Jump to content

புதிய பக்கத்தைப் புரட்டியிருக்கும் மாலைதீவு


Recommended Posts

புதிய பக்கத்தைப் புரட்டியிருக்கும் மாலைதீவு

 

 
 

மாலைதீவில் கடந்த ஞாயிறன்று நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலின் இடைக்கால முடிவுகள் ஜனாதிபதி அப்துல்லா யாமீனுடனான நேரடிப் போட்டியில் கூட்டு எதிரணியின் வேட்பாளர் இப்ராஹிம் முஹமத் சோலீக்கு பெருவெற்றியைக் கொடுத்திருக்கின்றன. இறுதி முடிவுகள் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை தேர்தல் ஆணைக்குழுவினால் வெளியிடப்படும். நடைமுறைகளின் பிரகாரம் தற்போதைய அரசாங்கம் நவம்பர் 17 ஆம் திகதி ஆட்சிப் பொறுப்பைக் கையளிக்கும்.

 

maldives-election.jpg

ஆனால், மாலைதீவு மக்கள் மாற்றமொன்றை விரும்பியிருக்கிறார்கள் என்பதே உடனடியாகத் தெளிவாகத் தெரிகின்ற விடயமாகும்.வாக்காளர்களில் 58 சதவீதமானவர்கள் சோலீயை தெரிவுசெய்திருக்கிறார்கள்.அரசியல் சார்புகளுக்கு அப்பால் மாலைதீவு மக்கள் சகலரும் வெற்றிகரமாக தேர்தல் நடந்துமுடிந்திருப்பது குறித்து கொண்டாடவேண்டும்.

89.2 சதவீத வாக்காளர்கள் தேர்தலில் பங்கேற்றிருந்தமை தேர்தல் செயன்முறைகளின் நேர்மை குறித்து முன்னதாக நிலவிய அவநம்பிக்கையைப் பொய்யாக்கியிருக்கிறது.தேர்தலில் முன்னணி போட்டியாளர் என்று நோக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி முஹமத் நஷீட் " பயங்கரவாத குற்றவாளி " என்ற காரணத்தால் போட்டியிடமுடியாதவராக தகுதிநீக்கம் செய்யப்பட்டபோது எதிரணிக்கு ஒரு பின்னடைவு ஏற்பட்டது.இவ் வருடம் பெப்ரவரியில் சதிமுயற்சியொன்றில் ஈடுபட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டு முன்னாள் ஜனாதிபதி மௌமூன் அப்துல் கையூம் சிறையிலடைக்கப்பட்டிருக்கிறார்.

தேர்தலுக்கு முன்னதாக கூட தேர்தல் ஆணைக்குழு, நீதிமன்றங்கள் மற்றும் பாதுகாப்பு படைகளின் நடத்தைகள் தொடர்பில் ஐயுறவுகள் நிலவின.பிரதான எதிர்க்கட்சியான மாலைதீவு ஜனநாயக கட்சியின் தலைமைக்காரியாலயம் சோதனையிடப்பட்டது. சோலீ இந்தக் கட்சியையே சேர்ந்தவர். இறுதி நேரத்தில் வாக்குகள் எண்ணும் நடைமுறைகளிலும்  மாற்றம் செய்யப்பட்டதனால் ஞாயிற்றுக்கிழமைய வாக்களிப்பின்போது சில குழப்பங்கள் ஏற்பட்டன. இந்திய ஊடகவியலாளர்கள் உட்பட வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் பலருக்கு விசா மறுக்கப்பட்டது.

ஆனால், அதிர்ஷ்டவசமாக தேர்தலைப் பற்றிய பீதிகளை முடிவுகன் பொய்யாக்கிவிட்டன. தோல்வியை ஒப்புக்கொண்ட ஜனாதிபதி யாமீன், சோலியைச் சந்தித்ததையடுத்து சுமுகமான அதிகார மாற்றத்தை உறுதிசெய்வதாக சூளுரைத்திருக்கிறார்.

புதுடில்லியைப் பொறுத்தவரை, தேர்தல் முடிவுகள் பிரத்தியேகமாக மகிழ்ச்சிக்குரியவை. ஏனென்றால், பல வருடங்களாக பின்னோக்கிய திசையில் சென்றுகொண்டிருந்த மாலைதீவுடனான உறவுகளை திருத்தி மீளமைக்க இந்த தேர்தல் ஒரு சந்தர்ப்பத்தை இந்தியாவுக்கு வழங்கியிருக்கிறது. சீனாவுடன் யாமீன் கொண்டிருக்கும் நெருக்கமான புரிந்துணர்வின் விளைவாகவே மாலேக்கும் புதுடில்லிக்கும் இடையிலான உறவுகள் சீர்கேடடைந்தன என்று நம்பப்படுகிறது. சீனாவிடம் மாலைதீவு பெருமளவுக்கு கடன்களைப் பெற்றுள்ளது.

யாமீன் இவ்வருடம் பிரகடனம் செய்த அவசரகாலநிலையை இந்தியா கடுமையாகக் கண்டனம் செய்தது.அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் மாலைதீவில் பணிபுரியும் இந்தியர்களுக்கு விசாவைப் புதுப்பிக்க யாமீன் அரசாங்கம் மறுத்தது.இவர்களில் நூற்றுக்கணக்கானவர்கள் புதிய  அரசாங்கம் பதவியேற்றதும் இந்த விவகாரத்தில் மாற்றம் ஏற்படும் என்று காத்துக்கொண்டிருக்கிறார்கள்.

மாலைதீவில் நிலைகொண்டுள்ள இந்திய கரையோரக் காவல்படை மற்றும் விமானப்படையினரின் எதிர்கால நிலை குறித்து இந்தியா இப்போது பேச்சுவார்த்தைகளைப் புதுப்பிக்கமுடியும்.ஜூன் மாதத்துக்குப் பிறகு இவர்களின் விசா புதுப்பிக்கப்படாமல் இழுபறிநிலையில் இருக்கிறது.

ஜனாதிபதி தேர்தலின் இடைக்கால முடிவுகளை விரைந்து வரவேற்றிருக்கும் இந்தியா மாலைதீவு ஜனநாயக  கட்சியையும் துணை ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்பட்டிருக்கும் பைசால் நசீமின் ஜம்ஹூரி கட்சியையும் பாராட்டியிருக்கிறது. மாலைதீவுடனான விவகாரங்களில் முன்னோக்கிச் செல்லவேண்டுமானால், புதுடில்லி அந்த நாட்டின் உள் அரசியலில் கட்சிசார்பு நிலை எடுப்பதைத் தவிர்த்துக்கொள்ளவேண்டும்.பரந்த நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் நோக்குகையில் சீனாவுடன் கயிறிழுப்பில் ஈடுபடுவதை விடுத்து மாலைதீவின் ஸ்திரத்தன்மையிலும் அபிவிருத்தியிலும் இந்தியா பங்காளியாகவேண்டும்.

 

(The Hindu editorial on 25 September 2018 )

http://www.virakesari.lk/article/41252

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தினமுரசு ஒரு ஜனரஞ்சக பத்திரிகை என்பதில் சந்தேகமேயில்லை. அதில் அற்புதன் எழுதிவந்த துரையப்பா முதல் அற்புதன் வரை எனும் தொடர் பல நிகழ்வுகளை சொல்லி வந்தது. இதற்காகவே அந்த பத்திரிகையை வாங்கி தொடர் தொடராக வாசித்து வந்தேன். அவற்றையெல்லாம் கட்டி பத்திரமாக இன்றும் வைத்திருக்கின்றேன். கதையை வாசித்தவர்களுக்கு கொலையாளி யாரெனெ தெரிந்திருக்கும்.
    • தினமுரசு பத்திரிகையில் ஈழமக்கள் முன்னணியில் இருந்து தொடர்கதையாக எழுதி வந்த பத்திரிகையாளர் அற்புதன் எமது போராட்டம் எப்படி யார்யார் தொடங்கினார்கள்.                   எமது போராட்டம் பற்றிய உடனடி கள தகவல்களுடன் தினமுரசு பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது.துரோக கும்பலில் உள்ளவர்களால் எழுதப்பட்டாலும் ஒவ்வொரு கிழமை வெளிவந்த பத்திரிகையையும் வாங்கி வாசித்து பலருக்கும் வாசிக்க கொடுத்து சேர்த்து வைத்திருந்தேன்.                  பலரும் ஒவ்வொரு கிழமையும் எப்படா தினமுரசு வரும் என்று காவல் இருந்து வாங்கி வாசித்துக் கொண்டிருந்த காலத்தில் திடீரென பத்திரிகையாளர் அற்புதன் சுட்டுக் கொல்லப்பட்டார்.                அவரது கொலை அவர்களது இயக்கமான ஈபிடிபி யே காரணம் என எல்லோராலும் பேசப்பட்டது.டக்ளஸ் ஏற்கனவே அற்புதனை எச்சரிகை செய்தும் தொடர்ந்தும் பல உண்மைகளை எழுதியதால்த் டக்ளசால் கொல்லப்பட்டாக சொல்கிறார்கள்.                             அற்புதனின் தினமுரசு பத்திரிகையை வாசிக்காதவர்கள் எமது போராட்ட ஆரம்ப வரலாறு தெரியாதவர்கள் இந்த தொடரை பாருங்கள்.                 வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள்.   பாகம்1    
    • உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள். இப்ப ஜேர்மனியிலை எதுக்கெடுத்தாலும் தொட்டால் பட்டால் புட்டின் தான் குற்றவாளி.அந்த மாதிரி மக்களை மூளைச்சலவை செய்துகொண்டு போகின்றார்கள். இணக்க அரசியலுக்கு பெயர் போன ஜேர்மனி இப்படி ஆகிவிட்டது. உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள்.  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.