரிமை பெற்றிருக்கக்கூடிய அனைவரும் தங்களுடைய ஜனநாயக கடமையை ஆற்றிடவேண்டும். மறந்திடாமல், அதை புறக்கணித்திடாமல், தங்களது ஜனநாயக கடமையை ஆற்றிடவேண்டும் என்று உங்கள் மூலமாக நான் வேண்டுகோள் விடுக்கிறேன்.” என்றார். திமுகவுக்கான வெற்றி வாய்ப்பு குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்ப, “நீங்கள் நினைப்பது போல இந்தியாவுக்கு வெற்றிதான்” எனக் கூறிச் சென்றார். இந்தியாவின் எதிர்காலம் உங்கள் கையில்... - மேலும் முதல்வர் ஸ்டாலின் எக்ஸ் தளத்தில், “நாடு காக்கும் ஜனநாயகக் கடமையை ஆற்றினேன்!. அனைவரும் தவறாது வாக்களியுங்கள். குறிப்பாக, First time voters-ஆன இளைஞர்கள் ஆர்வத்தோடு வாக்களியுங்கள்! நம் இந்தியாவின் எதிர்காலம் உங்கள் கையில்... #Elections2024” என்று பதிவிட்டுள்ளார். வாக்குப்பதிவு நிலவரம்: முன்னதாக, காலை 9 மணி நிலவரப்படி தமிழகத்தில் 12.55 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் காலை 11 மணி நிலவரப்படி 24.37 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. தொடர்ந்து கள்ளுக்குறிச்சியில் வாக்குப்பதிவு அதிகமாகப் பதிவாகி வருகிறது. படம்:ஜெ.மனோகரன் வேங்கைவயலில் வாக்குச் செலுத்த யாரும் வரவில்லை: வேங்கைவயல் கிராமத்தில் இதுவரை பொதுமக்கள் யாரும் வாக்குச்செலுத்த வரவில்லை. ஏற்கனவே, அவர்கள் தேர்தல் புறக்கணிப்பு செய்யப்போவதாக அறிவித்து இருந்தனர். இந்நிலையில், தற்போது வரை பொதுமக்கள் யாரும் வாக்குச் செலுத்த வரவில்லை. ரஜினி வாக்களிக்கும் வாக்குச்சாவடியில் இயந்திர கோளாறு: சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டது. இந்த வாக்குச்சாவடியில் நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்டோர் வாக்களிக்க உள்ளனர். இயந்திர கோளாறு காரணமாக நடிகர் கவுதம் கார்த்திக் உட்பட பொதுமக்கள் சிறிது நேரம் வரிசையில் காத்திருந்தனர். பின்னர் சிறிது நேரத்தில் கோளாறு சரிசெய்யப்பட்டு வாக்குப்பதிவு தொடங்கியது. வேலூரில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு: வேலூர் காந்திநகர் பகுதியில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டதால், வாக்குப்பதிவு தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால் காலை 7 மணிக்கு முன்னதாகவே வாக்குப்பதிவு செய்ய வந்த பொதுமக்கள் வரிசையில் நீண்ட நேரமாக காத்துக்கிடக்கின்றனர். 7 கட்டங்களாக தேர்தல்: இந்தியாவின் 18-வது மக்களவை பொதுத் தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படுகிறது. இதில் முதல் கட்டமாக தமிழகம், புதுச்சேரியில் 40 தொகுதிகள் மற்றும் 19 மாநிலங்களில் 62 தொகுதிகள் என 102 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதுதவிர, தமிழகத்தில் விளவங்கோடு சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலும் இன்று நடைபெற்றது. தமிழகத்தில் 39 மக்களவை தொகுதி மற்றும் விளவங்கோடு சட்டப்பேரவை தொகுதியில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. மாலை 6 மணிக்கு முடிவடைந்தது. மாலை 6 மணிக்கு வாக்காளர்கள் அதிக அளவில் காத்திருந்த வாக்குச்சாவடிகளில் உள்ள வாக்காளர்களுக்கு டோக்கன் வழங்கி, அனைவரும் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர். களத்தில் 950 வேட்பாளர்கள்: தமிழகத்தை பொருத்தவரை 39 தொகுதிகளில் 874 ஆண்கள், 76 பெண்கள் என 950 வேட்பாளர்கள் மக்களவை தொகுதிகளில் களத்தில் உள்ளனர். இந்த தேர்தலில், தமிழகத்தில் மொத்தம் 6.23 கோடி பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். இந்த தேர்தலில், 10.92 லட்சம் முதல்முறை அதாவது 18-19 வயதுக்கு உட்பட்ட வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். இதுதவிர, பதிவு செய்ததன் அடிப்படையில் 85 வயதுக்கு மேற்பட்ட 6.14 லட்சம் வாக்காளர்கள், 4.61 லட்சம் மாற்றுத் திறன் வாக்காளர்களும் வாக்களிக்க தகுதி பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.hindutamil.in/news/tamilnadu/1233008-lok-sabha-elections-2024-phase-1-voting-live-updates-in-tamil-nadu.html
    • உங்கள் எடிட் ரீசனை பார்த்தேன், சிரித்தேன். வீடியோவ பார்க்காமல் இணைத்தால் இப்படித்தான். நாம் தமிழர் தம்பியின் காணொளியில் தூசணம் இல்லாவிட்டால்தான் அது செய்தி🤣. நீங்களும், பையனும், புலவரும் எழுதியவை 6 கண்களால் அதே தமிழ் நாட்டில், நேரடியாக சேகரிக்கப்பட்டது🤣
    • வ‌ள‌ந்து வ‌ரும் க‌ட்சி தொட‌ர்ந்து பாராள‌ம‌ன்ற‌ தேர்த‌லில்   ஆண்க‌ளுக்கு 20 / பெண்க‌ளுக்கு 20  ச‌ட்ட‌ம‌ன்ற‌ தேர்த‌லில் ஆண்க‌ளுக்கு 120 / பெண்க‌ளுக்கு 120 இதில் யார் ஒட்டை எப்ப‌டி பிரிப்ப‌து வெற்றிய‌ இல‌க்காக‌ ப‌ய‌ணிக்கும் க‌ட்சி புல‌வ‌ர் அண்ணா தேர்த‌ல் ஆணைய‌த்தின் கூத்துக‌ளை விப‌ர‌மாய் எழுதி இருக்கிறார் முடிந்தால் ப‌தில் அளியுங்கோ இந்த‌ தேர்த‌ல் விதிமுறை இந்த‌ முறை தான் பார்க்கிறேன் த‌மிழ் நாட்டில் ஒரே நேர‌த்தில் ம‌ற்ற‌ மானில‌ங்க‌ளில் பிரித்து பிரித்து வைப்ப‌து...................2019க‌ளிம் இந்த‌ விதிமுறை இருந்த‌ மாதிரி தெரிய‌ வில்லை................................ அண்ணாம‌லையின் ஆட்க‌ள் காசு கொடுக்க‌ போன‌ இட‌த்தில் பிடி ப‌ட்டு த‌லைய‌ காட்டாம‌ தெறிச்சு ஓடின‌வை காசுக‌ள் க‌ட்சி சின்ன‌ம் நோடிஸ் எல்லாம் கீழ‌ விழுந்து போய் கிட‌க்கு ஓம் யூன்4ம் திக‌தி பாப்போம்...............................
    • இப்படிக்கு இந்த தரவுகள் அனைத்தும்  தமிழ்நாட்டில் நேரடியாக இரு கண்களாலும் பார்த்து சேகரிக்கப்பட்டது. 🤣
    • நீங்கள் மீள மீள பொய்யை சொல்வதால் உண்மை ஆகாது. 1.தேசிய அல்லது குறைந்தது  மாநில கட்சி அந்தஸ்து இருந்தால் மட்டுமே நிரந்தர சின்னம். 2. மாநில கட்சி அந்தஸ்துக்கு ஒன்றில் 10% வாக்கு அல்லது 2% வாக்கும் இரு லோக்சபா சீட்டில் வெற்றியும் அடைந்திருக்க வேண்டும். 3. இது இரெண்டும் நாதக வுக்கு இல்லை. 4. மாநில கட்சி அந்தஸ்து இல்லாவிடின் - தேர்தல் அறிவிக்கப்பட்டு யார் முதலில் கோருகிறார்களோ அவர்களுக்கே சின்னம் கொடுக்கப்படும். 5. சீமான் அசட்டையாக தூங்கி கொண்டிருக்க ஏனையோர் (திமுக) தந்திரமாக சுயேட்சை மூலம் அந்த சின்னத்தை கோரி விட்டது. 6. வாசனுக்கு இப்படி யாரும் செய்யவில்லை. 7. திருமாவின் சின்னத்தையும், வைகோவின் சின்னத்தையும் இன்னொரு தக்க காரணம் சொல்லி மடக்கினாலும், திருமா போராடி வென்றார். வைகோ விட்டு விட்டார். 8. சீமானும் சுப்ரீம் கோர்ட் வரை போனார். முடியவில்லை. 9. தேர்தல் ஆணையம் களவு செய்கிறதெனில் சுப்ரீம் கோர்ட்டும் அதை ஆமோதித்ததா? உண்மையில் இதில் ஆணையத்தின் எந்த பாரபட்சமும் இல்லை, சீமானின் சோம்பேறித்தனத்தை பாவித்து திமுக சின்னத்தை சுயேட்சை மூலம் தந்திரமாக முடக்கி விட்டது. இதை பற்றி யாழில் பல்வேறு திரிகளில் பல பக்கம் எழுதியுள்ளேன். தங்களை அப்பக்கங்கள் நோக்கி பணிவுடன் திசை காட்டி அமைகிறேன்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
        • Like
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
        • Like
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.