Jump to content

இலங்கையில் அதிகரிக்கும் யானை-மனித மோதல்: அரசே கிராமங்களில் யானைகளை விடுகிறதா?


Recommended Posts

இலங்கையில் அதிகரிக்கும் யானை-மனித மோதல்: அரசே கிராமங்களில் யானைகளை விடுகிறதா?

மனிதர்களுக்கும் யானைகளுக்கும் இடையே அதிகரிக்கும் மோதல்

இலங்கையில் இவ்வருடத்தில் இதுவரை மட்டும் யானைகள் தாக்கி 75 பேர் கொல்லப்பட்டுள்ளதாக வனவிலங்குத்துறை அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்திருக்கிறார்.

அதேவேளை, 150 யானைகள் இதுவரை இறந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். யானை - மனித மோதல் இலங்கையில் தற்போது அதிகரித்துள்ளதாகத் தெரியவருகிறது.

யானை - மனித மோதலின்போது, பல்வேறு வழிகளில் யானைகள் கொல்லப்படுகின்றன. துப்பாக்கியால் சுடுதல், மின்சார தாக்குதல், உணவுப் பொருட்களுக்குள் வெடிகுண்டினை மறைத்து வைத்தல், நஞ்சூட்டப்பட்ட உணவை வைத்தல் மற்றும் பாரிய குழிகளுக்குள் விழ வைத்தல் போன்ற செயற்பாடுகள் மூலம், யானைகள் கொல்லப்படுவதாக, வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்டம் - வெல்லாவெளி காரியாலய பொறுப்பாளர் ஏ. அப்துல் ஹலீம் கூறினார்.

யானையொன்றினை சட்டவிரோதமாக கொல்வது இலங்கையில் தண்டனைக்குரிய குற்றமாகும். அவ்வாறான குற்றம் புரிகிறவர்களுக்கு 2 முதல் 5 ஆண்டுகள் வரையிலான சிறைத்தண்டனை அல்லது 1 லட்சம் முதல் 5 லட்சம் ரூபாய் வரையிலான தண்டம் ஆகிய இரண்டில் ஒன்றினை, அல்லது இரண்டினையும் நீதிமன்றம் விதிக்க முடியும்.

இலங்கையில் சுமார் 6 ஆயிரம் யானைகள் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில் மட்டக்களப்பு, அம்பாறை, பொலநறுவை, அனுராதபுரம் மற்றும் திருகோணமலை மாவட்டங்களில், யானை - மனித மோதல் அதிகம் காணப்படுகிறது.

மனிதர்களுக்கும் யானைகளுக்கும் இடையே அதிகரிக்கும் மோதல்

பொதுமக்களின் வீடுகள், பயிர்களுக்கு சேதங்களை விளைவிக்கும் யானைகள், சில சமயங்களில் மனிதர்களையும் தாக்கி கொன்று விடுகின்றன. இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அம்பாறை மாவட்டம் கோமாரி பகுதியில் 4 பிள்ளைகளின் தந்தையான இளையதம்பி நல்லையா என்பவர், யானை தாக்கியதால் உயிரிழந்தார்.

வயலில் காவல் புரிவதற்காகச் சென்றிருந்த போது, மறைந்து நின்ற யானை தாக்கியதில், சம்பவ இடத்திலேயே அவர் பலியானார்.

இவ்வாறு யானை தாக்கி உயிரிழப்பவர்களுக்கு இழப்பீடாக 5 லட்சம் ரூபாயினை அரசாங்கம் வழங்கி வருகிறது. மரணச் சடங்கினை மேற்கொள்ளும் செலவுகளுக்காக மேற்படி தொகையில் 50 ஆயிரம் ரூபாய் உடனடியாக வழங்கப்படுகிறது.

இதேபோன்று, யானைகளால் வீடுகள் சேதமாக்கப்படும் போது, பாதிக்கப்பட்டவருக்கு அதிகபட்சமாக 2 லட்சம் ரூபாயினை மாவட்ட செயலகம் ஊடாக, வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களம் வழங்குகிறது.

மறுபுறம், யானைகள் கொல்லப்படும் போது, அது தொடர்பில் போலீஸ் மற்றும் நீதிமன்றங்கள் மூலமாக வனவிலங்குத் திணைக்களம் நடவடிக்கை எடுக்கிறது. யானை ஒன்று கொல்லப்பட்டதாக சந்தேகம் எழும்போது, குறித்த யானையின் உடல், நீதிமன்ற உத்தரவுப்படி பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவது நடைமுறை.

இவ்வாறு உயிரிழக்கும் யானைகளின் உடல்களை அடக்கம் செய்யும் செலவுகளுக்கு, பிரதேச செயலகங்களுக்கு வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களம் 10 ஆயிரம் ரூபாய் வழங்குகிறது.

இதேவேளை, யானைகள் கிராமங்களுக்குள் நுழைவதைத் தடுக்கும் பொருட்டு, இதுவரை 4,500 கிலோமீட்டர் தூரத்துக்கு மின்சார வேலிகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் வனவிலங்குத் துறை அமைச்சர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

தனது வயலுக்குள் நுழைய முயற்சிக்கும் யானையொன்றினை தடுக்க முயற்சிக்கும் விவசாயி

மேலும், 2,500 கி.மீ. நீளமுள்ள மின்சார வேலி அமைக்கப்பட இருப்பதாகவும் அவர் கூறினார். மின்சார வேலிகளை அமைத்துப் பராமரிப்பதற்காக, 5 பில்லியன் ரூபாய் நிதி தேவைப்படுவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கிராமங்களுக்குள் அரசே யானைகளை விடுகிறதா?

இதேவேளை, தமது கிராமங்களுக்குள் யானைகளை அரசாங்கமே கொண்டு வந்து விடுவதாக, அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள கிராம மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

இது குறித்து, வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களத்தின் வெல்லாவெளி காரியாலய பொறுப்பதிகாரி ஹலீமிடம் கேட்டபோது; "அந்தக் குற்றச்சாட்டு தவறானது" என்றார்.

சம்மாந்துறையில் இறந்த நிலையில் காணப்பட்ட யானை

"சில பிரதேசங்களில் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும் சில யானைகளை நாம் அடையாளம் கண்டால், அவற்றைப்பிடித்து, அனுராதபுரம் - ஹொரவப்பொத்தானை பிரதேசத்தில் அவ்வாறான யானைகளை விடுவதற்கென அமைக்கப்பட்டுள்ள இடத்துக்குக் கொண்டு செல்வோம்.

இவ்வாறான யானைகளை இரவு வேளைகளில் வாகனங்களிலேயே கொண்டு செல்வது வழமையாகும். அதனைக் காணும் மக்கள், அவர்களின் கிராமங்களில் விடுவதற்காகவே யானைகளை நாம் கொண்டு வருவதாக நினைத்துக் கொள்கின்றனர். ஆனால், அதில் எவ்வித உண்மையும் இல்லை" எனக் கூறினார்.

"சிலவேளைகளில், ஒரு சரணாலயத்திலுள்ள யானைகளை, இன்னொரு சரணாலயத்தில் விடுவதற்காகவும் கொண்டுசெல்வோம். இதனைக் காணும்போதும், அவற்றை ஏதோவொரு கிராமத்துக்குள் நாங்கள் கொண்டு விடப்போகிறோம் என, சிலர் தவறாக புரிந்து கொள்ளக் கூடும்" என்று அவர் விவரித்தார்.

https://www.bbc.com/tamil/sri-lanka-45656285

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யானைகள் இயற்க்கை சமநிலைக்கு பேருதவி புரிவன அதன் பாதைகளில் கிராமங்களை அமைத்து குடியிருந்துகொண்டு யானை அடிக்குது என்று குளறுவதில் எந்த நியாயமும் கிடையாது . யானை உள்ளிடாமல் இருப்பதுக்கு வேலிகளில் தேன்கூடுகள் அமைப்பதே சிறந்த ஒரு மாற்று வழிமுறையாக இருக்கின்றது .

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இல்லை ச‌கோ வீர‌ப்ப‌னே உள்ள‌தை ஒத்து கொண்டார் தன‌க்கு கிடைச்ச‌ காசை த‌ன் ஊர் ம‌க்க‌ளுக்கே கொடுத்து விட்டேன் ஏதோ 9ல‌ச்ச‌ம் அப்ப‌டியா தான் நான் பார்த்த‌ காணொளியில் என் காதுக்கு கேட்ட‌து..............அந்த‌ ம‌னுஷ‌ன் கோடி கோடியா கொள்ளை அடிக்க‌வும் இல்லை சிறு தொகை கிடைச்சா கூட‌ அவ‌ரின் சொந்த‌ ஊர் ம‌க்க‌ளுக்கு அது போய் சேருமாம்.................. என்று......................அண்ண‌ன் சீமான் சொன்ன‌து போல் வீர‌ப்ப‌ன் கொள்ளைக் கார‌ன் என்றால் ஜெய‌ல‌லிதாவும் க‌ருணாநிதியும் திருடாத‌ நேர்மையாள‌ர்க‌ளா என்று ஜெய‌ல‌லிதாவின் ஆட்சி கால‌த்திலே வெளிப்ப‌டையாய் பேசின‌வ‌ர் 2012 அல்ல‌து 2013 இந்த‌ கால‌ப் ப‌குதியில்.................. என‌க்கு பெரும் ம‌கிழ்ச்சி வீர‌ப்ப‌ன் ம‌க‌ள அண்ண‌ன் சீமான் வேட்பாள‌ரா.........................
    • விவசாயியின் குளிர்சாதனப் பெட்டி .......!   😁
    • முஸ்லிம்களை இனவாத பேச்சு பேசியதால் அவர்களின் அரசியல் தலைவர்களின் செல்வாக்கு வேலை செய்துள்ளது  நம்ம அரசியல் தலிவர்கள் ஆளையாள் காலை பிடித்து இழுத்து விட்டுக்கொண்டு இருகின்றனர் சுமத்திரன் எனும் பெருச்சாளி இருக்கும் மட்டும் எமக்குள் இருந்து கொண்டு சிங்கள இனவாதி ரணிலின் மகுடிக்கு சுமத்திரன் எனும் கருநாகம் ஆட்டம் போடுது . இப்படி இருக்கையில் சிங்களத்தில் இருந்த குரங்கு கூட தமிழர்களை பார்த்து இனவாதம் கக்கும் .
    • அப்ப வருசக் கணக்கா தமிழர்களை.. தமிழர் வழிபாட்டிடங்களை திட்டித் தீர்த்து ஆக்கிரமிக்கத் தூண்டியதற்கு ஏன் தண்டனை இல்லை..??! அதுக்கும் தண்டனை வழங்கினால்.. ஆள் ஆயுள் காலம் பூரா உள்ள தான்.  அதே நிலையில்.. விமல்.. வீரசேகர..கம்பன்பில.. போன்ற வில்லங்கங்களுக்கு எதிராக ஏன் இன்னும் சட்ட நடவடிக்கை இல்லை. தமிழர்களை.. இந்துக்களை (சைவர்களை) திட்டினால்.. சமாளிச்சுக் கொண்டு போவது எழுதாத சட்டமோ. 
    • இது தான் சொறீலங்கா கடற்படை ஆக்கிரமிப்பில் இருக்கும்.. காங்கேசந்துறை நோக்கிய கடற்கரை. அண்ணர் ஆலாபனையோடு சொன்னது.  இது தான் கடலட்டை வாடிகளோடு அமைந்த.. அழுகி நாறும் பண்ணைக் கடற்கரை நோக்கிய தோற்றம். குத்தியரின் சீன ஏற்றுமதி வருவாய். அண்ணர் இதனை பற்றி மூச்சும் விடேல்ல.. ஆனால் பண்ணைக் கடற்கரை காதல் காட்சிகளை மட்டும் வர்ணிச்சிட்டு போயிட்டார். இது தான் கொழும்பின் தாமரைத் தடாகம் இரவுக் காட்சி. அண்ணர் சொன்ன மாதிரி தடாகம் ஒளிந்தாலும் சுற்றயல் ஒளிரவில்லை. இன்னும் பல பகுதி காலு வீதியில் இரவில் வீதி விளக்குகள் எரிவதில்லை.  அதே நேரம் யாழ்ப்பாண நெடுந்தூர பயணிகள் பேரூந்து தரிப்பிடத்திற்கு அருகில் உள்ள புல்லுக் குளத்தின் இரவுக் காட்சி. சுற்றயல் எங்கும் ஒளிரோ ஒளிரெண்டு ஒளிருது. யாழ் மணிக்கூட்டுக் கோபுரமும் தான். அண்ணர் அதை பற்றி மூச்.  ஆக அவை அவை பார்க்கிற பார்வையில தான் இங்கு களத்தில் இருந்தான காட்சிகளுக்கு ஆலாபனைகள் வருகின்றன. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.