Jump to content

மெடிட்டரேனியன் உணவுமுறை பற்றி உங்களுக்குத் தெரியுமா?


Recommended Posts

மெடிட்டரேனியன் உணவுமுறை பற்றி உங்களுக்குத் தெரியுமா?

மெடிட்டரேனியன் டயட்படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionவழக்கமான மெடிட்டரேனியன் டயட்டில், அதிகளவிலான காய்கறிகள், பழங்கள், பீன்ஸ், தானியங்கள் மற்றும் தானிய பொருட்கள் அடங்கியிருக்கும்

மெடிட்டரேனியன் டயட் (Mediterranean diet) உடல்நலத்திற்கு நல்லது என கேள்விப்பட்டிருப்பீர்கள். சமீபத்திய ஆய்வுகளின்படி, மனச்சோர்வை குறைக்க இந்த டயட் உதவும் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆனால், மெடிட்டரேனியன் டயட் என்றால் என்ன? அது எப்படி உங்களுக்கு உதவும் என்பது தெரியுமா?

மெடிட்டரேனியன் டயட் என்றால் என்ன?

வழக்கமான மெடிட்டரேனியன் டயட்டில், அதிகளவிலான காய்கறிகள், பழங்கள், பீன்ஸ், தானியங்கள் மற்றும் தானிய பொருட்கள் அடங்கியிருக்கும். உதாரணமாக முழு தானிய பிரட், பாஸ்தா, கைக்குத்தல் அரிசி ஆகியவற்றை கூறலாம்.

மிதமான அளவிலான மீன், வெள்ளை இறைச்சி மற்றும் சில பால் பொருட்களும் இதில் அடங்கும்.

மெடிட்டரேனியன் டயட்படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionமிதமான அளவிலான மீன், வெள்ளை இறைச்சி மற்றும் சில பால் பொருட்களும் இதில் அடங்கும்.

இந்த உணவு பொருட்கள் எல்லாம் ஒன்று சேர, உடல்நலனுக்கு இது நல்லது என்கிறார், பிரிட்டன் இதய அறக்கட்டளையின் மூத்த உணவு ஆலோசகரான விக்டோரியா டெய்லர்.

இந்த டயட் தரும் உடல்நலன்கள் என்னென்ன?

மெடிட்டரேனியன் டயட் உணவுமுறைபடி உணவு உட்கொள்வதால் இதய நோய்க்கு வழிவகுக்கும் சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், கொழுப்பு ஆகியவற்றின் அபாயத்தை குறைக்கலாம் என ஆய்வுகள் கூறுகின்றன.

மேலும், இந்த உணவுமுறையை பின்பற்றினால், நீண்ட ஆயுளுடன், உடல் எடை கூடாமல் இருக்கும் என்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இது எப்படி சாத்தியம்?

ஒரே ஒரு முழு உணவை விட, இப்படி பலவகையான உணவுகளை சேர்த்து சாப்பிடுவது ஆரோக்கியமானது என்கிறார் விக்டோரியா டெய்லர்.

ஆரோக்கியமான கொழுப்புகளை உட்கொள்வது ஒரு முக்கியமான விஷயம் என்றும் அவர் தெரிவிக்கிறார்.

மெடிட்டரேனியன் டயட்படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionஆரோக்கியமான கொழுப்புகளை உட்கொள்வது ஒரு முக்கியமான விஷயம்

ஆலிவ் எண்ணெய்க்கு பதிலாக வெண்ணெய் சேர்த்துக் கொள்ளலாம். வெண்ணெய் ஒற்றை நிறைசெறிவிலி கொழுப்பு (monounsaturated fat) வகையை சேரும். இது, கொழுப்பை கட்டுக்குள் வைக்க உதவும் என்கிறது அமெரிக்க மருத்துவ மேயோ கிளினிக்.

கொட்டைகள், விதைகள் மற்றும் எண்ணெய் மீன்களில் பல நிறைசெறிவிலி கொழுப்பு (polyunsaturated fats) இருக்கிறது.

மேலும் சில உணவு தேர்வுகளால் ஏற்படக்கூடிய பலன்களையும் மேயோ கிளினிக் விவரிக்கிறது:

  • உப்பு உட்கொள்வதை குறைத்துக் கொள்ள வேண்டும். உப்புக்கு பதிலாக மூலிகைகள் அல்லது மசாலா பொருட்களை பயன்படுத்தி ருசியை கொண்டு வரலாம்.
  • ஆட்டுக்கறி, பன்றிக்கறி, மாட்டுக்கறி போன்ற சிவப்பு இறைச்சிகள் உட்கொள்வதை குறைத்துக் கொள்ள வேண்டும்.
  • வாரத்திற்கு இருமுறையாவது மீன் மற்றும் கோழிக்கறி ஆகியவற்றை எடுத்துக்கொள்ள வேண்டும்.
  • மிதமான அளவு சிவப்பு வைன் குடிக்கலாம்
  • நல்ல உடற்பயிற்சி செய்வது அவசியம்.

இப்படியாக பல நாடுகளில் மெடிட்டரேனியன் டயட் பின்பற்றப்படுகிறது.

ஆரோக்கியமான கொழுப்புகளை உட்கொள்வது ஒரு முக்கியமான விஷயம்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

உதாரணமாக கிரேக்க நாட்டில், மிகக் குறைந்தளவிலான சிவப்பு இறைச்சியோடு, தினமும் சுமார் 9 முறை நல்ல காய்கறிப் பழங்களை மக்கள் உட்கொள்வர்.

மெடிட்டரேனியன் முறையில் எப்படி உணவு எடுத்துக் கொள்வது?

நீங்கள் உட்கொள்ளும் உணவுமுறையில் சில மாற்றங்களை கொண்டு வந்தால், இதன் முழு பயன்களை பெறலாம்.

"இறைச்சி உண்ணுவதை குறைத்துக் கொண்டு, அதிக மீன் மற்றும் சத்தான கொழுப்புகளோடு, நிறைய காய்கறிகள் மற்றும் பழங்கள் உட்கொண்டால் உங்கள் உடல் நலத்தில் நல்ல மாற்றத்தை நீங்கள் காணலாம்" என்று டெய்லர் குறிப்பிடுகிறார்.

ஆரோக்கியமான கொழுப்புகளை உட்கொள்வது ஒரு முக்கியமான விஷயம்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

தற்கால உணவுமுறையில் நாம் தவிர்க்க வேண்டியது கொழுப்பா அல்லது சர்க்கரையா என்ற விவாதம் வலுத்து வருகிறது.

ஒவ்வொரு உணவும், அதன் சத்துக்களும் உங்கள் உடலை எப்படி பாதிக்கிறது என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

மத்தியத் தரைக்கடல் பகுதியில் நீங்கள் வாழவில்லை என்றாலும் - கடலுக்கு அருகில், நல்ல சூரிய வெளிச்சத்தோடு, சுவையான உணவுகள் உங்களுக்கு நல்ல உடல் நலத்தை தரும் - மத்தியத் தரைக்கடலில் இல்லையென்றாலும், இந்த உணவுகளின் பயன்களை நீங்கள் பெறலாம்.

https://www.bbc.com/tamil/global-45668060

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.