Jump to content

டக்ளஸின் பெயரைப் பயன்படுத்தி இந்தியக் கலைஞர்களுக்கு மிரட்டல்?


Recommended Posts

டக்ளஸின் பெயரைப் பயன்படுத்தி இந்தியக் கலைஞர்களுக்கு மிரட்டல்?

 

 

யாழ்ப்பாணத்தில் நடைபெறவிருந்த இசை நிகழ்ச்சிக்கு வரவிருந்த இந்திய இசைக் கலைஞர்கள் சிலர் தமக்கு நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தாவின் பெயரைப் பயன்படுத்தி மிரட்டல் விடப்பட்டது என்றும், தாம் அந்த இசை நிகழ்சிக்கு வரப் போவதில்லை என்றும் சமூக வலைத் தளங்களில் குறிப்பிட்டுள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் உள்ள நிகழ்வு ஏற்பாட்டாளர்கள் தமக்குத் தெரியப்படுத்தாது சில நடவடிக்கைகளை மேற்கொண்டனர் என்றும், நிகழ்வைப் பின்தள்ளி வைத்தனர் என்றும் தெரிவித்துள்ள இந்தியக் கலைஞர்கள், விமானப் பயணச் சீட்டுக்கான பணத்தையும் ஏற்பாட்டாளர்கள் தரவில்லை என்று குற்றஞ்சாட்டுகின்றனர்.

அவை தொடர்பில் கேட்டபோது ஏற்பாட்டாளர்கள் மிரட்டும் வகையில் உரையாடினர் என்றும், நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தாவின் பெயரைப் பயன்படுத்தி மிரட்டினர் என்றும் அந்த இந்தியக் கலைஞர்கள் முகநூலில் வெளியிட்டுள்ள காணாலியில் குறிப்பிட்டுள்ளனர்.

இது போன்ற காரணங்களால் தாம் இசை நிகழ்ச்சிக்கு வரப் போவதில்லை என்று முகநூலில் அவர்கள் வெளிட்டுள்ள காணாலிக் காட்சியில் குறிப்பிட்டுள்ளனர்.

 

 

 

https://newuthayan.com/story/13/டக்ளஸின்-பெயரைப்-பயன்படுத்தி-இந்தியக்-கலைஞர்களுக்கு-மிரட்டல்.html

Link to comment
Share on other sites

இந்தியக் கலைஞர்களை அச்சுறுத்தவில்லை – நிகழ்வு ஏற்பாட்டாளர்கள்!!

 

இந்தியக் கலைஞர்களுக்கு எவ்வித அச்சுறுத்தலும் விடுக்கவில்லை. இசை நிகழ்ச்சிக்கு வருவதாகத் தெரிவித்த பாடகி குறிப்பிட்ட திகதிக்கு வராதமையே குழப்பங்களுக்குக் காரணம் என்று இசை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

 

அது தொடர்பில் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கருத்துத் தெரிவித்தபோது அவ்வாறு அச்சுறுத்தல் விடுவிக்கப்படவில்லை என்று கூறியுள்ளனர்.

இசை நிகழ்வுக்கு வரவிருந்த பாடகி ஒருவர் வராததை அடுத்தே நிகழ்வு பிற்போடப்பட்டது. இசைக் கலைஞர்களால் பதிவு செய்யப்பட்டிருந்த விமானச் பணச் சீட்டில் இருந்த சிக்கல் காரணமாகவே பணம் வழங்குவதில் தடங்கல் நிலைமை காணப்படுகின்றது. அரசியல் வாதிகளின் பெயர்களைப் பயன்படுத்தி எந்த அச்சுறுத்தலும் விடுவிக்கப்படவில்லை என்று நிகழ்வு ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

https://newuthayan.com/story/15/இந்தியக்-கலைஞர்களை-அச்சுறுத்தவில்லை-நிகழ்வு-ஏற்பாட்டாளர்கள்.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உன்னிக்கிருஷ்ணனை டக்கிளஸ் நேரடியாகவே வெருட்டினவர் தானே. டக்கிளசின் கூலிகள் என்ன செய்யும். அதுவும் இளம் பெண் பாடகர்களை மிகக் கேவலமாக நடத்த முனைந்துள்ளனர். பாலியல் கூலி கேட்கப்பட்டதாவும் சமூக ஊடகங்களில் செய்திகள் உலாவுகின்றன.

டக்கிளஸ் கூட்டம்.. முழு ஈழத்தமிழினத்தையும் தலைகுனியச் செய்துள்ளது.. இதன் மூலம். 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.