Jump to content

இலங்கை தலைவர்களை கொல்ல சதி செய்ததாக வழக்கு: இந்தியரை 3 மாதம் விசாரிக்க அனுமதி


Recommended Posts

இலங்கை தலைவர்களை கொல்ல சதி செய்ததாக வழக்கு: இந்தியரை 3 மாதம் விசாரிக்க அனுமதி

இலங்கை அரச தலைவர்களைக் கொலை செய்வதற்கான சூழ்ச்சி இருப்பதாக வெளியான தகவல் குறித்த விசாரணையின்போது கைது செய்யப்பட்ட இந்தியரை மூன்று மாதங்கள் வரை தடுத்து வைத்து விசாரிக்க இலங்கை பாதுகாப்பு அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது.

கைதான இந்தியருக்கு 3 மாதகால விசாரணை Image captionகைதான இந்தியர்.

கைது செய்யப்பட்ட இந்தியர், கொழும்பு கோட்டை நீதவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் இன்று வியாழக்கிழமை ஆஜர்படுத்தப்பட்டார். அவரை அக்டோபர் 23ஆம் தேதி மீண்டும் ஆஜர்படுத்துமாறு நீதவான் உத்தரவிட்டார்.

மனநல, உடல் ரீதியான நோய்கள் தொடர்பான மருத்துவப் பரிசோதனைக்கு அவரை முன்னிலைப்படுத்துமாறு நீதவான் உத்தரவிட்டார்.

அரச தலைவர்களை கொலை செய்வதற்கான சூழ்ச்சி இருப்பதாக வெளியிடப்பட்ட ஒலிப்பதிவில் பிரதி போலீஸ் மா அதிபர் நாலக்க டி சில்வா பேசியிருப்பதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இது குறித்து விசாரிக்க, போலீஸ் அதிகாரி நாலக்க டி சில்வாவை இரசாயனப் பகுப்பாய்வுத் திணைக்களத்தில் குரல் மாதிரியொன்றை வழங்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை நாலக்க டி சில்வாவிற்கும், இரசாயனப் பகுப்பாய்வுத் திணைக்கள அதிகாரிகளுக்கும் அறிவிக்குமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு நீதவான் அறிவித்தார்.

சிறிசேனபடத்தின் காப்புரிமைPMD

யார் இந்த இந்தியர்?

பெயர் மார்சிலி தாமஸ். இந்தியாவின் கேரளா, திருவனந்தாபுரம் என்ற முகவரியை கைதான இந்தியர் போலீசாருக்கு வழங்கியுள்ளார்.

இவர் 2017 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் சுற்றுலா விசாவில் இலங்கை வந்துள்ளார். இவரது சுற்றுலா விசா காலாவதியானதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து சரியான தகவல்கள் இல்லையென போலீஸ் பேச்சாளர் கூறினார்.

கைதான இந்தியர் குறித்து விசாரணை

இலங்கையின் ஜனாதிபதி, முன்னாள் ஜனாதிபதி உள்ளிட்ட தலைவர்களுக்கு இருக்கும் உயிர் அச்சுறுத்தல் தொடர்பான தகவல் தன்னிடம் இருப்பதாகக் கூறும் இந்தியர், இலங்கை போலீசாரால் தடுத்து வைக்கப்பட்டிருப்பது தொடர்பாக வெளியாகும் ஊடகச் செய்திகள் பற்றி தமக்கும் தகவல் கிடைத்துள்ளதாக கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் தெரிவித்தது.

இந்த விவகாரத்தை மிகவும் பாரதூரமானதாக கருதி, இலங்கை அதிகாரிகள் வழங்கிய குறைந்தபட்ச தகவல்களை அடிப்படையாகக் கொண்டு, சம்பந்தப்பட்ட நபரின் பின்னணி பற்றி விசாரணை நடத்துமாறு இந்திய அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளதாகவும், உயர் ஸ்தானிகராலயத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

கோத்தபயபடத்தின் காப்புரிமைPMD

கைது செய்யப்பட்டுள்ள இந்தியப் பிரஜை 2000ஆம் ஆண்டு முதல் மனநிலை பாதிக்கப்பட்டவர் என முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகவும் அந்த அதிகாரி குறிப்பிட்டார்.

இந்தத் தகவலை இலங்கை அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தியுள்ளதாகவும், அது சம்பந்தமாக முழு விசாரணையை நடத்த இந்திய உயர் ஸ்தானிகராலயம் உதவிகளையும், ஒத்துழைப்புக்களையும் வழங்கும் என்றும் அந்த அதிகாரி குறிப்பிட்டார்.

கைதான இந்தியர் குறித்த போலீஸ் செய்தி தொடர்பாளரின் கருத்து

''ஜனாதிபதி, முன்னாள் ஜனாதிபதி உள்ளிட்டவர்களை கொலை செய்ய சூழ்ச்சி நடப்பதாக வெளியான தகவல்கள் குறித்து விசாரித்து வருகிறோம்.

இந்த விசாரணைகளில் இந்தியர் ஒருவரும் கைதுசெயப்பட்டுள்ளார். இந்த நபர் 2017ஆம ஆண்டு ஜனவரி மாதம் இலங்கைக்கு வந்துள்ளார்.

இலங்கை
  •  

குற்றப் புலனாய்வுப் பிரிவினர் அவரை விசாரிக்கின்றனர். அவருக்கு எங்கிருந்து பணம் கிடைக்கிறது என்பதை அவர் தெளிவாக குறிப்பிடவில்லை.

இது குறித்து விரிவாக விசாரணை செய்ய வேண்டியுள்ளது. கொலை சதி தொடர்பில் எவ்வித முக்கியமான தகவல்களும் இந்தியப் பிரஜையிடமிருந்து இதுவரை கிடைக்கவில்லை.

நாமல் குமாரபடத்தின் காப்புரிமைLAHIRU HARSHANA Image captionநாமல் குமார

நாமல் குமார என்ற நபரே ஊடகங்களில் அரச தலைவர்களுக்கு அச்சுறுத்தல் இருப்பதாக தகவல் வெளியிட்டிருந்தார். இதனை அவதானித்துள்ள இந்தியப் பிரஜை, இதுகுறித்து கேட்கவே நாமல் குமாரவின் வீட்டிற்கு பலமுறை சென்றுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.'' என்றார் போலீஸ் பேச்சாளர்.

குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணை

கைது செய்யப்பட்டுள்ள இந்தியர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, அவரது குடும்ப உறுப்பினர்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம் என்று சந்தேகிக்கக் கூடிய பல தகவல்களை வெளியிட்டுள்ளதாக நீதிமன்றத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை தெரிவித்திருந்தனர்.

கைதுசெய்யப்பட்ட இந்தியரை மூன்று மாதம் தடுத்து வைத்து விசாரிக்க பாதுகாப்பு அமைச்சு அனுமதி வழங்கியுள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றத்தில் வியாழக்கிழமை அறிவித்தனர்.

https://www.bbc.com/tamil/sri-lanka-45669210

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கணேசமூர்த்தி அவர்களின் தற்கொலை முடிவிற்கு அவரது தனிப்பட்ட மற்றும் குடும்ப விவகாரமே காரணம் என்ற ஒரு தகவல் வெளி வந்திருக்கின்றது. இந்த விவகாரம் வெளியில் வரவே கூடாது என்று நினைத்திருந்திக்கின்றார் போல....😌   https://minnambalam.com/political-news/mdmk-ganesh-murthy-last-days-secret-report-to-the-chief-minister/  
    • 'அதிர்ஷ்ட லாபச் சீட்டு' என்ற தலைப்பில் இந்த வாரம் இங்கே களத்தில் ஒரு சுய ஆக்கம் எழுதியிருந்தேன். அமெரிக்காவில் இருக்கும் லொட்டோக்களைப் பற்றியே எழுதியிருந்தாலும், உலகம் முழுவதற்கும் இது பொருந்தும் என்று நினைக்கின்றேன். அதில் இருந்து ஒரு பகுதி: 'இங்கு தினமும் மாலை நேரங்களில் இந்த சீட்டுகளில் விற்கும் கடைகளின் வாசல்களில் அன்றாடம் தொழில் முடித்து வருவோர்கள் பலர் சீட்டுகளை வாங்கி சுரண்டிக் கொண்டிருப்பார்கள். முடிவில் அவர்களின் முகங்களில் ஒரு வேதனை தெரியும். அதிஷ்ட லாபச் சீட்டு விற்பனையால் வரும் வருமானத்தில் இருந்து அரசாங்கம் பல நற்பணிகளை செய்கின்றது என்போர் இந்த வேதனையை பார்க்கவேண்டும்.'................😌  
    • அற்புதனின் தொடரில் பல ஊகங்களும் இருந்தன,  உண்மைகளும் இருந்தன.  ஈழப்போராட்ட உண்மைகளை அறிய வேண்டுமானால் பக்க சார்பற்ற முறையில் வெளிவந்த  பல நூல்களையும் அந்த கால பத்திரிகை  செய்திகளையும்வாசிப்பதன் மூலமே அதனை அறிந்து கொள்ளலாம்.  உதாரணமாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் களப்பலியான முதல் பெண்போராளி ஈபிஆர்எல் ஐ சேர்ந்த சோபா என்பதை அண் மையில் தான் அறிந்தேன். அதுவரை மாலதி என்றே தவறான தகவலை நம்பியிருந்தேன்.  
    • ஹிந்திக் கார‌ன் த‌மிழ் நாட்டுக்கை வ‌ந்து ஹிந்தி க‌தைக்க‌ த‌மிழ் நாட்டுக் கார‌ன் ஹிந்தி தெரியாது என்று சொல்ல‌ நீ இந்திய‌னே இல்லை என்று சொல்லுறான் என்றால் வ‌ட‌ நாட்டு கோமாளிக‌ளுக்கு எவ‌ள‌வு தினா வெட்டு   ஏதோ ஹிந்தி உல‌க‌ம்  முழுதும் பேசும் மொழி மாதிரி ஹா ஹா..................மான‌த் த‌மிழ் பிள்ளைக‌ள் வீறு கொண்டு எழுந்தால் ஒரு சில‌ வார‌த்தில் த‌மிழை த‌விற‌ வேறு மொழிக்கு இட‌ம் இல்லை என்ற‌ நிலையை உருவாக்க‌லாம்................ஹிந்தி என்றால் அதை மிதி என்ற‌ கோவ‌ம் த‌மிழ‌ர்க‌ளின் ர‌த்த‌த்தோடு க‌ல‌ந்து இருக்க‌னும்................எழுத்து பிழை விட்டு என் தாய் மொழிய‌ நான் எழுதினாலும் என‌க்கு எல்லாமே த‌மிழ் தான்...............................
    • 👍... நீங்கள் சொல்வது உண்மையே. இவர்கள் எப்படித்தான் எங்களை இப்படித் துல்லியமாக அறிந்து வைத்திருக்கின்றார்களோ என்று ஒரு 'பயம்' கூட சில நேரங்களில் வருவதுண்டு.....😀
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.