Jump to content

``நாகேஷுக்கு மிளகு ரசம்னா உயிர்'' - சச்சு! #HBDNagesh


Recommended Posts

``நாகேஷுக்கு மிளகு ரசம்னா உயிர்'' - சச்சு! #HBDNagesh

 

வெடித்துச் சிரிக்க வைப்பார், கசிந்துருக வைப்பார், கண்கள் வலிக்க அழ வைப்பார், எழுந்து நடனம் ஆட வைப்பார்.... அவர்தான் நாகேஷ். தமிழ் சினிமாவில் மறக்க முடியாத, யாராலும் தொட முடியாத நடிப்புக்குச் சொந்தக்காரர். அவருடைய பிறந்ததினம் இன்று. அவருடன் நடித்த மிகப்பெரும் பாக்கியத்தைப் பெற்ற சச்சு பேசினார்

``நாகேஷ் சார், அவரைப் பற்றிய நல்ல நல்ல நினைவுகளை என்கிட்ட கொடுத்துட்டு போயிருக்கார். அவருடைய டைமிங் வாய்ப்பே இல்ல. ஒரு நடிகரா டைரக்டர் பேப்பர்ல காண்பிக்கிற டயலாக்கை மட்டும் பேசாமல், அந்த டயலாக்குக்கு உயிர் கொடுக்குறதுதான் நாகேஷ் சாருடைய பலமே. அவருடைய வேகம் யாருக்கும் வராது. பாடிலேங்குவேஜ், டயலாக் டெலிவரி மூலமா மக்களை ஈர்த்தது நாகேஷ் மட்டும்தான். 'காதலிக்க நேரமில்லை' படத்தில் அவர் அளவுக்கு இல்லைனாலும் ஓரளவுக்கு ஈடு கொடுத்து காமெடியா டயலாக் பேசிட்டு இருந்தேன். நான் பேச ஆரம்பிச்சதும், என் டயலாக்குக்கு கவுன்டர் கொடுத்துக் கிண்டல் பண்ணுவார். அப்போ நான் நடிக்கிறேங்கிறதை மறந்து சட்டுனு சிரிச்சிருக்கேன். இப்ப அதையெல்லாம் நினைச்சா ரொம்ப சந்தோஷமா இருக்கு. 

நாகேஷ் - சச்சு

 

 

அந்தப் படத்துக்குப் பிறகு, நாங்க ரெண்டு பேரும் நண்பர்களாகிட்டோம். அவர் ரொம்ப கெட்டிக்காரர். டைரக்டர் சொல்றதை மட்டும் செய்யாமல், அவருக்குத் தோணுற விஷயங்களையும் நடிக்கும்போது சேர்த்திடுவார். அதுவும் ஸ்பாட்ல தானே ஒரு கவுன்டர் கொடுக்கிறதோ, டயலாக் சொல்றதோ எல்லாம் அத்தனை சுலபமில்லை. தனக்குக் கொடுத்திருக்கிற கேரக்டருக்காக நிறைய  ஹோம் ஒர்க் பண்ணுவார். அதனால்தான் இறந்த பிறகும் நம்ம மனசுல தனித்துவமா நிற்கிறார்.

 
 

 

ஷூட்டிங் ஸ்பாட்டில் கலகலன்னு இருப்பார். எங்க ஃபேமிலியோட ரொம்ப நல்லாப் பழகுவார். அவருக்கு நான் வெஜ் பிடித்தம் கிடையாது. வெஜ்னா உயிர். அதுவும் எங்க அம்மா பண்ற 'மிளகு ரசம்'னா உயிரையே கொடுப்பார். அவருக்காக அடிக்கடி எங்கம்மா மிளகு ரசம் செய்து ஸ்பாட்டுக்குக் கொடுத்து அனுப்புவாங்க.

பார்க்கிறதுக்கு காமெடியனா தெரிவார். ஆனா இயல்புல ரொம்ப சீரியஸான மனிதர். இலக்கியத்து மேல அதிக ஈடுபாடு உண்டு. நிறைய புத்தகங்கள் வாசிப்பார். எழுத்தாளர் ஜெயகாந்தன் மீது அளவு கடந்த காதல் உண்டு'' என்று நாகேஷின் நினைவுகளைப் பகிர்ந்துகொள்கிறார் சச்சு.

https://www.vikatan.com/news/miscellaneous/138189-nagesh-loves-pepper-rasam-says-actress-sachu.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 3 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 31 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.