Jump to content

தமி­ழர்­கள் நம்பி ஏமாந்த கடைசி சிங்­க­ளத் தலை­வர் மைத்­தி­ரியே – சிவா­ஜி­லிங்­கம் !!


Recommended Posts

தமி­ழர்­கள் நம்பி ஏமாந்த கடைசி சிங்­க­ளத் தலை­வர் மைத்­தி­ரியே – சிவா­ஜி­லிங்­கம் !!

 

 

தமிழ் பேசும் மக்­கள் நம்பி ஏமாந்த கடை­சிச் சிங்­க­ளத் தலை­வ­ராக மைத்­தி­ரி­பா­லவே இருப்­பார் என்­பதை வர­லாறு சுட்­டிக்காட்­டும்.

இவ்­வாறு வடக்கு மாகாண சபை உறுப்­பி­னர் எம்.கே.சிவா­ஜி­லிங் கம் தெரி­வித்­துள்­ளார்.

ஐக்­கிய நாடு­கள் சபை­யில் அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன ஆற்­றிய உரை தொட­ரில் அவர் அனுப்­பி­யுள்ள ஊடக அறிக்­கை­யி­லேயே அவர் இவ்­வாறு தெரி­வித்­தார்.
அதில் உள்­ள­தா­வது,

இலங்­கை­யில் வலிந்து காணா­மல் ஆக்­கப்­பட்­டோர் விவ­கா­ரம், பயங்­க­ர­வா­தத் தடைச் சட்­டத்தை நீக்­கு­தல் தொடர்­பாக மைத்­திரி தனது உரை­யில் மூச்­சுக் கூட விட­வில்லை.

அவர் தனது உரை­யில் புத்த பக­வா­னின் போதனை ஒன்­றைச் சுட்­டிக் காட்டி ஒரு­வ­ரின் உட­லில் ஒரு முள் பாய்ந்­தி­ருப்­பின் அத­னால் ஏற்­ப­டும் வேத­னை­யைப் போலவே அந்த முள் பாய்ந்­த­தால் வேதனை ஏற்­பட்­டது என்ற சிந்­த­னை­யும் ஞாப­க­மும் கூட வேத­னை­யை­யும் ஏற்­ப­டுத்­தும் எனக் குறிப்­பிட்­டி­ருந்­தார்.

தமிழ் மக்­க­ளின் பல்­லா­யி­ரக் கணக்­கான உயி­ரி­ழப்­புக்­கள் அவய இழப்­புக்­கள், உற­வு­களை இழந்­தமை, சொத்­துக்­களை இழந்­தமை பற்றி வேத­னை­ய­டைந்­தது மட்­டு­மல்­லா­மல், சிந்­த­னை­யும், ஞாப­க­மும் வேத­னை­ய­டைந்து தரும் என எமது மக்­க­ளின் வேத­னையை ஐக்­கிய நாடு­கள் சபை­யில் சுட்­டிக் காட்­டி­ய­மைக்கு தமிழ் மக்­க­ளின் சார்­பில் நன்றி கூறக் கட­மைப்­பட்­டுள்­ளேன்.

ஆனால் தமிழ் பேசும் மக்­கள் நம்பி ஏமாந்த கடை­சிச் சிங்­க­ளத் தலை­வ­ராக நீங்­கள் மட்­டுமே இருப்­பீர்­கள் என்­பதை வர­லாறு சுட்­டிக் காட்­டும் என நம்­பு­கின்­றேன்.

ஏனெ­னில் இலங்­கை­யில் இனி­மேல் போர் வேண்­டாம் என்று கூறி­யி­ருக்­கி­றார். போருக்­காக கார­ணி­யாக தமிழ்த் தேசிய இனப் பிரச்­சி­னைக்­கான ஆணி வேர் எது என்­பதை ஏற்­றுக் கொள்­ளா­மல் தேசிய நல்­லி­ணக்­கம் ஏற்­ப­டாது என்­பதை அரச தலை­வர் தெரிந்­து­கொள்ள வேண்­டும்.

பலஸ்­தீன மக்­க­ளின் பிரச்­சினை பற்­றிக் குறிப்­பிட்டு அந்த மக்­க­ளுக்கு இலங்­கை­யில் ஆத­ரவு என்­றும் உள்­ளது போல் தொட­ரும் என­வும் தெரி­வித்­தி­ருந்­தார். பலஸ்­தீன மக்­க­ளின் பிரச்­சி­னை­யைப் போலவே தமிழ் பேசும் மக்­க­ளின் பிரச்­சி­னை­க­ளும் உள்­ளதை ஏன் மறந்து போகி­றார் எனத் தெரி­ய­வில்லை.

வௌிநாட்­டுத் தலை­யீடு தேவை­யில்லை. எமது பிரச்­சி­னை­களை நாமே தீர்த்­துக் கொள்­வோம் என்று அரச தலைர் கூறி­யி­ருக்­கின்­றார். இந்த உரை நியூ­யோர் நக­ரில் இருந்து இலங்கை சிங்­கள மக்­க­ளுக்­கான, சிங்­கள வாக்­க­ளர்­க­ளுக்­கான உரை­யா­கவே பார்க்­கப்­பட முடி­யும்.

அப்­ப­டி­யென்­றால் தமிழ்த் தேசிய இனம் தனது தலை­வி­தி­யைத் தாமே தீர்­மா­னிக்க இடம்­கொ­டுக்க அரச தலை­வர் தயாரா?. எமது தலை­வி­தியை நாமே தீர்­மா­னிக்க ஐக்­கிய நாடு­கள் சபை­யின் ஆத­ரவை நாம் கோரு­வது தவ­றல்ல என்­பது அரச தலை­வர் உரை மூலம் நாம் உணர்ந்து கொள்­ளக் கூடி­ய­தாக உள்­ளது.

2015ஆம் ஆண்டு செப்­ரெம்­பர் மாத கூட்­டத் தொட­ரில் ஐக்­கிய நாட­கள் மனித உரி­மைப் பேர­வை­யில் போர்க் குற்­றங்­க­ளுக்­கா­க­வும், ஏனைய குற்­றங்­க­ளுக்­கு­மான விசா­ர­ணையை இலங்கை அரசே வௌிநாட்டு நீதி­பதி (பொது­ந­ல­வாய நாடு­க­ளின் நீதி­கள் உட்­பட) வழக்­குத் தொடு­நர்­கள், விசா­ணை­யா­ளர்­கள், வழக்­க­றி­ஞர்­கள் அடங்­கிய விசா­ர­ணையை நடத்­து­வ­தற்கு 30/1 தீர்­மா­னம் மூலம் ஏற்­றுக் கொண்­டி­ருந்­தது.

பின்­னர் அவற்­றைச் செயற்­ப­டுத்­த­மாட்­டோம் என அரச தலை­வர், தலைமை அமைச்­சர், மூத்த அமைச்­சர்­கள் பகி­ரங்­க­மாக இலங்­கைக்கு தெரி­வித்­தி­ருக்­கி­றார்­கள். அர­ச­த­லை­வ­ருக்கு துணிச்­சல் இருந்­தி­ருந்­தால் முது­கெ­லும்பு இருந்­தி­ருந்­தால் ஐக்­கிய நாடு­கள் பொதுச்­ச­பை­யில் உரை­யாற்­றி­ய­போது போர்க்­குற்­றங்­களை நாங்­கள் விசா­ரிக்­க­மாட்­டோம் என்று கூறி­யி­ருக்க வேண்­டும்.

இலங்­கை­யில் நடை­பெற்ற போர்க்­குற்­றங்­கள், இனப் படு­கொ­லை­கள், விசா­ர­ணை­களை ஐக்­கிய நாடு­கள் மனித உரி­மை­கள் சபை தமது வேண்­டு­கோளை ஐக்­கிய நாடு­கள் பொதுச்­சபை ஊடாக ஐக்­கிய நாடு­கள் பாது­காப்­புச் சபைக்கு அனுப்­பி­வைத்து பன்­னாட்டு குற்­ற­வி­யல் நீதி­மன்­றத்­துக்கு அல்­லது பன்­னாட்டு குற்­ற­வி­யல் தீர்ப்­பா­யத்­துக்கு (ict) பாரப்­ப­டுத்­த­பட வேண்­டும் எனக் கோரப்­பட வேண்­டும் என்­பதே பாதிக்­கப்­பட்ட தமிழ் பேசும் மக்­க­ளின் சார்­பில் எமது நிலைப்­பா­டா­கும்.

இலங்­கைக்­குள் அர­சி­யல் தீர்வு கிடைக்­காது என்­பதை சொல்­லா­மல் அரச தலை­வர் சொல்­லி­யுள்­ளார். அத­னால் தமிழ் பேசும் மக்­க­ளின் அர­சி­யல் அபி­லா­சை­கைளை நிறை­வேற்­று­வ­தற்­காக வடக்கு கிழக்­குப் பிராந்­தி­யத்­தில்­பொ­து­சன வாக்­கெ­டுப்பு ஒன்றை ஐக்­கிய நாடு­கள் சபை தமது மேற்­பார்­வை­யில் நடத்த வேண்­டும் எனக் கோரு­கின்­றோம். இந்த நிலைப்­பாட்­டின் நியா­யத் தன்­மையை பன்­னா­டு­கள் புரிந்து கொள்­ளும் என நம்­பு­கி­றோம். – என்­றுள்­ளது.

https://newuthayan.com/story/09/தமி­ழர்­கள்-நம்பி-ஏமாந்த-கடைசி-சிங்­க­ளத்-தலை­வர்-மைத்­தி­ரியே-சிவா­ஜி­லிங்­கம்.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வடிவா, விளக்கமா சொல்லுங்க....

கடைசியாகவா..... அல்லது.... மீண்டுமொருமுறையா....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்படியே ஈழத்தமிழர் நம்பி ஏமாந்த கடைசி தமிழ் அரசியல்வாதி யாரெண்ணும் சொல்லிடறது !!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முல்லைத்தீவில் புத்தாண்டை முன்னிட்டு இராணுவத்தின் மாபெரும் விளையாட்டு ! (புதியவன்) இலங்கை இராணுவத்தின் ஏற்பாட்டில் தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்டத்தில் மாபெரும் விளையாட்டு விழா முன்னாயத்த கலந்துரையாடல். மலர இருக்கும் 2024 ஆம் ஆண்டு தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்ட இலங்கை இராணுவத்தின் 59 வது படைப்பிரிவின் ஏற்பாட்டில் முள்ளியவளை பிரதேசம் மாமூலை டைமன் விளையாட்டுக் கழக மைதானத்தில் (07.04.2024) அன்று மாபெரும் விளையாட்டு நிகழ்வு நடைபெறவுள்ளது. அத்தோடு அன்றைய தினம் காலையில் மரதன் ஓட்டம், துவிச்சக்கரவண்டி ஓட்டம், ஏனைய மைதான விளையாட்டுக்கள், இரவு மாபெரும் இன்னிசை நிகழ்வும் இடம்பெறவுள்ளது. இதன் முன்னாயத்த கலந்துரையாடல் இன்றைய தினம் (28) மு.ப 10.00 மணியளவில் மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் முல்லைத்தீவு மாவட்ட 59 வது படைப்பிரிவின் கட்டளைத் தளபதி மேஜர்ஜென்ரல் பிரசன்ன விஜயசூரிய தலைமையில் நடைபெற்றது. இந்தக் கலந்துரையாடலில் பிரதம அதிதியாக மேலதிக மாவட்ட செயலாளர் திரு.எஸ்.குணபாலன் கலந்து சிறப்பித்தார். இந்த நிகழ்வில் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி ம.உமாமகள், முல்லைத்தீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி , வலயக்கல்வி பணிமனையின் அதிகாரிகள், கலாசார உத்தியோகத்தர், மாவட்ட மருத்துவர்கள் , முல்லைத்தீவு மாவட்ட இராணுவ அதிகாரிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.   https://newuthayan.com/article/புத்தாண்டை_முன்னிட்டு_இராணுவத்தின்_மாபெரும்_விளையாட்டு_கலந்துரையாடல்!  
    • மக்கள் தொகை முதன்முறையாக வீழ்ச்சி!   புதியவன் சுதந்திரத்துக்குப் பின்னரான வரலாற்றில் முதல் தடவையாக நாட்டின் சனத்தொகையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது என்று இலங்கை பதிவாளர் பணியக புள்ளி விவரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2023 ஜூன் 30ஆம் திகதியுடன் முடிவடைந்த ஓராண்டு காலப்பகுதியில் மக்கள் தொகையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது. இந்த மக்கள் தொகை ஒரு இலட்சத்து 44 ஆயிரத்து 395 ஆல் குறைவடைந்துள்ளது. கடும் பொருளாதார நெருக்கடி நிலைமைகளால் நாட்டை விட்டு வெளியேறுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.  அத்துடன், பிறப்பு வீதமும் குறைவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்தக் காரணிகளால் நாட்டின் மொத்த சனத்தொகை எண்ணிக்கையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது.(க) https://newuthayan.com/article/மக்கள்_தொகை_முதன்முறையாக_வீழ்ச்சி!
    • முதலிலேயே சொல்லிவிட்டார்தானே
    • நெடுக்காலபோவான், இவை நீங்களே எடுத்த படங்கள் என்று மட்டும் சொல்லிவிடாதீர்கள்.  கேடுகெட்ட சொறிலங்காவுக்குள் உங்களைப் போன்ற மானமுள்ள வீரப் புலம்பெயர்ந்த தமிழர் யாராவது கால் வைப்பார்களா ? நினைக்கவே கால் கூசுகிறது. 😂
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.