Jump to content

ஹேக் செய்யப்பட்ட 50 மில்லியன் ஃபேஸ்புக் கணக்குகள் - பாதுகாப்பு குறைபாடு காரணமா?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஹேக் செய்யப்பட்ட 50 மில்லியன் ஃபேஸ்புக் கணக்குகள் - பாதுகாப்பு குறைபாடு காரணமா?

டேவ் லி தொழில்நுட்ப செய்தியாளர், பிபிசி 

பாதுகாப்பு குறைப்பாடு காரணமாக சுமார் 50 மில்லியன் பயனாளர்களின் தகவல்கள் வெளியே கசிந்துவிட்டதாக ஃபேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

முகநூல்Reuters

`வியூ அஸ்` (view as) எனும் அம்சத்தின் மூலம் ஹாக்கர்கள் பயன்பாட்டாளர்களின் தகவல்களை திருடிவிட்டதாக ஃபேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த தகவல் திருட்டு செவ்வாய்க்கிழமையன்று நடைபெற்றுள்ளது. இது குறித்து போலிஸாரிடம் புகார் அளித்துள்ளதாக ஃபேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

வெள்ளியன்று இந்த தகவல் திருட்டால் பாதிக்கப்பட்ட பயனாளிகள் மீண்டும் லாக்கின் (log in) செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டனர்.

பாதிக்கப்பட்ட பயனாளிகளின் கணக்குகள் மீட்டமைக்கப்பட்டதாகவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதிக்கப்படாத 40 மில்லியன் பயனாளர்களின் கணக்குகளும் மீட்டமைக்கப்பட்டதாகவும் ஃபேஸ்புக்கின் தயாரிப்பு நிர்வாக பிரிவின் துணைத்தலைவர் கை ரோசன் தெரிவித்துள்ளார்.

இதனால் வெள்ளியன்று ஃபேஸ்புக்கின் பங்குகள் 3 சதவீதம் வரை குறைந்தன. 

ஃபேஸ்புக் கணக்கை மூலமாக கொண்டு பயன்பாட்டாளர்கள் புகுபதிகை (Sign In) செய்துள்ள ஏர்பின்பி மற்றும் டிண்டர் ஆகிய பிற சில முக்கிய தளங்களிலும் ஹாக்கர்கள் இதன்மூலம் ஊடுருவியிருக்கலாம் என ஃபேஸ்புக் தெரிவித்துள்ளது.

யாரெல்லாம் இதில் பாதிக்கப்பட்டனர்?

உலகின் எந்த பகுதியில் இந்த 50 மில்லியன் பயன்பாட்டாளர்கள் பாதிக்கப்பட்டனர் என ஃபேஸ்புக் நிறுவனம் தெரிவிக்கவில்லை, இருந்த போதிலும் அயர்லாந்து தகவல் கட்டுப்பாட்டாளர்களுக்கு ஃபேஸ்புக் நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. 

மீண்டும் லாக்கின் செய்ய வலியுறுத்தப்பட்ட பயன்பாட்டாளர்கள் தங்களது கடவுச்சொற்களை மாற்ற தேவையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

"நாங்கள் விசாரணையை தற்போது தொடங்கியுள்ளதால், இந்த கணக்குகள் தவறாக பயன்படுத்தப்பட்டதா அல்லது வேறேதும் தகவல்கள் எடுக்கப்பட்டதா என்று கண்டறியவுள்ளோம். மேலும் இந்த தாக்குதலுக்கு யார் காரணம், அவர்கள் எந்த பகுதியை சேர்ந்தவர்கள் என்பது எங்களுக்கு தெரியவரவில்லை" என ரோசன் தெரிவித்துள்ளார்.

முகநூல்Getty Images

"பயன்பாட்டாளர்களின் தனியுரிமையும், பாதுகாப்பும் எங்களுக்கு மிகவும் முக்கியம்; இந்த தகவல் திருட்டு குறித்து மிகவும் வருத்தம் அடைகிறோம்" என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்ட 50 மில்லியன் பயன்பாட்டாளர்களில், ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் சக்கர்பக் மற்றும் அதன் தலைமை இயக்க அதிகாரி சாண்ட்பெர்க் ஆகியோரும் அடங்குவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

`வியூ அஸ்` (view as) என்றால் என்ன?

தங்களது கணக்கில் உள்ள தகவல்கள் பிற பயன்பட்டாளர்களுக்கு எவ்வாறு காட்சியளிக்கிறது என்பதைக் காட்டும் அம்சம் தான் ஃபேஸ்புக்கின் `வியூ அஸ்`. 

ஃபேஸ்புக்கில் ஒருமுறை நுழைந்தவுடன் மீண்டும் மறுமுறை கடவுச்சொல்லை பொருத்தி நுழையத் தேவையில்லை, இது `ஆக்சஸ் டோகன்` எனப்படும் அம்சத்தால் சாத்தியமாகிறது. ஹாக்கர்கள் இந்த ஆக்சஸ் டோகன்ஸை திருடிவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிக்கலில் ஃபேஸ்புக்

அமெரிக்கா மற்றும் பிற நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு தகவல் பாதுகாப்பு குறித்து ஃபேஸ்புக் நிரூபிக்க வேண்டிய சூழலில் உள்ளது இம்மாதிரியான தகவல் திருட்டு ஃபேஸ்புக் நிறுவனத்துக்கு மேலும் ஒரு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

தீய எண்ணம் கொண்டவர்களால் ஃபேஸ்புக் நிறுவனம் தொடர்ந்து தாக்குதலுக்கு ஆளாவதாகவும், ஆனால் ஃபேஸ்புக் நிறுவனம் பாதுகாப்பை தீவிரமான ஒரு விஷயமாக கருதுவதாகவும் ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் சக்கர்பர்க் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஃபேஸ்புக் நிறுவனத்தை பிபிசி தொடர்பு கொண்டபோது, தகவல்கள் திருட்டு குறித்தும், இதற்கு நிறுவனத்தில் யாரேனும் பொறுப்பாளர்களா என்றும் பதிலளிக்கவில்லை. 

 

 

https://www.bbc.com/tamil/science-45690321

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனி முகநூல் தகவல்கள் லீக் ஆனால் அதாம்பா திருடினவன் வித்து இருக்கான் நாங்கள் இல்லை என்று இலகுவாக சொல்லிவிடலாம் மற்றவன் வந்து பிரிச்ச்சி மேயுற அளவுக்கு இவர்களின் செர்வர் பாதுகாப்பு இல்லாமல் இருந்தது என்பதை நம்ப முடியாமல் இருக்கு .

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.