Jump to content

வடக்கு மாகாண சபையின் 132 ஆவது அமர்வு


Recommended Posts

வடக்கு மாகாண சபையின் 132 ஆவது அமர்வு – live

 

வடக்கு மாகாண சபையின் 134ஆவது அமர்வு தற்போது நடைபெற்று வருகின்றது.

 
September 27, 2018 6:11 am
LIVE
Latest update 20 mins ago
 
 
 
12:34
 

யாழ்ப்பாண  மாவட்ட கூட்டுறவு கிராமிய திணைக்களத்தின் சீமெந்து விநியோகம்  தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ள அதிகாரி ஒருவரை நியமிப்பது என்ற தீர்மானம் எதிர்கட்சித் தலைவர் தவராசாவால்  இன்றையதினம் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது.

 
 
 
12:32
 

கூட்டுறவு திணைக்களத்தின் சீமெந்து விற்பனை ஊழல் தொடர்பாக விவாதிக்கப்பட்டது. 

சம்பந்தப்பட்ட அமைச்சர் ஊழலில் ஈடுபட்டனர் என்று கூறப்படும் அதிகாரிகளுக்கு எதிராகவும் இதுவரை நடவடிக்கை எடுத்துள்ளாரா என்று எதிர்கட்சி தலைவர் தவராசா கேள்வி எழுப்பினார்.

ஊழல் குற்றச்சாட்டுகளுடன் சம்பத்தப்பட்டவர்களை  காப்பாற்ற யாரோ முயற்சிப்பது போன்று உள்ளது என்று மாகாண சபை உறுப்பினர் பரஞ்சோதி தெரிவித்தார்.

 
 
 
11:46
இதுவரையில்...
 

சபை அமர் ஆரம்பமானது. முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் முக்கியமான நிகழ்வு ஒன்றுக்கு சென்றுவிட்டு, மருத்துவமனைக்கும் சென்று தாமதித்து வருவதாக அவைத்தலைவருக்கு அறிவிக்கப்பட்டது.

அமர்வில் மீண்டும் அமைச்சு விவகாரம் தொடர்பாக குழப்பம் ஏற்பட்டுள்ளது. 

நீதிமன்றம், ஆளுநர் செய்யவேண்டிய விடயங்களை மாகாணசபை விவாதிக்கமுடியாது என்று வடக்கு மாகாண கல்வி அமைச்சர் சர்வேஸ்வரன் கூறினார்.

இந்த விடயம் தொடர்பாக ஒரு மணித்தியாலம் காரசாரமான விவாதங்கள் இடம்பெற்றன. அமைச்சரவை தொடர்பாக சபையில் கடும் சொற்போர் இடம்பெற்றது.

வடக்கு மாகாண சபை உறுப்பினர்களான தவராசா, சிவாஜிலிங்கம் ,பரஞ்சோதி ,அஸ்மின் ஆகியோர் கடும் விவாத்தில் ஈடுபட்டனர்.

https://newuthayan.com/story/11/வடக்கு-மாகாணசபையின்-132-ஆவது-அமர்வு-சற்று-முன்னர்-ஆரம்பமானது.html

Link to comment
Share on other sites

வடக்கு மாகாண சபையின் 134ஆவது அமர்வு தற்போது நடைபெற்று வருகின்றது.

 
 
 

காற்றாலை விவகாரம் தொடர்பாக நீண்டநேரம் விவாதம் இடம்பெற்றது 

இதன்பொழுது அவைத் தலைவர் சி.வி.கே சிவஞானத்திற்கும்  ஐங்கரநேசனுக்கும் இடையில் கடும் தர்கம் ஏற்பட்டது
 
 வடக்கு மாகாண சபை உறுப்பினர் ஐங்கரநேசன் அவைத்தலைவரை பார்த்து நீங்கள் என்சார்ந்து என் அமைச்சு சார்ந்து திட்டமிட்டு செயற்படுகிறீர்கள் என்று கூறினார்.
 
 இதற்கு அவைத்தலவர் ஐங்கரநேசனை கடும் தொனியில் எச்சரித்ததுடன் இப்படிப்பட்ட பிரச்சினைகளுக்கு என்னால் இடம் அளிக்க முடியாது என்றார் 
 
இடைமறித்த வடக்கு மாகாண சபை உறுப்பினர்  சிவாஜிலிங்கம், இங்கு ஊழல் இடம்பெற்றால் எனிமேல் இது தொடர்பாக விவாதிக்கவேண்டாம்.  ஆளுநர் மூலமாக நிதி குற்றவியல் விசாரணைக்கு முறைப்பாடு செய்து உடனடி விசாரணையை மேற்கொள்ளவேண்டும் என்று கூறினார்.  

https://newuthayan.com/story/11/வடக்கு-மாகாணசபையின்-132-ஆவது-அமர்வு-சற்று-முன்னர்-ஆரம்பமானது.html

Link to comment
Share on other sites

 

 

 

 

1 hour ago, நவீனன் said:

வடக்கு மாகாண சபையின் 134ஆவது அமர்வு தற்போது நடைபெற்று வருகின்றது.

 
இடைமறித்த வடக்கு மாகாண சபை உறுப்பினர்  சிவாஜிலிங்கம், இங்கு ஊழல் இடம்பெற்றால் எனிமேல் இது தொடர்பாக விவாதிக்கவேண்டாம்.  ஆளுநர் மூலமாக நிதி குற்றவியல் விசாரணைக்கு முறைப்பாடு செய்து உடனடி விசாரணையை மேற்கொள்ளவேண்டும் என்று கூறினார்.  

ஆப்பத்தைப் பகிர்ந்து எடுக்க பூனைகள் குரங்கிடம் போன பாப்பாக் கதையைக்கூட சபை உறுப்பினர் சிவாயிலிங்கம் இன்னமும் படிக்கவில்லைப் போல் உள்ளது. Quellbild anzeigen

Link to comment
Share on other sites

வடக்கு மாகாண சபையில் அமைச்சர்கள் தொடர்பில் சர்சை:சி.வி.கே சிவஞானம் தலைமையில் கலந்துரையாடல்

 

(எம்.நியூட்டன்)

வடக்கு மாகாண சபையில் தொடர்ந்தும் சர்ச்சைகள் அமைச்சரவை விவகாரம் அதனைத் தீர்ப்பதற்காக எடுத்துக்கொள்ளப்பட்ட முயற்சிகள் மற்றும் பளையில் காற்றாலை அமைக்கப்பட்டதற்கான ஒப்பந்தங்கள் மற்றும் பலநோக்குகூட்டுறவுச்சங்கம் ஒன்றில் இடம்பெற்ற சீமெந்து விநியோகத்தில் எற்பட்ட பிரச்சினைகள் தொடர்பில் மாகாண சபை அமர்வில் பிரஸ்தாபிக்கப்பட்டிருந்தது. 

sivaganam.jpg

இத்தகைய சூழ்நிலையில் சபை அமர்வு சர்ச்சைகள் நிறைந்ததாகவும் வாதப் பிரதிவாதங்களுடனே இடம் பெற்றது.

வடக்கு மாகாண சபையின் 132 ஆவது அமர்வு கைதடியிலுள்ள பேரவைச் செயலகத்தில் அவைத்தலைவர் சி.வி.கே சிவஞானம் தலைமையில் இடம் பெற்றது.

இதன்போதே பல சர்ச்சைகள் இடம்பெற்றன.

குறிப்பாக வடக்கு மாகாண சபையின் அமைச்சரவையில் உள்ள அமைச்சர்களின் எண்ணிக்கை தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பதற்காக அவைத்தலைவர் தான் எடுத்து முயற்சிகள் தொடர்பில் தெரிவித்தார்.

குறிப்பாக அரசியல் அமைப்பு உறுப்புரையின் படி முதலமைச்சரின் ஆலோசனையின் பெயரில் ஆளுநர் அமைச்சர்களினால் நியமிக்கலாம். தற்போதைய சூழலில் நீதிமன்றக் கட்டளையின் பிரகாரம் டெனீஸ்வரன் தொடர்ந்தும் அமைச்சரவையில் இருக்கலாம் என்ற அதனால் அமைச்சரவையில் உள்ள அமைச்சர்களின் எண்ணிக்கை சீர் செய்யப்படவேண்டும் என்ற நீதிமன்றக் கட்டளை இன்னும் அமுல்படுத்தப்படவில்லை. 

இது தொடர்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் உள்ள நிலையில் 29.06.2018 க்குப் பின்னரான சூழலில் வடக்கு மாகாண சபையில் சட்டவலுவான அமைச்சர் சபை இல்லை என்பதை இங்கு வலியுறுத்துகின்றேன். 

இப்போதுள்ள அமைச்சரவையை ஏற்றுக்கொள்வதாயின் நீதிமன்றத்தின் உத்தரவை மீறுவதாக அமையலாம்.இந்த சபையோ அதிகாரிகளே அமைச்சின் செயலாளர்களே எவராவது இந்த உத்தரவு எமக்குவழங்கப்படவில்லை என்று கூறிக்கொண்டிருப்பது பின்னாளில் அது பிரச்சினை உருவாக்கும் என்பதை தெளிவுபடுத்திக் கூறுகின்றேன். 

நீதிமன்ற உத்தரவு என்பது வீடுவீடாகவோ கந்தோர் கந்தோராகவோ கதவு தட்டிச் சொல்லும் விடையம் அல்ல.

நீதிமன்ற உத்தரவு சட்டப்படியானது இது எல்லோரும் கவனத்தில் கொள்ளப்படவேண்டும். சரியான முறையான வழிநடத்தலை இந்தச் சபை செய்யவில்லை என்ற குற்றச்சாட்டை உருவாக்க விரும்பவில்லை. இதனை அனைவரும் கவனத்திற் கொள்ளவேண்டியது அனைவரின் கடப்பாடாகும்.

எதிர்க்கட்சித்தலைவர் தவராசா தெரிவிக்கையில்,

குறித்த விடையத்தை ஏற்கனவே நீங்கள் கூறியுள்ளீர்கள் ஆனால் இங்கு நடப்பது ஏதோவெல்லாம் நடக்கின்றது. இந்தக் குழப்பமான சூழலின் பின்னர் அமைச்சர்கள் என்று இருக்கிறவர்கள் யாராவது பிரேரணைகள் கொண்டு வந்தாலும் கூட நான் அதனை எதிர்த்திரக்கிறேன் யார் அமைச்சர்கள் எத்தனை அமைச்சர்கள் இருக்கிறார்கள் என்பதற்கு பதில் இல்லை. முதலமைச்சர் மற்றும் டெனீஸ்வரே அமை்சசர்களாக உள்ளனர். 

மற்றவர்கள் அமைச்சர்கள் என்று கூறி சம்பளம் நிகழ்வுகள் அறிக்கைகள் போன்வற்றை செய்து வருகின்றார்கள். மூன்று மாதமாக இவைதான் நடக்கின்றது.

இதற்கு ஒரு சரியான தீர்வு கிடைக்காமல் தொடர்ந்தும் கதைத்துக் கொண்டிருப்பது சரியானதா என கேள்வி எழுப்பியுள்ளார்.

http://www.virakesari.lk/article/41302

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முல்லைத்தீவில் புத்தாண்டை முன்னிட்டு இராணுவத்தின் மாபெரும் விளையாட்டு ! (புதியவன்) இலங்கை இராணுவத்தின் ஏற்பாட்டில் தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்டத்தில் மாபெரும் விளையாட்டு விழா முன்னாயத்த கலந்துரையாடல். மலர இருக்கும் 2024 ஆம் ஆண்டு தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்ட இலங்கை இராணுவத்தின் 59 வது படைப்பிரிவின் ஏற்பாட்டில் முள்ளியவளை பிரதேசம் மாமூலை டைமன் விளையாட்டுக் கழக மைதானத்தில் (07.04.2024) அன்று மாபெரும் விளையாட்டு நிகழ்வு நடைபெறவுள்ளது. அத்தோடு அன்றைய தினம் காலையில் மரதன் ஓட்டம், துவிச்சக்கரவண்டி ஓட்டம், ஏனைய மைதான விளையாட்டுக்கள், இரவு மாபெரும் இன்னிசை நிகழ்வும் இடம்பெறவுள்ளது. இதன் முன்னாயத்த கலந்துரையாடல் இன்றைய தினம் (28) மு.ப 10.00 மணியளவில் மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் முல்லைத்தீவு மாவட்ட 59 வது படைப்பிரிவின் கட்டளைத் தளபதி மேஜர்ஜென்ரல் பிரசன்ன விஜயசூரிய தலைமையில் நடைபெற்றது. இந்தக் கலந்துரையாடலில் பிரதம அதிதியாக மேலதிக மாவட்ட செயலாளர் திரு.எஸ்.குணபாலன் கலந்து சிறப்பித்தார். இந்த நிகழ்வில் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி ம.உமாமகள், முல்லைத்தீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி , வலயக்கல்வி பணிமனையின் அதிகாரிகள், கலாசார உத்தியோகத்தர், மாவட்ட மருத்துவர்கள் , முல்லைத்தீவு மாவட்ட இராணுவ அதிகாரிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.   https://newuthayan.com/article/புத்தாண்டை_முன்னிட்டு_இராணுவத்தின்_மாபெரும்_விளையாட்டு_கலந்துரையாடல்!  
    • மக்கள் தொகை முதன்முறையாக வீழ்ச்சி!   புதியவன் சுதந்திரத்துக்குப் பின்னரான வரலாற்றில் முதல் தடவையாக நாட்டின் சனத்தொகையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது என்று இலங்கை பதிவாளர் பணியக புள்ளி விவரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2023 ஜூன் 30ஆம் திகதியுடன் முடிவடைந்த ஓராண்டு காலப்பகுதியில் மக்கள் தொகையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது. இந்த மக்கள் தொகை ஒரு இலட்சத்து 44 ஆயிரத்து 395 ஆல் குறைவடைந்துள்ளது. கடும் பொருளாதார நெருக்கடி நிலைமைகளால் நாட்டை விட்டு வெளியேறுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.  அத்துடன், பிறப்பு வீதமும் குறைவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்தக் காரணிகளால் நாட்டின் மொத்த சனத்தொகை எண்ணிக்கையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது.(க) https://newuthayan.com/article/மக்கள்_தொகை_முதன்முறையாக_வீழ்ச்சி!
    • முதலிலேயே சொல்லிவிட்டார்தானே
    • நெடுக்காலபோவான், இவை நீங்களே எடுத்த படங்கள் என்று மட்டும் சொல்லிவிடாதீர்கள்.  கேடுகெட்ட சொறிலங்காவுக்குள் உங்களைப் போன்ற மானமுள்ள வீரப் புலம்பெயர்ந்த தமிழர் யாராவது கால் வைப்பார்களா ? நினைக்கவே கால் கூசுகிறது. 😂
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.