Jump to content

பதின்ம வயது திருமணங்கள் யாழ்ப்பாணத்தில் அதிகரிப்பு : மாவட்ட சமூக பாதுகாப்புக்குழு கூட்டத்தில் சுட்டிக்காட்டு


Recommended Posts

17000.jpg

யாழ்ப்பாண மாவட்டத்தில் பதின்ம வயது திருமணங்கள் மற்றும் இணைந்து குடும்பம் நடத்தும் தம் பதியரின் எண்ணிக்கை அதிகரி த்து வருகிறது. அதனைத் தடுக்க பதின்ம வயது தம்பதியர் அனைவருக்கும் எதிராக நீதிமன்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று யாழ்ப்பாண மாவட்ட பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ்ப்பாண மாவட்ட சமூகப் பாதுகாப்புக் குழுக் கூட்டம் மூத்த பொலிஸ் அத்தியட்சகர்தலைமையில் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் நேற்று நடைபெற்றது.

யாழ்.மாவட்டத்திலுள்ள சகல பிரதேச செயலக பிரிவுகளையும் சேர்ந்த சிறுவர் பாதுகாப்பு அலுவலர்கள், சிறுவர் நன்நடத்தை அலுவலர்கள், குடும்பநல உத்தியோக த்தர்கள், பெண்கள் அபிவிருத்தி உத்தியோக த்தர்கள் ஆகியோர் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர்.

இதன்போது பிரதேச செயலக ரீதியாக சிறுவர் மற்றும் பெண்கள் பாதுகாப்புத் தொடர்பில் கூட்டத்தில் பங்கேற்ற தரப்பினரால் எடுத்துரைக்கப்பட்டது.

யாழ்ப்பாண மாவட்டத்தில் 16 வயதுக்கு ட்பட்ட பெண் பிள்ளைகளும் 18 வயதுக்குட் பட்ட ஆண் பிள்ளைகளும் இணைந்து வாழ் கின்ற சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. அதற்கு சட்டத்தில் இடமில்லை. அத்துடன், பல்வேறு குடும்ப வன்முறைகளுக்கும் இந்தச் செயற்பாடு வழிவகுக்கின்றது என்று கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டது.

யாழ்.மாவட்டத்திலுள்ள பிரதேச செயலர் பிரிவுகள் அனைத்திலும் பதின்ம வயதுத் திருமணங்கள் மற்றும் இணைந்து வாழ்கின்ற சம்பவங்கள் தொடர்பில் முறைப்பாடுகள் உள்ளன. அவற்றைக் கட்டுப்படுத்துவதற்கு உரிய நடவடிக்கையை பொலிஸார் முன்னெ டுத்து வருகின்றனர்.

பதின்ம வயது திருமணங்கள் மற்றும் இணைந்து வாழ்கின்றவர்களுக்கு எதிராக நீதிமன்ற நடவடிக்கை எடுக்கப்படும். இருவரது பெற்றோர் இணக்கமாகச் சென்றாலும் குற்றமிழைத்த பதின்ம வயதினருக்கு எதி ராக நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொலி ஸார் உறுதியளித்தனர்.             

http://www.valampurii.lk/valampurii/content.php?id=17000&ctype=news

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பதின்ம வயதில் இணைந்து வாழ்வதற்கு வருமானம் உள்ள தொழில் ஏதாவது செய்கின்றார்களா அல்லது பெற்றோரில், உறவினர்களில் தங்கியுள்ளார்களா?

சொந்தக் காலில் நிற்கமுடியாமல் இணைந்து வாழ்வது நீண்டநாட்களுக்கு நிலைக்காது. சமூக மாற்றங்களுக்குத் தகுந்தமுறையில் தேவையான தகவல்களை இளையோருக்கு பாடசாலை மட்டத்திலேயே கொடுக்கவேண்டும். பொலிஸ் மூலம் தீர்க்கமுடியாது.

Link to comment
Share on other sites

1 hour ago, கிருபன் said:

பதின்ம வயதில் இணைந்து வாழ்வதற்கு வருமானம் உள்ள தொழில் ஏதாவது செய்கின்றார்களா அல்லது பெற்றோரில், உறவினர்களில் தங்கியுள்ளார்களா?

சொந்தக் காலில் நிற்கமுடியாமல் இணைந்து வாழ்வது நீண்டநாட்களுக்கு நிலைக்காது. சமூக மாற்றங்களுக்குத் தகுந்தமுறையில் தேவையான தகவல்களை இளையோருக்கு பாடசாலை மட்டத்திலேயே கொடுக்கவேண்டும். பொலிஸ் மூலம் தீர்க்கமுடியாது.

வெளிநாட்டு பணத்தில் வாழ்கிறார்கள்.

 

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, Jude said:

வெளிநாட்டு பணத்தில் வாழ்கிறார்கள்.

 

 

 

 

ஏன் நீங்கள் அவ்வாறானவர்களுக்கு பணம் அனுப்புகிறீர்களா?

Link to comment
Share on other sites

8 minutes ago, MEERA said:

ஏன் நீங்கள் அவ்வாறானவர்களுக்கு பணம் அனுப்புகிறீர்களா?

நான் மட்டும் தான் வெளிநாட்டில் இருக்கும் இலங்கையில் பிறந்தவரா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Jude said:

இலங்கையே எனது பணத்தில் தான் ஓடுது என்று நினைக்க கூடிய நிலையில் நீங்கள் இருக்கும் போது ... 

அப்படியும் நினைப்பு இருக்கிறதா உங்களிடம்,

Link to comment
Share on other sites

Just now, MEERA said:

அப்படியும் நினைப்பு இருக்கிறதா உங்களிடம்,

கனவேதும் கண்டு குழம்பிப்போய் இருக்கிறீர்களா? பில் கெட்சுக்கும் எனக்கும் வித்தியாசம் தெரியாதவராக இருக்கிறீர்களே?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Jude said:

கனவேதும் கண்டு குழம்பிப்போய் இருக்கிறீர்களா? பில் கெட்சுக்கும் எனக்கும் வித்தியாசம் தெரியாதவராக இருக்கிறீர்களே?

குழம்பியது தாங்கள், அதனால் தான் கருத்து திருத்தப்பட்டுள்ளது. அதுவும் நான் மேற்கோள் காட்டிய பிற்பாடு.

7 minutes ago, Jude said:

நான் மட்டும் தான் வெளிநாட்டில் இருக்கும் இலங்கையில் பிறந்தவரா?

ஏன் வெளிநாட்டிலிருக்கும் எல்லோரும் காசு அனுப்பிக் கொண்டிருக்கிறார்களா?

Link to comment
Share on other sites

1 minute ago, MEERA said:

குழம்பியது தாங்கள், அதனால் தான் கருத்து திருத்தப்பட்டுள்ளது. அதுவும் நான் மேற்கோள் காட்டிய பிற்பாடு.

குழப்பம் உங்கள் முதல் பதிலிலே தெரிகிறது, கடைசி பதிலில் தெளிவு பிறப்பது தெரிகிறது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Jude said:

குழப்பம் உங்கள் முதல் பதிலிலே தெரிகிறது, கடைசி பதிலில் தெளிவு பிறப்பது தெரிகிறது. 

நாய் காலை தூக்குவதற்கு போல, அங்கு நடக்கும் எல்லாவற்றிற்கும் புலம் பெயர் மக்களை குறை கூறுவதை முதலில் நிறுத்துங்கள். ஊகத்தில் ஒருபோதும் எழுதாதீர்கள்.

நாம் எப்போதும் தெளிவுடன், அது எனக்கும் தெரியும்.

இப்படியான சலாப்பல்கள் இனியும் வேண்டாம்

Link to comment
Share on other sites

4 minutes ago, MEERA said:

நாய் காலை தூக்குவதற்கு போல, அங்கு நடக்கும் எல்லாவற்றிற்கும் புலம் பெயர் மக்களை குறை கூறுவதை முதலில் நிறுத்துங்கள். ஊகத்தில் ஒருபோதும் எழுதாதீர்கள்.

எல்லாவற்றுக்கும் ஆதாரங்களை தேடி, புள்ளிவிபரங்களுடன் தான் கருத்து தெரிவிக்க வேண்டும் என்றால், அதற்கு தேவையான நிதியும் நேரமும் பல்கலைக்கழக ஆய்வாளருக்கும் அரச அதிகாரிகளுக்கும் கிடைக்கிறது - இங்கே கருத்து எழுதும் எங்களுக்கு அல்ல. இந்த கருத்துக்களம் எங்கள் கருத்து பற்றியது. அதில் ஊகங்களும் அடக்கம். பதின்ம வயதினர் வருமானம் இல்லாமல் திருமணம் செய்து அங்கே வாழ்கிறார்கள். நாட்டின் பிரதமர் சொல்கிறார் பில்லியன் கணக்கில் எமது மக்கள் வெளிநாட்டு பணம் அங்கே அனுப்புகிறார்கள் என்று. ஆகவே இந்த பணத்தில் அந்த பதின்ம வயதினர் வாழ்கிறார்கள் என்று ஊகிப்பதில் தவறு இருப்பதாக தெரியவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Jude said:

எல்லாவற்றுக்கும் ஆதாரங்களை தேடி, புள்ளிவிபரங்களுடன் தான் கருத்து தெரிவிக்க வேண்டும் என்றால், அதற்கு தேவையான நிதியும் நேரமும் பல்கலைக்கழக ஆய்வாளருக்கும் அரச அதிகாரிகளுக்கும் கிடைக்கிறது - இங்கே கருத்து எழுதும் எங்களுக்கு அல்ல. இந்த கருத்துக்களம் எங்கள் கருத்து பற்றியது. அதில் ஊகங்களும் அடக்கம். பதின்ம வயதினர் வருமானம் இல்லாமல் திருமணம் செய்து அங்கே வாழ்கிறார்கள். நாட்டின் பிரதமர் சொல்கிறார் பில்லியன் கணக்கில் எமது மக்கள் வெளிநாட்டு பணம் அங்கே அனுப்புகிறார்கள் என்று. ஆகவே இந்த பணத்தில் அந்த பதின்ம வயதினர் வாழ்கிறார்கள் என்று ஊகிப்பதில் தவறு இருப்பதாக தெரியவில்லை.

காகம் கறுப்பு ஆகவே கறுப்பு எல்லாம் காகம் என்பதாக உங்கள் வாதம் உள்ளது,

பதின்ம வயதிற்காரருக்கு பணம் அனுப்புவதற்கும் இணைந்து வாழும் பதின்ம வயதினருக்கு பணம் அனுப்புவதற்கும் இடையே நிறைய வித்தியாசம் உள்ளது.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

பதின்ம வயதில் இணைந்து வாழ்வதற்கு வருமானம் உள்ள தொழில் ஏதாவது செய்கின்றார்களா அல்லது பெற்றோரில், உறவினர்களில் தங்கியுள்ளார்களா?

சொந்தக் காலில் நிற்கமுடியாமல் இணைந்து வாழ்வது நீண்டநாட்களுக்கு நிலைக்காது. சமூக மாற்றங்களுக்குத் தகுந்தமுறையில் தேவையான தகவல்களை இளையோருக்கு பாடசாலை மட்டத்திலேயே கொடுக்கவேண்டும். பொலிஸ் மூலம் தீர்க்கமுடியாது.

 

31 minutes ago, Jude said:

வெளிநாட்டு பணத்தில் வாழ்கிறார்கள்.

 

 

 

 

நானும் இதுபோன்ற ஒரு மனநிலையில்தான் இருந்தேன் சென்றமாதம் ஊருக்கு போகும்வரை....!அங்கு போனபிறகுதான் அங்குள்ள மாற்றங்களை ஓரளவு தெரிந்துகொள்ள முடிந்தது......!

பெரும்பாலும் நடுத்தரவர்கத்தில் பதின்மவயதுப்பிள்ளைகள் சராசரி 30, 000 ரூபாவுக்கு மேல் சம்பாதிக்கிறார்கள். ஒரு பெண்பிள்ளை அல்லது பையன்  பெற்றோர் மூலமாகவோ அன்றி சகோதரங்கள் மூலமாகவோ வங்கிக் கடனில் தான் விரும்பியவாறு இரண்டரை லட்ஷத்துக்கு ஒரு ஸ்கூட்டியோ அல்லது மோட்டார் சைக்கிளோ வாங்கி அதன் கடனை தனது சம்பாத்தியத்தில் கட்டுகிறார்கள்.முன்பு எனக்கு  ஒரு பழைய சைக்கிள் சொந்தமாக வாங்குவதே ஒரு கனவாக இருந்தது. ஆனால் இன்று நான்போன வீடெங்கும் (வீடுகள் சுமாராய்தான் இருக்கு) டூ வீலர்சும் / ஆட்டொவும்  முற்றத்தில் நிக்கிறது. ஆனால் எமது ( என்போன்ற முன்பு புலம் பெயர்ந்தவர்கள்) சகோதர சகோதரிகள் எங்களை இன்றும் அந்நாளைய மயக்கத்திலேயே வைத்திருக்கின்றார்கள். ஆனால் அவர்களின் பிள்ளைகள் வளர்ந்து நன்றாக சம்பாதிக்கிறவர்களாய் இருக்கிறார்கள். வெளியில் இருந்து வரும் பணம் பெரும்பாலும் அவர்களுக்கு ஒரு நன்கொடை மாதிரி. 

--- தெரிந்த ஆட்டொவில் அருகில் உள்ள இடத்துக்கு சென்றால் 200 ரூபாய் எடுக்கிறார்கள். தெரியாத வழியில் போன ஆடிடோவை மறித்து அதே இடத்துக்கு போனால் 150 ரூபாய் எடுக்கிறார்கள்....!

--- வீட்டுக்கு நவீன பாத்ரூம் கட்டுவது , தரைக்கு சலவைக்கல் பொருத்துவது போன்ற செலவினங்களுக்கு ......

--- வீடுகளில் நிகழும் விழாக்கள் போன்ற செலவுகளுக்கு வெளிநாட்டு பணம் அவர்களுக்கு தேவையாய் உள்ளது.....!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பில்லியன் கணக்கில் பணம் செல்கிறது ஆகவே அங்கு பொருளாதாரத்தில் துன்பப்படும் மக்கள் இல்லை என்றும் கூறலாம் அல்லவா?

Link to comment
Share on other sites

1 minute ago, MEERA said:

பதின்ம வயதிற்காரருக்கு பணம் அனுப்புவதற்கும் இணைந்து வாழும் பதின்ம வயதினருக்கு பணம் அனுப்புவதற்கும் இடையே நிறைய வித்தியாசம் உள்ளது.

 

அப்படியா? குறைந்தது ஐந்து வித்தியாசங்களையாவது சொல்லுங்கள் பார்க்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Jude said:

அப்படியா? குறைந்தது ஐந்து வித்தியாசங்களையாவது சொல்லுங்கள் பார்க்கலாம்.

உங்கள் அறிவு அவ்வளவே..... நன்றி வணக்கம்.

சுவியர் எழுதியதை ஆயிரம் தடவைகள் வாசியுங்கள் ! 

Link to comment
Share on other sites

3 minutes ago, MEERA said:

பில்லியன் கணக்கில் பணம் செல்கிறது ஆகவே அங்கு பொருளாதாரத்தில் துன்பப்படும் மக்கள் இல்லை என்றும் கூறலாம் அல்லவா?

இது நியாயமான வாதம். இப்படி சொல்வது தவறு தான்.

8 minutes ago, MEERA said:

பதின்ம வயதிற்காரருக்கு பணம் அனுப்புவதற்கும் இணைந்து வாழும் பதின்ம வயதினருக்கு பணம் அனுப்புவதற்கும் இடையே நிறைய வித்தியாசம் உள்ளது.

நீங்கள் "நிறைய வித்தியாசம் உள்ளது" என்றீர்கள்.

4 minutes ago, Jude said:

அப்படியா? குறைந்தது ஐந்து வித்தியாசங்களையாவது சொல்லுங்கள் பார்க்கலாம்.

நான் வெறும் ஐந்து கேட்டேன்.

2 minutes ago, MEERA said:

உங்கள் அறிவு அவ்வளவே..... நன்றி வணக்கம்.

உடனேயே என்னுடைய அறிவை மட்டம் தட்டிவிட்டு ஓடப் பர்க்கிறேர்களே? நியாயமா? வெறும் ஐந்து தானே கேட்டேன்? ?

Link to comment
Share on other sites

22 minutes ago, suvy said:

 

நானும் இதுபோன்ற ஒரு மனநிலையில்தான் இருந்தேன் சென்றமாதம் ஊருக்கு போகும்வரை....!அங்கு போனபிறகுதான் அங்குள்ள மாற்றங்களை ஓரளவு தெரிந்துகொள்ள முடிந்தது......!

பெரும்பாலும் நடுத்தரவர்கத்தில் பதின்மவயதுப்பிள்ளைகள் சராசரி 30, 000 ரூபாவுக்கு மேல் சம்பாதிக்கிறார்கள்.

நானும் ஆண்டுக்கு இருமுறை அண்மையில் போய் வந்து இருக்கிறேன். நீங்கள் குறிப்பிடும் வருமானம் உள்ளவர்கள் பதின்ம வயதினர் என்று எப்படி தெரியும்? - இருபது வயதுக்கு மேலானவர்கள் இல்லையா?. பதின்ம வயதினர் இந்த அளவுக்கு உழைத்து வாழும் அளவுக்கு வேலை வாய்ப்ப்புகள் அங்கு குறைவு என்றே நினைக்கிறேன்.. கணனித்துறை மற்றும் வணிக நிறுவனங்களுக்கு வேலை செய்து நன்கு உழைப்பவர்கள் இருக்கிறார்கள், ஆனால் பெரும்பாலும் இருபது வயதுக்கு மேற்பட்டவர்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Jude said:

நானும் ஆண்டுக்கு இருமுறை அண்மையில் போய் வந்து இருக்கிறேன். நீங்கள் குறிப்பிடும் வருமானம் உள்ளவர்கள் பதின்ம வயதினர் என்று எப்படி தெரியும்? - இருபது வயதுக்கு மேலானவர்கள் இல்லையா?. பதின்ம வயதினர் இந்த அளவுக்கு உழைத்து வாழும் அளவுக்கு வேலை வாய்ப்ப்புகள் அங்கு குறைவு என்றே நினைக்கிறேன்.. கணனித்துறை மற்றும் வணிக நிறுவனங்களுக்கு வேலை செய்து நன்கு உழைப்பவர்கள் இருக்கிறார்கள், ஆனால் பெரும்பாலும் இருபது வயதுக்கு மேற்பட்டவர்கள்.

 

நானும் ஒரு பதினெட்டு வயதுக்கு மேற்பட்டவர்களைதான் சொல்கிறேன்.  நான் நின்றது ஒருமாதமளவில்....... பெரும்பாலும் எனது உறவினர்கள் அயலவர்களை வைத்துதான் சொல்கிறேன்.பல்கலைக்கழகங்களில் படிப்பவர்களை நான் சொல்லவில்லை. நீங்கள் குறிப்பிடும் துறையினர் சராசரி 40,000 க்கும் மேற்பட்ட வருமானம் உடையவர்கள்.... ! எனது வளவை துப்பரவாக்க இருவரை ஒரு நாளுக்கு மட்டும் பிடித்தேன்.(வேலைக்கு ஆட்கள் கிடைப்பது சிரமம்). அவர்களுக்கு தேனீர் சாப்பாட்டுடன் 3000 ரூபா. அதில் ஒருவர் இளையவர்......!

Link to comment
Share on other sites

32 minutes ago, suvy said:

(வேலைக்கு ஆட்கள் கிடைப்பது சிரமம்). அவர்களுக்கு தேனீர் சாப்பாட்டுடன் 3000 ரூபா. அதில் ஒருவர் இளையவர்......!

சுவி அவர்களே! சிறுவர்களை அதிலும் தமிழ் சிறுவர்களைக் கொல்வது சிறீலங்காவில் குற்றமில்லை. ஆனால் சிறுவர்களை வேலைக்கு அமர்த்தினால் உங்களுக்கு எதிராக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படலாம் கவனம்..!! ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Paanch said:

சுவி அவர்களே! சிறுவர்களை அதிலும் தமிழ் சிறுவர்களைக் கொல்வது சிறீலங்காவில் குற்றமில்லை. ஆனால் சிறுவர்களை வேலைக்கு அமர்த்தினால் உங்களுக்கு எதிராக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படலாம் கவனம்..!! ?

இளையவர் என்றால் முப்பது வயதுடையவராகவும் இருக்கலாம்.... மற்றவருக்கு நாப்பத்தைந்து வயது.....ஸ்....சப்பா.....!  ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கல்யாணம் கட்டி இனமாவது பெருகட்டும் அவளை கைவிடாமல் இருந்தால் சரி குழந்தைகளையும் சேர்த்து :unsure:

1 hour ago, suvy said:

 

.பல்கலைக்கழகங்களில் படிப்பவர்களை நான் சொல்லவில்லை. ...!

 இவர்கள் ஏதாவது அரச தொழில் அல்லது வெளிநாட்டை நோக்கியே காத்துக்கொண்டிருக்கிறார்கள் அண்மையில் வேலை கேட்டு ஆர்ப்பாட்டம் பண்ணிய பட்டதாரிகளை சொல்லலாம் வட கிழக்கில் :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Radhika-Coomaraswamy_Mark-Garten_490628.jpg

ராதிகா குமாரசாமி... எங்கே...? இங்கை...  ஓடி வாங்கோ அக்கா.   
நீங்கள், நேசித்த, யாழ்ப்பாணத்தில்  என்ன நடக்குது என்று, பார்க்க  மாட்டீர்களா?  

புலிகள் காலத்தில்,  சிறுவர் போராளிகளுக்காக.....
உங்கள், சிவப்பு சொண்டை வைத்து... எத்தனை தரம்....  
ஐ.நா. சபையில்,   குய்யோ... குய்யோ.. என்று  கத்திநீர்கள்...
ஒரு நேர்மையான, சமூக  ஆர்வலம் கொண்ட பெண், நீங்கள் என்றால்... இப்போ  உங்கள் குரலை காட்டவும்..  ?

Link to comment
Share on other sites

1 hour ago, தனிக்காட்டு ராஜா said:

கல்யாணம் கட்டி இனமாவது பெருகட்டும் அவளை கைவிடாமல் இருந்தால் சரி குழந்தைகளையும் சேர்த்து :unsure:

1. அவனை அவள் கைவிடலாமா? அது பற்றி    நீங்கள் எழுதவில்லையெ?
2. வாழ்க்கை செலவுக்கு வழி இல்லாமல் அவர்கள் திருடரானால், தற்கொலை செய்தால், முசுலிம் ஆனால், ஆமிக்கு வேலை செய்தால் சம்மதமா?
3. பதின்ம வயதில் செய்யாமல் இரெண்டு வருடம் தள்ளி திருமணம் செய்தால் இனம் பெருகாதா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

Radhika-Coomaraswamy_Mark-Garten_490628.jpg

ராதிகா குமாரசாமி... எங்கே...? இங்கை...  ஓடி வாங்கோ அக்கா.   
நீங்கள், நேசித்த, யாழ்ப்பாணத்தில்  என்ன நடக்குது என்று, பார்க்க  மாட்டீர்களா?  

புலிகள் காலத்தில்,  சிறுவர் போராளிகளுக்காக.....
உங்கள், சிவப்பு சொண்டை வைத்து... எத்தனை தரம்....  
ஐ.நா. சபையில்,   குய்யோ... குய்யோ.. என்று  கத்திநீர்கள்...
ஒரு நேர்மையான, சமூக  ஆர்வலம் கொண்ட பெண், நீங்கள் என்றால்... இப்போ  உங்கள் குரலை காட்டவும்..  ?

இதுக்கும் கள்ளுக்கடை பெயின்ட் ஆரோ பூசி விட்டு இருக்கிறாங்கள்  அதுசரி இளவயது திருமணம் பற்றி பொலிஸ் க்கு ஏன் கவலை முதலில் வால்வெட்டுகுழுவை அடக்கிற வேலையை பார்க்கட்டும் அதன்பின் இளவயது பற்றி யோசிக்கலாம் .

உண்மையில இளவயது திருமணம் மூலம் இனம் பெருகக்கூடாது எனும் கெட்ட எண்ணமே போலிசுக்கு .புலம்பெயர்வில்  இங்குதான் இரண்டாவது பிள்ளைக்கு பிறகு பத்து டாக்குத்தர் மார் ஒன்றாய் சேர்ந்து வெருட்டுவினம் நீங்கள் நெருங்கிய உறவில் கல்யாணம் மூன்றாவது கஷ்ட்டம் என்று இனி நிப்பாட்டுங்கோ என்று .

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.