Jump to content

பதின்ம வயது திருமணங்கள் யாழ்ப்பாணத்தில் அதிகரிப்பு : மாவட்ட சமூக பாதுகாப்புக்குழு கூட்டத்தில் சுட்டிக்காட்டு


Recommended Posts

17000.jpg

யாழ்ப்பாண மாவட்டத்தில் பதின்ம வயது திருமணங்கள் மற்றும் இணைந்து குடும்பம் நடத்தும் தம் பதியரின் எண்ணிக்கை அதிகரி த்து வருகிறது. அதனைத் தடுக்க பதின்ம வயது தம்பதியர் அனைவருக்கும் எதிராக நீதிமன்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று யாழ்ப்பாண மாவட்ட பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ்ப்பாண மாவட்ட சமூகப் பாதுகாப்புக் குழுக் கூட்டம் மூத்த பொலிஸ் அத்தியட்சகர்தலைமையில் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் நேற்று நடைபெற்றது.

யாழ்.மாவட்டத்திலுள்ள சகல பிரதேச செயலக பிரிவுகளையும் சேர்ந்த சிறுவர் பாதுகாப்பு அலுவலர்கள், சிறுவர் நன்நடத்தை அலுவலர்கள், குடும்பநல உத்தியோக த்தர்கள், பெண்கள் அபிவிருத்தி உத்தியோக த்தர்கள் ஆகியோர் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர்.

இதன்போது பிரதேச செயலக ரீதியாக சிறுவர் மற்றும் பெண்கள் பாதுகாப்புத் தொடர்பில் கூட்டத்தில் பங்கேற்ற தரப்பினரால் எடுத்துரைக்கப்பட்டது.

யாழ்ப்பாண மாவட்டத்தில் 16 வயதுக்கு ட்பட்ட பெண் பிள்ளைகளும் 18 வயதுக்குட் பட்ட ஆண் பிள்ளைகளும் இணைந்து வாழ் கின்ற சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. அதற்கு சட்டத்தில் இடமில்லை. அத்துடன், பல்வேறு குடும்ப வன்முறைகளுக்கும் இந்தச் செயற்பாடு வழிவகுக்கின்றது என்று கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டது.

யாழ்.மாவட்டத்திலுள்ள பிரதேச செயலர் பிரிவுகள் அனைத்திலும் பதின்ம வயதுத் திருமணங்கள் மற்றும் இணைந்து வாழ்கின்ற சம்பவங்கள் தொடர்பில் முறைப்பாடுகள் உள்ளன. அவற்றைக் கட்டுப்படுத்துவதற்கு உரிய நடவடிக்கையை பொலிஸார் முன்னெ டுத்து வருகின்றனர்.

பதின்ம வயது திருமணங்கள் மற்றும் இணைந்து வாழ்கின்றவர்களுக்கு எதிராக நீதிமன்ற நடவடிக்கை எடுக்கப்படும். இருவரது பெற்றோர் இணக்கமாகச் சென்றாலும் குற்றமிழைத்த பதின்ம வயதினருக்கு எதி ராக நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொலி ஸார் உறுதியளித்தனர்.             

http://www.valampurii.lk/valampurii/content.php?id=17000&ctype=news

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பதின்ம வயதில் இணைந்து வாழ்வதற்கு வருமானம் உள்ள தொழில் ஏதாவது செய்கின்றார்களா அல்லது பெற்றோரில், உறவினர்களில் தங்கியுள்ளார்களா?

சொந்தக் காலில் நிற்கமுடியாமல் இணைந்து வாழ்வது நீண்டநாட்களுக்கு நிலைக்காது. சமூக மாற்றங்களுக்குத் தகுந்தமுறையில் தேவையான தகவல்களை இளையோருக்கு பாடசாலை மட்டத்திலேயே கொடுக்கவேண்டும். பொலிஸ் மூலம் தீர்க்கமுடியாது.

Link to comment
Share on other sites

1 hour ago, கிருபன் said:

பதின்ம வயதில் இணைந்து வாழ்வதற்கு வருமானம் உள்ள தொழில் ஏதாவது செய்கின்றார்களா அல்லது பெற்றோரில், உறவினர்களில் தங்கியுள்ளார்களா?

சொந்தக் காலில் நிற்கமுடியாமல் இணைந்து வாழ்வது நீண்டநாட்களுக்கு நிலைக்காது. சமூக மாற்றங்களுக்குத் தகுந்தமுறையில் தேவையான தகவல்களை இளையோருக்கு பாடசாலை மட்டத்திலேயே கொடுக்கவேண்டும். பொலிஸ் மூலம் தீர்க்கமுடியாது.

வெளிநாட்டு பணத்தில் வாழ்கிறார்கள்.

 

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, Jude said:

வெளிநாட்டு பணத்தில் வாழ்கிறார்கள்.

 

 

 

 

ஏன் நீங்கள் அவ்வாறானவர்களுக்கு பணம் அனுப்புகிறீர்களா?

Link to comment
Share on other sites

8 minutes ago, MEERA said:

ஏன் நீங்கள் அவ்வாறானவர்களுக்கு பணம் அனுப்புகிறீர்களா?

நான் மட்டும் தான் வெளிநாட்டில் இருக்கும் இலங்கையில் பிறந்தவரா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Jude said:

இலங்கையே எனது பணத்தில் தான் ஓடுது என்று நினைக்க கூடிய நிலையில் நீங்கள் இருக்கும் போது ... 

அப்படியும் நினைப்பு இருக்கிறதா உங்களிடம்,

Link to comment
Share on other sites

Just now, MEERA said:

அப்படியும் நினைப்பு இருக்கிறதா உங்களிடம்,

கனவேதும் கண்டு குழம்பிப்போய் இருக்கிறீர்களா? பில் கெட்சுக்கும் எனக்கும் வித்தியாசம் தெரியாதவராக இருக்கிறீர்களே?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Jude said:

கனவேதும் கண்டு குழம்பிப்போய் இருக்கிறீர்களா? பில் கெட்சுக்கும் எனக்கும் வித்தியாசம் தெரியாதவராக இருக்கிறீர்களே?

குழம்பியது தாங்கள், அதனால் தான் கருத்து திருத்தப்பட்டுள்ளது. அதுவும் நான் மேற்கோள் காட்டிய பிற்பாடு.

7 minutes ago, Jude said:

நான் மட்டும் தான் வெளிநாட்டில் இருக்கும் இலங்கையில் பிறந்தவரா?

ஏன் வெளிநாட்டிலிருக்கும் எல்லோரும் காசு அனுப்பிக் கொண்டிருக்கிறார்களா?

Link to comment
Share on other sites

1 minute ago, MEERA said:

குழம்பியது தாங்கள், அதனால் தான் கருத்து திருத்தப்பட்டுள்ளது. அதுவும் நான் மேற்கோள் காட்டிய பிற்பாடு.

குழப்பம் உங்கள் முதல் பதிலிலே தெரிகிறது, கடைசி பதிலில் தெளிவு பிறப்பது தெரிகிறது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Jude said:

குழப்பம் உங்கள் முதல் பதிலிலே தெரிகிறது, கடைசி பதிலில் தெளிவு பிறப்பது தெரிகிறது. 

நாய் காலை தூக்குவதற்கு போல, அங்கு நடக்கும் எல்லாவற்றிற்கும் புலம் பெயர் மக்களை குறை கூறுவதை முதலில் நிறுத்துங்கள். ஊகத்தில் ஒருபோதும் எழுதாதீர்கள்.

நாம் எப்போதும் தெளிவுடன், அது எனக்கும் தெரியும்.

இப்படியான சலாப்பல்கள் இனியும் வேண்டாம்

Link to comment
Share on other sites

4 minutes ago, MEERA said:

நாய் காலை தூக்குவதற்கு போல, அங்கு நடக்கும் எல்லாவற்றிற்கும் புலம் பெயர் மக்களை குறை கூறுவதை முதலில் நிறுத்துங்கள். ஊகத்தில் ஒருபோதும் எழுதாதீர்கள்.

எல்லாவற்றுக்கும் ஆதாரங்களை தேடி, புள்ளிவிபரங்களுடன் தான் கருத்து தெரிவிக்க வேண்டும் என்றால், அதற்கு தேவையான நிதியும் நேரமும் பல்கலைக்கழக ஆய்வாளருக்கும் அரச அதிகாரிகளுக்கும் கிடைக்கிறது - இங்கே கருத்து எழுதும் எங்களுக்கு அல்ல. இந்த கருத்துக்களம் எங்கள் கருத்து பற்றியது. அதில் ஊகங்களும் அடக்கம். பதின்ம வயதினர் வருமானம் இல்லாமல் திருமணம் செய்து அங்கே வாழ்கிறார்கள். நாட்டின் பிரதமர் சொல்கிறார் பில்லியன் கணக்கில் எமது மக்கள் வெளிநாட்டு பணம் அங்கே அனுப்புகிறார்கள் என்று. ஆகவே இந்த பணத்தில் அந்த பதின்ம வயதினர் வாழ்கிறார்கள் என்று ஊகிப்பதில் தவறு இருப்பதாக தெரியவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Jude said:

எல்லாவற்றுக்கும் ஆதாரங்களை தேடி, புள்ளிவிபரங்களுடன் தான் கருத்து தெரிவிக்க வேண்டும் என்றால், அதற்கு தேவையான நிதியும் நேரமும் பல்கலைக்கழக ஆய்வாளருக்கும் அரச அதிகாரிகளுக்கும் கிடைக்கிறது - இங்கே கருத்து எழுதும் எங்களுக்கு அல்ல. இந்த கருத்துக்களம் எங்கள் கருத்து பற்றியது. அதில் ஊகங்களும் அடக்கம். பதின்ம வயதினர் வருமானம் இல்லாமல் திருமணம் செய்து அங்கே வாழ்கிறார்கள். நாட்டின் பிரதமர் சொல்கிறார் பில்லியன் கணக்கில் எமது மக்கள் வெளிநாட்டு பணம் அங்கே அனுப்புகிறார்கள் என்று. ஆகவே இந்த பணத்தில் அந்த பதின்ம வயதினர் வாழ்கிறார்கள் என்று ஊகிப்பதில் தவறு இருப்பதாக தெரியவில்லை.

காகம் கறுப்பு ஆகவே கறுப்பு எல்லாம் காகம் என்பதாக உங்கள் வாதம் உள்ளது,

பதின்ம வயதிற்காரருக்கு பணம் அனுப்புவதற்கும் இணைந்து வாழும் பதின்ம வயதினருக்கு பணம் அனுப்புவதற்கும் இடையே நிறைய வித்தியாசம் உள்ளது.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

பதின்ம வயதில் இணைந்து வாழ்வதற்கு வருமானம் உள்ள தொழில் ஏதாவது செய்கின்றார்களா அல்லது பெற்றோரில், உறவினர்களில் தங்கியுள்ளார்களா?

சொந்தக் காலில் நிற்கமுடியாமல் இணைந்து வாழ்வது நீண்டநாட்களுக்கு நிலைக்காது. சமூக மாற்றங்களுக்குத் தகுந்தமுறையில் தேவையான தகவல்களை இளையோருக்கு பாடசாலை மட்டத்திலேயே கொடுக்கவேண்டும். பொலிஸ் மூலம் தீர்க்கமுடியாது.

 

31 minutes ago, Jude said:

வெளிநாட்டு பணத்தில் வாழ்கிறார்கள்.

 

 

 

 

நானும் இதுபோன்ற ஒரு மனநிலையில்தான் இருந்தேன் சென்றமாதம் ஊருக்கு போகும்வரை....!அங்கு போனபிறகுதான் அங்குள்ள மாற்றங்களை ஓரளவு தெரிந்துகொள்ள முடிந்தது......!

பெரும்பாலும் நடுத்தரவர்கத்தில் பதின்மவயதுப்பிள்ளைகள் சராசரி 30, 000 ரூபாவுக்கு மேல் சம்பாதிக்கிறார்கள். ஒரு பெண்பிள்ளை அல்லது பையன்  பெற்றோர் மூலமாகவோ அன்றி சகோதரங்கள் மூலமாகவோ வங்கிக் கடனில் தான் விரும்பியவாறு இரண்டரை லட்ஷத்துக்கு ஒரு ஸ்கூட்டியோ அல்லது மோட்டார் சைக்கிளோ வாங்கி அதன் கடனை தனது சம்பாத்தியத்தில் கட்டுகிறார்கள்.முன்பு எனக்கு  ஒரு பழைய சைக்கிள் சொந்தமாக வாங்குவதே ஒரு கனவாக இருந்தது. ஆனால் இன்று நான்போன வீடெங்கும் (வீடுகள் சுமாராய்தான் இருக்கு) டூ வீலர்சும் / ஆட்டொவும்  முற்றத்தில் நிக்கிறது. ஆனால் எமது ( என்போன்ற முன்பு புலம் பெயர்ந்தவர்கள்) சகோதர சகோதரிகள் எங்களை இன்றும் அந்நாளைய மயக்கத்திலேயே வைத்திருக்கின்றார்கள். ஆனால் அவர்களின் பிள்ளைகள் வளர்ந்து நன்றாக சம்பாதிக்கிறவர்களாய் இருக்கிறார்கள். வெளியில் இருந்து வரும் பணம் பெரும்பாலும் அவர்களுக்கு ஒரு நன்கொடை மாதிரி. 

--- தெரிந்த ஆட்டொவில் அருகில் உள்ள இடத்துக்கு சென்றால் 200 ரூபாய் எடுக்கிறார்கள். தெரியாத வழியில் போன ஆடிடோவை மறித்து அதே இடத்துக்கு போனால் 150 ரூபாய் எடுக்கிறார்கள்....!

--- வீட்டுக்கு நவீன பாத்ரூம் கட்டுவது , தரைக்கு சலவைக்கல் பொருத்துவது போன்ற செலவினங்களுக்கு ......

--- வீடுகளில் நிகழும் விழாக்கள் போன்ற செலவுகளுக்கு வெளிநாட்டு பணம் அவர்களுக்கு தேவையாய் உள்ளது.....!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பில்லியன் கணக்கில் பணம் செல்கிறது ஆகவே அங்கு பொருளாதாரத்தில் துன்பப்படும் மக்கள் இல்லை என்றும் கூறலாம் அல்லவா?

Link to comment
Share on other sites

1 minute ago, MEERA said:

பதின்ம வயதிற்காரருக்கு பணம் அனுப்புவதற்கும் இணைந்து வாழும் பதின்ம வயதினருக்கு பணம் அனுப்புவதற்கும் இடையே நிறைய வித்தியாசம் உள்ளது.

 

அப்படியா? குறைந்தது ஐந்து வித்தியாசங்களையாவது சொல்லுங்கள் பார்க்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Jude said:

அப்படியா? குறைந்தது ஐந்து வித்தியாசங்களையாவது சொல்லுங்கள் பார்க்கலாம்.

உங்கள் அறிவு அவ்வளவே..... நன்றி வணக்கம்.

சுவியர் எழுதியதை ஆயிரம் தடவைகள் வாசியுங்கள் ! 

Link to comment
Share on other sites

3 minutes ago, MEERA said:

பில்லியன் கணக்கில் பணம் செல்கிறது ஆகவே அங்கு பொருளாதாரத்தில் துன்பப்படும் மக்கள் இல்லை என்றும் கூறலாம் அல்லவா?

இது நியாயமான வாதம். இப்படி சொல்வது தவறு தான்.

8 minutes ago, MEERA said:

பதின்ம வயதிற்காரருக்கு பணம் அனுப்புவதற்கும் இணைந்து வாழும் பதின்ம வயதினருக்கு பணம் அனுப்புவதற்கும் இடையே நிறைய வித்தியாசம் உள்ளது.

நீங்கள் "நிறைய வித்தியாசம் உள்ளது" என்றீர்கள்.

4 minutes ago, Jude said:

அப்படியா? குறைந்தது ஐந்து வித்தியாசங்களையாவது சொல்லுங்கள் பார்க்கலாம்.

நான் வெறும் ஐந்து கேட்டேன்.

2 minutes ago, MEERA said:

உங்கள் அறிவு அவ்வளவே..... நன்றி வணக்கம்.

உடனேயே என்னுடைய அறிவை மட்டம் தட்டிவிட்டு ஓடப் பர்க்கிறேர்களே? நியாயமா? வெறும் ஐந்து தானே கேட்டேன்? ?

Link to comment
Share on other sites

22 minutes ago, suvy said:

 

நானும் இதுபோன்ற ஒரு மனநிலையில்தான் இருந்தேன் சென்றமாதம் ஊருக்கு போகும்வரை....!அங்கு போனபிறகுதான் அங்குள்ள மாற்றங்களை ஓரளவு தெரிந்துகொள்ள முடிந்தது......!

பெரும்பாலும் நடுத்தரவர்கத்தில் பதின்மவயதுப்பிள்ளைகள் சராசரி 30, 000 ரூபாவுக்கு மேல் சம்பாதிக்கிறார்கள்.

நானும் ஆண்டுக்கு இருமுறை அண்மையில் போய் வந்து இருக்கிறேன். நீங்கள் குறிப்பிடும் வருமானம் உள்ளவர்கள் பதின்ம வயதினர் என்று எப்படி தெரியும்? - இருபது வயதுக்கு மேலானவர்கள் இல்லையா?. பதின்ம வயதினர் இந்த அளவுக்கு உழைத்து வாழும் அளவுக்கு வேலை வாய்ப்ப்புகள் அங்கு குறைவு என்றே நினைக்கிறேன்.. கணனித்துறை மற்றும் வணிக நிறுவனங்களுக்கு வேலை செய்து நன்கு உழைப்பவர்கள் இருக்கிறார்கள், ஆனால் பெரும்பாலும் இருபது வயதுக்கு மேற்பட்டவர்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Jude said:

நானும் ஆண்டுக்கு இருமுறை அண்மையில் போய் வந்து இருக்கிறேன். நீங்கள் குறிப்பிடும் வருமானம் உள்ளவர்கள் பதின்ம வயதினர் என்று எப்படி தெரியும்? - இருபது வயதுக்கு மேலானவர்கள் இல்லையா?. பதின்ம வயதினர் இந்த அளவுக்கு உழைத்து வாழும் அளவுக்கு வேலை வாய்ப்ப்புகள் அங்கு குறைவு என்றே நினைக்கிறேன்.. கணனித்துறை மற்றும் வணிக நிறுவனங்களுக்கு வேலை செய்து நன்கு உழைப்பவர்கள் இருக்கிறார்கள், ஆனால் பெரும்பாலும் இருபது வயதுக்கு மேற்பட்டவர்கள்.

 

நானும் ஒரு பதினெட்டு வயதுக்கு மேற்பட்டவர்களைதான் சொல்கிறேன்.  நான் நின்றது ஒருமாதமளவில்....... பெரும்பாலும் எனது உறவினர்கள் அயலவர்களை வைத்துதான் சொல்கிறேன்.பல்கலைக்கழகங்களில் படிப்பவர்களை நான் சொல்லவில்லை. நீங்கள் குறிப்பிடும் துறையினர் சராசரி 40,000 க்கும் மேற்பட்ட வருமானம் உடையவர்கள்.... ! எனது வளவை துப்பரவாக்க இருவரை ஒரு நாளுக்கு மட்டும் பிடித்தேன்.(வேலைக்கு ஆட்கள் கிடைப்பது சிரமம்). அவர்களுக்கு தேனீர் சாப்பாட்டுடன் 3000 ரூபா. அதில் ஒருவர் இளையவர்......!

Link to comment
Share on other sites

32 minutes ago, suvy said:

(வேலைக்கு ஆட்கள் கிடைப்பது சிரமம்). அவர்களுக்கு தேனீர் சாப்பாட்டுடன் 3000 ரூபா. அதில் ஒருவர் இளையவர்......!

சுவி அவர்களே! சிறுவர்களை அதிலும் தமிழ் சிறுவர்களைக் கொல்வது சிறீலங்காவில் குற்றமில்லை. ஆனால் சிறுவர்களை வேலைக்கு அமர்த்தினால் உங்களுக்கு எதிராக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படலாம் கவனம்..!! ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Paanch said:

சுவி அவர்களே! சிறுவர்களை அதிலும் தமிழ் சிறுவர்களைக் கொல்வது சிறீலங்காவில் குற்றமில்லை. ஆனால் சிறுவர்களை வேலைக்கு அமர்த்தினால் உங்களுக்கு எதிராக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படலாம் கவனம்..!! ?

இளையவர் என்றால் முப்பது வயதுடையவராகவும் இருக்கலாம்.... மற்றவருக்கு நாப்பத்தைந்து வயது.....ஸ்....சப்பா.....!  ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கல்யாணம் கட்டி இனமாவது பெருகட்டும் அவளை கைவிடாமல் இருந்தால் சரி குழந்தைகளையும் சேர்த்து :unsure:

1 hour ago, suvy said:

 

.பல்கலைக்கழகங்களில் படிப்பவர்களை நான் சொல்லவில்லை. ...!

 இவர்கள் ஏதாவது அரச தொழில் அல்லது வெளிநாட்டை நோக்கியே காத்துக்கொண்டிருக்கிறார்கள் அண்மையில் வேலை கேட்டு ஆர்ப்பாட்டம் பண்ணிய பட்டதாரிகளை சொல்லலாம் வட கிழக்கில் :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Radhika-Coomaraswamy_Mark-Garten_490628.jpg

ராதிகா குமாரசாமி... எங்கே...? இங்கை...  ஓடி வாங்கோ அக்கா.   
நீங்கள், நேசித்த, யாழ்ப்பாணத்தில்  என்ன நடக்குது என்று, பார்க்க  மாட்டீர்களா?  

புலிகள் காலத்தில்,  சிறுவர் போராளிகளுக்காக.....
உங்கள், சிவப்பு சொண்டை வைத்து... எத்தனை தரம்....  
ஐ.நா. சபையில்,   குய்யோ... குய்யோ.. என்று  கத்திநீர்கள்...
ஒரு நேர்மையான, சமூக  ஆர்வலம் கொண்ட பெண், நீங்கள் என்றால்... இப்போ  உங்கள் குரலை காட்டவும்..  ?

Link to comment
Share on other sites

1 hour ago, தனிக்காட்டு ராஜா said:

கல்யாணம் கட்டி இனமாவது பெருகட்டும் அவளை கைவிடாமல் இருந்தால் சரி குழந்தைகளையும் சேர்த்து :unsure:

1. அவனை அவள் கைவிடலாமா? அது பற்றி    நீங்கள் எழுதவில்லையெ?
2. வாழ்க்கை செலவுக்கு வழி இல்லாமல் அவர்கள் திருடரானால், தற்கொலை செய்தால், முசுலிம் ஆனால், ஆமிக்கு வேலை செய்தால் சம்மதமா?
3. பதின்ம வயதில் செய்யாமல் இரெண்டு வருடம் தள்ளி திருமணம் செய்தால் இனம் பெருகாதா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

Radhika-Coomaraswamy_Mark-Garten_490628.jpg

ராதிகா குமாரசாமி... எங்கே...? இங்கை...  ஓடி வாங்கோ அக்கா.   
நீங்கள், நேசித்த, யாழ்ப்பாணத்தில்  என்ன நடக்குது என்று, பார்க்க  மாட்டீர்களா?  

புலிகள் காலத்தில்,  சிறுவர் போராளிகளுக்காக.....
உங்கள், சிவப்பு சொண்டை வைத்து... எத்தனை தரம்....  
ஐ.நா. சபையில்,   குய்யோ... குய்யோ.. என்று  கத்திநீர்கள்...
ஒரு நேர்மையான, சமூக  ஆர்வலம் கொண்ட பெண், நீங்கள் என்றால்... இப்போ  உங்கள் குரலை காட்டவும்..  ?

இதுக்கும் கள்ளுக்கடை பெயின்ட் ஆரோ பூசி விட்டு இருக்கிறாங்கள்  அதுசரி இளவயது திருமணம் பற்றி பொலிஸ் க்கு ஏன் கவலை முதலில் வால்வெட்டுகுழுவை அடக்கிற வேலையை பார்க்கட்டும் அதன்பின் இளவயது பற்றி யோசிக்கலாம் .

உண்மையில இளவயது திருமணம் மூலம் இனம் பெருகக்கூடாது எனும் கெட்ட எண்ணமே போலிசுக்கு .புலம்பெயர்வில்  இங்குதான் இரண்டாவது பிள்ளைக்கு பிறகு பத்து டாக்குத்தர் மார் ஒன்றாய் சேர்ந்து வெருட்டுவினம் நீங்கள் நெருங்கிய உறவில் கல்யாணம் மூன்றாவது கஷ்ட்டம் என்று இனி நிப்பாட்டுங்கோ என்று .

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • எனக்கு மட்டும் அல்ல துணைக்கும் தயார் படுத்தல் செய்வதால் தான் தொடர்ந்து ஏகபத்தினி விரதனாக இருக்க முடிகிறது.😜
    • பெருமளவு சிறுவர்களுக்கு சத்திரசிகிச்சை செய்தேன் - அவர்களில் பலர் ஆறுவயதிற்கு உட்பட்டவர்கள் - காசாவிலிருந்து திரும்பிய பிரிட்டிஸ் மருத்துவர் Published By: RAJEEBAN   16 APR, 2024 | 11:40 AM   சமீபத்தில் காசாவிலிருந்து திரும்பிய பிரிட்டனை சேர்ந்த மருத்துவர் ஒருவர் தான் யுத்தத்தினால் காயமடைந்த பெருமளவு சிறுவர்களிற்கு சத்திரகிசிச்சை செய்ததாக தெரிவித்துள்ளார். காயமடைந்த பெருமளவு சிறுவர்களிற்கு சத்திரசிகிச்சை செய்தேன் அந்த எண்ணிக்கை என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது என மருத்துவர் விக்டோரியா ரோஸ் தெரிவித்துள்ளார். 16 வயதிற்கு உட்பட்ட பலருக்கு சத்திரசிகிச்சை செய்ததாக தெரிவித்துள்ள அவர் அவர்களில் பலர் ஆறுவயதிற்கு உட்பட்டவர்கள் எனவும் தெரிவித்துள்ளார். துப்பாக்கி சூட்டு காயங்கள் எரிகாயங்கள் ஏனைய காயங்களால் பாதிக்கப்பட்டவர்களிற்கு சிகிச்சையளித்தேன் என அவர்தெரிவித்துள்ளார். போதிய உணவு இன்மையால் காசாவில் காயமடைந்தவர்களின் காயங்கள் குணமாவது பிரச்சினைக்குரிய விடயமாக காணப்படுகின்றது எனவும் தெரிவித்துள்ள அவர் காசாவில் மருத்துவமபணியில் ஈடுபட்டிருந்தவேளை என்னை விட வயது கூடிய ஒருவருக்கு மாத்திரமே -53 -சத்திரகிசிச்சைசெய்தேன் ஏனையவர்கள் அனைவரும் என்னை விட வயது குறைந்தவர்கள் எனவும் தெரிவித்துள்ளார் ஏனையவர்கள் அனைவரும் என்னை விட வயது குறைந்தவர்கள் பலர் 16வயதிற்கு உட்பட்டவர்கள் அதிகளவானவர்கள் ஆறுவயதிற்கு உட்பட்டவர்கள்இது அதிக கவலையளித்தது என அவர்தெரிவித்துள்ளார். எரிகாயங்கள் துப்பாக்கிசூட்டு காயங்கள்  திசுக்களில் காணப்பட்ட வேறு பொருட்களை அகற்றுதல் முகங்களில் காணப்பட்ட பாதிப்புகளை சத்திரகிசிச்சை மூலம் சரிசெய்தல் தாடையில் காணப்பட்ட துப்பாக்கி ரவைகளை அகற்றுதல் போன்றவற்றில் ஈடுபட்டேன் என அவர் தெரிவித்துள்ளார். காசாவில் பட்டினி நிலைமை எவ்வேளையிலும் உருவாகலாம் என ஐநா எச்சரித்துள்ளது போதிய உணவின்மை காணப்படுகின்றது  இதன் காரணமாக காயமடைந்தவர்கள் நோயாளிகள் அதிலிருந்து உடனடியாக மீள்வது கடினமாக உள்ளது என  என மருத்துவர் விக்டோரியா ரோஸ் தெரிவித்துள்ளார். எனது சத்திரசிகிச்சை மேசையில் காணப்பட்டவர்கள் போசாக்கு இன்மையால் பாதிக்கப்பட்டவர்கள் என அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/181212
    • "முனிவராய் இருந்தவனுக்கு சொர்க்கம் காட்டினர்!"     "இருளுக்கும் வெளிச்சத்திற்கும் இடையில் இரவு மெல்ல கீழே இறங்க இனிய விடியலில் நானும் எழும்ப இருவானரமும் ஒருமழலையும் இறங்கும் நேரமிது!"   "சிறிய கால்களின் காலடி ஓசை சிறுவர் அறையில் மெல்ல ஒலிக்க சிரமப்பட்டு திறக்கும் கதவின் ஒலி, சித்தம் குளிர என்னைத் தழுவுது!"   "கூடத்தில் இருந்த விளக்கில் பார்க்கிறேன் கூரையில் இருந்து படிக்கட்டில் இறங்கினம் கூத்தாடி கண்ணனுடன் நடன ராதை கூற்றுவன் பறித்த அம்மம்மாவாய் வாறா!"   "அம்மம்மாவின் பெயரை தனது ஆக்கி பத்தாம் நினைவாண்டில் பிறந்த 'ஜெயா' பெரிய தம்பி 'கலை'யின் கைபிடித்து எதோ ரகசியம் இருவரும் பேசினம்!"   "அம்மாவின் நெஞ்சில் சாய்ந்த படி குட்டிமழலை 'இசை' யும் பின்னால் வாரான் என் மடியில் படுத்து சிரிக்கிறான் ஆட்டி ஆட்டி நித்திரை ஆக்கிறேன்!"   "சில கிசுகிசு, பின்னர் மௌனம் சின்னஞ் சிறுசுகள் ஒன்றாய் சேர்ந்து சிறுசதி ஒன்றைத் திட்டமிடுகிறார்கள் சிறுஆச்சரியம் தந்து மகிழ்ச்சி தரவே!"   "படிக்கட்டில் இருந்து திடீரென விரைந்து பதுங்கி இரண்டு கதவால் வந்து பகலோன் நேரே வந்தது போல பக்கத்தில் வந்து திகைக்க வைத்தனர்!"   "மடியின் மேல் 'இசை'க்கு முத்தமிட்டு மற்றவர் நாற்காலியின் கையில் எற மடக்கி பிடித்தனர் தப்ப முடியவில்லை மத்தியில் அகப்பட்டு மருண்டு விழிக்கிறேன் !"   "முத்தங்களால் என்னை விழுங்கி விட முதுகில் ஒருவர் ஏறிக் கொள்ள முழக்கமிட்டு மற்றவர் துள்ளிக் குதிக்க முனிவராய் இருந்தவனுக்கு சொர்க்கம் காட்டினர்!"     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]       
    • யாழில் இரண்டு பெண்களை வெட்டிக் காயப்படுத்தியவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இன்று (16) அதிகாலை 4 மணியளவில், குடும்பத்தகராறு காரணமாக குறித்த இரண்டு பெண்கள் மீதும் அவர் கத்தியால் தாக்குதல் நடத்தியுள்ளார். அதன் பின்னர் 37 வயதான தாக்குதல்தாரி தற்கொலை செய்து கொண்டதாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவரின் அவரது சடலம் யாழ். போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. காயமடைந்த பெண்கள் இருவரும் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலதிக விசாரணைகளை இளவாலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். https://thinakkural.lk/article/299300
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.